புதிய இடுகைகள்
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!T.N.Balasubramanian
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
ayyasamy ram
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
ayyasamy ram
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
ayyasamy ram
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
ayyasamy ram
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
krishnaamma
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
krishnaamma
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
ayyasamy ram
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
ayyasamy ram
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ayyasamy ram
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
krishnaamma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
krishnaamma
சாப்பாட்டுப் புராணம் சமஸ்
ajaydreams
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
ayyasamy ram
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
SK
சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
Meeran
சிரிப்பின் பயன்கள்
ஜாஹீதாபானு
முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
SK
தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
SK
இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
SK
மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
SK
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
ஜாஹீதாபானு
புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
T.N.Balasubramanian
பாதை எங்கு போகிறது...?
SK
நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
SK
சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
SK
குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
T.N.Balasubramanian
கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
SK
தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
SK
வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Meeran |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
SK |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
சாட்டை !
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
துளி கூட ஆபாசமின்றி மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் இயக்குனர் அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .
அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான படைப்பு .அரசு மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.
சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில் தூங்குவது ,வீட்டு வேலையை மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது ,மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு .மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும்
முன்பாக குருவை வைத்தார்கள் .அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக் கொள்ள வேண்டும் . என்று கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
தாயாளன் ஆசிரியராக சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார் .தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாராதனை காட்டுவது இடது மூளை வலது மூளை இரண்டும் வேலை செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக் கேட்காமல் வண்ணத்தை கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது .மாணவர்களிடம் அன்பு செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா ஆசிரியர் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார் .தயா போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம் நாடு முன்னேறி விடும் .
தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து உள்ளார் . படத்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த போதும் , தண்டிக்காமல் மன்னித்த உள்ளம் கண்டு நெகிழும் போது மிக நன்றாக நடித்து உள்ளார் .தலைமை ஆசிரியாராக வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக நடித்து உள்ளார்.
மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம் .
சிறந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார் அன்பழகன் .ஒரு தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம் நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே யாரவது காதல் கடிதம் தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம் எங்கும் நடக்கின்றது.அது தவறு. பெண் பிள்ளைகளை நம்புங்கள் .படிக்க வையுங்கள். என்று படிப்பினை சொல்லித் தரும் படம் .
மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் .எந்த மாணவனையும் உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள் .பெண் ஆசிரியர்கள் ஆடை ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம் பார்த்த மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு கூறலாம் .
மாணவி அறிவழகியை மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன் மாணவி அறிவழகி அவளும் காதலிப்பதாக சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ? என்று நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது ,ஆசிரியர் தயா என் மீது அன்பு செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி .காதலிப்பது தெரிந்தால் அவள் வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள் .எனவே நான் காதலிக்க விரும்பவில்லை ".என்று நண்பன் முருகனிடம் சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம் உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப் படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை ,வெட்டு, குத்து ,ஆபாசம் எதுவுமின்றி ய்தரமான படம் தந்துள்ளார். பாராட்டுக்கள்.
இந்த படத்தை கோடிகளை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தந்து ,வெளி நாடுகள் சென்று கோடிகளை விரையம் செய்து படம் எடுக்கும் மசாலா பட இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம் இது .
திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் ..ஆனால், பள்ளிக்கு வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது .இதனை உணர்ந்த ஆசிரியர் தயா , மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி திக்கு வாய் குறை உள்ள மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆசிரியர் தயா.
மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர வைத்து விட்டு ,ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும் மீறி ,அடுத்த மாவட்டத்தில் பின் பின்தங்கிய பள்ளி நோக்கி பயணிக்கும் முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் M.அன்பழகன், இயக்குனர் சமுத்திரகனி வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழில் எழுதுங்கள் .
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
துளி கூட ஆபாசமின்றி மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் இயக்குனர் அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .
அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான படைப்பு .அரசு மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.
சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில் தூங்குவது ,வீட்டு வேலையை மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது ,மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு .மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும்
முன்பாக குருவை வைத்தார்கள் .அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக் கொள்ள வேண்டும் . என்று கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .
தாயாளன் ஆசிரியராக சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார் .தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாராதனை காட்டுவது இடது மூளை வலது மூளை இரண்டும் வேலை செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக் கேட்காமல் வண்ணத்தை கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது .மாணவர்களிடம் அன்பு செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா ஆசிரியர் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார் .தயா போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம் நாடு முன்னேறி விடும் .
தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து உள்ளார் . படத்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த போதும் , தண்டிக்காமல் மன்னித்த உள்ளம் கண்டு நெகிழும் போது மிக நன்றாக நடித்து உள்ளார் .தலைமை ஆசிரியாராக வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக நடித்து உள்ளார்.
மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம் .
சிறந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார் அன்பழகன் .ஒரு தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம் நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே யாரவது காதல் கடிதம் தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம் எங்கும் நடக்கின்றது.அது தவறு. பெண் பிள்ளைகளை நம்புங்கள் .படிக்க வையுங்கள். என்று படிப்பினை சொல்லித் தரும் படம் .
மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் .எந்த மாணவனையும் உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள் .பெண் ஆசிரியர்கள் ஆடை ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம் பார்த்த மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு கூறலாம் .
மாணவி அறிவழகியை மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன் மாணவி அறிவழகி அவளும் காதலிப்பதாக சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ? என்று நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது ,ஆசிரியர் தயா என் மீது அன்பு செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி .காதலிப்பது தெரிந்தால் அவள் வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள் .எனவே நான் காதலிக்க விரும்பவில்லை ".என்று நண்பன் முருகனிடம் சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம் உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப் படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை ,வெட்டு, குத்து ,ஆபாசம் எதுவுமின்றி ய்தரமான படம் தந்துள்ளார். பாராட்டுக்கள்.
இந்த படத்தை கோடிகளை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தந்து ,வெளி நாடுகள் சென்று கோடிகளை விரையம் செய்து படம் எடுக்கும் மசாலா பட இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம் இது .
திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் ..ஆனால், பள்ளிக்கு வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது .இதனை உணர்ந்த ஆசிரியர் தயா , மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி திக்கு வாய் குறை உள்ள மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆசிரியர் தயா.
மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர வைத்து விட்டு ,ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும் மீறி ,அடுத்த மாவட்டத்தில் பின் பின்தங்கிய பள்ளி நோக்கி பயணிக்கும் முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் M.அன்பழகன், இயக்குனர் சமுத்திரகனி வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழில் எழுதுங்கள் .
eraeravi- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177
Re: சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
ஆசிரியர்களின் ஒரு பிரிவினர் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்வதால் இதுபோன்ற படங்கள் அவர்களுக்கு சாட்டையடியாகவே இருக்கும்..
அருமையான படம்
அருமையான படம்
அசுரன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861
Re: சாட்டை ! இயக்கம் M.அன்பழகன் . நடிப்பு சமுத்திரக்கனி . திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi- தளபதி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 1684
மதிப்பீடுகள் : 177
Sponsored contentநிகழ்நிலை இணையாநிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum