புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
30 Posts - 58%
heezulia
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
20 Posts - 38%
ஜாஹீதாபானு
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
1 Post - 2%
Manimegala
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
150 Posts - 50%
ayyasamy ram
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
11 Posts - 4%
prajai
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
9 Posts - 3%
Jenila
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
2 Posts - 1%
Barushree
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
2 Posts - 1%
jairam
பார்வை  Poll_c10பார்வை  Poll_m10பார்வை  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வை


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 5:02 pm

நர்மதா வீட்டுக்கும் வாசலுக்கும் கலவரத்துடன் நடந்தபடி இருந்தாள். மிகவும் படபடப்புடன் காணப்பட்டாள். அவள் அம்மா எவ்வளவு சமாதானப்படுத்தியும் அவள் கேட்பதாய் இல்லை. தன் செல்ல மகள் சிவானி இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி. பள்ளி முடிந்து ஒரு மணி நேரத்தை கடந்தும் அவளை காணாதது தான் நர்மதாவின் படபடப்புக்கு காரணம். பள்ளி சென்று பார்க்க போன நர்மதாவின் தந்தை பேத்தியை அழைத்துக் கொண்டு வீடு வந்தார். சிவானியை கண்டதும் அவளை அள்ளி அணைத்து கண்களில் முத்தமிட்டாள்.

“ஏன் தங்கம் இவ்வளோ லேட்? ஆட்டோ மாமா எங்கே? ஸ்கூல்’க்கு வரலையா?”

“வரலை மா. நான் எப்பவும் போல ஸ்கூல் கேட் கிட்டே நின்னிட்டுருந்தேன். ரொம்ப நேரம் ஆகவும் எனக்கு அழுகையா வந்துருச்சு. தாத்தாவை பாத்ததும் தான் எனக்கு பயம் போச்சு”.

“நாளைக்கு வரட்டும். ஆட்டோ மாமாவை திட்டிடலாம். வேற ஆட்டோ மாத்திடலாமா தங்கம்?”

“சரி மா. தாத்தா நாம வாங்கிட்டு வந்த ஐஸ் எங்க?. எனக்கு கொடுங்க.”

ஐஸ் வாங்கி சாப்பிட ஆரம்பித்த சிவானி அனைத்தையும் மறந்து தொலைக்காட்சியில் மூழ்கினாள். நர்மதா தான் இன்னும் மனக் குழப்பத்துடன் இருந்தாள். அன்று இரவு அனைவரும் உறங்கிய பின்னும் நர்மதா மனம் பின்னோக்கி அசை போட ஆரம்பித்தது.

பார்வை  Daddys-little-girl

நர்மதா துள்ளி விளையாடும் இளம் பெண். வாழ்க்கையில் எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் விளையாட்டு தனமாக சுற்றி திரிந்தவள். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதற்கு ஏற்ற படி நல்ல வரன் ஒன்று அமைந்தது. நர்மதாவின் தாத்தா சுதந்திரத்திற்கு பாடுபட்ட தியாகிகளில் ஒருவர். அதனாலோ என்னவோ மாப்பிள்ளை ரவிச்சந்திரன் ஒரு பட்டாளத்தான் என்றதும் நர்மதாவின் தந்தைக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒழுக்கத்திலும் ஊர் மெச்சும் படியே இருந்தான். விடுப்பு அதிகம் கிடைக்காததால் திருமணத்திற்கு இரு தினம் முன்னரே ஊர் திரும்பினான் ரவிச்சந்திரன்.

ஊர் கூடி வாழ்த்த ரவிச்சந்திரன் நர்மதா திருமணம் இனிதே நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த நொடியில் இருந்து நர்மதாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான் ரவிச்சந்திரன். நர்மதாவும் கணவன் மேல் உயிரையே வைத்திருந்தாள். 1 வாரம் கடந்தது. விருந்து கொண்டாட்டம் எல்லாம் முடிந்து அன்று தான் வீட்டில் நர்மதாவின் கையால் சமைத்து பரிமாறினாள். சாப்பிட்டு கொண்டிருந்த போதே அவசர அழைப்பு வந்தது.

அலை பேசியில் தொடர்பு கொண்டது அவனது சீனியர் ஆபிசர். பேசி முடித்ததும் அவன் முகம் எல்லாம் கவலையில் வாடியது.

“என்னங்க.. யார் பேசினா? என்ன சொன்னாங்க?”

“நாளைக்கே கிளம்பணுமாம். வேற எல்லைக்கு என்னை மாத்தறாங்கலாம்.”

“என்னங்க சொல்லுறீங்க.. நாளைக்கேவா!!! ஆனா ஒரு மாசம் லீவு போட்டுருக்கேனு சொன்னீங்க.”

“ஆமா. ஆனால் இப்போ அவசரமா வர சொல்றாங்க. நான் பேசி பாத்துட்டேன். அவங்க கேக்கலை. இப்போ போயிட்டு 2,3 மாதம் வேலை முடிந்ததும் மறுபடி லீவு போட்டுட்டு வரேன்.”

அரை குறை மனதுடன் சமாதானமானாள் நர்மதா. அடுத்த நாள் ரவிச்சந்திரன் எல்லை நோக்கி புறப்பட்டான். கண்களில் நீர் ததும்ப வழி அனுப்பினாள் நர்மதா. அங்கு சென்ற பின்னும் ரவிச்சந்திரனுக்கு நர்மதாவின் நினைவாகவே இருந்தது. எவ்வளவு முயன்றும் சிந்தனையை மாற்ற முடியவில்லை. புது இடம் என்பதால் சினேகிதர்களும் இல்லை. அடிக்கடி நர்மதாவை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிக் கொள்வான்.

அங்கு ரவிச்சந்திரனுக்கு இருந்த ஒரே ஆறுதல் அங்கு மெஸ்ஸில் பணி புரியும் வயதானவரின் பேத்தி சிவானி. 4 வயதே நிரம்பிய அவள் புத்தி கூர்மை மிக்கவள். மிக அழகானவள். பாசத்துடன் பேசுவாள். அவள் மழலை தமிழ் இவன் நெஞ்சை அள்ளும். இத்தனை நிறைகளை கொடுத்த ஆண்டவன் அவளுக்கும் பெரிய குறைகளை கொடுத்தான். பிறக்கும் போதே பார்வை இல்லாமல் பிறந்த அவள் ஒரு வயதில் தன் தாய், தந்தை இருவரையும் இழந்தவள். அவளுக்கென்று இருப்பது அவள் தாத்தா மட்டுமே.

நாட்கள் நகர நகர ரவிச்சந்திரனுடன் அந்த குழந்தை ஒட்டிக் கொண்டது. சிவானிக்கு பார்வை கிடைத்தால் இன்னும் நலமாய் இருக்கும் என சில நேரம் எண்ணுவான். அவள் தாத்தாவிற்கு பிறகு யார் இவளை பாதுகாப்பார்கள்? இவளை தத்து எடுக்க வேண்டும் என கூட சில நேரம் எண்ணுவான். அடிக்கடி நர்மதாவிடம் சிவானியை பற்றி கூறியிருக்கிறான். அடுத்த முறை வரும் போது சிவானியை அழைத்து வரும்படி நர்மதா கூறியிருந்தாள். அவனும் அவளை அழைத்துச் செல்ல திட்டமிட்டு இருந்தான்.

எல்லையில் சண்டை வலுத்தது. அன்று நடந்த எல்லை சண்டையில் ரவிச்சந்திரன் குண்டு அடிபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டு இருந்தான். தான் இறக்க போகும் தருவாயில் மருத்துவரிடம் தன் கண்களை குழந்தை சிவானிக்கு பொருத்தும்படியும் தன் மனைவிக்கு தகவல் தெரிவிக்கும்படியும் கூறி விட்டு மனம் முழுதும் நர்மதாவை பற்றிய சிந்தனைகளோடு இறந்தான்.

அவன் இறந்த செய்தி கேட்டு அதிர்ந்த அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள். மாதம் கடந்தது. எதையோ சிந்தித்தவளாய் இருந்த நர்மதா திடீரென்று தன் தாய், தந்தையை அழைத்து சிவானியை பற்றி கூறி தத்து எடுக்க போவதாக கூறினாள். நர்மதாவின் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை.

தன் மகளுக்கென்று இன்னொரு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுக்கும் எண்ணத்தில் இருந்த அவர்கள் எப்படி சம்மதிப்பார்கள்!! ஆனால் நர்மதாவோ ஒரே முடிவாக இருந்தாள். தன் வாழ்நாள் முழுவதும் தன் கணவனை நினைத்துக் கொண்டே அவன் கண்களை பார்த்துக் கொண்டே வாழ போவதாக கூறி சிவானியை அழைத்து வந்தாள்.

வருடங்கள் கடந்த பின்பும் அவனின் நினைவுகளும், பார்வைகளும் அவளை விட்டு நீங்கவில்லை. தன் இறந்த கால நினைவலைகளோடு அப்படியே உறங்கி போனாள் நர்மதா.....






யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Oct 06, 2012 8:39 pm

கதை ரொம்ப நல்லாருக்கு ராம்குமார்.

சிவானி என்ற பெயர் உங்களுக்கு பிடித்த பெயர் என்று நினைக்கிறேன்.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Oct 06, 2012 10:13 pm

கதை நல்ல இருக்கு !!!! மகிழ்ச்சி

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 11:23 pm

யினியவன் wrote:கதை ரொம்ப நல்லாருக்கு ராம்குமார்.

சிவானி என்ற பெயர் உங்களுக்கு பிடித்த பெயர் என்று நினைக்கிறேன்.

நன்றி யினியவன். சிவானி ------பெயர் மட்டுமே பிடிக்கும். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 11:24 pm

பூவன் wrote:கதை நல்ல இருக்கு !!!! மகிழ்ச்சி

நன்றி...



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sat Oct 06, 2012 11:32 pm

உறங்கப் போகும் விழிகள்
உறங்கா வண்ணம் விழித்திருக்கையில்
உறங்கிய விழிகளில்
உயிருள்ள ஜீவனைக் கண்ட
அவள்....
ஓர் உறங்க விழிகள்.....



ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Sat Oct 06, 2012 11:38 pm

KARUR KAVIYANBAN wrote:உறங்கப் போகும் விழிகள்
உறங்கா வண்ணம் விழித்திருக்கையில்
உறங்கிய விழிகளில்
உயிருள்ள ஜீவனைக் கண்ட
அவள்....
ஓர் உறங்க விழிகள்.....


கவிதை அருமை, நன்றி.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக