புதிய இடுகைகள்
கல்கி 29 ஏப்ரல் 2018தமிழ்நேசன்1981
மூலிகை மணி
தமிழ்நேசன்1981
மந்திரச் சாவி - நாகூர் ரூமி
தமிழ்நேசன்1981
ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
தமிழ்நேசன்1981
பெரியார் களஞ்சியம்
valav
பெரியார் --முழு புத்தகம்
valav
பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
valav
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
valav
இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
NAADODI
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
ayyasamy ram
மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
ayyasamy ram
வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
ayyasamy ram
மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ayyasamy ram
உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
ayyasamy ram
வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
ayyasamy ram
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
krishnaamma
அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
krishnaamma
எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
krishnaamma
உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
T.N.Balasubramanian
In need of Antivirus Software
ரா.ரமேஷ்குமார்
இந்திரா அமிர்தம்---அறிமுகம்
ayyasamy ram
எனக்குள் ஒரு கவிஞன் SK
ayyasamy ram
வணக்கம் நண்பர்களே
ayyasamy ram
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
T.N.Balasubramanian
பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
பழ.முத்துராமலிங்கம்
பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
Meeran
உணவே உணர்வு !
SK
வணக்கம் நண்பர்களே
krishnaamma
அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
krishnaamma
அறிமுகம்-சத்யா
krishnaamma
என்னைப் பற்றி...பாலமுருகன்
krishnaamma
நலங்கு மாவு !
SK
2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
krishnaamma
பேல்பூரி..!!
krishnaamma
அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
krishnaamma
உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
krishnaamma
எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
SK
சி[ரி]த்ராலயா
SK
அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
SK
பார்த்தாலே திருமணம்!
SK
நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
SK
பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
krishnaamma
நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
krishnaamma
கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
SK
அரி சிவா இங்கிலையோ!
SK
ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
krishnaamma
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
krishnaamma
இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
krishnaamma
தினை மாவு பூரி!
krishnaamma
காத்திருக்கிறேன் SK
krishnaamma
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
krishnaamma
உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
krishnaamma
முகநூல் நகைச்சுவை படங்கள்
krishnaamma
நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
SK
‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
SK
உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
SK
கண்மணி வார நாவல் 25.04.2018
Meeran
திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
heezulia |
| |||
valav |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
|
Admins Online
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்

ஒரு பத்திரிக்கைக்காரன் என்கிற முறையில் பரமாச்சாரியார் பற்றி இரண்டு முக்கிய செய்திகளில் நான் பங்கு பெற நேர்ந்தது.
ஒன்று - நான் நிருபராக ஒரு மாலை பத்திரிக்கையில் பணிபுரிந்த போது . வயது இருபது தான் இருக்கும்.
அடுத்தது - assosiate editor ஆக வார இதழில் பணிபுரிந்தபோது !
அது 1962 என்று நினைக்கிறேன் . அன்று ஞாயிற்றுக்கிழமை . மாலை பத்திரிக்கைக்கு பரபரப்பாக ஏதாவது வேண்டுமே! அன்று நானும் நியூஸ் எடிட்டரும் என்னன்னவோ செய்தும் - பெரிய சேதி கிடைக்கவில்லை .
ஒரு மணி . எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருக்க , நான் தபாலில் வந்தவைகளை பிரித்து பார்த்துக்கொண்டிருந்தேன். மத சம்பந்தமான ஒரு இதழ் . பிரித்து பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.
'திருக்குறளை படிக்க வேண்டாம்' என்று பரமாச்சாரியர்கள் சொன்னதாக ஒரு செய்தி . அது மார்கழி மாதம்.
திருப்பாவையில் - பாவை நோன்பு கடைபிடிப்பது பற்றி ஆண்டாள் . ' நெய் உண்ணோம் . பால் உண்ணோம் ' என்று வரிசைப் படுத்துகிறார். அப்போது தீக்குறளை சென்றோதோம்' என்று அந்தப்பாடலில் வருகிறது.
இதற்குப்பொருளாக - 'திருக்குறளை படிக்கக்கூடாது ' என்று பரமாச்சாரியார் கூறியதாக அதில் இருந்தது !
தீக்குறளை சென்றோதோம் என்றால் - ஒருவரைப்பற்றி ' கோள் ' சொல்வது - புறம்கூறுவது செய்ய மாட்டோம் என்று தான் பொருள்.
திருப்பாவை வேதத்தின் சாரம் என்று சொல்லப்படுவது . ஒருவரைப்பற்றி பொல்லாங்கு - கோள் - சொல்வதை வேதம் மாபெரும் பாவம் , தவறு என்று கூறுகிறது. ஆண்டாள் அதைத்தான் கூறினார்.
பரமாச்சாரியார் இப்படி கூறியிருப்பாரா ? எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தவாறு - அந்தப்பகுதியை நியூஸ் எடிட்டர் பார்வைக்கு அனுப்பினேன் . பிறகு மறந்தேன்
அன்று மாலை பேப்பரை பார்த்து திடுக்கிட்டேன்.
'திருக்குறளைப் படிக்காதே - காஞ்சி சங்கராச்சாரியார் உத்தரவு !" என்று வெளியிடப்பட்டிருந்தது. இது பரபரப்பு ஏற்படுத்திவிட்டது .தமிழ் அறிஞர்கள் திடுக்கிட்டார்கள் . பெரும் கண்டனம் தமிழ் அறிஞர்களிடம் இருந்து கிளம்பியது.
எனக்கு வருத்தமாக இருந்தது. நிச்சயம் ஏதோ பிழை என்று தோன்றியதை செய்தி ஆசிரியரிடம் கூற தவறி விட்டேனே என்று உள்ளம் உறுத்தியது.
மற்ற தமிழ் நாளிதழ்களிலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் தினமும் இந்த செய்தி பெரிதுபடுத்தபட்டது. தினம் ஒரு கண்டன அறிக்கை !
ஆச்சாரிய சுவாமிகளிடமிருந்து விளக்கம் வராது என்பது எனக்கு தெரியும் . யாராவது அவரிடம் போய் பேசினால் , தவறு திருத்தப்பட வாய்ப்பு ஏற்படும்.
அதற்குள் ' குமுதம் ' இதழில் இது குறித்து தலையங்கம் எழுதப்பட்டு விட்டது. தலைப்பு -
'யானைக்கும் அடி சறுக்கும்?'
குமுதம் தலையங்கம் அக்காலத்தில் மிகவும் விறுவிறுப்புடன் இருக்கும் . சுடச்சுட விஷயங்களைத் தொடுவார் எஸ்.ஏ.பி.
இந்த தலையங்கம் பலன் தந்தது . திருமதி சௌந்திரா கைலாசம் , காஞ்சி பெரியாரை தரிசிக்க சென்றார்.அப்போது இந்த விஷயத்தை மெதுவாக எழுப்பினார். பெரியவர் கூறியது தவறாக வந்திருக்கலாம் என்று சுட்டிக்காட்டினார்.
காஞ்சி பெரியவர் கூறிய விளக்கம் அடுத்த குமுதம் இதழில் செய்தியாக திருமதி கைலாசம் எழுதினார் :
"மார்கழி மாதம் கடவுளைப்பற்றிய நினைவுகளுக்கு மட்டுமே செலுத்த வேண்டிய மாதம் .
தீக்குறள் மட்டுமல்ல - திருக்குறள் போன்ற மிக உயர்ந்த நல்ல விஷயங்களைக்கூட கூறாமல் - கடவுள் நாமத்தையே சொல்ல வேண்டும் "
பெரியவர் இப்படி மார்கழி மாதத்தில் இறைவனை மட்டுமே நினைக்க வேண்டியதை வலியுறுத்த சொல்லி இருக்கிறார் !
இந்த விளக்கம் வந்தவுடன் அமைதி ஏற்பட்டுவிட்டது . சௌந்திரா கைலாசம் அவர்களுக்கு என் மனம் நன்றி கூறியது.
அடுத்த நிகழ்ச்சி - 1987 ம் ஆண்டு .
ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் காஞ்சி மடத்தை விட்டு வெளியேறியதை அடுத்து ஏற்பட்ட பரபரப்பு நிகழ்ச்சி.
பல்வேறு அவதூறான செய்திகள் வந்து கொண்டிருந்தன. எனது இதழுக்காக உண்மைகளை சேகரித்தேன்.
காஞ்சிபுரம் சென்று ஸ்ரீமடத்திலும் மெல்ல தகவல் சேகரித்தேன். மகா பெரியவர் - ஓரிடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். இந்த விஷயமாக மகா பெரியவரை பேட்டி எடுத்தால் என்ன என்றே தோன்றியது. 1962 நிகழ்ச்சியில் - ' அவசரப்பட்டதுபோல' இப்போது கூடாது . எதிரே காட்சி தருகிறாரே ... கேட்கலாமே என்று மனசாட்சி கூறியது . பணிந்தேன்.
சுவாமிகளிடம் நான் பேச முற்பட்ட போது சுற்றி இருந்த வயதான பக்தர்கள் தடுத்தார்கள். ' பெரியவரிடம் இதைப்பற்றி எல்லாம் கேட்பதா ? அவரை பேட்டி எடுப்பதா ' என்று சினந்து என்னை வெளியேறச் சொன்னார்கள்.
"என்ன .... என்ன .... அவன் என்ன கேட்கிறான் ?" என்று சுவாமிகள் நாற்புறமும் திரும்பி
விசாரித்தும் - அதற்கு பக்தர்கள் பதில் கூறாமல் என்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள்.
நான் ஸ்ரீமடத்தைவிட்டு வெளியே வந்து , டிபன் சாப்பிட போகலாம் என்று நினைத்தேன். அதற்குள் ஒரு வயதான பக்தர் ஓடிவந்தார். " பெரியவா கூப்பிடுகிறார்" என்றார். நான் ஓடினேன்.
"என்ன சந்தேகம் ..... கேளு " என்று மெதுவான குரலில் பரமச்சாரியார் கூறினார். நான் கேள்விகளை பணிவுடன் கேட்டேன்.
"பரமாச்சாரியாரிடம் கோபித்துக் கொண்டே ஜெயேந்திரர் வெளியேறினாரா ? என்று கேட்டேன் . பக்தர்கள் முகத்தில் கோபம் பளிச்சிட்டது.
' அப்படி இல்லை . அவருக்கு என் மீது ரொம்ப அன்பு . எனக்கு கனகாபிஷேகம் செய்து பார்த்தரே " என்று பரமாச்சாரியார் கூறும் போது ஜெயேந்திரர் மீது அவருக்கு இருந்த அன்பு வெளிப்பட்டது.
" ஸ்ரீ மடத்திலிருந்து பணம் எடுத்துச் சென்றாரா ?" என்று கேட்க நேர்ந்தது.
பரமாச்சாரியார் மறுத்து தலையாட்டினார். " அவருக்கு எதற்கு பணம் ? அவர் நினைத்தால் பணம் கொட்டும் . இந்த மடம் ஏழை மடமாக இருந்தது. அதை மாற்றி - பல நல்ல காரியங்களை செய்பவர் அவர் " - சுவாமிகள் கூறினார்.
வெளியே சொல்லப்பட்ட வதந்திகளை நான் கேட்க நேர்ந்தது.
"இம் மாதிரி நிகழ்ச்சி ஸ்ரீ மடம் பற்றி மக்கள் என்னவாறு நினைக்க செய்யும் "....
"மக்கள் மிக உயர்ந்தவர்கள் . அவர்கள் கருத்து எதுவானாலும் அது முக்கியம் . அதை அலட்சியப்படுத்தமுடியுமா ?" - பெரியவர் கூறினார். இன்னும் பல கேள்விகள் எழுப்பினேன் !
பத்திரிக்கையில் இந்த பேட்டி பரபரப்பாக வந்தது. ஜெயேந்திரர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. அடுத்து சில நாட்களில் ஜெயேந்திரர் திரும்பினார்.
பரமாச்சாரியாரிடம் சங்கடமான கேள்விகள் கேட்டதற்கு ஒரு சில பக்தர்கள் என்னை திட்டினாலும் , ஜெயேந்திரர் பற்றி பரமாச்சாரியார் அந்த பேட்டியில் உயர்வாக கூறியிருந்தது - தமிழகம் முழுவதும் இருந்த பக்தர்களுக்கு மகிழ்ச்சியும் உற்சாகமும் அளித்தது.
நன்றி:- அந்திமழை

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
@யினியவன் wrote:நான் இங்கு என்ன சொல்றதுன்னு தெரியல பாலா.
எதுவும் சொல்லலாம்

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
அறிய நிகழ்வுகளை காண தந்தமைக்கு நன்றி பாலா..!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!
அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
@அருண் wrote:அறிய நிகழ்வுகளை காண தந்தமைக்கு நன்றி பாலா..!
அன்று மடம் இருந்த நிலைமை வேறு இன்று இருக்கிற நிலைமை வேறு.!
அது உண்மைத்தான் பெரியவருடன் கட்டுபாடுகளும் கட்டுகோப்புகளும் காற்றோடு பறந்தது நான் மூன்று ஆண்டுகள் அங்கே வேத பாடசாலையில் படித்துள்ளேன் இப்பொழுது எல்லாமே மிக மிக மோசம்

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
பக்தி மார்க்கமாக எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லேன்னாலும் மற்ற பெரியவர்களின் மீதுள்ள மரியாதை ஏனோ ஜெயேந்திரர் மேல் இல்லவே இல்லை.

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
இப்பொழுது நம்பிக்கை உள்ளவர்களுக்கே அவர் மேல் மரியாதை இல்லை அண்ணே@யினியவன் wrote:பக்தி மார்க்கமாக எனக்கு நம்பிக்கையும் ஈடுபாடும் இல்லேன்னாலும் மற்ற பெரியவர்களின் மீதுள்ள மரியாதை ஏனோ ஜெயேந்திரர் மேல் இல்லவே இல்லை.

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
@balakarthik wrote:
நான் மூன்று ஆண்டுகள் அங்கே வேத பாடசாலையில் படித்துள்ளேன் இப்பொழுது எல்லாமே மிக மிக மோசம்
அப்ப நீங்க சங்கராச்சரியார் சிஷ்யபிள்ளை நு சொல்லவே இல்லை.!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
விட்டா போதுமுன்னு ஓடிவந்துட்டேன் அருண் அப்பலாம் கட்டுப்பாடு ரொம்ப அதிகம்@அருண் wrote:அப்ப நீங்க சங்கராச்சரியார் சிஷ்யபிள்ளை நு சொல்லவே இல்லை.!

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
@balakarthik wrote:விட்டா போதுமுன்னு ஓடிவந்துட்டேன் அருண் அப்பலாம் கட்டுப்பாடு ரொம்ப அதிகம்
என்ன பாஸ் இன்னாருக்கும் நீங்க இருந்திருந்திங்க என்றால் உங்களை டிவியில் பார்த்து இருப்போம்.!
அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
காவியில் பாவியாகி டிவியில் தெரிய நான் சித்தி பெற்ற நித்தி அல்ல

![]() |
balakarthik- வழிநடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
பாலாவின் பழமைகாலம், வேதம் கற்ற வித்யார்த்தி, பத்திரிகை ஆசிரிய சேவை பல பல.
உங்கள் தற்போதைய நகைச்சுவை விருந்தை விரும்பி ரசித்தவன். இருப்பினும் மகாபெரியவா , பரமாச்சார்யர் அவர்களுடன் பேட்டி எடுத்தது, இவைகளை படிக்கையில் உம் மதிப்பு அதிகம் உயர்ந்தது.
எங்கள் குலகுரு பரமாச்சார்யா சந்திரசேகரசரஸ்வதி என்று கூறும் பொழுதே , எழுதும் போதே என் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள். விடை காணா விஷயங்கள் குழப்பும் போதெல்லாம் "பெரியவா" நாமம் கூறி தெளிவு பெற்ற நேரங்கள் பல.
தற்போதைய சமாச்சாரங்கள் பேசாமல் இருப்பதே மனதிற்கு நிம்மதி.
பதிவுக்கு நன்றி, பாலா. மூன்று வருட அனுபவங்கள் எழுதலாமே.!!
ரமணியன்
உங்கள் தற்போதைய நகைச்சுவை விருந்தை விரும்பி ரசித்தவன். இருப்பினும் மகாபெரியவா , பரமாச்சார்யர் அவர்களுடன் பேட்டி எடுத்தது, இவைகளை படிக்கையில் உம் மதிப்பு அதிகம் உயர்ந்தது.
எங்கள் குலகுரு பரமாச்சார்யா சந்திரசேகரசரஸ்வதி என்று கூறும் பொழுதே , எழுதும் போதே என் கண்களில் ஆனந்த கண்ணீர் துளிகள். விடை காணா விஷயங்கள் குழப்பும் போதெல்லாம் "பெரியவா" நாமம் கூறி தெளிவு பெற்ற நேரங்கள் பல.
தற்போதைய சமாச்சாரங்கள் பேசாமல் இருப்பதே மனதிற்கு நிம்மதி.
பதிவுக்கு நன்றி, பாலா. மூன்று வருட அனுபவங்கள் எழுதலாமே.!!
ரமணியன்
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21828
மதிப்பீடுகள் : 8211
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
ஜெயேந்திரர் ஓடி போனாரா ? அது என்ன நிகழ்ச்சி ? யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?
badri7986- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 32
மதிப்பீடுகள் : 19
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
@badri7986 wrote:ஜெயேந்திரர் ஓடி போனாரா ? அது என்ன நிகழ்ச்சி ? யாரேனும் தெளிவுபடுத்த முடியுமா ?
அவர் ஓடினதும் அவர் பின்னாலேயே பா.கா ஓடினதும் ஊரே சேர்ந்து மூவரையும்(?) துரத்தியதையும் எப்படி வெளியே சொல்வார் ஓமன் கிளை ஓனர்?...





ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 8677
மதிப்பீடுகள் : 2039
Re: காஞ்சி பெரியவரும் பத்திரிக்கையாளர் ராவும்
ஓடாத ஓட்டம் என்ன
ஓடியதின் காரணம் என்ன
என்ன என்ன என்ன என்ன என
அறிய துடிக்கும் பத்ரிக்கு காரணம் சொல்லுங்க பாஸ்...
அது நாடறிந்த ரகசியம் தானே - ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டா என்னத்த சொல்றது?
ஓடியதின் காரணம் என்ன
என்ன என்ன என்ன என்ன என
அறிய துடிக்கும் பத்ரிக்கு காரணம் சொல்லுங்க பாஸ்...
அது நாடறிந்த ரகசியம் தானே - ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டா என்னத்த சொல்றது?

யினியவன்- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum