புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
65 Posts - 46%
ayyasamy ram
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
56 Posts - 40%
T.N.Balasubramanian
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
3 Posts - 2%
jairam
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
1 Post - 1%
Poomagi
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
195 Posts - 51%
ayyasamy ram
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
16 Posts - 4%
prajai
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
7 Posts - 2%
jairam
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
3 Posts - 1%
Rutu
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
திருப்பெயர் மோசடிகள் Poll_c10திருப்பெயர் மோசடிகள் Poll_m10திருப்பெயர் மோசடிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பெயர் மோசடிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Jan 28, 2012 8:57 am


“திருத்தவத்துறைக்கு ஒரு சீட்டு கொடுப்பா” பேருந்தில் ஒரு தமிழ்க்குரல் தனியே ஒலித்தது.
“அந்த ஊருக்கு எல்லாம் இந்த வண்டி போகாதுங்க, இறங்குங்க கீழே!” திருச்சி பேருந்து நிலையத்தில் புறப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பேருந்தின் நடத்துனர் அலுத்துக்கொண்டார்.
“பெயர்பலகையில் லால்குடி என்று போட்டிருக்கிறதே”
“ஆமாம், லால்குடிக்கு போகும்”
“லால்குடிதான் திருத்தவத்துறை”
:அதெல்லாம் எனக்குத்தெரியாது. லால்குடின்னு தமிழ்ல சொல்ல வேண்டியதுதானே. அதைவிட்டுட்டு எதையெதையோ சொல்லிக்கிட்டு. ஏறுங்க! ஏறுங்க!
இந்தக்கூத்திற்கு என்ன சொல்ல? லால்குடி என்பது தமிழாம். திருத்தவத்துறை தமிழில்லையாம். இந்த நடத்துனரைக் குற்றம் சொல்வதற்கில்லை. நம்முடைய தமிழ்ப்பெயர்களெல்லாம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்கின்றன.
அவை எங்கே மறைந்தன?
நாம் அவற்றை மறக்கடிக்கச் செய்யப்பட்டோம்.
ஆம்!
வந்தேறிய வடமொழி வெறியர்கள் அரச செல்வாக்கினைப்பெற்று ஆலயங்களில் வீற்றிருக்கும் ஆண்டவனின் தூய தமிழ்ப்பெயர்களையே மாற்றி அமைத்தபோது ஊர்களின் பெயர் எம்மாத்திரம்?
திரு என்ற தமிழ்ச்சொல் மிகமேன்மையானது. திரு என்றால் “கண்டாரால் விரும்பப்படும் தெய்வத்தன்மை” என்று தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர் கூறுகிறார். அதை எடுத்து விட்டு இப்போது எல்லா தலப்பெயர்களிலும் ஸ்ரீ என்று சேர்க்கிறோம். ஸ்ரீ (சிறீ) என்பது ‘திரு’ என்ற சொல்லிற்கு ஒப்பானதும் அல்ல; அதைவிட உயர்ந்ததும் அல்ல. “திரு” வை எடுத்து ஸ்ரீயைச்சேர்த்தால் சிரிக்கத்தான் தோன்றுகிறது.
9ஆம் நூற்றாண்டிற்கும் 15 ஆம் நூற்றாண்டிற்கும் இடையிலுள்ள காலத்தேதான் தலப்பெயர், சுவாமி பெயர், தேவிப் பெயர் பலவும் வடமொழியில் ஏற்பட்டுப்பின்னர் வழக்கிலும், நூல்களிலும் ஆளப்பட்டு வரலாயின.
தமிழ்ப்பெயர் = வடமொழிப்பெயர்
மறைக்காடு = வேதாரணியம்
முதுகுன்றம் = விருத்தாசலம்
ஆனைக்கா = கஜாரணியம்
தேன்மொழிப்பாவை = மதுரவசனாம்பிகை
திருவிடைமருதூர் = மத்தியார்ச்சுனம்
சொக்கநாதர் = சோமசுந்தரர்
அங்கயற்கண்ணி = மீனாட்சி
தில்லை = சிதம்பரம்
கூத்தரசர் = நடராசர்
ஆட்சிகொண்டநாதர் = பார்க்கபுரேஸ்வரர்
இளங்கிள்ளையம்மை = பாலசுகாம்பிகை (சுகம்=கிளி)
புற்றிடங்கொண்டார் = வன்மீகநாதர்
இருந்தாடழகர் = தியாகராயர்
ஆடானை நாதர் = அஜகஜேசுவரர்
அன்பாயியம்மை = சினேகவல்லி
திரு ஆக்கூர் = கஸ்யபுரம்
தான் தோன்றீசர் = சுயம்புநாதர்
வாளரங்கண்ணி = கட்கார நேத்திரி
அழகியர் = சுந்தரேசர்
அழகாம்பிகை = சுந்தராம்பிகை
பூங்குழலம்மை = சுகுந்த குந்தளாம்பிகை
அண்ணாமலையார் = அருணாசலேஸ்வரர்
உண்ணாமுலையம்மை = அபிதகுஜாம்பாள்
திருபெரும்புதூர் = ஸ்ரீபெரும்புதூர்
திருவரங்கம் = ஸ்ரீரங்கம்

இன்னும் எத்தனை எத்தனையோ!
மேலே கொடுக்கப்பட்ட சில பெயர்களிலே, தமிழ்ப் பெயர்களை உச்சரிக்கும்போது ஏற்படும் இயல்பான உணர்வும், நெகிழ்ச்சியும் வடமொழிப்பெயர்களில் இல்லை என்பது நடுநின்று ஆய்வார்க்கு நன்கு தெரியும்.

ஆனால் அபிதகுஜாம்பாள் என்று அர்ச்சனைக்குச் சங்கல்பம் செய்யும்போது அர்ச்சகர்கள் தங்கள் பிடிவாதத்தைக் கைவிட்டு எப்போது உண்ணாமுலையம்மை என்று சொல்லப்போகிறார்கள்?
சிதம்பரம் மறுபடியும் தில்லையாவது எப்போது?
ஸ்ரீரங்கம் மறுபடியும் திருவரங்கமாவது எப்போது?
விருத்தாசலம் முதுகுன்றமாவது எப்போது?
தூங்குகிறவன் தொடையில்தான் கயிறு திரிப்பார்கள் என்பார்கள். அப்படியானால் தமிழர்கள் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்களா?. அடப்பாவமே! இவர்கள் விழிப்படைவது எப்போது?
அதுவரை அவனருளாலே அவன் தாள் வணங்கி வேண்டுவோம்.
தமிழ்ச்சங்கம் கண்ட பெருமானே!
வேண்டத்தக்கது அறிவோய் நீ!
வேண்ட முழுதும் தருவோய் நீ!
( நன்றி : மு.பெ.ச அவர்கள் எழுதிய “ தமிழ் வேள்வி “ புத்தகம் ).


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 9:03 am

ஓரளவு தமிழ் படித்த சிலருக்கே இப்பெயர்கள் புதிதாய் கேட்பது போல் இருக்கிறது.

இன்று தமிழே படிக்காத சமூகத்தின் நிலை என்னவாகும் என்று சொல்வது?




சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Jan 28, 2012 9:11 am

பயனுள்ள தகவல் பதிந்தமைக்கு நன்றி.
இன்று பலருக்கு தமிழில் உள்ள அடிப்படைச் சொல்லும் மறந்து விட்டது. பேச்சு வழக்கில் இன்று பேசும் மொழியே தமிழ் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த வடமொழித் தாக்கம் இறைவனின் பெயரில் மட்டுமல்லாது மனிதர்களின் பெயர்களுக்கு தொக்கி விட்டது.


உங்களின் பதிவு அருமை.
சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
திருப்பெயர் மோசடிகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Jan 28, 2012 9:48 am

அருமையான பதிவு............

இவற்றில் நிறைய தமிழ் பெயர்களை எனக்கு தெரிந்தவை தான், ஆனால், இந்த தமிழ் பெயர்களை எல்லாம் கொன்று விட்டு வட மொழி பெயர் தான் புழக்கத்தில் உள்ளது என்பது அறியாத விஷயம்..........நன்றிகள் சாமி அவர்களே......... : நன்றி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 28, 2012 10:01 am

தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!



திருப்பெயர் மோசடிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 28, 2012 10:02 am

இதையெல்லாம் படித்தால் ரத்தகொதிப்பு தான் வருகிறது... இன்னும் என்ன என்ன ஆகுமோ தமிழுக்கு சோகம்

அருமையான பகிர்வு நண்பரே

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 28, 2012 10:05 am

சிவா wrote:தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
தனித் தமிழ் நாடு வேண்டுவது சரிதான்.

அதில் வாழ நல்ல தமிழ் அறிந்தவர்களே வேண்டும் என்று சொல்லிவிட்டால்
நானடக்கம் அந்த நாட்டில் வாழ முடியாத நிலை அன்றோ இன்று?




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Jan 28, 2012 10:06 am

கொலவெறி wrote:
சிவா wrote:தமிழை பிற மொழிக் கலப்பில்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ் மொழி பேசும் தனி நாடு வேண்டும். ஆட்சி மொழி இன்னும் இந்தி தானே!
தனித் தமிழ் நாடு வேண்டுவது சரிதான்.

அதில் வாழ நல்ல தமிழ் அறிந்தவர்களே வேண்டும் என்று சொல்லிவிட்டால்
நானடக்கம் அந்த நாட்டில் வாழ முடியாத நிலை அன்றோ இன்று?
யோசிக்க வேன்டிய விசயமாக இருக்கே! அந்த தனிதமிழகத்தை ஆள தமிழாளர் ஒருவரும் வேன்டுமே?

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jan 28, 2012 10:52 am

நன்றி சாமி. அதுபோல லால்குடி அருகே உள்ள கல்லக்குடி என்ற ஊர் தற்சமயம் டால்மியாபுரம் என்று மாறிவிட்டது.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Jan 28, 2012 11:01 am

குழந்தைகளுக்கு தமிழ் தெரியவில்லை! குஷ்பு வேதனை!!




திருப்பெயர் மோசடிகள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக