புதிய பதிவுகள்
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:53

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun 12 May 2024 - 22:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 22:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun 12 May 2024 - 22:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun 12 May 2024 - 21:55

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 18:05

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 17:54

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:50

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 12 May 2024 - 13:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 13:16

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun 12 May 2024 - 12:56

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:09

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
15 Posts - 88%
Manimegala
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
1 Post - 6%
ஜாஹீதாபானு
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
130 Posts - 49%
ayyasamy ram
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
98 Posts - 37%
mohamed nizamudeen
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
11 Posts - 4%
prajai
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
9 Posts - 3%
Jenila
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
4 Posts - 2%
Rutu
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
2 Posts - 1%
Barushree
 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_m10 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 1 Nov 2012 - 1:36



செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.

நாம் எல்லோருமே தினத்தந்தி செய்தி படித்துவிட்டு தீர்ப்பு எழுதும் காமன்மேன்கள்தான். நாம் இலக்கியவாதிகளோ அறிவுஜீவியோ கிடையாது. சாதாரண பொதுஜனம். செய்தியின் பின்புலத்தையும் அதன் அரசியலையும் ஒருநாளும் ஆய்வுக்கு உட்படுத்தி தீர விசாரிக்க நமக்கெல்லாம் துப்புகிடையாது. ஸ்டிரைட்டா ஹீரோதான். என்னது செக்ஸ் டார்ச்சரா.. கற்பழிப்பு வழக்கை போட்டு அவனை புடிச்சி தூக்கில போடுங்க சார் என அறைகூவல் விடுத்துவிட்டு நம்முடைய வேலைகளில் மூழ்கிவிடுவோம்.

ஆனால் எதையும் பகுத்தறிந்து ஊருக்கும் உலகுக்கும் உரக்கச் சொல்லுகிற முற்போக்காளர்களாக அறியப்படும் சில எழுத்தாளர்கள் கூட அதே பாணியில் தீர்ப்பு எழுதுவதையும், இதுதான் சாக்கு என நானும் உத்தமன்தான்.. பெண்களை தாயாக மதிக்கிறேன்.. என நிருவ முயல்வதையும் ‘’ பிரபல பாடகி சின்மயி - ஆபாச ட்விட்’’ விவகாரத்தில் கண்கூடாக பார்க்க முடிந்தது. என்னதான் அறிவுஜீவிகள் சொன்னாலும் உண்மை வேறு மாதிரி இருந்தது.

பாடகி சின்மயி விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். இந்த ஃபிளாஷ்பேக் துவங்குவது சென்ற ஆண்டு ஜனவரி மாதம்.
இட ஒதுக்கீடு தொடர்பாக ஆட்சேபனைக்குரிய சில கருத்துகளை சின்மயி தன்னுடைய ட்விட்டர் தளத்தில் வெளியிடுகிறார். அதுபோக தலித்துகளை ‘’சோகால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்’’ என்று வசைமாரி பொழிந்ததோடு, தலித் இயக்க தலைவர்கள் அந்த மக்களை கீழானவர் என சொல்லி சொல்லி ஏமாற்றி வருவதாகவும் கூறியிருந்தார்.

இதை படித்த சில இட ஒதுக்கீடு ஆதரவாளர்கள் அவரோடு வாக்குவாதம் செய்கின்றனர். இதில் ராஜன் பாதியில் பேச ஆரம்பிக்கிறார். சில ட்விட்டுகளில் மிகவும் மென்மையாக பேசிவிட்டு பிறகு விலகிவிடுகிறார். இதற்கு பிறகும் கூட ராஜனுக்கும் சின்மயிக்கும் இடையே ஒரு சண்டையும் வம்பும் இருந்ததாக தெரியவில்லை.

அதுகுறித்த முழுமையான பேச்சுகள் இந்த இணையதளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அந்த விவாதத்தை இங்கே காணலாம்.

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

அதற்கு பிறகு அதே ஜனவரியில் இலங்கை கடற்படையால் கொல்லப்படும் மீனவர்களை காக்க ட்விட்டரில் ஒரு இயக்கம் தொடங்கப்படுகிறது. அதில் தமிழர்கள் மட்டுமல்லாது வட இந்தியர்களும் ஆர்வத்துடன் இணைந்து மீனவர்களின் உயிருக்காக குரல் கொடுக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு ஆன்லைன் பெட்டிஷனில் கையொப்பமிட எழுத்தாளர் மாமல்லன் சின்மயியிடம் முறையிடுகிறார். ஆனால் அவரோ நாங்கள்லாம் உயிர்களை துன்புறுத்துறவங்க இல்ல.. வெட்டி சாப்பிடறவங்களும் இல்லை.. என்று பதில் சொல்கிறார்.

இது எந்த அளவுக்கு அந்த இயக்கத்தில் பங்குகொண்ட ஒவ்வொருவரையும் கடுப்பேற்றியிருக்கும் என்பது முக்கியம். அதோடு மீனவர் ஆதரவுட்விட்டுகளை ‘’ஓவர் ஆட்டமாருக்கு’’ என வர்ணிக்கிறார். அதோடு இப்போதும் கூட ஏதோ போக்கிரிகள் சேர்ந்து கொட்டம் அடித்ததை போலவேதான் டிஎன்ஃபிஷர்மேன் டேகில் இணைந்தவர்களை பற்றி சிலாகிக்கிறார். அதை கண்டித்த சிலபல ட்விட்டர்களையும் ப்ளாக் செய்கிறார். கெஞ்சி கெஞ்சி கேட்டவர்களை கேலி செய்து ரசிக்கிறார்.

இதுகுறித்த முழுமையான உரையாடல் இங்கே

http://365ttt.blogspot.in/2012/10/tnfishermen-tamil-twitter-conversation.html

இந்த இட ஒதுக்கீட்டு களேபரங்களும் மீனவா மீனை கொன்றா ஸ்டேட்மென்ட்களும் அவரை தமிழ் ட்விட்டர்களிடமிருந்து பிரித்துவிட்டது. அதோடு ஒருமுறை ஹிந்துவில் வெளியான செய்தியின் லிங்கையும் கொடுத்து.. ஏழைகள் மின்சாரைத்தை திருடுகிறார்கள் அவர்களை கண்காணிக்கவேண்டும் என்றெல்லாம் பேசியதாக சொல்லப்படுகிறது. அப்போதும் அவரை தமிழில் எழுதும் ட்விட்டர்கள் தொடர்ந்து எதிர்த்தே வந்திருக்கிறார்கள்.

ட்விட்டரில் தன்னை தொடர்பவர்கள் கேள்விகள் கேட்காமல் கூழைக்கும்பிடு போடவேண்டும் என எதிர்பார்த்தவருக்கு இது எரிச்சலை உண்டாக்கியிருக்க வேண்டும். இதனால் தமிழ் ட்விட்டர்கள் யாருமே அவரை சீண்டுவதேயில்லை.

சின்மயி என்று ஒருவர் ட்விட்டரில் இருந்ததையே எல்லோருமே மறந்து போயிருந்த நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் மார்ச் 10 ஆம் தேதி ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகிறது. ”தி அதெர் வாய்செஸ்” என்கிற அந்தக் கட்டுரையில் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களிடையே இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள் பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்கிற நிருபர் எழுதியிருந்தார். அதில் பொழுதுபோக்குப் பாட்ஷாக்கள் என்கிற தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராஜனையும் குறிப்பிட்டிருந்தார். இதுதான் சின்மயி-ராஜன் இடையேயான கைது விவகாரத்தில் மிக முக்கியமான ஒன்று.
அந்த கட்டுரை இங்கே இருக்கிறது

http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1-823273.aspx

இதில் பிரபல பாடகியான சின்மயிக்கு உடன்பாடில்லை என்பதும், அவர் அந்த பட்டியலை வெளியிட்ட மகேஷ்மூர்த்தி என்பவருக்கு தொல்லை கொடுத்து ராஜனின் பெயரை நீக்க வேண்டும் என்றும் கோரினார். பல விருதுகளைவென்ற பிரபல பாடகியான பல லட்சம் பேர் பின்தொடரும் தன் பெயரோடு ஆஃப்டர் ஆல் 2000 பேர் கூட தொடராத காமன் மேனான ராஜனின் பெயர் எப்படி இடம்பெற முடியும் என மகேஷ்மூர்த்தியிடம் சண்டைபோடுகிறார்.
ஆனால் மகேஷ்மூர்த்தியோ விடாப்பிடியாக நீக்கமுடியாது என்றும் அதற்கான காரணங்களையும் முன்வைக்கிறார். ஆனால் சின்மயியோ விடாபிடியாக சண்டையிடுகிறார்.

ஒன்று என் பெயரை நீக்கு அல்லது ராஜன் பெயரை நீக்கு என்றெல்லாம் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் பத்திரிகையாளர்மகேஷ்மூர்த்தியோ என்னால் எதுவும் செய்யமுடியாது.. உன்னால் முடிந்ததை செய்துகொள் என விலகிவிடுகிறார். இது சின்மயிக்கு செம கடுப்பை உண்டாக்கியது. இதுதான் ராஜன் மீதான வன்மத்திற்கான முதல் விதை விழுந்த இடம். ராஜனை பழிவாங்க வேண்டும் என அப்போதே முடிவு செய்திருக்கிறார்.

சின்மயியின் இந்த குடுமிபிடி சண்டையை கவனித்துக்கொண்டிருந்த ராஜனும் அவருடைய நண்பர்களும் சின்மயியின் தோல்வியை பகடி செய்யும் வகையில் அசிங்கப்பட்டாள் சின்மயி என்கிற ஹேஷ்டாகின் கீழ் அவரை கேலி செய்தனர். அதிலும் கூட ராஜனோ அவருடைய கூட்டாளிகளோ வரம்புமீறி எதையும் சொல்லவில்லை. குறிப்பாக ஆபாசமாக எதையும் ட்விட்டவில்லை.

ஆனால் கடுமையான மன உளைச்சலிலும் பழிவாங்கு உணர்ச்சியோடு இருந்த சின்மயியோ இந்த ஹேஷ் டேகில் பேசிய அனைவரையும் ப்ளாக் செய்தார். முன்கதை சுருக்கம் தெரியாமல் சின்மயி போன்ற நல்ல பாடகியை ஏன் கேலி செய்கிறீர்கள் என்று தமிழில் ட்விட்டிய ஒரே காரணத்திற்காக என்னையும் கூட ப்ளாக் செய்தார் இந்த பிரபல பாடகி.
இந்த சமயத்தில்தான் சின்மயி தமிழில் ட்விட்டுபவர்கள் அனைவருமே பொறுக்கிகள் என எழுதி ட்விட் செய்து பின் அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு பிறகு சின்மயி தொடர்ச்சியாக ராஜனை சீண்டும் வகையில் ட்விட்டுகள் போடுவதும்.. அதனால் கடுப்பான ராஜனின் நண்பர்கள் சின்மயியை கேலி செய்யும் வகையில் ட்விட்டுகள் போட்டதும் தொடர்ந்தன. ராஜன் இந்த நேரத்திலும் கூட கண்ணியக்குறைவாக எதையும் ட்விட்டவில்லை. ஆனால் கடந்த மார்ச் மாதம் ஒரு கட்டுரை எழுதி அதில் ராஜனை

’பெண்கள் குறித்து வக்கிரமாக எழுதுவதையே பிழைப்பாக் கொண்ட ஒருவனால் ஒரு வருடமாக உளைச்சல் அடைந்து வருகிறேன்’

என்று எழுதுகிறார். இது ராஜனுக்கு பெரிய மன உளைச்சல் உண்டாக்க அவர் அதற்காக ஒரு பதிலை தன்னுடைய வலைப்பதிவில் பகிர்கிறார். அதில் சின்மயியிடம் சில கேள்விகளையும் முன்வைக்கிறார்.
அந்த பதிவை படிக்க

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

ஆனால் எந்தகேள்விக்கும் எந்த பதிலையும் சொல்லாமல் கமுக்கமாக அமைதியாகிவிடுகிறார் சின்மயி.

அக்டோபர் மாத துவக்கத்தில் டெக்கான் க்ரானிக்கிள் பத்திரிகையின் துணை இதழில் சின்மயி ஒரு பேட்டி கொடுத்திருந்தார். ட்விட்டரில் உள்ளவர்கள் தன்னை துன்புறுத்துவதாகவும் இதை தடுக்கவேண்டும் என்றும் கூறியிருந்தார். அந்த பத்திரிகை செய்தியும் ஒருதலைபட்சமாக அவருடைய பேட்டியை மட்டுமே வாங்கி போட்டிருந்தது.

அதை படித்த சிலர் சின்மயியை கண்டித்து மீண்டும் ட்விட்டுகளை வெளியிடத்தொடங்கினர். இந்த சமயத்தில் சில விஷமிகள் சின்மயியை தூண்டிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு ராஜனும் அவருடைய நண்பர்களும் போட்ட ட்விட்டுகளின் ஸ்கீரின் ஷாட்களையும் எடுத்து கொடுத்திருக்கிறார்கள். ஒரு ப்ளாக் செய்துவிட்ட பின் அவர் என்ன எழுதினாலும் சம்பந்தப்பட்டவருக்கு தெரியாது.. அப்படியிருக்க சின்மயிக்கு மட்டும் ராஜன்,சரவணகுமார் ட்விட்டுகள் எப்படி தெரிந்தது என்கிற கேள்விக்கான விடையே மேலே குறிப்பிட்டிருப்பது.
இதுதவிர அவ்வப்போது தான் ஒரு ஐயங்கார் என்பதைக்கூட highயெங்கார் என்கிற மிதப்போடு எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார் சின்மயி. சாதிய பெருமிதத்தோடு இப்படியெல்லாம் ட்விட்டுவது தவறு என கண்டித்த ஒவ்வொருவரையும் அவர் ப்ளாக் செய்திருக்கிறார்.

டெக்கான் க்ரானிக்கிள் செய்திக்கு கிடைத்த எதிர்வினைகளை கண்டு கோபம் கொண்ட சின்மயியின் தாயார் சின்மயிக்கு எதிராக ட்விட்டும் சிலரை போனில் அழைத்து மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்த அலைப்பேசி எண்கள் கூட சின்மயியின் அல்லக்கைகளாகவே மாறிப்போன அந்த விஷமிகள் தேடி வாங்கிக்கொடுத்தவையே! (பிரபல பாடகிக்கு வேறு வேலையே இருக்காதா?)

வலைப்பதிவரான பரிசல்காரனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரச்சனையை சுமூகமாக முடிப்பதற்கே நண்பர்கள் முயற்சி செய்துள்ளனர். ராஜனும் கூட நான் போட்ட ட்விட்டுகளுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்றெல்லாம் சொல்லியும்.. உங்களையெல்லாம் சும்மா விடமாட்டேன்டா என்கிற வகையில் பேசிவிட்டு தொடர்பை துண்டித்திருக்கிறார்.
அப்படித்தான் சின்மயியின் தாயார் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இன்னொரு நபரான செந்தில் என்பவரையும் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவரோ உங்கள் மகளை அமைதி காக்க சொல்லுங்கள் எல்லாமேசரியாகிவிடும் என்பதாக பேசியுள்ளார். அதை அவர் ட்விட்டரில் சொல்ல.. சரவணகுமார் மிக மிக சாதாரண அளவில் ‘’கடலைபோடதானே’’ என்கிற வார்த்தையை உபயோகித்து கிண்டல் செய்திருக்கிறார். பொதுவெளியில் இதைவிடவும் மோசமான விமர்சனங்களை பிரபலங்கள் எதிர்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு பிறகு ராஜன் சின்மயி பற்றி எதுவும் பேசாமல் இனி ஜென் நிலையில் இருப்பேன் என அறிவித்துவிட்டு ராஜென் என தன் பெயரை மாற்றிவைத்துவிட்டு அமைதியாகவே இருந்தார். ஆனால் சின்மயியை இவ்விஷயத்தில் சில பார்ப்பன ஆதரவாளர்கள் அதெல்லாம் சும்மா விடக்கூடாது இவர்களை பழிவாங்கவேண்டும் என தூபம் போட்டிருக்கிறார்கள்.

அதோடு அக்டோபர் 5 ஆம் தேதி சரவணகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சின்மயி இதற்காக உன்னை பழிவாங்காமல் விடமாட்டேன் என ட்விட்டரிலேயே சபமிட்டுள்ளார். ஆனால் சில மணிநேரங்களில் அந்த ட்விட்டுகள் நீக்கப்பட்டன. அவை மட்டுமல்லாது.. ராஜனை அவதூறாக எழுதிய ட்விட்டுகளும் இட ஒதுக்கீடு , மீனவர்கள் மீன்களை கொல்லுகிறார்கள் மகேஷ்மூர்த்தியிடம் மன்றாடியது என பல ட்விட்டுகளும் அதிரடியாக நீக்கப்பட்டன. (இதற்காக தனிப்படை வேலை பார்த்ததோ என்னவோ!)

ராஜன் ,சரவணன்,செந்தில் உள்ளிட்ட சிலர் போட்டதாக சொல்லபடும் ட்விட்களை மட்டுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு புகார் ஒன்றை கமிஷனரிடம் கொடுக்க.. அதிரடியாக ராஜனும் சரவணனும் கைது செய்யப்படுகின்றனர். ஒரு சாதாரண பொதுஜனம் கம்ப்ளைன்ட் கொடுத்தால் நம்முடைய காவல்துறை எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கும் என்பதற்கு இது நல்ல உதாரணம்.(சைபர் கிரைமில் பொதுஜனங்கள் கொடுத்த 19 வழக்குகள் பென்டிங்கில் இருப்பதாக கமிஷனரே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)

இங்கே ஒரு கேள்வி இருக்கிறது. ஒருவரை கைது செய்து சிறையில் அடைக்க வெறும் ஸ்கிரீன் ஷாட்டுகள் மட்டுமே போதுமா.. தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையில் யார்வேண்டுமானாலும் யார் எழுதியது போலவும் ஸ்கிரீன் ஷாட் தயார் செய்ய இயலும். அதைப்பற்றியெல்லாம் கவலையேயில்லாமல் காவல்துறை தன் கடமையை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது.

போகட்டும் இதோ பதினைந்து நாட்கள் இருவரும் சிறையலடைக்கப்பட்டுள்ளனர். அந்த இருவருடைய குடும்பங்களும் சொல்லவொண்ணா துயத்தை சந்தித்துள்ளனர். பிள்ளைகள் தந்தையில்லாமல் வாடிப்போயிருக்கின்றன. தொலைக்காட்சிகள் ஏதோ காமவெறியர்களை போல இருவரையும் சித்தரித்து செய்திகள் வெளியிடுகின்றன.

இருவர் மீதும் சின்மயி முன்வைத்த குற்றச்சாட்டு என்ன? இருவரும் ஆபாச ட்விட்டுகள் வெளியிட்டதாக சொல்லப்படுவதே. ஆனால் அதற்கான ஆதாரங்கள் சின்மயியிடமே கிடையாது. அவர்கள் இருவரும் அப்படி ஏதாவது செய்திருந்தால்தானே ஆதாரங்கள் கிடைப்பதற்கு. தன்னை பற்றி ஆபாச ட்விட்டுகள் இல்லையென்கிற காரணத்தால் உடனடியாக அரசியல் தலைவர்கள் குறித்து ராஜனும் சரவணகுமாரும் ட்விட்டியதையெல்லாம் ஸ்கீரின் ஷாட் எடுத்து ஆதாரம் என நீட்டுகிறார்கள். சின்மயியின் புகார் அவரைப்பற்றி ட்விட்டியதாக சொல்லப்படுவதுதானே..

சின்மயியின் நோக்கம் என்ன? பழைய பகையையும் தமிழில் எழுதும் ட்விட்டர்களின் மீதான தன்னுடைய வன்மத்தையும் தீர்த்துக்கொள்ள இப்படி ஒரு பொய்யான புகாரை சின்மயி கொடுத்திருக்கிறார். அதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்திருக்கிறார். சின்மயி அம்மா குறித்து பகடியாக சரவணகுமாரும் செந்திலும் பேசியதை பிடித்துக்கொண்டு அதைவைத்து ஆதரவை திரட்டுகிறார்.

குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராஜனோ சரவணகுமாரோ ட்விட்டரிலோ வேறு தளங்களிலோ சின்மயியின் ஆபாசப்படங்களையோ அல்லது அவரை ஆபாசமாக வர்ணித்தோ எதையுமே எழுதவில்லை. அவரை மின்னஞ்சலில் மிரட்டவில்லை. நேரிலோ தொலைபேசியிலோ கூட பேசியதில்லை. சொல்லப்போனால் இவர்கள் யாருமே சின்மயியை பார்த்ததே கிடையாது. அப்படியிருக்க நம்முடைய காவல்துறை இவர்கள் மீது பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது என்பது ஆச்சர்யமான விஷயம்.

அதிகாரவர்க்கம் பிரபலங்களுக்கு துணைபோவது இன்று நேற்றல்ல எப்போதுமே அப்படித்தான்..

ஏற்கனவே சமூக வலைதளங்களால் பெரிய அளவில் பாதிகப்பட்டிருக்கும் ஆளும் அதிகாரம்.. இதுதாண்டா சான்ஸு இவனுங்களை அடக்குவதற்கு என்கிற ரேஞ்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இது நம்முடைய கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. நாளையே ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ ஊழல் ஒழிப்போ, ஈழப்போராட்டமோ, மீனவர் படுகொலையோ, கூடங்குளமோ ஏதோ ஒரு பிரச்சனை.. ஆனால் அதிகாரத்திற்கு எதிரானதாக இருந்தால் எழுதியவரை வெறும் ஸ்கிரீன் ஷாட் உதவியோடு கூட கைது செய்து சிறையிலடைத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக எழுதியவன் என முத்திரைகுத்தி தீவிரவாதியாக்கிவிட இயலும்.

இன்று ஊடகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட அதிகார வர்க்கத்தின் கைப்பாவையாகவே செயல்படுகின்றன. அப்படியிருக்க மாற்று ஊடகமான இணைய வெளியிலும் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் முயல்கிறார்களோ என அஞ்சவேண்டியிருக்கிறது. உண்மை எங்கிருந்தாலும் ஊழல் பேர்வழிகளுக்கு உறுத்தலாகத்தானே இருக்கும்.

ட்விட்டர் ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைதளங்கள் நவீன திண்ணையை போன்றது. இங்கே உங்களுக்கு ப்ரியமானவர்களோடு சேர்ந்து உரையாடலாம் திட்டலாம் கொஞ்சலாம் குலாவலாம். பிடிக்கவில்லையா ப்ளாக் செய்துவிட்டு போய்விடலாம். அவர் பேசுவது உங்களுக்கு கேட்காது.. நீங்கள் பேசுவதும் அவருக்கு கேட்காது. அதிலும் குறிப்பாக பிரபலங்கள் என்று அறியப்படுபவர்களுக்கு லட்சக்கணக்கில் பாலோயர்கள் இருப்பது கண்கூடு. ட்விட்டரில் இருக்கிற எந்த பிரபலமும் தன்னை தொடர்பவர் தன்னைப்பற்றி கேலி செய்கிறாரா திட்டுகிறாரா என்று பார்த்துக்கொண்டிருப்பதில்லை. ஆனால் சின்மயி ஒருவரை ப்ளாக் செய்த பின்னும் கொல்லைப்புறமாக உளவு பார்த்து வஞ்சம் தீர்க்க காத்திருந்து பழிவாங்கியிருக்கிறார்.

அவருடைய பழிவாங்கும் உணர்ச்சியை மிகச்சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறது அதிகாரவர்க்கம். சமூகவலைதளங்களில் இனி எவனாச்சும் ஏதாச்சும் எழுதிப்பாருங்கடா.. என்று சவால் விடப்பட்டிருக்கிறது. இணையத்தில் இவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டங்கள் கண்களை உறுத்துகிறது.

முல்லைபெரியார் பிரச்சனையின் போது தமிழர் உரிமைக்காக அறிவியல் ரீதியிலான வாதங்களை முன்னெடுத்தவர் உதவி பேராசிரியர் சரவணகுமார். தொடர்ந்து தலித் மக்களுக்காகவும் ஈழத்தமிருக்காகவும் மீனவர்களுக்காவும் குரல்கொடுத்து வருபவர். சொல்லப்போனால் சின்மயியோடு அவர் உரையாடியது மிக குறைவே. காக்கைசிறகினிலே என்கிற சிற்றிதழையும் முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்திவருகிறார். ராஜன் மிகச்சிறந்த வாசிப்பாளர். தமிழில் எழுதுவதில் மிகச்சிறந்த ஆளுமையை கொண்டிருப்பவர். சின்மயியிடம் அவர் சில கேள்விகளை முன்வைத்து கடந்த மார்ச் மாதம் எழுதிய பதிவை படித்தாலே அவரைப்பற்றி புரிந்துகொள்ள முடியும். வறுமையோடு போராடி இன்று அரசு வேலையில் இருப்பவர். நம்முடைய சமூகத்தின் மீதான கோபத்தை அவருக்கேயுரிய மொழியில் வெளியிடுகிறார். வழக்கு எண் படம் குறித்து அவர் எழுதி பதிவை வாசித்துப்பாருங்கள். எவ்வளவு சிறப்பாக எழுதக்கூடியவர்.

http://www.rajanleaks.com/2012/05/189.html

நம் மக்களுடைய மொழி எப்போதுமே கள்ளங்கபடமில்லாமல் எதையும் நேர்பட பேசுகிறவையாகவே இருந்திருக்கிறது. திமுகவும் அதிமுகவும் மேடைகளில் பேசிடாத ஆபாசத்தினையா ராஜன் பேசிவிட்டார். சரவணகுமாரும் செந்திலும் பேசியது சிறையிலடைத்து தண்டிக்கப்படவேண்டிய குற்றமா? சைபர் போலிஸாரிடம் தரப்பட்ட 19 வழக்குகள் நிலுவையில் இருக்க.. அவசரமாக இந்த வழக்கினை எடுத்துக்கொண்டு தனிப்படை அமைத்து கைது நடவடிக்கை வரைக்கும் இறங்கவேண்டிய காரணம் என்ன? எந்த விசாரணையும் முடிவடையாத நிலையில் ஊடகங்கள் ஏன் அவசரமாக இருவரையும் காமவெறியர்களாக சித்தரித்து தீர்ப்பெழுதின? என்பதுமாதிரியான கேள்விகள் நம்மிடையே எஞ்சியிருக்கின்றன.

விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஏற்றுக்கொள்கிறவனே நல்ல கலைஞனாக இருக்க முடியும். சின்மயியை போன்றவர்கள் வெறும் பாராட்டுகளை மட்டுமே எதிர்பார்த்து பொதுவெளிக்கு வரும்போது விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தப்புதவறுமாக எதையாவது உளறிகொட்டி சக ரசிகர்களின் கேள்விகளால் திணறுகிறார்கள். சின்மயி கோர்ட்டுக்கு போனதுபோல பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனோ கலைஞர் கருணாநிதியோ கோர்ட்டுக்கு போயிருந்தால் இந்நேரம் சமூகவலைதளங்களை பயன்படுத்துகிற பாதிபேருக்கு ஆயுள்தண்டனையைத்தான் கொடுக்க வேண்டியிருக்கும். பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசனுக்கு இருக்கிற பக்குவமும் ஆளுமையும் கூட பிரபல பாடகி சின்மயிக்கு இல்லையே என்பதுதான் நம்முடைய கவலை.

எந்த நாடாக இருந்தாலும், அரசு இயந்திரங்கள் கருத்து பரிமாறல்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தொடர்ந்து முயன்றபடி இருக்கும். இணையத்தில் இது மிகவும் கடினம் என்பதால், இங்கே அச்சுறுத்தல் தொடங்கியிருக்கிறது. இது மிக மிக மோசமான முன்னுதாரணம். நம்முடைய சிறகுகள் வெட்டி எறியப்படும் முன் இது தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

ராஜனுக்காக நாம் குரல் கொடுக்கத்தேவையில்லை. சின்மயியை எதிர்க்க தேவையில்லை. அதிகாரத்தின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நம்முடைய கருத்து சுதந்திரத்திற்காக குரல்கொடுப்போம்.

உதவிய இணையதளங்கள் – www.twitter.com , http://365ttt.blogspot.in , http://www.rajanleaks.com , http://www.chinmayisripada.com , www.google.com , மகேஷ்மூர்த்தியின் ட்விட்டுகள், ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரை மற்றும் நண்பர்களின் ட்விட் லாங்கர் கருத்துகள்.

-அதிஷா



 சின்மயி விவகாரத்தை தெளிவாய் அலசும் முக்கியமான கட்டுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu 1 Nov 2012 - 1:58

வழக்கு நீதிமன்றம் சென்றால் தேறாது... சி ன் மயி(ர்) தனது புகழை தானே கெடுத்துக்கொண்டார். புன்னகை

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 1 Nov 2012 - 2:01

இவ்வளவு கீழ் தரமான பெண்ணாக சின்மயி இருப்பாள் என்று நான் நினைக்கவில்லை
சின்மயியை பிடிக்கும் காரணம் அவளின் குரல் இனி பிடிக்காது

highயங்கார் பெண் என்ற திமிர் இருக்கத்தான் செய்கிறது (இவளுக்கு மட்டும்)

avatar
rudran
பண்பாளர்

பதிவுகள் : 77
இணைந்தது : 14/11/2009

Postrudran Thu 1 Nov 2012 - 3:37

ஒரு காலத்தில் இங்கிலாந்தின் இரும்புப் பெண்மணி என்றழைக்கப் பட்ட திருமதி மாரகரட் தாட்சர் அவர்க்ளையே ஒரு கேலிச்சித்திரத்தில் மிகக் குறைந்த உடையில் சித்தரித்திருந்தார்கள். ஆனால் அந்த அம்மையாரோ அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் எதிர் கொள்ளும் மனப்பாங்கும், மனிதம் நிறைந்த மனமும் மட்டுமே, நல்லதை புகட்டும் பாங்கும் இருந்தால் மட்டுமே இலட்சக்கணக்கானோர் பங்கு பெறும் சமூக வலைத் தளங்களில் பெயர் சொல்ல முடியும். எடுத்தேன் கவிழ்த்தேன் என்றால் கதைக்காகாது.

m.mohan
m.mohan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 05/09/2012

Postm.mohan Thu 1 Nov 2012 - 13:38

பெரியார் இல்லாதிருந்தால் இன்றைய நிலையை எண்ணி பாருங்கள்.
என்று அன்புடன்
மு. மோகன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக