புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
64 Posts - 50%
heezulia
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் கவிதைகள் Poll_c10ரமணியின் கவிதைகள் Poll_m10ரமணியின் கவிதைகள் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் கவிதைகள்


   
   

Page 1 of 36 1, 2, 3 ... 18 ... 36  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 31, 2012 1:22 pm

கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 31, 2012 1:41 pm

ரமணி wrote:கணினி போற்றுதும்!?
ரமணி, 18/08/2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!


*****

நல்லா இருக்கு..

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 1:16 am

போகதது போக...
ரமணி, 20/08/2012

கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிக்கொண்டு
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!



ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 7:44 am

கடவுள் வாழ்த்து: கணபதி
(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 09/10/2012

(கலி விருத்தம்)
வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர்
ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால்
விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.

(கலி விருத்தம்)
ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும்
உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன்
பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.

(குறள் வெண்செந்துறை)
வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே
விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.

*****
Sanskrit Originals:
shuklAmbaradharaM viShNum shashivarNaM chaturbhujam |
prasannavadanaM dhyAyet sarva vignopashAntaye ||

gajAnanaM bhUtagaNAdi sevitaM
kapittha jaMbU phalasAra bhakShitaM |
umAsutaM shokavinAsha kAraNaM
namAmi vighneshvara pAda pa~gkajam ||

vakratuNDa mahAkAya koTisUrya-samaprabha |
nirvighnaM kuru me deva sarvakAryeShu sarvadA ||





சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 01, 2012 10:39 am

ரமணி wrote:கடவுள் வாழ்த்து: கணபதி
(சம்ஸ்க்ருத ஶ்லோகங்களின் தமிழ் முயற்சி)
ரமணி, 09/10/2012

வெண்துகில் உடுத்தவர் எங்கும் நிறைந்தவர்
வெண்ணிலா நிறத்தினர் நான்கு கரத்தினர்
ஆனந்த முகத்தினர் இவரை தியானித்தால்
விக்னங்கள் எல்லாம் வினையற்றுப் போகும்.

ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளாங்கனி நாவல்பழம் உண்டிடும்
உமாமைந்தன் துன்பம் தொலையக் காரணன்
பணிகிறேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரையில்.

வளைதுதிக்கை மாமேனி கோடிசூரியச் சுடரொளியே
விக்னங்கள் அறச்செய்வாய் எப்போதும் எச்செயலிலும்.

*****


தங்களின் சுக்லாம் பரதம் மொழிபெயர்ப்பு அருமை நண்பரே ,,,

மூலத் தகவலும் குறிப்புணர்த்தி எழுதினால் பலருக்கு அடையாளம் கண்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
ரமணியின் கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Nov 01, 2012 10:51 am

ரமணி wrote:போகதது போக...
ரமணி, 20/08/2012

கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிக்கொண்டு
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!


அருமையான கவிதை,

பெருமுயற்சி செய்தாலும் பெம்மானை நினைத்தாலும்
விதிவழியே விளைக்கின்றேன், வீணாக கழிக்கின்றேன்
மதிவழிய வளர்ந்தாலும் மாறன்வந்து உதைத்தாலும்
சதிவிலக நாளில்லை, சடுதியிலே உழலுகின்றேன்
நதிகலக்கும் கடல்போலுள்ள பிறவிபல பிறக்கின்றேன்


சித்தர் பாடல்கள் போல், ஆழ்ந்த உட்பொருளுடன் உள்ளது, வாழ்த்துகள்,

தொடருங்கள்...



சதாசிவம்
ரமணியின் கவிதைகள் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 12:00 pm

ஸம்ஸ்க்ருத ஷ்லோகங்கள் பெரும்பாலும் இசை வடிவில் பாடத்தக்கன. இதுபோல் அவற்றின் தமிழாக்கத்துக்கும் இசை வடிவில் இன்னொரு செய்யுள் எழுதலாம்.
மேலுள்ள விரிவான தமிழாக்கத்தைக் கீழ்வரும் ராகத்தில் பாட ஏதுவாகச் சுருக்கி இப்படி எழுதலாம்:
https://www.youtube.com/watch?v=klbqvg-MRTs

வெண்துகி லணிந்த வியாபி
நிலாவண்ணம் நாற்கரம்
மலர்ந்த வதனம் தியானித்தால்
விக்னமெல்லாமும் நீங்கிடும்.
[நான்கு அடிகளில் அங்கங்கே அடிகளில் சீர் குறைந்து வருவதால் இது ஆசிரியத் துறை.]

காயத்ரியின் குரலில் வரும் ’கஜானனம்’ ஷ்லோகத்தை இப்படித் தமிழில் எழுதலாம்.
Free File Hosting & Video Downloads, Free File Sharing, Online Friends Network - ஜிட்டுhttp://www.ziddu.com/download/20564606/gajAnanam-gAyatrI.mp3.html

ஆனைமுகம் பூத கணங்கள் வழிபடும்
பழுத்த விளம்நாவல்பழ சாறு பருகிடும்
உமாமகன் துன்பம் தொலையக் காரணன்
பணிந்தேன் விக்னேஷ்வரர் பாதத் தாமரை.
[நான்கு அடிகளில் வருவதால் இது கலிவிருத்தம்.]




ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Thu Nov 01, 2012 5:22 pm

மௌனம்
ரமணி, 22/08/2012

கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.
வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?



அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 01, 2012 5:45 pm

அருமையான கவிதை...
இன்னும் நல்ல கவிதைகள் வரட்டும்.



ரமணியின் கவிதைகள் Paard105xzரமணியின் கவிதைகள் Paard105xzரமணியின் கவிதைகள் Paard105xzரமணியின் கவிதைகள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Nov 02, 2012 10:03 am

14. ஒரு கணினி யந்திரப்புலவரின் விஞ்ஞானப் புலம்பல்
ரமணி, 25/08/2012

பள்ளியின் பயிற்சியில் கல்லூரியின் கலகலப்பில்
நினைத்ததெல்லாம் முனைந்ததெல்லாம் முடிவது எக்காலம்?

தமிழில் நினைத்ததும் தமிழில் முயன்றதும்
இன்றுசெய்யப் பொழுதுகள் கிடைப்பது எக்காலம்?

’பொன்னியின் செல்வன்’போல் வரலாற்றுக் கதைகளை
மனம்வியந்து படித்திட முடிவது எக்காலம்?

சுஜாதாவின் படைப்புகள் தி.ஜா.வின்* சிறுகதைகள்
மீண்டும் படித்திட முடிவது எக்காலம்?

மாதமொரு ஆங்கில நாவல்வரும் இந்நாளில்
அதிகம் விற்பது படிப்பது எக்காலம்?

எல்லோரும் எளிதாக எழுதிடும் கவிதைகளை
நானும் முயன்று எழுதுவது எக்காலம்?

தென்னந் தோப்பில் கிரிக்கெட் போட்டிகளின்
இடைவெளியில் இளநீர் குடிப்பது எக்காலம்?

திருச்சிநகர் தெருக்களிலே நண்பர்கள் புடைசூழ
சுற்றிவந்து கண்ணோக்க முடிவது எக்காலம்?

காவேரிப் பாலத்தில் கதிரவன் மறையும்போது
தீட்டிய வண்ணங்களை ரசிப்பது எக்காலம்?

மென்பொரூள் துறையினிலே வாய்ப்புகள் அதிகமென்று
வண்ணங்கள் பறக்கத்தேறி வந்து மாட்டினேனே!

பொருளீட்ட ஊர்சுற்ற வெளிநாடு போகவர
அனைவரும்போல் ஆசைப்படப் பொறியில் விழுந்தேனே!

வாழ்வியல் ஆசைகள் தேவைகளாய் மாறிவந்து
நுண்கலை ஆசைகளை வெல்லுமென நினைக்கவில்லை!

பொம்மைகளின் தொழில்சார்ந்த நட்புறவில், விருந்துகளில்,
விருதுகளில், நானுமொரு கைப்பாவை யானேனே!

ஆட்டுவித்தார் ஆட்டியபடி ஆடிடும் ஆட்டத்தில்
இரவுபகல் மாறிவிட உணவுகள் கூளமானதே!

இயற்கை அழகினை, பொதுமனிதர் இயல்பினை
அனுபவிக்க வழியின்றி ஆடுகிறேன், ஓடுகிறேன்!

பள்ளி நாட்களில் கணினியின் கவர்ச்சியில்
லெம்மிங்ஸ்* ஆடியது நனவாகிப் போனதே!

ஒருவர் வழிகாட்டலை மற்றவர்கள் சார்ந்திருந்து
ஆடுகள்போல் தொடர்ந்து வினைகள் ஆற்றினோமே!

வினைகளின் விலைகளை விளைவுகளை ஏற்றுக்கொண்டு
உயர்ந்தும் தாழ்ந்தும் வீழ்ந்தும் வெடித்தோமே!

இத்தகைய இயந்திர வாழ்க்கையின் கட்டுகளை
உடைத்து வெளிப்படுவது எக்காலம், எக்காலம்?

அப்படி வெளிவந்து முந்தைய தலைமுறைபோல்
வாழ்வின் அர்த்தங்களை அலசுவது எந்நாளோ?

அந்நாள் என்வாழ்வில் வாராது போகுமோ?
நானுமந்த லெம்மிங்போல் வீழ்ந்து மறைவேனோ?

குறிப்பு:
தி.ஜா.--தி.ஜானகிராமன், பிரபல எழுத்தாளர், ’மோகமுள்’ நாவலாசிரியர்
லெம்மிங் மின்விளையாட்டு பற்றி அறிந்திட:
Lemmings (video game) - Wikipedia, the free encyclopedia

*****

Sponsored content

PostSponsored content



Page 1 of 36 1, 2, 3 ... 18 ... 36  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக