புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Rutu
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_m10தமிழ்ச்சொல் வேட்டை - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச்சொல் வேட்டை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Nov 18, 2012 7:39 am

First topic message reminder :

தமிழ்ச்சொல் வேட்டை - தொடர்பதிவு
ஒன்று)

புதுச் சொற்களை உருவாக்குவதற்கான சொல் வேட்டையில் ஈடுபடும் முன்னால், வாசகர்கள் ஒரு செய்தியை கவனத்தில் கொள்ளுதல் நலம். நீதிமன்றங்களில் சாட்சி விசாரணையின் போது குறியிடப்படும் பத்திரங்களை ஆங்கிலத்தில் எக்சிபிட்(exhibit) என்று சொல்வார்கள். இந்தச் சொல்லுக்கு சரியான மொழிபெயர்ப்பு "காட்சிக்கு வைக்கப்படுவது' என்பதே ஆகும்.

ஆனால், இந்தச் சொல்லை தமிழில் மொழிபெயர்த்த மொழியியல் வல்லுநர்கள் இதைச் "சான்றாவணம்' என்று மொழிபெயர்த்தார்கள். அதற்குக் காரணம், வழக்குகளில் காட்டப்படும் பத்திரங்களை "ஆவணம்' என்று சொல்லும் வழக்கம் தமிழகத்தில் இருந்ததற்கு இலக்கியச் சான்றுகள் இருந்ததுதான்.

இறைவன், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட்கொண்ட போது, இறைவனிடம் சுந்தமூர்த்தி நாயனார் கேட்ட கேள்வி:
"ஆட்சியில் ஆவணத்தில் அன்றி மற்று அயலார் தங்கள்
காட்சியில் மூன்றில் ஒன்றைக் காட்டுக''
என்பதாகும். எனவே, சொல் வேட்டையில் ஈடுபடும்போது, இலக்கியச் சான்றுகளோடு நாம் புதுச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அப்படி முடியாதபோது, சொற்களின் வேர்களுக்குப் போய் (root of the word) புதுச் சொற்களை உருவாக்குவதில் தவறில்லை.

சில நேரங்களில், சில மொழிபெயர்ப்புகள் ஒரு காலத்தில் சரியானவையாகவும், பிற்காலத்தில் சரியற்றதாகவும் ஆகிவிட வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு ட்ரெயின் (train) என்கிற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்க்கும் போது நீராவி என்ஜினைக் கருத்தில் கொண்டு அது விடும் புகையை மையப்படுத்திப் "புகை வண்டி' என்று மொழிபெயர்த்தார்கள். ஆனால், இன்றைக்கு எந்த ரயில் வண்டியும் புகை விடுவதே இல்லை. எனவே, இனிமேலும் ரயில் வண்டியைப் புகை வண்டி என்று அழைப்பது பொருத்தமாகுமா என்பது தெரியவில்லை. சிலர் இதைத் "தொடர் வண்டி' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், "ட்ரெய்லர்' கூட தொடர் வண்டிதான் என்பதால் ரயிலைத் தொடர்வண்டி என்று அழைப்பது எங்ஙனம் சரியாக இருக்கும்?

"ஃபோபியா' (phobia) என்கிற ஆங்கிலச் சொல் உயரம் குறித்த அச்சம், இருள் குறித்த அச்சம், தனிமை குறித்த அச்சம், தண்ணீர் குறித்த அச்சம் போன்ற பல்வேறு வகையான அச்சங்களைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல். ஆங்கிலச் சொல் அகராதிகளில் இந்தச் சொல்லுக்கு "அச்சம்' என்ற பொருள் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரே காரணத்தால், தமிழில் இந்தச் சொல்லை "அச்சம்' என்றே குறிப்பிடுகிறோம். ஆனால், "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு அச்சம், பயம், நடுக்கம் போன்ற சொற்களைத் தாண்டி வேறு ஒரு பொருள் இருக்கிறது. ஆனால், அதை உணர்த்தும் சரியான தமிழ்ச்சொல் இல்லை என்றே தோன்றுகிறது. எனவே "ஃபோபியா' என்கிற சொல்லுக்கு சரியான தமிழ்ச் சொல்லை அடுத்த வாரத்திற்குள் உருவாக்கி வாசகர்கள் அனுப்பி வைக்கலாம்.

முன்பே கூறிய இக்கருத்துகளை மனதிலே கொண்டு, இந்த வாரம் "ஃபோபியா' என்கிற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை நாம் தேடுவோம்.

இனி, அடுத்த வாரம் "ஃபோபியா'வுக்குப் புதிய தமிழ்ச் சொல்லைக் கண்டுபிடித்த களிப்பில் இன்னொரு புதுச் சொல் வேட்டையில் இறங்குவோம்...

(தொடரும்) (நன்றி-தினமணி-நீதி அரசர் வி.இராமசுப்ரமணியன்)

இதுவரை வேட்டையாடிய சொற்கள்:
ஃபோபியா = வெருளி அல்லது வெருட்சி
அடிக்ட்' = மீளா வேட்கையன்
அடிக்ஷன் = மீளா வேட்கை
டென்சன் = கொதிப்பு
பாரநோய = மனப்பிறழ்வு
அப்ஜக்டிவ் – சப்ஜக்டிவ் = புறத்தாய்வு - அகத்தாய்வு
இன்புட்-அவுட்புட் = உள்ளீடு-வெளியீடு
அக்ரோனிம் = தொகுசொல்.
அப்ரிவியேஷன் = சொற்சுருக்கம்
பங்க்சுவேஷன் மார்க்ஸ் = நிறுத்தற் குறிகள்
அல்யூஷன் = மறை பொருள்
காமன் சென்ஸ் = இயல்பறிவு.
ஆஸ்ட்ரல் = விசும்புருவான' அல்லது "விசும்புரு



சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 27, 2013 7:59 am

பனிரெண்டு :-
ஸ்ட்ராலிஸ்' அல்லது "ஆஸ்ட்ரம் ஸ்டார்' என்ற இலத்தீன் மொழிச் சொற்களிலிருந்தும், "ஆஸ்ட்ரோன்' என்ற கிரேக்கச் சொல்லிலிருந்தும் உருவாக்கப்பட்டு, சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் 1605-ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்ததாகக் கருதப்படும் சொல் "ஆஸ்ட்ரல்' ஆகும். இந்தச் சொல்லுக்குப் பொதுவான பொருள் விண்மீன்களிலிருந்து வரும் அல்லது விண்மீன்கள் தொடர்பான என்று மெரியம்-வெப்ஸ்டர் அகர முதலி குறிக்கிறது. அதே சமயம், புறப்புலன்களால் அறியப்படும் உலகைத் தாண்டி கண்ணுக்குப் புலனாகாமல் விளங்கும் ஒன்றையும் இச்சொல் குறிப்பதாக அதே அகர முதலி சுட்டிக்காட்டுகிறது. தொடக்க காலத்தில் மேற்கூறிய பொருள்களில் இச்சொல் பயன்படுத்தப்பட்டாலும், பின்னாளில், இறப்பிற்குப் பின் நடப்பதென்ன என்பதைப் பற்றிய ஆராய்ச்சியும், இறப்பின் விளிம்பிற்குப் போய்த் திரும்பி வந்தவர்கள் தங்களது பூதவுடலை விட்டு வெளியேறி, பின் உடம்பிற்குள் புகுந்ததாகச் சொல்லப்படும் (அவுட் ஆஃப் பாடி எக்ஸ்பீரியன்ஸ்) நிகழ்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்ட போதுதான், மிக அதிகமான முறையில் இச்சொல் பயன்பாட்டிற்கு வந்தது.

ஆனால், இந்திய தத்துவவியல் குறிப்பாகத் தமிழர்களின் சைவ சித்தாந்தத் தத்துவவியல் அல்லது மெய்யியல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு மாபெரும் வளர்ச்சியைப் பெற்றுவிட்ட காரணத்தால், இச்சொல் தொடர்பான பயன்பாடு ஏற்கெனவே இருந்திருப்பது போல் தெரிகிறது.

இந்திய தத்துவவியல் ஒரு மனிதனை 3 உடல்கள், 5 கோசங்கள் மற்றும் 3 நிலைகள் கொண்டதாக விரித்துரைக்கிறது. அம்மூன்று உடல்கள் ஸ்தூல, சூட்சும மற்றும் காரண சரீரங்கள் ஆகும். வடமொழியில் சூக்ஷ்ம என்றும், தமிழில் சில நேரங்களில் சூக்கும அல்லது சூட்சும என்றும் அறியப்படும் சரீரமே ஆங்கிலத்தில் "ஆஸ்ட்ரல் பாடி' என்றழைக்கப்படுகிறது. மனம், புத்தி இந்த இரண்டும் வசிக்கும் கண்ணுக்குப் புலனாகாத உடலே "ஆஸ்ட்ரல் பாடி' என்றும், இப்பூதவுடலைச் சுற்றி சக்தி வடிவில் சுடர்விட்டுக் கொண்டிருக்கும் ஒளி என்றும் இது பொதுவாக அறியப்படுகிறது. இவற்றை முன்னிறுத்தி, இந்த வார மடல்களைக் காண்போம்.

இலக்கியன் என்ற வாசகர், "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "உடுவெளி' அல்லது "விண்மீன்வெளி' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். சோலை கருப்பையா, அண்டமும், பிண்டமும் ஒன்றே என்பது சித்தர் வாக்கு என்பதாலும், நமது மெய்யியல் அண்டத்தையும், பிண்டத்தையும் இணைக்கும் தொடர்பை அறிந்திருந்த காரணத்தால், அச்சொல்லுக்கு "அண்ட பிண்டவியல்' என்ற சொல்லையோ, அல்லது மெய்யியல் பற்றிய வெளிப்பாடாக இருக்கும் காரணத்தால், "மெய்ம்மை' என்ற சொல்லையோ பயன்படுத்தலாம் என்கிறார்.

பாபாராஜ், சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் சொற்களஞ்சியத்தில் "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு "விசும்புருவான' என்ற சொல் கொடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். தி.அன்பழகன், "ஆஸ்ட்ரல் வொர்ஷிப்' என்பது விண்மீன்களியலில் "உடு' என்னும் கூட்டத்தை வழிபடுதலைக் குறிப்பதால் "உடுவெளி' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார். மேலும், சூரிய வழிபாடு போன்றவை வானியல் வழிபாடு ஆகும் காரணத்தால், "ஆஸ்ட்ரல்' என்பதற்கு வான் + இறை = வானிறை அல்லது வானாலயம் என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

தமிழாகரர் தெ.முருகசாமி, "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகராதி "ஆவியுரு' என்ற சொல்லை இணைச்சொல்லாகக் குறிப்பிட்டிருக்கிறது என்கிறார். இருப்பினும், உடல் என்பது சரீரமாகவும், உடலைத் தாங்கியவன் சரீரியாகவும், உருவத்திற்கப்பால் ஒலியாக அறியப்படுபவன் அசரீரியாகவும் குறிப்பிடப்படுவதால், "அசரீரி' என்ற சொல்லையும் பரிசீலிக்கலாம் என்கிறார்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, ஆஸ்ட்ரல் என்ற சொல்லிலிருந்து ஆஸ்ட்ராலஜி, ஆஸ்ட்ரானமி போன்ற சொற்கள் ஏற்பட்டிருக்கும் காரணத்தால் வானத்திற்கும், மனிதனுக்கும் இருக்கும் இயற்கையின் தொடர்பைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் "வான்விதி' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

வாசகர்கள் அனுப்பியிருக்கும் சொற்களில் உடு, ஆவியுரு போன்ற சொற்கள் கிட்டத்தட்ட பொருத்தமாக அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. "ஆஸ்ட்ரல்' என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதிகள் "ஸ்டெல்லர்' என்ற பொருளையும் குறிக்கின்றன. "ஸ்டெல்லர்' என்ற சொல்லுக்கு "உடு' அல்லது "உடுவெளி' என்பது பொருத்தமாக இருக்கலாம். ஆனால், மனிதவுடல், மனம் அல்லது ஆன்மா தொடர்பான செய்திகளில் அச்சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்காது. "ஆவியுரு' என்ற சொல்லைப் பயன்படுத்தும் போது, அது கோள்களோடு தொடர்புள்ள பொருளைத் தராது. எனவே, "விசும்புருவான' அல்லது "விசும்புரு' என்ற சொல்லே பொதுவாகவும், பொருத்தமாகவும் இருக்கும்.

அடுத்த சொல் வேட்டை:
நாகரிகமான நடத்தையை, இடம், பொருள் மற்றும் பயன்படுத்தப்படும் நிகழ்வு சார்ந்து 'டெகோரம்' என்றும் 'எடிக்வேட்' என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுகிறோம்.
இவ்விரண்டையும் அவற்றின் தன்மை மாறாமல் குறிப்பிடுவதற்குரிய சொற்கள் உண்டா?




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 27, 2013 9:58 am

’இயல்பறி’வோடு ’விசும்புரு’ அறிவு பெற்றிருந்த பண்டைத் தமிழர்களைச் சாமி அவர்கள் துலக்கியிருக்கிறார்கள்! பாராட்டுகள்!
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 03, 2013 11:23 pm

பதிமூன்று )

கலிபோர்னியாவிலிருந்து புலவர்-பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், கடலூர் மின்வாரியத் தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு "நன்னடத்தை', "சீரொழுக்கம்' என்று பொருள் கொண்டுள்ளதாகவும், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு ஒழுக்கமுறை, நடத்தை நெறி, ஒழுக்க நெறி என்று பொருள் கொண்டுள்ளதாகவும், ஒரு சொல் நீர்மைத்தாய், வினைத்தொகையாக வேண்டுமானால் ஒழுகாறு, ஒழுகுநெறி என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

முனைவர் சு.மாதவன், அகராதிகள் "நல்லொழுக்கம்' எனப் பொருள் குறித்தாலும், தமிழ்ச் சொல்லாக்கமாக "பண்பாட்டுத் தகவு நிலை' அல்லது "தகவு நிலைப் பண்பாடு' என்று கொள்ளலாம் என்கிறார். புலவர் உ.தேவதாசு, சென்னைப் பல்கலைக்கழக ஆங்கில-தமிழ் அகரமுதலி மரபமைதி, சீரொழுங்கு, நயநாகரிக அமைதி என்று பல பொருள்களைக் குறித்துள்ளதாகக் குறிப்பிட்டுவிட்டு, டெகோரம், எடிக்வெட் என்னும் சொற்களுக்கு "நனிநாகரிகம்', "நயன்மை' அல்லது "பற்றன்மை' என்னும் சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ் "அவையறிதல்' அல்லது "அவைப் பண்பு' ஆகிய சொற்களைப் பரிந்துரைக்கிறார். புதுச்சேரி இலக்கியன் டெகோரம், எடிக்வெட் ஆகிய சொற்களுக்குப் பொதுவாக மதிப்பு, மரியாதை, ஒழுங்கு, ஒழுக்கம், கட்டுப்பாடு, ஆசாரம், சடங்கு, தகுதி ஆகிய பல பொருள்கள் இருந்தாலும், இவற்றுக்கிடையே பல வேறுபாடுகள் உண்டு என்றும்; டெகோரம் - "புற ஒழுங்கு' அல்லது "புறநிலை ஒழுங்கு'; எடிக்வெட் - "அக ஒழுங்கு' அல்லது "அகநிலை ஒழுங்கு' என்னும் சொற்களையும் கொள்ளலாம் என்கிறார்.

ஆனந்த கிருஷ்ணன் டெகோரம், எடிக்வெட் ஆகியவை நவநாகரிகத் தன்மை பற்றியதாகும் என்று தொடங்கி, இச்சொற்களின் பொருள்களாகப் பல்வேறு சொற்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அவையடக்கம் என்பது நன்னடத்தை, வெளிமதிப்பு, மெய்ப்பு, மதிப்பு, வரம்பு குறிப்பாக மரபொழுங்கு மீறாமல் செயல்படுதலாகும் என்றும், நிறைநலம், நிறை நடத்தை-பேச்சு, நன்மதிப்பும் நிறைநலமும் அடங்கிய நன்னடிக்கை முறை, நவநாகரிகத் தன்மை, ஒழுங்கு, ஆசாரம் ஆகியவை அவையறிதலில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்றும், மரியாதை, கண்ணோட்டம், சாதுர்யம், பண்பாடு ஆகியவை குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட காலத்தில் வாழும் மக்களின் சமூக வாழ்க்கையுடன் ஒட்டி இருக்க வேண்டும் என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப, நடை, உடை, பாவனை, உணவு, நல்லொழுக்கம் முதலியவைகளில் நேர்த்தியான தன்மை வெளிப்பட வேண்டும் என்றும், இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது, "மரபொழுங்கு' என்ற சொல்லே இச்சொற்களுக்கு சரியான இணைச்சொற்களாகும் என்றும் எழுதியுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "நாகரிகம்' என்ற சொல் "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு இசைவான தமிழ்ச் சொல்லாகவும், "டெகோரம்' என்ற சொல்லுக்கு "மாண்பு' என்ற சொல் இசைவான தமிழ்ச் சொல்லாகவும் கருதப்படலாம் என்றும் கூறுகிறார். மேலும், சட்டமன்றத்தின் மற்றும் நீதிமன்றத்தின் பாரம்பரியங்களைப் பற்றிப் பேசும்போது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்னும் சொற்றொடர்கள், அவைத்தலைவர் மற்றும் நீதிமன்ற ஆணைகளில் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணையாகக் கையாளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமல்லாது, நன்னெறிக் கோவையில் வரும் நன்னெறி, "நன்றிக்கு வித்தாகும்' எனத் தொடங்கும் குறளில் வரும் "நல்லொழுக்கம்' ஆகிய சொற்களையும் "டெகோரம்' என்ற சொல்லுக்கு இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "டெகோரம்' மற்றும் "எடிக்வெட்' என்னும் சொற்கள் ஒருவர் மற்றவர்களுடன் பழகும் பாங்கு, நடந்து கொள்ளும் விதம் சமுதாயத்தினால் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கின்றன என்றும், இதனையே திருவள்ளுவர் நயத்தக்க நாகரிகம் எனக் குறிப்பிடுகிறார் என்றும், எனவே, டெகோரம் - நயத்தகு பண்பு; எடிக்வெட் - நயத்தகு நடத்தை ஆகிய சொற்களை இணைச்சொற்களாகக் கொள்ளலாம் என்கிறார்.

முனைவர் பா. ஜம்புலிங்கம் "டெகோரம்' - கண்ணியம் காத்தல்'; "எடிக்வெட்' - "கண்ணிய நெறி' என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

எடிக்வெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியிலிருந்து 1750-இல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டதாகவும், பிரெஞ்சு மொழியில் அதன் பொதுவான பொருள் "அனுமதிச் சீட்டு' என்று காணப்பட்டாலும், ஆங்கிலத்தில் அதன் பொருள் நற்குடிப்பிறப்பின் காரணமாக வரும் "நடத்தை' அல்லது "நடைமுறை' என்பதாகும் என்றும், அதற்கு இன்னொரு பொருள் சமூக அல்லது தாம் கொண்ட அலுவல் தொடர்பான வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டிருக்கும் நடத்தை அல்லது நடைமுறை என்றும் மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.

அதே சமயம், "டெகோரம்' என்ற வினைச்சொல் "டெகோரஸ்' என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து 1568-இல் பிறந்ததாகவும், அச்சொல்லுக்கு (1) இலக்கிய மற்றும் நாடகப்பாங்கிற்கு வரையறுக்கப்பட்ட முறைமை; (2) நடத்தையிலும், தோற்றத்திலும் நற்சுவையும், ஒழுங்குமுறையும் கொள்ளும் பாங்கு; (3) பணிவான நடத்தைக்கு ஏற்படுத்தப்பட்ட வரையறை என்று மூன்றுவிதமான பொருள்களை அதே மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி குறிக்கிறது.

ஆனால், அந்த வினைச்சொல் லத்தீன் மொழியில் பயன்படுத்தப்பட்ட முதுமொழித் தொடர் "துல் சி எட் டெகோரம் எஸ்ட் ப்ரோ பாட்ரியா மோரி' ஆகும். அத்தொடரின் பொருள் ஒருவரது நாட்டிற்காக உயிர் துறப்பது இனிமை மற்றும் அழகானது என்பதாகும்.

இவற்றை வைத்துப்பார்க்கும் போது, "டெகோரம்' என்ற சொல் நற்சுவை, நடத்தை, ஒழுங்குமுறை ஆகியவற்றைச் சுற்றி வருவதாகவும், "எடிக்வெட்' என்ற சொல் பொதுவிடங்களிலும், பொது நிகழ்ச்சிகளிலும், ஒரு மனிதனிடம் வெளிப்படும் தோற்றம், பொலிவு, பேச்சு, செயல்பாடு ஆகியவற்றைக் குறிக்க முற்படுவதாகவும் தெரிகிறது.

இந்த அடிப்படையில் அணுகும் போது, "டெகோரம்' - "கண்ணியம்'; "எடிக்வெட்' - "நனிநாகரிகம்' என்னும் சொற்கள்தான் பொருத்தமாகும். காரணம், வழக்கு மன்றங்களிலும், சட்டமன்றங்களிலும் "டெகோரம்' காக்கப் படவேண்டும் என்ற வரைமுறை "கண்ணியம்' என்ற பொருளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல், ""முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்'' என்று நற்றிணையில் குறிக்கப்படும் "நாகரிகம்' என்ற சொல்லும், "பெயக்கண்டும்' என்ற குறளில் வரும் "நாகரிகம்' என்ற சொல்லும், "கண்ணோட்டம்' என்பதன் அடிப்படையில் அமைவதாகப் பெரியவர்கள் கருதுவதால், "எடிக்வெட்' என்ற சொல்லுக்கு "நனிநாகரிகம்' சாலப்பொருந்தும்.

வாசகர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் இணைச்சொற்கள்:

டெகோரம் - கண்ணியம்; எடிக்வெட் - நனிநாகரிகம்.

அடுத்த சொல் வேட்டை: ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றை அதன் காரணமாக அடியொற்றிப்பின்தொடர்ந்து வரும் இன்னொன்றுக்கு ஆங்கிலத்தில் "கொரோலரி' என்று பெயர். இதற்கிணையான தமிழ்ச்சொல் என்ன?



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Feb 11, 2013 10:42 pm

பதினான்கு

தொன்மையான லத்தீன் மொழியில் "விளைவு' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "கொரோலேரியம்' என்ற சொல் பிற்கால லத்தீன் மொழியில் "மாலைக்குக் கொடுக்கப்பட்ட பணம்' அல்லது "அன்பளிப்பு' போன்ற பொருள்களைக் குறிக்கும் சொல்லாக மாறி, 14-ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிக்கு இறக்குமதி செய்யப்பட்டு, "கொரோலரி' (இர்ழ்ர்ப்ப்ஹழ்ஹ்) என்ற சொல்லானது.

ஆங்கிலத்தில் "கொரோலரி' என்ற சொல் கணிதம் அல்லது தர்க்கவியல் தொடர்பாகப் பயன்படுத்தப்படும் போது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக, அதை அடியொற்றி தாமாகவே நிரூபிக்கப்பட்டுவிடும் இன்னொரு கோட்பாடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. மற்ற இடங்களில் "விளைவு' அல்லது "எளிதாக' அல்லது "இயல்பாகத் தீர்மானிக்கப்படும் முடிவு' என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு, இந்தவாரச் சொல்வேட்டைக்கு வருவோம்.

÷ஷா.கமால் அப்துல் நாசர், "பொதுவாக நிரூபிக்கப்பட்ட ஓர் உண்மையை ஒட்டிவரும் அனுமானத்தை அல்லது விளைவை "கொரோலரி' என்று குறிப்பதாலும், சிலப்பதிகாரத்தில் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்படுவதாலும், "உருத்துவிளைவு' அல்லது "தொடர் விளைவு' என்னும் சொற்களைப் பரிசீலிக்கலாம்' என்கிறார்.

÷ஆனந்தக்கிருஷ்ணன், "கொரோலரி என்ற சொல்லுக்கு தொடர் முடிவு, பின் தொடர்பு, துணை முடிவு, கிளைத்தேற்றம், பின் நிகழ்ச்சி, தொடர்ந்தேற்றி ஆகிய சொற்களையும், பழைய லத்தீன் மொழி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு முடிவு, முடிபு, இறுதி, வரிசை, செறிவு, பூங்கொத்து' ஆகிய சொற்களையும் பரிந்துரைக்கிறார்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, "கண்ணாடியில் காணப்படும் பிரதிபிம்பத்தைப் போன்றது கொரோலரி என்பதால், "நிஜப்பிரதி' அல்லது "இணைப்போலி' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம்' என்கிறார்.

÷டி.சிவா, "ஒரு செயலையோ, சொல்லையோ, நடைமுறையையோ, நிகழ்வையோ அடியொற்றி அதேபோல இருப்பதுதான் "கொரோலரி' என்றழைக்கப்படுகிறது' என்றும், இதை "ஒத்திசைவுச் செயல்', சொல், நடைமுறை, நிகழ்வு எனக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். அதனால் "ஒத்திசைவு' எனக் கூறலாம்' என்கிறார்.

÷ஏற்கெனவே குறிப்பிட்டது போல், "கொரோலரி' என்ற சொல் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்ட ஒரு கோட்பாட்டின் விளைவாக அல்லது அதன் பிரதிபிம்பமாக நிரூபணம் தேவையற்றதாகப் போய்விடும் இன்னொரு கோட்பாட்டை குறிப்பதால், நாம் உருவாக்கும் சொல் நிரூபணம், கோட்பாடு என்ற இவ்விரு பொருளையும் உள்ளடக்கியதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும். எனவே, "கொரோலரி' என்ற சொல்லுக்கு "வினைவிளைக் கோட்பாடு' என்பது பொருத்தமாக இருக்கும்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Feb 21, 2013 11:37 am

பதினைந்து

"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் போன்ற அகரமுதலிகள், இரண்டு விதமான பொருள்களைத் தருகின்றன. ஒன்று உடற்கூறைச் சார்ந்தது; இன்னொன்று மனப்பாங்கைச் சார்ந்தது. ஒரே சமயத்தில் தொடர்ந்து வெளிப்படும் குறிப்பிட்ட அறிகுறிகளின் தொகுப்பு அல்லது கருத்துகள், உணர்ச்சிகள், நடத்தை போன்றவை ஒரு குறிப்பிட்ட தொடர்போடு கூட்டாகத் தோன்றும் தொகுப்பு என்பதே இவ்விரு பொருள்களாகும்.

மெரியம்-வெப்ஸ்டர் அகரமுதலி கிட்டத்தட்ட 48 வகையான சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியுள்ளது. 1540-ஆம் ஆண்டுக்குப்பின், "அடையாளங்களின் ஒன்று சேர்ந்த வெளிப்பாடு' என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோம்' என்ற சொல்லில் இருந்தும், ஒன்றாகத் தோன்றும் என்ற பொருளைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான "சன்ட்ரோமோஸ்' என்ற சொல்லில் இருந்தும், ஆங்கிலச் சொல்லான "சின்ட்ரோம்' உருவாக்கப்பட்டது.

இந்திய மருத்துவ அகரமுதலி (மெட் இண்டியா) ஆங்கிலத்தில் ஏ முதல் இசட் வரை உள்ள 26 எழுத்துகளில் ஒவ்வொன்றையும் முதல் எழுத்துகளாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டு இன்று பெருமளவில் அடையாளம் காட்டப்பட்டிருக்கும் 124 சின்ட்ரோம்களை வரிசைப்படுத்தியிருக்கிறது. எய்ட்ஸ் நோய் என்பது "அக்வயர்ட் இம்யுனோ டெஃபிசியன்சி சின்ட்ரோம்' என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால், நம் அடி வயிற்றைக் கலக்கும் சில வித்தியாசமான சின்ட்ரோம்கள் பின் வருமாறு:

(1) 8 மில்லியன் குழந்தைகளில் ஒருவரைத் தாக்கும் "ப்ரோஜெரியா சின்ட்ரோம்' (progeria syndrome) மிக வேகமாக அக்குழந்தையை மூப்படையச் செய்து, 12-13 வயதிற்குள் அக்

குழந்தையை மரணமடையச் செய்துவிடும்.

(2) "வேர்வுல்ஃப் சின்ட்ரோம்' (Werewolf syndrome)உடல் முழுவதும் (உள்ளங்கை உள்பட) ஓநாயைப் போல் முடி வளரச் செய்யும் குறைபாடு.

(3) "லெஷ்-நைஹன் சின்ட்ரோம்' (Lesch-nyhan syndrom) என்பது ஒரு மனிதனைத் தனது உடலின் சில பாகங்களைத் தானே கடிக்க அல்லது சிதைக்கத் தூண்டும் மனநலக் குறைபாடு.

(4) "லாக்ட்-இன் சின்ட்ரோம்' (Locked-in syndrome) என்பது கண், செவி, மூக்கு போன்ற புலன் உணர்வுகள் அப்படியே இருக்கும்போதும், உடல் முழுவதும் மொத்தமாக செயல் இழந்து முடங்கிப் போகும் முடக்குவாதம் அல்லது பக்கவாதத்தைக் குறிப்பதாகும்.

(5) "லாசரஸ் சின்ட்ரோம்' (Lazarus syndrome) என்பது மருத்துவர்களால் இறப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகும், திடீரென்று உயிர்த்தெழும் நிலையைக் குறிப்பதாகும். அமெரிக்காவில் டெலவர் நகரத்தில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட பின் பிணவறை ஊழியரால் உயிர் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 61 வயதுப் பெண்மணியின் கதை இந்த வகை சின்ட்ரோமை அறிமுகப்படுத்தக் காரணமாக அமைந்தது.

இத்தகைய சுவையானத் தகவல்களோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம். "சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு நோய்க்குறியம் அல்லது நிலைமை காட்டி என்ற சொற்களை ஆனந்த கிருஷ்ணன் பரிந்துரைக்கிறார். தெ.முருகசாமி ஒத்தறிதல், ஒழுகுதல் என்ற பொருளில் இச்சொல் பயன்படுத்தப்படுவதால் "ஒத்துணர்வு' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

வெவ்வேறு பொருள்களில் நிகழும் தொடர்புடைய செயல்களால் ஒரு பொதுமை எண்ணம் ஏற்படுவது சின்ட்ரோம் எனப்படுவதால் "ஒத்தமைவு' என்ற சொல் பொருந்தும் என்று புலவர் செ.சத்தியசீலன் எழுதியுள்ளார்.

சோலை.கருப்பையா, டவுன் சின்ட்ரோம் போன்ற பல சொற்களால் ஒரு வெளிக்காரியத்தின் உடன் விளைவாக ஏற்படும் நிகழ்வு குறிப்பிடப்படுவதால் உடன் விளைவு, உடன் குறைபாடு போன்ற சொற்கள் பொருந்தும் என்கிறார்.

முனைவர் ஜி.ரமேஷ், தொடர்புடைய பல சம்பவங்களைக் குறிக்கும் போது இணைப் போக்கு, ஒத்திசைந்திருத்தல் என்று குறிப்பிடலாம் என்றும், இவையன்றி ஒன்றுபடுத்து முறை, ஒத்த சம்பவங்கள் ஆகிய சொற்களாலும் குறிப்பிடலாம் என்றும் எழுதியுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மனதில் தோன்றும் சிந்தனை அப்படியே தொடர்ந்து நிலைத்து நிற்பது சின்ட்ரோம் ஆகும் என்றும், குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பிய பின் தாய்க்கு ஏற்படும் மனோ நிலை "எம்ப்டி நெஸ்ட் சின்ட்ரோம்' (empty nest syndrome) என்று அழைக்கப்படுவதால், மனப்போக்கு அல்லது சிந்தைப்போக்கு என்னும் சொற்களே பொருந்தும் என்கிறார். ஆனால், நாம் ஏற்கெனவே கண்டது போல், சின்ட்ரோம் என்பது, ஒருவரது உடற்கூறிலோ, அல்லது மனப்பாங்கிலோ ஏற்படும் நோய், மாறுபாடு, தனித்தன்மை அல்லது குறைபாடு ஆகியவற்றை, எளிதில் அடையாளம் காண உதவும் சில அறிகுறிகளின் கூட்டு வெளிப்பாடு அல்லது தோற்றம் ஆகும். எளிமையாகச் சொல்லப் போனால், சின்ட்ரோம் என்பதை "அடையாளங்களின் அணிவகுப்பு' என்று சொல்லலாம். ஆனால், அப்படிச் சொல்லுவது ஒரு குறைபாட்டோடு தொடர்புடையதாக இருந்தால்தான் அடையாளங்களின் அணிவகுப்பு என்பது சின்ட்ரோம் என்ற சொல்லுக்குப் பொருத்தமாக வரும்.

எனவே, "குறைபாட்டு அறிகுறிகள்' என்ற சொல் பொருத்தமாக அமையலாம்.

"சின்ட்ரோம்' என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் "குறைபாட்டு அறிகுறிகள்'.




[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 11:35 am

பதினாறு
அருகருகே வைத்துக் காட்டுவது என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட "பாரடிக்மா' என்ற பழைய லத்தீன் சொல்லில் இருந்தும், "பாரடீக்மா' என்ற கிரேக்கச் சொல்லில் இருந்தும், 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட சொல் "பாரடைம்' ஆகும். இந்தச் சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகர முதலி "உதாரணம்' மற்றும் 'முன் மாதிரி' என்ற பொருள்களைத் தருகிறது. ஆக்ஸ்ஃபோர்ட் அகர முதலியும் கிட்டதட்ட அதே பொருள்களைத் தருகிறது. அறிவியல் வளர்ச்சியின் வரலாற்றை ஆராய்ந்த வரலாற்றாசிரியர் "தாமஸ் குன்' தன்னுடைய "அறிவியல் புரட்சியின் வடிவங்கள்' என்ற நூலில் அறிவியல் சார்ந்த "பாரடைம்' என்ற சொல்லுக்கு "ஆய்வாளர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் பிரச்னைகளையும், தீர்வுகளையும் வடித்துக் கொடுக்கும் அறிவியல் சாதனைகள்' என்று விளக்கம் அளித்துள்ளார். அறிவியல் உலகத்தில் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு அதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட படிமங்கள், புதுப்புது சோதனைகளால் அடியோடு மாறிவிடும் மாற்றத்தை, தாமஸ் குன் "பாரடைம் ஷிஃப்ட்' என்று குறிப்பிட்டார். ஒரே விஷயத்தை வேறோர் கோணத்தில் பார்க்க வைக்கும் "பாரடைம் ஷிஃப்ட்' என்று ஒரு கோட்பாட்டை உருவாக்கிய தாமஸ் குன், இதை விளக்க ஒரு தோற்ற மயக்கத்தை (ர்ல்ற்ண்ஸ்ரீஹப் ண்ப்ப்ன்ள்ண்ர்ய்) உருவாக்கினார். அதனை உருவகப்படுத்தி வரையப்பட்ட படம், ஒரு புறம் பார்க்கும் போது முயலைப் போல் தோற்றமளிப்பதாகவும், இன்னொரு புறம் பார்க்கும் போது வாத்தைப் போலத் தோற்றமளிப்பதாகவும் அமைந்தது. அதற்கு அறிவியல் வரலாற்றாசிரியர் தாமஸ் குன், வாத்து-முயல் தோற்ற மயக்கம் (க்ன்ஸ்ரீந்-ழ்ஹக்ஷக்ஷண்ற் ர்ல்ற்ண்ஸ்ரீஹப் ண்ப்ப்ன்ள்ண்ர்ய்) என்று பெயரிட்டார். இப்படித்தான் பாரடைம் ஷிஃப்ட் என்ற சொற்றொடர் முதன் முதலில் தாமஸ் குன் அவர்களால் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த முன்னுரையையோடு, இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

÷முனைவர் பா.ஜம்புலிங்கம், "பாரடைம்' என்ற சொல்லுக்கு மாதிரி, நிலை, படிநிலை அல்லது முறை என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லுக்கு மாதிரி மாற்றம், நிலை மாற்றம், முறை மாற்றம், படிநிலை மாற்றம் என்ற சொற்களைப் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

புலவர் உ.தேவதாசு, வழிமொழி, மேற்கோள் என்னும் சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

÷சோலை.கருப்பையா, உவமை, ஒப்புமை, உதாரணம், முன்மாதிரி, இணையம், உவமானம். அசல், அதே மாதிரி, அதே போல போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

÷டி.வி.கிருஷ்ணசாமி, "நியமனப் பொருத்தம்' என்ற சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார். ஆனந்த கிருஷ்ணன், தமிழ் இலக்கணப்படி "மேற்கோள் சொல்' என்பது பொருந்தும் என்றும், வாய்ப்பாடு, முன்மாதிரி, முன்னோடி, உதாரணம், எடுத்துக்காட்டு, மேற்கோள், உள்ளுறை உவமம், உவமேயம் போன்ற சொற்களையும் பயன்படுத்தலாம் என்றும் எழுதியுள்ளார்.

÷"பாரடைம்' என்ற சொல்லைக் கருத்தியல், அடிப்படைக் கருத்து, கருத்துரு, வடிவம், அடிப்படை எண்ணம் மற்றும் மனவுரு என்றும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லை "அடிப்படை மாற்றம்' என்றும் கூறலாம் என்று டாக்டர் ஜி.ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

÷சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி "பாரடைம்' என்ற சொல்லுக்குக் கட்டளைப்படிவ வாய்ப்பாடு, மேற்கோள் வாய்ப்பாடு என்ற பொருள்களைக் கூறுகிறது. அதே சமயம் மாடல் (ம்ர்க்ங்ப்) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு உருப்படிவம் என்ற பொருளையும், ஆர்ச்டைப் (ஹழ்ஸ்ரீட்ங்ற்ஹ்ல்ங்) என்ற சொல்லுக்கு மூலப்படிவம் என்ற பொருளையும் அதே அகரமுதலி அளிக்கிறது. ஆங்கில அகரமுதலிகள் அனைத்தும் "பாரடைம்' என்ற சொல்லுக்கு, "மாடல்ட' என்ற பொருளையும் அளிக்கின்றன.

÷மேற்கூறிய அடிப்படையில் வாசகர்களின் கருத்துகளை, பாரடைம் என்ற சொல்லும், பாரடைம் ஷிஃப்ட் என்ற சொல்லும் உருவான வரலாற்றின் பின்னணியில் வைத்துப் பார்க்கும் போது, "பாரடைம்' என்ற சொல்லுக்குப் "படிவம்' என்பதும், "பாரடைம் ஷிஃப்ட்' என்ற சொல்லுக்குப் "படிவ மாற்றம்' என்ற சொல்லும் பொருந்தி வரும் என்று தோன்றுகிறது.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Mar 07, 2013 11:37 am

பதினேழு
மொழியியலின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் பல நேரங்களில் பல சொற்கள் ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்டு, காலப்போக்கில் அதன் பயன்பாட்டின் காரணமாக வேறு ஏதோ ஒரு பொருளைக் குறிப்பதாக அமைந்துவிடும் என்பதை நாம் உணரலாம். "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லும் இந்த வகையைச் சேர்ந்ததேயாகும்.

ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டையோ, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தையோ சார்ந்து அமைந்துவிடும் பல பொருள்களின் சேர்க்கை "பாராஃபெர்நேலியா' என்று தற்போது அழைக்கப்படுகிறது. ஆனால், 1650-ஆம் ஆண்டுக்குப் பிறகு, இடைக்கால லத்தீன் மொழியிலிருந்தும், கிரேக்க மொழியிலிருந்தும் "பாராஃபெர்நா' என்ற சொல் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டபோது, அச்சொல் வரதட்சிணையைத் தாண்டி ஒரு மணப்பெண்ணுக்குக் கிடைக்கும் சொத்தைக் குறிப்பதாக அமைந்திருந்தது. ரோமானியர்களின் குடும்பச் சட்டங்களின்படி, திருமணமான ஒரு பெண்ணுக்கு அவளுடைய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் மேல் முழுச்சொத்துரிமை அளிக்கப்பட்டது. அச்சட்டத்தின்படி, ஒரு பெண்ணின் ஆடை மற்றும் ஆபரணங்களை விற்கவோ, உரிமை மாற்றம் செய்யவோ அவளுடைய கணவனுக்கு அதிகாரமில்லை. அவள் தன் விருப்பப்படி தன்னுடைய ஆடைகளையும், அணிகலன்களையும் உயில் மூலம் யாருக்கு வேண்டுமானாலும் அளித்துவிடலாம். இப்படி ஒரு பெண்ணின் சொத்துரிமைப் பொருள்களைக் குறிக்கும் சொல்லாக ஆதியில் தோன்றிய இச்சொல் தற்போது அதைத்தாண்டி எங்கோ போய்விட்டது. ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியைப் புரட்டினால், "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு இரண்டு விதமான பொருள்கள் அளிக்கப்படுகின்றன. ஒன்று, குறிப்பிட்ட ஒரு நடவடிக்கை அல்லது செயல்பாட்டை நடத்துவதற்குத் தேவையான பல்வேறு பொருள்கள் என்பது. இன்னொன்று, குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தோடோ அல்லது செயல்பாட்டோடோ எப்பொழுதும் அடையாளம் காணப்படும் பல சடங்குப் பொருள்கள் என்பதாகும். எனவே, ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலியைப் பொருத்தளவில் பாராஃபெர்நேலியா என்ற சொல், திருமணப் பெண்ணின் சொத்து (வரதட்சிணையைத் தவிர) என்ற பொருளிலிருந்து மாறி வெகுதூரம் வந்துவிட்டது. ஆனால், மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு மூன்று விதமான பொருள்களைத் தருகிறது. அவை (1) திருமணமான ஒரு பெண்ணுக்குச் சொந்தமான, அவளால் உயிலின் மூலம் உரிமை மாற்றம் செய்யக்கூடிய அதிகாரத்திலமைந்த தனிப்பட்ட சொத்து (2) தனிப்பட்ட உடைமைகள் (3) மேசை, நாற்காலி போன்ற உடைமைகள் மற்றும் துணைப்பொருள்கள். இந்த முன்னுரையோடு இந்தவாரக் கடிதங்களுக்கு வருவோம்.

வழக்குரைஞர் அ.அருள்மொழி, "பாராஃபெர்நேலியா' என்ற சொல் ஒரு நிறுவன அமைப்பின் தலைமைப் பீடத்தையும், அதிகார அடையாளங்களையும் காட்டக்கூடிய சின்னங்களைக் குறிப்பதாகும் என்றும், அதற்குச் சான்றாக அமைச்சர், கலெக்டர், நீதிபதி போன்றோரின் அலுவலக அடையாளங்களாக வாகன முத்திரை, கொடி, சுழல் விளக்கு, ஆயுதமேந்திய காவலர்கள், குறுக்குப்பட்டை அணிந்த பணியாளர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டி, அதன்காரணமாக இச்சொல்லுக்கு "அதிகாரக் குறியீடுகள்' அல்லது "அதிகாரச் சின்னங்கள்' என்னும் இணைச்சொல் பொருத்தமாக இருக்குமென்கிறார்.

பாபாராஜ், சென்னை பல்கலைக்கழக சொற்களஞ்சியத்தில் "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்கு பரிவாரம், எடுபிடி, இடைத்துணுக்குகள் ஆகிய பொருள்களும்; ஆங்கில-தமிழ் அகரமுதலியில் "உடைமைப்பொருள்' என்ற சொல்லும் கொடுக்கப்பட்டிருப்பதால், இச்சொல்லுக்கு, "பணிக்களத்துணைப்பொருள்' என்ற சொல் பொருத்தமாகும் என்கிறார்.

சோலை.கருப்பையா, "உரிமை கொண்டாடுவது அல்லது உரித்தானது' என்ற சொற்களை இணையாகக் கொள்ளலாம் என்கிறார். ஆனந்தகிருஷ்ணன், "ஒருவரது உடைமைப்பொருள் தொகுதி அல்லது துணைத்தொகுதி' என்ற சொல்லைக் கையாளலாம் என்றும், "அரசர்கள் குதிரையிலோ, யானையிலோ பவனிவரும் போது அவைகளுக்குச் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனைகள் இந்த வகையில் அடங்கும்" என்றும் குறிப்பிடுகிறார். முனைவர் ஜி.ரமேஷ், தன்குறிதானவைகள், தனம், பணிப்பொருள்கள், உபகரணங்கள், செயல்பாட்டுக்கருவிகள் மற்றும் சிறுகருவிகள் என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, திருமணமான ஒரு பெண்ணின் தனிப்பட்ட சொத்தைக் குறிக்கும் ஸ்ரீதனம் என்பதும் இச்சொல்லுக்கு வழங்கப்பட்ட இன்னொரு பொருளாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "ஒரு மருத்துவருக்கு ஸ்டெதஸ்கோப், தெர்மாமீட்டர் போன்ற கருவிகள் தொழில்சார் கருவிகளாக விளங்குவதைப் போலவும், ஒரு மன்னருக்கு கிரீடம், செங்கோல் போன்றவை பதவிசார் பொருள்களாக பயன்படுவதைப் போலவும், ஒரு தொழிலையோ, ஒரு பதவியையோ குறிக்கும் அடையாளப் பொருள்களை "பாராஃபெர்நேலியா' என்று குறிக்கலாம்' என்று கூறி, இச்சொல்லுக்கு தொழில்சார் கருவிகள் அல்லது பதவிசார் பொருள்கள் என்ற இணைச்சொற்களைப் பரிந்துரைக்கிறார்.

வாசகர்களில் சிலர் குறிப்பிட்டது போல், ஆட்சியாளர்களோடு தொடர்புபடுத்தி இச்சொல் கையாளப்படும்போது, ஒரு காலத்தில் வடமொழியில் ரத, கஜ, துரக பதாதிகள் என்றும், தமிழில், படை-பரிவாரங்கள் என்றும் பயன்படுத்தப்பட்ட சொற்கள், கிட்டத்தட்ட "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லுக்குப் பொருத்தமானவையாக இருந்தன. ஆனால், ஒரு தொழிலோடு அல்லது செயல்பாட்டோடு தொடர்புடைய கருவிகளைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப்படும் காரணத்தால் படை-பரிவாரம் போன்ற பழைய சொற்கள் முற்றிலும் பொருந்தும் என்று சொல்ல முடியாது.

முறையாகச் சொல்லப்போனால், வீடுகட்டும் கொத்தனார் கொண்டுபோகும் மண்வெட்டி, கடப்பாரை போன்ற பொருள்களும், அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் ஒருவர் கொண்டுபோகும் கத்தரிக்கோல், கத்தி, பஞ்சு, பாண்டேஜ் துணி போன்ற பொருள்களும், திருமணத்தை நடத்திவைக்கும் புரோகிதர் வழக்கமாகக் கொண்டுபோகும் பொருள்களும், ஒரு மடாதிபதியோடு எடுத்துச்செல்லப்படும் பசைக்கான பொருள்கள், தண்டம் ஆகியனகூட "பாராஃபெர்நேலியா' என்ற சொல்லில் அடங்கும்.

எனவே, இச்சொல்லுக்கு இணையான சொல், அதிகாரம் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும், தொழில் செயல்பாடு சார்ந்ததாகவும் இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால் "அடையாளச் சின்னங்கள்' அல்லது "அடையாளப் பொருள்கள்' என்பதே பொருந்தும். ஆனால் ஒரு தொழில் அல்லது செயல்பாடு அல்லது அதிகாரம் அல்லது ஒரு நிறுவனம் சார்ந்த அடையாளப் பொருள்கள் காலப்போக்கில், அவற்றை அடையாளம் காட்டும் சின்னங்களாகவே மாறிப்போவதை நாம் பார்க்கிறோம். ஸ்டெதஸ்கோப் மருத்துவருக்கும், ஏர் மற்றும் கலப்பை உழவனுக்கும் அடையாளச் சின்னம் ஆனதைப்போல். எனவே, "பாராஃபெர்நேலியா' வுக்கான தமிழ்ச்சொல் "அடையாளச் சின்னங்கள்'.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 10:54 pm

பதினெட்டு)
மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ஆகிய பொருள்களும், சுரா ஆங்கிலத் தமிழ் அகரமுதலியில் "குருக்களின் படிநிலைக் குழுமம்' என்றும் பொருள் தரப்பட்டுள்ளதால், "தரவரிசை' அல்லது "நிலை வரிசை' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

எழில் சோம.பொன்னுசாமி, அதிகார மரபு, அதிகார வரிசை, அதிகார அமைப்பு நிலை, அதிகாரப் படிநிலை என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, அருங்கலைச் சொல்லகராதியில், "படிமரபு' என்ற பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் ஜி.ரமேஷ், படிநிலை, பதவிப்படிநிலை, பொருள் படிநிலை, குருமரபு ஆகிய பொருள்கள் காணப்படுவதால், பல்வேறு சமூக அமைப்புகளைக் குறிக்கும் வகையில் கையாளப்படும்போது, இச்சொல்லுக்கு "வகுப்புப் படிநிலை' என்ற சொல்லையும் அதிகாரத்தின் பொருட்டு கையாளப்படும்போது, "அதிகாரப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார். முனைவர் ப.ஜம்புலிங்கம் வம்சாவளி, வழிவழியாக, பரம்பரை பரம்பரையாய், தலைமுறை தலைமுறையாய் என்னும் சொற்களையும், அலுவல் நிலை பயன்பாட்டில் பதவி நிலையைக் குறிக்கும்போது, "பதவிப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "ஹைரார்கி' என்ற சொல் சமூக தளத்தில் அல்லது நிறுவன மற்றும் ஆட்சியமைப்பில் காணப்படும் உயர்வு, தாழ்வு அடிப்படையிலான கட்டமைப்பைக் குறிக்கும் என்பதாலும், பதவி, பணம், இனம் போன்றவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும் தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடைய ஓர் அடுக்குமுறை அமைப்பு உருவாவதாலும், இச் சொல்லுக்கு அடுக்குமுறை அமைப்பு' அல்லது "படிநிலை அமைப்பு' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு ஓர் அமைப்பிலோ அல்லது நிறுவனத்திலோ அதைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்கள் அவர்களது அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ ஒட்டி ஒருவர் மேல் ஒருவராக அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்படுவது என்ற பொருளைக் குறிக்கிறது. இவை தவிரவும், சில பொருள்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியோ, பல பிரிவுகளாகப் பிரித்தோ வைப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது. மேலும், கிறிஸ்தவ மெய்யியலில் தேவதைகளும், வானவர்களும், பாரம்பரியமாய் குறிக்கப்படும் "வரிசை' என்ற பொருளையும், கத்தோலிக்க திருச்சபையின் குருமார்களின் வரிசை அல்லது மரபு என்னும் பொருளையும் கூட ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி அளிக்கிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி ஐந்து விதமான பொருள்களைக் கூறுகிறது. அவை: (1) தேவதைகளின் வரிசை அல்லது பிரிவுகள், (2) குருமார்களின் மரபு, (3) அதிகாரத்தில் இருப்பவர்களின் வரிசை, (4) திறமை அல்லது சமூக, பொருளாதார அல்லது தொழில் மேம்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவைச் சார்ந்த மக்களை வரிசைப்படுத்துவது, (5) மதிப்பீடுகளை வரிசைப்படுத்துவது.

"ஹைரார்கி' என்ற சொல் ஆதியில் கிரேக்க மொழியில் விண்ணகவரிசை அல்லது வான்வெளிவரிசை ((Celestial Hierarchy)) என்ற பொருளிலும், கிறிஸ்தவ திருச்சபையின் குருமார் மரபு (Ecclesiastical) என்ற பொருளிலேயும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் 14, 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. முதன் முதலில் இச்சொல்லை கிறிஸ்தவ மெய்யியல் அறிஞர் சூடோ-டெனிஸ் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி கோள்கள், வானவர்கள், தேவதைகள், மதகுருமார்களின் படிவரிசையைக் குறிப்பிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இச்சொல், காலப்போக்கில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் அதிகார வரிசையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்சியல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் பரவியது. பின்னாளில், பொருளின் தரவரிசை அல்லது படிவரிசையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவற்றையும் தாண்டி, உளவியலில் ஒரு மனிதனின் தேவைகளை முக்கோண பிரமிடு வடிவில் வரிசைப்படுத்தி ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் மாஸ்லோவின் தேவைகளின் வரிசை (Maslow's Hierarchy of Needs) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இப்படி இச்சொல் எங்கோ தொடங்கி, எங்கெங்கோ போய், இன்று பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், "ஹைரார்கி' என்ற சொல்லின் வேர்ச்சொல்லிருந்து தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம் மற்றும் ஒரு சிறுகுழு ஆட்சி (Matriarchy, Patriarchy and Oligarchy) என்ற சொற்களெல்லாம் உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஹைரார்கி என்ற சொல்லின் அடிப்படை வீச்சு அதிகாரம், படி, வரிசை ஆகியவற்றைச் சுற்றிச்சுற்றி அமைவதைப் பார்க்கிறோம். அது அந்த வரிசையிலுள்ள மக்களைக் குறிக்கத் தொடங்கிய காலத்தைத் தாண்டி, பொருள்களையும், தேவைகளையும் கூட உள்ளடக்கும் நிலைக்கு வந்து விட்டதால், பெருவாரியான வாசகர்கள் குறிப்பிட்டுள்ள "படிநிலை வரிசை' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். ஆனால், படிநிலை என்பதும் வரிசை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமென்பதால் "படிநிலை அமைப்பு' என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 10:55 pm

பதினெட்டு)
மதுரை பாபாராஜ், "ஹைரார்கி' என்ற சொல்லுக்கு சென்னைப் பல்கலைக்கழக சொற்களஞ்சியம், "படிநிலை அமைப்பு' என்றும், ஆட்சிச் சொல் அகராதியில் அங்காடிச் சொல், படிமரபு, அதிகார வைப்பு முறை ஆகிய பொருள்களும், சுரா ஆங்கிலத் தமிழ் அகரமுதலியில் "குருக்களின் படிநிலைக் குழுமம்' என்றும் பொருள் தரப்பட்டுள்ளதால், "தரவரிசை' அல்லது "நிலை வரிசை' என்னும் சொல் பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

எழில் சோம.பொன்னுசாமி, அதிகார மரபு, அதிகார வரிசை, அதிகார அமைப்பு நிலை, அதிகாரப் படிநிலை என்னும் சொற்களைப் பரிந்துரைத்துவிட்டு, அருங்கலைச் சொல்லகராதியில், "படிமரபு' என்ற பொருள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்.

பேராசிரியர் ஜி.ரமேஷ், படிநிலை, பதவிப்படிநிலை, பொருள் படிநிலை, குருமரபு ஆகிய பொருள்கள் காணப்படுவதால், பல்வேறு சமூக அமைப்புகளைக் குறிக்கும் வகையில் கையாளப்படும்போது, இச்சொல்லுக்கு "வகுப்புப் படிநிலை' என்ற சொல்லையும் அதிகாரத்தின் பொருட்டு கையாளப்படும்போது, "அதிகாரப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார். முனைவர் ப.ஜம்புலிங்கம் வம்சாவளி, வழிவழியாக, பரம்பரை பரம்பரையாய், தலைமுறை தலைமுறையாய் என்னும் சொற்களையும், அலுவல் நிலை பயன்பாட்டில் பதவி நிலையைக் குறிக்கும்போது, "பதவிப் படிநிலை' என்ற சொல்லையும் பயன்படுத்தலாம் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, "ஹைரார்கி' என்ற சொல் சமூக தளத்தில் அல்லது நிறுவன மற்றும் ஆட்சியமைப்பில் காணப்படும் உயர்வு, தாழ்வு அடிப்படையிலான கட்டமைப்பைக் குறிக்கும் என்பதாலும், பதவி, பணம், இனம் போன்றவற்றால் ஒருவருக்குக் கிடைக்கும் தகுதி மற்றும் மதிப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுடைய ஓர் அடுக்குமுறை அமைப்பு உருவாவதாலும், இச் சொல்லுக்கு அடுக்குமுறை அமைப்பு' அல்லது "படிநிலை அமைப்பு' என்னும் சொற்களைப் பயன்படுத்தலாம் என்கிறார்.

ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி இச்சொல்லுக்கு ஓர் அமைப்பிலோ அல்லது நிறுவனத்திலோ அதைச் சார்ந்தவர்கள் அல்லது குழுக்கள் அவர்களது அந்தஸ்தையோ, அதிகாரத்தையோ ஒட்டி ஒருவர் மேல் ஒருவராக அல்லது ஒன்றன்மேல் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்படுவது என்ற பொருளைக் குறிக்கிறது. இவை தவிரவும், சில பொருள்களை அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தியோ, பல பிரிவுகளாகப் பிரித்தோ வைப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது. மேலும், கிறிஸ்தவ மெய்யியலில் தேவதைகளும், வானவர்களும், பாரம்பரியமாய் குறிக்கப்படும் "வரிசை' என்ற பொருளையும், கத்தோலிக்க திருச்சபையின் குருமார்களின் வரிசை அல்லது மரபு என்னும் பொருளையும் கூட ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி அளிக்கிறது.

மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி ஐந்து விதமான பொருள்களைக் கூறுகிறது. அவை: (1) தேவதைகளின் வரிசை அல்லது பிரிவுகள், (2) குருமார்களின் மரபு, (3) அதிகாரத்தில் இருப்பவர்களின் வரிசை, (4) திறமை அல்லது சமூக, பொருளாதார அல்லது தொழில் மேம்பாட்டின் அடிப்படையில் ஒரு குழுவைச் சார்ந்த மக்களை வரிசைப்படுத்துவது, (5) மதிப்பீடுகளை வரிசைப்படுத்துவது.

"ஹைரார்கி' என்ற சொல் ஆதியில் கிரேக்க மொழியில் விண்ணகவரிசை அல்லது வான்வெளிவரிசை ((Celestial Hierarchy)) என்ற பொருளிலும், கிறிஸ்தவ திருச்சபையின் குருமார் மரபு (Ecclesiastical) என்ற பொருளிலேயும் பயன்படுத்தப்பட்டு, பிற்காலத்தில் 14, 15-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டது. முதன் முதலில் இச்சொல்லை கிறிஸ்தவ மெய்யியல் அறிஞர் சூடோ-டெனிஸ் பயன்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

இப்படி கோள்கள், வானவர்கள், தேவதைகள், மதகுருமார்களின் படிவரிசையைக் குறிப்பிடுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட இச்சொல், காலப்போக்கில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் அதிகார வரிசையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டு, அங்கிருந்து ஆட்சியல்லாத மற்ற நிறுவனங்களுக்கும் பரவியது. பின்னாளில், பொருளின் தரவரிசை அல்லது படிவரிசையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 20-ஆம் நூற்றாண்டில் இவற்றையும் தாண்டி, உளவியலில் ஒரு மனிதனின் தேவைகளை முக்கோண பிரமிடு வடிவில் வரிசைப்படுத்தி ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவர் மாஸ்லோவின் தேவைகளின் வரிசை (Maslow's Hierarchy of Needs) என்ற ஒரு கோட்பாட்டை உருவாக்கினார். இப்படி இச்சொல் எங்கோ தொடங்கி, எங்கெங்கோ போய், இன்று பல்வேறு பரிமாணங்களைத் தாங்கி நிற்கிறது. இதைவிட வியப்பு என்னவென்றால், "ஹைரார்கி' என்ற சொல்லின் வேர்ச்சொல்லிருந்து தாய்வழிச் சமூகம், தந்தைவழிச் சமூகம் மற்றும் ஒரு சிறுகுழு ஆட்சி (Matriarchy, Patriarchy and Oligarchy) என்ற சொற்களெல்லாம் உருவாகிவிட்டன. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, ஹைரார்கி என்ற சொல்லின் அடிப்படை வீச்சு அதிகாரம், படி, வரிசை ஆகியவற்றைச் சுற்றிச்சுற்றி அமைவதைப் பார்க்கிறோம். அது அந்த வரிசையிலுள்ள மக்களைக் குறிக்கத் தொடங்கிய காலத்தைத் தாண்டி, பொருள்களையும், தேவைகளையும் கூட உள்ளடக்கும் நிலைக்கு வந்து விட்டதால், பெருவாரியான வாசகர்கள் குறிப்பிட்டுள்ள "படிநிலை வரிசை' என்ற சொல்லே பொருத்தமாக இருக்கும். ஆனால், படிநிலை என்பதும் வரிசை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றாக இருக்குமென்பதால் "படிநிலை அமைப்பு' என்ற சொல் மிகவும் பொருத்தமாக இருக்கும்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 24, 2013 11:00 pm

பத்தொன்பது)
எழில் சோம.பொன்னுசாமி "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு செம்மாந்தன், செம்மாந்த மறவன், பகட்டுவண்ணன் போன்ற சொற்களைப் பரிந்துரைக்கிறார். சோலை.கருப்பையா, கெட்டிக்காரன், துறுதுறுப்பானவன், சுறுசுறுப்பானவன் என்னும் சொற்களையும், "சகலகலை வல்லவன்' என்பது பொருத்தமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

புலவர் பொறிஞர் சி.செந்தமிழ்ச்சேய், "கடலூர் மின்வாரிய தமிழார்வலர் தமிழ்ப்பணி அறக்கட்டளை' வெளியிட்டுள்ள ஆட்சிச் சொற்கள் அகரமுதலியில் பகட்டான, ஆரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான என்னும் பொருள்கள் தரப்பட்டுள்ளதாகவும், ஆங்கில அகரமுதலி தரும் பொருள்களை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், பெயரெச்சமான இச்சொல் பிறர் நாட்டத்தைக் கவரும் தன்மை உடையதால், "கவர்கவின்' என்ற சொல் பொருந்தும் என்கிறார்.

முனைவர் வே.குழந்தைசாமி, கம்பராமாயண வாக்கியமான ""பொற்பின் நின்றன பொலிவு'' என்பதை அடிப்படையாகக் கொண்டு, "பொங்கும் பொலிவு' அல்லது "பொலிவு' என்னும் சொற்கள் பொருந்தும் என்கிறார். ஆனந்தகிருஷ்ணன், பகட்டான, வேலைப்பாட்டுடன் கூடிய, ஒளிர்வான, நிறமுள்ள, அலங்காரத்துடன் பிறரைக் கவரும் தன்மை, கவரழகு, கவர்ச்சி அரசியல், ஆர்வத்துடன் இயங்கும் சுறுசுறுப்பு முதலியவற்றைக் கொண்ட ஒருவனைக் குறிப்பதால், "பன்முகப் பண்பாளன்' என்ற பொருள் பொருந்தும் என்கிறார்.

ஷா.கமால் அப்துல் நாசர், "ஃப்ளாம்பாயன்சி' என்ற இச்சொல், வள்ளுவர் பொருட்பாலில் குறிப்பிடும் ஊக்கமுடைமை, மடியின்மை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை, சொல்வன்மை, அவையஞ்சாமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சொல்லாகும் என்றும், இச்சொல்லுக்கு ""இணையாக உரமொருவற்கு'' என்று தொடங்கும் குறளில் உள்ள "உள்ளவெறுக்கை' அல்லது "ஊக்கமிகுதி' என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

"ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல்லுக்கு மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி இரண்டு வகையான பொருள்களைக் குறிக்கிறது. ஒன்று, தீப்பிழப்புகளைக் குறிக்கும் "ஃப்ளேம்' என்ற சொல்லை வேராகக் கொண்டமைந்த "அலையலையாய் எழும் மடிப்புகள்' என்ற பொருள். மற்றொன்று, பளிச்சென்று கண்ணில் தென்படும் "வண்ணமயமான காட்சி' அல்லது "நடத்தை'. பிரெஞ்சு மொழியில் உள்ள "ஃப்ளாம்பாயர்' என்ற சொல்லிலிருந்து 1832-இல் இச்சொல் ஆங்கிலத்திற்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இச்சொல்லுக்கு ஆக்ஸ்போர்டு அகர முதலி, பகட்டு, தன்னம்பிக்கை, துடிப்பு இவற்றின் மூலமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் நபர் அல்லது நடவடிக்கை என்றும்; பிரெஞ்சு கோதிக் கட்டடக்கலையில் (எர்ற்ட்ண் ஹழ்ஸ்ரீட்ண்ற்ங்ஸ்ரீற்ன்ழ்ங்) அலையலையாய்த் தீப்பிழம்புகள் எழும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்காரம் என்றும் இரு வகையான பொருள்களைத் தருகிறது. இந்தச் சொல் உருவான வரலாற்றைப் பார்த்தால், 13-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டில் மறுமலர்ச்சிக் கட்டடக்கலை (ழ்ங்ய்ஹண்ள்ள்ஹய்ஸ்ரீங் ஹழ்ஸ்ரீட்ண்ற்ங்ஸ்ரீற்ன்ழ்ங்) தோன்றும் வரை, பிரெஞ்சு நாட்டில் கோதிக் கட்டடக்கலையின் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைக் குறிக்கும் சொல்லிலிருந்து இது தோன்றியதாகக் கூறப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், கோதிக் கட்டடக்கலை என்று அழைக்கப்படும் கட்டடக்கலையில் உள்ள "கோத்' என்ற சொல் ஆங்கிலத்தில் கீழ்மகனைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. மிகப் பழைமையான கிறிஸ்தவ கோயில்கள், கோதிக் கட்டடக்கலையில் வடிவமைக்கப்பட்டவை என்பதும், அவை மற்ற கட்டடங்களிலிருந்து மாறுபட்டவைகளாகக் காட்டும் வகையில் கட்டப்பட்டவை என்பதையும் வரலாறு கூறுகிறது. மிக நீண்ட கூர்மையான கோபுரம் இக்கட்டடங்களின் ஒரு முக்கியமான அம்சமாகும்.

சென்னையில் உள்ள சாந்தோம் கத்தோலிக்க தேவாலயம், நவீன கோதிக் அடிப்படையில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எனவே, கட்டடக்கலையின் ஒரு வடிவத்தைக் குறிக்கும் பிரெஞ்சு சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட இச்சொல், காலப்போக்கில் தடம்மாறி நம்முடைய வழக்கில் மனிதர்களையோ, அவர்களுடைய நடத்தையையோ குறிப்பதற்காகவே பெரும்பாலும் பயன்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு நாம் இந்த வாரக் கடிதங்களுக்கு வருவோம்.

புலவர் செந்தமிழ்ச்சேய் பரிந்துரைத்துள்ள "கவர்கவின்' என்ற சொல்லைப் பயன்பாட்டில் கொண்டு வருவதில் சில சிக்கல்கள் உள்ளன. காரணம், "ஃப்ளாம்பாயன்ட்' என்ற சொல், ஒரு நபர் அல்லது நடத்தை இரண்டிற்கும் பொதுவானதாக அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, "கவர்திறன்' என்ற சொல் இரண்டுக்கும் பொருந்தும் என்று எண்ணுகிறேன்.



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக