புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
68 Posts - 45%
heezulia
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
5 Posts - 3%
prajai
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
4 Posts - 3%
Jenila
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%
jairam
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
1 Post - 1%
M. Priya
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
1 Post - 1%
kargan86
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
108 Posts - 52%
ayyasamy ram
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
9 Posts - 4%
prajai
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
6 Posts - 3%
Jenila
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
4 Posts - 2%
Rutu
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%
jairam
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%
Baarushree
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_m10செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR


   
   

Page 1 of 2 1, 2  Next

gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 12:54 am

செங்குந்தர் எனும் கைக்கோளர் - ஒரு பார்வை
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தமிழகத்தில் உள்ள ஒரு இனம் செங்குந்தர் என்றழைக்கப்படும் கைக்கோளர். கைக்கோளர் எனும் பெயர் செங்குந்தர் என்ற பெயரோடு சேர்ந்து வழக்கத்தில் வர ஆரம்பித்தது சுமார் 1200 ஆண்டுகளாக. இவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக சேலம், ஆத்தூர், தர்மபுரி, ஈரோடு, கோயம்புத்தூர், ஆற்காடு,ஆரணி,காமக்கூர்,தேவிகாபுரம், காஞ்சிபுரம், ஜெயங்கொண்டம், திருமழபாடி, தஞ்சை, சென்னை, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் மிகுதியாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தொழில் நெசவாக இருந்தாலும், ஏராளமானோர் வணிகர்களாகவும் மற்ற தொழில்களிலும் ஆண்டாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

"கூவிளம் இதழி தும்பை
கொண்டார்ச்சனை செய்தபேர்க்கு
தேவநாடாளவைக்கும் திருகுகைவேல்
செங்குந்தம் துணை" (செங்குந்தர் சதகம்)
செங்குந்தம் என்றால் இரத்தத்தால் சிவந்த ஈட்டி, செங்குந்தர் என்றால் செந்நிறமான ஈட்டியை உடையவர். போர்களின் பொழுதும், மன்னரின் பாதுகாப்பின் சமயமும் கைகளில் ஈட்டி பொருந்திய கோலை வைத்து சுழற்றுபவர் என்பதால் கைக்கோளர் என்றும் அழைக்கப்பட்டனர்.

குறிஞ்சி நிலப்பகுதியிலிருந்த வந்த இனத்தவர், முருகனை தன் குலதெய்வமாக வழிபடும் இவர்கள் முருகனின் அம்சமான வீரபாகுத் தேவரின் வழிவந்தவர்கள். இதனாலோ என்னவோ வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற படைவீரர்களாக திகழ்ந்தனர். மூவேந்தர்களிடமும் மிகவும் நம்பிக்கைக்குரிய அந்தரங்க படைவீரர்களாய் இருந்த இவர்கள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர். ”வாள் தாங்கிய கைக்கோளர்” என்று கல்வெட்டுகளில் உள்ள செய்தியால் இவர்கள் ஈட்டி மட்டும் அல்ல வாள் பிடித்தும் போரிட வல்லர் என்று அறிகிறோம்.

செங்குந்தர்கள் முருகனின் தாயான பார்வதியின் சிலம்பில் இருந்த 9 இரத்தினங்களில் இருந்து பிறந்தவர்கள் என்பதால், திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின் பொழுது 9 செங்குந்தர்கள் வீரர்கள் உடையணிந்து வீரபாகுத் தளபதிகளாய் குமரன் சூரனை சம்ஹரிக்க உதவுவது இன்றும் நடைமுறையில் உண்டு. திருசெந்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் மாசித்திருவிழாவில் பன்னிரண்டாம் நாள் திருவிழா செங்குந்தர் குலத்தவரின் மண்டகப்படியாக இன்றும் நடைபெறுகிறது.


தெரிஞ்ச கைக்கோளப்படை என்பது சோழர்களின் படைப்பிரிவில் ஒன்று என்று கல்வெட்டாய்வுகள் தெரிவிக்கின்றன. பொன்னியின் செல்வனில் கல்கி கைக்கோளப்படை பற்றி எழுதியிருப்பதை சற்று பாருங்கள்,

"மூன்று கம்பீர புருசர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர்). அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.

"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே?" என்று அநிருத்தர் கேட்டார்.

"ஆம், ஐயா! ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது."

"அது ஏன்?"

"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்."

"உங்கள் படையில் எத்தனை கை? எத்தனை வீரர்கள்?"

"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது."

"உங்களுடைய கோரிக்கை என்ன?"

"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்!"
"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்."

"பிரம்மராஜரே! அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...?"

"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்போதைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை."

"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா? எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்!..."

"ஒரு கை என்ன? நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ? நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்..."

"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்."


அப்பப்பா! என்னவொரு அசாத்திய வீரம், சுந்தர சோழரின் மந்திரியான அநிருத்த பிரம்மராயர் சாதாரண ஆளில்லை, திருச்சிக்கு அருகில் உள்ள அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த இவர் சோழர்களின் சாணக்கியர், இவரின் செவியும், கண்ணும் சோழ நாடு முழுவதும், இவருக்கு தெரியாமல் சோழ நாட்டில் எதுவுமே நடக்காது அந்நாளில். இப்பேர்பட்ட ஒருவரே கைக்கோளப் படையை புகழ்கிறார் என்றால் அவர்களின் வீரம் எந்த அளவிற்கு சிறந்ததாயிருந்திருக்க வேண்டும்.

செங்குந்தர்களை பற்றி பல்வேறு புலவர்கள் பல காலகட்டங்களில் பாடியதை தொகுத்து செங்குந்த பிரபந்த திரட்டு என்று நூலாக பதிக்கப்பெற்றுள்ளது. இடைக்காலச் சோழர்களுக்கு முன்னரே கைக்கோளர்களை பற்றிய செய்திகள் பல சமணர் கல்வெட்டுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

சோழர் காலத்திற்கு பிறகு (13ஆம் நூற்றாண்டு) படிப் படியாக நெசவுத்தொழிலுக்குள் நுழைந்த இவர்கள் 17ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தங்கள் குலத்தொழிலாகிய படைத் தொழிலை விட்டு முழுமையாக நெசவுத் தொழிலுக்கு மாறினர். நெசவுத் தொழிலோடு, நிலக் கிழார்களாகவும், விவாசாயிகளாகவும், வணிகர்களாகவும் கூட உருவெடுத்தனர்.

18ஆம் நூற்றாண்டு முதலே இவர்கள் முதலி எனும் பெயரை தங்கள் பெயருக்கு பின் சேர்த்துக்கொண்டனர் என்பது அந்நாள் பாண்டிச்சேரியின் கவர்னருக்கு முதன்மை துபாஷியாய் இருந்த ஆனந்த ரங்கப் பிள்ளை அவர்களின் டைரி குறிப்பிலிருந்து தெரியவருகிறது.

திருப்பதி, திருவரங்கம் போன்ற ஆலயங்களை நிர்வகிக்கும் பொறுப்பிலும் திருவண்ணாமலையில் பல்வேறு சடங்குகளை நடத்தவும் உரிமைபெற்றிருந்தனர் என்றும், மேலும் பல ஆலயங்களுக்கு நிலம், நடை உள்ளிட்ட பல்வேறு நிவந்தங்களை அளித்திருக்கின்றனர் என்றும் India before Europe by Catherine Ella Blanshard Asher, The Political Economy of Commerce: Southern India, 1500-1650, BySanjay Subrahmanyam, Textiles in Indian Ocean Societies, By Ruth Barnes ஆகிய நூல்கள் தெரிவிக்கின்றன.

விக்கிரமச் சோழன், இரண்டாம் குலோத்துங்கச் சோழன் முதலிய மூன்று சோழர்களிடம் அரசவைப் புலவராக இருந்த ஒட்டக் கூத்தர் செங்குந்த இனத்தைச் சேர்ந்தவர்.

இரட்டைப் புலவர்கள் என்று பெயர் பெற்ற மதுசூரியர் மற்றும் இளஞ்சூரியர் இவர்களும் செங்குந்த மரபில் தோன்றியவர்கள். இவர்கள் பிறந்தது சோழநாட்டின் ஆமிலந்துறையில், இவர்களில் ஒருவர் குருடர் மற்றவர் முடவர், இருப்பினும் முடவர் வழி காட்ட குருடர் அவரைத்தோள் ஏற்றிகொண்டு இருவருமாய் பல சிவாலயங்களுக்குச் சென்று பாடல்கள் பாடியுள்ளனர். இவர்களில் ஒருவர் முதல் இரண்டு அடியை பாட மற்றவர் அடுத்த இரண்டடியை பாடி முடிப்பார். காளமேகப் புலவரின் நண்பர்களாய் இருந்த இவர்கள் அவருடைய மறைவின் போது, புலவரின் உடலை நெருப்பு தன்னுள் வேகவைக்கத் தொடங்குவதை கண்ணுற்ற முடவர், முகத்தில் சோகம் தாளாது அறைந்து கொண்டார்.

'ஆசுகவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ்க் காளமேகமே'
என முடவர் கதற, குருடர் உடனே,
'-பூசுரா விண்கொண்ட செந்தனவாய் வேகுதே ஐயையோ
மண்தின்ற பாணமென்றவாய்!'
எனப்பாடி அழுதார்.

அரசியலில் - அண்ணாதுரை, ஆன்மிகத்தில் - திருமுருக கிருபானந்த வாரியார், கவிதையில் ஒட்டக்கூத்தர், பாவேந்தர் பாரதிதாசன், விடுதலைப் போராட்டத்தில் - தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன் என அறிஞர்களும், கவிஞர்களும், தியாக செம்மல்களும் என கைக்கோளர் குலத்தில் உதித்தவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

72 உட்பிரிவுகளை கொண்ட கைக்கோளர்கள் தமிழகத்தில் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலும், இலங்கையிலும் முடியாட்சி காலம் தொட்டு வாழ்ந்து வருகின்றனர். கொங்கு நாட்டு சிற்றரசர்களில் ஒரு பிரிவினரான கெட்டி முதலியார் கட்டிய தாரமங்கலம் கோவில் சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தை பற்றியும் கெட்டி முதலியார்களை பற்றியும் தனியொரு பதிவில் பார்ப்போம்.


(பி.கு : இந்த கட்டுரைக்கான குறிப்புகள் தஞ்சை நூலகத்தில் இருந்தும், இணையத்தில் (குறிப்பாக மரத்தடி, முத்தமிழ் மன்றம், தினமலர்) இருந்தும் எடுக்கப்பட்டது. இரட்டையர் பாடல் ஷைலஜா அவர்களின் கட்டுரையில் இருந்து எடுப்பட்டது என்பதை நன்றியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்)

Labels: kaikolar, muthaliyar, sengunthar, கைகோளர், கைக்கோளர், செங்குந்தம், செங்குந்தர், முதலியார்
செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Devikapuramperiyanayagi



A.பாலமுருகன் காமக்கூர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 1:07 am

பகிர்வுக்கு நன்றி..



செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xzசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xzசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xzசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 1:28 am

நமது குலக் கொடி




நமது குலக் கொடியின் சிறப்பு

நமது குலக்கொடி வெள்ளை நிறத்துணியில், நடுவே குந்தமும், அதன் வலது புறத்தில் சேவலும், இடது புறத்தில் புலியும் சின்னங்களாகக் கொண்டு விளங்குகிறது. அதனை நாம் உணர்ந்து, சிரம் தாழ்த்தி வணங்குதல் வேண்டும்.

வெண்மை நிறம்

வெண்மை நிறம் நேர்மையைத் தெரிவிப்பது, தூய்மையை விளக்குவது, எங்கும் எதிலும் தூய்மையாய் விளங்கும் குலமே செங்குந்தர் குலம் என்பதை வெண்மை நிறம் வெளிப்படுத்துகிறது.

குந்தப்படை

வீரவாகு முதலிய நவவீரர்கள் தோன்றியபோது, அவர்களுக்கு அன்னை ஆதிசக்தி கொடுத்த படையே குந்தப்படையாகும். முருகனுக்குத் துணையாய் இருந்து, சூரன் முதலிய அசுரர்களை அழித்தது இப்படையே. முசுகுந்தனை மன்னர் மன்னனாக்கி முசுகுந்த சோழன் என்று உலகம் புகழ வைத்ததும் இப்படையே. நமது ஏற்றமிகு கொடியின் நடுநாயகமாகக் குந்தம் விளங்குவது நாம் பெற்ற பேராகும்.

சேவற் சின்னம்

முருகனது வேலுக்குத் தப்பியோடிய சூரபதும்மன், கடலுக்குள் தலை கீழான மரமாய் நின்றான். அப்போது வேல் தப்பாது சென்று அம்மரத்தை இரு பிரிவாக்கியது. அவைகளுள் ஒன்று மயிலாகவும், மற்றொன்று சேவலாகவும் வந்து முருகனை எதிர்த்தன.

முருகன் அருளால் மாயை நீங்கி, மயிலும் சேவலும் இணங்கி வந்தன. அவற்றுள் மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் அவர் ஏற்றுக்கொண்டார். முருகனது கொடிச்சின்னம், நமது கொடியில் இருப்பது நாம் அவரது குலம் என்பதை காட்டவேயாகும்.

புலிச்சின்னம்

முருகப்பெருமான் சூரனைக் கொன்றபின் அவனது கொடியாகிய புலிக்கொடியை, வீரவாகுத் தேவரின் வீரத்திற்குப் பரிசாகத் தந்தார். புலிச்சின்னம் நவ வீரர்களின் அறம் நிறைந்த வீரத்திற்கும், அவர்கள் வழிவந்த செங்குந்தர் குலத்திற்கும் கிடைத்த பரிசாகும்.

சோழ மன்னர்களுக்கும் புலிச்சின்னமே கொடிச்சின்னம் ஆகும். வீரவாகுத் தேவரின் மகள் சித்திரவல்லியைச் சோழன் முசுகுந்தன் மணந்து கொண்டு அங்கிவன்மனைப் பெற்றான். வீரவாகுத் தேவர் புண்பகந்தியை மணந்து கொண்டு, அனகன் என்ற மகனைப் பெற்றார். புண்பகந்தி சோழ மரபில் தோன்றியவள்.

அங்கிவன்மனும், அனகனும் முறையே கருவூரிலும், காஞ்சியிலும் இருந்து கொண்டு சோழப்பேரரசை நடத்தி வந்தனர்.


எனவே, செங்குந்தர் குலம் சோழ மரபோடு இரண்டறக் கலந்து ஒரு காலத்தில் நாடு ஆண்ட குலம், என்பதையும் இப்புலிச்சின்னம் புகட்டுகிறது.

நமது கடமை

சொல்லிலே பொருளைக் காண்கிறோம், கல்லிலே கடவுளைக் காண்கிறோம். அதுபோலவே, கொடியிலே, அது உணர்த்தும் கொள்கைகளை காண வேண்டும்.

அவ்வாறு, அவைகளை உணர்ந்து நாம் எடுக்கும் விழாக்கள் எதுவாயிலும், அவற்றின் துவக்கத்தில் கொடியேற்றி, வணங்கி, நம் குலத்திற்கு நலம் தரும் உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளுதல் என்றும் நமக்கு ஏற்றம் தரும்.

வாழ்க! வாழ்க! செங்குந்தர்! வெல்க! வெல்க! செங்குந்தர்!





A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 1:29 am

செங்குந்தர் உறுதி மொழி செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Drumman

நாம் செங்குந்த குலக்கடவுள் அருள்மிகு முருகப்பெருமான் ஆணையாக, மனசாட்சியுடன் கீழ்கண்டவாறு உறுதி பூணுகிறோம்.

1. நாம், இந்தியக் குடிமக்களாய் இருப்பதை, பெருமையாகக் கருதுகிறோம். நமது நாட்டின் அரசியல் அமைப்புச்

சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டு, நாட்டின் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவோம்.

2. நாம், செங்குந்தர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு, நமது சங்கத்தின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுபட்டு சமூக,

பொருளாதார, கல்வி, தொழில், கலாச்சார முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்; சமூக நலம் காப்போம்.

3. நாம், மற்ற இனத்தவரிடம், மனித நேயம் கொண்டு, நட்புடனும், அன்புடனும் பழகுவோம்.

4. நாம், நமது உரிமைகளைப் பாதுகாக்க எப்பொழுதும் விழிப்புடன் செயல்படுவோம்,

5. நாம், நமது சங்கம் நிறுவிய சான்றோர்களை நினைவில் கொண்டு, சங்கத்தை நாளும் வளர்த்திடுவோம்.



செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Bloganathankamakkur



A.பாலமுருகன் காமக்கூர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Dec 05, 2012 1:36 am

தொடர்ந்து தாங்க... மகிழ்ச்சி



செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xzசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xzசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xzசெங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 2:00 am

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Variyaar

கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

மனைவியிடம் கோபிக்காதீர்கள்

நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி
வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும்
பன்மடங்கு வளர்ந்து வரும்.

பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில்,
எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு
அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.

மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி
கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது.

ஒரு மனிதனோடு பழகும்போது அளந்து பழக வேண்டும். பால்
வாங்கும் போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே
வாங்குகிறோம். அதுபோல் யாரிடம் பழகினாலும் அளந்து
பழகாவிட்டால் துயரம் வந்து சேரும்.

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும் பார்த்தாலே அவன்
எப்படி உள்ளவன் என்று கணக்கிட்டுவிடலாம்.

இருள் இருவகைப்படும். ஒன்று புற இருள், மற்றொன்று அக
இருள். இதற்கு ஆணவம் என்று பேர். புறஇருள் தன்னைக்
காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும்
மறைத்து, மற்ற எல்லாவற்றையும் மறைத்து நின்று
பெருந்துயரத்தைச் செய்யும்.

தங்கம் இளகினால் அதில் ரத்தினக்கல் பதியும். அதுபோல்
நம் உள்ளம் உருகினால் உருகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றி
விடுவான்.

எதனையும் பலமுறை சிந்தித்துச் செய்ய வேண்டும். ஒருவர்
போன வழியிலேயே, சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது
மூடத்தனம்.

எங்கும் நிறைந்த இறைவனை எங்கும் எளிதாகக்
கிடைக்கக்கூடிய பூவினாலும், நீரினாலும் நாம் வழிபட
வேண்டும். வழிபாட்டிற்கு அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள்
போன்றவை


செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR 51fcc1b471e040ae81a811b


இன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

எல்லாத் தேசத்தாரும், எல்லா நாட்டாரும், எல்லா
நிறத்தாரும், எல்லா சமயத்தாரும் கருத்து வேறுபாடின்றி
ஒப்பமுடிந்த உண்மை வேதம் நமது திருக்குறள் ஒன்றேயாம்.
உலகிலுள்ள எல்லா அறங்களையும் தன்னகத்தே கொண்டு சுருங்கச்
சொல்லி விளங்க வைப்பது திருக்குறள்.

திருமால், குறள் வடிவு கொண்டு இரண்டடியால் மூவுலகையும்
அளந்தவர். வள்ளுவர், தமது குறளின் இரண்டடியால் எல்லா
உலகங்களையும் அளந்தவர்.

திருக்குறள் ஓதுவதற்கு எளிது. மனப்பாடம் செய்வதும்
சுலபம். ஒரு முறை படித்தாலே போதும். உணர்தற்கு அரிது,
வேதங்களிலுள்ள விழுப்பொருள்களை எல்லாம் விளக்கமாக
உரைப்பது. நினைக்கும்தோறும் நெஞ்சில் தெவிட்டாத இன்பத்தை
ஊற்றெடுக்கச் செய்வது.

கடல் தண்ணீர் வற்றிவிட்டாலும் சூரியன் தட்பத்தை
அடைந்தாலும், சந்திரன் வெப்பத்தை அடைந்தாலும் திருக்குறள்
தனது பெருமையினின்றும் குறையாது.

திருக்குறளைத் தொட்டாலும் கை மணக்கும். படித்தாலும் கண்
மணக்கும். கேட்டால் செவிமணக்கும். சொன்னால் வாய் மணக்கும்.
எண்ணினால் இதயம் மணக்கும். அத்தகைய தெய்வ மணம் வீசும்
சீரும் சிறப்பும் உடையது திருக்குறள்.

இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான
துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக்
கிடைக்கும்.

கனிகள் நிறைந்துள்ள ஓர் மரத்தில் வகையறியா ஒருவன்
சுவைமிகுந்த கனிகளை விலக்கிக் கைப்புடைய காய்களை மென்றதை
ஒக்கும் இன்னாத சொற்களைக் கூறுவோனின் இயல்பு. எனவே
மனத்தூய்மையுடன் வாழ்ந்து இறைவன் திருவருளால்
இன்சொல்லைக்கூறப் பயின்று நாம் அனைவரும் இம்மை
இன்பத்தையும் அடைந்து நற்கதி பெறுவோமாக.

https://2img.net/r/ihimizer/img543/9566/variyaar.jpg

ஒரே நிமிடத்தில் புண்ணியம்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

* தன்னுடைய புத்தகம், பெண், பணம் இவை பிறரிடம்
கொடுத்தால் போனது போனதுதான். ஒருவேளை திரும்பி வருவதாயின்
புத்தகம் கிழிந்தும், பெண் மாசுபடிந்தும், பணம் அளவு
குறைந்தும்தான் வரும்.

* முதலை வாய்ப்பட்ட மணியை எடுத்து விடலாம். அலைபாயும்
கடலையும் அப்புறமாகத் தாண்டிடலாம். பாம்பையும் மாலையாக
கழுத்தில் அணிந்திடலாம். ஆனால் மூடனைத் திருத்த யாராலும்
இயலாது.

* ஆறு தரம் பூமியை வலம் வருதலும், பதினாராயிரம் தடவை
காசியில் குளித்தலும், பலநூறு தடவை சேது ஸ்நானம்
செய்தாலும் ஆகிய இவற்றால் கிடைக்கும் புண்ணியம், தாயைப்
பக்தி பூர்வமாக ஒரு தரம் வணங்கினால் கிடைக்கும்.

* விளக்கு நமக்கு எத்தனை வண்ணமாக உதவி செய்கிறது என்பதை
நாம் அது இல்லாதபோதுதான் உணர முடியும். தாய் நம்மை
எப்படியெல்லாம் வளர்க்கின்றாள் என்பதை தாய் இல்லாத
போதுதானே உணர முடிகிறது.

* பறவைகட்கு இரு சிறகுகள்; மனிதனுக்கு இரு கால்கள், இரு
கைகள், இரு கண்கள். புகை வண்டிக்கு தண்டவாளங்கள்
இருப்பதுபோல் மாணவர்களுக்கு இரு குணங்கள் இருக்க வேண்டும்.
ஒன்று அடக்கம், மற்றொன்று குருபக்தி. இந்த இரு குணங்கள்
உள்ள மாணவன்தான் முன்னேற்றமடைவான்.

* இன்பமான சொல்லும், சிரித்த முகமும், பார்வையும்,
நண்பர்களின் சொல்லைக் கேட்க வேண்டுமென்ற எண்ணமும்,
அவர்களைக் கண்டவுடன் சந்தோஷப்படுதலும் ஆசையில்லாதவனின்
லட்சணங்களாகும்.

* தீப்பந்தத்தைக் கீழ்நோக்கிப் பிடித்தாலும் அதன்
ஜுவாலை மேல்நோக்கி எழுவதுபோல் உயர்ந்த குணத்தை
கீழ்ப்படுத்த சொப்பனத்திலும் முடியாது.



கடவுளிடம் பயம் வேண்டும்-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

* ஒரே பரம்பொருளை ‘முருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும் ‘திருமாலே’ என்று வணங்கினாலும், ‘கணபதியே’
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தை ‘கண்ணே’ என்பார். தாய் ‘மணியே’ என்பாள். தாத்தா
‘முத்தே’ என்பார். பக்கத்து வீட்டுக்காரர் ‘ராஜா’ என்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.

* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பாதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய
திருவடியின் மூலம் தருகிறார். ஆன்மாக்களுக்கு நாம் நன்மையே
செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மையே உண்மையான
கடவுள் வழிபாடாகும்.

* ஆண்டவன் அகிலாண்ட நாயகன். சர்வ வல்லமையும் உடையவன்.
நம்முடைய தலைவன். மனம் வாக்கு காயம் ஆகியவற்றால் நாம்
செய்யும் குற்றங்கள் அனைத்தையும் அறிகிறான். ஆகவே,
கடவுளிடத்தில் ஒவ்வொருவருக்கும் அச்சம் இருக்க
வேண்டும்.

* கடவுளை நம்மால் காண முடியவில்லை. பாலுக்குள்
இருக்கும் நெய் நம் கண்ணுக்கு தெரிவதில்லை. தயிராக்கி
கடைந்தால் தான் புலப்படுகிறது. அதுபோல, பக்தி செய்தால்
தான் இறைவனைக் காண முடியும்.



துன்ப அனுபவம் நன்மைக்காகவே!-கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்
கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,
கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில்
துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்
ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்.
ஆள்காட்டி விரலைக் காட்டுவதன் தாத்பர்யம் கடவுள் ஒருவரே
என்பதைக் காட்டுவதே. மற்றொருவர் கையை விடுத்து நிற்பார்.
அதன் தத்துவம் கடவுளை தவிர வேறொன்றும் இல்லை என்பதையே
காட்டுகிறது. இதையே “ஏகம் ஏவ அத்விதீயம் பிரம்ம ‘ என்று
வேதம் கூறுகிறது. ண தாய் குழந்தையின் நோய் நீங்க
வேப்பங்கொழுந்து, சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை அரைத்து
கொடுப்பாள். அது குழந்தைக்கு மிகுந்த கசப்பும் காரமுமாக
இருக்கும். அன்றியும் குழந்தையின் சிறுமதியில் தாய் தன்
நன்மைக்குத் தான் இதை தருகிறாள் என்று அறிந்து கொள்ள
முடியாது.
காரணம் அதற்கு அறிவு முதிர்ச்சி இல்லை. அது போல்,
கடவுள் நமக்கு தரும் துன்ப அனுபவங்களும் நம்
நன்மைக்காகவே. [center][right]



A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 2:16 am

செங்குந்தர் - ஒரு பார்வை A.BALAMURUGAN KAMAKKUR Tblanmegamideanews13256


திருமுருக கிருபானந்த வாரியார்
Kripananda Variar (24,618 bytes)
Śrī Kripānanda Vāriār Swāmigal
Kripananda Variar bookcover (27,531 bytes)
உ. தாமரைச்செல்வி

தமிழ் இலக்கியம் மற்றும் இந்து சமய ஆன்மிகச் சொற்பொழிவில் தனக்கென தனிப் பெயரை ஏற்படுத்திக் கொண்ட மிகச் சிறந்த சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார். இவர் சொற்பொழிவைக் கேட்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். எந்தச் சொற்பொழிவாக இருந்தாலும் அதில் நகைச்சுவை கலந்து, மகிழ்ச்சியைச் சேர்த்து வழங்கும் தனித்திறன் அவருக்குண்டு. சின்னக் குழந்தைகளைக் கூட தன் பேச்சால் கவர்ந்து வயப்படுத்தி வைத்திருந்த மகான் இவர். இந்தியா மட்டுமில்லாது, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் சிறப்பான சொற்பொழிவுகளை நிகழ்த்தி உலகத் தமிழர்கள் அனைவரது மனத்திலும் தனக்கென நீங்கா இடம் பெற்றிருந்தார் என்றால் அது மிகையில்லை.

பிறப்பும் கல்வியும்

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் எனும் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு மொத்தம் பதினோரு குழந்தைகள் பிறந்தன. இவற்றுள் 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவருக்கு, இசையாலும், புராணச் சொற்பொழிவாலும் இறைவன் புகழ்பாடி வந்த மல்லையதாசர் முருகப்பெருமானின் பல நாமங்களில் ஒன்றான "கிருபானந்த வாரி" எனும் பெயரைச் சூட்டினார்.

"கிருபை" என்றால் கருணை என்றும், "ஆனந்தம்" என்றால் இன்பம் என்றும், "வாரி" என்றால் பெருங்கடல் என்றும் பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரை தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும், ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்த இவருக்கு இவர் தந்தைதான் ஆசான். இவருடைய தந்தையார் இவருக்கு மூன்றாம் வயதிலிருந்து தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்ற இவர் தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் அவர் மனப்பாடம் செய்துவிட்டார். கற்றறிந்த புலவருக்கே கடினமாக இருக்கும் அஷ்டநாக பந்தம், மயில், வேல், சிவலிங்கம், ரதம் முதலான பந்தங்கள், சித்திரக் கவிகள் முதலியவைகளை இயற்றினார்.

சொற்பொழிவாளர்

இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்த கிருபானந்த வாரியாரின் தந்தை மல்லையதாசர் ஒருநாள் சொற்பொழிவு ஒன்றுக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக அந்தச் சொற்பொழிவிற்கு வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், "மல்லையதாசர் சொற்பொழிவிற்கு வருவதாக ஒத்துக் கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பி வைத்திருக்கிறாரே" என்று வருத்தப்பட்டனர். வாரியார் அன்று முதன் முதலாக செய்த சொற்பொழிவைக் கேட்டவர்கள் அசந்து போய்விட்டனர். இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா? என்று அவருடைய சொற்பொழிவைக் கேட்டவர்கள் மகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால் அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள் கூட எளிமையாகப் புரிந்து கொண்டார்கள். சிறுபிள்ளைகள் கூட இவருடைய சொற்பொழிவு என்றால் கேட்க விரும்புவார்கள். அவ்வளவு எளிமையாக இருக்கும். சொற்பொழிவில் அதிகமான நகைச்சுவைகள் அர்த்தத்துடன் இருக்கும்.

பொதுவாக இவர் சொற்பொழிவாற்றும் கூட்டங்களில் சிறுபிள்ளைகள் முன் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். சொற்பொழிவின் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்பார். அந்தக் கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்கும் சிறுபிள்ளைக்கு விபூதியும், சிறிய கந்தசஷ்டிக் கவசப் புத்தகம் ஒன்றும் பரிசாக அளிப்பார். இந்தப் பரிசைப் பெற சிறுவர்களுக்கிடையே ஆர்வம் அதிகமிருக்கும். இதற்காக முன் வரிசையில் இடம் பிடிக்கப் போட்டியும் இருக்கும். (தேனி வரசித்தி விநாயகர் பேட்டை நவராத்திரித் திருவிழாவில் முன் வரிசையில் இடம் பிடித்து வாரியார் கேட்ட கேள்விக்குப் பதிலளித்து ஒரே ஒரு முறை சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை வாரியாரிடமிருந்து பரிசாகப் பெற்றிருக்கிறேன்.)

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது குறைவாகவே இருக்கும். கலையும் அந்தக் குறைவான கூட்டத்தையும் தக்க வைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார்.

வாரியார் ஒரு சமயம் ஒரு ஊரில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்த போது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை "சொல்லின் செல்வர்" என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.

போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.

வாரியார் தொடர்ந்து, ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .'' என்றார்.

இடையில் எழுந்து சென்ற அவர்கள் மீண்டும் அவர்கள் இடத்திற்கு வந்தமர்ந்தனர்.

பெண்களை மதித்தவர்

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்திற்குக் குறைவு இருக்காது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும் விதமாக "மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தளைக்காது" என்று சொல்வதுண்டு. குழந்தைகளுக்குப் பெற்றெடுத்த தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்சியலாக) போடவேண்டும் என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன் முதலாகச் சொல்லியவரும் வாரியார்தான்.

பெண்கள் குறித்து உயர்வான எண்ணம் கொண்டிருந்த வாரியார் பத்தொன்பதாம் வயதில் தாய்மாமன் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை கணவன் மனைவியை மதிப்பதே இல்லை. இவற்றையெல்லாம் மனதில் கொண்டு வாரியார் பல சொற்பொழிவுகளில் மனைவியை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார்.

மனைவியிடம் மெத்தென்று பழக வேண்டும். "மலரினும் மெல்லிது காமம்" புஷ்பத்திடம் பழகுவதுபோல் மனைவியிடம் பழக வேண்டும். நான்குபேர் இருக்கும் பொழுது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. பத்துப் பேருக்கு எதிரே மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டால் மனைவி கூசுவாள். மனைவியிடம் சைகையால் பேச வேண்டும். ஒரு மன்னர் பெருமான். இளம் மனைவி. அவன் மனைவியைப் பார்த்தான். அவள் புரிந்து கொண்டாள். தோழி பார்த்தாள். அவள் கண்ணால் கேட்டாளாம். அதற்கு அவள் கடைக்கண்ணாலே பதில் சொன்னாளாம். இதையெல்லாம் கம்பர் சொல்கின்றார்.

"தாழ நின்ற ததைமலர்க் கையினால்
ஆழி மன்னொரு வனுரைத் தான்அது
வீழி யின்கனி வாயொரு மெல்லியல்
தோழி கண்ணில் கடைக்கண்ணில் சொல்லினாள்."

தமிழனுடைய நாகரீகம். ஒரு தடவை சொன்னால் போதுமே. என்று தமிழன் நாகரீகத்தைச் சொல்லி, பெண்ணைச் சொல்லி, மனைவியை மதிக்க வலியுறுத்துவார்.

முருகப் பெருமான்

வாரியார் தன் சொற்பொழிவில் அடிக்கடி முருகப்பெருமான் தோற்றம் குறித்து சொல்வார். உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.

ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.

"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"

என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.

இராமச்சந்திரமூர்த்தி அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணபிரான் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:

"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்"

நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.

குழந்தைப் பற்று

வாரியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் ஏதுமில்லை என்றாலும் குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார். தன் கூட்டங்களில் குழந்தைகளுக்கு முன் வரிசையில் இடமளித்த இவர், குழந்தைகளுக்காக "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பதை உணர்ந்து "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார். இதில் குழந்தைகளுக்குத் தேவையான நல்ல கருத்துக்களையும், எதிர்காலத்திற்கேற்ற சிந்தனைகளையும் அளித்திருந்தார்.

இசைப்பயிற்சி

இவருக்கு இருபத்தொரு வயதான போது மைசூரில் நடைபெறும் நவராத்திரித் திருவிழாவிற்கு அழைத்துச் சென்ற இவரது தந்தை வீணை சேஷண்ணாவிடமிருந்து ஒரு வீணை வாங்கிக் கொடுத்தார். பின்னர் சென்னையில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் ஓர் இசை ஆசிரியரிடம் வீணை கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தார். வாரியாருக்கு 23 வயதான போது, சென்னையில் உள்ள யானைக்கவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார்.

இதன் பிறகு இசை ஞானத்தால் இசைச் சொற்பொழிவு செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். இசையில் ஈடுபாடுடைய இவர் இசை குறித்தும் பல்வேறு தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். சிவபெருமானும் முருகனும் இசையில் முதற்கடவுள்கள் என்று ஒரு கருத்தையும் தெரிவித்தார்.

இசையிலேயே ஆகப் பெரியவர் சிவபெருமான். சிவபெருமான் வீணை வாசிப்பார்.

"வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி"

வீணா தட்சிணாமூர்த்தி. முதன் முதலிலே புல்லாங்குழல் வாசித்தவர் முருகப் பெருமான். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே,

"குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்"

என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம்.

"குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழினைச் சொல்கிறார். எது முக்கியமோ அதை முதலிலே சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக்கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழுகின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம். யார்? சுப்பிரமணியசுவாமி. தன்னை அறியாது வாசித்தாராம். ஆகவே அந்தக் குடும்பமே சங்கீதக் குடும்பம். என்று சிவபெருமான் குடும்பத்தை இசைக் குடும்பமாக்கிய பெருமை வாரியாருக்கு உண்டு.

சைவ சித்தாந்தம்

சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்றபடி வியந்து பாராட்டினார்கள். "வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய சொற்பொழிவைக் கேட்பதற்காக ஆண், பெண், குழந்தைகள் என பலரும் கூடியிருப்பார்கள். சுவாமிகள் திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவகுப்பு, திருவருட்பா முதலான தோத்திர நூல்களில் இருந்து பல பாடல்களை, பாடல் வரிகளை தம்முடைய சொற்பொழிவுகளில், ஏற்ற இடங்களில் தட்டுத் தடங்கல் இல்லாமல் இசையோடு பாடுவார். கூட்டத்திலிருப்பவர்கள் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின் போது அவருக்கு, "இசைப் பேரறிஞர்" பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர். இவருடைய சொற்பொழிவுகளுக்கிடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் வாரியாருக்குரிய சிறப்பியல்புகளாகும்.

இசுலாமியர் கருத்து

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு நிகழ்த்திய போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, "சுவாமி! இத்திருப்பரங்குன்றத்தை சிக்கந்தர் மலை என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்று இசுலாம் சமயத்தைச் சார்ந்த சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?" என்று கேட்டார்.

அதற்கு வாரியார், "இதில் என்ன தவறு இருக்கின்றது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக் கொள்ளட்டுமே." என்று கூற "அனைவரும் அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?" என்று கேட்டனர்.

இதனைக் கேட்ட வாரியார், "முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், சிக்கந்தர் என்று குறிப்பிட்டு சிக்கந்தர் மலை என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை" என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடையானது மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள் தான். இது போல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும் சிறப்பானதை இவர் ஏற்றுக் கொண்டிருந்தார் என்பதும் உண்மை.

"எனக்கு அஜீரணம் என்பது என்னவென்றே இதுவரை தெரியாது. பசியெடுத்த பின் கையை வாய்க்குள் வைப்பவனும், பசி அடங்குவதற்கு முன் கையை வாயை விட்டு எடுத்துக் கொள்பவனும் நோய் வாய்ப்பட மாட்டான்" என்று ஒரு இசுலாமிய அன்பர் கூறியதை நினைவில் வைத்துக் கொண்டதுடன் அதைத் தொடர்ந்துக் கடைப்பிடித்தும் வந்தார். இதை அடிக்கடி அவருடைய சொற்பொழிவில் குறிப்பிடுவதுமுண்டு.

தமிழ் பற்றாளர்

வாரியார் தமிழ்க்கடவுள் முருகனை முதற்கடவுளாகக் கொண்டு தமிழில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினாலும், சிலர் இவரை வடமொழி ஆதரவாளர் என்று வாதிட்டவர்களும் உண்டு. தமிழை இவர் எவ்வளவு உயரமான இடத்தில் வைத்திருந்தார் என்பதை அவருடைய சொற்பொழிவாலேயே உணர முடிகிறது.

தமிழ் மிகத் தொன்மையானது. மற்ற மொழிகளைப் போலப் பின்னே வந்த மொழி அல்ல. தமிழின் பெருமையைச் சொல்லுகிறேன். கைலாயத்தில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம். முனிவர்கள், சித்தர்கள், தேவர்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அப்போது வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லாரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். "அப்பனே! வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. என்ன பண்ணுவது? இமயமலை உச்சியில் எல்லோரும் உட்கார்ந்திருக்கின்றார்கள். சிவபெருமான் அகத்திய முனிவரைக் கூப்பிட்டார். "அப்பனே வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விட்டது. நீ பொதிகை மலைக்குப் போ" என்றார். அவர் அடியார்.

அவர். "அடிக்கடி நடக்கின்ற கல்யாணமா சுவாமி! இந்தப் பாவி இந்தக் கல்யாணத்தைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே" என்றார். "நீ வருத்தப்படாதே; இந்தக் காட்சியை உனக்கு அங்கே தருகின்றேன்" என்றார். அவருக்குத் தமிழ் தெரியாது. இது தமிழ்நாடு. மூன்றே முக்கால் நாழிகையிலே தமிழ் சொல்லிக் கொடுத்தாராம். கற்பூர புத்தி. உடனே தெரிந்து கொள்பவர்களும் உண்டுதானே? ஓரளவு தமிழ் பேசுவதற்கு ஞானம் வேண்டும். அப்புறம் அங்கு மகாவித்வான்கள் எல்லாம் வருவார்களே? அவர்களுடன் பேசத்தான் தமிழ் கற்றுக் கொண்டார். இலக்கணம் படித்தால்தானே எல்லோரும் மதிப்பார்கள். முருகப் பெருமானை வேண்டித் தவம் செய்தார். கந்தக் கடவுள் வந்தார். எனக்குத் தமிழ் சொல்லிக் கொடு என்றார். முருகப்பெருமான்தான் அகத்தியருக்கு இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். அவர் அகத்தியம் என்று ஓர் இலக்கணம் செய்தார். இது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. அதில் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன. கடல்கோள்களால் அநேக பாடல்கள் அழிந்து விட்டன. அந்த அகத்தியம் சிதைந்த பிறகு அவருடைய 12 சீடர்களில் ஒருவரான தொல்காப்பியர்தான் தமிழ் இலக்கணம் செய்தார். அதுதான் தொல்காப்பியம்.

நம்முடைய வாழ்க்கை நான்கு வகையாகும். கிடத்தல், இருத்தல், நிற்றல், நடத்தல். படுத்திருபோம்; எழுந்து உட்காருவோம்; நிற்போம்; நடப்போம். இந்த நான்கைத் தவிர வேறு கிடையாது. யுகங்கள் நான்கு. கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம். நிலம் நான்கு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பெண்மைக்கு நான்கு. அச்சம், மடம், பயிர்ப்பு, நாணம். ஆண்களுக்கு புருஷார்த்தங்கள் நான்கு. அறம், பொருள், இன்பம், வீடு. எழுத்து நான்கு. உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து, ஆயுத எழுத்து. சொல் நான்கு பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல். பாட்டு நான்கு. வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா. எல்லா மொழிகளிலுமே நான்கில்தான் அடக்கம். சுழி, பிறை, நேர்க்கோடு, குறுக்குக்கோடு. இரண்டு நேர்கோடு போட்டால் "ப" இப்படி போட்டால் "H" . இப்படிப் போட்டல் "L". இப்படிப் போட்டால் "ட". அறிவுக்குச் சிந்தனை. "அ" கரத்தில் இந்த நான்கும் வைத்தார்கள்.

"மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்" - தொல்காப்பியம்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு" - திருக்குறள்.

"அகர உயிர்போல் இறை" -திருவருட்பயன்.

"அகரமு மாகி, அதிபனு மாகி" - அருணகிரியார்.

சில நுட்பங்களையெல்லாம் தொல்காப்பியத்திலே மிக அற்புதமாகச் சொல்லியிருக்கின்றார். நான்கு நிலங்களை வகுத்தார். அந்த நிலங்களுக்குத் தெய்வத்தைச் சொன்னார். நிலத்தை ஒப்புக் கொண்டால் தெய்வத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.. இங்கு உயர்ந்த நிலை எது? மலை. "தணிகை மால் வரையே" என்பது கந்தபுராணம். வரை என்றால் மலை. வரை என்றால் கோடு. எதுவரை நீங்கள் போனீர்? ஆகவே, மலைதான் உயரமாய் இருக்கும். அந்த உயர்ந்த இடத்தில் முருகப்பெருமானை வைத்துச் சொல்கின்றார் தொல்காப்பியர்.

"சேயோன் மேய மைவரை உலகு" தமிழைச் சொல்ல வந்தவர், தமிழின் நிலத்தைச் சொல்ல வந்தவர், அந்த நிலத்துத் தெய்வத்தைச் சொல்லுகின்றார்.

- இப்படி தமிழின் பெருமையை உயர்த்திக் காட்டியவர் வாரியார். ஒருமுறை ஒரு சொற்பொழிவில் ஒரு பாடலைப் பாடி இந்தப் பாடல் முழுவதும் ஒரு மாத்திரையிலேயே எழுதியிருக்கிறார் அருணகிரிநாதர் என்று சொன்னார்.

அந்தப் பாடலில் "அம்மை" என்று ஒரு சொல் வந்தது. சொற்பொழிவு முடிந்து திரும்புகையில் "சுவாமி! "அம்மை" யில் வரும் "ஐ" இரண்டு மாத்திரையாயிற்றே!" என்று ஒருவர் கேட்டார். அதற்கு உடனே வாரியார், "ஆம், "ஐ" க்கு 2 மாத்திரைதான், ஆனால் இந்த 'ஐ'க்கு பெயர் ஐகாரக் குறுக்கம், எனவே ஒரு எழுத்து தான்" என்று விளக்கினார்.

இப்படி தமிழை கரைத்துக் குடித்த வாரியாரைக் கண்ணதாசன் ஒருமுறை சந்தித்த போது,

"தாமரைக் கண்ணால் பெண்கள் நோக்கினர்" என்று கம்பர் கூறுகிறார். "தாமரையோ செவ்வண்ணம் உடையது. மது அருந்தியவருக்கும், அளவுக்கு அதிக சினம் கொண்டவருக்கும் அல்லவா சிவந்த கண்கள் இருக்கும். அது எவ்வாறு பெண்களுக்குப் பொருந்தும்?" என்று கண்ணதாசன் கேட்டார்,

அதை "தாம் அரைக் கண்ணால்"' என்று பிரித்துப் பொருள் கொள்ளலாம் அல்லவா?" என்று விளக்கம் கூறக் கவியரசர் அசந்து போனார்.

வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் "கிருபானந்த "லாரி" வருகிறது" என்று கிண்டல் அடித்துத் தட்டி வைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார்,அவர் தங்கியிருந்த வீட்டுச் சன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. "வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியெல்லாம் அகற்றுங்கள்!" என்று தன் தொண்டர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் பெரியார்.

வாரியார் ஆன்மிகச் சொற்பொழிவாற்றினாலும் சரி இலக்கியச் சொற்பொழிவாற்றினாலும் சரி தமிழ் வளர்ச்சிக்கும், தமிழ் உயர்வுக்கும் முன்னின்றவர் என்பதை இன்றும் யாரும் மறுக்க முடியாது. இவரிடம் திருமணம் மற்றும் விழாக்களுக்கு அழைப்பிதழ் கொடுத்தவுடனே அவர்களுக்கு வெண்பா மூலம் உடனுக்குடன் வாழ்த்துப்பாடல் அளிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் தமிழ் மேல் பற்று கொண்டிருந்தார் என்பதை விட தமிழ் இவர் மூலம் பலரிடம் பற்றிக் கொண்டது என்பதே பொருத்தமானது.

எழுத்தாளர்

வாரியார் சுவாமிகள் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமில்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். இவரது திருப்புகழ் விரிவுரைகளைக் கேட்டு மகிழ்நத சிலர் திருப்புகழ் விரிவுரையை நூலாக எழுதி உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். வாரியார் 1936-ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவுக்காக வடலூர் சென்றிருந்தார். அங்கு சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதினார். அதற்காக "கைத்தல நிறைகனி" என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் "திருப்புகழ் அமிர்தம்" எனும் மாத இதழைத் தொடங்கினார். இந்த இதழை சுமார் முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். இந்த இதழில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதினார். இந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாக வெளியிடப்பட்டன. திருப்புகழ் அமிர்தம் என்ற இதழ் பலருடைய வாழ்க்கையைத் திருத்தியிருக்கிறது என்று வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள அவரது வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சில நிகழ்ச்சிகளையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவையனைத்தும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெளிவான நடையில் அமைந்தவையும் ஆகும். இவர் 150க்கும் அதிகமான நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் போன்றவை சிறப்பு பெற்றவை. இவரது சொற்பொழிவுகளில் 83 குறுந்தகடுகளாகவும் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத் தகுந்தது.

தமிழ்த் திரையுலக ஈடுபாடு

வாரியார் எழுத்துத் துறையில் மட்டுமில்லாது தமிழ்த் திரைப்படத்துறையிலும் தன்னைச் சேர்த்துக் கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" எனும் படத்திற்கு வசனங்கள் எழுதியதுடன் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப "துணைவன்", "திருவருள்", "தெய்வம்", போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை அளித்தார். இந்தப் பட்டம் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவராலும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பட்டம் என்பதும் இங்கு குறிப்பிடக்கூடியது.

இறை வழிபாடும் இறை சேவையும்

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கிய பாம்பன் சுவாமிகள் சண்முகநாதனை மும்முறை நேரில் தரிசித்த மகான் என்று போற்றப்படுபவர். இவரை சென்னையில் ஒரு கீற்றுக் கொட்டகையில் சந்தித்து ஆசி பெற்ற வாரியார் ஒருமுறை விரிவுரை செய்வதற்காக திருநாரையூர் சென்றிருந்த போது, விடியற்காலை பாம்பன் சுவாமிகள் தம்முடைய கனவில் தோன்றி சடக்கரமந்திரம் உபதேசம் செய்ததாக இவரின் வாழ்க்கை வரலாற்று நூலில் எழுதியுள்ளார்.

வாரியார் சுவாமிகள் வாழ்நாள் முழுவதும் கோயில், பூசை, சொற்பொழிவு என்று ஆன்மிக வழியில் சரியாகச் சென்று கொண்டிருந்தார். ஒருநாள் கூட முருகனுக்குப் பூசை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சு கூட முருகா! முருகா!! என்றுதான் இருந்தது. தனி மனித ஒழுக்கத்தையும், பல நல்ல உபதேசங்களையும் வழங்கிய வாரியார் அதன்படி வாழ்ந்தும் காட்டினார். கார்த்திகை மாதம் சோமவாரம் (திங்கட்கிழமை) தொடங்கி ஐந்து சோமவாரம் உபவாசம் (உண்ணா நோன்பு) இருந்ததுடன் இவ்விரதத்தை தனக்குத் தெரிந்தவர்கள்
Kripananda Variar performing daily puja
அனைவரையும் இருக்கச் செய்தார்.

உலகில் எங்கெங்கு முருகன் கோவில் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று முருகனை வழிபட்டவர் வாரியார். ஆனாலும் வயலூர் முருகன் மீது அவருக்கு தனி ஈடுபாடு உண்டு. வாரியார் தனது சொற்பொழிவை தொடங்கும் போதெல்லாம் "வயலூர் எம்பெருமான்…" என்று கூறிதான் சொற்பொழிவை தொடங்குவது வழக்கம். இது போல் இவரிடம் நினைவுக் குறிப்புக் (ஆட்டோகிராப்) கையெழுத்து வேண்டுவோரிடம், "இரை தேடுவதோடு இறையையும் தேடு" என்ற வாக்கியத்தையே பெரும்பான்மையாக எழுதிக் கையெழுத்து இடுவார் .

ஒரு முறை பழநி ஈசான சிவாச்சாரியார் என்பவர் லியோ டால்ஸ்டாய் எழுதிய "நாம் என்ன செய்யவேண்டும்?" என்ற நூலை வாரியாரிடம் தந்தாராம். அந்த நூலைப் படித்த வாரியாருக்கு பொன், பொருள் உலகம் என்ற பற்று பறந்து போயிற்று. தான் அணிந்திருந்த தங்க நகைகளை காங்கேய நல்லூர் முருகனுக்குக் காணிக்கை ஆக்கினார். திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் திருப்பராய்த்துறை எனுமிடத்தில் பிரம்மச்சாரி ராமசாமி என்பவர் தொடங்கிய இராமகிருஷ்ண குடில் எனும் அமைப்புக்கு இவர் பல ஆண்டுகள் நன்கொடை வசூல் செய்து கொடுத்து வந்தார். அனாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்து வரும் இந்த அமைப்பு இன்று வளர்ந்திருப்பதற்குக் காரணம் வாரியார் சுவாமிகள்தான். ஏழை எளிய குடும்பத்து மாணவர்களின் கல்விச் செலவுக்காக இவர் பல நன்கொடைகளைக் கொடுத்திருக்கிறார். இவர் பிறந்த காங்கேயநல்லூரில் பல கல்வி நிறுவனங்களைத் தொடங்கியிருக்கிறார். இன்றும் இவருடைய பெயரால் மேல்நிலைப் பள்ளிகள் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக நிறுவியிருப்பதைக் காணலாம்.

வாரியார் சுவாமிகள் ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காது. வயலூர் முருகன் கோயில், மோகனூர் அருணகிரி அறச்சாலை, வடலூர், காஞ்சி ஏகாரம்பரநாதர் ஆலயச் சுற்றுச்சுவர், சமயபுரம் கோயில், வள்ளிமலை சரவணப் பொய்கை ராஜகோபுரம் போன்ற பல கோயில்கள் இவரது திருப்பணிகளைப் பெற்றிருக்கின்றன.

"இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில் கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப் பெருமக்கள் கேட்கிறார்கள். விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன; இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம். உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம் பெருக்குகிறோம். இவை விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும்" என்று இறைவழிபாட்டிற்கான காரணத்தைச் சொன்னார் வாரியார்.

மறைவு

உள்நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, லண்டன், சுவிட்சர்லாந்து என பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவைகளைக் குறிப்பிடலாம். இப்படி பல பட்டங்களையும் விருதுகளையும் வாங்கிச் சேர்த்த வாரியார் சுவாமிகள் 1993 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக் கொண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7 ஆம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8 ஆம் தேதியில் அவர் சமாதி நிலையடைந்தார்.




A.பாலமுருகன் காமக்கூர்
Rajan Hamanthkumar
Rajan Hamanthkumar
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012

PostRajan Hamanthkumar Wed Dec 05, 2012 7:24 am

அருமை நண்பரே நம்மை நாம் தேடுவோம் தொடர்ந்து எழுதுங்கள்..



அன்பு மலர் பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும் ஐ லவ் யூ
ஐ லவ் யூ உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும் அன்பு மலர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 10:55 am

செங்குந்தர் துகில் விடு தூது

காப்பு

தேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்
சூடுந் துகில்விடு தூதுக்குக்-கூடுஞ்சத்
தைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்
கைம்முகனும் சண்முகனுங் காப்பு.
நூல்
முருகன்பிறப்பு

திருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்
சூர்மன்னன் வாதைத் துயர்க்கிரங்கிப்-பேர்மன்னு
வானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்
ஆனனங்க ளாறா யணிநுதலின்-நீள்நயனம்
......ஆறிற்கெம.......பலவர்க்கச்
சீறு மழற்பெருக்காய்த் தேவரஞ்சி-ஊறுறுங்கால்
அஞ்சலென்று.......பொறியை வானதியில்
அஞ்சா வணத்துள் மாவுசெய்யச்-செஞ்சுடர்கள்
ஆறுமகவ.......ங்கா......க்
கூறுநறு முலைப்பா லுண்டிருப்ப-ஏறின்மிசை
அம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்
செம்மையுட னொன்றாகச் சேர்ந்தெடுப்பச்-செம்முகங்கள்
ஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை
கூறுமழ காங்குழந் தைக்கு-மீறுந்
திருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி
இருவர் மகிழ்வாகியிருப்ப-நெருநலுமை
.......ந்தப் பொறிப்பயத்தால் பயந்தோடச்
சந்தப் பதச்சிலம்பு தாக்குதலால்-சிந்தும்
நவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை
நவசத் திகளாய் நணுகச்-சிவனுற்றுப் 10

பார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்
சேர்த்திடுமே யம்மீகைத் திறலோடும்-ஆர்த்து

.........த்தலைவன் முதலாய் நவவீர
ரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க .........
.........யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்
உம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் .........
முருகன், பிரமனின் செருக்கை அடக்கியது

ஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்
தீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் - தாமருளால்
முருகன், சிருட்டித் தொழில் செய்தது

எவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்
அவ்வரனுக்கோத வவர்வந்து - வவ்வுசிறை 15
சிவனால், பிரமன் சிறை மீண்டது)

விட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு
மட்டறியாத் தாரகத்தின் வான்பொருளைச்-சுட்டியுரை
முருகன். தகப்பன்சாமி ஆகியது

என்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்
அன்றுரைக்க முத்தையனா மென்று-நன்றுரைத்துத்
முருகன், சக்திவேல் பெற்றது

தந்தைதா யும்மகிழ்ந்து சக்திவடி வேலுதவிப்
பைந்தடந்தேர் பூதப் படைகூட்டி-வந்துததித்த
முருகன், சூரபதுமனை வென்றது

.........நீயுமே சூர்முடித்துத் தேவர்சிறை
யாதரவாய் மீட்டுவா வையவென - ஓதலினால்
மாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்
மாயவே லேவி மயேந்திரத்தைப்-போயடர்க்க 20

கந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி
செந்நிதங்கிச் சூர்பதுமுன் சிங்கமுகன்-மைந்தர்பலர்
பானுகோபன் முதலாம் பற்றலர்கள் நாற்படையின்
ஊனுடல்போய்ப் புள்விலங்குண் டோடவே-வானவர்க்காய்
முருகன்,தெய்வானையை மணந்தது

சங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்
சிங்காரங் கண்டு தினமகிழுஞ்-சங்கிராம
செங்குந்தர் பரம்பரை இதுவென்றல்

வீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்
தீரவாகைப் புயத்துச் செங்குந்தர்- பாராட்டி
ஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்
காலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-மோலைவிட்டோர் 25
செங்குந்தரின் கடவுள்பற்று

கயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்
மயிலவன்பொற் பாதமறவார்- இயல்பறிய
தோராமலாண்டுதொறுஞ் சூரசங்கா ரத்திருநாள்
சீராய் நடாத்துந் திறலினார்- ஓரெழுத்தும்
அஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்
அஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்- ரஞ்சிதமாய்
செங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்

தொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு
மண்டலம் நாடாளு மரபினார்- கொண்டிடுநூல்
மேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்
நோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச் 30

செய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்
நெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர்- வையகத்தில்
சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலைசெய்யும்-நேரிலொட்டக்
கூத்தரெனப் பேர்பெறுசெங்குந்தப் புலவர்தமிழ்
சாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர்- ஆத்திபுனை
சொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன
வல்லானை வென்று வரிசைபெற்றோர்- நல்லநவாப்
பட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்
அட்டலட்சு மீகரனா மாண்சிங்கம்- பட்டமுள்ள 35

கந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்
சந்ததியில் வந்த தளவீரன்-சந்ததமும்

தேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்
வாசற்பிர தானிமெச்ச வாழுவோர்-வாசபுகழ்

கற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்
சொற்பெரிய தம்பித் துரைமகிழ்வோர்-நற்பரமாம்

முத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி
நத்திரைசு வேத நதியுளார்-எத்திசைக்கும்

கோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு
வாலப்பன் கோயில்முதல் வாழுநகர்-மாலைப்பூஞ் 40

சீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி
மூர்க்கமத யானை முனைப்புரவி-யார்க்கும்

முரசுதிற லானை முறையால் நாட்டாண்மை
அரசுசெய்து வாழு மதிபர்-வரிசை

பதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய கீர்த்தி
முதலியர்க ளாகவந்த முன்னோர்-கதலிகள்சூழ்

சோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்
வாழருள்செங் குந்தர்மெச்ச வாழ்ந்திடுநாள்-ஏழையேன்

கொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்
பங்குமையா ணானைக்காப் பஞ்சநதி-பொங்குபுகழ் 45

சாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பவநாசம்
ஏற்றவலஞ் சுழிப்பட் டீச்சுரமும்-போற்றி
திருவேரகத்தில் முருகன் திருக்கோலக்காட்சி

திருவேரகமுந் தெரிசித்துச் செவ்வேள்
உருவே ரகசிவத்தி லுன்னிக்-குருவாழ்

மலைமேல் பொற்கோயில் வலமாக வந்து
தலைமேல் குவிகரமுஞ் சாற்றி-கொலுமேவும்

சுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்
விக்கிரமப் பிரகாசவடி வேல்கரமும்-உக்கிரமயில்

வாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்
மோகன விநோத முதிரழகுங்-கோகனகத் 50

தாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்
தோளின் மணிமாலைத் துகிலழகும்-வேளிடத்தில்

சோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்
ஆடகப்பூம் பாதத்தி லர்ச்சனையும்-நாடகத்தில்
கன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன்(பு) கைகுவித்து
சென்னியர்க ளாடுவதுஞ் சேவைசெய்தேன்-என்னிதயங்
கண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்
பண்குளிர்ந்த பாமாலை பாடினேன்-தண்கமல
பாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்
வேதம் புகல்வாரும் வேண்டுவாரும்-போதமுடன் 55

ஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்
ஞானந்தழைக்க நவில்வாரும்-மோனமே
கொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்
கண்டுதொழுதேன் களிப்பானேன்-பண்டருள்சேர்
நாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த
பாவால் துதித்துப் பதம்பணிந்து-தேவா!
சரவணபவா! சாந்த னேகந்தா!
குரவணியு நீபா! குமரா!-குரவா
முருகா! குழகா! முதல்வா! திருமால்
மருகா! விரகா! மதுரா!-பெருகும்
அருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா!
கருணைபுரி பாத கமலா!-பிரணவனே!
செந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்
இந்துலவு காவரையு மேரகமுங்-கந்தமுதல்
குன்றுதோ றாடல்செயுங் கோவே! உயர்தேவே!
மன்றுதோ ராடியுமை மைந்தனே!- நன்றருள்கூர்
ஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்
தொந்தி வயிற்றானைத் துணைவனே!-விந்தைமதி
ஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா!
ஆறெழுத்தி னுட்பொருளா மையனே!-பேறுதவும் 65

பைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய
செங்குன்ற மேமுதலாந் தெய்வதலங்-கொங்கில்
நிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்
அலையா கிரியி லடியேன்-தலைமீதில்
வைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி
மெய்த்தபதச் சொல்லுணர்த்தும் வித்தகனே!-கைத்தலத்தால்

வேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்
தாதைக் குபதேச சற்குருவே!-நாதன்முதல்
மூவர் புகழுமுனைச் சூரசங் காரா!
தேவர்சிறை மீட்ட சேவகனே!-சேவலுயுர் 70

துள்ளு மயில்வீரா!சுடர்வேற் கரகமலா!
வள்ளி தெய்வானை மணவாளா!-தெள்ளுதமிழ்
கும்பமுனிக் குரைத்த கோமானே! நக்கீரன்
வெம்புசிறை விடுத்த வீரியனே!-அம்புவியில்
சம்பந்த ராகிச் சமண்நீக்கித் தெய்வசைவ
விம்பந் தழைக்கவந்த வேதியனே!-நம்புஞ்சீர்
நித்தனே! நிமலனே! நிட்களனே! சற்குணனே!
சுத்தனே! அத்துவித சூக்குமனே!-வித்தகனே!
ஆதித்தி யானந்த அதீதபர மானந்த
சோதியா! ஞானச் சொரூபமே!-நீதியருள் 75

காரணமே! இன்பமே! காமியமே! சோபனமே!
பூரணமே! அண்ட புவனமே!-ஆரணமே!
பூதமே! கட்புலனே! புண்ணியமே! பாக்கியமே!
நாதமே! விந்துவே! நாயகமே!-கீதமே!
சத்துசித் தானந்த தற்பரமே! சிற்பரமே!
முத்திக்கு வித்தே! முழுமுதலே!-தித்திக்கும்
ஞானப் பசுந்தேனே! நல்லமுதே! கற்கண்டே!
மோனச் செழும்பாகே! முக்கனியே!-தியானிக்கும்
சற்பத்த வத்சலனே! சைதன்னிய மெய்ப்பொருளே!
கற்பித்த நீயன்னைக் காத்தல்கடன்-அற்புதனே! 80
முருகனிடத்து வேண்டுதல்

வேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்
தேறவென்னைக் காத்தருள் செய்யென்று-கூறியே
முருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்

சன்னிதியிற் போற்றித் தலைவாசஞ் செய்திடலும்
இன்னருள்சேர் தேசிகராய் என்கனவில்-முன்னியே
அன்னைதந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே
என்னை வினாவ எடுத்துரைத்தேன்-முன்னே

வினையின் வலிக்கவியான் வீணர்களைப் பாடி
உனைமறந்து நாயே னுழன்றேன்-கனவினும்
முருகனிடத்து வரம் வேண்டுதல்

உன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க
பொன்பொலியும் வாழ்வு புகழீகை-இன்பம் 85

தவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா!
புவனகர்த் தனேஎன்று! போற்ற-அவனோடு
முருகன் அருள் கூறுதல்

அவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை
எவர்கட்கு மீவ தியல்பாம்-அவையறிந்து
பைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்
நந்துணைச்செங் குந்தரிடம் நண்ணினால்-முந்துமவர்
சிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்
தந்தருள்வோ மென்றிறைவன் தானனுப்ப-வந்துடனே
கும்பகோணம் வணங்கல்

கும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்
சம்புவளர் கின்றமற்றத் தானங்கள்-நம்பனருள் 90

மாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்
தேமகிமை சேர்வீர சிங்கவனை!-கோமுதன்மை
சாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து
சேரன்பர் ரமடியார் சேவைசெய்து-பேரன்பாய்
திருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்

நாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்
பாகேஸ்வரி யைப்பணிந் தேற்றி-யோகீசர்
மெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்
அய்யர் மடமுங்கண் டடிவணங்கி-துய்யபுகழ்
முந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்
செந்திருவா ரூர்நாகை தில்லைநகர்-பந்தர்வளர் 95

காழிமா யூரங் கடவூர்வே தாரணியம்
ஏழிசைசேர் வேளூ ரிடைமருதம்-சோழவள

நாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு
காட்டின் வழியிற் கடிதேகிக்-காட்டுகின்ற

நற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்
சிற்சரன பங்கயத்தைச் சிந்தித்துச்-சற்சனரும்

மாதவர் சொர்ண மடத்தி லகத்திய
நாதர்தன வர்த்தனியை நான்பணிந்து-நீதமுள்ள

காத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்
வார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர் 100
அரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற
பெரியநா டென்றும் பெயராய்ப்-பரிவுபெறு

மன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா
டின்னார் குவாகமெனு நாடு-நன்னாட்டில்

மங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்
துங்கசெயங் கொண்ட சோழபுரம்-தென்கருப்பூர்

மன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்
நன்றருள் குவாகமெனு நாட்தனிற்-றென்றலங்காப்

பொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்
மன்னு கொடுக்கூர் மருதூருந்-துன்னுமலர் 105

கானகலா வாரியங் காவ லிலையூரும்
ஆனகல்லாத் தூருமிடைக் குறிச்சி-மானதிசேர்

வேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்
ஆண்டிமடம் விளந்தை யாதியாய்-நீண்டபதிப்

பேரியல் நாட்டாண்மை பெரியதனக்காரர்
காரியக் காரார் கர்ணீகர்-ஊரும்

உறவின் முறையாரை யோலைவிட்டுக் கூட்டித்
திறமையாய்த் திட்டமிட்டுச் சேர்ந்து-நிறைசபையோர்

பூஞ்செடிசுழ் சோலைபொது மண்டபந் தன்னில்
காஞ்சீபுர மென்னக் கதித்திருந்து-வாஞ்சையுடன் 110

தந்தப்பல் லக்குத் தலைமைநாட் டார்முதலோர்
கந்தப்பு ராணமுதல் கல்விபயின்-றிந்தப்பார்

மாராசர் மெச்சு மரியாதை ராமனெனத்
தீரா வழக்கைத் தெரிந்துரைத்துப்-போரார்

குடங்கை வலங்கையெழில் விருதுச் சண்டை
திடங்கொள்கச்சிக் கோலைவிட்டுத் தீர்த்தும்-அடங்கார்

நதிர்வைத்துக் காண நவசித்திர மான
சதிரிற் கொலுவாஞ் சமையம்-சதுர்மறைதேர்
தெய்வா லயத்துச் சிவமறையோர் நீங்கள்
செய்வான் பிரசாத மீண்டுதவ-செய்வேள்வி 115

அந்தணர்க ளக்கதையு மண்ணலடி யார்நீறுந்
தந்தருளி வாழிச் சதிர்மொழிய-நந்தவனம்
எண்ணுதிருப் பணிக ளேற்றகலியாணமுதல்
புண்ணியங்கட் கெல்லாம் பொருள்சொரிந்து-வண்ணமணிக்
கட்டழகா மம்பலவர் கட்டளையார் விரதகிரிக்
கட்டளையார் தென்பழனிக் கட்டளையார்
காணவளர் சீர்விளந்தைக் கட்டளையார்-வாணர்புகழ்
கோவிலில்வாழ் சண்முகப்பேர் கொண்டசிவ ஞானியன்பர்
தேவையில்வாழ் ஆறுமுகத் தேவருடன்-மேவியபேர் 120

இன்பருளு மாண்டிமடத் தேகாம்ப ரய்யருடன்
அன்பருள் குவாகமன்று ளாடுமையர்-முன்புபெறு
ஞானப்பிர காசமுதல் நல்லோர்க்கிந் தட்டாவ
தானப்பிர தாபவித்தைச் சாதனையோர்-கானம்வல்லோர்
நட்டுக் கடாத நயினார்பொன்னம்பலப்பேர்
இட்டவன்வே டங்குமாரிக் கைகற்றோர்-திட்டமுள்ள
இந்திரசா லங்களுமா யேந்திரசா லங்கள்முதல்
தந்திரமாம் வித்துவ சனர்முகழ்-செந்தமிழோர்
மாலைபல பாட வரிசைத்திரள் கொடுக்க
ஓலையெழு தக்கணக்கு முத்தரிக்க-வாலையர்கள் 125

ஆடிநிற்கப் பஞ்சதொனி யார்ப்பரிக்கக் கட்டியர்கள்
பாடிநின்று சாமிபராக் கென்ன-கூடியே
மஞ்சள் பாவாடை வயிராக்கியர் சூழப்
பஞ்சவர்ண மாம்விருது பாங்கிலங்க-குஞ்சமும்வெண்
சாமரையு மேவிசிறி தானசைத்துக் காளாஞ்சி
காமரச மாதர் கையிலேந்த-தாமரைப்பூ
வஞ்சிமுதல் எண்வர்களும் வந்திலங்க வாணர்கலி
அஞ்சி யுலத்தரிட மாயோட-இன்சொல்
உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்போர்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழென்-றுரைத்ததும் 130

நல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்றென்ற-சொல்லுமெண்ணித்

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை ந்ன்றென்று-தோன்றி

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவரென்று-இசைவோர்

சபையரசர் மெச்சு துரைமுக நேராஞ்
சபைபுகுந்தேன் கண்டு தயவாய்-உபசரித்து

வாருமிரு மென்று மகிழ்ந்தா சனங்கொடுத்தார்
ஊருமுங்கள் பேருமென்ன வோதுமென்றார்-சேர்கொங்கில் 135

சேலம்வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
வேலரரு ளாலே விருதுகவி-நாலுதிக்கும்

நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசைசெய்து-கூட்டருள்சேர்

வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன்-ஆரவயல்

கச்சியில்வா ழேகாம்பர் காமாட்சி புத்திரரே!
உச்சிதமா மேயமிசை யுள்ளோரே!-மெச்சுகந்த

சாமிதுணை யாய்ச்சூர சங்காரஞ் செய்துசுரர்
காமியத்தைத் தந்தருளுங் காரணரே!-பூமிபுகழ் 140

ஆயிரத்தெண் மாமுடிசிங் காதெனமொட் டக்கூத்தன்
பாயிரசொற் கீந்த பரிசோரே!-தூய

அபிமான பூஷணரென் றாரும் புகழும்
அபிதான மோங்கு மவையிர்!-சுபமேவும்

வெல்லரிய வல்லானை வென்று விருதுபெற்ற
வல்லவரே! கல்விசெல்வம் வாய்த்தவரே!-தொல்லுலகில்

குன்றில் விளையாடுங் குமார குருபரனை
என்று மறவா வியல்பினரே!-என்றுசொல்லி

ஆய்ந்து தமிழ்பாடி யரங்கேற்ற வுமகிழ்ந்து
வாய்ந்தபணி செம்பொன் வரிசையுடன்-ஈ(ய்)ந்தருளும் 145
துகிலின் சிறப்புரைத்தல்

சோமன் தலைப்பாகு துப்பட்டிச் சால்வையங்கி
மாமடவார் சேலைமுதல் வர்க்கமே!-பூமறையோன்
மாலின் கலையும் வரைமான் திருவாணி
மேலின் கலையுமுந்தன் மேற்குலமே!–மாலயன்தேர்
அண்ணா மலையார் அணிமுடிமேற் சோதிதந்து
கண்ணாற் கண்டோற்குக் கதிகொடுத்தும்-வெண்ணீற்றான்

ஆடும்பொன் னம்பலத்தி லண்டபுவ னந்துதிக்க
மூடுந் திரையாகி முத்திதந்தும்-பாடுகின்ற
வாணி யிசையினிரு மாமுனிவர் கந்தருவர்
பாணர்கையில் யாமுறையாம் பாக்கியமே!–வீணொருவன் 150

வாதி லருணகிரி வாக்கினால் வேலன்மயில்
மீதில்வர வுந்திரையாய் மேவிநின்றாய்!–தீதிலா
செம்புடவை யாகிச் சிவனடியா ரைச்சேர்ந்து
கும்பிடவும் பெற்ற குலக்கொழுந்தே!–நம்புமறைச்
சீரோது மீசன்முதல் தேவர்கொடி யாய்த்திருநாள்
ஆரோ கணக்கொடியு மாகிநின்றாய்!–பேரான
தேருக் கலங்காரந் தெய்வத் தலங்காரம்
ஊருக் கலங்கார மோங்குவதும் - யாருலகில்
மன்னர்க் கலங்காரம் மால்யானை வெம்புரவி
அன்னவர்கள் பல்லக் கலங்காரம்-வன்னலட்சம் 155

தண்டினிற் கூடாரந் தளகர்த்தர் கூடாரங்
கொண்டதுரை மக்கள் கூடாரந்-திண்டொருகு
மெத்தைமேற் கட்டிக்குடை வெற்றிக்கொடி சுருட்டித்
தத்துபரி வீரர் சவுந்தரமும்-நித்தவரும்
சாரியலங் காரஞ் சமுகவலங் காரமவர்
பாரியலங் காரமுமுன் பாக்கியமே!–வீரியமாய்
மாப்பிளையும் பெண்ணு மணக்கோல மாகவே
கோப்பழகு காட்டுங் குறிப்புநீ!–பூப்பொலியும்
கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல்நீ! கற்பில்லா
துற்புணர்ச்சிக் கள்ளியர்க்குந் தோழமைநீ!–நற்பருவ 160

வேசியர்கள் மெத்தமெத்த வேடிக்கை செய்துநித்தங்
காசுபறிப் பதுமுன் கட்டழகு!–தாசியர்கள்
சிற்றிடையில் தாழ்த்தி திருத்தி யுடுத்துவதும்
மற்றுமுலை காட்டி மறைப்பதுவுஞ் - சற்றே
நெகிழ்வதுங் கண்டிளைஞர் நெட்டுயிர்பாய்ச் சிந்தை
நெகிழ்வது முந்த னிறமே!–மகிழும்விலைக்

கன்னியர்கள் மென்துடைமேல் காம னார்மனையில்
முன்னரிடுந் திரையாய் மூடியதை–மன்னர்
தெரிசனங்கள் கண்டணைந்தோர் செம்பொன் முடிப்பு
வரிசைகொடுப் பதுமுன் வாய்ப்பு!–சரசகுண
மங்கையர்மே லாசைகொண்டு மாப்பிளைமார் கெஞ்சிநின்று
செங்கையினாற் றொட்டிழுக்குஞ் செல்வமே!–கொங்கை
குடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்
படத்தினிழல் காட்டும் படமே!–வடத்திரள்சேர்
ஏகாச மாக விளமுலையி லெந்நேரம்
வாகா யணைந்திருக்கும் வங்கணமே!–பாகின்மொழி
கொன்னியோ ருகுத்துடுக்குங் கோதையர்க்குங் காமுகர்க்குஞ்
சன்னதலீ லைக்கிசைந்த சம்பிரமமே!–நன்னுதலார்
முக்காடு போட்டு முகமினிக்கிக் கண்மிரட்டு
மிக்காயந் தொழிற்கினிய மென்றுகிலே!–முக்காலும் 170

மாதர் குளிக்கும்நறு மஞ்சளிலே நீதோய்ந்தால்
காதல் மதிமயக்கிக் கண்பறிப்போய்!–நோதலினால்
தாய்க்கிழவி தான்மகிழத் தாதிமா ரேவல்செய்ய
வாய்க்குமலர் மெத்தையின்மேல் வைத்திருந்து–வாய்க்கிணங்க
முத்தமிட்டுக் கொஞ்சி முலையணைத்து லீலைசெய்து
மெத்தவுன்மே லாசையென்று வேண்டுவதும்-எத்தியர்கள்
பொன்வகையைக் கண்டுசெய்யும் பூரிப்பா மத்தனையும்
உன்வகையைக் கண்டாலு முண்டாகும்-தன்வகையால்
தேவடிமார் செய்யுந் திருக்குகளுந் தாய்க்கிழவி
காவலென்றுந் தூரமென்றுங் காய்ச்சலென்றும்-நோவுவகை 175

பத்தியங்கள் சொல்லிப் பசப்புவது முன்பணையம்
அ(ஸ்)த்தரொக்கம் வந்நதென்றா லாணைகளுஞ்-சத்தியமாய்
வைத்திருக்கு மாப்பிளைக்கு வார்த்தைப்பா டென்றுசொல்லும்
அத்தனையு முன்னா லடங்குமே!–சத்தசுரா
பாகொழுகுஞ் சங்கீத பாடல்வித்தை யாடல்வித்தை
லாகுகர்ண வித்தை லாகுவித்தை–மோகசுக
வித்தைபல கற்றலு மேனியழ கானலுந்
தத்தைமொழி தேன்போற் சமைந்தாலும் - முத்துமணி
பொன்னா பரணங்கள் பூண்டாலும் வேசியருக்
குன்னாலே மெத்தவழகு குண்டுகாண்!–எந்நாளும் 180

ஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்
ஆனகலைல யான வசீகரமே!–மேனியணை

ஆணும் பெண்ணுக்கு மழகா யரணாகிப்
பூணு மபிமான பூஷணமே!–நாணகல
தாருவனத் தாரெனவே தங்குமயல் பெண்கள்செயல்
நேருமிடை நீங்கி நெகிழ்ந்துசொல்வாய்!–சோரும்
உடுக்கை யிழந்தவர்கை போலமற் றாங்கே
இடுக்கண் களைவது நட்பென்று–அடுத்து
தவழ்ந்து விழுமுலையைத் தாங்குவாய்! நீசற்று
அவிழ்ந்துவிழி லக்கைவந் தணைக்கும்-நவின்றிடுங்கால் 185

பொன்னைவிட்டு நீங்கலாம் பூந்துகிலே! பூவுலகில்
உன்னைவிட்டு நீங்கி உலவுவரோ?–சன்னசம்பா

அன்னமுநீ யும்நலமா யாவியுடற் கேறினால்
பொன்னணிமேற் பின்பாசை பூண்பதுகாண்!-இந்நிலத்தில்
மானிடத்தா ரானவர்க்கு மானங்காக் கும்பொருட்டாய்
மானிடத்தான் கற்பித்த வஸ்துவே!–கானவித்தை

பாட்டில் பறிப்போர்பல் வித்தையோ ரும்வல்ல
வாட்டில் பிலுக்குவதுன் வர்ணணையே!–மேட்டிமையாய்

பாடங்கள் செய்யும்பல் பேச்சாய் பொன்பறிப்போர்
வேடம் பலிப்பதுமுன் வெடிக்கை!–ஓடியெங்கும் 190
தேடிவரும் ரூபாயும் செம்பொன் வராகனுமே
மூடிமுடி வதுமுன் முந்தாணி!–மோடியினால்
கால்வித்தை யென்றாலுங் கட்டழகா! உன்சிறப்பால்
மேல்வித்தை யாகவிளங்குமே–நூல்விதியால்
பஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்
விஞ்சப் பிரசங்கம் விதித்தாலுஞ்-செஞ்சொலினால்
வல்லகலைல யைமதித்து உதவார்மேல் விளங்கும்
நல்லகலை யே!யுனக்கே நல்குவார்-சொல்லும்
சரளியலங் காரசுர சங்கீதம் பாடி
திரள்வரிசை வாங்குவ துன்சீரால்!–(வில்) குரல்போல் 195

மீட்டுதம் பூருக்கும் விதக்கூத்து பொம்மல்கூத்
தாட்டுதற்கு முந்தன் அலங்காரம்!–பாட்டிசைசேர்
மெட்டுகளா லெட்டுவகை வித்தையில்பெண் ணாட்டுவிக்கும்
நட்டுவர்க்கு முன்னாலே நல்வரிசை!–நட்டுயர்ந்த
கம்பமே லாடுவித்தை காரூட வித்தைமுதல்
தம்பனவித் தையிந்திர சாலவித்தை–சம்பிரமமாம்
ஆட்டமெல்லாங் கண்டுகொடா ரம்மம்மா வுன்னுடைய
மேட்டிமைகண் டேதருவார் மேல்வரிசை!–காட்டும்
பவளச்சிர மாணிக்கம் பச்சை பதுமராகந்
தவளமுத்து நீலமுதல் சாற்றும்-நவமணியின் 200

மாலைவிலை மதிக்கும் வர்த்தகரு முன்சிறப்பால்
மேலதிக மாக விலைமதிப்பார்!–சால
உடன்கொடுப்பார் மேலணியு முன்போல் வரிசைக்
கடன்கொடுப்பார் தாமுமுன்னைக் கண்டு–திடம்பெறவே
உன்சிறப்பா லாரு முபசரிப்பார் நீயிளைத்தால்
முன்சிரிப்பார் சற்றும் முகம்பாரார்-பொன்சிறப்பாய்
எத்தில் சிறந்திடுமால் எவ்வுலகுங் காப்பதுக்காய்
பத்துப் பிறப்பான் பான்மைபோல்-வித்துருவாய்
பஞ்சாகி நூலாய்ப் பலபாடு நீபடுதல்
அஞ்சா துயிர்காக்க வல்லவோ?–மிஞ்சுசல்லா 205

துப்பட்டா சுக்கழுத்தஞ் சோடு நெடுமுழமும்
செப்புங் கிழிவு சிலம்பிரியும்-இப்படியே
கோடியினில் நீகொண்ட கோலமெடுத் துரைக்கக்
கோடிகவி சொன்னாலுங் கூடாது–நீடுபுகழ்
வர்த்தனராஞ் செங்குந்தர் வாழ்பதிக்குத் தாரறத்தில்
வர்த்தகரை யெல்லாம் வரவழைப்பாய்!–வைத்திருந்த
செம்பொன் முடிப்பெடுத்துத் தேசதே சத்தினிற்போய்
சம்பளவாள் விட்டுத் தருவித்து–டம்பமதாய்
மூட்டைகட்டிக் கூட்டி முழுதுங் கணக்கெழுதி
மாட்டுமே லாள்மேலும் வைத்துவந்து–நாட்டமுள்ள 210

எட்டுத் திசையிலும்போய் எட்டும்வியா பாரத்தால்
நட்டமொடு லாபமுமே நாட்டிவைப்பாய்!-அட்டதிக்கில்
மங்களமாங் கிட்டாம ரலக்கர் முதல்தீவு
சிங்களவங் காளமுதல் சீமையில்போய்-தங்கமணி
கப்பல் வந்துசேரந்து கரைதுறையில் வர்த்தகருக்
கொப்பந்த மாயெழுது மோலையுடன்-இப்புவியில்

எங்கெங்கு முள்ளஎழில் தொழில்செய் வர்த்தகர்க்கு
மங்கங்கே சாளிகையோ டாளனுப்பிச்-செங்குந்தர்

வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்
பூசலிட்டு மேன்மேலு போட்டுவைத்துப்-பேசு 215

நெடுமுழமே யாதியாய் நெய்யுந் தினுசைக்
குடிமேல் கணக்கெழுதிக் கொண்டு-கடிதுகட்டி

ஆயத் துறையார்க ளாதாய முண்டென்று
வாயைத் திறந்து வழிபார்க்க-நேயமுடன்

வாடகைக் காரர் வசத்தில் பொதியனுப்பிப்
பீடுபெற வேதரகர் பின்புசென்று-பாடுகவிக்

குத்தரங்கள் சொல்லிக் கொடுப்பார் தமைத்தடுக்கு
மைத்திபர்போற் றீங்குசொல்வோர் வாயடக்கி-எத்தினமோ

பார்வையிடு வார்க்கும் பாங்கித்து வாசியர்க்குஞ்
சேர்வைபெறக் காதில்மெலச் சேதிசொல்லிப்-போர்வைப்பூ 220

பச்சடந் தாம்பூலம் பனிநீர் தெளித்துதவி
மெச்சிவரா கன்கொடுக்க மீண்டபின்னர்-அச்சரக்கை

தேங்குபுக ழாற்சலவை செய்துமடித் தாலையிட்டுங்
காங்குதுவைத் துங்கிடங்கில் கட்டிவைத்தும்-பாங்குபெற

கப்பல்மே லேற்றிக் கடலேற்றிப் பொன்மணிகள்
குப்பல் குப்பலாகக் குவித்திடுவாய்-செப்பமுடன்

கொண்டகணக் குங்குடி நிலுவையும் லாபங்
கண்டகணக் குமெழுதிக் கட்டிவைத்தும்-மண்டுதொகை

சொன்ன தரகுத் தொழில்முதலி மார்களுக்குஞ்
சென்னைபட்டணங் கூடல்புதுச் சேரிமுதல்-மன்னுபுகழ் 225

மாறாக் கரைதுறையில் வர்த்தகர்க்கும் வாழ்வுதவி
ஏறாத்தீ வெங்கும்போய் ஏறுவாய்!-வேறாக

வெள்ளைக்கருப் புச்சிகப்பு மேலெழுத்துப் பட்டஞ்சில்
விள்ளு மனேகவித மானாய்-வள்ளலே!

வெண்பட்டுச் செம்பட்டு மிக்ககரும் பட்டுமஞ்சள்
வண்பட்டுப் பச்சைவகைப் பட்டும்-எண்பட்ட

பொன்சொரிந்து கொள்ளும் புதுச்சால்வை யங்கிவகை
மின்சரிகைப் பாகு விதங்களுடன்-மென்சரிகை

சேலைசந் திரகாவித் திரள்பாகு வர்க்கமுறு
மாலைகண்டைச் சாதிரா வத்திரமும்-மேலெழுத்துச் 230

சாதிராச சேலை தலைப்பா குறுமாலை
சோதி ரவணிதமாஞ் சோமன்முதல்-சாதிவகை
கட்டுவர்க்க முந்தங்கக் காசுவர்க்க மேசொரியும்
பட்டுவர்க்க முமுனது பந்துவர்க்கம்-இட்டழுத்து
குச்சிலங்க மாதர் குவிமுலைமேல் வர்ணவர்ணக்
கச்சுரவிக்‍ கையுமாய்க்கா வல்கொண்டாய்-மிச்சவலை
வச்சிரகண் டைச்சேலை மதுரைச்சல் லாச்சேலை
செச்சைப்பூ சரபந்தச் சேலையென்றும்-இச்சையுள்ள
கோலத்துப் பட்டென்றுங் குங்குமப்பூப் பட்டென்றுஞ்
சேலத் தெழுத்துநகைச் சேலைவகை-வேலையுயர் 235

மாதளம்பூச் சேலையென்றும் மல்லிகைப்பூச் சேலையென்றுஞ்
சீதளமாந் துத்திப்பூச் சேலையென்றும்-மீதெழுத்து
காந்திபெறு மாதிரிப்பாக் கத்துச்சல் லாச்சேலை
வேந்தர்புகழ் சந்திரகா விச்சேலை-சேந்த
கலசபாக்கச் சேலை காஞ்சிபுரச் சேலை
பலர்புகழுந் தஞ்சைநகர்ப் பாகு-நலமிகுத்த
வெங்களூர்ச் சால்வை விதளுருப் பச்சடமுந்
துங்கதிரு நெல்வேலிச் சோமனுடன்-தங்கு
கருப்புரஞ் சுச்சோமன் காஞ்சிபுரச் சோமன் (துரைத்)
திருநாகீச் சுரத்துச் சோமன்-திருத்தமுள்ள 240

வண்ணவண்ணச் சேலை மதித்தபட்டில் சோமன்முத
லெண்ணமுடி யாதெழில் படைத்தாய்!-நிர்ணயமாய்
கற்குங் கலைபோல் கணக்குக் கடங்காய்நீ!
விற்குங் கலையேயுன் விந்தைமெத்த-சர்க்கரைபோல்
லோகம் பிரபஞ்சம் ருசிப்பித்துக் கண்மயக்கு
மோகப்பிர பஞ்சமுந்தன் முக்கியமே!-தேகத்தில்
உள்ளும் புறமும் உயர்கலையே! நீசேர்ந்தால்
நள்ளு மிகபரமும் நன்மைசெய்வாய்!-கிள்ளைமொழி
ஆயர்மட மங்கையர் நீராட்டி லுனைக்கவர்ந்து
மாய னுதவி மயல்தீர்ந்தான்-ராயசேய் 245

கண்டீரந் நளன்முன் காட்டிலுனைக் கிழித்துப்
பெண்டீரை விட்டுப் பிரிவானான்-பண்டு
துரோபதையார் மீதிலுன்னைத் தொட்டுரிந்த தாலே
விரோதியராய் மன்னரெலாம் வீந்தார்-பராவும்

கலிங்கமென்றும் பேராய்க் கணிகையரைச் சேர்ந்து
கலிங்கம்வள வர்க்குதவிக் காத்தாய்-துலங்கும்
சகலகலை ஞானகுரு சாமியரு ளாலே
சகலகலை யே!யுன்னைச் சார்ந்தேன்-புகலுவன்கேள்!
தலைவன் தலைவியின் ஊர் பேர் உரைத்தல்

என்னிறைவன் சாமிமலை யேறிவலம் புரிந்து
சன்னிதியி னின்று சரண்வணங்கி-மின்னுசுடர் 250

வேலுமயி லும்புயமு மென்முகமும் வீரதண்டைக்
காலுமழ குங்கண்டு கைதொழுது-மேலவனை
பாடிநின்ற போதில் பரதவிதத் தாலொருபெண்
ஆடினாள் மாமயில்போ லப்பொழுதே-நாடினேன்
தலைவன், தலைவி தன்னை வருத்தினாள் என உரைத்தல்

சக்கணியும் பெக்கணியுந் தாதியரோ டாடிநின்று
மைக்கண்வடி வேலால் வருத்தினாள்-அக்கணிக்கு
தலைவன், தலைவியை வியந்துரைத்தல்

வாசவனிந் திராணி வதனந்தி லோத்தமையும்
நாசியரம் பையரும் நாரிதுடை-கேசமால்
சாதிபது மினியாந் தன்மையினாற் செம்பதும
மாதை நிகராய் மதிக்கலாம்-வேதவயன் 255

மாமதனன் கண்டுருக மார்பில்வைக்க மேல்வளர்ந்த
தாமதனக் கும்பந் தனமிரண்டுங்-காமனிடை
ராகமத நூலின் ரதிகேளி யாகும்ரதி
நாககன்னி மார்வடிவே நங்கையல்குல்-ஆகுமென்று
கிட்டரிய பெண்ணரசின் கேசாதி பாதமுள்ள
கட்டழகைக் கண்டுருகிக் காதல்கொண்டேன்-நிட்டையினர்
தலைவன், காதல் கொண்டது ஊழ்வினைப் பயன் எனல்

யோகியரை மோகியராய் ஊழ்வினையால் செய்வதுவும்
மோகியரை யோகியராய் மூட்டுவதும்-மாகுகனே!
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீரென்னும்-நூலுரையும் 260

கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடியார் கண்ணே வுளவென்று–கொண்டிரங்கி
துன்பம் பயப்பன இவையெனல்

கல்லார் பெருங்கூட்டங் கற்றார் பிரிவுபொரு
ளில்லா ரிளமை யிடார்செல்வம்-பொல்லாதே!
தலைவன், முருகனருளால் தலைவியை யடைவேன் எனல்

கல்விதந்த வேலர் கதித்தசெல் வமுந்தருவார்
செல்வி யிவளையினிச் சேர்ப்பரென்று–நல்வழியாய்
சீராய் முருகரருள் செய்தபடி செங்குந்தர்
பேராம் வரிசையுனைப் பெற்றுவந்தேன்-நேராக
யோக்கியமும் பெற்றேன் உவகைபெற்று வாழ்சகல
பாக்கியமும் பெற்றேன் பரிவுபெற்றேன்-தேக்கியசீர் 265

பெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசைகொண்டு
கண்ணுக்குக் கண்ணிச்சைக் கட்டழகை–எண்ணியெண்ணி
தலைவன், தலைவிபால் துகிலைப் புகழ்ந்து தூதுவிடல்

அவ்வேள் கணையா லனுதினமும் வாடினேன்
செவ்வேள் கருணையினாற் செங்குந்தர்-இவ்வேளை
தந்த பணியில் தனத்தில் துகில்வகையில்
செந்தளிர்ச்சல் லாச்சரிகைச் சேலையே!–சுந்தரர்க்காய்
பாவை யரசி பரவையிடந் தூதுசென்ற
பூவைபங்க னாகவுன்னைப் போற்றுவேன்-பூவனிதை
காமரத வல்குல் கதலித் துடையிடைமேல்
தேமல்முலை பொன்னுடல்மேல் சேர்ந்தணைய–பாமதுர 270

தேனாள்பால் தூதுவிட்டேன் சேர்ந்துனைப்போல் நான்சேர
மானாளை நீயழைத்து வா.
நேரிசை வெண்பா

எங்குந் துதித்ததிரு வேரகத்தில் வேளருளால்
செங்குந்தர் தந்தசெழுந் துகிலே! - இங்கிதமாய்
தூதுநினை விட்டேன் துடியிடைசேர்ந் தென்காதல்
மாதுதனை நீயழைத்து வா.
வாழ்த்து

செகம்வாழி! குகன்தலங்க ளாறும் வாழி!
சேவல்மயில் வேல்வாழி! சிவந்த வாறு
முகம்வாழி! யாறிருதோள் மலர்த்தாள் வாழி!
முல்லைநகை யானைவள்ளி முயங்கி வாழி!
சுகம்வாழி! கடப்பமலர் மாலை வாழி!
தொழுமடியார்........................
முகம்வாழி! மழைவாழி! செங்கோல் வாழி!
வளர்புகழ் செங்குந்த ரெங்கும் வாழி!

செங்குந்தர் துகில்விடு தூது முற்றும்.
பகுப்பு:

சமய இலக்கியம்[right][left][center]



A.பாலமுருகன் காமக்கூர்
gokul2500
gokul2500
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 29/11/2012
http://in.linkedin.com/in/gokul2500

Postgokul2500 Wed Dec 05, 2012 11:09 am

ஒட்டக்கூத்தர் அருளிச்செய்த
"ஈட்டியெழுபது"



source:
கவிச்சக்கிரவர்த்தியாகிய
ஒட்டக்கூத்தர் அருளிச்செய்த
"ஈட்டியெழுபது"
மூலமும்-உரையும்§
இஃது ஆநூர்-சுப்பராயமுதலியார் குமாரர்
எதிராஜமுதலியாரவர்கள்
சென்னை பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது.
துர்முகிவருட ஆனிமாதம்
§ [உரை சேர்க்கப் படவில்லை]
---

கணபதிதுணை.
வெற்றிவேலுற்றதுணை.
முருகன் துணை.

ஈட்டியெழுபது,

கடவுள் வாழ்த்து.

நாட்டிலுயர்செங்குந்தநாயகர்மீதிற்சிறந்த
வீட்டியெழுபதினைப்பாடக் - கோட்டிற்
பருமாவரையதனிற்பாரதநூறீட்டுங்
கரிமாமுகன்கழலே காப்பு.

நாடென்ப துலகின் மேற்று.

பாயிரம்.

பூவார்புவனையிற் சோமன்றரும் பழிபோனபின்பு,
நாவாணர்போற்றிய 'நாடகங்கேட்ப நலமுடனே',
யாவாணர் செங்குந்தராயிரத் தெண்டலைகொய்திரத்தப்,
பாவாடையிட்டதுலகமெல்லாம் புகழ்பாலித்ததே.

நூல்.

பூதலம்வாழ்ககுந்தர்பொலிவுடன்விளங்கநான்கு,
வேதமெந்நாளுமோங்கவேதியர்பசுக்கள்பல்க,
மாதவர்வளவன்செங்கோல் வளமைகுன்றாதுநிற்க,
வோதமே யறையும்பொன்னி யுறந்தையுஞ் சிறக்கமாதோ. (1)

இஃது மங்கலமுதலிய சப்தபொருந்தங்களுமமைய வாழ்த்துக்கூறியது.

கோட்கவிகொண்டுமாக்கள் கொடுந்தமிழ்கூறநீத்துத்
தாட்கவிப்புதியவாட்டந்தலைக்கடைதுரந்துசாட
வாட்கவிகொண்டமன்னன்வளவனுமகிழநாமே
நாட்கவிபாடுநாட்போலிருப்பதுபெரியநாடே. (2)

இஃது இவ்வீட்டியெழுபதென்னும் பிரபந்தத்தைக்
கல்வித்திறமுடைய சோழனு மகிழ்ந்து கேட்டா னென்பதை
விளக்கியது.

விடங்கமேழாதிவீதிவிடங்கமாரூர்வெண்காடு,
நடங்கொளுந்தில்லைமூதூர் பஞ்சநன்னதிசாய்க்காடு,
மிடங்கொள்மாகாளமேழு மிடைமருதூர்செங்காடுங்,
தொடங்கியதருமவாட்சிச் செங்குந்தர்தொகுதிவாழி. (3)

இஃது செங்குந்தத்தலைவர்களிச் சிவத்தலங்களுக்கெல்லாந்
தருமகர்த்தர்களென்பதை விளக்கியது.

பாதநூபுரத்திற்றேவிசாயைகண்டமலன்கொண்ட
காதலாற்கருப்பமாகுங்கதிர்நவமணிமாதர்க்கண்
மேதகுவீரத்தோடுமென்மீசையோடும்வந்த
மாதவவீரவாகுத்தலைவரித்தலைவர்மாதோ. (4)

இஃது காந்தபுராணத்திலுள்ளபடி சுப்பிரமணியக்கடவுள்
வீரவாகுதேவர் முதலிய நவவீரர்கள், இலட்சங்கணங்கள்
இவர்களுற்பத்தி கூறியது.

பிறந்தவொன் பதின்மர்குந்தப் பெருமையாம் பேசமாட்டோம்,
பறந்தன கழுகும்பாறும் பயிரவிகாளியஞ்ச,
மறந்தமவுணராட்ட மடங்கினமகிழ்ச்சியால்வாய்,
திறந்தனவலகையீட்டஞ் செய்யவாய்ச் சிறுவரோடே. (5)

இஃது செங்குந்தத்தினது வல்லமை கூறியது.

ஓதியவேள்வியினுவப்பநாரதன்
போதவேதகர்தனைப்பொங்குதீத்தர
வேதனைப்படுப்பதைவிரைந்துகட்டியே
சேதனக்குதவினதிருச்செங்குந்தமே. (6)

இஃது செங்குந்தர் முருகக்கடவுளுக்கு ஆட்டுக்கடாவை
வாகனமாக உதவினமை கூறியது.

பொதியமால்வரைக் குறுமுனி தேறவும் பொருள்சொன்ன,
மதியையாறென வுடையவோர் மூவிருவதனத்தான்,
கதியையாற்றியுங் குணத்தொடு பழகியுங்காணா,
விதியைமேவலர் நடுங்கிடத்தளையிடுமிளிர்குந்தம். (7)

இஃது செங்குந்தர் பிரமனுக்கு விலங்கிட்டமை கூறியது.

வனமுறுவாசமாவைகல்விட்டியா
சனமுறவிண்ணிடந்தனிவைகுந்தமு
மினனுறுபங்கயமூவர்க்கெய்தவே
சினமுறுதாருகற்செறிசெங்குந்தமே. (8)

இஃது செங்குந்தர் தாருகசம்மாரஞ்செய்தமை கூறியது.

பூட்டியதேரோடும்பொலிந்தபாநுவை
யீட்டியதொட்டிலினிறுக்குமைந்தனை
மூட்டியசமரிடைமுடித்துமாசறத
தீட்டியவீரர்கைச்சிறந்தகுந்தமே. (9)

இஃது இத்தன்மையையுடைய பாநுகோபனையும்
இக்குந்தஞ் செயித்ததெனக் கூறியது.

பங்கமிலரிமுகப்பஃறலைக்கிளை
மங்கவே நூறியோர்வாகைமாலையை
யெங்கள்வேற்படைதனக்கென்றுசூட்டியொண்
செங்கடம்பணியுமால்செய்யகுந்தமே. (10)

இஃது சிங்கழகாசுரன் வதை கூறியது.

வனப்புறுமிளவலும்வரச்செவ்வேற்குகன்
கனப்பகலாறினிற்கலாபமேறியே
யினப்புகழ்சேவலங்கொடிதற்கேற்றுவெஞ்
சினப்புலிக்கொடிதரச்செறிசெங்குந்தமே. (11)

இஃது சூரபதுமாசுரன்வதை கூறியது.

குறையினைக்கடவுளர்கூறக்கேட்டவர்
துறையினைநிறுவியேசூர்தடிந்துநான்
மறையினைவழுவறவளர்த்துத்தேவர்தஞ்
சிறையினைமீட்டதுதிருச்செங்குந்தமே. (12)

இஃது செங்குந்தர் தேவர்சிறை மீட்டமை கூறியது.

தாருவுஞ்சுரபியுந்தவளவேழமுந்
தாருடைப்புரவியுஞ்சசியுங்கைம்மிசைப்
போருடைவச்சிரவாளும்பொன்னகர்ச்
சீருறும்படியவுண்செறிசெங்குந்தமே. (13)

இஃது தேவேந்திரனுக்குப் பொன்னுலகச்சீர் நிலை
பெறச்செய்த்து செங்குந்தமென்பதை விளக்கியது.

முன்பகையாவையுமுடித்துக்கூரெயிற்
றன்பகையாவையுந்தடிந்துசந்ததம்
பின்பகையில்லதாப்பெற்றிசெய்ததா
மொன்பதினோர்கரத்தொளிருங்குந்தமே. (14)

இஃது செங்குந்தராகிய நவவீரர்கள் தேவர்பகை யாவையும்
ஒழித்தனரென்பதை விளக்கியது.

வெள்ளிமால்வரைசூழ்காப்பு மிளிர்மணிச்சிகரக்காப்பும்,
பள்ளிமால் வரையின் காப்பும்பைம் பொனாபரணக் காப்பும்,
வள்ளிதாக் கைக்கொளென்று மகிழ்நீற்றுக் காப்புமிட்டுத்,
தெள்ளிதா யுமையாடந்த செங்குந்தம் போலுமுண்டோ. (15)

இஃது செங்குந்தர் கைலைமுதலிய விடங்களைக்
காக்கப்பெற்றமை கூறியது.

சலம்பிரியாதசூட்டுச்சாவற்கேதனமெஞ்ஞான்றும்,
வலம்பிரியாத செவ்வேட் குறுதுணையாக மன்னுட்,
குலம்பெபறவந்தாரென்றங் கொடியுமைதந்தவீட்டி,
நலம்பெறுமிந்தக்குந்தர்ப் பரிசுபோனாட்டிலுண்டோ (16)

இஃது குந்தர்கள் சிவனது மரபினரென்றும் உமையவளாற்
கைவேலைப்பெற்றனரென்றுங் கூறியது.

பருப்பதமேரகம்பரங்குன்றம்பழம்
பொருப்பதமாவினன்குடிசெந்திற்பொது
விருப்பெனக்குன்றுதோறாடலாமெனுந்
திருப்பதிதமிலமர்செய்யகுந்தமே. (17)

இஃது செங்குந்தம் இத்தலங்களில் விசேடமாகப்
பூசிக்கப்படுமென்பதை விளக்கியது.

தேடுவார் வலமாய்வந்து தெரிசிப்பார் சென்னிமீது,
சூடுவார்மலரேதூவித் தொழுதகைகூப்பிநிற்பார்,
பாடுவார் காவென் றெம்மைப் பரிவினானந்தமாக,
வாடுவார்குகன்கைச்செவ்வேற் கருந்துணைக்குந்தமென்றே. (18)

இஃது குந்தத்தினது மகிமை கூறியது.

ஆலங்காட்டினிலரனுடனன்றுவாதாடுங்
கோலங்காட்டிய காளிதன்கொற்றம்போய்வெள்கப்
பாலங்காட்டிய பன்மணித்தாளமேபறித்துச்
சீலங்காட்டிய குந்தர்நற்பெருமையார்தெரிப்பார். (19)

இஃது செங்குந்தர் காளியின் கைத்தாளத்தைப்
பறித்தமை கூறியது.

செங்களம் பொருதிய திருந்தலாருர
வங்கமே மண்மிசையாக்கியாவியைச்
செங்கதிர் வழியிடைச் செலுத்தித்தேவர்க
டங்களை வான்புகத்தருஞ் செங்குந்தமே. (20)

இஃது செங்குந்தம் தம்மோ டெதிர்த்த பகைவரைச்
சுவர்க்கத்தி லடைவிக்குமெனக் கூறியது.

பரகதிவேள்வி பண்ணுமிருடிதன் பான்மைபாரா
வரகதி தந்தையேவும மரரைமடியநூறி
யிரதமோடிவுளி வேழமியாக தானத்துக்கீந்து
சிரமணி மகுடம்பெற்ற செங்குந்தர் போலுமுண்டோ. (21)

இஃது தவத்துக்கிடையூறு செய்தார் யாரேனும் அவரையச்
செங்குந்தர் வருத்துவ ரென்பதை விளக்கியது.

அம்பாழிமூழ்கியொரு கற்பமெலாங்
கிடைக்கினுமென் னழலினின்று,
வெம்பரமே வெளிக்காலுண்டுட்காலை
வெளியில்விடா திருந்தாலென்னே,
வம்பாருமிதழியணி வேணியனார்வேதமலை
வலம்வந்தீண்டுஞ்,
சம்பாதிக்கமுதளிக்குஞ சயக்குந்தம்
போல்வினவத் தாராவன்றே. (22)

இஃது செங்குந்தம்f தபோபலத்தைக் கொடுக்குமென்பதை
விளக்கியது-

உருக்கொடுபணியாதாரை யுளத்திலைந்தெழுத்தையுன்னிப்,
பெருக்கொடு தவளநீற்றைப் பேணியே யணியாதாரைத்,
தருக்கொடு நின்றுகண்ணீர் ததும்பமுன்னாடாதாரைத்,
திருக்கோயில்வலம்வாராரைச் சினத்தொடு பொருஞ்செங்குந்தம். (23)

இஃது செங்குந்தத் தலைவர்கள் சிவசமய பரிபாலரெனக் கூறியது.

கூவிளையிதழிதும்பை கொண்டரிச் சித்தபேர்க்கு,
மூவர்தம்பாடலோதி முன்னின்று பணிந்தபேர்க்கு,
மாவலோ டைந்தெழுத்தை யகத்துள்ளே நினைந்தபேர்க்குந்,
தேவர் நாடாளவைக் குந்திருக்கை வேற்றுணைச்செங்குந்தம். (24)

இஃது செங்குந்தம் இவ்வாறு செய்த வடியார்களை
சிவலோகத்தை யாளவைக்குமெனக் கூறியது.

ஆலமார் மிடற்றாராடு மாடலேயாடலம்மை
யேலவார் குழலாளங்கைத் தாளமேதாளமேந்துஞ்
சூலமாகுவதன்னான்கைக் சூலமேசூலமற்றிக்
கோலம் வாழ்வீரர்கையிற்குந்தமே குந்தமாகும். (25)

இஃது குந்தத்திற்கு ஒப்பின்மை கூறியது.

ஆதிநாளுமைய வளளித்தகுந்தமே
சாதிநாலுவப் புடன்றலைக்கொள்குந்தமே
காதிமேவலரையுங் கல்லுங்குந்தமே
கோதினம்பாடலே கொள்ளுங்குந்தமே. (26)

இஃது குந்தப்பெருமை இத்தன்மைத்தெனக் கூறியது.

கருதலர் பொடிபடக் கருதுங்குந்தமே
விருதுடைச்சூர் முடிவெட்டுங்குந்தமே
பொருதனிப் புலிக்கொடி புனையுங்குந்தமே
தருதலத் தருவெனத்தருஞ் செங்குந்தமே. (27)

இதுவுமது

கைலைமால்வரையையுங் காக்குங்குந்தமே
யயிலை நற்றுணையென வாக்குங்குந்தமே
வெயிலைமன்மணிகளின் மிளிருங்குந்தமே
மயிலைவாகனமென வாக்குங்குந்தமே. (28)

இதுவுமது

இந்திரனயன் மாறேவர்யாவர்க்கு முதன்மையாக
வந்தபான்மையினாற் சூலமழுப்படையத்தனார்க்கு
முந்தியநாமந்தானு முதலியராகையாற்செங்
குந்தர் சந்ததிக்குமப்பேர் முதலியரென்றுகூறும். (29)

இஃது செங்குந்தர்களுக்கு முதலியரென்னு நாமம்
வந்ததற்குக் காரணங் கூறியது.

முந்தைநோன்பினான் முருகவெண்முசு
குந்தனுக்கொன்பான் குமரரைத்தர
வந்தவீரரிவ்வகிலம் வென்றிசை
தந்தகுந்தரித்தகு செங்குந்தமே. (30)

இஃது முசுகுந்தச்சக்கரவர்த்தி தவஞ்செய்து வீரவாகுதேவர்
முதலிய நவவீரர்களைத் துணைவராகப் பெற்றனென்பதூஉம்,
அந்த நவவீரர் சந்ததி வருக்கங்களே இந்தச் செங்குந்தத்
தலைவர்க ளென்பதூஉங் கூறியது.

விண்டுமார்பத் திடையிருத்தி வேலைக்கௌரிபணிமாறப்,
பண்டுபூசித் திடுங்காலை யாகண்டலன்போய்ப் பாற்கடலின்,
வண்டுழாய்மாயனைவணங்கி வானிற்பழிச்சுந்தியாகரைமேற்,
கொண்டுபோந்துபாரின்முசு குந்தற்குதவுஞ செங்குந்தம். (31)

இஃது செந்குந்தத் தலைவர்கள் சத்ததியாகரையுங்
கொண்டுவந்து உலகத்தில் தாபித்தமை கூறியது.

பிள்ளையாருயிர்க் குறுந்துணையாத்தனிப்பேறெய்துங்,
கிள்ளையாரிவண் கொடுவரு கென்றுடலங்கீறிக்,
கொள்ளையாருயி ரெரிநரகுறவடுங்கூற்றுயிர்நனிசோர,
வள்ளியாவரு நடுக்கத்தந் திருமுகமே செலுத்தொண்குந்தம். (32)

இஃது செங்குந்தத் தலைவர்கள் கிளிப் பிள்ளையின் பொருட்டு
இயமனுக்குத் திருமுகஞ் செலுத்தினமை கூறியது.

வடிவேலெடுத்த மனுதுங்க
வளவன்றேவி வெதுப்பாற,
முடிவேள்வியிற்செந் தீத்தருகான்
முளைமாங்கனிக்காக் குடநாட்டைச்,
செடிவேரறுத்துச்சிறையிட்டுச்
சென்னிவியப்பத்திறைபோலக்,
கொடிவாண்முரசு களிறுபரி யிரதங்
கொடுக்குஞ் செங்குந்தம். (33)

இஃது செங்குந்தத் தலைவர்கள் கோனதேசத்தாரனை
வென்றமை கூறியது.

ஆழநீள்கடற் குமாங்கோரம்பிமேற் சென்றேயப்பாற்,
சூழ்திருச்செந்தூருற்ற சுபனென் பான்றுணையாக்கொண்டு,
வாழிராசாதிராச மன்னவன் மருவலான்ற,
னீழநாடொரு நாடன்னிற்றிறை கொண்டீண்டுற்றகுந்தம். (34)

இஃது செங்குந்தத் தலைவர்கள் யாழ்ப்பாண தேசத்தை
வென்றமை கூறியது.

மச்சநாடுடையகோமேல் வங்கநாடாளுமன்னன்,
குச்சரவரசற்காக சமரமேற் கொண்டுகொற்றக்,
கைச்சலியாமற்கொல்லுங்காலையிற்கௌதனென்பான்,
உச்சினிதொடங்கிப்போர்செய் குந்தம்போலுலகிலுண்டோ. (35)

இஃது கௌதனென்னுஞ் செங்குத்தத் தலைவன் உச்சினி
முதலிய தேசங்களை வென்றமை கூறியது.

இடைமரு தூரிற்சாப மேந்திய சிறக்கையானை,
புடைமரு தடியின்வீழப் பொருதியே புறங்கொடாது,
விடைமழுவுடையான்பாத மென்கமலத்திற்சேர்த்த,
படைமரு தன்கைக்குந்தம் போலினிப் பாரிலுண்டோ. (36)

இஃது படைமருதனென்னுஞ் செங்குந்தத்தலைவன்
சிறக்கையானென்று ம்ரசனை வென்றமை கூறியது.

கூளிபாறினமிடங்கொண்டுசுற்றவே
காளிசாதகரெலாங்களத்திலாடவே
வாளிதொட்டெழுமொருவங்கக்கோவைமுன்
றோளிணையாற்பொருந்துங்கைக்குந்தமே. (37)

இஃது செங்குந்தத் தலைவர்கள் வங்கதேசத் தரசனை
வென்றமை கூறியது.

வானைவென்று வரிசூழ்ந்த மண்ணைவென்றவுணரான,
கானைவென்றம்புராசிக் கடலைவென்றருங்கலிங்கன்,
சேனைவென் றலங்கன்மார்பஞ் செறியுமாமடங்கல்வையக்,
கோனைவென்றரியவாகை கொண்டெனத்திரியுங்குந்தம். (38)

இஃது செங்குந்தத் தலைவர்க்கு யாண்டு மெதிரின்மை
கூறியது.

செங்கோனடத்தும் வளவனிட்ட
சிங்காதனத்திலினிதிருந்த,
நங்கோன்கவியே கவியென்று
நாட்டிக்கவிபுன் களைகளைந்து,
வங்கோடீழங்கன்னாட
மாராட்டிரங்குச் சரஞ்சீனங்,
கொங்கோடெங்குந்தரத்திறையே
கொள்ளுமின்னார் செங்குந்தம். (39)

இஃதிச் செங்குந்தத் தலைவர்கள் ஒட்டக்கூத்தன்
கவியையே சிறந்ததாகக் கொண்டாரென்பதூஉம்,
ஐம்பத்தாறு தேசங்களையும் வென்று திறை
கொண்டாரென்பதூஉங் கூறியது.

கலிக்குறும்படு வளவனுக்குங்காதுசூர்
வலிக்குறும்படு தனிவாகைக் குந்தர்க்கும்
பலிக்கு நற்புகழெலாம்பாதியாதலாற்
புலிக்கொடி மரபிரண்டினுக்கும் போந்ததால். (40)

இஃது செங்குந்தர் மரபுக்கும் சோழன் மரபுக்கும்
புலிக்கொடி யுண்டெனக் கூறியது.

தென்னனைச் சேரனைச் சிறுமைசொல்லவு
மன்னனை வளவனை மகிழ்ந்துபாடவும்
பன்னருஞ் சாரதிபடைத்த பான்மைபோ
லொன்னலர்க்குள்ளினத் துற்றகுந்தமே. (41)

இஃது செங்குந்த்த தலைவர் சோழராஜன் பகைவரை
வெல்லுதற்குரிமை கூறியது.

சேல்வேறு புலிவேறாகுஞ்
சேதுவி னளைவாய்ச்சென்னி,
கோல்வேறில்லாமலோச்சிக்
கன்னியேகொள்வனென்றே,
மால்வேறுசிவன்வேறென்ன
வழுத்திடா வண்மைபோல,
வேல்வேறு குந்தம்வேறென்
றிருபொருள் விளம்பார்மேலோர். (42)

இஃது வேலுக்குங்குந்தத்திற்கும் வேற்றுமையின்மை
கூறியது.

பூமாலைகடப்பந்தாமம் பூண்மணித் தெரியல்செய்ய,
பாமாலைதன்னைக் கைக்கொள் முதலியர்பங்கதாக்கி,
மாமாலையொல்லார்காலில் வழிதுழிக்குடரின்மாலை,
தேமாலையாகச்சூடுஞ் செங்குந்தம்போலுமுண்டோ. (43)

இஃது செங்குந்தத்தின் பெருமை கூறியது.

பற்றினும்பற்றுஞ்சென்னி பறிக்கினும் பறிக்கும்பாச,
மெற்றினுமெற்றுங்கூற்றை யீரினுமீரும்வாரிச்,
சுற்றினுஞ்சுற்றுமண்டந் துகளெழச் செயினுஞ்செய்யும்,
மற்றினுங்குந்தம்போற்றா திருப்பவருளரோமண்மேல். (44)

இதுவுமது.

போற்றியோ போற்றியென்று புதுமலர்தூவிச்சீற்ற,
மாற்றியே வந்தியாம லடையலர் வாழ்ந்திருந்தால்,
காற்றென வூழித்தீயிற் கடலெனக் கொடியகோபக்,
கூற்றெனத் திரிந்துசோரிக் குளித்துடன் களிக்குங்குந்தம். (45)

இதுவுமது
இனி வல்லானை வென்ற பழவூர் வீரன் முதலிய
பன்னிருவர் புகழ் கூறுகின்றது.

சூட்டும்வீரவாகுவெனச் சொல்லும்பழுவூர்வீரனமர்,
மூட்டுங்கால மூழிவெள்ள மூடுங்காலமாகாதோ,
வேட்டங்காலில் வீழாதார் மேலுமுளரோவீதியுலா,
யீட்டுங்காலங்குந்தங்கண் டெழுமேகழுகுபருந்துகளும். (46)

இஃது பழவூர் வீரனென்னுஞ் செங்குந்தத்தலைவன்
புகழ் கூறியது.

காராமுருவமொழிந்துபொன்னின் கவினார்பழுவை வளம்பதியில்,
நாராயணனேவிக்கிரம நாராயணனா மென்னாதார்,
வாராவழிவந் தோமென்றேவாயிற்புல்லைக் கவ்விவந்தச்,
சேரார்சேரா நின்றுதொழச் செய்யுமன்னான் செங்குந்தம். (47)


இஃது பழவை நாராயணனென்னுஞ் செங்குந்தத் தலைவன்
புகழ் கூறியது.

இனிமாநிலத்திற் கண்டதில்லை
கேட்டேயிருத்த லன்றிபெரும்,
பனிமால்வரையுமைநாக
முன்பின்படைதானெடுத்தாலு,
முனிமாறுண்டோ நடுநின்று
முடிப்பான்கச்சித் தனியன்வட்டத்,
தனிமாநிழற்கீழ்ச்செங்குந்தஞ்
சரணாகதிக்கு வைகுந்தம். (48)

இஃது கச்சத்தனிய னென்னுஞ் செங்குந்தத் தலைவன்
புகழ் கூறியது.

உடலமண்மேலுயிர்விண்மே
லொல்லா ரொடுகவுதிரமொடு,
குடருங்கொழுவுங் கழுகோடுங்காள்ளை
கொள்ளப் பரிந்தூட்டு,
மடல்வெண்டாழை முகமலர
வாரிவாரித்திரைக் கரத்தால்,
கடல்வெண்ட்ரளவேயெறியு
மொற்றியூரன் கைக்குந்தம். (49)

இஃது செங்குந்தத் தலைவனாகிய வொற்றியூரனது
புகழ் கூறியது.

தளர்ந்தவருக்குத் திருவுருவந்
தன்னையடையார்க் கொருசிங்க,
மிளந்தையவர்க்குச் சிலைவேணல்லிசையாற்
பொற்பூதரமேயாம்,
வளர்ந்தசாலிவரம்பினில்வால்
வளைகண் முத்தந்தரும் வளங்கூர்,
களந்தையாதிநகரரசன்
கைக்குந்தம் போற்காணோமே. (50)

இஃது செங்குந்தத் தலைவனாகிய கனத்தூரசன்
புகழ் கூறியது.

கற்றிடங்கொண்டவர் கவின்சொற்கொள்ளுமே
யுற்றிடங்கொண்டபேர்க் குலகைநல்குமே
வெற்றிடங்கொண்டமே வலரைவீட்டுமே
புற்றிடங்கொண்டவன் பொலிகைக்குந்தமே. (51)

இஃது புற்றிடங் கொண்டானெனனுஞ் செங்குந்தத்
த்லைவன் புகழ் கூறியது.

மூளாவடவைச்சிகரகிரி
முடிகம்பிக்குமாறுதஞ்செந்,
தாளான்மடங்க வொருகூற்றந்
தனிமும்மதில்காய்ச்சிறுமூரல்,
வேளாருயிரைப் பேர்க்கவனற்
கண்ணும்விளங்குமுருத்திரனேர்,
கோளாந்தகனொண்டோளான்கைக்
குந்தம்வா கைக்குந்தமே. (52).

இஃது கோளாந்தக னென்னுஞ் செங்குந்தத்
தலைவன் புகழ் கூறியது.

புண்டரீகமே குவளையே தளவமே பூமாவே,
பிண்டியேபெறுஞ் சித்தசன்றன்குணம் பிழையாவென்,
கண்டவீர கண்டன் புலியூர்த் தனிகாத் தேசீர்,
கொண்டபள்ளி கொண்டான் கரதலத்திடைக்கொளுங்குந்தம். (53)

இஃது புலியூர் பள்ளிகொண்டானெனுஞ் செங்குந்தத்
தலைவன் புகழ் கூறியது.

குணமார்தருமத் தெவ்வேந்தர்
குலக்கோ ளரியே குலத்தருவே,
தணவாவண்மைச் சகம்பேசச்சகமே
தாங்கும்பூதரமே,
பிணவாவென்று பகரார்வாய்
பிளந்துசோரிப் பெரும்பூதக்,
கணம்வாய்நிரப்புங் குந்தன்போற்
காணோங்கேளோங் கற்றோரே. (54)

இஃது பிணவனென்னுஞ் செங்குந்தத்
தலைவன் புகழ் கூறியது.

மிண்டிடாமன் மேவலீர்விளம்பிடாமலோருமின்
றொண்டிடாமல் வாழ்வதெங்ஙன் சூரபன்மன்பட்டிடக்
கண்டவீரவாகு தேவர்கால் வருங்குலத்துமன்
வண்டுலாவுகண்டியூரன் வயிரவாகுகுந்தமே. (55)

இஃது கண்டியூர னென்னுஞ் செங்குந்தத்
தலைவன் புகழ் கூறியது.

மூத்தமுதுகுன்றக்குரிசின் முதிருமணவைப்பாராளன்,
பாத்தனென்னுமணியன்கைக் குந்தங்கொடுத்துப்பகரவே,
பூத்தமார்பத்தார்பறித்துப்பூழிபடவேவீழ்ந்திறைஞ்சிக்,
கோத்துச்செங்கை மலர்கூப்பிக் குறுகார்சிறுகிவரக்கண்டான். (56)

இஃது முதுகுன்ற மணியனென்னுஞ் செங்குந்தத்
தலைவன் புகழ் கூறியது.

பஞ்சம்வெம்பத் தரும்பனையே நாவான்மிகவேபாடாது,
தஞ்சைவேம்பனைப்புகழ்ந்தே மதுமுன்செய்ததவமேயா,
மெஞ்சவெளிதோவூழியுருத்திரன்கைக்கொளுமூவிலைவேலே,
வஞ்சமாயை யவதரித்த திவன்கைக்குந்தவரவாமால். (57)

இஃது தஞ்சை வேம்பனென்னுஞ் செங்குந்தத்
தலைவன் புகழ் கூறியது.

வல்லான்றன்றிருத்தேவி மங்கலியம்
பிழையாமன்மடிதானேற்றிங்,
கெல்லோருமங்கலியப்பிட்சையிடு
மெனத்தாள்வீழ்ந்திரப்பவேண்டிக்,
கொல்லாமல்விடுதல்புக ழெனக்கருதியோ
கற்பின் கொண்டவாய்மை,
நல்லார்களிருந்தவையின் புகழ்கைக்கோ
காத்ததுகொனஞ்செங்குந்தம். (58)

இஃது செங்குந்தத் தலைவர் வல்லானென்னுமரசனைச்
செவித்தமை கூறியது.

எல்லாக்காலத்தினு மொன்றேற்பவருக் கில்லையெனுஞ்,
சொல்லானதுகற்றுஞ் சொல்லறியாரேந்துகுந்தம்,
வல்லானைக் கொல்லாமன்மனை விக்குமங்கலிய,
முல்லாசத்திடனளிக்கு முதவியதொன்றறிந்தேமால். (59)

இஃது செங்குந்தத்தலைவ ரிரப்பவருக் கெக்காலத்துங்
கொடுப்பாரென்பதை விளக்கியது.

முத்தமிழிராசராசேந்திரன்முன்னமே
சுத்தவீரத்திறந்துலங்குதற்கொரு
பொய்த்தலைகொடுத்தலிற்புகழ்பெறாதென
மெய்த்தலைகொடுத்தனவீரக்குந்தமே. (60)

இஃது செங்குந்தத்தலைவரது வீரத்திறங் கூறியது.

பைந்தமிழ்க்காவலர்பகரும்பாடலார்
கந்தவேடான்மகிழ்கைலைக்காவலார்
வந்தவீரப்படைத்தலைவர்வந்துழி
சிந்தவேகழுத்துடற்செகுத்தகுந்தமே. (61)

இதுவுமது.

தில்லைமூதூர் நடஞ்செய்யுமாலயத்
தொல்லையிற் பொறித்திடுமுழுவைமுத்திரை
யெல்லையினாவலொன் பதின்மர்க்காக்கியோர்
வல்லயிற்றுணையொடு மருவுங்குந்தமே. (62)

இஃது குந்தத்தின் பெருமை கூறியது.

எந்தையாமம்மை பாகத்திறைவனை வணங்கியாமே
பைந்தமிழ்ப்பரணி செய்தப் பாடலோடந்தமாக
வந்தமாமடவாராட வரியணையிருந்தவீரர்
குந்தமேகுந்தம்வேறு குந்தமுமுளதோகூற. (63)

இஃது செங்குந்தத்தலைவர் கூத்தனென்னுந் தம்மாற்
பாணிப்பிரபந்தங் கேட்டனரென்பதை விளக்கியது.

வரச்சிங்காதன வளவர்தம்பிரான்
றரச்சிங்காதனந் தன்னிலேறியே
துரைச்சிங்காதனந் தொழுங்கவிக்கிடுஞ்
சிரச்சிங்காதனச் சீர்செங்குந்தமே. (64)

இஃது செங்குந்தத்தலைவர் கூத்தனென்னுந் தமக்கு
ஈட்டியெழுபதென்னும் பிரபந்தத்தைக் கேட்கச் சிரச்சிங்காடன
மீட்டமை கூறியது.

வேட்டுமானாடரிதாயவேணியர்
சூட்டுதாள்வாரிசத்துணைகளேத்தியே
யாட்டுகசென்னியையலர்த்தியேயெனக்
காட்டுதற்கேயரிக வின்கைக்குந்தமே. (65)

இதுவுமது.

விண்டுவேதனுநாடரிதாகியவிமலன்
பண்டுதாருகப்பிரமகத்திப்பழிபோகக்
கொண்டுதாமெனக்கடுகியேகுடிவழித்தொன்மை
கண்டுதாங்கழுத்தரிந்ததுகவின்கவின்குந்தம். (66)

இதுவுமது.

தவந்தனிச்செய்வதென்றலைச்சிங்காதன
முவந்துபாவாடையிட்டோடுஞ்சோரிமே
னவந்தனிற்பாடியநங்கவித்திறஞ்
சிவந்திடச்செய்ததுதிருச்செங்குந்தமே. (67)

இஃது குந்தத்தினது மகத்துவங் கூறியது.

வீணுக்கேறாத வாய்மை விளம்பிடாவெற்றியாள
ராணுக்கேறாய்ப் பிறந்தோரடு புலிப்பதாகைமன்னர்
நாணுக்கேறாத சாபநாட்டியே யிறுத்தமாறன்
மாணுக்கேறாத மாற்றாரடைந்திட மருவுங்குந்தம் (68)

இஃது குந்தத்தினது பெருமை கூறியது.

வட்டமாரவையுழைவந்தமேலவ
ரிட்டபாவாடைகண்டிசைபெறாதுமண்
முட்டவந்துயிர்பெறீஇமொய்த்துளேமெனக்
கட்டுளகுந்தர்சீர்கழறியேத்தினார். (69)

இஃது செங்குந்தத்தின் பெருமையை உலகம்
புகழ்ந்தமை கூறியது.

செந்தமிழ்க்காகப்போந்து சிவந்தபாவாடையாக
நந்தமக்கிடுங்கா லெந்தநகரமு முளம்வியந்த
வந்தரத்தமரர் வாழ்த்தியணி மலர்மாரி பெய்தாரிந்தச்
செங்குந்தர் பெற்றவிசையெவர் பெற்றாரம்ம. (70)

இஃது இச்செங்குந்தத்தலைவர் பெரும்புகழ்
பெற்றோரெனக் கூறியது.

அம்பர்நாட்டமர்ந்தகுந்தமயனரியரன்மூன்றென்னு,
மும்பர்தாமறியவேண்டு முயர்ந்தமுத்தமிழினாலே,
கும்பசம்பவனேதேர்ந்து கூறவேவேண்டுமல்லா,
லிம்பர்யாங்கூறவேண்டு மெவர்மற்றுங் கூறுவாரே. (71)

இஃது செங்குந்தத்தின் பெருமை கூறற்பாலா ரினைய
ரெனக் கூறியது.


ஈட்டியெழுபது மூலமும் உரையும்§ முற்றிற்று.
§ [உரை சேர்க்கப் படவில்லை]

இந்நூலாசிரிய ரிவ்வீட்டியெழுபது முற்றிய பின்னர்பாடிய
எழுப்பெழுதில் இஃதொரு தலைச்செய்யுள்.)

கலைவாணி நீயுலகி லிருப்பதுவுங்
கல்வியுணர் கவிவல்லோரை,
நிலையாகப் புரப்பதுவு மவர்நாவில்
வாழ்வதுவு நிசமேயன்றோ,
சிலைவாணானா விருந்தாயிரம்புயங்க
டுணிந்து முயர்சீவனுற்றான்,
றலையாவி கொடுத்திடுஞ்செங் குந்தருயிர்
பெற்றிடவுந் தயை செய்வாயே.

நிலைதந்தார் புவியினுக்கு யாவருக்கு
மபிமான நிலைக்கத்தந்தார்,
கலைதந்தார் வணிகருக்குச்சீவனஞ்செய்
திடவென்றே கையில்யாண்டும்,
விலைதந்தார் தமிழினுக்குச் செங்குந்தரென்
கவிக்கு விலையாகத்தான்,
தலைதந்தா ரெனக்கொட்டக் கூத்தனெனும்
பெயரினையுந் தாந்தந்தாரே.

சிவசண்முக மெய்ஞ்ஞானதேசிகன் திருவடி வாழ்க.
----------------------------
சிறப்புப்பாயிரம்.

உலகெலாந்தந்த வுமையொருபாக
னிலகுநன்னுதலெழீஇ யெரிசுடர்விழிப்பொறி
யாறொருகூறா யீறில்பேராற்ற
லானனமிருமூன் றானெனுமுரைபெறீஇ
மிளிர்சரவணபவன் கிளர்புயவீர
வாகுதேவாதி யாகுமொன்பதின்ம
ரிணையறுபூதக் கணமொடுசென்றோ
ரிடும்பையிலமரர்க் கடும்பகையாஞ்சூர்
முதறடிந்தும்பர் பதிசசிமணாளற்
கருளுபுதேவகுஞ் சரிமணம்புணர்ந்தோ

ரெல்லையிலாட னல்லுலகாடுபு
பாமகடலைவன் மாமகள்கொழுந
னாதியோர்வழுத்த சோதியார்கந்த
மலைமிசைநிலைஇய கலைநிறைபுலவன்
றன்னருள்சுட்டிப் பின்னிகல்வல்லன்
மநுவழிவந்த தநுவினனாமுசு
குந்தனின்றாற்று மந்தமிறவத்திற்
கிதயமதுருகி நிதியருள்பெருகி
வந்துபோர்கண்டசெங் குந்தரொன்பானெனும்
வீரரையவன்படை வீரராத்தரவவர்

கோவின்மங்கையர்க்கு காவலராகி
யெட்டுத்திக்குள மட்டறுமடையலர்
போரில்வெங்கண்ட சீரியராயமர்ந்
தான்றபேராற்ற லேன்றசுந்தரராங்
குமரரைத்தரவவர் நிமிர்திறலெண்ணா
ரெண்ணச்சென்னாள்கடை நண்ணிப்புரிந்திட்
டோவாசெல்வ மேவாத்தகைபெறூஉஞ்
சந்தமார்மருமர்செங் குந்தர்வண்புகழ்நில
மெங்குநின்றொளிர்தரத் தங்குலத்தாயிரஞ்
சிரமறுத்தாசனந் தரையிலிட்டொப்பிலா

வமிழ்தினிற்சுவைதரூஉந் தமிழ்தெரிபுலவரா
மரசருக்கருசனா வுரைசெய்சென்னியுமகிழ்ந்
தேத்திடுமொட்டக் கூத்தனையிருத்தி
யவன்றிருவாயா னவந்தரக்கேட்ட
வீட்டியெழுபதென நாட்டுபிரபந்தங்
கற்றவர்மற்றைய ருற்றெளிதறிதர
வியற்றமிழுரையாக் குயிற்றித்தருகென
வதுவைநீங்காத புதுவையாமமரர்
பதியினல்லொழுக்கந் துதிபெறக்கிளைத்துச்
சந்தமார்கல்விச் செந்தளிர்தளிர்த்தே

ரியலிலக்கியமெனு நயமலர்பூத்துத்
திசைபலவுஞ்செல விசைமணம்வீசிச்
சுவைதருமின்சொன் னவநறவரந்துளித்
துலகுணக்கொடைக்கனி யிலகுறப்பழுத்தே
யின்புறுநண்பர்க் கன்பெனுநிழறந்
தற்புதத்துயர்ந்த கற்பகத்தாரு
சுந்தரமமைந்தசெங் குந்தநன்மரபில்
வந்தந்தரிக்கிடந் தந்தசங்கரனருண்
முருகனம்போருகச் சரணம்வாய்நெஞ்சினன்

வள்ளலெனவுரைக்கும் வெள்ளைமுத்தேந்திரன்
மாதவத்துகித்த வாதவனருத்த
மென்னையநல்கெனும் பொன்னையபூபன்
நல்லப்பனென்னுஞ் செல்லொக்கும்வ*******
முதல்வனுதவிய புதல்வனெனமரீஇத்*******
திக்கனைத்தும்புகழ்ச் சக்கரநடாத்தும் ***
ஒப்பிலாச்சவலைச் சுப்பராயக்கோ ***
வும்பரும்புகழும் அம்புலித்தோன்ற **
[** cannot make out the words due to
poor quality of the photocopy]
லரிதினிற்பயந்த கரையில்சீர்க்காளை
யொப்பாருமில்லா அப்பாவுகுரிசிற்
பிள்ளைவண்டார்தொடைப் பள்ளிகொண்டான்சுதன்
பங்கயமுகம்பார் மங்கையரிரந்தோர்
முத்தையதாவெனு முத்தையகோமான்
மட்டறுபுகழினன் குட்டயநரபதி
யருந்தவப்பயனெனப் பெருந்தலமுதித்த
பூண்டவிராதணி தாண்டவராயவே
ளிப்புவியெலாம்புகழ் சுப்பராயன்செயு
நன்னிலைவந்த சென்னிலையுடைய
அண்ணாமலையென நண்ணுநாமத்தன்
நனைதார்த்தோளினன் வினைதீர்த்தான்றிருத்

தோன் றலெனவந்த வான்றகலைவல்ல
விராமதாபரன� [center]




A.பாலமுருகன் காமக்கூர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக