புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
1 Post - 1%
bala_t
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_m10சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட சுட செய்திகள்...அச்சலா


   
   

Page 3 of 37 Previous  1, 2, 3, 4 ... 20 ... 37  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 10:49 am

First topic message reminder :

3500 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆபரண ஆசை இருந்தது: ஆய்வில் தகவல்


சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 78f3e7ac-22fc-41bf-9b54-dd6933912bb0_S_secvpf

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3 ஆயிரத்தை நெருங்கி வரும் வேளையிலும் நம்நாட்டு பெண்களுக்கு தங்க நகைகளை வாங்கி, அணிந்துக் கொள்ளும் ஆசை சற்றும் குறைந்தபாடில்லை.

இந்த ஆபரண ஆசை, பெண்களுக்கிடையில் இன்று, நேற்று, உருவானதல்ல. கற்காலத்தின் போதே உலோகங்களால் உருவான ஆபரணங்களை அணியும் வழக்கம் பெண்களிடம் இருந்துள்ளது என்பது சமீபத்தில் தெரியவந்துள்ளது.

கி.பி. 21-ம் நூற்றாண்டில் வசிக்கும் நவநாகரிக மங்கையருக்கு இணையாக, கி.மு.1550-ம் ஆண்டில் வசித்த ஜெர்மனி பெண் ஒருவரும், வெண்கலத்தால் ஆன, சுருள் சுருளான கிரீடம் போன்ற ஆபரணத்தை அணிந்துள்ளது. தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு, கிழக்கு ஜெர்மனியில் உள்ள ரோக்லிட்ஸ் பகுதியில், புதிய ரெயில் பாதை அமைப்பதற்காக பூமியை தோண்டியபோது, ஒரு பெண்ணின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த எலும்புக் கூட்டின் மண்டை ஓட்டில்தான், வெண்கலத்தால் செய்யப்பட்ட, இந்த தலை அலங்கார ஆபரணம் கிடைத்துள்ளது.

இந்த எலும்புக்கூட்டினை ஆய்வு செய்த தொல்பொருள் நிபுணர்கள், அந்த பெண் கி.மு. 1550-1250-க்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை உறுதி செய்துள்ளனர்.

3500 ஆண்டுகள் பழமையான இந்த அபூர்வ மண்டை ஓடு, ஜெர்மனியின் ஹாலே நகரில் உள்ள அருங்காட்சியகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு இன்று வைக்கப்பட்டது.

-மாலைமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:01 pm

புதிய நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் இல்லை: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வங்கி கணக்கு முடக்கம்- ஐ.ஒ.சி. நடவடிக்கை

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 8ec65452-7788-4102-ba95-ec163fdb70ff_S_secvpf

ஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாததால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐ.ஒ.ஏ.) சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஒ.சி) சஸ்பெண்டு செய்தது. ஒலிம்பிக் சாசன விதி முறையை பின்பற்றாத வரை சஸ்பெண்டை நீக்க முடியாது என்று ஐ.ஒ.சி அறிவித்துவிட்டது.

தடைக்கு பிறகு இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தல் நடந்தது இந்த புதிய நிர்வாகிகளை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அங்கீகரிக்கவில்லை. புதிய நிர்வாகிகள் அங்கீகரிக்கப்படாதது. அவர்கள் இந்த ஒலிம்பிக் சங்கம் சார்பில் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட அதிகாரம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

இதே போல இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வங்கி கணக்கையும் ஐ.ஒ.சி. முடக்கியுள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தலைவர் அபய்சிங் சவுதாலா, பொதுச் செயலாளர் லலித் பனோட் ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க வங்கி கணக்கு பற்று ஒலிம்பிக் சாசன நிதி தொகையும் கையாள முடியாது என்று அறிவித்துள்ளது.

இதே போல இந்திய ஒலிம்பிக் சங்க புதிய நிர்வாகிகளை மத்திய விளையாட்டு அமைச்சர்களும் அங்கீகரிக்க வில்லை. இந்திய ஒலிம்பிக் சங்கத்தை நிர்வகிக்க 10 பேர் கொண்ட இடைக்கால குழுவை விளையாட்டு அமைச்சகம் நியமித்துள்ளது. முன்னனி விளையாட்டு வீரர்களை அடங்கியதாக இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
-மாலை மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:03 pm

இந்திய நிறுவனத்திடமிருந்து ஏர் போர்ட்டை திரும்பப்பெற்றது மாலத்தீவுகள்: பின்னணியில் சீனா?

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Tamil_News_large_601743

மாலே: இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலே ஏர்போர்ட்டை திரும்பப்பெற்றது மாலத்தீவுகள். இந்த பிரச்னையின் பின்னணியில் சீனா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாலத்தீவுகள் தலைநகர் மாலேவில் உள்ள இப்ராகிம் நசிர் சர்வதேச விமான நிலையத்தை சுமார் 511 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் மேம்படுத்தும் ஒப்பந்த பணியை இந்திய நிறுவனமான ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் கடந்த 2010ம் ஆண்டு பெற்றது. மாலத்தீவுகள் அதிபராக முகமது நசீத் இருந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், மாலத்தீவுகளில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது முகமது வாகித் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், திடீரென இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக மாலத்தீவுகள் அரசு தெரிவித்தது. முறைகேடுகள் மூலமாக இந்த ஒப்பந்தம் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு குற்றம் சாட்டியது.

மாலத்தீவுகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிங்கப்பூர் கோர்ட்டில் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கோர்ட், மாலத்தீவுகளின் நலனுக்கு ஏற்றவாறு செயல்பட அந்நாட்டு அரசுக்கு உரிமை உண்டு என்றும், எனினும் விதிமுறைகளை மீறி ஏர்போர்ட் எடுத்துக்கொள்ளப்படும்பட்சத்தில், உரிய நிவாரணம் கோரி ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம் மனு செய்யலாம் என்றும் தெரிவித்திருந்தது. தங்களுக்கு சாதகமாக உத்தரவு கிடைத்த உடனேயே செயலில் இறங்கிய மாலத்தீவுகள் அரசு, நேற்று நள்ளிரவு அவசர அவசரமாக ஏர்போர்ட் ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனத்திடமிருந்து மாலத்தீவுகள் அரசு எடுத்துக்கொண்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜி.எம்.ஆர்., இன்ப்ராஸ்டக்சர் நிறுவனம், இந்த ஒப்பந்தத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் எவ்வித பிரச்னையும் இருக்காது என உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீதிபதியின் தீர்ப்பை முழுமையாக படித்த பின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பின்னணியில் சீனா? சுமார் 1190 தீவுகளைக் கொண்ட மாலத்தீவுகள் பிராந்திய ரீதியாக, இந்திய பெருங்கடலில் மிகவும் முக்கியமான இடத்தில் உள்ளது. இந்திய கடற்படை தற்போது மாலத்தீவுகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவைச் சுற்றி வளைக்கும் நோக்கில் செயல்பட்டு வரும் சீனா, மாலத்தீவுகளில் தனது காலடியை பதிப்பதற்காகவே இந்த வேலைகளைச் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாலத்தீவுகள் அதிபர் முகமது வாகித் சீனா சென்ற போது, அந்நாட்டிற்கு 500 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்க சீனா முன்வந்துள்ளது. இதன் காரணமாகவே இந்திய நிறுவனத்தின் ஒப்பந்தம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அனேகமாக இந்த ஒப்பந்தம் சீன நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்க ஒன்றுமில்லை. பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், பர்மா என இந்தியாவைச் சுற்றி பல இடங்களில் தனது தடத்தை பதித்துள்ள நிலையில், மாலத்தீவுகளிலும் சீனா தனது ஆதிக்கத்தை பரவவிட்டுள்ளது. இதற்கு பதிலடியாக இந்தியா என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-தின மலர்






சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:05 pm

குஜராத் தேர்தல் வேட்பாளர்களில் 32 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள்:தேர்தல் கண்காணிப்பு குழு

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Tamil_News_large_601735

ஆமதாபாத் : குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 32 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் என தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. குஜராத் தேர்தலில் மொத்தம் 9400 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ததில் இவர்களில் 301 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள் என தெரிய வந்துள்ளது.
தேர்தல் குழு தகவல்:
இரு கட்ட தேர்தல்களிலும் போட்டியிடும் 1666 வேட்பாளர்களில் 940 பேர் கோடீஸ்வரர்களாக இருப்பதாக ஆமதாபாத்தில் நேற்று வெளியிட்ட தகவல் அறிக்கையில் குஜராத் தேர்தல் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. மேலும் 2007ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 21 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்துள்ளனர்.

கட்சிகளின் சொத்து விபரம்:
தேர்தல் கண்காணிப்பு குழு முக்கிய கட்சிகள் வாரியாக அவற்றின் சொத்து மதிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி காங்கிரசிற்கு ரூ.7.17 கோடியும், பா.ஜ., விற்கு ரூ.5.47 கோடியும், தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.4.36 கோடியும், குஜராத் பரிவர்த்தன் கட்சிக்கு ரூ.1.13 கோடியும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.46.24 லட்சமும், சமாஜ்வாடி கட்சிக்கு ரூ.22.31 லட்சமும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு ரூ.17.87 லட்சமும் சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முதலிடம்:
கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை காங்கிரஸ் கட்சியினர் பெற்றுள்ளனர். உயர் பதவிகளை வகிக்கும் வேட்பாளர்கள் பட்டியலிலும் காங்கிரசே அதிகளவில் உள்ளது. இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புட்டிற்கு ரூ.268 கோடி சொத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் 9 பேர் தங்களின் பான் மதிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 940 வேட்பாளர்களில் 214 பேர் தங்களின் பான் மதிப்பை வெளியிடவில்லை. இரு கட்ட தேர்தல்களிலும் எம்.எல்.ஏ., பதவிக்கு போட்டியிடுபவர்களில் 170 பேர் 2007ம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-தின மலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 12:08 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விசா ; கடும் சோதனை ' ; உள்துறை அமைச்சர்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Tamil_News_large_601301

புதுடில்லி: ""இந்தியா - பாக்., இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியை பார்க்க வரும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு, கடும் சோதனைக்கு பிறகே, விசா வழங்கப்படும்,'' என, மத்திய உள்துறை அமைச்சர், சுசில் குமார் ஷிண்டே கூறினார்.
செய்தி சேனல் ஒன்றின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேயிடம், இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:நம் அண்டை நாடு என்ற வகையில், பாக்., அணி இந்தியாவில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு, கலாச்சாரம், பொழுது போக்கு ஆகியவை அரசியலுக்கு அப்பாற்பட்டவை. இதில், பங்கேற்க பொதுமக்கள் வரவேண்டும்; அது தான் நல்லது.

கிரிக்கெட் போட்டிகளை பார்க்க வரும் ரசிகர்களுக்காக, 3,000 விசாக்களும், வி.ஐ.பி.,க்களுக்கு, 300 விசாவும் வழங்கப்படுகிறது. விசா வழங்கும் நடைமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கும். ஒவ்வொருவரை பற்றியும் முழுமையாக விசாரித்த பின், விசா வழங்கப்படும்.

இவ்வாறு சுசில் குமார் ஷிண்டே கூறினார்.கடந்த, 2007ம் ஆண்டு பாக்., அணி, இந்தியாவில் பங்கேற்ற போட்டியை பார்ப்பதற்காக, பாகிஸ்தானிலிருந்து வந்திருந்த, 12 பேர், காணாமல் போயினர். அவர்கள் என்ன ஆயினர் என்பது, இன்று வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:27 pm

பாதாள சாக்கடையில் 22 ஆண்டுகளாக குடும்பம் நடத்தும் தம்பதி

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Tamil_News_large_601467
மெடிலின்: கொலம்பியா நாட்டை சேர்ந்த தம்பதியர், 22 ஆண்டுகளாக, பாதாள சாக்கடைக்குள் குடும்பம் நடத்தி வருகின்றனர். தென் அமெரிக்க நாடான கொலம்பியா, ஒரு காலத்தில், போதை கடத்தல் கும்பலின் புகலிடமாக இருந்தது. இதனால், மெடிலின் உள்ளிட்ட நகரங்களில், எப்போதும் வன்முறை நடந்து கொண்டே இருக்கும். அந்நாட்டு அரசின் தீவிர நடவடிக்கையால், போதை கடத்தல் கும்பல்கள் ஒழிக்கப்பட்டுள்ளன.

மெடிலின் நகரில் வசிப்பவர், மைக்கேல் ரெஸ்டிரிபோ, 62. இவரது மனைவி மரியா கிரேசியா. கூலி வேலை செய்து வந்த மைக்கேல், போதைக்கு அடிமையானதால், வறுமையில் வாடினார். மெடிலின் நகரில் கட்டப்பட்ட பாதாள சாக்கøடையின் ஒரு பகுதியை, நகராட்சி அதிகாரிகள் தேவையில்லை, என ஒதுக்கி விட்டனர். இதனால், இந்த பாதாள சாக்கடையை, மைக்கேல் தம்பதியினர் வீடாக மாற்றிக்கொண்டு, 22 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு துணையாக ஒரு நாயும், இந்த கால்வாயில் வசிக்கிறது. மின் வசதியை ஏற்படுத்தி கொண்ட மைக்கேல், ஒன்றரை அடி உயரம், 65 சதுர கொண்ட, பாதாள அறையில் டிவி, மின்விசிறி, உள்ளிட்டவற்றை வைத்திருக்கிறார்.

மழை காலங்களில், பாதாள சாக்கøடையின் மூடியை வைத்து மூடிக்கொண்டு உள்ளே இருக்கின்றனர். வெயில் காலங்களில், வெளிச்சத்துக்கு மூடியை திறந்துவைத்து விடுகின்றனர். இவர்களுடன் வசிக்கும் நாயுடன் தான், இந்த பாதாள அறைக்குள் தூங்குகின்றனர். இதுவரை நகராட்சி அதிகாரிகள் இவர்களை அகற்ற, எந்த நடவடிக்கை எடுக்காததால், இவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.


-தினமலர்




சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:28 pm

சிறையில் பூரி சுட அனுமதி கோரி மரத்தில் ஏறி 8 கைதிகள் அட்டகாசம்

சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Tamil_News_large_600875

சேலம்:சேலம் மத்திய சிறையில், கைதிகள் பூரி சுட்டு சாப்பிட, அதிகாரிகள் தடை விதித்ததால், ஆத்திரமடைந்த கைதிகள், எட்டு பேர், பூரி சுட தங்களுக்கு அனுமதி வழங்க கோரி, நேற்று சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.அதை அடுத்து அவர்களிடம் சிறை அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்திய பின், போராட்டத்தை கை விட்டனர்.

கஞ்சா:

சேலம் மத்திய சிறையில், 745 கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மத்தியில் தடை செய்யப்பட்ட மொபைல் போன், கஞ்சா ஆகியவற்றின் நடமாட்டம் அதிகரித்தது. அது மட்டுமின்றி, சிறையில் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில், பூரி உள்ளிட்ட பொருட்களை சமைத்து சாப்பிட்டு வந்ததாக தெரிந்தது.இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள்,சோதனை மேற் கொள்ள முடிவு செய்தனர். சில நாட்களுக்கு முன் ஜெயிலர் ஊர்மிளா, சிறையில் உள்ள அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, பிளாக் எண். 8ல், உள்ள ஒரு அறையில் அடைக்கப்பட்டுள்ள, சேலம் மாவட்டம் ஓமலூரை அர்ஜுனன், 24, அறையில் பூரி சுட்டதை கண்டு பிடித்தார். அதை அடுத்து அவனை எச்சரித்த ஜெயிலர் ஊர்மிளா, அறையை மாற்றவும் உத்தரவிட்டார். பூரி சுட வசதியாக எல்லாப் பொருட்களும் கிடைத்தது எப்படி என்றும் விசாரித்தார்.

இடமாற்றம்:

நேற்று முன்தினம், அர்ஜுனன், வேறு அறைக்கு மாற்றப்பட்டான். அவன் மட்டுமின்றி, அவன் அறையில் அடைக்கப்பட்டு இருந்த பிற கைதிகளும் வேறு அறைக்கு, மாற்றம் செய்யப்பட்டனர்.நேற்று காலை, வழக்கம் போல் அறையில் இருந்து வெளியேறிய கைதிகளில், அர்ஜுனன், திடீர் என, பிளாக் எண். 8, அருகே இருந்த மரத்தில் ஏறி, தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தான். அவனுக்கு ஆதரவாக ஏழு பேர், மரத்தில் ஏறி தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

மேலும், அவர்கள், தங்களின் அறைகளில் சோதனை நடத்தக் கூடாது; பூரி உள்ளிட்ட உணவுகளை சமைத்து சாப்பிட அனுமதிக்க வேண்டும்; மேலும், மீண்டும் ஒரே அறையில், தங்களை அடைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இவர்களிடம் ஜெயிலர் ஊர்மிளா பேச்சுவார்த்தை நடத்தினார்.கண்காணிப்பாளர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினால், மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என, தெரிவித்தனர். அதை அடுத்து கண்காணிப்பாளர், பேச்சுவார்த்தை நடத்தி, கைதிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
விசாரணை:

கைதிகளின் இந்த திடீர் போராட்டத்தின் பின்னணி குறித்து, சிறைத் துறை அதிகாரிகளுடன், போலீசார் இணைந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கைதிகளை போராட்டத்துக்கு தூண்டியது, தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் கலவர வழக்கில் கைதாகி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ரஜினிகாந்த் என்பது தெரிய வந்துள்ளது.

அதை அடுத்து ரஜினிகாந்த் உட்பட, தற்கொலை மிரட்டலில் ஈடுபட்ட எட்டு கைதிகளையும், வேறு சிறைக்கு மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.


-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:29 pm

வேலூர் சிறையில் ரூ.1,38 000 பறிமுதல்

வேலூர்: வேலூர் சிறையில் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் பணம், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மத்திய சிறையில் மாவட்ட எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 5 டி.எஸ்.பி., 138 போலீசார் ஈடுபட்டனர். இந்த சோதனை அதிகாலை 6.30 மணி முதல் காலை 9.30 வரை நீடித்தது. அப்போது கைதிகள் அறையில், ரூ. ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் பணம், 5 சிம்கார்டுகள், 10 மொபைல்கள், 138 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:30 pm

காவிரி நீர் தமிழகம் வந்தது

மேட்டூர்: கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வந்தடைந்தது. நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். இன்று மாலைக்குள் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரியில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, கர்நாடகா 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:31 pm

காவிரி விவகாரம்: மாண்டியாவில் இன்று பந்த்

பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து கர்நாடகாவில் இன்று மாண்டியா மாவட்டத்தில் பந்த் நடக்கிறது. இதையொட்டி கிருஷ்ண ராஜ சாகர் அணைக்கு பலத்த போலீ்ஸ் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது. மேலும் பல்வேறு கன்னட மற்றும் விவசாய அமைப்புகள், வீட்டிற்கு ஒருவர் பந்த்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கடைகளை அடைக்கவும் வலியுறுத்தியுள்ளளனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Dec 08, 2012 2:32 pm

நாகை அருகே ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிப்பு

நாகை: நாகை அருகே பள்ளம் தோண்டிய போது, 3 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தானந்தம் (50). கொத்தனார். இவர் தனது வீட்டின் பின்புறத்தில் பள்ளம் தோண்டிய போது, அதில் ஒன்றரை அடி உயர ஐம்பொன்னால் ஆன விநாயகர், 2 அடி உயர வள்ளி மற்றும் ஒரு திருவாச்சி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இது தொடர்பாக வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-தினமலர்



சுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xzசுட சுட செய்திகள்...அச்சலா - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 3 of 37 Previous  1, 2, 3, 4 ... 20 ... 37  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக