புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
59 Posts - 50%
heezulia
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
12 Posts - 2%
prajai
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_m10இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Sun Nov 04, 2012 5:38 pm

வணக்கம் நண்பர்களே...

இன்று இந்த அனுபவத்தை பெரும் மனச்சுமையோடு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். படித்துப்பார்க்கவும் வேண்டுகிறேன்.
எனது வலைபக்கத்திலும் இந்த பதிவை எழுதியுள்ளேன். http://kakkaisirakinile.blogspot.in/2012/11/blog-post_4.html

ஹைதராபாத் பிரயாணி

தற்போது நான் ஹைதராபாத்தில் வசிப்பது வருகிறேன். ஹைதராபாத்தின் சிறப்பு அங்கு கிடைக்கும் பிரியாணி என்பதை யாவரும் அறிவோம். ஆனால் இப்போதைய நிலை அப்படியல்ல. வெளியூர் உணவங்களில் கிடைக்கும் ஹைதராபாத் பிரியாணியைவிட இங்கு கிடைக்கும் பிரியாணி தரம்/ருசி குறைந்தவைகளாகவே காணப்படுகின்றன. ஆனாலும் மற்ற பிரபலமான உணவகங்களை ஒப்பிடுகையில் கச்சிபோவ்லி(Gachibowli) என்னுமிடத்தில் இருக்கும் கிரீன் பாவர்ஜி(Green Bawarchi) என்னும் உணவகத்தில் பிரியாணி சற்று சிறப்பாகவே இருக்கும். நானும் எனது நண்பரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் அங்கு தவறாமல் செல்வது வழக்கம். அப்படிதான் இன்று மதியம் ஒரு மணியளவில் அங்கு போனோம்.

அந்த உணவகம் இருக்குமிடம் மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த மும்பை நெடுஞ்சாலை. சாலையின் இரண்டு புறங்களிலும் பேருந்து நிற்கும் இடங்களும் உண்டு. நாங்கள் உணவகத்தை அடைவதற்கு 200 மீட்டருக்கு முன்பாக வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அந்த இடத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் பேருந்து நிற்குமிடம் இருப்பதால் நெரிசல் இன்று அதிகம் என்று நான் என் நண்பனிடம் சொல்லிக்கொண்டே பைக்கை ஒட்டிக்கொண்டு போனேன். ஆனால் சாலையின் வலது புறம் சற்று கவனித்த என் நண்பர், ஏதோ விபத்து நிகழ்ந்ததாக சொல்லவே நானும் அதை கவனித்தேன். ஒரு இளம் பெண்ணின் கால் மட்டும் அந்த நெரிசலின் சந்தில் என் கண்களுக்கு தென்பட்டது. உடனே வண்டியை இடது புறம் நிறுத்திவிட்டு ஓடிப்போய் பார்த்தோம்.

உதவியிருக்க வாய்ப்பில்லை

அங்கு போனதும் ஒரு ஆணும் அந்த இடத்தில் கிடப்பது தெரியவந்தது. இருவரும் ஒரே பைக்கில்(ஸ்கூட்டி) பயணம் செய்த 30 வயதிற்கும் குறைவானவர்கள். இளம் தம்பதிகலாகவே இருக்கவேண்டுமென நினைக்கிறன். இரத்தகாயங்கள், ரத்த ஓட்டம்என்று பெரிதாக எதுவும் தென்படவில்லை. பின்தலையில் பலத்த அடியாகவே இருக்கவேண்டும். அவர்கள் கிடப்பதைப் பார்த்ததும் மனம் படபடத்தது. பைக்கின் மேல் ஒரு காலுடன் அந்த ஆணும் அவனருகே அந்த பெண்ணும் நடு சாலையில் கிடந்தனர். பைக்கில் பின்புறம் ARMY என்று எழுதப்பட்டிருந்தது. எனக்கு தெரிந்தவரை அவர்களைச் சுற்றி இருந்த யாரும் பெரிதாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன்.

காரணம், முதலுதவி அளித்திருந்தால் குறைந்த பட்சம் அவர்களில் முகத்தில் நீரை இறைக்க/தண்ணீர் கொடுக்க அவர்களைத் தூக்கி இருக்கவேண்டும். அவர்களின் முகங்களை திருப்பி இருக்க வேண்டும். சாலையின் ஓரத்திற்கு அவர்களை தூக்கிக் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விழுந்த இடத்தை விட்டு சற்றும் நகர்த்தப்படவில்லை. முகம் தரையை நோக்கி இருக்க, நடு சாலையிலேயே கிடந்தனர். மனதில் கோடாரியை வைத்து வெட்டி அளவிற்கு காயமும் கோபமும் அந்த காட்சியைக் காண்கையில் ஏற்படுத்தியது. இந்த விபத்து நாங்கள் அந்த இடத்தை அடைந்த 15 நிமிடங்களுக்கு முன்பே நடந்திருக்கிறது.

அவர்களுக்கு உதவ எண்ணி நெருங்கும் பட்சத்தில், அவர்களை துணியால் மூடினர் சிலர். அந்த இருவரும் மரணித்துப் போனது அப்போதே எனக்கு தெரியவந்தது. மனம் மிகவும் சஞ்சலத்திற்கு உள்ளானது. முற்றிலும் அமைதியை இழந்தது. இதுவரை இப்படியாக ஒரு தலை சுற்றல் எனக்கு வந்ததில்லை. அதை நண்பனிடம் கூறவே, என்னைத் தாங்கிக் கொண்டு சாலையைக் கடக்க வைத்து தண்ணீர் கொடுத்து முகம் கழுவவைத்து குடிக்க வைத்தார். மனதில் ரணம் சற்றும் குறையவில்லை. நண்பரும் வருத்ததோடு தேற்றினார்.

திறந்த வண்டியில் உடல்கள்

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. ஆனால் எதோ காரணத்தால் அவர்களை ஏற்றாமல் அது திரும்பிப் போகவே, சில நிமிடங்களில் மற்றொரு வண்டியில் அவர்களை ஏற்றினார்கள். அது 407 போன்ற திறந்த டெம்போ வண்டி. மழை சற்று தூறிக்கொண்டிருக்கும் அந்த வேளையில், திறந்த நிலையில் இருக்கும் அந்த வண்டியில் அவர்களை ஏற்றிச் செல்வதைப் பார்க்கையில் இன்னும் கொடுமையாக இருந்தது.

அப்போது, ஒருதாயின் தோளில் இருந்த சிறுகுழந்தை எனைப் பார்த்து சிரித்தது. இது போன்ற சூழ்நிலைகளில், இந்த குழந்தையைப் போல் நடப்பது அறியாமல் இருந்து விட்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே, அது சிந்திய புண் சிரிப்பை என் சிந்தனையில் சேகரித்துக் கொண்டேன். அது ஆறுதலாய் இருந்தது.

மக்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். சாலை பழைய நிலையை சிறிது நேரத்தில் எட்டியது. அந்த இருவர் மற்றும் அவர்கள் குடும்பத்தார்களின் கனவுகள் சில நிமிடங்களில் முற்றிலுமாக தகர்க்கப்பட்டது.

செய்தித்தாள்களில் இதுபோன்ற செய்திகள் படிக்கும்போது அது வெறும் செய்தியாகவே நம்மை அடைகிறது. அதையே நேரில் காணும்போது மிகப்பெரும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது என்று புரிந்துகொண்டே நாங்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம்.

கலையிலும் உணவு உட்கொள்ளாததால், வயிறு சற்று வம்பு பிடிக்கவே, எப்போதும் போகும் ஹோட்டலுக்கு போக மனமில்லாமல் அருகிலிருந்த உணவகத்தில்,தக்காளி சத்தத்தோடு எங்கள் மதிய உணவை முடித்துக் கொண்டோம். தலை சுற்றல் அதிகமாக இருக்கவே, என் நண்பர் வண்டியை ஓட்டினார். சற்று நேரத்தில் வீட்டை வந்து சேர்ந்தோம்.

கவனிக்க வேண்டிய சிலவிடயங்கள்

1. அக்கம் பக்கத்தில் என் நண்பர் விசாரித்ததில் இந்த விபத்திற்கு காரணம், பின்புறமாக வந்து ஒரு truck அவர்களை மோதியதே.மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டான். ஏனோ தெரியவில்லை மணல், தண்ணீர் லாரி ஒட்டுனார்களில் பெரும்பாலானோர் கண்மூடித்தனமாக வண்டி ஓட்டுகிறார்கள். அது பல இழப்புகளுக்கு தொடர்ந்து வழிகோலுகிறது. truck ஓட்டுனர்கள் தயவு செய்து சற்று பொறுமையைக் கடைபிடிக்கவும். இது போன்ற உயிரிழப்புகளுக்கு நீங்கள் காரணமாக வேண்டாம்.

2. வண்டியில் பயணம் செய்த இருவருக்கும் அடி தலையில் மட்டுமே. கைகால் முறிவோ, ரத்தமோ வீணாகவில்லை. வண்டி ஓட்டிவந்த நாபரோ அந்த பெண்ணோ ஹெல்மெட் அணியவில்லை. இந்த இழப்பிற்கு காரணம் அவர்கள் தலையில் பட்ட அடி என்பதால், அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சிறு காயங்களுடன் காப்பாற்றப் பட்டிருக்கலாம். பயணிகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளுங்கள். மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.

3. நான் முன்பே கூறியது போல் அவர்களுக்கு முதலுதவி செய்ததற்கான எந்த முகாந்திரம் எனக்கு தென்படவில்லை. சொல்லப்போனால் அவர்களை யாரும் நெருங்கக்கூட இல்லை. குறைந்தது மூன்று அடி தள்ளியே நின்றனர். முதலுதவி செய்திருந்தால், ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். தயவு செய்து யார் அடிப்பட்டாலும் போலீஸ் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுமே என்ற சிந்தனையை மனதிலிருந்து தூக்கி எரிந்துவிட்டு உதவ முன்வரவும். உதவி செய்யாது விலகிச் செல்லும் வேலையில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாது "எப்போது நமக்கு உதவி தேவைப்படும் என்று".

கனத்த மனதுடன் இந்த அனுபவத்தை முடித்துக் கொள்கிறேன். நன்றி..



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 24, 2012 9:38 pm

வருத்தம் தரும் நிகழ்வு - அதே சமயம் நீங்கள் எழுப்பிய வினாக்கள் அனைவரும் சிந்திக்கத் தூண்டும்.




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 24, 2012 10:51 pm

சென்னையிலும் இது சகஜமான நிகழ்வாகவே இருக்கிறது...
பெரும்பாலான ஆட்டோக்காரர்களும் நமக்கென்ன என்றே ஓடுகின்றனர்...
அப்புறம் ஆந்திரா மட்டும் எப்படி இருக்கும்?...

உங்கள் மெல்லிய மனதுக்கு வாழ்த்துகள்...
வருத்தமானப் பதிவு...உங்கள் ஆலோசனைகளும் அருமை...



இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் 224747944

இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Rஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Aஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Emptyஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Rஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Dec 26, 2012 4:11 pm

நன்றிகள் இனியன் மற்றும் ரா ரா அண்ணா.. நாம் அந்த நிலையில் இருக்கும் பட்சத்தில் என்ன எதிர்பார்ப்போம் என்று உணர்ந்தாலே போதும் என்று நினைக்கிறேன்... தானாக நமது கைகள் உதவிக்கரம் நீட்டும்...



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 26, 2012 4:23 pm

ரா.ரா3275 wrote:சென்னையிலும் இது சகஜமான நிகழ்வாகவே இருக்கிறது...
பெரும்பாலான ஆட்டோக்காரர்களும் நமக்கென்ன என்றே ஓடுகின்றனர்...
அப்புறம் ஆந்திரா மட்டும் எப்படி இருக்கும்?...

உங்கள் மெல்லிய மனதுக்கு வாழ்த்துகள்...
வருத்தமானப் பதிவு...உங்கள் ஆலோசனைகளும் அருமை...

ஆமோதித்தல்




இருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Mஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Uஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Tஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Hஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Uஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Mஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Oஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Hஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Aஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Mஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் Eஇருவரின் கனவுகள், அது தகர்க்கப்பட்ட சில மணித்துளிகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Dec 26, 2012 4:39 pm

வண்டியில் பயணம் செய்த இருவருக்கும் அடி தலையில் மட்டுமே. கைகால் முறிவோ, ரத்தமோ வீணாகவில்லை. வண்டி ஓட்டிவந்த நாபரோ அந்த பெண்ணோ ஹெல்மெட் அணியவில்லை. இந்த இழப்பிற்கு காரணம் அவர்கள் தலையில் பட்ட அடி என்பதால், அவர்கள் ஹெல்மெட் அணிந்திருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர் சிறு காயங்களுடன் காப்பாற்றப் பட்டிருக்கலாம். பயணிகள் தயவு செய்து இதை கவனத்தில் கொள்ளுங்கள். மறக்காமல் ஹெல்மெட் அணியவும்.
---------------------------------------------------------------------------------

ஒரு சிறு சம்பவம்
நான் ஒருமுறை காலையில் அலுவலகத்துக்கு சென்று கொண்டிருந்தேன், இடம் கோயம்பேடு ரோகினி திரையரங்கம் முன்பு சிறிது தூரம், எனக்கு முன்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்தார், எல்லோரும் ஒதுங்கி சென்று கொண்டு இருந்தனர், நானும் சில நண்பர்களும் சேர்ந்து அவரை அருகில் துக்கி வைத்து முதலுதவி செய்து, பார்த்து செல்ல வேண்டியது தானே என்று சொல்லி கொண்டிருந்தோம், முன்னால் நின்ற காரில் இருந்து நடுத்தர வயது மனிதர் ஒருவர் வந்து அடி எதாவது பட்டுள்ளதா, மருத்துவமனைக்கு அலது செல்கிறேன் என்று கூறினர். பிறகு தான் தெரிந்தது, அடி பட்டவர்தான் காரில் கொண்டு போய் இடிதுள்ளர் என்று. அவரின் மனிதநேயம் கண்டு வியந்தேன் இன்றளவும் என் மனதில் அந்த நிகழ்ச்சி உள்ளது. ஆனால் இருசக்கர வாகன ஓட்டிகள் யாரும் இதை கண்டுகொள்ளவேயில்லை.

தயவு செய்து விபத்து நடந்தால் ஒதுங்கி செல்லாமல் உங்களால் முடித்த சிறு உதவியையாவது செய்து விட்டு போங்கள்




அன்புடன்
சின்னவன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 26, 2012 6:30 pm

வருத்தமானப் பதிவு... சோகம் சோகம் உங்கள் ஆலோசனைகளும் நன்று



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 26, 2012 6:45 pm

அகல் மற்றும் சென்னையன் அவர்களின் பதிவுகளில் இருந்து தெரிவது என்னவென்றால்... சாலையில் கவனமாக இருக்கவேன்டும்... மேலும் மனிதநேயத்துடன் நடந்துக்கொள்ளவேன்டும் என்பதே.. அதுதானே இன்றைய மக்களுக்கு தேவைப்படுகிறது.

avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Wed Dec 26, 2012 7:38 pm

இந்த சம்பவம் நடந்து சுமார் நான்கு வருடம் ஆகி விட்டது எனது உறவினர் வயது 40 மத்திய அரசில் தொழில் நுட்ப வல்லுனராக சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். ஒரு நாள் நடு ஜாமம் இரண்டு மணிக்கு பாடி காட் முனி சுவாமி கோயில் அருகே உள்ள பாலத்தில் வரும் பொழுது ஒரு லாரி இடித்து இரண்டு மணியில் இருந்து நான்கு மணி வரை உயிருக்கு போராடிகொண்டிருந்தார் யாருமே உதவவில்லை ஆனால் அவ்வழியில் ப்ரஸில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் இவரை பார்த்தவுடன் அந்த சாமத்திலும் ஒவ்வொரு வண்டியாக நிப்பாட்டி உதவி கேட்டு அம்புலன்சுக்கு போன் செய்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கு அவர் இறந்து விட்டார். எந்த உதவியையும் எதிர்பார்க்காத திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தை சார்ந்த அந்த இளைஞர் செய்த அந்த உதவி இனியும் கண்ணில் நிற்கிறது.



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Wed Dec 26, 2012 10:02 pm

தர்மா wrote:இந்த சம்பவம் நடந்து சுமார் நான்கு வருடம் ஆகி விட்டது எனது உறவினர் வயது 40 மத்திய அரசில் தொழில் நுட்ப வல்லுனராக சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்தார். ஒரு நாள் நடு ஜாமம் இரண்டு மணிக்கு பாடி காட் முனி சுவாமி கோயில் அருகே உள்ள பாலத்தில் வரும் பொழுது ஒரு லாரி இடித்து இரண்டு மணியில் இருந்து நான்கு மணி வரை உயிருக்கு போராடிகொண்டிருந்தார் யாருமே உதவவில்லை ஆனால் அவ்வழியில் ப்ரஸில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் இவரை பார்த்தவுடன் அந்த சாமத்திலும் ஒவ்வொரு வண்டியாக நிப்பாட்டி உதவி கேட்டு அம்புலன்சுக்கு போன் செய்து அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார் அங்கு அவர் இறந்து விட்டார். எந்த உதவியையும் எதிர்பார்க்காத திருநெல்வேலி அருகில் உள்ள கிராமத்தை சார்ந்த அந்த இளைஞர் செய்த அந்த உதவி இனியும் கண்ணில் நிற்கிறது.
மனம் கனத்துப் போனது அண்ணே



எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக