புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 4:26 am

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 3:29 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 3:05 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 2:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:00 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 12:28 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 4:37 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 4:26 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 11:53 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:38 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:37 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:08 am

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 5:56 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 5:54 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 5:50 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 5:48 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 5:47 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 5:45 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 3:32 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 2:50 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:13 am

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:04 am

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 9:48 am

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:24 am

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:22 am

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:19 am

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 7:14 am

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 4:50 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 6:20 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 1:44 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 1:53 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:05 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 9:09 am

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 6:47 am

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:58 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:29 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:31 am

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:56 am

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:46 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:42 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:29 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 4:29 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 2:01 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 am

» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
3 Posts - 3%
prajai
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
2 Posts - 2%
manikavi
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
2 Posts - 2%
Pampu
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
214 Posts - 42%
heezulia
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
187 Posts - 37%
Dr.S.Soundarapandian
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
17 Posts - 3%
sugumaran
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
6 Posts - 1%
manikavi
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
4 Posts - 1%
prajai
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
பெண்பாவம் பொல்லாதது Poll_c10பெண்பாவம் பொல்லாதது Poll_m10பெண்பாவம் பொல்லாதது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்பாவம் பொல்லாதது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81882
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Sep 24, 2018 2:28 am

[You must be registered and logged in to see this image.]
-




தலைவியை மணம் செய்து கொள்ள நினையாமல்
இரவுக்குறியில் சந்தித்துக் களவு வாழ்க்கை வாழ்வதிலே
பெருவிருப்பம் கொண்டிருந்தான் தலைவன்.

இதனையறிந்த தோழி, தலைவிக்கு மணவாழ்க்கை
நிகழவேண்டுமென எண்ணினாள். தலைவனிடம்
இதைப் பற்றி எப்படிப் பேசுவது எனச் சிந்தித்தாள்.

ஒருநாள் இரவு நேரத்தில், தலைவியின் வீட்டுக்குப்
பின்புறம் உள்ள வேலியோரத்தில் பிறர் அறியாதவாறு
தலைவியைச் சந்திக்க தலைவன் வந்ததைத் தோழி
அறிந்தாள்.

அந்நேரத்தில் அங்கு நின்றிருந்த தலைவன்
கேட்கும்படியாகத் தலைவியிடம் தோழி பேசுகிறாள்.

"ஒருநாள் நம் இல்லத்திற்கு விருந்தினர்கள் வந்திருந்தனர்.
தலைவனும் அவர்களுடன் வந்தான். அவனைக் கண்டு
ஐயம் கொண்ட அன்னை, அன்றுமுதல் பகைவரது
போர்க்களத்தின் பக்கத்திலுள்ள ஊரினர் எவ்வாறு
தூங்காமல் இருப்பரோ, அவர்கள் போன்று இரவில்
தூங்காமல் இருக்கிறாள்.

நீராடச்சென்ற ஒளிபொருந்திய நெற்றியையுடைய பெண்
ஒருத்தி, நன்னன் என்னும் மன்னன் தோட்டத்தில் இருந்த
மாமரத்திலிருந்து விழுந்து, ஆற்றுநீரில் அடித்து வந்த
மாங்காயைத் தின்றுவிட்டாள்.

இதனால் உண்டாகிய குற்றத்திற்காக அப்பெண்ணின்
தந்தை, எண்பத்தொரு களிற்று யானைகளையும்,
அப்பெண்ணின் எடைக்கு நிகரான பொன்னாலான
பாவையையும் கொடுத்தான்.

அதனை ஏற்காத மன்னன் அப்பெண்ணைக் கொலை
செய்தான். அதனால், நன்னன் மீண்டுவர முடியாத
கொடிய நரகத்திற்குச் சென்றான். அத்தகைய
நரகத்திற்கு நம் அன்னையும் போவாளாக' என்றாள்.
-
-------
"மண்ணிய சென்ற ஒண்ணுத லரிவை
புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்
கொன்பதிற் றென்பது களிற்றொ டவணிறை
பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
பெண்கொலை புரிந்த நன்னன் போல
வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை
ஒருநாள் நகைமுக விருந்தினன் வந்தெனப்
பகைமுக ஊரின் துஞ்சலோ இலளே' (குறுந்- 292)
-
--------
தலைவனைச் சந்திக்க முடியாத வகையில் தலைவிக்குப்
பாதுகாப்பு மிகுந்திருக்கிறது என்பதை அன்னையின்
செயல் மூலம் தலைவனுக்கு உணர்த்தினாள்.

இதன் மூலம் இரவில் இனியும் தலைவியைச் சந்திக்க
முடியாது என்பதைத் தலைவன் கேட்கும்படித் தெளிவுபட
தோழி கூறிவிட்டாள். மேலும், தலைவனைச் சந்திக்க
விடாமல் தடுக்கும் அன்னை, பெண்ணைக் கொலை
செய்த நன்னன் அடைந்த நரகத்தை அடைவாள் எனவும்
கூறப்பட்டுள்ளது.

இரவில் தலைவன் வரவை ஊரினர் அறிந்தால்
"அலர்' ஏற்பட்டு தலைவிக்கு அவப்பெயர் உண்டாகும்.
மேலும், தலைவன் திருமணத்தை நீட்டித்துக்கொண்டே
சென்றால், தலைவி துயரப்பட்டு இறக்கவும் நேரிடலாம்.

அதனால், தலைவனுக்குப் பாவம் ஏற்படலாம் எனக்
கூறுவதாகவும் அமைகிறது. இக்கூற்றைக் கேட்ட
தலைவன் உன்னை விரைவில் மணம்செய்து கொள்வான்
எனக்கருதவும் இடமுண்டு.

இன்றைக்கும் ஆண்களில் சிலர் பெண்களிடம்
"திருமணம் செய்து கொள்கிறேன்' எனக்கூறி, காலம்
நீட்டித்து ஏமாற்றுவதைக் காணமுடிகிறது.

இதனால், பெண்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்
குறியாகி விடுகிறது. இத்தகைய பெண்பாவம்
பொல்லாதது என்கிற செய்தியைத்தான் புலவர்கள்
அன்றே நம் சங்க இலக்கியங்களில் பதிவு செய்துள்ளனர்.
-
---------------------------

- முனைவர் கி. இராம்கணேஷ்
நன்றி- தமிழ்மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக