புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
53 Posts - 59%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
1 Post - 1%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
18 Posts - 2%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Rutu
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 12 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 11 of 84 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 47 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 05, 2013 1:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (69)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33

‘ம்’ஈற்றுச் சொற்களின் புணர்ச்சி தொடர்கிறது !

‘ஆயிரம்’ – என்ற சொல்லைப் பிடித்துப் பேசுகிறார் தொல்காப்பியர் !:-

“அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை” (புள்ளிமயங்கியல் 22)

இதற்கியைய இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-

ஆயிரம் + ஒன்று = ஆயிரத்தொன்று √
ஆயிரம் + ஒன்று = ஆயிரமே ஒன்று ×

ஆயிரம் + இரண்டு = ஆயிரத்திரண்டு √
ஆயிரம் + இரண்டு = ஆயிரமே இரண்டு ×

ஆயிரம் + மூன்று = ஆயிரத்து மூன்று √
ஆயிரம் + மூன்று = ஆயிரமே மூன்று ×

ஆயிரம் + நான்கு = ஆயிரத்து நான்கு √
ஆயிரம் + நான்கு = ஆயிரமே நான்கு ×

இங்கெல்லாம் , ‘அத்து’ச் சாரியை வந்துள்ளதைக் காண்க !

அஃதாவது , ஆயிரம் + அத்து + ஒன்று = ஆயிரத்தொன்று .

ஆயிரம் – எண்ணுப் பெயர்
அத்து – சாரியை
ஒன்று – எண்ணுப் பெயர்

என்ற முறையில் மேலைப் புணர்ச்சிகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும் !

இளம்பூரணர் இந்த இட்த்தில் தம் மாணவர்களுக்குச் சில நுணுக்கங்களைக் கற்றுத்தருகிறார் !

அந் நுணுக்கங்களை அவரது நடையில் படித்தால் யாருக்கும் விளங்காது ! எனவே , கீழ்வருமாறு அவற்றை விளக்கலாம் !:-

ஆயிரம் + குறை = ஆயிரத்துக் குறை √
ஆயிரம் + குறை = ஆயிரக் குறை ×

ஆயிரம் + கூறு = ஆயிரத்துக் கூறு √
ஆயிரம் + கூறு = ஆயிரக் கூறு ×

ஆயிரம் + முதல் = ஆயிரத்து முதல் √
ஆயிரம் + முதல் = ஆயிரமுதல் ×

வெறும் ‘ஆயிரம்’ என்ற சொல்லைக் கொண்டு புணர்ச்சி கூறினார் தொல்காப்பியர் ! ‘பதினாயிரம்’ என்று வந்தால் ? அப்போது ‘ஆயிரம்’ என்பதற்குக் கூறிய விதியே பொருந்துமா ?

நம் ஐயம் !

இதற்குத் தொல்காப்பியர் விடை ! :-

“அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே” (புள்ளிமயங்கியல் 23)

பதினாயிரம் + ஒன்று = பதினாயிரத் தொன்று
பதினாயிரம் + இரண்டு = பதினாயிரத் திரண்டு
பதினாயிரம் + குறை = பதினாயிரத்துக் குறை
பதினாயிரம் + கூறு = பதினாயிரத்துக் கூறு
பதினாயிரம் + முதல் = பதினாயிரத்து முதல்

‘அடை’ என்ற தொல்காப்பியர் சொல்லாட்சியைக்
கவனியுங்கள் !

ஒரு பெயர்ச்சொல்லுக்கு ‘அடை’வரலாம் என்பது ஈண்டுக் கருத்து !

இந்த ‘அடை’ என்பதைத்தான் ஆங்கிலத்தில் Adjective என்கின்றனர்! ; மொழியியலில் (Linguistics) ‘பெயரடை’ என எழுதுகின்றனர் ! அவ்வளவுதான் !

எனவே , ‘பெயரடை’ , மொழியியலார் (Linguists) கண்டுபிடிப்பல்ல ! தொல்காப்பியருக்கும் முந்தைய தமிழர் கண்டுபிடிப்புதான் !
‘ஆயிரம்’என்பதன் புணர்ச்சியை இதுவரை கூறியிருந்தாலும் அவற்றோடு முடிக்கத் தொல்காப்பியருக்கு மனமில்லை ! விட்டுப்போன ஒன்றைச் சேர்க்கிறார் ! :-

“அளவு நிறையும் வேற்றுமை யியல” (புள்ளிமயங்கியல் 24)

அஃதாவது , ‘கலம்’ போன்ற அளவுச் சொற்களும் , ‘கழஞ்சு’ போன்ற நிறைப் பெயர்களும் (எடை பற்றிய பெயர்களும் ) ‘ஆயிரம்’ என்பதோடு புணர்ந்தால் , வேற்றுமைப் புணர்ச்சியில் , மகரம் மறைந்து , வல்லெழுத்து மிகுந்து வரும் ! :-

ஆயிரம் + கலம் = ஆயிரக் கலம் √
ஆயிரம் + கலம் = ஆயிரத்துக் கலம் ×

ஆயிரம் + சாடி = ஆயிரச் சாடி √
ஆயிரம் + சாடி = ஆயிரத்துச் சாடி ×

ஆயிரம் + தூதை = ஆயிரத் தூதை √
ஆயிரம் + தூதை = ஆயிரத்துத் தூதை ×

ஆயிரம் + பானை = ஆயிரப் பானை √
ஆயிரம் + பானை = ஆயிரத்துப் பானை ×

ஆயிரம் + கழஞ்சு = ஆயிரக் கழஞ்சு √
ஆயிரம் + கழஞ்சு = ஆயிரத்துக் கழஞ்சு ×

ஆயிரம் + தொடி = ஆயிரத் தொடி √
ஆயிரம் + தொடி = ஆயிரத்துத் தொடி ×

ஆயிரம் + பலம் = ஆயிரப் பலம் √
ஆயிரம் + பலம் = ஆயிரத்துப் பலம் ×

ஆயிரம் + பானை = ஆயிரப் பானை √
ஆயிரம் + பானை = ஆயிரத்துப் பானை ×

இளம்பூரணர் இவ்விடத்தில் கூறியுள்ள கூடுதல் செய்தியால் , கீழ்வரும் புணர்ச்சிகளையும் பெறலாம் !:-

ஆயிரம் + நாழி = ஆயிர நாழி √
ஆயிரம் + நாழி = ஆயிரம் நாழி ×

ஆயிரம் + வட்டி = ஆயிர வட்டி √
ஆயிரம் +வட்டி = ஆயிரம் வட்டி ×

ஆயிரம் + அகல் = ஆயிர வகல் √
ஆயிரம் + அகல் = ஆயிரம் மகல் ×

- இம் மூன்று புணர்ச்சிகளிலும் ‘ம்’ கெட்டுள்ளதைக்
காணலாம் !

மேலே பார்த்தவை போன்று அளவுக்கும் நிறைக்கும் ‘ஆயிரம்’ புணர்ந்தது போன்றே , ‘பதினாயிரம்’ என்ற சொல்லும் புணரும் !
மேல் எடுத்துக்காட்டுகளில் வந்துள்ளவற்றில்,

கலம், சாடி, தூதை, பானை, நாழி, படி,வட்டி, அகல் - முகத்தல் அளவுப் பெயர்கள்.
கழஞ்சு , தொடி ,பலம் – நிறுத்தல் அளவுப் பெயர்கள் .

இவையெல்லாம் கற்பனையானவை என எண்ணவேண்டாம் !

‘கழஞ்சு’ – புறநானூற்றில் (11,12) வருகிறது ! (1/6 அவுன்சு எடை கொண்டது என்று குறித்துளர் .); பல தமிழ்க் கல்வெட்டுகளில் வருகிறது !

‘தொடி’ – திருக்குறளில் வந்துள்ளது !

1 வட்டி=1 நாழி = 1 படி ஆகும் !

பலம் , நாழி , படி ஆகியன எனது சிறுவயதில் புழக்கத்தில் இருந்தனையே ! பலசரக்குக் கடைகளில் திராட்சையை இத்தனை பலம் என்று அந்நாளில் விற்று நான் வாங்கியுள்ளேன் !

ஆகவே , தொல்காப்பியம் சில இலக்கணப் புலவர்களுக்கானதுதான் என எண்ணவேண்டாம்! தொல்காப்பியம் மக்களுக்கானது !

======




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 9:07 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (70)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுப் புணர்ச்சியில் தொல்காப்பியரின் அடுத்த நூற்பாவைக் காண்போம் !

எல்லார் + கையும் = எல்லார் கையும்
-படர்க்கைப் பலர்பால் பெயருடன் நிகழ்ந்த புணர்ச்சி ; வேற்றுமைப் புணர்ச்சி .

எல்லீர் + கையும் = எல்லீர் கையும்
- இது முன்னிலைப் பலர்பால் பெயருடன் நிகழ்ந்த புணர்ச்சி ; வேற்றுமைப் புணர்ச்சி .

‘எல்லார் கையும்’ , ‘எல்லீர் கையும்’ என்பன தொல்காப்பியர் நாளையில் , ‘எல்லார் தங்கையும்’ , ‘எல்லீர் நுங்கையும்’ எனவும் வழங்கலாயின !

அப்போது தொல்காப்பியரின் மாணவர்கள், “ ‘தங்’ , ‘நுங்’ இடையிலே எப்படி வந்தன ? ” என்று கேட்டனர் !

அப்போது எழுதிய நூற்பாதான் –

“படர்க்கைப் பெயரு முன்னிலைப் பெயரும்
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயி னுருபிய நிலையும்
மெல்லெழுத்து மிகுத லாவயி னான” (புள்ளி மயங்கியல் 25)

“ ‘எல்லார் தங்கையும்’ , ‘எல்லீர் நுங்கையும்’ என்பன ‘எல்லாரும்’ என்ற பகுதியிலிருந்து வந்தன” - என்று கூறி வருமாறு விளக்கினார் :-

எல்லாரும் + கை = எல்லார் + தம் + கை + உம்= எல்லார் தங்கையும் .
(தம் – சாரியை ; உம் - சாரியை)

தொடர்களில் , ‘எல்லார் தங்கையும் சிறக்க’ , ‘எல்லார் தங்கையும் நன்றே’ என வரும் !

‘தம்’ இடையிலே வந்ததல்லவா ? இதனையே , ‘உருபுப் புணர்ச்சிக்குச் சாரியை வந்தது போல ’ என்று தொல்காப்பியர் கூறினார் ! ; ‘உருபியல் நிலையும்’ என்பதற்கு இதுவே பொருள் !

மேலே பார்த்த புணர்ச்சி ,வேற்றுமைப் புணர்ச்சிதான் எனினும் , ‘தம்’ சாரியை வந்தது உருபுப் புணர்ச்சியில் வந்தது போலாகும் ! ‘வேற்றுமையாயின் ’ என்ற தொல்காப்பியரின் தொடருக்கு இதுவே பொருள் !

உருபுப் புணர்ச்சிக்கும் வேற்றுமைப் புணர்ச்சிக்கும் உள்ள வேறுபாடு யாது ?

கடல் + கரை = கடற் கரை
- இதில் , ‘கடலினது கரை’ என்று ‘அது’ என்ற ஒரு வேற்றுமை உருபைப் போட்டு விரிக்க முடிவதால் , இது வேற்றுமைப் பொருட் புணர்ச்சி !

அஃதாவது , கடலிலிருந்து வேற்றுமைபட்ட கரை என்ற பொருளும் புணர்ந்துள்ளதால் ‘வேர்றுமைப் பொருட் புணர்ச்சி’ !

இவ்வாறு வேற்றுமைப் பொருள் புணராது , வெறும் வேற்றுமை உருபு மட்டும் புணர்ந்தால் அது ‘உருபுப் புணர்ச்சி’ !

கடல் + அது = கடலது
- இஃது உருபுப் புனர்ச்சி ! இங்கே “கடலது … என்ன” என்ற வினா,விடை கூறப்படாமல் நிற்பதைக் கவனியுங்கள் !

மேல் தொல்காப்பியர் நூற்பாவுக்கு இளம்பூரணர் தந்த சுருக்க வடிவ எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துத் தரலாம் !:-

எல்லார் + தம் + செவி+ உம் = எல்லார்தஞ் செவியும்
எல்லார் + தம் + தலை + உம் = எல்லார்தந் தலையும்
எல்லார் + தம் + புறம் + உம் = எல்லார்தம் புறமும்

மேலே ‘எல்லார்தங் கையும்’ வந்ததுபோன்றே , ‘எல்லீர்நுங் கையும்’ வரும் ! :-

எல்லீரும் = எல்லீர் (உ , ம் கெட்டன)
எல்லீர் + நும் + கை + உம் = எல்லீர்நுங் கையும்
நும் – சாரியை ; உம் – சாரியை .

எல்லீர் + நும் + செவி +உம் = எல்லீர்நுஞ் செவியும்
எல்லீர் + நும் + தலை + உம் = எல்லீர்நுந் தலையும்
எல்லீர் + நும் + புறம் + உம் = எல்லீர்நும் புறமும்

‘எல்லீரும் வருக ’ என்றால் , ‘நீங்கள் எல்லோரும் வருக’ என்பது பொருள் !

பின் , தொல்காப்பியர் ‘தாம்’ என்பதை எடுத்துக்கொள்கிறார் !:-

தாம் + கை = தம் +கை (‘தாம்’ , ‘தம்’ ஆகியது)
தம் + கை = தங்கை (sister அல்ல !)
நாம் + கை = நங்கை ( ‘நாம்’ , ‘நம்’ ஆகியுள்ளது)

யாம் + கை = எங்கை ( ‘யாம்’ , ‘எம்’ ஆகியுள்ளது)

‘தம்’ , ‘நம்’ ஆகிய சாரியைகள் பெறாமலும் புணரலாம் என்று விதிவிலக்குக் காட்டுகிறார் இளம்பூரணர் ! :-
எல்லாரும்+கை=எல்லார் கையும்√
எல்லாரும் + செவி =எல்லார் செவியும் √
எல்லாரும் + தலை = எல்லார் தலையும் √
எல்லாரும் + புறம் = எல்லார் புறமும் √

எல்லீரும் + கை = எல்லீர் கையும் √
எல்லீரும் + செவி = எல்லீர் செவியும் √
எல்லீரும் + தலை = எல்லீர் தலையும் √
எல்லீரும் + புறம் = எல்லீர் புறமும் √

மேல் தொல்காப்பிய நூற்பாவில் , ‘தொடக்கம்’ என்ற சொல் வந்ததை நோக்கவேண்டும் !

இந்நாளில் பலரும் ‘துடக்கம்’ , ‘துடங்கியது’ , ‘துடங்கிவைத்தார்’ என்றெல்லாம் எழுதுகின்றனர் ! தவறு இது !
‘தொடக்கம்’ , ‘தொடங்கியது’ , ‘தொடங்கிவைத்தார்’ என்றுதான் எழுதவேண்டும் !

‘எல்லாரும் ’ , ‘எல்லீரும்’ முதலியவற்றிற்கான வேற்றுமைப் புணர்ச்சிகளை மேலே பார்த்தோம் !
இவை அல்வழிப் புணர்ச்சியில் எப்படி வரும் ?

தொல்காப்பியர் விடை !:-

“அல்லது கிளப்பினும் இயற்கை ஆகும்” (புள்ளி மயங்கியல் 26)

அல்லது – அல்வழிப் புணர்ச்சி .

இயற்கை – இயல்பாகச் சாரியை பெறாது முடியும் .

எடுத்துக்காட்டுகள் :-

எல்லாரும் +குறியர் = எல்லாருங் குறியர் .
(புணர்ச்சியில் சாரியை வராவிடினும் , ‘ங்’ என்ற மெல்லெழுத்து வந்ததைக் காண்க .)

எல்லாரும் + சிறியர் = எல்லாருஞ் சிறியர்
எல்லாரும் + தீயர் = எல்லாருந் தீயர்
எல்லாரும் + பெரியர் = எல்லாரும் பெரியர்
எல்லாரும் + குறியீர் = எல்லீருங் குறியீர்
(முன்னிலை விளியாதலின் , ‘குறியர்’ என வராது ‘குறியீர்’ என வந்தது.)

எல்லீரும் + சிறியீர் = எல்லீருஞ் சிறியீர்
எல்லீரும்+ தியீர் = எல்லீருந் தீயீர்
எல்லீரும் + பெரியீர் = எல்லீரும் பெரியீர்

நாம் + குறியம் = நாங் குறியம்
( ‘தாம்’ என்பது வேற்றுமைப் புணர்ச்சியில் ‘தம்’ ஆனதுபோல , அல்வழிப் புணர்ச்சியில் ஆகவில்லை)
நாம் + தீயம் = நாந் தீயம்
நாம் + பெரியம் = நாம் பெரியம்
யாம் + குறியேம் = யாங் குறியேம்
( ‘குறியம்’ – பேசுவோர்களையும் முன்னால் இருப்பவர்களையும் சேர்த்துக் குறிக்கும்;
‘குறியேம்’ – பேசுவோர்களை மட்டும் குறிப்பது;
இதை வைத்துத்தான் திவ்வியப் பிரபந்த உரைகளில் ‘அடியேங்கள்’ என்ற சொல் வரலாயிற்று !
‘அடியேங்கள்’ – அடியவர்களாகிய நாங்கள் .)

யாம் + சிறியேம் = யாஞ் சிறியேம்
யாம் + தீயேம் = யாந் தீயேம்
யாம் + பெரியேம் = யாம் பெரியேம்

ஈண்டு , இளம்பூரணர் மேலும் சில எடுத்துக் காட்டுகளைத் தருகிறார் !:-

எல்லாரும் + நீண்டார் = எல்லாருந் நீண்டார்
எல்லாரும் + நீண்டீர் = எல்லாருந் நீண்டீர்
எல்லாரும் + நீண்டாம் = எல்லாருந் நீண்டாம்
எல்லாரும் + நீண்டேம் = எல்லாருந் நீண்டேம்

இந்தவகைச் சொற்கள் எல்லாம் இன்று வழக்கில் இல்லை !

சற்று வேறுபாடான காரண காரிய இயைபு (Logic) குறைந்த புணர்ச்சிகள் தமிழில் மறைந்த வரலாறு இது !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 11:00 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (71)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33


மகர இறுதிச் சொற்களின் புணர்ச்சியில் ‘எல்லாம்’ எனும் சொல்லை அடுத்ததாக எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

‘எல்லாம்’ எனும் சொல் சற்று வேறுபாடானது !

மனிதர்கள் எல்லாம் வந்தனர் √
மடுகள் எல்லாம் வந்தன √

மனிதர்களுக்கும் மாடுகளுக்கும் பொதுவாக ‘எல்லாம்’ வருகிறது பார்த்தீர்களா ?

இவ்வாறு மனிதர்களுக்கும் , விலங்கு இயற்கைகளுக்கும் பொதுவாக வரும் சொல்லை , ‘விரவுச் சொல்’ என்று தமிழில் குறிப்பார்கள் !

தொல்காப்பியர் ‘எல்லாம்’ எனும் விரவுச் சொல்லின் புணர்ச்சியை ,

“அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை அல்வழிச் சாரியை நிலையாது” (புள்ளி மயங்கியல் 27)
என்கிறார் !

இளம்பூரணர் இதற்குக் காட்டும் எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துக் காட்டலாம் ! :-

எல்லாம் + குறியர் = எல்லாக் குறியரும் (உயர் திணை)
எல்லாம் + குறிய = எல்லாக் குறியவும் (அஃறிணை)

எல்லாம் + தீயர் = எல்லாத் தீயரும் (உயர் திணை)
எல்லாம் + தீய = எல்லாத் தீயவும் (அஃறிணை)

எல்லாம் + பெரியர் = எல்லாப் பெரியரும் (உயர் திணை)
எல்லாம் + பெரிய = எல்லாப் பெரியவும் (அஃறிணை)

- இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சிகள் !

எல்லாம் + கோடு = எல்லாவற்றுக் கோடும் (அஃறிணை)
= எல்லாம் + வற்று + கோடு + உம் ; வற்று , உம் – சாரியைகள் .

எல்லாம் + செவி = எல்லாவற்றுச் செவியும் (அஃறிணை)
எல்லாம் + தலை = எல்லாவற்றுத் தலையும்(அஃறிணை)
எல்லாம் + புறம் = எல்லாவற்றுப் புறமும் (அஃறிணை)

- இவை அனைத்தும் வேற்றுமைப் புணர்ச்சிகள் !

அடுத்த நூற்பாவில் ,

“மெல்லெழுத்து மிகினு மான மில்லை” (புள்ளி மயங்கியல் 28)

என்று தொல்காப்பியர் நவின்றதற்கு இளம்பூரணர் தந்த காட்டுகள் !:-

எல்லாம் + குறிய = எல்லாங் குறியவும் √
(சாரியை இலாது புணர்ந்துள்ளதை நோக்குக)

எல்லாம் + சிறிய = எல்லாஞ் சிறியவும் √
எல்லாம் + தீய = எல்லாந் தீயவும் √
எல்லாம் + பெரிய = எல்லாம் பெரியவும் √
எல்லாம் + குறியர் = எல்லாங் குறியரும் √
எல்லாம் + பெரியர் = எல்லாம் பெரியரும் √
எல்லாம் + தீயர் = எல்லாந் தீயரும் √

- இவை அனைத்தும் அல்வழிப் புணர்ச்சிகள் !

‘எல்லாம் பெரியரும்’ என்பதில் ஈற்று ‘உம்’ சாரியை என்றே உரையாசிரியர்களால் காட்டப்பட்டுள்ளது .

இதனை உறுதிப்படுத்தும் வகையில் , இளம்பூரணர் உரை , “உரையிற் கோடல் என்பதனால் இறுதி ‘உம்’மின்றி ‘எல்லாங் குறிய ’ , ‘எல்லாங் குறியர்’ எனவும்படும் ” என அமைகிறது .

அஃதாவது , ‘எல்லாங் குறிய’ என்பதே கூற வந்த செய்தி ! ‘எல்லாக் குறியவைகளும்’ என்பது கூறவந்த செய்தி அல்ல ! ‘எல்லாக் குறியவைகளும்’ என்பது கூறவந்த செய்தியானால் ஈற்று ‘உம்’ , முற்றும்மை ஆகும் ! அப்போது ஈற்று ‘உம்’ சாரியை ஆகாது !
தொல்காப்பியர் நவின்ற ‘எல்லாரும்’ , ‘எல்லாம்’ பற்றிய நுட்பங்களில் பல நமக்கு இன்று நெருக்கமில்லாதவை ! அவற்றை விளங்கிக்கொள்ள மேலே பார்த்த இளம்பூரணர் உரை ஓரளவிற்கு உதவுகிறது !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 2:02 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (72)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

அரசு அலுவலகங்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காகக் குறிப்பாணை (Memo) தருவார்கள் !
அதில் உள்ள வாசகங்கள் சுவையாக இருக்கும் !

“உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ?” என்ற வினாவை இதே மாதிரி எழுதமாட்டார்கள் ! “உம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது ? ” என்று ‘உம்’போட்டு எழுதுவார்கள் !

‘உங்கள்’ என்ற மதிப்புத் தரும் சொல்லைத் தவிர்த்து , ‘உம்’ என்ற மதிப்புக் குறைவான சொல்லைப் போட்ட வரலாற்றைக் குடைந்தால் , அது தொல்காப்பியத்தில் , மகர ஈற்றுப் புணர்ச்சி பற்றிய ஒரு நூற்பாவில் போய் முடிகிறது!

அந் நூற்பா !:-

“நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 30)

இந்த ‘நும்’ , ஒரு விரவுப் பெயர் என்று நமக்குத் தெளிவு படுத்துபவர் இளம்பூரணரே !

இளம்பூரணரின் சுருக்க எடுத்துக்காட்டுகளை நாம் வருமாறு விரித்துக்கண்டால் தொல்காப்பிய நூற்பா விளங்கும் ! :-

நும் + கை = நும்கை ×
நுங்கை √

நும் + செவி = நும் செவி ×
நுஞ் செவி √

நும் + தலை = நும் தலை ×
நுந் தலை √

நும் + புறம் = நுப் புறம் ×
நும் புறம் √

- இவை யாவுமே வேற்றுமைப் புணர்ச்சிகள்தாம் !

இவற்றில் வந்த ‘நும்’ ஓர் விரவுப் பெயர் என முன்பே பார்த்தோம் !

அஃதாவது , ஒரு மனிதனைப் பார்த்து , ‘நும் காது’ என்று சொல்லலாம் ; ஒரு மாட்டைப் பார்த்து , ‘நும் காது’ எனவும் சொல்லலாம் ! “ மாடு புரிந்துகொள்ளுமா ? ” என்று கேட்காதீர்கள் ! விலங்குகளைப் பார்த்துப் பேசுவதும் பாடுவதும் தமிழில் ஒரு மரபுதான் ! “தாரா தாரா வந்தாரா ? அவர் சங்கதி ஏதும் சொன்னாரா ?” என்று தாராவைக் (தாரா- வாத்து) கேட்பது போன்ற பாட்டை நாம் அறிவோம் ! தராவுக்கு அக் கேள்வி புரிந்ததா ?

இளம்பூரணர் உரை முடிவில் , “ஒன்றின முடித்தல் என்பதனால் , ‘உங்கை’ என ‘உம்’ என்பதன் முடிபும் இவ்வீறாகக் கொள்க !” என்று எழுதுகிறார் !

இதில்தான் நாம் கட்டுரைத் தொடக்கத்தில் தேடிய வரலாறு நிற்கிறது !

அஃதாவது , ‘உம்’ என்பதும் ‘எல்லாம்’ , ‘நும்’ என்பன போன்ற ஓர் விரவுப் பெயர்தான் என்பது இளம்பூரணர் உரையால் அறிய முடிகிறது !

அறியப்படவேதான் , ‘உம்’ என்பது மனிதனுக்கும் எழுதலாம் , விலங்குக்கும் எழுதலாம் என்பது விளங்குகிறது ! அப்போதுதான் , குறிப்பாணைகளில் இந்த விரவுச் சொல்லான ‘உம்’மைத் தேர்ந்தெடுத்து , ‘உங்கள் மீது’ என எழுதாமல் ‘உம் மீது’ என்று எழுதிய மர்மமும் விளங்கியது !

‘நும்’ என்பதன் இனமாகவே ‘உம்’மும் உள்ளதால் , ‘ஒன்றினம் முடித்தல்’ என்ற உத்தியைப் பாய்ச்சுகிறார் இளம்பூரணர் !
பொருள் கொள்ளும் உத்திகளில் (Techniques) , ‘ஒன்றினம் முடித்தல்’ என்பதும் ஒன்று !

அஃதாவது , ஓர் இனத்தின் ஓர் உறுப்புக்குப் பொருந்தும் உண்மை , அதே இனத்து இன்னோர் உறுப்புக்கும் பொருந்தும் என்பதே இந்த உத்தியின் அடிப்படை !

இலக்கணம் கூறுவதில் மட்டும்தான் உத்திகள் என்று நினைக்காதீர்கள் ! உரைகளிலும்தான் உத்திகள் !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 26, 2013 2:33 pm



தொடத் தொடத் தொல்காப்பியம் (73)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப். (வடமொழி), பி.எச்டி.
சென்னை-33

‘நீங்கள் குட்டையானவர்கள்’ – இன்றைக்கு எழுதுகிறோம்; சிக்கல் இல்லை !

ஆனால் , தொல்காப்பியருக்கு முந்தைய தமிழில் இதனையே , ‘நீயிர் குறியீர்’ எனவும் குறிக்கும் பழக்கம் இருந்தது !

இதிலுள்ள ‘நீயிர்’ என்பது எப்படி வந்தது ?

‘நும்’ என்பதிலிருந்து வந்தது - தொல்காப்பியர் விடை !

‘நும்’ என்பதிலிருந்து ‘நீயிர்’ எப்படி வருமாம் ?

இப்படியாம் !:-

நும் – உகரம் கெட – ந்ம்
ந்ம்- ஈ வர – நீஇம்
நீஇம்- ம் கெட – நீஇ
நீஇ – ரகர மெய் வர – நீஇர்
நீஇர் – யகர உடம்படுமெய் வர – நீயிர்

பிறகு ?

பிறகு , நீயிர் + குறியீர் = நீயிர் குறியீர் ஆகும் !

இஃது அல்வழிப் புணர்ச்சி !

இவ்வாறே ,

நீயிர் + சிறியீர் = நீயிர் சிறியீர்
நீயிர் + தீயீர் = நீயிர் தீயீர்
நீயிர் + பெரியீர் = நீயிர் பெரியீர்

என வரும் என்கிறார் இளம்பூரணர் !

ஓலைச் சுவடிகளில் தொல்காப்பியர் காலத்து மாணவர்கள் ‘நீயிர் பெரியீர் ’ என்பதைச் சரியாக எழுதாது விருப்பப்படி மாற்றி மாற்றி எழுதியிருப்பர் ! அதனைத் திருத்திச் செம்மைப் படுத்தவே தொல்காப்பியர் மறக்காமல் மேலைக் கருத்தை உள்ளடக்கிக் கீழ்வரும் நூற்பாவை எழுதினார் !:-

“அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இஇடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
ப்பால் மொழிவயின் இயற்கை யாகும்”
(புள்ளிமயங்கியல் 31)

இந் நூற்பாவிற்கு , இளம்பூரணர் நாம் மேலே பார்த்த எடுத்துக்காட்டுகளை எழுதிவிட்டு , “ஞான்றீர், நீண்டீர், மாண்டீர் என இயல்பு கணத்தோடும் ஒட்டுக” என்று முடித்தார் !

இதன் பொருள் ?

வன் கணம் அல்லாத ஏனை மூன்று கணங்களும் இயல்புக் கணங்களே !

அஃதாவது , க,ச,ட,த,ப என்ற ஐந்து வல்லெழுத்துகளே வன்கணம் !
ஏனை , உயிர் எழுத்துகள், மெல்லெழுத்துகள், இடையின எழுத்துகள் ஆகிய மூன்றும் இயல்புக்கணம் !

இளம்பூரணர் காட்டிய ஞான்றீர், மாண்டீர் , நீண்டீர் ஆகிய மூன்று சொற்களும் இயல்புக் கணங்களில் ஒன்றான மெல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களே !

இளம்பூரணர் ஒட்டச் சொன்னபடி ஒட்டினால் ,

நீயிர் + ஞான்றீர் = நீயிர் ஞான்றீர்
நீயிர் + மாண்டீர் = நீயிர் மாண்டீர்

என வரும் !

இம் மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே !

இடையே சந்தி விகாரம் எதுவும் ஏற்படவில்லை கவனிக்க

‘நீயிர்’ என்பது ‘நும்’மிலிருந்து வந்ததாகத் தொல்காப்பியர் கூறினாரல்லவா ?

இதனை இன்றைய மொழியிலாளர்கள் ஒத்துக்கொள்வதில்லை ! “ஏன் சுற்றிவளைத்து ? நீ + இர் = நீயிர் என்று சொல்லவேண்டியதுதானே ?” என்பது அவர்களுடைய வாதம் !

மொழியியலார் வாதம் , ‘நீயிர்’ வந்த பிறகு கூறப்படும் இலக்கணம் ! தொல்காப்பியர் , ‘நீயிர்’ வருவதற்கு முன்பிருந்த தமிழிலிருந்தல்லவா கொண்டுவரக் கடமைப்பட்டவர் ? அதனால்தான் இருவேறு வாதங்கள் !

தவிர்க்க முடியாதவை இவை !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 30, 2013 9:54 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (74)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்று முதனிலைத் தொழிற் பெயர்களை அடுத்து எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் !

முதனிலைத் தொழிற்பெயர் என்றால் ?

விகுதி பெறாத தொழிற் பெயரையே முதனிலைத் தொழிற்பெயர்(Verbal roots without suffix) என்கிறோம் !

முதல் + நிலை = முதனிலை

சில எடுத்துக்காட்டுகள் :-

முதனிலைத் தொழிற்பெயர் ------------- விகுதி பெற்ற தொழிற் பெயர்

பம் ----------------------------------- பம்மல்
செம் ------------------------------------ செம்மல்
தும் ----------------------------------- தும்மல்
விம் ----------------------------------- விம்மல்
கம் ----------------------------------- கம்மல்

மகர ஈற்று முதனிலைத் தொழிற் பெயர்கள் அல்வழியில் எப்படிப் புணரும், வேற்றுமையில் எப்படிப் புணரும் என்பதைத் தொல்காப்பியர் –

“தொழிற் பெய ரெல்லாம் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல் 32)

என்றார் !

இதில் என்ன விளங்குகிறது ?

ஒன்றும் விளங்கவில்லை !

“தொழிற் பெயர் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , “தொழிற் பெயர் போலப் புணரும் ” என்றால் என்ன செய்வது ?

இங்கேதான் உரையாசிரியர் (Commentator) தேவைப்படுகிறார்!

மனப்பாட நோக்கத்திற்காகத் தொல்காப்பியர் அவ்வாறு சுருக்கமாக நூற்பா எழுதினார் ! நாம் இளம்பூரணர் முதலியோர் உரைகொண்டு பொருளைத் துலக்கி அறியவேண்டும் !

இளம்பூரணர் உரைப்படி , ‘செம்’ என்ற முதனிலைத் தொழிற் பெயரானது , அல்வழிப் புணர்ச்சியில் , கீழ்வருமாறு புணரும் ! :-

செம் + கடிது = செம்முக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
செம்+ சிறிது = செம்முச் சிறிது (உ-சாரியை ; க்-சந்தி)
செம்+ தீது = செம்முத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
செம் + பெரிது = செம்முப் பெரிது (உ-சாரியை ; ப்- சந்தி)
செம் + ஞான்றது = செம்மு ஞான்றது (உ-சாரியை)
செம் + நீண்டது = செம்மு நீண்டது (உ - சாரியை)
செம் + மாண்டது = செம்மு மாண்டது (உ- சாரியை)
செம் + வலிது = செம்மு வலிது (உ- சாரியை)

இளம்பூரணர் காடிய வழியில் நாம் வேறு சில எடுத்துக்காட்டுகளைத் தரலாம் !:-

தூக்கம் + கடிது = தூக்கங் கடிது (அல்வழிப் புணர்ச்சி)
தூக்கம் + கடுமை = தூக்கக் கடுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

ஆக்கம் + சிறிது = ஆக்கஞ் சிறிது (அல்வழிப் புணர்ச்சி)
ஆக்கம் + சிறுமை = ஆக்கச் சிறுமை (வேற்றுமைப் புணர்ச்சி)

தாக்கம் + பெரிது = தாக்கம் பெரிது (அல்வழிப் புணர்ச்சி)
தாக்கம் + பெருமை = தாக்கப் பெருமை (வேற்றுமைப் புணர்ச்சி)


‘நாட்டம்’ என்பதைப் போலவே , இங்கே வந்துள்ள ‘தாக்கம்’ , ‘ஆக்கம்’ ஆகியனவும் ‘அம்’ எனும் தொழிற் பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர்களே !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jun 01, 2013 11:53 am


தொடத் தொடத் தொல்காப்பியம் (75)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் உகரச் சாரியை (Expletive particle ‘U’) முதலியன பெற்றுப் புணர்ந்ததை முன் கட்டுரையில் பார்த்தோம் !

அடுத்ததாகத் , தொழிற்பெயர் மட்டுமல்லாது , சில பொருட் பெயர்களும் அதே பாங்கில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-

“ஈமுங் கம்மு முருமென் கிளவியும்
ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன” (புள்ளி மயங்கியல் 33)

இதற்கு இளம்பூரணர் காட்டிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விவரிக்கலாம் !:-

ஈம் + கடிது = ஈமுக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
கம் + கடிது = கம்முக் கடிது (உ- சாரியை ; க்- சந்தி)
உரும் + கடிது = உருமுக் கடிது (உ – சாரியை ; க்- சந்தி)

ஈம் + சிறிது = ஈமுச் சிறிது (உ- சாரியை ; ச்-சந்தி)
கம் + சிறிது = கம்முச் சிறிது (உ- சாரியை ; ச்- சந்தி)
உரும் + சிறிது = உருமுச் சிறிது (உ- சாரியை ;ச் - சந்தி)

ஈம் + தீது = ஈமுத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
கம் +தீது = கம்முத் தீது (உ- சாரியை ; த்- சந்தி)
உரும் + தீது = உருமுத் தீது (உ-சாரியை ; த்- சந்தி)

ஈம் + பெரிது = ஈமுப் பெரிது (உ-சாரியை ; ப்- சந்தி)
கம் + பெரிது = கம்முப் பெரிது (உ- சாரியை ; ப்- சந்தி)
உரும் + பெரிது = உருமுப் பெரிது (உ- சாரியை ; ப்- சந்தி)

- இப் பன்னிரண்டும் அல்வழிப் புணர்ச்சிகளே !

மேலே வந்தவை வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் , ஈம் ,கம் , உரும் ஆகிய பெயர்கள் கொண்ட புணர்ச்சி !

இதே பெயர்கள் , மெல்லெழுத்து இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணர்வதையும் சுருக்கமாகக் குறிக்கிறார் இளம்பூரணர் !இதனை வருமாறு விரிக்கலாம் !:-

ஈம்+ ஞான்றது = ஈமு ஞான்றது (உ-சாரியை)
கம் + ஞான்றது = கம்மு ஞான்றது (உ-சாரியை)
உரும் + ஞான்றது = உருமு ஞான்றது (உ- சாரியை)

ஈம் + நீண்டது = ஈமு நீண்டது (உ- சாரியை)
கம் + நீண்டது = கம்மு நீண்டது (உ- சாரியை)
உரும் +நீண்டது = உருமு நீண்டது (உ- சாரியை)

ஈம் + வலிது = ஈமு வலிது (உ- சாரியை)
கம் + வலிது = கம்மு வலிது (உ- சாரியை)
உரும் + வலிது = உருமு வலிது ( உ- சாரியை)

-இவ் வொன்பதும் அல்வழிப் புணர்ச்சிகளே !

இனி, வேற்றுமைப் புணர்ச்சியில் , இதே மூன்று பெயர்களும் புணர்வதை வருமாறு குறித்தார் இளம்பூரணர் ! :-

ஈம் + கடுமை = ஈமுக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
கம்+ கடுமை = கம்முக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)
உரும் + கடுமை = உருமுக் கடுமை (உ- சாரியை ; க்- சந்தி)

ஈம் + சிறுமை = ஈமுச் சிறுமை (உ – சாரியை; ச் - சந்தி)
கம் + சிறுமை = கம்முச் சிறுமை (உ- சாரியை ; ச் - சந்தி)
உரும் + சிறுமை = உருமுச் சிறுமை (உ- சாரியை ; ச் - சந்தி)

ஈம் + தீமை = ஈமுத் தீமை (உ-சாரியை; த்- சந்தி)
கம் + தீமை = கம்முத் தீமை (உ- சாரியை ; த்- சந்தி)
உரும் + தீமை = உருமுத் தீமை (உ- சாரியை ; த்- சந்தி)

ஈம்+ பெருமை = ஈமுப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
கம் + பெருமை = கம்முப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)
உரும் + பெருமை = உருமுப் பெருமை (உ- சாரியை ; ப்- சந்தி)

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்ந்ததை மேலே பார்த்தோம் !

இதைப் போன்றே , மெல்லெழுத்து,இடையெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் ஈம், கம் , உரும் ஆகிய பெயர்களுடன் வந்து புணருமாற்றை , இளம்பூரணர் வழியில் , வருமாறு காட்டலாம் ! :-

ஈம் + ஞாற்சி = ஈமு ஞாற்சி(உ- சாரியை )
கம் + ஞாற்சி = கம்மு ஞாற்சி (உ- சாரியை )
உரும் + ஞாற்சி = உருமு ஞாற்சி (உ- சரியை)

ஈம் + நீட்சி = ஈமு நீட்சி (உ- சாரியை)
கம் + நீட்சி = கம்மு நீட்சி (உ- சாரியை)
உரும் + நீட்சி = உருமு நீட்சி (உ - சாரியை)

ஈம் + வலிமை = ஈமு வலிமை (உ- சாரியை)
கம் + வலிமை = கம்மு வலிமை (உ- சாரியை)
உரும் + வலிமை = உருமு வலிமை ( உ- சாரியை)

- இவ் வொன்பதும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

மேலே வந்த மூன்று பெயர்களின் பொருள்தான் என்ன ?

ஈம்- சுடுகாடு .
கம் - ‘கம்மியர்’ எனப்படும் விசுவகர்மர்களின் தொழில்களைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர்.
உரும்- இடி .

இவற்றில் , ‘ஈம்’ என்பது அருஞ்சொல் போலத் தோன்றும் ! ஆனால் , இது நமக்குப் பழக்கமான சொல்தான் !

‘ஈமச் சடங்கு’ – சொல்கிறோ மல்லவா? இதில் வரும் ‘ஈம்’தான் !

விசுவகர்மர்கள் சிலை செய்தாலும் , நகை செய்தாலும் , மரவேலை செய்தாலும் வெட்டிக் குறைக்கும் பணிதான் அவர்களின் முதற் பணி ! ‘கம்மி ரேட்டுக்கு வாங்கினேன்’ – சொல்கிறோ மல்லவா? கம்மி – குறைந்த .
ஆகவே , ‘கம்’ என்ற அடி நமக்குப் பழக்கமான அடி (Stem) அல்லவா?

ஈம், கம், உரும் – ஆகிய பெயர்களை இளம்பூரணர் குறிக்குப்போது , ‘பொருட் பெயர்கள்’ என்ற ஒரு கலைச் சொல்லால் (Technical term) அவற்றைக் குறிக்கிறார் !

பொருட் பெயர் என்றால் என்ன ?

பொருளைக் குறிக்கும் பெயர் பொருட் பெயர் !

ஒரு பொருளைக் குறிக்கும் பெயரும் பொருட் பெயர்தான் ; ஒரு பொருளின் அடியாகப் பிறக்கும் பெயரும் பொருட் பெயர்தான் !

மாங்காய் – ஒரு பொருளைக் குறிப்பது ; பொருட் பெயர் .
பொன்னன் – ‘பொன்’ என்ற பெயர் அடியாகப் பிறந்த பெயர் ; பொருட் பெயர்.

‘மாங்காய் ’ – ஒரு பொருளைக் குறிப்பதால் பொருட் பெயரென்று பார்த்தோம் ! அதுவும் பொருட் பெயர்தான் , ‘தோப்பு’ என்றாலும் அதுவும் பொருட் பெயர்தான் ! இதனால்தான் சுடுகாட்டைக் குறிக்கும் ‘ஈம்’ பொருட் பெயரானது !

தொழிற் பெயரிலிருந்து வேறுபடுத்தவே ‘பொருட் பெயர்’ என்ற கலைச் சொல்லைப் பயன்படுத்தினார் இளம்பூரணர் !

ஈம், கம், உரும் – இந்த உதாரணங்களைத்தான் பொருட் பெயருக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா? வேறு சொற்களை எடுத்துக்கொள்ளக் கூடாதா?

நிலம் - இஃது ஒரு பொருட் பெயர்தான்; இதனை சோதித்துப் பார்ப்போமே!

நிலம் + கடுமை = நிலக் கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
நிலம் + கடுமை = நிலமுக் கடுமை ×

பார்த்தீர்களா? வேற்றுமைப் புணர்ச்சியில் ,உகரச் சாரியையை ‘நிலம்’ என்ற பொருட் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை !

அல்வழியில் சோதிப்போமே !

நிலம் + நீண்டது = நில நீண்டது√ (அல்வழிப் புணர்ச்சி)
நிலம் + நீண்டது = நிலமு நீண்டது ×

இங்கும் உகரச் சாரியையை ‘நிலம்’ என்ற பொருட் பெயர் ஏற்றுக்கொள்ளவில்லை !

தொழிற் பெயர்களைப்போன்றே சில பொருட் பெயர்களும் உகரச் சாரியை பெறும் என்ற தொல்காப்பியர் விதிக்கு ஏற்புடைய எடுத்துக்காட்டுகளைத்தான் இளம்பூரணர் தந்துள்ளார் என்பது நமது மொழிச் சோதனைச் சாலையில் (Language lab) தெளிவாகிவிட்டதல்லவா?

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 02, 2013 12:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (76)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுச் சொற்களில் வரும் ஈற்று மகரம் அரை மாத்திரை கொண்டது !

கலம் – இதில் ‘ம்’க்கு மாத்திரை - ½

ஆனால், மகர இறுதிச் சொற்களின் முன்னே ‘வ’வை முதலாகக் கொண்ட சொற்கள் வந்தால் , அப்போது , மகர மாத்திரை அரையிலிருந்து கால் ஆகும் ! இதற்கு மகரக் குறுக்கம் (Shortening of ‘m’) என்று பெயர் !

இதற்கு விதி ! :-

“வகார மிசையு மகாரம் குறுகும்” (புள்ளி மயங்கியல் 35)

இளம்பூரணர் , இதற்கு உரை எழுதும்போது தொல்காப்பியர் ஏற்கனவே இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிய இடங்களை நமக்கு நினைப்பூட்டுகிறார் ! (இதுதான் இளம்பூரணர் உரைத்திறன் என்பது) :-

1. ‘நூன் மரபு’ப் பகுதியில் சூத்திரம் 13
2. ‘மொழி மரபு’ப் பகுதியில் சூத்திரம் 19

1. நூன் மரபுச் சூத்திரம் 13 –

“அரையளபு குறுகல் மகர முடைத்தே
இசையிட னருகுந் தெரியுங் காலை”

அஃதாவது , வேறு ஓர் ஓசையுடன் இணைந்து ‘ம்’வரும்போது , ‘ம்’மின் அரை மாத்திரை ஒலி அளபு , கால் மாத்திரை அளபாகக் குறைந்து ஒலிக்கும் !

இதற்கு எடுத்துக்காட்டாக இளம்பூரணர் , ‘போன்ம்’ என்ற சொல்லைக் காட்டுகிறார் !

இதில் , ஈற்று ‘ம்’க்கு மாத்திரை ¼ ஆகும் ! இதுவே மகரக் குறுக்கம் என்பது !

2. மொழி மரபுச் சூத்திரம் 19 –

“ னகார முன்னர் மகாரங் குறுகும்”

இதற்கும் எடுத்துக்காட்டாக இளம்பூரணர் ‘போன்ம்’ என்ற சொல்லையே காட்டுகிறார் ! இங்கும் , மேலே கூறியபடி , ‘ம்’மின் மாத்திரை ¼தான் !

இந்த இரு இடங்களில் மகரக் குறுக்கம் பேசிவிட்ட பிறகும் , மகர ஈற்றுச் சொற்களைப் பேசும் புள்ளி மயங்கியலிலும் , நாம் தொடக்கத்தில் காட்டியபடி , மகரக் குறுக்கம் பேசுகிறார் தொல்காப்பியர் !

இவ்வாறு , ஓரிடத்தில் கூறிய செய்தியைத் திடீரென்று இன்னோர் இடத்தில் இணைத்துப் பேசுவதைத்தான் இளம்பூரணர் , ‘பருந்து விழுக்காடாய்’ என்றார் !

பருந்து வானில் எங்கோ தூரத்தில் வட்டமிட்டுக்கொண்டிருக்கும் ! திடீரென்று தரையில் பாய்ந்து ஒரு கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு பறந்துவிடும் !

இதுதான் பருந்து விழுக்காடு !

தொல்காப்பியரின் செய்கையை இதனோடு ஒப்பிட்டு இரசியுங்கள் !

உரைநடைதான் எழுதுகிறார் தொல்காப்பியர் ! ஆனால் , அதனைத் தெளிவாக்க எப்படிப்பட்ட அருமையான – சுவையான- உவமையைத் (Simile) தருகிறார் பார்த்தீர்களா?

‘நிலம் வலிது’ – என்ற இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் போல மேலும் சில மகரக் குறுக்க எடுத்துக்காட்டுகளை நாம் தரலாம் ! :-

கயம் வந்தது
படம் வரைந்தான்
சூடம் வழங்கினான்
பட்டம் வலிது

‘ம்’ என்பது மூக்கொலி (Nasal) ஆகும் !

‘வ’ என்பது பல்லிதழ் ஒலி (Labio dental) ஆகும்!

இந்த இரண்டும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, திணறல் ஏற்படுகிறது ; இதனால் , ஒன்று பணிந்துபோகவேண்டியுள்ளது ! இதுதான் மகரக் குறுக்கத்தின் இரகசியம் !

***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 02, 2013 7:11 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (77)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுப் புணர்ச்சிகளின் இறுதிக் கட்டத்திற்கு வந்துள்ளோம் !

மகர ஈற்றில் முடியும் நாட்பெயர்ச் சொல் வேற்றுமையில் எப்படிப் புணரும் என்று பேசுகிறார் தொல்காப்பியர் ! :-

“நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்து மான்மிசை வரைநிலை யின்றே
ஒற்றுமெய் கெடுத லென்மனார் புலவர்” (புள்ளி மயங்கியல் 36)

‘மகம்’ – இது ‘ம்’ ஈற்று நாட்பெயர்க் கிளவி ! ‘மக நட்சத்திரம்’ என்று கூறக் கேட்டிருப்பீர்கள் !

இஃது எப்படி வேற்றுமைப் பொருளில் புணருமாம் ?

மகம் நட்சத்திரத்தன்று ஒரு பொருளை வாங்கினால் , அப்போது , ‘மகத்தாற் கொண்டான்’ எனலாம் !

மகம் + கொண்டான் = மகம் + அத்து + ஆன் + கொண்டான்
= மகத்தாற் கொண்டான்.
அத்து – சாரியை; ஆன் -சாரியை.

இது போன்றே ,
மகம் + சென்றான் = மகம் + அத்து + ஆன் + சென்றான்
= மகத்தாற் சென்றான்

மகம் + தந்தான் = மகம் + அத்து + ஆன் + தந்தான்
= மகத்தாற் றந்தான்

மகம் + போயினான் = மகம் + அத்து + ஆன் + போயினான்
= மகத்தாற் போயினான்
என வரும்!

இங்கு ‘ஆன்’ சாரியை வந்தது போன்றே , ‘ஞான்று’ என்ற ஒரு சாரியையும் வரும் என்கிறார் இளம்பூரணர் ! :-

மகம் + கொண்டான் = மகம் + அத்து + ஞான்று +கொண்டான்
= மகத்து ஞான்று கொண்டான் .
அத்து – சாரியை; ஞான்று -சாரியை.

இது போன்றே ,

மகம் + சென்றான் = மகம் + அத்து + ஞான்று +சென்றான்
= மகத்து ஞான்று சென்றான் .

மகம் + தந்தான் = மகம் + அத்து + ஞான்று + தந்தான்
= மகத்து ஞான்று தந்தான் .

மகம் + போயினான் = மகம் + அத்து + ஞான்று + போயினான்
= மகத்து ஞான்று போயினான் .

என வரும்!

‘ஞான்று’ எனும் சாரியையைத் தொல்காப்பியர் கூறவில்லை ! ‘அத்து’, ‘ஆன்’ ஆகிய இரு சாரியைகளை மட்டுமே அவர் கூறினார் ! இளம்பூரணராகச் சேர்த்துக் கொண்டதுதான் ‘ஞான்று’ !

தொல்காப்பியர் கூறாத வேறு ஒரு முடிபையும் இளம்பூரணர் உரைக்கிறார் !

அஃதாவது , “நாட் பெயர்தான் , வேற்றுமையில், இப்படிப் புணரும் என எண்ணவேண்டாம் ! சில பொருட் பெயர்களும் அதே முறையில் புணரும் ” என்கிறார் இளம்பூரணர்!

அவர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விரித்துக் காட்டலாம் !:-

மரம் + கொண்டான் = மரம் + அத்து + ஆன் + கொண்டான்
= மரத்தாற் கொண்டான்.
அத்து – சாரியை; ஆன் -சாரியை.

மரம் + சென்றான் = மரம் + அத்து + ஆன் +சென்றான்
= மகத்தாற் சென்றான் .

மரம் + கொண்டான் = மரம் + அத்து + ஆன் + கொண்டான்
= மரத்தாற் கொண்டான்

மரம் + போயினான் = மரம் + அத்து + ஆன் + போயினான்
= மரத்தாற் போயினான்

- இந் நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

மரம் – பொருட் பெயர்;அஃதாவது பொருளின் பெயர் .

மரத்தாற் கொண்டான் - மரத்தினால் கொண்டான் ; இதில் வேற்றுமைப் பொருள் இருப்பதை நோக்கலாம் .

மேல் தொல்காப்பிய நூற்பாவில், ‘முந்து கிளந்தன்ன’ என்பதை நோக்கலாம் !

‘முன்னே சொன்னது போல ’ என்பது இதன் பொருள் !

முன்னே எங்கே சொன்னார் ?

உயிர் மயங்கியலில் சொன்னார் !

உயிர் மயங்கியலில்,

“திங்களும் நாளும் முந்து கிளந்தன்ன” (உயிர் மயங்கியல் 84)
என்றார் !

இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் :-

சித்திரை + கொண்டான் = சித்திரைக்குக் கொண்டான் .
இக்கு – சாரியை .

கேட்டை + கொண்டான் = கேட்டையாற் கொண்டான் .
ஆன் – சாரியை .

- இவ்விரண்டும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !

ஒரு நூற்பாவை எழுதும்போது , அதற்கு முன் கூறிய ஒரு நூற்பாவோடு இணைத்து உரைத்தால் அதனை ‘மாட்டேறு’ என்பர் !

நாம் பார்த்த புள்ளி மயங்கியல் சூத்திரம் 36க்கு மாட்டேற்றுச் சூத்திரம் 84 ஆகும் ! சூத்திரம் 84இல் நாளின் பெயர்களும் , சாரியைகளும் வந்துள்ளதை நோக்கலாம் !

மாட்டி , ஏற்றிக் கூறுவதால் , அது மாட்டேறு ! மாட்டின் மீது ஏறுவதல்ல !

இத்துடன் புள்ளி மயங்கியலில் தொல்காப்பியர் கூறிய மகர ஈற்றுப் புணர்ச்சிகள் முடிவடைந்துள்ளன !

அடுத்ததாக எந்த ஈற்றுப் புணர்ச்சியை அவர் எடுத்துக்கொள்கிறார் எனப் பார்ப்போம் !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Jun 06, 2013 8:57 pm


தொடத் தொடத் தொல்காப்பியம் (78)

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

மகர ஈற்றுச் சொற்களை அடுத்துத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்வது , னகர ஈற்றுச் சொற்களை !

பல னகர ஈற்றுச் சொற்கள் புணருமாற்றை நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம் !

பார்த்தவை போக மீதியை இப்போது காணலாம் !
“மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லும் தொழிற்பெய ரியல” (புள்ளி மயங்கியல்50)

மின், பின், பன்,கன் – இந்த நான்கு தொழிற்பெயர்களுடன் வேற்றுமையிலும் அல்வழியிலும் எப்படிச் சொற்களோடு புணரும் என்று இதில் கூறுகிறார் !

அஃதாவது , வேற்றுமையில், கீழ்வருமாறு இவை புணரும் :-

மின்+ கடுமை = மின்னுக் கடுமை (உ- சாரியை;க்-சந்தி)
பின் + கடுமை = பின்னுக் கடுமை (”)
பன் + கடுமை = பன்னுக் கடுமை (”)
கன் + கடுமை = கன்னுக் கடுமை (”)

மின்+ சிறுமை = மின்னுச் சிறுமை (உ- சாரியை;ச்-சந்தி)
பின் + சிறுமை = பின்னுச் சிறுமை (”)
பன் + சிறுமை = பன்னுச் சிறுமை (”)
கன் + சிறுமை = கன்னுச் சிறுமை (”)

மின்+ தீமை = மின்னுத் தீமை (உ- சாரியை;த்-சந்தி)
பின் + தீமை = பின்னுத் தீமை (”)
பன் + தீமை = பன்னுத் தீமை (”)
கன் + தீமை = கன்னுத் தீமை (”)

மின்+பெருமை = மின்னுப் பெருமை (உ- சாரியை;ப்-சந்தி)
பின் + பெருமை = பின்னுப் பெருமை (”)
பன் + பெருமை = பன்னுப் பெருமை (”)
கன் + பெருமை = கன்னுப் பெருமை (”)

வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணர்வதற்கே மேலை எடுத்துக்காட்டுகள் பொருந்தும் !

மெல்லெழுத்து, இடையெழுத்துகள் வந்தால் ?

கீழே காண்போம் !: -

மின்+ஞாற்சி = மின்னு ஞாற்சி (உ- சாரியை)
பின் + ஞாற்சி= பின்னு ஞாற்சி (”)
பன் + ஞாற்சி = பன்னு ஞாற்சி (”)
கன் + ஞாற்சி = கன்னு ஞாற்சி (”)

மின்+நீட்சி = மின்னு நீட்சி (உ- சாரியை)
பின் + நீட்சி = பின்னு நீட்சி (”)
பன் + நீட்சி = பன்னு நீட்சி (”)
கன் + நீட்சி = கன்னு நீட்சி (”)

மின்+மாட்சி = மின்னு மாட்சி (உ- சாரியை)
பின் + மாட்சி = பின்னு மாட்சி (”)
பன் + மாட்சி = பன்னு மாட்சி (”)
கன் + மாட்சி = கன்னு மாட்சி (”)

மின்+வலிமை = மின்னு வலிமை (உ- சாரியை)
பின் + வலிமை = பின்னு வலிமை (”)
பன் + வலிமை = பன்னு வலிமை (”)
கன் + வலிமை = கன்னு வலிமை (”)

மின்+யாப்பு = மின்னு யாப்பு (உ- சாரியை)
பின் + யாப்பு = பின்னு யாப்பு (”)
பன் + யாப்பு = பன்னு யாப்பு (”)
கன் + யாப்பு = கன்னு யாப்பு (”)

- இதுவரை பார்த்த 40 புணர்ச்சிகளும் , வேற்றுமைப் புணர்ச்சிகளே !

அல்வழியில் ?

வருமாறு அமையும் !:-

மின்+கடிது= மின்னுக் கடிது (உ- சாரியை; க்- சந்தி)
பின் + கடிது= பின்னுக் கடிது (”)
பன் + கடிது= பன்னுக் கடிது (”)
கன் + கடிது= கன்னுக் கடிது (”)

மின்+சிறிது= மின்னுச் சிறிது (உ- சாரியை; ச்- சந்தி)
பின் + சிறிது= பின்னுச் சிறிது (”)
பன் + சிறிது= பன்னுச் சிறிது (”)
கன் + சிறிது= கன்னுச் சிறிது (”)

மின்+தீது= மின்னுத் தீது (உ- சாரியை; த்- சந்தி)
பின் + தீது= பின்னுத் தீது (”)
பன் + தீது= பன்னுத் தீது (”)
கன் + தீது= கன்னுத் தீது (”)

மின்+பெரிது= மின்னுப் பெரிது (உ- சாரியை; ப்- சந்தி)
பின் + பெரிது = பின்னுப் பெரிது (”)
பன் + பெரிது = பன்னுப் பெரிது (”)
கன் + பெரிது = கன்னுப் பெரிது (”)

மேலைப் 16 இடங்களிலும் வல்லின எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்களே வந்து புணர்ந்தன !

இனி , மெல்லின (மென் கணம்) , இடையின (இடைக் கணம்) எழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும் நிலையைக் காணலாம் !:-

மின்+ஞான்றது= மின்னு ஞான்றது (உ- சாரியை)
பின் + ஞான்றது=பின்னு ஞான்றது (”)
பன் + ஞான்றது= பன்னு ஞான்றது (”)
கன் + ஞான்றது= கன்னு ஞான்றது (”)

மின்+நீண்டது= மின்னு நீண்டது (உ- சாரியை)
பின் + நீண்டது= பின்னு நீண்டது (”)
பன் + நீண்டது= பன்னு நீண்டது (”)
கன் + நீண்டது= கன்னு நீண்டது (”)

மின்+மாண்டது= மின்னு மாண்டது (உ- சாரியை)
பின் + மாண்டது= பின்னு மாண்டது (”)
பன் + மாண்டது= பன்னு மாண்டது (”)
கன் + மாண்டது= கன்னு மாண்டது (”)

மின்+வலிது= மின்னு வலிது (உ- சாரியை)
பின் + வலிது= பின்னு வலிது (”)
பன் + வலிது= பன்னு வலிது (”)
கன் + வலிது= கன்னு வலிது (”)

மின்+யாது= மின்னு யாது (உ- சாரியை)
பின் + யாது= பின்னு யாது (”)
பன் + யாது= பன்னு யாது (”)
கன் + யாது= கன்னு யாது (”)

- இதுவரை காட்டிய உதாரணங்கள் இளம்பூரணர் சுருக்கமாகக் குறித்தவை !

இவைதாம் தொல்காப்பியர் குறித்தவை !

கடைசியில் இளம்பூரணர் உள்ளே நுழைகிறார் !

நுழைந்து , “தொழிற் பெயருக்கு மட்டுமல்ல ! பொருட் பெயருக்கும் இந்த வழியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் !” என்று ஒரு விதியைத் தூக்கிப் போடுகிறார் ! ஆனால் எடுத்துக்காட்டு எதனையும் தரவில்லை !

“மின், பின், பன்,கன் ஆகிய நான்குமே தொழிற் பெயர்கள்தாம் ! இந்த நான்கையும் பொருட் பெயர்களாகவும் கொள்ளலாம் !

ஏனெனில் , “மின் என்பது ஒரு தொழில் ! அப்போது அது தொழிற் பெயர்! அதே ‘மின்’என்பது ஒரு பொருளின் பெயர் ! அப்போது அது பொருட் பெயர் !
மின் ,பின் , பன், கன் ஆகிய நான்குமே இப்படித்தான் தொழிற் பெயர்களாகவும் பொருட் பெயர்களாகவும் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன என்ற விளக்கத்தை அவருக்கே உரிய சுருக்க உரைநடையில் தருகிறார் !

அஃதாவது,

மின் – முதனிலைத் தொழிற் பெயர் (மின்னுதலைக் குறிக்கும்)
மின் – பொருட் பெயர் (மின்னலைக் குறிக்கும்)

பின் _ தொழிற்பெயர் (பின்னும் தொழிலைக் குறிக்கும்)
பின் – பொருட் பெயர் (பின்னிய கூந்தலைக் குறிக்கும்)

பன் – தொழிற் பெயர் (சொல்லுதலைக் குறிக்கும்)
பன் – பொருட் பெயர் ( ‘சொல்’ என்ற பொருளில் வரும்)

கன் – தொழிற் பெயர் (கன்னார் தொழிலைக் குறிக்கும்)
கன் – பொருட் பெயர் (கன்னாரைக் குறிக்கும்)
(கன்னார் – உலோகப் பாத்திரங்கள் செய்யும் விசுவகர்மர்கள்)

இந்த எடுத்துக்காட்டுகளைப் பின்பற்றிக் கண் , மண், புண் முதலிய சொற்களுக்கும் புணர்ச்சிகள் அமைக்கலாமா ?

முடியாது !

னகர ஈற்றுச் சொற்களுக்கு உரிய இலக்கணம் ணகர ஈற்றுச் சொற்களுக்குப் பொருந்தாது!

தொல்காப்பியரின் ‘மின்’ முதலாய சொற்களைப் பார்த்தாலே தொல்காப்பியத்தின் பழமையை விளங்கிக் கொள்ளலாம் !
***




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 11 of 84 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 47 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக