புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 13 of 84 •
Page 13 of 84 • 1 ... 8 ... 12, 13, 14 ... 48 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (87)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
இதுவரை னகர ஈற்றுச் சொற்கள் ( ‘ன்’ஈற்றுச் சொற்கள்) புணர்ந்த வகைகளைப் பார்த்தோம் !
அடுத்ததாகத் தொல்காப்பியர் யகர ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் !
முதற்கண் ,
“யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 62)
என்கிறார் !
அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , யகர ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , கீழ்வருமாறு புணரும் ! :-
நாய் + கால் = நாய்க் கால் √
=நாய் கால் ×
நாய் + செவி = நாய்ச் செவி √
=நாய் செவி ×
நாய் + தலை = நாய்த் தலை √
=நாய் தலை ×
நாய் + புறம் = நாய்ப் புறம் √
=நாய் புறம் ×
- எல்லா இடத்தும் வல்லெழுத்துச் சந்திகள் வந்ததைப் பாருங்கள் !
- இந்த நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
மேலை நூற்பாவை எழுதிய கையோடு விதிவிலக்கு (Exception) நூற்பா ஒன்றையும் எழுதிவிட்டார் தொல்காப்பியர் ! :-
“தாயென் கிளவி இயற்கை யாகும்” (புள்ளி மயங்கியல் 63)
இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு எழுதலாம் !:-
தாய் + கை = தாய் கை √
= தாய்க் கை ×
தாய் + செவி = தாய் செவி √
= தாய்ச் செவி ×
தாய் + தலை = தாய் தலை √
= தாய்த் தலை ×
தாய் + புறம் = தாய் புறம் √
= தாய்ப் புறம்×
‘தாய்’ என்பது விரவுப் பெயர் !
மனிதனுக்கும் ‘தாய்’ பொருந்தும் ; விலங்குக்கும் ‘தாய்’ பொருந்தும் !
‘பொன்னியின் தாய் வந்தாள்’
‘தாய்க் கரடி ஓடிவிட்டது’
- என்று வரல் காணலாம் !
அது சரி !
‘நாய்க் கை’ என்று வந்தது போலத் , ‘தாய்க் கை’ என ஏன் வரவில்லை ?
என்ன மொழி நுட்பம் ?
‘தாய்க் கை’ என்றால் , கைகளுக்கு எல்லாம் மூலமான பெரிய கை என்று பொருள்படும் !
இப்படித் தவறான பொருள் வருவதைத் தடுப்பது எப்படி ? ‘தாயின் கை’ என்றும் கூறியாகவேண்டும் !
இந் நிலையில்தான் , ‘க்’ போடாதே என்று இலக்கணம் வகுத்தனர் !
‘தாய் கை’ என்றால் ‘தாயின் கை’ என்று மட்டும் பொருள்படும் ! அப்போது குழப்பம் ஏதும் வராது !
எனவே , புணர்ச்சிகளைப் பொறுத்தவரை , கண்ணை மூடிக்கொண்டு ‘க்’, ‘ச்’களை இடையே சேர்த்துவிடக் கூடாது என்பது தெளிவாகிறதல்லவா ?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
இதுவரை னகர ஈற்றுச் சொற்கள் ( ‘ன்’ஈற்றுச் சொற்கள்) புணர்ந்த வகைகளைப் பார்த்தோம் !
அடுத்ததாகத் தொல்காப்பியர் யகர ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் !
முதற்கண் ,
“யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையி னவ்வெழுத்து மிகுமே” (புள்ளி மயங்கியல் 62)
என்கிறார் !
அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , யகர ஈற்றுச் சொற்கள் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது , கீழ்வருமாறு புணரும் ! :-
நாய் + கால் = நாய்க் கால் √
=நாய் கால் ×
நாய் + செவி = நாய்ச் செவி √
=நாய் செவி ×
நாய் + தலை = நாய்த் தலை √
=நாய் தலை ×
நாய் + புறம் = நாய்ப் புறம் √
=நாய் புறம் ×
- எல்லா இடத்தும் வல்லெழுத்துச் சந்திகள் வந்ததைப் பாருங்கள் !
- இந்த நான்கும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
மேலை நூற்பாவை எழுதிய கையோடு விதிவிலக்கு (Exception) நூற்பா ஒன்றையும் எழுதிவிட்டார் தொல்காப்பியர் ! :-
“தாயென் கிளவி இயற்கை யாகும்” (புள்ளி மயங்கியல் 63)
இதற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகளை வருமாறு எழுதலாம் !:-
தாய் + கை = தாய் கை √
= தாய்க் கை ×
தாய் + செவி = தாய் செவி √
= தாய்ச் செவி ×
தாய் + தலை = தாய் தலை √
= தாய்த் தலை ×
தாய் + புறம் = தாய் புறம் √
= தாய்ப் புறம்×
‘தாய்’ என்பது விரவுப் பெயர் !
மனிதனுக்கும் ‘தாய்’ பொருந்தும் ; விலங்குக்கும் ‘தாய்’ பொருந்தும் !
‘பொன்னியின் தாய் வந்தாள்’
‘தாய்க் கரடி ஓடிவிட்டது’
- என்று வரல் காணலாம் !
அது சரி !
‘நாய்க் கை’ என்று வந்தது போலத் , ‘தாய்க் கை’ என ஏன் வரவில்லை ?
என்ன மொழி நுட்பம் ?
‘தாய்க் கை’ என்றால் , கைகளுக்கு எல்லாம் மூலமான பெரிய கை என்று பொருள்படும் !
இப்படித் தவறான பொருள் வருவதைத் தடுப்பது எப்படி ? ‘தாயின் கை’ என்றும் கூறியாகவேண்டும் !
இந் நிலையில்தான் , ‘க்’ போடாதே என்று இலக்கணம் வகுத்தனர் !
‘தாய் கை’ என்றால் ‘தாயின் கை’ என்று மட்டும் பொருள்படும் ! அப்போது குழப்பம் ஏதும் வராது !
எனவே , புணர்ச்சிகளைப் பொறுத்தவரை , கண்ணை மூடிக்கொண்டு ‘க்’, ‘ச்’களை இடையே சேர்த்துவிடக் கூடாது என்பது தெளிவாகிறதல்லவா ?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (88)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
வேற்றுமையில் ‘தாய்’ எனும் சொல் எவ்வாறு புணரும் என்பதை முன்னே பார்த்தோம் !
அதே ‘தாய்’ எனும் சொல்லில் சிறு விளக்கம் எழுதுகிறார் தொல்காப்பியர் !:-
“மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே !” (புள்ளி மயங்கியல் 64)
மகன் வினை – மகன் தாயுடன் பகைத்துக் கொண்ட செயல் !
முதனிலை (முதல் நிலை) – முன்னே சொன்னபடி (புள்ளிமயங்கியல் 62) , வல்லெழுத்துச் சந்தி வரும் !
மேல் நூற்பாவிற்கு (64) , இளம்பூரணர் கூறிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
‘மகன் + தாய் = மகன்றாய் ’ என முதலில் ஆகிப் பின்,
மகன்றாய் + கலாம் = மகன்றாய்க் கலாம்
ஆகும் !
கலாம் – பூசல் ! (அப்துல் கலாம் அல்ல!)
இங்கே , தொல்காப்பியர் கூறிய ‘முதனிலை இயற்றே’என்பதற்கு இணங்க வல்லெழுத்துச் சந்தி ‘க்’ வந்தது காண்க !
‘தாய் + கை = தாய்கை ’ என்று சந்தி இலாது அமைந்தது போல , ‘மகன்றாய் + கலாம் = மகன்றாய் கலாம்’ என வராது என்பதே தொல்காப்பியர் கூறவந்தது !
இதே பாங்கில் ,
மகன்றாய் + செரு= மகன்றாய்ச் செரு √
= மகன்றாய் செரு ×
மகன்றாய் + தார்= மகன்றாய்த் தார் √
= மகன்றாய் தார் ×
மகன்றாய் + படை= மகன்றாய்ப் படை √
= மகன்றாய் படை ×
என வரும் !
‘ய்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் வல்லெழுத்துச் சந்தி வந்ததையும் (நாய்க்கால்) , சந்தியே வராததையும் ( ‘தாய்கை’) , பார்த்தோம் !
தொடர்ந்து , “வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ; மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் என்ற நிலையில் சில யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகள் உள்ளன ; அதையும் தெரிந்துகொள்ளுங்கள் !” என்கிறார் தொல்காப்பியர் ! :-
“மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே” (புள்ளி மயங்கியல் 65)
இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
வேய் + குறை = வேய்க் குறை √
= வேய்ங் குறை √
வேய் + சிறை = வேய்ச் சிறை √
= வேய்ஞ் சிறை √
வேய் + தலை = வேய்த் தலை √
= வேய்ந் தலை √
வேய் + புறம் = வேய்ப் புறம் √
= வேய்ம் புறம் √
‘உறழும்’ என்றொரு சொல்லை மேலை நூற்பாவில் பார்த்தோம் !
உறழ்ச்சி – இப்படியும் வரும் அப்படியும் வரும் என்ற நிலை !
‘மெல்லெழுத்து உறழும்’ என்றால் , ‘மெல்லெழுத்தும் வரும் , வல்லெழுத்தும் வரும்’ என்பது பொருள் !
‘உறழ்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பல இடங்களில் வருவதால் , இவ் விளக்கம் இங்கு தேவையாகிறது !
அது சரி!
ஏன் உறழ வேண்டும் ?
‘உறழ்ச்சி’ ஒரு பெரிய மொழி நுட்பத்தைச் சுமந்துகொண்டுள்ளது !
என்ன நுட்பம் ?
இலக்கண வழக்கிற்கும் மக்கள் வழக்கிற்கும் உள்ள வேறுபாடே உறழ்ச்சிக்குக் காரணம் !
பசு தரும் பால் , பசுப் பால் !
பசுப் பால் – இலக்கண வழக்கு !
பசும் பால் – உலக வழக்கு !
உலக வழக்கே வென்றது !
புளி மரம் தரும் காய் , புளிக்காய் !
புளிக்காய் – இலக்கண வழக்கு !
புளியங்காய் – உலக வழக்கு !
உலக வழக்கே வென்றது !
உலக வழக்கு என்பது எளிய வழக்கு ! மெல்லோசை கொண்டது !
இதே முறையில்தான் ,
வேய்க் குறை – இலக்கண வழக்கு .
வேய்ங் குறை – உலக வழக்கு !
உலக வழக்கின் வலிமை தொல்காப்பியருக்கு நன்கு தெரியும் ! அதனால்தான் , அதைத் தள்ளிவிடாமல் ‘ “உறழும்” என்ரு நூற்பா எழுதினார் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
வேற்றுமையில் ‘தாய்’ எனும் சொல் எவ்வாறு புணரும் என்பதை முன்னே பார்த்தோம் !
அதே ‘தாய்’ எனும் சொல்லில் சிறு விளக்கம் எழுதுகிறார் தொல்காப்பியர் !:-
“மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே !” (புள்ளி மயங்கியல் 64)
மகன் வினை – மகன் தாயுடன் பகைத்துக் கொண்ட செயல் !
முதனிலை (முதல் நிலை) – முன்னே சொன்னபடி (புள்ளிமயங்கியல் 62) , வல்லெழுத்துச் சந்தி வரும் !
மேல் நூற்பாவிற்கு (64) , இளம்பூரணர் கூறிய எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
‘மகன் + தாய் = மகன்றாய் ’ என முதலில் ஆகிப் பின்,
மகன்றாய் + கலாம் = மகன்றாய்க் கலாம்
ஆகும் !
கலாம் – பூசல் ! (அப்துல் கலாம் அல்ல!)
இங்கே , தொல்காப்பியர் கூறிய ‘முதனிலை இயற்றே’என்பதற்கு இணங்க வல்லெழுத்துச் சந்தி ‘க்’ வந்தது காண்க !
‘தாய் + கை = தாய்கை ’ என்று சந்தி இலாது அமைந்தது போல , ‘மகன்றாய் + கலாம் = மகன்றாய் கலாம்’ என வராது என்பதே தொல்காப்பியர் கூறவந்தது !
இதே பாங்கில் ,
மகன்றாய் + செரு= மகன்றாய்ச் செரு √
= மகன்றாய் செரு ×
மகன்றாய் + தார்= மகன்றாய்த் தார் √
= மகன்றாய் தார் ×
மகன்றாய் + படை= மகன்றாய்ப் படை √
= மகன்றாய் படை ×
என வரும் !
‘ய்’ ஈற்றுச் சொற் புணர்ச்சிகளில் வல்லெழுத்துச் சந்தி வந்ததையும் (நாய்க்கால்) , சந்தியே வராததையும் ( ‘தாய்கை’) , பார்த்தோம் !
தொடர்ந்து , “வல்லெழுத்துச் சந்தியும் வரலாம் ; மெல்லெழுத்துச் சந்தியும் வரலாம் என்ற நிலையில் சில யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகள் உள்ளன ; அதையும் தெரிந்துகொள்ளுங்கள் !” என்கிறார் தொல்காப்பியர் ! :-
“மெல்லெழுத் துறழு மொழியுமா ருளவே” (புள்ளி மயங்கியல் 65)
இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
வேய் + குறை = வேய்க் குறை √
= வேய்ங் குறை √
வேய் + சிறை = வேய்ச் சிறை √
= வேய்ஞ் சிறை √
வேய் + தலை = வேய்த் தலை √
= வேய்ந் தலை √
வேய் + புறம் = வேய்ப் புறம் √
= வேய்ம் புறம் √
‘உறழும்’ என்றொரு சொல்லை மேலை நூற்பாவில் பார்த்தோம் !
உறழ்ச்சி – இப்படியும் வரும் அப்படியும் வரும் என்ற நிலை !
‘மெல்லெழுத்து உறழும்’ என்றால் , ‘மெல்லெழுத்தும் வரும் , வல்லெழுத்தும் வரும்’ என்பது பொருள் !
‘உறழ்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பல இடங்களில் வருவதால் , இவ் விளக்கம் இங்கு தேவையாகிறது !
அது சரி!
ஏன் உறழ வேண்டும் ?
‘உறழ்ச்சி’ ஒரு பெரிய மொழி நுட்பத்தைச் சுமந்துகொண்டுள்ளது !
என்ன நுட்பம் ?
இலக்கண வழக்கிற்கும் மக்கள் வழக்கிற்கும் உள்ள வேறுபாடே உறழ்ச்சிக்குக் காரணம் !
பசு தரும் பால் , பசுப் பால் !
பசுப் பால் – இலக்கண வழக்கு !
பசும் பால் – உலக வழக்கு !
உலக வழக்கே வென்றது !
புளி மரம் தரும் காய் , புளிக்காய் !
புளிக்காய் – இலக்கண வழக்கு !
புளியங்காய் – உலக வழக்கு !
உலக வழக்கே வென்றது !
உலக வழக்கு என்பது எளிய வழக்கு ! மெல்லோசை கொண்டது !
இதே முறையில்தான் ,
வேய்க் குறை – இலக்கண வழக்கு .
வேய்ங் குறை – உலக வழக்கு !
உலக வழக்கின் வலிமை தொல்காப்பியருக்கு நன்கு தெரியும் ! அதனால்தான் , அதைத் தள்ளிவிடாமல் ‘ “உறழும்” என்ரு நூற்பா எழுதினார் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (89)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
இப்போது காணப்போகும் நூற்பா , புல்ளிமயங்கியலில் யகர ஈர்றுச் சொற்புணர்ச்சிகள் பற்றிய நூற்பாக்களில் இருதி நூற்பா! :-
“அல்வழி யெல்லா மியல்பென மொழிப” (புள்ளி மயங்கியல் 66)
அஃதாவது , யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகளில் இதுவரை நாம் பார்த்த நான்கு (உயிர்மயங்.62,63,64,65) நூற்பாக்களும் வேற்றுமைப் புணர்ச்சிகள் கொண்டவை !
மேலே காணும் இறுதி நூற்பா ஒன்று மட்டும் (66) அல்வழிப் புணர்ச்சிக்கானது !
அல்வழியில் யகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகப் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-
நாய் + கடிது = நாய் கடிது √
= நாய்க் கடிது ×
நாய் + சிறிது = நாய் சிறிது √
= நாய்ச் சிறிது ×
நாய் + தீது = நாய் தீது √
= நாய்த் தீது ×
நாய் + பெரிது = நாய் பெரிது √
= நாய்ப் பெரிது ×
‘ நாய் + கால் = நாய்க் கால்’ என வந்தது வேற்றுமைப் புணர்ச்சி என்றும் , ‘நாய் + கடிது = நாய் கடிது’ என வந்துள்ளது அல்வழிப் புணர்ச்சி என்றும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க !
இளம்பூரணர் இங்கு மேலும் சில இலக்கணங்களைத்
தருகிறார் !:-
“ இவ்வீற்று உருபு வாராது , உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடிபும் , வினையெச்ச முடிபும் , இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபும் , அல்வழி யுறழ்ச்சி முடிபும் கொள்க ” என்று கூறிச் சில எடுத்துக்காட்டுகளை அடுக்குகிறார் இளம்பூரணர் !
இளம்பூரணர் எழுதியது உரைதான் ! ஆனால் அந்த உரைக்கு இன்னொரு உரை தேவைப்படுகிறது !
‘ இவ்வீற்று உருபு’ – யகர ஈற்று உருபு ; அஃதாவது ‘வாய்’ ; இஃது
ஏழாம் வேற்றுமை உருபு.
‘உருபின் பொருள்படவந்த இடைச்சொல் ’-
‘அவ்வாய்’; இது ‘அங்கு’ என்ற பொருள்பட
வந்த இடைச் சொல்.
‘இடைச்சொல் முடிபு ’(இதற்குப் புணர்ச்சி எடுத்துக்காட்டுகள்) –
அவ்வாய்+கொண்டான்=அவ்வாய்க் கொண்டான்
இவ்வாய்+கொண்டான்=இவ்வாய்க் கொண்டான்
உவ்வாய்+கொண்டான்=உவ்வாய்க் கொண்டான்
அவ்வாய்+சென்றான்=அவ்வாய்ச் சென்றான்
இவ்வாய்+ சென்றான் =இவ்வாய்ச் சென்றான்
உவ்வாய்+ சென்றான் =உவ்வாய்ச் சென்றான்
அவ்வாய்+தந்தான்=அவ்வாய்த் தந்தான்
இவ்வாய்+ தந்தான் =இவ்வாய்த் தந்தான்
உவ்வாய்+ தந்தான் =உவ்வாய்த் தந்தான்
அவ்வாய்+போயினான்=அவ்வாய்ப் போயினான்
இவ்வாய்+ போயினான் =இவ்வாய்ப் போயினான்
உவ்வாய்+ போயினான் =உவ்வாய்ப் போயினான்
‘வினையெச்சம் ’ – யகர ஈற்று வினையெச்சச் சொல் ‘தாய்’; ‘தாவி’
என்பது பொருள்; இன்னொரு சொல் , ‘கூய்’;
‘கூவி’என்பது பொருள்; கூய் அழைத்தான் - கூவி
அழைத்தான்.
‘வினையெச்ச முடிபு’ –
தாய் +கொண்டான்= தாய்க் கொண்டான்
தாய் +சென்றான்= தாய்ச் சென்றான்
தாய் +போயினான்= தாய்ப் போயினான்
இம்மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே.
‘இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபு’ –
பொய்+ சொல்= பொய்ச் சொல்
மெய்+ சொல்= மெய்ச் சொல்
‘அல்வழி உறழ்ச்சி முடிபு’ – யகர ஈற்றுச் சொற்களைப்
பொறுத்தவரை,அல்வழிப் புணர்ச்சி ,சந்தி பெற்றும்
சந்தி பெறாதும் வருவதுண்டு:-
வேய்+கடிது=வேய் கடிது√
= வேய்க் கடிது√
வேய்+சிறிது=வேய் சிறிது√
= வேய்ச் சிறிது√
வேய்+தீது=வேய் தீது√
= வேய்த் தீது√
வேய்+பெரிது=வேய் பெரிது√
= வேய்ப் பெரிது√
‘வேய் கடிது’ (= மூங்கிலானது கடிது) என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
‘வேய்க் கடிது’ (= மூங்கிலானது கடிது என்ற அதே பொருள்தான்)
என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
ஒன்றில் ‘க்’ வரவில்லை ; இன்னொன்றில்
‘க்’வந்துள்ளது ! இவ்வாறு வருவதால்தான்
‘அல்வழி உறழ்ச்சி முடிபும் கொள்க’
என்றார் இளம்பூரணர் ! இதுபோன்று
எப்போதாவதுதான் வரும் !
அது எப்போதாவதுதான் வரும் ; நமக்குத் துன்பம் இப்போது வந்துவிட்டதே !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
இப்போது காணப்போகும் நூற்பா , புல்ளிமயங்கியலில் யகர ஈர்றுச் சொற்புணர்ச்சிகள் பற்றிய நூற்பாக்களில் இருதி நூற்பா! :-
“அல்வழி யெல்லா மியல்பென மொழிப” (புள்ளி மயங்கியல் 66)
அஃதாவது , யகர ஈற்றுச் சொற்புணர்ச்சிகளில் இதுவரை நாம் பார்த்த நான்கு (உயிர்மயங்.62,63,64,65) நூற்பாக்களும் வேற்றுமைப் புணர்ச்சிகள் கொண்டவை !
மேலே காணும் இறுதி நூற்பா ஒன்று மட்டும் (66) அல்வழிப் புணர்ச்சிக்கானது !
அல்வழியில் யகர ஈற்றுச் சொற்கள் இயல்பாகப் புணரும் என்கிறார் தொல்காப்பியர் ! :-
நாய் + கடிது = நாய் கடிது √
= நாய்க் கடிது ×
நாய் + சிறிது = நாய் சிறிது √
= நாய்ச் சிறிது ×
நாய் + தீது = நாய் தீது √
= நாய்த் தீது ×
நாய் + பெரிது = நாய் பெரிது √
= நாய்ப் பெரிது ×
‘ நாய் + கால் = நாய்க் கால்’ என வந்தது வேற்றுமைப் புணர்ச்சி என்றும் , ‘நாய் + கடிது = நாய் கடிது’ என வந்துள்ளது அல்வழிப் புணர்ச்சி என்றும் மீண்டும் நினைவுபடுத்திக் கொள்க !
இளம்பூரணர் இங்கு மேலும் சில இலக்கணங்களைத்
தருகிறார் !:-
“ இவ்வீற்று உருபு வாராது , உருபின் பொருள்பட வந்த இடைச்சொல் முடிபும் , வினையெச்ச முடிபும் , இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபும் , அல்வழி யுறழ்ச்சி முடிபும் கொள்க ” என்று கூறிச் சில எடுத்துக்காட்டுகளை அடுக்குகிறார் இளம்பூரணர் !
இளம்பூரணர் எழுதியது உரைதான் ! ஆனால் அந்த உரைக்கு இன்னொரு உரை தேவைப்படுகிறது !
‘ இவ்வீற்று உருபு’ – யகர ஈற்று உருபு ; அஃதாவது ‘வாய்’ ; இஃது
ஏழாம் வேற்றுமை உருபு.
‘உருபின் பொருள்படவந்த இடைச்சொல் ’-
‘அவ்வாய்’; இது ‘அங்கு’ என்ற பொருள்பட
வந்த இடைச் சொல்.
‘இடைச்சொல் முடிபு ’(இதற்குப் புணர்ச்சி எடுத்துக்காட்டுகள்) –
அவ்வாய்+கொண்டான்=அவ்வாய்க் கொண்டான்
இவ்வாய்+கொண்டான்=இவ்வாய்க் கொண்டான்
உவ்வாய்+கொண்டான்=உவ்வாய்க் கொண்டான்
அவ்வாய்+சென்றான்=அவ்வாய்ச் சென்றான்
இவ்வாய்+ சென்றான் =இவ்வாய்ச் சென்றான்
உவ்வாய்+ சென்றான் =உவ்வாய்ச் சென்றான்
அவ்வாய்+தந்தான்=அவ்வாய்த் தந்தான்
இவ்வாய்+ தந்தான் =இவ்வாய்த் தந்தான்
உவ்வாய்+ தந்தான் =உவ்வாய்த் தந்தான்
அவ்வாய்+போயினான்=அவ்வாய்ப் போயினான்
இவ்வாய்+ போயினான் =இவ்வாய்ப் போயினான்
உவ்வாய்+ போயினான் =உவ்வாய்ப் போயினான்
‘வினையெச்சம் ’ – யகர ஈற்று வினையெச்சச் சொல் ‘தாய்’; ‘தாவி’
என்பது பொருள்; இன்னொரு சொல் , ‘கூய்’;
‘கூவி’என்பது பொருள்; கூய் அழைத்தான் - கூவி
அழைத்தான்.
‘வினையெச்ச முடிபு’ –
தாய் +கொண்டான்= தாய்க் கொண்டான்
தாய் +சென்றான்= தாய்ச் சென்றான்
தாய் +போயினான்= தாய்ப் போயினான்
இம்மூன்றும் அல்வழிப் புணர்ச்சிகளே.
‘இருபெயரொட்டுப் பண்புத் தொகை முடிபு’ –
பொய்+ சொல்= பொய்ச் சொல்
மெய்+ சொல்= மெய்ச் சொல்
‘அல்வழி உறழ்ச்சி முடிபு’ – யகர ஈற்றுச் சொற்களைப்
பொறுத்தவரை,அல்வழிப் புணர்ச்சி ,சந்தி பெற்றும்
சந்தி பெறாதும் வருவதுண்டு:-
வேய்+கடிது=வேய் கடிது√
= வேய்க் கடிது√
வேய்+சிறிது=வேய் சிறிது√
= வேய்ச் சிறிது√
வேய்+தீது=வேய் தீது√
= வேய்த் தீது√
வேய்+பெரிது=வேய் பெரிது√
= வேய்ப் பெரிது√
‘வேய் கடிது’ (= மூங்கிலானது கடிது) என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
‘வேய்க் கடிது’ (= மூங்கிலானது கடிது என்ற அதே பொருள்தான்)
என்பதும் அல்வழிப் புணர்ச்சிதான் !
ஒன்றில் ‘க்’ வரவில்லை ; இன்னொன்றில்
‘க்’வந்துள்ளது ! இவ்வாறு வருவதால்தான்
‘அல்வழி உறழ்ச்சி முடிபும் கொள்க’
என்றார் இளம்பூரணர் ! இதுபோன்று
எப்போதாவதுதான் வரும் !
அது எப்போதாவதுதான் வரும் ; நமக்குத் துன்பம் இப்போது வந்துவிட்டதே !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (90)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்ததாக ‘ர்’ ஈற்றுச் சொற்களைத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்கிறார் !
புள்ளிமயங்கியலில் மொத்தம் நான்கு நூற்பாக்களை ஒதுக்குகிறார் தொல்காப்பியர் !
முதலாவது –
“ரகர இறுதி யகர இயற்றே” (புள்ளி மயங்கியல் 67)
“ரகர ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , நான் முன்பு விளக்கியபடி , மனப்பாட வசதிக்காக, ‘யகர ஈற்றுப் புணர்ச்சி போல’ என்கிறார் தொல்காப்பியர் !
எதைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர் ?
வேறு ஒன்றுமில்லை , ‘நாய்க்கால்’ (புள்ளி மயங்கியல் 62) வந்ததல்லவா ? அதுபோபோலப் புணருமாம் !
அஃதாவது ?
அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் , ரகர ஈற்றுச் சொற்கள் வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணரும் !
தேர் + கால் = தேர்க் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + செய்கை = தேர்ச் செய்கை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + தலை = தேர்த் தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + புறம் = தேர்ப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)
‘தேர்க் கால்’ என்பதை விரியுங்கள் ! ‘தேரின் கால்’ என ஆகுமல்லவா ? ‘தேரின் கால்’ என்பதில் ஓர் ‘இன்’ ஒளிந்திருக்கிறது அல்லவா? அந்த ‘இன்’ ஒரு வேற்றுமை உருபு ! (5ஆம் வேற்றுமை உருபு) ; இந்த வேற்றுமை உருபால்தான் , இதனை வேற்றுமைப் புணர்ச்சி என்கிறோம் !
மேல் நூற்பாவை எழுதிய கையோடு , ஒரு விதி விலக்கையும் அவசரம் அவசரமாகத் தொல்காப்பியர் எழுதுகிறார் ! :-
“ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்” (புள்ளி மயங்கியல் 68)
‘ தேர் + கால் = தேர்க் கால்’ என வந்ததுபோல், ‘ஆர் + கால் =ஆர்க்கால்’ என வரும் என நினைக்காதீர் என்கிறார் தொல்காப்பியர் !
தொல்காப்பியர் தந்த விதி விலக்குகள் !:-
ஆர் + கோடு = ஆர்க் கோடு ×
= ஆர்ங் கோடு √
ஆர் + செதிள் = ஆர்ச் செதிள் ×
= ஆர்ஞ் செதிள் √
ஆர் +தோல் = ஆர்த் தோல் ×
= ஆர்ந் தோல் √
ஆர் + பூ = ஆர்ப் பூ ×
= ஆர்ம் பூ √
வெதிர் + கோடு = வெதிர்க் கோடு ×
= வெதிர்ங் கோடு √
வெதிர் + செதில் = வெதிர்ச் செதிள் ×
= வெதிர்ஞ் செதிள் √
வெதிர் + தோல் = வெதிர்த் தோல் ×
= வெதிர்ந் தோல் √
வெதிர் + பூ = வெதிர்ப் பூ ×
= வெதிர்ம் பூ √
சார் + கோடு = சார்க் கோடு ×
= சார்ங் கோடு √
சார் + செதிள் = சார்ச் செதிள் ×
= சார்ஞ் செதிள் √
சார் + தோல் = சார்த் தோல் ×
= சார்ந் தோல் √
சார் + பூ = சார்ப் பூ ×
= சார்ம் பூ √
இங்கே , ‘குதிர்’ , ‘துவர்’ என்ற பெயர்ச் சொற்களுக்கும் இதே விதிதான் என்று ஒட்டுகிறார் இளம்பூரணர் !
அதன்படி ,
குதிர் + கோடு = குதிர்க் கோடு ×
= குதிர்ங் கோடு √
குதிர் + செதிள் = குதிர்ச் செதிள் ×
= குதிர்ஞ் செதிள் √
குதிர் + தோல் = குதிர்த் தோல் ×
= குதிர்ந் தோல் √
குதிர் + பூ = குதிர்ப் பூ ×
= குதிர்ம் பூ √
துவர் + கோடு = துவர்க் கோடு ×
= துவர்ங் கோடு √
துவர் + செதிள் = துவர்ச் செதிள் ×
= துவர்ஞ் செதிள் √
துவர் +தோல் = துவர்த் தோல் ×
= துவர்ந் தோல் √
துவர் + பூ = துவர்ப் பூ ×
= துவர்ம் பூ √
மேலே , ‘பீர்’ எனும் சொற்புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா? அதிலும் ஓர் ஒட்டு ஒட்டுகிறார் இளம்பூரணர் ! :-
பீர் + கோடு = பீர்ங் கோடு √
= பீரங் கோடு √ (அம்- சாரியை)
பீர் + செதிள் = பீர்ஞ் செதிள் √
= பீரஞ் செதிள் √ (அம்- சாரியை)
பீர் + தோல் = பீர்ந் தோல் √
= பீரந் தோல் √ (அம்- சாரியை)
பீர் + பூ = பீர்ம் பூ √
= பீரம் பூ √ (அம்- சாரியை)
மேலே கண்ட அனைத்துப் புணர்ச்சிகளும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
அது சரி !
‘தேர்க் கால்’ என்று ‘க்’ வருகிறது ; ஏன் ‘ஆர்ங்கோடு’ என ‘ங்’ வருகிறது ? ‘ஆர்க் கோடு’ என வரவேண்டியதுதானே ?
இதில் ஏதாவது மொழி நுட்பம் உள்ளதா ?
உள்ளது !
‘தேர்’ , தனி ஒரு பொருள் ! அதற்குச் சில உறுப்புகள் (parts) உள்ளன ! எனவே அவற்றைச் சுட்ட ‘க்’தான் உதவுகிறது ! ‘தேர்க் கால்’ என்றால் ‘தேர்’ என்ற பொருளுக்குக் காலான வேறு ஓர் உறுப்பு என்பது விளங்குகிறது !
அதே நேரத்தில் , ‘ஆர்’ என்பது ஒரு மரம் ! கழற்றக் கூடிய தனி உறுப்புகளைக் கொண்டதல்ல ! எனவே , ‘தேரு’க்குக் கூறிய இலக்கணம் ‘ஆரு’க்குப் பொருந்தாது !தேருக்குச் சொன்ன வகையில் ஆருக்கும் புணர்ச்சி சொன்னால் பொருள் குழப்பம் ஏற்படும் ! ஆகவேதான் , வேறுபாட்டை உருவாக்கத்தான் , தேருக்கு ‘க்’ , ஆருக்கு ‘ங்’ !
மொழி நுட்பம் இதுதான் !
தொல்காப்பியர் மேலே குறித்த ‘ஆர்’ மரத்தைப் பர்க்க ஆசையாக உள்ளதா ?
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- J.M. Garg , Commons. Wikimedia.org)
இதுதான் தொல்காப்பியர் கூறிய ஆர் மரம் !
ஆத்தி என்பதும் இதுதான் ! ( ‘ஆத்தி , இதுதனா ஆர்’ என்கிறீர்களா?)
வெள்ளை மந்தாரை என்பதும் இதுதான் !
பீடி சுற்ற இலையை வாரிவழங்கிய மரமும் இதுதான் ! சிறந்த மருந்துகளை அளிப்பதும் இதுவே!
‘ஆத்தி சூடி’ என்று சிவனுக்குப் பெயர் தந்த மரமும் இதுதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்ததாக ‘ர்’ ஈற்றுச் சொற்களைத் தொல்காப்பியர் எடுத்துக்கொள்கிறார் !
புள்ளிமயங்கியலில் மொத்தம் நான்கு நூற்பாக்களை ஒதுக்குகிறார் தொல்காப்பியர் !
முதலாவது –
“ரகர இறுதி யகர இயற்றே” (புள்ளி மயங்கியல் 67)
“ரகர ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் ?” என்று கேட்டால் , நான் முன்பு விளக்கியபடி , மனப்பாட வசதிக்காக, ‘யகர ஈற்றுப் புணர்ச்சி போல’ என்கிறார் தொல்காப்பியர் !
எதைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர் ?
வேறு ஒன்றுமில்லை , ‘நாய்க்கால்’ (புள்ளி மயங்கியல் 62) வந்ததல்லவா ? அதுபோபோலப் புணருமாம் !
அஃதாவது ?
அஃதாவது , வேற்றுமைப் புணர்ச்சியில் , ரகர ஈற்றுச் சொற்கள் வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணரும் !
தேர் + கால் = தேர்க் கால் (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + செய்கை = தேர்ச் செய்கை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + தலை = தேர்த் தலை (வேற்றுமைப் புணர்ச்சி)
தேர் + புறம் = தேர்ப் புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)
‘தேர்க் கால்’ என்பதை விரியுங்கள் ! ‘தேரின் கால்’ என ஆகுமல்லவா ? ‘தேரின் கால்’ என்பதில் ஓர் ‘இன்’ ஒளிந்திருக்கிறது அல்லவா? அந்த ‘இன்’ ஒரு வேற்றுமை உருபு ! (5ஆம் வேற்றுமை உருபு) ; இந்த வேற்றுமை உருபால்தான் , இதனை வேற்றுமைப் புணர்ச்சி என்கிறோம் !
மேல் நூற்பாவை எழுதிய கையோடு , ஒரு விதி விலக்கையும் அவசரம் அவசரமாகத் தொல்காப்பியர் எழுதுகிறார் ! :-
“ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதன் மெய்பெறத் தோன்றும்” (புள்ளி மயங்கியல் 68)
‘ தேர் + கால் = தேர்க் கால்’ என வந்ததுபோல், ‘ஆர் + கால் =ஆர்க்கால்’ என வரும் என நினைக்காதீர் என்கிறார் தொல்காப்பியர் !
தொல்காப்பியர் தந்த விதி விலக்குகள் !:-
ஆர் + கோடு = ஆர்க் கோடு ×
= ஆர்ங் கோடு √
ஆர் + செதிள் = ஆர்ச் செதிள் ×
= ஆர்ஞ் செதிள் √
ஆர் +தோல் = ஆர்த் தோல் ×
= ஆர்ந் தோல் √
ஆர் + பூ = ஆர்ப் பூ ×
= ஆர்ம் பூ √
வெதிர் + கோடு = வெதிர்க் கோடு ×
= வெதிர்ங் கோடு √
வெதிர் + செதில் = வெதிர்ச் செதிள் ×
= வெதிர்ஞ் செதிள் √
வெதிர் + தோல் = வெதிர்த் தோல் ×
= வெதிர்ந் தோல் √
வெதிர் + பூ = வெதிர்ப் பூ ×
= வெதிர்ம் பூ √
சார் + கோடு = சார்க் கோடு ×
= சார்ங் கோடு √
சார் + செதிள் = சார்ச் செதிள் ×
= சார்ஞ் செதிள் √
சார் + தோல் = சார்த் தோல் ×
= சார்ந் தோல் √
சார் + பூ = சார்ப் பூ ×
= சார்ம் பூ √
இங்கே , ‘குதிர்’ , ‘துவர்’ என்ற பெயர்ச் சொற்களுக்கும் இதே விதிதான் என்று ஒட்டுகிறார் இளம்பூரணர் !
அதன்படி ,
குதிர் + கோடு = குதிர்க் கோடு ×
= குதிர்ங் கோடு √
குதிர் + செதிள் = குதிர்ச் செதிள் ×
= குதிர்ஞ் செதிள் √
குதிர் + தோல் = குதிர்த் தோல் ×
= குதிர்ந் தோல் √
குதிர் + பூ = குதிர்ப் பூ ×
= குதிர்ம் பூ √
துவர் + கோடு = துவர்க் கோடு ×
= துவர்ங் கோடு √
துவர் + செதிள் = துவர்ச் செதிள் ×
= துவர்ஞ் செதிள் √
துவர் +தோல் = துவர்த் தோல் ×
= துவர்ந் தோல் √
துவர் + பூ = துவர்ப் பூ ×
= துவர்ம் பூ √
மேலே , ‘பீர்’ எனும் சொற்புணர்ச்சியைப் பார்த்தோமல்லவா? அதிலும் ஓர் ஒட்டு ஒட்டுகிறார் இளம்பூரணர் ! :-
பீர் + கோடு = பீர்ங் கோடு √
= பீரங் கோடு √ (அம்- சாரியை)
பீர் + செதிள் = பீர்ஞ் செதிள் √
= பீரஞ் செதிள் √ (அம்- சாரியை)
பீர் + தோல் = பீர்ந் தோல் √
= பீரந் தோல் √ (அம்- சாரியை)
பீர் + பூ = பீர்ம் பூ √
= பீரம் பூ √ (அம்- சாரியை)
மேலே கண்ட அனைத்துப் புணர்ச்சிகளும் வேற்றுமைப் புணர்ச்சிகளே !
அது சரி !
‘தேர்க் கால்’ என்று ‘க்’ வருகிறது ; ஏன் ‘ஆர்ங்கோடு’ என ‘ங்’ வருகிறது ? ‘ஆர்க் கோடு’ என வரவேண்டியதுதானே ?
இதில் ஏதாவது மொழி நுட்பம் உள்ளதா ?
உள்ளது !
‘தேர்’ , தனி ஒரு பொருள் ! அதற்குச் சில உறுப்புகள் (parts) உள்ளன ! எனவே அவற்றைச் சுட்ட ‘க்’தான் உதவுகிறது ! ‘தேர்க் கால்’ என்றால் ‘தேர்’ என்ற பொருளுக்குக் காலான வேறு ஓர் உறுப்பு என்பது விளங்குகிறது !
அதே நேரத்தில் , ‘ஆர்’ என்பது ஒரு மரம் ! கழற்றக் கூடிய தனி உறுப்புகளைக் கொண்டதல்ல ! எனவே , ‘தேரு’க்குக் கூறிய இலக்கணம் ‘ஆரு’க்குப் பொருந்தாது !தேருக்குச் சொன்ன வகையில் ஆருக்கும் புணர்ச்சி சொன்னால் பொருள் குழப்பம் ஏற்படும் ! ஆகவேதான் , வேறுபாட்டை உருவாக்கத்தான் , தேருக்கு ‘க்’ , ஆருக்கு ‘ங்’ !
மொழி நுட்பம் இதுதான் !
தொல்காப்பியர் மேலே குறித்த ‘ஆர்’ மரத்தைப் பர்க்க ஆசையாக உள்ளதா ?
[You must be registered and logged in to see this link.]
(Courtesy- J.M. Garg , Commons. Wikimedia.org)
இதுதான் தொல்காப்பியர் கூறிய ஆர் மரம் !
ஆத்தி என்பதும் இதுதான் ! ( ‘ஆத்தி , இதுதனா ஆர்’ என்கிறீர்களா?)
வெள்ளை மந்தாரை என்பதும் இதுதான் !
பீடி சுற்ற இலையை வாரிவழங்கிய மரமும் இதுதான் ! சிறந்த மருந்துகளை அளிப்பதும் இதுவே!
‘ஆத்தி சூடி’ என்று சிவனுக்குப் பெயர் தந்த மரமும் இதுதான் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (91)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ரகர ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்தது ‘சார்’ !
இதைப் பார்ப்போமா சார் ?
“சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்” ! (புள்ளி மயங்கியல் 69)
- என்பது தொல்காப்பியம் !
காழ் வயின் – ‘காழ்’ எனும் சொல்லோடு
வலிக்கும் – வல்லொற்று மிக்குப் புணரும் !
அஃதாவது ,
சார் + காழ் = சார்க் காழ் √
= சார்ங் காழ் ×
- இதுவும் வேற்றுமைப் புணர்ச்சியே !
காழ் - பருப்பு
சாரக் காழ் – சாரப் பருப்பு
சார்க் காழ் – இலக்கண வழக்கு (தொல்காப்பியர் காலம்)
சாரக் காழ் – இலக்கண வழக்கு (பிற்காலம்)
சாரப் பருப்பு (மக்கள் வழக்கு)
மக்கள் வழக்கே வென்றது !
தொல்காப்பியரின் ‘சார் ’ – மரத்தைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy – thewesternghats.indiabiodiversity.org
இதுதான் தொல்காப்பியம் பேசிய சார் மரம் !
புளிமா எனப்படுவதும் இம்மரமே !
இதன் தாவரவியல் பெயர் - Buchanania axillaris
இந்த மரத்தின் தோற்றமே தமிழகமும் சிலோனும்தான் என ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
ரகர ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்தது ‘சார்’ !
இதைப் பார்ப்போமா சார் ?
“சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்” ! (புள்ளி மயங்கியல் 69)
- என்பது தொல்காப்பியம் !
காழ் வயின் – ‘காழ்’ எனும் சொல்லோடு
வலிக்கும் – வல்லொற்று மிக்குப் புணரும் !
அஃதாவது ,
சார் + காழ் = சார்க் காழ் √
= சார்ங் காழ் ×
- இதுவும் வேற்றுமைப் புணர்ச்சியே !
காழ் - பருப்பு
சாரக் காழ் – சாரப் பருப்பு
சார்க் காழ் – இலக்கண வழக்கு (தொல்காப்பியர் காலம்)
சாரக் காழ் – இலக்கண வழக்கு (பிற்காலம்)
சாரப் பருப்பு (மக்கள் வழக்கு)
மக்கள் வழக்கே வென்றது !
தொல்காப்பியரின் ‘சார் ’ – மரத்தைப் பார்க்க ஆசையா?
[You must be registered and logged in to see this link.]
Courtesy – thewesternghats.indiabiodiversity.org
இதுதான் தொல்காப்பியம் பேசிய சார் மரம் !
புளிமா எனப்படுவதும் இம்மரமே !
இதன் தாவரவியல் பெயர் - Buchanania axillaris
இந்த மரத்தின் தோற்றமே தமிழகமும் சிலோனும்தான் என ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (92)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்தது ‘ல்’ ஈறு !
‘ல்’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் என்று புள்ளி மயங்கியலில் 12 நூற்பக்கள் பகர்கின்றன !
முதல் நூற்பா ! :-
“லகார இறுதி னகார இயற்றே” (புள்ளி மயங்கியல் 71 )
லகர ஈற்றுச் சொற்கள் , னகர ஈற்றுச் சொற்களை போல ப் புணரும் !
அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , ‘ல்’ ஆனது , ‘ற்’ ஆக மாறும் !:-
கல் + குறை = கற்குறை (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + சிறை = கற்சிறை (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + தலை = கற்றலை (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + புறம் = கற்புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் நான்கும் வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்ததற்கு உதாரணங்கள் !
அப்படியானால் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்தால் எப்படிப் புணரும் ? :-
“மெல்லெழுத் தியையி னகார மாகும்” ( புள்ளி மயங்கியல் 72)
இதன்படி ,
கல் + ஞெரி = கன்ஞெரி (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + நுனி = கன்னுனி (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + முறி = கன்முறி (வேற்றுமைப் புணர்ச்சி)
இவ்விடத்தில் இளம்பூரணர் ஒரு விதி விலக்கை வைக்கிறார் ! :-
“இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் சிங்க நோக்காக வைத்தமையான் , அல்வழிக்கும் இம் முடிபு கொள்க .”
எப்படிப் பார்த்தீர்களா?
மேல் நூற்பா(71) வேற்றுமை பற்றி எழுதப்பட்டதாம் ! அதனால் அடுத்தது அல்வழி பற்றி எழுதப்படக்கூடிய இடமாம் ! இதைத்தான் , ‘அல்வழியது எடுத்துக்கோடற்கண்’ என்றார் இளம்பூரணர் !
இப்படி , முன்னேயும் பின்னேயும் ஒரு தொடர்புபடப் பார்ப்பதுதான் ‘சிங்க நோக்கு’ !
சிங்கம் என்ன செய்யுமாம் , நடக்கும்போது நேரே பார்த்தபடி விடுவிடு என்று நடக்காதாம் ! திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடக்குமாம் ! இதுதான் சிங்க நோக்கு !
இப்போது , மேல் இளம்பூரணர் விதி விலக்கு உரைப்படி எடுத்துக்காட்டுகளைக் காண்போம்!:-
கல் + ஞெரிந்தது = கன்ஞெரிந்தது (அல்வழிப் புணர்ச்சி)
கல் + நீண்டது = கன்னீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
கல் + மாண்டது = கன்மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)
ஞெரிந்தது - முறிந்தது
இச் சொல்லை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை ! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அடுத்தது ‘ல்’ ஈறு !
‘ல்’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணரும் என்று புள்ளி மயங்கியலில் 12 நூற்பக்கள் பகர்கின்றன !
முதல் நூற்பா ! :-
“லகார இறுதி னகார இயற்றே” (புள்ளி மயங்கியல் 71 )
லகர ஈற்றுச் சொற்கள் , னகர ஈற்றுச் சொற்களை போல ப் புணரும் !
அஃதாவது , வேற்றுமைப் பொருளில் , ‘ல்’ ஆனது , ‘ற்’ ஆக மாறும் !:-
கல் + குறை = கற்குறை (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + சிறை = கற்சிறை (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + தலை = கற்றலை (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + புறம் = கற்புறம் (வேற்றுமைப் புணர்ச்சி)
மேல் நான்கும் வல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்ததற்கு உதாரணங்கள் !
அப்படியானால் , மெல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து சேர்ந்தால் எப்படிப் புணரும் ? :-
“மெல்லெழுத் தியையி னகார மாகும்” ( புள்ளி மயங்கியல் 72)
இதன்படி ,
கல் + ஞெரி = கன்ஞெரி (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + நுனி = கன்னுனி (வேற்றுமைப் புணர்ச்சி)
கல் + முறி = கன்முறி (வேற்றுமைப் புணர்ச்சி)
இவ்விடத்தில் இளம்பூரணர் ஒரு விதி விலக்கை வைக்கிறார் ! :-
“இச் சூத்திரத்தினை வேற்றுமையது ஈற்றுக்கண் சிங்க நோக்காக வைத்தமையான் , அல்வழிக்கும் இம் முடிபு கொள்க .”
எப்படிப் பார்த்தீர்களா?
மேல் நூற்பா(71) வேற்றுமை பற்றி எழுதப்பட்டதாம் ! அதனால் அடுத்தது அல்வழி பற்றி எழுதப்படக்கூடிய இடமாம் ! இதைத்தான் , ‘அல்வழியது எடுத்துக்கோடற்கண்’ என்றார் இளம்பூரணர் !
இப்படி , முன்னேயும் பின்னேயும் ஒரு தொடர்புபடப் பார்ப்பதுதான் ‘சிங்க நோக்கு’ !
சிங்கம் என்ன செய்யுமாம் , நடக்கும்போது நேரே பார்த்தபடி விடுவிடு என்று நடக்காதாம் ! திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடக்குமாம் ! இதுதான் சிங்க நோக்கு !
இப்போது , மேல் இளம்பூரணர் விதி விலக்கு உரைப்படி எடுத்துக்காட்டுகளைக் காண்போம்!:-
கல் + ஞெரிந்தது = கன்ஞெரிந்தது (அல்வழிப் புணர்ச்சி)
கல் + நீண்டது = கன்னீண்டது (அல்வழிப் புணர்ச்சி)
கல் + மாண்டது = கன்மாண்டது (அல்வழிப் புணர்ச்சி)
ஞெரிந்தது - முறிந்தது
இச் சொல்லை இன்று யாரும் பயன்படுத்துவதில்லை ! வழக்கொழிந்த தமிழ்ச் சொற்களில் இதுவும் ஒன்று !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (93)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
லகர ஈற்றுச் சொற்கள் சில அல்வழியில் , மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது ‘கல்+நீண்டது= கன்னீண்டது’ என்பதுபோல, ‘ல்’ , ‘ன்’ஆகிப் புணரும் என்று இளம்பூரணரின் உரையால் அறிந்தோம் !
இனி , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் லகர ஈற்றுச் சொற்களோடு வந்து புணரும்போது , இருவகைப்பட்ட முறைகளில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-
“அல்வழி யெல்லா முறழென மொழிப” (புள்ளி மயங்கியல் 73)
அஃதாவது ,
கல் + குறிது = கல் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் குறிது √ ( ”
கல் + சிறிது = கல் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் சிறிது √ ( ”
கல் + தீது = கல் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் றீது √ ( ”
கல் + பெரிது = கல் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் பெரிது √ ( ”
என வரும் !
மேலே பார்த்தவாறு ‘உறழ்’ என்று வருமிடங்களில் கவனமாக இருக்கவேண்டும் !
ஏனெனில் , ஒரு பாட்டில் ‘கல் குறிது’ என்று வந்தால் , “இது தவறு ! கற்குறிது என்று வரவேண்டும்” என்பார் ஒருவர் ! “கல் குறிது என்பது சரிதானே ?” என்பார் இன்னொருவர் ! அப்படிப் பட்ட நேரத்தில் உங்களுக்குக் கைகொடுப்பது இந்த (73)நூற்பாதான் !
இது குறிப்பாகச் சுவடியியலில் (Manuscriptology) இன்றியமைகையாத கருத்து !
ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூலைச் செம்பதிப்பாக (Critical edition) உருவாக்கும்போது மேலே குறிப்பிட்ட சிக்கல் அடிக்கடி எழும் !
அது சரி !
நாம் ‘கல் குறிது’ என்பதை எடுப்பதா, ‘கற் குறிது’ என்பதைக் கொள்வதா ?
‘கற் குறிது’ தான் !
எப்படி ?
‘லகார இறுதி னகார இயற்றே’ (புல்ளி மயங்கியல் 71) என்ற சட்டத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் ! ‘ன்’ , ‘ற்’ ஆகும் என்று வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறினாலும், ன் –ற் போல ல்-ற் ஐயும் கொள்வதே பொருத்தமாகும் !
இங்கே ஒரு விதி விலக்கு !
கூறுபவர் நம் இளம்பூரணர் !
மேல் நான்கு புணர்ச்சிகளும் ( ‘கல் குறிது’ முதல் ‘கற் பெரிது’ வரை மேலே கண்டவை) அல்வழிக்குத்தானே ?
ஆனால் , “குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் இவ்வுறழ்ச்சி கொள்க ” என்பதே அவ் விதி விலக்கு !
இவ் விதிப்படி ,
கல்+ குறுமை = கல் குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
= கற் குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
என வரும் !
‘குறுமை’ – பண்புப் பெயர் ; இதனைத்தான் ‘குணம் பற்றிவந்த’ எனக் குறித்தார் இளம்பூரணர் !
மேலே வந்த ‘கல்’ , பெயர்ச் சொல் !
இளம்பூரணர் இதற்கும் ஒரு விதிவிலக்குக் கூறுகிறார் ! :-
“இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க ”.
இதற்கு ‘வந்தானாற் கொற்றன்’ என எடுத்துக்காட்டும் தந்தார் !
இதனை விரித்தால் ,
வந்தானால் + கொற்றன் = வந்தானாற் கொற்றன்
என வரும் !
ஆல் – அசைநிலை .
வந்தானாற் கொற்றன் – வந்தான் கொற்றன் .
மேலும் , இளம்பூரணர் , “உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின்
முடிபும் ஈண்டே கொள்க ” என்கிறார் !
இதற்கு அவர் தந்த எடுத்துக்காட்டுகள் – ‘அக்காற் கொண்டான்’ முதலியன !
அஃதாவது ,
அக்கால் + கொண்டான் = அக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்காற் கொண்டான் – அவ்விடத்துக் கொண்டான் .
அக்கால் – அவ்விடத்து .
அக்கால் – ஒரு சொல் ; பிரிக்கக் கூடாது; இதுவே 7ஆம் வேற்றுமை உருபுப் பொருளில் ( ‘உருபின் பொருள்பட’)வந்த சொல் !
இதே பாங்கில் , இளம்பூரணர் தந்த பிற எடுத்துக்காட்டுகளை வருமாறு எளிமைப்படுத்தி உணரலாம் !:-
இக்கால் + கொண்டான் = இக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + கொண்டான் = உக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + கொண்டான் = எக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்கால் + சென்றான் = அக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + சென்றான் = இக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + சென்றான் = உக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + சென்றான் = எக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்கால் + தந்தான் = அக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + தந்தான் = இக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + தந்தான் = உக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + தந்தான் = எக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + போயினான் = உக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + போயினான் = எக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
லகர ஈற்றுச் சொற்கள் சில அல்வழியில் , மெல்லெழுத்துகளை முதலாகக் கொண்ட சொற்கள் வந்து புணரும்போது ‘கல்+நீண்டது= கன்னீண்டது’ என்பதுபோல, ‘ல்’ , ‘ன்’ஆகிப் புணரும் என்று இளம்பூரணரின் உரையால் அறிந்தோம் !
இனி , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் லகர ஈற்றுச் சொற்களோடு வந்து புணரும்போது , இருவகைப்பட்ட முறைகளில் புணரும் என்கிறார் தொல்காப்பியர் !:-
“அல்வழி யெல்லா முறழென மொழிப” (புள்ளி மயங்கியல் 73)
அஃதாவது ,
கல் + குறிது = கல் குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் குறிது √ ( ”
கல் + சிறிது = கல் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் சிறிது √ ( ”
கல் + தீது = கல் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் றீது √ ( ”
கல் + பெரிது = கல் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கற் பெரிது √ ( ”
என வரும் !
மேலே பார்த்தவாறு ‘உறழ்’ என்று வருமிடங்களில் கவனமாக இருக்கவேண்டும் !
ஏனெனில் , ஒரு பாட்டில் ‘கல் குறிது’ என்று வந்தால் , “இது தவறு ! கற்குறிது என்று வரவேண்டும்” என்பார் ஒருவர் ! “கல் குறிது என்பது சரிதானே ?” என்பார் இன்னொருவர் ! அப்படிப் பட்ட நேரத்தில் உங்களுக்குக் கைகொடுப்பது இந்த (73)நூற்பாதான் !
இது குறிப்பாகச் சுவடியியலில் (Manuscriptology) இன்றியமைகையாத கருத்து !
ஓலைச் சுவடியிலிருந்து ஒரு நூலைச் செம்பதிப்பாக (Critical edition) உருவாக்கும்போது மேலே குறிப்பிட்ட சிக்கல் அடிக்கடி எழும் !
அது சரி !
நாம் ‘கல் குறிது’ என்பதை எடுப்பதா, ‘கற் குறிது’ என்பதைக் கொள்வதா ?
‘கற் குறிது’ தான் !
எப்படி ?
‘லகார இறுதி னகார இயற்றே’ (புல்ளி மயங்கியல் 71) என்ற சட்டத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் ! ‘ன்’ , ‘ற்’ ஆகும் என்று வேற்றுமைப் புணர்ச்சிக்குக் கூறினாலும், ன் –ற் போல ல்-ற் ஐயும் கொள்வதே பொருத்தமாகும் !
இங்கே ஒரு விதி விலக்கு !
கூறுபவர் நம் இளம்பூரணர் !
மேல் நான்கு புணர்ச்சிகளும் ( ‘கல் குறிது’ முதல் ‘கற் பெரிது’ வரை மேலே கண்டவை) அல்வழிக்குத்தானே ?
ஆனால் , “குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் இவ்வுறழ்ச்சி கொள்க ” என்பதே அவ் விதி விலக்கு !
இவ் விதிப்படி ,
கல்+ குறுமை = கல் குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
= கற் குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
என வரும் !
‘குறுமை’ – பண்புப் பெயர் ; இதனைத்தான் ‘குணம் பற்றிவந்த’ எனக் குறித்தார் இளம்பூரணர் !
மேலே வந்த ‘கல்’ , பெயர்ச் சொல் !
இளம்பூரணர் இதற்கும் ஒரு விதிவிலக்குக் கூறுகிறார் ! :-
“இவ்வீற்று வினைச்சொல்லீறு திரிந்தனவும் கொள்க ”.
இதற்கு ‘வந்தானாற் கொற்றன்’ என எடுத்துக்காட்டும் தந்தார் !
இதனை விரித்தால் ,
வந்தானால் + கொற்றன் = வந்தானாற் கொற்றன்
என வரும் !
ஆல் – அசைநிலை .
வந்தானாற் கொற்றன் – வந்தான் கொற்றன் .
மேலும் , இளம்பூரணர் , “உருபு வாராது உருபின் பொருள்பட வந்தவற்றின்
முடிபும் ஈண்டே கொள்க ” என்கிறார் !
இதற்கு அவர் தந்த எடுத்துக்காட்டுகள் – ‘அக்காற் கொண்டான்’ முதலியன !
அஃதாவது ,
அக்கால் + கொண்டான் = அக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்காற் கொண்டான் – அவ்விடத்துக் கொண்டான் .
அக்கால் – அவ்விடத்து .
அக்கால் – ஒரு சொல் ; பிரிக்கக் கூடாது; இதுவே 7ஆம் வேற்றுமை உருபுப் பொருளில் ( ‘உருபின் பொருள்பட’)வந்த சொல் !
இதே பாங்கில் , இளம்பூரணர் தந்த பிற எடுத்துக்காட்டுகளை வருமாறு எளிமைப்படுத்தி உணரலாம் !:-
இக்கால் + கொண்டான் = இக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + கொண்டான் = உக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + கொண்டான் = எக்காற் கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்கால் + சென்றான் = அக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + சென்றான் = இக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + சென்றான் = உக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + சென்றான் = எக்காற் சென்றான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்கால் + தந்தான் = அக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + தந்தான் = இக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + தந்தான் = உக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + தந்தான் = எக்காற் றந்தான் (அல்வழிப் புணர்ச்சி)
அக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
இக்கால் + போயினான் = அக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
உக்கால் + போயினான் = உக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
எக்கால் + போயினான் = எக்காற் போயினான் (அல்வழிப் புணர்ச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (94)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ல்’ ஈற்றுப் புணர்ச்சி தொடர்கிறது !
‘ல்’லை ஈறாக உடைய சொல் முன் , ‘த’வை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால், எப்படிப் புணரும் ?
தொல்காப்பியர் விடை ! :-
“தகரம் வரும்வழி யாய்த நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே ” (புள்ளி மயங்கியல் 74)
புகரின்று – குற்றமில்லை .
இதன்படி ,
கல் + தீது = கற்றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கஃறீது √ (அல்வழிப் புணர்ச்சி)
என வரும் !
இங்கு கூடுதல் செய்தி ஒன்றை வழங்குகிறார் இளம்பூரணர் !
அஃதாவது , கீழ்வரும் முறைகளிலும் சில ‘ல்’ ஈற்றுச் சொற்கள் புணரும் என்கிறார் இளம்பூரணர் ! : -
வேல் + தீது = வேறீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= வேற்றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
மேலை எடுத்துக்காட்டில் , ‘வே’ , நெடில்தானே ? அதனை அடுத்தது ‘ல்’தானே ? அப்படியானால் , ‘வேல் + தீது’ புணர்ந்த அதே முறையில்தானே ‘பால் + தீது’ ம் புணரவேண்டும் ? இரண்டுமே அல்வழிப் புணர்ச்சிகள்தானே ?
“ஏமாறாதீர்கள் !” என்கிறார் தொல்காப்பியர் ! :-
“நெடியத னிறுதி யியல்புமா ருளவே” (புள்ளி மயங்கியல் 75)
அஃதாவது , சில சொற்கள் , வேறு மாதிரியாக , இயல்பாகப் , புணரும் என்கிறார் தொல்காப்பியர் !
இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு வரையலாம் !:-
பால் + கடிது = பால் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் கடிது ×
பால் + சிறிது = பால் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் சிறிது ×
பால் + தீது = பால் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பா றீது ×
பால் + பெரிது = பால் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் பெரிது ×
சிலர் ‘பாற் கடிது’ம் வரலாம் என்று எழுதியுளர் ! இதற்குத் தொல்காப்பிய மூலத்திலும் இளம்பூரணர் உரையிலும் இடமில்லை ! இளம்பூரணர் ‘பால் கடிது’ என்பதை மட்டும் உதாரணம் தந்தாரே தவிர , ‘பாற் கடிது’ என்பதைத் தரவே இல்லை !
‘பாற் கடல்’ என வருகிறதே ?- கேட்கலாம் !
‘பாற் கடல்’ – வேற்றுமைப் புணர்ச்சி ! நாம் பேசிக்கொண்டிருப்பது அல்வழிப் புணர்ச்சி !
மேலைச் சூத்திரத்தில் (75) , ‘இயல்புமா ருளவே’ ( = இயல்பும் உள்ளன) என்றாரல்லவா ? அப்படியானால் , ‘இயல்பு’ அல்லாது ‘திரிந்து’ வருவதையும் கொள்ளலா மல்லவா ?
“கொள்ளலாம்” என அனுமதிக்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , அல்வழியில் , இயல்பாகவும் , திரிந்தும் ஒரே சொல் புணரும் நிலையும் உண்டு.; இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-
வேல் + கடிது = வேல் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= வேற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
‘ல்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்து என்ன கூறுவாரோ தொல்காப்பியர் ?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘ல்’ ஈற்றுப் புணர்ச்சி தொடர்கிறது !
‘ல்’லை ஈறாக உடைய சொல் முன் , ‘த’வை முதலாகக் கொண்ட சொல் வந்து புணர்ந்தால், எப்படிப் புணரும் ?
தொல்காப்பியர் விடை ! :-
“தகரம் வரும்வழி யாய்த நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே ” (புள்ளி மயங்கியல் 74)
புகரின்று – குற்றமில்லை .
இதன்படி ,
கல் + தீது = கற்றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= கஃறீது √ (அல்வழிப் புணர்ச்சி)
என வரும் !
இங்கு கூடுதல் செய்தி ஒன்றை வழங்குகிறார் இளம்பூரணர் !
அஃதாவது , கீழ்வரும் முறைகளிலும் சில ‘ல்’ ஈற்றுச் சொற்கள் புணரும் என்கிறார் இளம்பூரணர் ! : -
வேல் + தீது = வேறீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= வேற்றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
மேலை எடுத்துக்காட்டில் , ‘வே’ , நெடில்தானே ? அதனை அடுத்தது ‘ல்’தானே ? அப்படியானால் , ‘வேல் + தீது’ புணர்ந்த அதே முறையில்தானே ‘பால் + தீது’ ம் புணரவேண்டும் ? இரண்டுமே அல்வழிப் புணர்ச்சிகள்தானே ?
“ஏமாறாதீர்கள் !” என்கிறார் தொல்காப்பியர் ! :-
“நெடியத னிறுதி யியல்புமா ருளவே” (புள்ளி மயங்கியல் 75)
அஃதாவது , சில சொற்கள் , வேறு மாதிரியாக , இயல்பாகப் , புணரும் என்கிறார் தொல்காப்பியர் !
இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு வரையலாம் !:-
பால் + கடிது = பால் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் கடிது ×
பால் + சிறிது = பால் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் சிறிது ×
பால் + தீது = பால் தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பா றீது ×
பால் + பெரிது = பால் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= பாற் பெரிது ×
சிலர் ‘பாற் கடிது’ம் வரலாம் என்று எழுதியுளர் ! இதற்குத் தொல்காப்பிய மூலத்திலும் இளம்பூரணர் உரையிலும் இடமில்லை ! இளம்பூரணர் ‘பால் கடிது’ என்பதை மட்டும் உதாரணம் தந்தாரே தவிர , ‘பாற் கடிது’ என்பதைத் தரவே இல்லை !
‘பாற் கடல்’ என வருகிறதே ?- கேட்கலாம் !
‘பாற் கடல்’ – வேற்றுமைப் புணர்ச்சி ! நாம் பேசிக்கொண்டிருப்பது அல்வழிப் புணர்ச்சி !
மேலைச் சூத்திரத்தில் (75) , ‘இயல்புமா ருளவே’ ( = இயல்பும் உள்ளன) என்றாரல்லவா ? அப்படியானால் , ‘இயல்பு’ அல்லாது ‘திரிந்து’ வருவதையும் கொள்ளலா மல்லவா ?
“கொள்ளலாம்” என அனுமதிக்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , அல்வழியில் , இயல்பாகவும் , திரிந்தும் ஒரே சொல் புணரும் நிலையும் உண்டு.; இதற்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் ! :-
வேல் + கடிது = வேல் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
= வேற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
‘ல்’ ஈற்றுப் புணர்ச்சியில் அடுத்து என்ன கூறுவாரோ தொல்காப்பியர் ?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (95)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் இப்போது , ‘நெல்’ , ‘செல்’ , ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய லகர ஈற்றுச் சொற்களைக் கையில் எடுக்கிறார் ! :-
“நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல” (புள்ளி மயங்கியல் 76)
அல்லது – அல்வழிப் புணர்ச்சி .
அஃதாவது , ‘நெல்’ , ‘செல்’ , ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய நான்கு சொற்களும் , அல்வழிப் புணர்ச்சியில் இருந்தாலும் , வேற்றுமைப் புணர்ச்சியிற் போல , ‘ல்’ ஆனது ‘ற்’ ஆகும் !
இதற்கு இளம்பூரணரின் உதாரணங்களை வருமாறு விரித்துரைக்கலாம் !:-
நெல் + கடிது = நெல் கடிது ×
= நெற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
நெல் + சிறிது = நெல் சிறிது ×
= நெற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
நெல் + தீது = நெல் தீது ×
= நெற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
நெல் + பெரிது = நெல் பெரிது ×
= நெற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + கடிது = செல் கடிது ×
= செற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + சிறிது = செல் சிறிது ×
= செற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + தீது = செல் தீது ×
= செற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + பெரிது = செல் பெரிது ×
= செற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + கடிது = கொல் கடிது ×
= கொற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + சிறிது = கொல் சிறிது ×
= கொற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + தீது = கொல் தீது ×
= கொற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + பெரிது = கொல் பெரிது ×
= கொற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + கடிது = சொல் கடிது ×
= சொற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + சிறிது = சொல் சிறிது ×
= சொற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + தீது = சொல் தீது ×
= சொற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + பெரிது = சொல் பெரிது ×
= சொற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் – மேகம் ; பெயர்ச் சொல் .
கொல் – விசுவகர்மர்தம் கொல்லுத் தொழில் ; பெயர்ச் சொல் .
இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் எதனையும் ஒட்டவும் இல்லை வெட்டவும் இல்லை !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியர் இப்போது , ‘நெல்’ , ‘செல்’ , ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய லகர ஈற்றுச் சொற்களைக் கையில் எடுக்கிறார் ! :-
“நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல” (புள்ளி மயங்கியல் 76)
அல்லது – அல்வழிப் புணர்ச்சி .
அஃதாவது , ‘நெல்’ , ‘செல்’ , ‘கொல் ’ ,‘சொல்’ ஆகிய நான்கு சொற்களும் , அல்வழிப் புணர்ச்சியில் இருந்தாலும் , வேற்றுமைப் புணர்ச்சியிற் போல , ‘ல்’ ஆனது ‘ற்’ ஆகும் !
இதற்கு இளம்பூரணரின் உதாரணங்களை வருமாறு விரித்துரைக்கலாம் !:-
நெல் + கடிது = நெல் கடிது ×
= நெற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
நெல் + சிறிது = நெல் சிறிது ×
= நெற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
நெல் + தீது = நெல் தீது ×
= நெற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
நெல் + பெரிது = நெல் பெரிது ×
= நெற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + கடிது = செல் கடிது ×
= செற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + சிறிது = செல் சிறிது ×
= செற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + தீது = செல் தீது ×
= செற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் + பெரிது = செல் பெரிது ×
= செற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + கடிது = கொல் கடிது ×
= கொற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + சிறிது = கொல் சிறிது ×
= கொற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + தீது = கொல் தீது ×
= கொற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
கொல் + பெரிது = கொல் பெரிது ×
= கொற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + கடிது = சொல் கடிது ×
= சொற் கடிது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + சிறிது = சொல் சிறிது ×
= சொற் சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + தீது = சொல் தீது ×
= சொற் றீது √ (அல்வழிப் புணர்ச்சி)
சொல் + பெரிது = சொல் பெரிது ×
= சொற் பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
செல் – மேகம் ; பெயர்ச் சொல் .
கொல் – விசுவகர்மர்தம் கொல்லுத் தொழில் ; பெயர்ச் சொல் .
இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் எதனையும் ஒட்டவும் இல்லை வெட்டவும் இல்லை !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (96)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இல்’ என்றால் ‘இல்லை’ என்றும் ஒரு பொருள் உண்டு .
இல் – குறிப்பு வினைமுற்று .
ஏன் குறிப்பு ?
காலத்தைத் தெளிவாகக் கூறாததால் !
இந்த ‘இல்’ பற்றிய தொல்காப்பியரின் புணர்ச்சி விதி !:-
“இல்லென் கிளவி இன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலும்
இயற்கை யாதலு மாகாரம் வருதலும்
கொளத்தகு மரபி னாகிட னுடைத்தே” (புள்ளி மயங்கியல் 77)
‘இல்லென் கிளவி இன்மை செப்பின்’ என ஏன் தொடங்கவேண்டும் ?
ஏனெனில் , ‘இல்’ என்பதற்கு ‘வீடு’ என்றொரு பொருளும் உண்டு ! அதனைத் தவிர்ப்பதற்காகத்தான் , “நான் ‘இல்’லுக்கு இங்கே கொண்ட பொருள் ‘இல்லை’ என்பதாகும்” என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாக்கிவிடுகிறார் !
இதுபோன்ற தொல்காப்பியரின் எழுத்து நுணுக்கங்களைப் பார்த்துக்கொண்டே வாருங்கள் ! இவற்றைத்தான் ஆய்வுநெறிமுறை (Research methodology) என்று இன்று கூறுகிறோம் ! முன்னோடி (Pioneer) யார் என்பது விளங்குகிறதா?
இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் மேல் நூற்பாவை இனிதே விளக்குகின்றன ! அவற்றை வருமாறு பிரித்துப் பார்க்கவேண்டும் ! :-
இல்+ கல் = இல் + ஐ + கல் = இல்லைக் கல் √
(‘வல்லெழுத்து மிகுதல்’)
இல்+ கல் = இல் + ஐ + கல் = இல்லை கல் √
(‘ஐ’ இடை வருதல்)
இல்+ கல் = இல் கல் √
(‘இயற்கை ஆதல்’)
இல்+ கல் = இல் + ஆ + கல் = இல்லாக் கல் √
(‘ஆகாரம் வருதல்’ ; க் - சந்தி)
இவற்றைச் சிறிது விலக்கவேண்டும் ! :-
‘வல்லெழுத்து மிகுதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘க்’ ஆகிய வல்லின எழுத்து மிகவேண்டும் என்றால் , ஒரு சாரியை வந்தே ஆகவேண்டும் ! அதுதான் ‘ஐ’
!
‘ஐயிடை வருதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘ஐ’ இடை வரவேண்டுமானால் , புணர்ச்சி , மேலே காட்டியுள்ளதுபோல் , ‘இல்லை கல்’தான் !
‘இயற்கை ஆதல்’ – ‘இல்’லுக்கும் ’கல்’லுக்கும் இடையே ஒன்றும் வரக்கூடாது ! அதுதான் ‘இல் கல்’ !
‘ஆகாரம் வருதல்’ – ஆகாரம் எந்த ஓட்டலிலிருந்து வருகிறது என்று கேட்காதீர்கள் !
‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ஆகாரம் ( ‘ஆ’) வந்தால் , மேலே எழுதியுள்ளபடி , ‘இல்லாக்கால்’ என்றுதான் ஆகும் !
இளம்பூரணர் சொன்ன வேறு உதாரணங்களையும் வருமாறு பிரித்து எழுதலாம் ! :-
இல் + சுனை = இல்லைச் சுனை √
இல் + சுனை = இல்லை சுனை √
இல் + சுனை = இல் சுனை √
இல் + சுனை = இல்லாச் சுனை √
இல் + துடி = இல்லைத் துடி √
இல் + துடி = இல்லை துடி √
இல் + துடி = இல் துடி √
இல் + துடி = இல்லாத் துடி √
இல் + பறை = இல்லைப் பறை √
இல் + பறை = இல்லை பறை √
இல் + பறை = இல் பறை √
இல் + பறை = இல்லாப் பறை √
‘இல்’ தொடர்பான மேலைப் புணர்ச்சிகள் யாவுமே அல்வழிப் புணர்ச்சிகளே !
உரை இறுதியில் இளம்பூரணர், “இல் என்பது எதிர்மறை வினைக் குறிப்பு முற்று விரவு வினை” என்றார் !
என்ன பொருள் ?
‘இல்’ என்பது இன்மைப் பொருள் கொண்டதால் , ‘எதிர்மறை’ !
‘வினைக் குறிப்பு முற்று’ என்றாலும் , ‘குறிப்பு வினை முற்று’ என்றாலும் ஒன்றுதான் ! ‘இல்லை’ என்பதில் காலம் பற்றிய செய்தி இல்லை ! ‘இல்லை’ என்று அங்கேயே நின்றுவிடுவதால் , எச்சமும் இல்லை ! எச்சம் ஆகாததால் அது ‘முற்று’ ! ‘இல்லை’ என்பதில் பெயர்த்தன்மை இலாது , வினைத்தன்மை இருப்பதால் , மொத்தத்தில் ‘குறிப்பு வினை முற்று’ !
‘விரவு வினை’ (Common class)– ‘இல்லை’ என்ற சொல்லை உயர் திணைக்கும் (personal class)ஆளலாம்; அஃறிணைக்கும்(Impersonal class) ஆளலாம் !
‘அவள் இல்லை’ √
‘மாடு இல்லை’ √
எனவே, ‘இல்லை’ என்பதை ‘விரவு வினை’ என்கிறோம் !
இந்த ‘விரவு’ என்ற சொல் நமக்குப் பழக்கமான சொல்தான் !
“தண்ணீர் கொதிக்குது ! பச்சத் தண்ணி விலாவிக் கொண்டு வா” – மாமியர் மருமகளைப் பார்த்து அலறுவாள் !
இந்த ‘விலாவி’ என்பது , ‘விரவி’யிலிருந்து வந்ததுதான் !
விரவி – விலவி – விலாவி !
‘இல்லை’ என்ற சொல் ,செம்பதிப்பு (Critical edition) நோக்கில் இன்றியமையாத சொல் !
பாடலில், நூற்பாவில் , ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்து ஒற்று வருமா வராதா என்ற குழப்பம் அடிக்கடி வரும் !
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (எச்சவியல் 56)- என்பதில் , ‘இல்லை’ என்றுதான் போடவேண்டும் என்பார் ஒருவர் ; ‘இல்லைக் ’ என்பதுதான் சரி என்பார் இன்னொருவர் !
எது சரி ?
இங்கேதான் மேலை ஆய்வு நமக்குக் கைகொடுக்கிறது !
தொல்காப்பியர்தான் ‘க்’ வரலாம், வராமலும் இருக்கலாம் எனக் கூறிவிட்டாரே ?
எனவே ,
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” √
“கடிசொல் இல்லை காலத்துப் படினே” √
ஆனால், நூற்பாவுக்கு ஏற்ற ‘கிண்’ணென்ற ஓசையை ‘க்’ தருவதால் ,‘இல்லைக்’ என்று போடுவதே சிறந்தது என்பது என் கருத்து !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘இல்’ என்றால் ‘இல்லை’ என்றும் ஒரு பொருள் உண்டு .
இல் – குறிப்பு வினைமுற்று .
ஏன் குறிப்பு ?
காலத்தைத் தெளிவாகக் கூறாததால் !
இந்த ‘இல்’ பற்றிய தொல்காப்பியரின் புணர்ச்சி விதி !:-
“இல்லென் கிளவி இன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலும்
இயற்கை யாதலு மாகாரம் வருதலும்
கொளத்தகு மரபி னாகிட னுடைத்தே” (புள்ளி மயங்கியல் 77)
‘இல்லென் கிளவி இன்மை செப்பின்’ என ஏன் தொடங்கவேண்டும் ?
ஏனெனில் , ‘இல்’ என்பதற்கு ‘வீடு’ என்றொரு பொருளும் உண்டு ! அதனைத் தவிர்ப்பதற்காகத்தான் , “நான் ‘இல்’லுக்கு இங்கே கொண்ட பொருள் ‘இல்லை’ என்பதாகும்” என்று எடுத்த எடுப்பிலேயே தெளிவாக்கிவிடுகிறார் !
இதுபோன்ற தொல்காப்பியரின் எழுத்து நுணுக்கங்களைப் பார்த்துக்கொண்டே வாருங்கள் ! இவற்றைத்தான் ஆய்வுநெறிமுறை (Research methodology) என்று இன்று கூறுகிறோம் ! முன்னோடி (Pioneer) யார் என்பது விளங்குகிறதா?
இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் மேல் நூற்பாவை இனிதே விளக்குகின்றன ! அவற்றை வருமாறு பிரித்துப் பார்க்கவேண்டும் ! :-
இல்+ கல் = இல் + ஐ + கல் = இல்லைக் கல் √
(‘வல்லெழுத்து மிகுதல்’)
இல்+ கல் = இல் + ஐ + கல் = இல்லை கல் √
(‘ஐ’ இடை வருதல்)
இல்+ கல் = இல் கல் √
(‘இயற்கை ஆதல்’)
இல்+ கல் = இல் + ஆ + கல் = இல்லாக் கல் √
(‘ஆகாரம் வருதல்’ ; க் - சந்தி)
இவற்றைச் சிறிது விலக்கவேண்டும் ! :-
‘வல்லெழுத்து மிகுதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘க்’ ஆகிய வல்லின எழுத்து மிகவேண்டும் என்றால் , ஒரு சாரியை வந்தே ஆகவேண்டும் ! அதுதான் ‘ஐ’
!
‘ஐயிடை வருதல்’ – ‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ‘ஐ’ இடை வரவேண்டுமானால் , புணர்ச்சி , மேலே காட்டியுள்ளதுபோல் , ‘இல்லை கல்’தான் !
‘இயற்கை ஆதல்’ – ‘இல்’லுக்கும் ’கல்’லுக்கும் இடையே ஒன்றும் வரக்கூடாது ! அதுதான் ‘இல் கல்’ !
‘ஆகாரம் வருதல்’ – ஆகாரம் எந்த ஓட்டலிலிருந்து வருகிறது என்று கேட்காதீர்கள் !
‘இல்’லுக்கும் ‘கல்’லுக்கும் இடையே ஆகாரம் ( ‘ஆ’) வந்தால் , மேலே எழுதியுள்ளபடி , ‘இல்லாக்கால்’ என்றுதான் ஆகும் !
இளம்பூரணர் சொன்ன வேறு உதாரணங்களையும் வருமாறு பிரித்து எழுதலாம் ! :-
இல் + சுனை = இல்லைச் சுனை √
இல் + சுனை = இல்லை சுனை √
இல் + சுனை = இல் சுனை √
இல் + சுனை = இல்லாச் சுனை √
இல் + துடி = இல்லைத் துடி √
இல் + துடி = இல்லை துடி √
இல் + துடி = இல் துடி √
இல் + துடி = இல்லாத் துடி √
இல் + பறை = இல்லைப் பறை √
இல் + பறை = இல்லை பறை √
இல் + பறை = இல் பறை √
இல் + பறை = இல்லாப் பறை √
‘இல்’ தொடர்பான மேலைப் புணர்ச்சிகள் யாவுமே அல்வழிப் புணர்ச்சிகளே !
உரை இறுதியில் இளம்பூரணர், “இல் என்பது எதிர்மறை வினைக் குறிப்பு முற்று விரவு வினை” என்றார் !
என்ன பொருள் ?
‘இல்’ என்பது இன்மைப் பொருள் கொண்டதால் , ‘எதிர்மறை’ !
‘வினைக் குறிப்பு முற்று’ என்றாலும் , ‘குறிப்பு வினை முற்று’ என்றாலும் ஒன்றுதான் ! ‘இல்லை’ என்பதில் காலம் பற்றிய செய்தி இல்லை ! ‘இல்லை’ என்று அங்கேயே நின்றுவிடுவதால் , எச்சமும் இல்லை ! எச்சம் ஆகாததால் அது ‘முற்று’ ! ‘இல்லை’ என்பதில் பெயர்த்தன்மை இலாது , வினைத்தன்மை இருப்பதால் , மொத்தத்தில் ‘குறிப்பு வினை முற்று’ !
‘விரவு வினை’ (Common class)– ‘இல்லை’ என்ற சொல்லை உயர் திணைக்கும் (personal class)ஆளலாம்; அஃறிணைக்கும்(Impersonal class) ஆளலாம் !
‘அவள் இல்லை’ √
‘மாடு இல்லை’ √
எனவே, ‘இல்லை’ என்பதை ‘விரவு வினை’ என்கிறோம் !
இந்த ‘விரவு’ என்ற சொல் நமக்குப் பழக்கமான சொல்தான் !
“தண்ணீர் கொதிக்குது ! பச்சத் தண்ணி விலாவிக் கொண்டு வா” – மாமியர் மருமகளைப் பார்த்து அலறுவாள் !
இந்த ‘விலாவி’ என்பது , ‘விரவி’யிலிருந்து வந்ததுதான் !
விரவி – விலவி – விலாவி !
‘இல்லை’ என்ற சொல் ,செம்பதிப்பு (Critical edition) நோக்கில் இன்றியமையாத சொல் !
பாடலில், நூற்பாவில் , ‘இல்லை’ என்ற சொல்லை அடுத்து ஒற்று வருமா வராதா என்ற குழப்பம் அடிக்கடி வரும் !
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” (எச்சவியல் 56)- என்பதில் , ‘இல்லை’ என்றுதான் போடவேண்டும் என்பார் ஒருவர் ; ‘இல்லைக் ’ என்பதுதான் சரி என்பார் இன்னொருவர் !
எது சரி ?
இங்கேதான் மேலை ஆய்வு நமக்குக் கைகொடுக்கிறது !
தொல்காப்பியர்தான் ‘க்’ வரலாம், வராமலும் இருக்கலாம் எனக் கூறிவிட்டாரே ?
எனவே ,
“கடிசொல் இல்லைக் காலத்துப் படினே” √
“கடிசொல் இல்லை காலத்துப் படினே” √
ஆனால், நூற்பாவுக்கு ஏற்ற ‘கிண்’ணென்ற ஓசையை ‘க்’ தருவதால் ,‘இல்லைக்’ என்று போடுவதே சிறந்தது என்பது என் கருத்து !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 13 of 84 • 1 ... 8 ... 12, 13, 14 ... 48 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 13 of 84
|
|