புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 26 of 84 •
Page 26 of 84 • 1 ... 14 ... 25, 26, 27 ... 55 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (198)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
முன் ஆய்வில் , ‘தாம்’ என்பது குறுகித் ‘தம்’ ஆனால் , அது ‘ஐ’யுடன் சேரும்போது
‘தம்மை’ என்று , ‘ம்ம்’இரட்டல் ஏற்படும் எனப் பார்த்தோம் !
‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமைக்குப் பொருந்தும் இந் நியாயம் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் ‘கு’ எனும் நான்காம் வேற்றுமை உருபுக்கும் பொருந்தாது என்று அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! : -
“ஆற னுருபினு நான்க னுருபினுங்
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை
ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகு மொழிமுன் னான” (தொகை . 19)
‘நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான’ – நிலைமொழியானது நெடிலாயிருந்து
குறுகினால்,
‘ஆறன் உருபினும் நான்கன் உருபினும்’ – ஆறாம் வேற்றுமை உருபு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது ,
‘கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை’ – முன் நூற்பாவில் (தொகை . 18) கூறப்பட்டதுபோல நிலைமொழி ஈற்று மெய் இரட்டாது !
‘ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்’ – நிலைமொழி ஈற்று மெய்யோடு ‘அ’ சேரும் !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! :-
1 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் → ‘அ ’ சேரும்போது → தம் +அ →தம → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → தம + அது → தமது √
தம் + அது → தம்மது × ( ‘ம்’ இரட்டியதால், தவறு எனக் கூற முடிகிறது !)
2 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் → ‘அ ’ சேரும்போது → தம் +அ →தம → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → தம + கு → தமக்கு √ ( க் - சந்தி)
தம் + கு → தம்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
3 . நாம் → நெடுமுதல் குறுகி → நம் → ‘அ ’ சேரும்போது → நம் +அ →நம → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → நம + அது → நமது √
நம் + அது → நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
4. நாம் → நெடுமுதல் குறுகி → நம் → ‘அ ’ சேரும்போது → நம் +அ →நம → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → நம + கு → நமக்கு √ ( க் - சந்தி)
நம் + கு → நம்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
அது சரி !
நெடுமுதல் குறுகாத சாரியைகள் – ‘தம்’ , ‘நம்’ ஆகியவை புணர்ந்தாலும் இதே விதிதானா? – வினா!
‘இதே விதிதான் ’ என்கிறார் இளம்பூரணர் !
எடுத்துக்காட்டுகளுடன் இதனைக் கீழே விளக்கலாம் ! –
1 . எல்லார்+தம் + அது = எல்லார் + தம + அது = எல்லார் தமது √
எல்லார் + தம் + அது = எல்லார் தம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)
2. எல்லார்+நம் + அது = எல்லார் + நம + அது = எல்லார் நமது √
எல்லார் + நம் + அது = எல்லார் நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
முன் ஆய்வில் , ‘தாம்’ என்பது குறுகித் ‘தம்’ ஆனால் , அது ‘ஐ’யுடன் சேரும்போது
‘தம்மை’ என்று , ‘ம்ம்’இரட்டல் ஏற்படும் எனப் பார்த்தோம் !
‘ஐ’ எனும் இரண்டாம் வேற்றுமைக்குப் பொருந்தும் இந் நியாயம் ‘அது’ எனும் ஆறாம் வேற்றுமை உருபுக்கும் ‘கு’ எனும் நான்காம் வேற்றுமை உருபுக்கும் பொருந்தாது என்று அடுத்துக் கூறவருகிறார் தொல்காப்பியர் ! : -
“ஆற னுருபினு நான்க னுருபினுங்
கூறிய குற்றொற் றிரட்ட லில்லை
ஈறாகு புள்ளி யகரமொடு நிலையும்
நெடுமுதல் குறுகு மொழிமுன் னான” (தொகை . 19)
‘நெடுமுதல் குறுகும் மொழிமுன் னான’ – நிலைமொழியானது நெடிலாயிருந்து
குறுகினால்,
‘ஆறன் உருபினும் நான்கன் உருபினும்’ – ஆறாம் வேற்றுமை உருபு மற்றும் நான்காம் வேற்றுமை உருபுகள் வந்து புணரும்போது ,
‘கூறிய குற்றொற்று இரட்டல் இல்லை’ – முன் நூற்பாவில் (தொகை . 18) கூறப்பட்டதுபோல நிலைமொழி ஈற்று மெய் இரட்டாது !
‘ஈறாகு புள்ளி அகரமொடு நிலையும்’ – நிலைமொழி ஈற்று மெய்யோடு ‘அ’ சேரும் !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! :-
1 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் → ‘அ ’ சேரும்போது → தம் +அ →தம → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → தம + அது → தமது √
தம் + அது → தம்மது × ( ‘ம்’ இரட்டியதால், தவறு எனக் கூற முடிகிறது !)
2 . தாம் → நெடுமுதல் குறுகித் → தம் → ‘அ ’ சேரும்போது → தம் +அ →தம → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → தம + கு → தமக்கு √ ( க் - சந்தி)
தம் + கு → தம்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
3 . நாம் → நெடுமுதல் குறுகி → நம் → ‘அ ’ சேரும்போது → நம் +அ →நம → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → நம + அது → நமது √
நம் + அது → நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
4. நாம் → நெடுமுதல் குறுகி → நம் → ‘அ ’ சேரும்போது → நம் +அ →நம → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → நம + கு → நமக்கு √ ( க் - சந்தி)
நம் + கு → நம்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
அது சரி !
நெடுமுதல் குறுகாத சாரியைகள் – ‘தம்’ , ‘நம்’ ஆகியவை புணர்ந்தாலும் இதே விதிதானா? – வினா!
‘இதே விதிதான் ’ என்கிறார் இளம்பூரணர் !
எடுத்துக்காட்டுகளுடன் இதனைக் கீழே விளக்கலாம் ! –
1 . எல்லார்+தம் + அது = எல்லார் + தம + அது = எல்லார் தமது √
எல்லார் + தம் + அது = எல்லார் தம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)
2. எல்லார்+நம் + அது = எல்லார் + நம + அது = எல்லார் நமது √
எல்லார் + நம் + அது = எல்லார் நம்மது × ( ‘ம்’ இரட்டியதால் தவறு எனக் கூற முடிகிறது)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (199)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
“தமக்கு , நமக்கு – என்றெல்லாம் புணர்ச்சிகள் வரும் என்றீர்களே , அப்படியானால்
நுமக்கு , நுமது என வருமா? இல்லை நும்மக்கு , நும்மது என்று வருமா?” – ஒரு
மாணவன் தொல்காப்பியரைக் கேட்டிருக்கிறான் !
அவனுக்கு விடை கூற அடுத்த நூற்பா! :-
“நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது ! ” (தொகை . 20)
அஃதாவது , முன் நூற்பாவில் (தொகை .19) கூறியபடி ,நிலைமொழி ஈற்றிலே குற்றெழுத்து இரட்டாமல் வரும் , ‘அது’ , ‘கு’ ஆகிய
வேற்றுமை உருபுகள் புணரும்போது !
எடுத்துக்காட்டுகள் –
1 . நும் → ‘அ ’ சேரும்போது → நும் +அ →நும → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → நும + அது → நுமது √
நும் + அது → நும்மது × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
2. நும் → ‘அ ’ சேரும்போது → நும் +அ →நும → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → நும + கு → நுமக்கு √ ( க் - சந்தி)
நும் + கு → நும்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
“தமக்கு , நமக்கு – என்றெல்லாம் புணர்ச்சிகள் வரும் என்றீர்களே , அப்படியானால்
நுமக்கு , நுமது என வருமா? இல்லை நும்மக்கு , நும்மது என்று வருமா?” – ஒரு
மாணவன் தொல்காப்பியரைக் கேட்டிருக்கிறான் !
அவனுக்கு விடை கூற அடுத்த நூற்பா! :-
“நும்மெ னிறுதியு மந்நிலை திரியாது ! ” (தொகை . 20)
அஃதாவது , முன் நூற்பாவில் (தொகை .19) கூறியபடி ,நிலைமொழி ஈற்றிலே குற்றெழுத்து இரட்டாமல் வரும் , ‘அது’ , ‘கு’ ஆகிய
வேற்றுமை உருபுகள் புணரும்போது !
எடுத்துக்காட்டுகள் –
1 . நும் → ‘அ ’ சேரும்போது → நும் +அ →நும → ஆறாம் வேற்றுமை உருபு சேரும்போது → நும + அது → நுமது √
நும் + அது → நும்மது × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
2. நும் → ‘அ ’ சேரும்போது → நும் +அ →நும → நான்காம் வேற்றுமை உருபு சேரும்போது → நும + கு → நுமக்கு √ ( க் - சந்தி)
நும் + கு → நும்மக்கு × ( ‘ம்’ இரட்டியதால் ,தவறு எனக் கூற முடிகிறது !)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (200)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் நாம் நின்று விளையாடுகிறோம் !
அடுத்த நூற்பா! :-
“உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை” (தொகை . 21)
‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி’ - ‘உருஞு ’ , ‘பொருநு’ என்ற சொற்கள் ,
‘யகரமும் உயிரும் வருவழி ’ – யகரத்தையும் உயிர் எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது ,
‘இயற்கை’ - இயற்கையாக, அஃதாவது , ‘உரிஞ்’ , ‘பொருந்’ என்ற வடிவங்களில் நின்றே புணரும் !
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
உரிஞ் + யானா = உரிஞ் யானா (அல்வழிப் புணர்ச்சி)
உரிஞ் + அனந்தா = உரிஞனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி ; மெய் மீது உயிர் ஏறுதலும் இயல்புப் புணர்ச்சியே !)
உரிஞ் + ஆதா = உரிஞாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + இகலா = உரிஞிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஈந்தா = உரிஞீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + உழுந்தா = உரிஞுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஊரா = உரிஞூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + எயினா = உரிஞெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஏறா = உரிஞேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஐயா = உரிஞையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஒழுக்கா = உரிஞொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஓதா = உரிஞோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஔவியா = உரிஞௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
(உரிஞ் – தேய் )
பொருந் + யானா = பொருந் யானா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + அனந்தா = பொருநனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஆதா = பொருநாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + இகலா = பொருநிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஈந்தா = பொருநீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + உழுந்தா = பொருநுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஊரா = பொருநூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + எயினா = பொருநெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஏறா = பொருநேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஐயா = பொருநையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஒழுக்கா = பொருநொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஓதா = பொருநோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஔவியா = பொருநௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
(பொருந் – போரிடு )
அனந்தனை ‘அனந்தா’ , ஆதனை ‘ஆதா’ , இகலனை ‘இகலா’ , ஈந்தனை ‘ஈந்தா’ ,
உழுந்தனை ‘உழுந்தா’ , ஊரனை ‘ஊரா’ , எயினனை ‘எயினா’ , ஏறனை ‘ஏறா’ , ஐயனை ‘ஐயா’ , ஒழுக்கனை ‘ஒழுக்கா’ , ஓதனை ‘ஓதா’ , ஔவியனை ‘ஔவியா’ என்று விளிக்கப்பட்டுள்ளன !
பழந் தமிழகத்தில் மக்களின் பெயர்கள் (Names of Ancient Tamils)எவ்வாறு அமைந்திருந்தன என்பதைக் கண்ணுறும் அரிய இடம் இது !
“ஞநமவ என்னும் புள்ளி இறுதியும் , … முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே ”
(தொகை . 10) எனும் சூத்திரத்தில் முன்னிலை மொழிக்கண் ‘உரிஞ்’ , ‘பொருந்’ ஆகியன இயல்பாக வருவதற்குத் தடை உள்ளதா?
இல்லை !
இயல்பாயும் உறழ்ச்சியாயும் வருவதற்கே ஆண்டுத் தடை உள்ளது ! இயல்பாக மட்டும் வருவதை இங்கு சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் நாம் நின்று விளையாடுகிறோம் !
அடுத்த நூற்பா! :-
“உகரமொடு புணரும் புள்ளி யிறுதி
யகரமு முயிரும் வருவழி யியற்கை” (தொகை . 21)
‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி’ - ‘உருஞு ’ , ‘பொருநு’ என்ற சொற்கள் ,
‘யகரமும் உயிரும் வருவழி ’ – யகரத்தையும் உயிர் எழுத்துகளையும் முதலாகக் கொண்ட சொற்களுடன் புணரும்போது ,
‘இயற்கை’ - இயற்கையாக, அஃதாவது , ‘உரிஞ்’ , ‘பொருந்’ என்ற வடிவங்களில் நின்றே புணரும் !
நச்சினார்க்கினியர் தந்த எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
உரிஞ் + யானா = உரிஞ் யானா (அல்வழிப் புணர்ச்சி)
உரிஞ் + அனந்தா = உரிஞனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி ; மெய் மீது உயிர் ஏறுதலும் இயல்புப் புணர்ச்சியே !)
உரிஞ் + ஆதா = உரிஞாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + இகலா = உரிஞிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஈந்தா = உரிஞீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + உழுந்தா = உரிஞுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஊரா = உரிஞூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + எயினா = உரிஞெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஏறா = உரிஞேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஐயா = உரிஞையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஒழுக்கா = உரிஞொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஓதா = உரிஞோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
உரிஞ் + ஔவியா = உரிஞௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
(உரிஞ் – தேய் )
பொருந் + யானா = பொருந் யானா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + அனந்தா = பொருநனந்தா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஆதா = பொருநாதா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + இகலா = பொருநிகலா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஈந்தா = பொருநீந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + உழுந்தா = பொருநுழுந்தா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஊரா = பொருநூரா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + எயினா = பொருநெயினா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஏறா = பொருநேறா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஐயா = பொருநையா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஒழுக்கா = பொருநொழுக்கா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஓதா = பொருநோதா(அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
பொருந் + ஔவியா = பொருநௌவியா (அல்வழிப் புணர்ச்சி) (இயல்புப் புணர்ச்சி )
(பொருந் – போரிடு )
அனந்தனை ‘அனந்தா’ , ஆதனை ‘ஆதா’ , இகலனை ‘இகலா’ , ஈந்தனை ‘ஈந்தா’ ,
உழுந்தனை ‘உழுந்தா’ , ஊரனை ‘ஊரா’ , எயினனை ‘எயினா’ , ஏறனை ‘ஏறா’ , ஐயனை ‘ஐயா’ , ஒழுக்கனை ‘ஒழுக்கா’ , ஓதனை ‘ஓதா’ , ஔவியனை ‘ஔவியா’ என்று விளிக்கப்பட்டுள்ளன !
பழந் தமிழகத்தில் மக்களின் பெயர்கள் (Names of Ancient Tamils)எவ்வாறு அமைந்திருந்தன என்பதைக் கண்ணுறும் அரிய இடம் இது !
“ஞநமவ என்னும் புள்ளி இறுதியும் , … முற்றத் தோன்றா முன்னிலை மொழிக்கே ”
(தொகை . 10) எனும் சூத்திரத்தில் முன்னிலை மொழிக்கண் ‘உரிஞ்’ , ‘பொருந்’ ஆகியன இயல்பாக வருவதற்குத் தடை உள்ளதா?
இல்லை !
இயல்பாயும் உறழ்ச்சியாயும் வருவதற்கே ஆண்டுத் தடை உள்ளது ! இயல்பாக மட்டும் வருவதை இங்கு சொல்லியுள்ளார் தொல்காப்பியர் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (201)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியம் எப்போதுமே வாழ்க்கையை ஒட்டியே செல்லும் !
இதுதான் தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பு !
புணர்ச்சிகள் பற்றிப் பேசிவந்த தொல்காப்பியர் மக்களை மறக்காமல் எடைப் பெயர் முதலியவற்றையும் பேசுகிறார் ! : -
“உயிரும் புள்ளியு மிறுதியாகி
அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றின்
ஒத்த தென்ப வேயென் சாரியை” (தொகை . 22)
‘உயிரும் புள்ளியும் இறுதி ஆகி’ – நிலைமொழி ஈறு உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருந்தால்,
‘அளவு நிறையும் எண்ணும் சுட்டி’ - அவை அளவு , நிறை , எண் ஆகியவற்றைக் குறித்துநின்றால்,
‘உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்’ – அப்படி வரும் சொற்கள் எல்லாம் ‘
‘தத்தம் கிளவி தம் அகப்பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின்’ - தன்னை விடக் குறைந்த அளவைக் குறிக்கும்
சொல்லுடன் புணர நேர்ந்தால் ,
‘ஒத்த தென்ப ஏ என் சாரியை’ – புணர்ச்சி இடையே சாரியை ‘ஏ’ தோன்றும் !
‘முந்தை’ என்பது , ‘தத்தம்’ என்ற எதுகை நோக்கி ‘முத்தை ’
ஆனது !
இலக்கியங்களில் மட்டுமின்றி இலக்கணங்களிலும் எதுகை எப்படிப் பேணப்படுகிறது பாருங்கள் !
‘முந்தை’ என்றால் ஓர் அளவுக்கு முன்னுள்ள குறைந்த அளவு !
‘அடி’ க்கு முந்தை ‘அங்குலம்’ !
‘படி’க்கு முந்தை ‘ஆழாக்கு ’ !
சுருங்கச் சொன்னால் ஒரு பெரிய அளவுக்கு முன்னுள்ள சின்ன அளவே ‘முந்தை’ !
முந்தி நிற்பதால் , முந்தை !
ஒரு கலைச்சொல்லைப் (Technical term)பழந் தமிழர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் பாருங்கள்!
தொல்காப்பியரின் சொல்லாக்கக் கோட்பாடு இங்கே தெளிவாகிறது !
‘அகப்பட்ட’ என்ற சொல்லும் கருதத்தக்கது !
‘இந்த நான்கெல்லைக்குள் அகப்பட்ட மாவடை மரவடை உள்பட’ – என்று கல்வெட்டுகளில் அடிக்கடி வரும் !
இந்தச் சொல் தொல்காப்பியர் காலச் சொல் என்பது இன்று தெளிவாகிறது !
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
1 . உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
2 . கலன் + பதக்கு = கலனே பதக்கு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘உழக்கு’ , ‘கலன்’ இரண்டும் முகத்தல்அளவுப் பெயர்கள் !
‘கலன்’ என்பதும் ‘கலம்’ என்பதும் ஒன்றுதான்!
3 . தொடி + கஃசு = தொடியே கஃசு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
4 . கொள் + ஐயவி = கொள்ளே ஐயவி (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘தொடி’ , ‘ஐயவி’ இரண்டும் எடைப் பெயர்கள் !
5 . காணி + முந்திரிகை = காணியே முந்திரிகை (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
6 . கால் + காணி = காலே காணி (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘காணி’ , ‘கால்’ – எண்ணுப் பெயர்கள் !
‘முந்திரி’ என்பதும் ‘முந்திரிகை’ என்பதும் ஒன்றுதான் !
வழக்கம் போல ஒரு விதிவிலக்கையும் இளம்பூரணர் நமக்காகச் சொல்கிறார் !-
குறுணி + நானாழி = குறுணி நானாழி ((அல்வழிப் புணர்ச்சி) (சாரியை வரவில்லை என்பதைக் கவனியுங்கள்!)
மேலே இளம்பூரணர் காலத்தில் இருந்த அளவுகளை இன்றைய முறையில் வருமாறு தரலாம் ! :-
ஒரு ஆழாக்கு = 168 மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
1 நாழி= 1344 மி.லிட். (1 லிட்டரும் 344 மில்லி லிட்டரும்)
1 குறுணி = 10752 மி.லிட். (10 லிட்டரும் 752 மில்லி லிட்டரும்)
1 காணி = 1/80
1 முந்திரி =1/320
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொல்காப்பியம் எப்போதுமே வாழ்க்கையை ஒட்டியே செல்லும் !
இதுதான் தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பு !
புணர்ச்சிகள் பற்றிப் பேசிவந்த தொல்காப்பியர் மக்களை மறக்காமல் எடைப் பெயர் முதலியவற்றையும் பேசுகிறார் ! : -
“உயிரும் புள்ளியு மிறுதியாகி
அளவு நிறையு மெண்ணுஞ் சுட்டி
உளவெனப் பட்ட வெல்லாச் சொல்லுந்
தத்தங் கிளவி தம்மகப் பட்ட
முத்தை வரூஉங் காலந் தோன்றின்
ஒத்த தென்ப வேயென் சாரியை” (தொகை . 22)
‘உயிரும் புள்ளியும் இறுதி ஆகி’ – நிலைமொழி ஈறு உயிரெழுத்தாகவோ மெய்யெழுத்தாகவோ இருந்தால்,
‘அளவு நிறையும் எண்ணும் சுட்டி’ - அவை அளவு , நிறை , எண் ஆகியவற்றைக் குறித்துநின்றால்,
‘உளவெனப் பட்ட எல்லாச் சொல்லும்’ – அப்படி வரும் சொற்கள் எல்லாம் ‘
‘தத்தம் கிளவி தம் அகப்பட்ட முத்தை வரூஉம் காலம் தோன்றின்’ - தன்னை விடக் குறைந்த அளவைக் குறிக்கும்
சொல்லுடன் புணர நேர்ந்தால் ,
‘ஒத்த தென்ப ஏ என் சாரியை’ – புணர்ச்சி இடையே சாரியை ‘ஏ’ தோன்றும் !
‘முந்தை’ என்பது , ‘தத்தம்’ என்ற எதுகை நோக்கி ‘முத்தை ’
ஆனது !
இலக்கியங்களில் மட்டுமின்றி இலக்கணங்களிலும் எதுகை எப்படிப் பேணப்படுகிறது பாருங்கள் !
‘முந்தை’ என்றால் ஓர் அளவுக்கு முன்னுள்ள குறைந்த அளவு !
‘அடி’ க்கு முந்தை ‘அங்குலம்’ !
‘படி’க்கு முந்தை ‘ஆழாக்கு ’ !
சுருங்கச் சொன்னால் ஒரு பெரிய அளவுக்கு முன்னுள்ள சின்ன அளவே ‘முந்தை’ !
முந்தி நிற்பதால் , முந்தை !
ஒரு கலைச்சொல்லைப் (Technical term)பழந் தமிழர்கள் எப்படி உருவாக்குகிறார்கள் பாருங்கள்!
தொல்காப்பியரின் சொல்லாக்கக் கோட்பாடு இங்கே தெளிவாகிறது !
‘அகப்பட்ட’ என்ற சொல்லும் கருதத்தக்கது !
‘இந்த நான்கெல்லைக்குள் அகப்பட்ட மாவடை மரவடை உள்பட’ – என்று கல்வெட்டுகளில் அடிக்கடி வரும் !
இந்தச் சொல் தொல்காப்பியர் காலச் சொல் என்பது இன்று தெளிவாகிறது !
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தந்த காட்டுகளை வருமாறு விளக்கலாம் ! :-
1 . உழக்கு + ஆழாக்கு = உழக்கே யாழாக்கு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
2 . கலன் + பதக்கு = கலனே பதக்கு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘உழக்கு’ , ‘கலன்’ இரண்டும் முகத்தல்அளவுப் பெயர்கள் !
‘கலன்’ என்பதும் ‘கலம்’ என்பதும் ஒன்றுதான்!
3 . தொடி + கஃசு = தொடியே கஃசு (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
4 . கொள் + ஐயவி = கொள்ளே ஐயவி (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘தொடி’ , ‘ஐயவி’ இரண்டும் எடைப் பெயர்கள் !
5 . காணி + முந்திரிகை = காணியே முந்திரிகை (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
6 . கால் + காணி = காலே காணி (அல்வழிப் புணர்ச்சி) (ஏ - சாரியை)
‘காணி’ , ‘கால்’ – எண்ணுப் பெயர்கள் !
‘முந்திரி’ என்பதும் ‘முந்திரிகை’ என்பதும் ஒன்றுதான் !
வழக்கம் போல ஒரு விதிவிலக்கையும் இளம்பூரணர் நமக்காகச் சொல்கிறார் !-
குறுணி + நானாழி = குறுணி நானாழி ((அல்வழிப் புணர்ச்சி) (சாரியை வரவில்லை என்பதைக் கவனியுங்கள்!)
மேலே இளம்பூரணர் காலத்தில் இருந்த அளவுகளை இன்றைய முறையில் வருமாறு தரலாம் ! :-
ஒரு ஆழாக்கு = 168 மில்லி லிட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.
1 நாழி= 1344 மி.லிட். (1 லிட்டரும் 344 மில்லி லிட்டரும்)
1 குறுணி = 10752 மி.லிட். (10 லிட்டரும் 752 மில்லி லிட்டரும்)
1 காணி = 1/80
1 முந்திரி =1/320
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (202)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
சென்ற ஆய்வில் ‘உழக்கே ஆழாக்கு’ என்று சாரியை ‘ஏ’ பெற்ற புணர்ச்சி விதியைப் பார்த்தோம் !
ஒரு மாணவனுக்கு ஐயம் வந்தது !
‘அப்படியானால் , ‘உழக்கே அரை’ என்று வருமா? ’ – கேட்டான் !
‘வராது !’ என்ற தொல்காப்பியர் அதற்குத் தனி விதி எழுதினார் ! :-
“அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை” (தொகை . 23)
பால்வரை கிளவி – பொருளின் பகுதியை (கூற்றை) உணர்த்தும் சொல் ! ‘அரை’ , ‘கால்’ போன்றன பால்வரை கிளவிகளே ! ‘பாலது ஆணை’ என்றால் ‘ஊழ்வினை’ ! பொருள் வேறுபாட்டை அறிந்துகொள்க !
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . உழக்கு + அரை = உழக்கே யரை ×
உழக்கு + அரை = உழக்கரை √ (அல்வழிப் புணர்ச்சி)
2 . தொடி + அரை = தொடியே யரை ×
தொடி + அரை = தொடியரை √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . ஒன்று + அரை = ஒன்றே யரை×
ஒன்று + அரை = ஒன்றரை√ (அல்வழிப் புணர்ச்சி)
இதே நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூடுதலாகச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் ! அவற்றையும் காண்போமே ! -
1 . செவிடு + அரை = செவிடே யரை ×
செவிடு + அரை = செவிடரை √
செவிடு + அரை = செவிட்டரை√ (அல்வழிப் புணர்ச்சி)
2 . மூவுழக்கு + அரை = மூவுழக்கே யரை ×
மூவுழக்கு + அரை = மூவுழக்கரை √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . கஃசு + அரை = கஃசே யரை ×
கஃசு + அரை = கஃசரை √ (அல்வழிப் புணர்ச்சி)
4 . பத்து + அரை = பத்தே யரை ×
பத்து + அரை = பத்தரை √ (அல்வழிப் புணர்ச்சி)
5 . கலம் + அரை = கலமே யரை ×
கலம் + அரை = கலவரை √ (அல்வழிப் புணர்ச்சி)
‘பத்தரை ’மாற்றுத் தங்கம் தமிழ்ப் புணர்ச்சி !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
சென்ற ஆய்வில் ‘உழக்கே ஆழாக்கு’ என்று சாரியை ‘ஏ’ பெற்ற புணர்ச்சி விதியைப் பார்த்தோம் !
ஒரு மாணவனுக்கு ஐயம் வந்தது !
‘அப்படியானால் , ‘உழக்கே அரை’ என்று வருமா? ’ – கேட்டான் !
‘வராது !’ என்ற தொல்காப்பியர் அதற்குத் தனி விதி எழுதினார் ! :-
“அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப்
புரைவ தன்றாற் சாரியை யியற்கை” (தொகை . 23)
பால்வரை கிளவி – பொருளின் பகுதியை (கூற்றை) உணர்த்தும் சொல் ! ‘அரை’ , ‘கால்’ போன்றன பால்வரை கிளவிகளே ! ‘பாலது ஆணை’ என்றால் ‘ஊழ்வினை’ ! பொருள் வேறுபாட்டை அறிந்துகொள்க !
மேல் நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . உழக்கு + அரை = உழக்கே யரை ×
உழக்கு + அரை = உழக்கரை √ (அல்வழிப் புணர்ச்சி)
2 . தொடி + அரை = தொடியே யரை ×
தொடி + அரை = தொடியரை √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . ஒன்று + அரை = ஒன்றே யரை×
ஒன்று + அரை = ஒன்றரை√ (அல்வழிப் புணர்ச்சி)
இதே நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கூடுதலாகச் சில எடுத்துக்காட்டுகளைத் தருகிறார் ! அவற்றையும் காண்போமே ! -
1 . செவிடு + அரை = செவிடே யரை ×
செவிடு + அரை = செவிடரை √
செவிடு + அரை = செவிட்டரை√ (அல்வழிப் புணர்ச்சி)
2 . மூவுழக்கு + அரை = மூவுழக்கே யரை ×
மூவுழக்கு + அரை = மூவுழக்கரை √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . கஃசு + அரை = கஃசே யரை ×
கஃசு + அரை = கஃசரை √ (அல்வழிப் புணர்ச்சி)
4 . பத்து + அரை = பத்தே யரை ×
பத்து + அரை = பத்தரை √ (அல்வழிப் புணர்ச்சி)
5 . கலம் + அரை = கலமே யரை ×
கலம் + அரை = கலவரை √ (அல்வழிப் புணர்ச்சி)
‘பத்தரை ’மாற்றுத் தங்கம் தமிழ்ப் புணர்ச்சி !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (203)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அளவுப் பெயர்களுடன் ‘குறை’ என்ற சொல் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும்
எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை” (தொகை . 24)
இதன்படி –
1 . உரி + குறை = உரிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
2 . கலம் + குறை = கலக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
3. தொடி + குறை = தொடிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
4 . கொள் + குறை = கொட் குறை (அல்வழிப் புணர்ச்சி)
5. காணி + குறை = காணிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
6 . கால் + குறை = காற் குறை (அல்வழிப் புணர்ச்சி)
‘குறை’ வந்து புணர்வதற்குத்தானே இலக்கணம் சொன்னார் தொல்காப்பியர் ?
இளம்பூரணர் . ‘அதனால் என்ன ? ஏதாவது ஒரு பொருளின் பெயரைக்
கொண்டுவந்து அளவுப் பெயர்களுடன் புணர்த்தினாலும் இதே விதிதான் !’ என்கிறார் !
இதன்படி –
கலம் + பயறு = கலப் பயறு (அல்வழிப் புணர்ச்சி)
‘கூறு’ என்ற சொல் வந்து புணர்ந்தாலும் இதுதான் விதி என்கிறார் இளம்பூரணர் ! –
நாழி + கூறு = நாழிக் கூறு (அல்வழிப் புணர்ச்சி)
(நாழிக் கூறு – நாழியின் பகுதி)
இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் உரை நமக்கு விளக்கம் தருவதாக உள்ளது ! : -
“உரிக் குறை : உரி நெல்லும் குறை நெல்லும் என்க ! ‘வேற்றுமை இயற்கை’ எனவே இவை வேற்றுமை அல்ல ஆயின . ஆகவே , உரிக்குறை என்பதற்கு உரியும் உழக்கும் எனப் பொருளாயிற்று !”
ஐயம் தீர்ந்ததா ?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அளவுப் பெயர்களுடன் ‘குறை’ என்ற சொல் வந்து புணர்ந்தால் எப்படிப் புணரும்
எனக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“குறையென் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை” (தொகை . 24)
இதன்படி –
1 . உரி + குறை = உரிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
2 . கலம் + குறை = கலக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
3. தொடி + குறை = தொடிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
4 . கொள் + குறை = கொட் குறை (அல்வழிப் புணர்ச்சி)
5. காணி + குறை = காணிக் குறை (அல்வழிப் புணர்ச்சி)
6 . கால் + குறை = காற் குறை (அல்வழிப் புணர்ச்சி)
‘குறை’ வந்து புணர்வதற்குத்தானே இலக்கணம் சொன்னார் தொல்காப்பியர் ?
இளம்பூரணர் . ‘அதனால் என்ன ? ஏதாவது ஒரு பொருளின் பெயரைக்
கொண்டுவந்து அளவுப் பெயர்களுடன் புணர்த்தினாலும் இதே விதிதான் !’ என்கிறார் !
இதன்படி –
கலம் + பயறு = கலப் பயறு (அல்வழிப் புணர்ச்சி)
‘கூறு’ என்ற சொல் வந்து புணர்ந்தாலும் இதுதான் விதி என்கிறார் இளம்பூரணர் ! –
நாழி + கூறு = நாழிக் கூறு (அல்வழிப் புணர்ச்சி)
(நாழிக் கூறு – நாழியின் பகுதி)
இவ்விடத்தில் நச்சினார்க்கினியர் உரை நமக்கு விளக்கம் தருவதாக உள்ளது ! : -
“உரிக் குறை : உரி நெல்லும் குறை நெல்லும் என்க ! ‘வேற்றுமை இயற்கை’ எனவே இவை வேற்றுமை அல்ல ஆயின . ஆகவே , உரிக்குறை என்பதற்கு உரியும் உழக்கும் எனப் பொருளாயிற்று !”
ஐயம் தீர்ந்ததா ?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (204)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘குறை’ என்ற சொல் , அளவுப் பெயர்களுடன் சேரும்போது எப்படிப் புணரும் என்று இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !
அதே ‘குறை’ ,குற்றியலுகரச் சொற்களுடன் புணரும்போது என்ன விதி என்று அடுத்துக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“குற்றிய லுகரக் கின்னே சாரியை” (தொகை . 25)
குற்றியலுகரக்கு – குற்றியலுகரச் சொற்களுக்கு
‘அளவுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாக இருந்தால் , ‘இன்’ சாரியை
சேரும் ’ – இதுதான் கருத்து !
இதன்படி –
1 . உழக்கு + குறை = உழக்குக் குறை ×
உழக்கு + குறை = உழக்கிற் குறை ×
உழக்கு + குறை = உழக்கின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(உழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; உழக்கின் குறை – ‘உழக்கும் குறையும்’ என்பது பொருள் !
உழக்கிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘உழக்கில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
2 . கழஞ்சு + குறை = கழஞ்சுக் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சிற் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(கழஞ்சு – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; கழஞ்சின் குறை – ‘கழஞ்சும் குறையும் ’என்பது பொருள் !
கழஞ்சிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்குக் ‘கழஞ்சில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
3 . ஒன்று + குறை = ஒன்றுக் குறை ×
ஒன்று + குறை = ஒன்றிற் குறை ×
ஒன்று + குறை = ஒன்றின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(ஒன்று – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; ஒன்றின் குறை – ‘ஒன்றும் குறையும் ’என்பது பொருள் !
ஒன்றிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘ஒன்றில் குறை’ என்பது பொருள் !இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
இங்கு வந்துள்ள புணர்ச்சி நுட்பங்கள் தமிழ் இலக்கண உலகில் குறிப்பிடத் தக்கவை !
இந்த நுணுக்கங்கள் நச்சினார்க்கினியரை அடியொற்றியவையாம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
‘குறை’ என்ற சொல் , அளவுப் பெயர்களுடன் சேரும்போது எப்படிப் புணரும் என்று இதற்கு முந்தைய ஆய்வில் பார்த்தோம் !
அதே ‘குறை’ ,குற்றியலுகரச் சொற்களுடன் புணரும்போது என்ன விதி என்று அடுத்துக் காட்டுகிறார் தொல்காப்பியர் ! :-
“குற்றிய லுகரக் கின்னே சாரியை” (தொகை . 25)
குற்றியலுகரக்கு – குற்றியலுகரச் சொற்களுக்கு
‘அளவுப் பெயர்கள் குற்றியலுகரச் சொற்களாக இருந்தால் , ‘இன்’ சாரியை
சேரும் ’ – இதுதான் கருத்து !
இதன்படி –
1 . உழக்கு + குறை = உழக்குக் குறை ×
உழக்கு + குறை = உழக்கிற் குறை ×
உழக்கு + குறை = உழக்கின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(உழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; உழக்கின் குறை – ‘உழக்கும் குறையும்’ என்பது பொருள் !
உழக்கிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘உழக்கில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
2 . கழஞ்சு + குறை = கழஞ்சுக் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சிற் குறை ×
கழஞ்சு + குறை = கழஞ்சின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(கழஞ்சு – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; கழஞ்சின் குறை – ‘கழஞ்சும் குறையும் ’என்பது பொருள் !
கழஞ்சிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்குக் ‘கழஞ்சில் குறை’ என்பது பொருள் ! இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
3 . ஒன்று + குறை = ஒன்றுக் குறை ×
ஒன்று + குறை = ஒன்றிற் குறை ×
ஒன்று + குறை = ஒன்றின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
(ஒன்று – மென்றொடர்க் குற்றியலுகரம் பெற்றுள்ளது; ஒன்றின் குறை – ‘ஒன்றும் குறையும் ’என்பது பொருள் !
ஒன்றிற் குறை – வேற்றுமைப் புணர்ச்சி ; இதற்கு ‘ஒன்றில் குறை’ என்பது பொருள் !இங்கே வரும் ‘இன்’ , சாரியை அல்ல ; வேற்றுமை உருபு !)
இங்கு வந்துள்ள புணர்ச்சி நுட்பங்கள் தமிழ் இலக்கண உலகில் குறிப்பிடத் தக்கவை !
இந்த நுணுக்கங்கள் நச்சினார்க்கினியரை அடியொற்றியவையாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (205)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் ‘குறை’ என்ற சொல் அளவுப் பெயர்களுடன் எப்படிப் புணரும் என்று காட்டிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது –
“அத்திடை வரூஉம் கலமென் னளவே” (தொகை . 26)
அத்து – சாரியையாகிய ‘அத்து’ .
‘கலம்’ என்னும் சொல் அளவுப் பெயர்களுடன் புணரும்போது அத்துச் சாரியை வரும் என்பது தொல்காப்பியம் !
கலம் + குறை = கலத்துக் குறை (அத்து – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)
கலத்துக் குறை – ‘கலமும் குறையும் ’ என்று பொருள்படுவதால் ‘அல்வழிப் புணர்ச்சி’ ! வேறு ஒன்றுமில்லை !
தொல்காப்பியத்தில் ‘கலம்’ என்ற சொல்தான் வந்துள்ளது ! இங்கே இளம்பூரணர் என்ன எழுதுகிறாரென்றால் , ‘கலன்’ என்றசொல் வந்திருந்தாலும் ‘அத்தே வற்றே’ என்ற நூற்பாப்படி [புணரியல் 31] ‘கலத்துக் குறை’ என்றுதான் வரும் என்கிறார் !
அப்படியானால் , நூற்பாவில் ‘கலனென் னளவே’ என்று போட்டிருக்கலாமே ?
இதற்கு இளம்பூரணரின் விடை – செய்யுள் இன்பம் நோக்கி அவ்வாறு ‘கலம்’ என்ற சொல்லை ஆண்டிருக்கவேண்டும் !
நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் செய்யுள் இன்பம் வேண்டும் என்ற இளம்பூரணர் காட்டும் செய்யுள் கோட்பாடு நமக்கு விளங்குகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் ‘குறை’ என்ற சொல் அளவுப் பெயர்களுடன் எப்படிப் புணரும் என்று காட்டிவருகிறார் தொல்காப்பியர் !
இப்போது –
“அத்திடை வரூஉம் கலமென் னளவே” (தொகை . 26)
அத்து – சாரியையாகிய ‘அத்து’ .
‘கலம்’ என்னும் சொல் அளவுப் பெயர்களுடன் புணரும்போது அத்துச் சாரியை வரும் என்பது தொல்காப்பியம் !
கலம் + குறை = கலத்துக் குறை (அத்து – சாரியை ) (அல்வழிப் புணர்ச்சி)
கலத்துக் குறை – ‘கலமும் குறையும் ’ என்று பொருள்படுவதால் ‘அல்வழிப் புணர்ச்சி’ ! வேறு ஒன்றுமில்லை !
தொல்காப்பியத்தில் ‘கலம்’ என்ற சொல்தான் வந்துள்ளது ! இங்கே இளம்பூரணர் என்ன எழுதுகிறாரென்றால் , ‘கலன்’ என்றசொல் வந்திருந்தாலும் ‘அத்தே வற்றே’ என்ற நூற்பாப்படி [புணரியல் 31] ‘கலத்துக் குறை’ என்றுதான் வரும் என்கிறார் !
அப்படியானால் , நூற்பாவில் ‘கலனென் னளவே’ என்று போட்டிருக்கலாமே ?
இதற்கு இளம்பூரணரின் விடை – செய்யுள் இன்பம் நோக்கி அவ்வாறு ‘கலம்’ என்ற சொல்லை ஆண்டிருக்கவேண்டும் !
நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் செய்யுள் இன்பம் வேண்டும் என்ற இளம்பூரணர் காட்டும் செய்யுள் கோட்பாடு நமக்கு விளங்குகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (206)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் நாம் காணவேண்டிய அடுத்த நூற்பா ! :-
“பனையெ னளவுங் காவெ னிறையும்
நினையுங் காலை யின்னொடு சிவணும்” (தொகை . 27)
‘பனை’ , ‘ கா’ – இரு அளவுப் பெயர்ச் சொற்களும் (Nouns denoting measurements) ‘குறை’ எனும் சொல்லோடு புணரவேண்டுமானால் , ‘இன்’ சாரியை இடையே வரும் ! – இதுதான் தொல்காப்பியக் கருத்து !
இதன்படி –
1 . பனை + குறை = பனையின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பனையின் குறை – ‘பனையும் குறையும்’ ; இப்பொருள் உள்ளதால்தான் நம்மால் ‘அல்வழிப் புணர்ச்சி’ எனக் கூற முடிகிறது !
2 . கா + குறை = காவின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
காவின் குறை – ‘காவும் குறையும்’ ; உம்மைத் தொகை .
‘பனை’யை அளவுப் பெயர் என்றும் , ‘கா’வை நிறைப் பெயர் என்றும் இளம்பூரணர் தெரிவிக்கிறார் !
இந்த நூற்பாவுக்கும் விதிவிலக்குக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-
“ ‘நினையுங் காலை ’ என்றதனான் , வல்லெழுத்துப் பேறும் சிறுபான்மை கொள்க ! ‘பனைக் குறை’ , ‘காக் குறை’ என வரும் !” .
இளம்பூரணரின் இவ் விதி விலக்குப் படி –
1 . பனை + குறை = பனைக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
பனைக் குறை – உம்மைத் தொகை .
2 . கா + குறை = காக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
காக் குறை – உம்மைத் தொகை .
அது சரி ! ‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ என முன்னே (தொகை . 25) கூறினாரே , அங்கேயே பனை , கா இரண்டும்கூட இன் சாரியை பெறும் எனச் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே ?
நல்ல கேள்வி !
விடை – மனப்பாடத்திற்காக அவ்வாறு செய்தார் !
‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ – என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட மாணவன் ஒப்பிக்கவேண்டும் ! அதில் வேறொன்றைச் சேர்க்கக் கூடாது !
தொல்காப்பியக் கட்டமைப்பே (Structure of Tholkappiyam) இப்படித்தான் செல்கிறது !அஃதாவது பழந்தமிழ்க் கல்விமுறையை (Education System of Ancient Tamils) ஒட்டிச் செல்கிறது !
பனை- ‘தினை ’ என்பதற்கு எதிர்நிலையாக இச் சொல் வந்துள்ளது என்பர் !
1கா = 100 பலம் = 3500 கிராம் .
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
தொகை மரபில் நாம் காணவேண்டிய அடுத்த நூற்பா ! :-
“பனையெ னளவுங் காவெ னிறையும்
நினையுங் காலை யின்னொடு சிவணும்” (தொகை . 27)
‘பனை’ , ‘ கா’ – இரு அளவுப் பெயர்ச் சொற்களும் (Nouns denoting measurements) ‘குறை’ எனும் சொல்லோடு புணரவேண்டுமானால் , ‘இன்’ சாரியை இடையே வரும் ! – இதுதான் தொல்காப்பியக் கருத்து !
இதன்படி –
1 . பனை + குறை = பனையின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
பனையின் குறை – ‘பனையும் குறையும்’ ; இப்பொருள் உள்ளதால்தான் நம்மால் ‘அல்வழிப் புணர்ச்சி’ எனக் கூற முடிகிறது !
2 . கா + குறை = காவின் குறை √(இன் - சாரியை) (அல்வழிப் புணர்ச்சி)
காவின் குறை – ‘காவும் குறையும்’ ; உம்மைத் தொகை .
‘பனை’யை அளவுப் பெயர் என்றும் , ‘கா’வை நிறைப் பெயர் என்றும் இளம்பூரணர் தெரிவிக்கிறார் !
இந்த நூற்பாவுக்கும் விதிவிலக்குக் கூறுகிறார் இளம்பூரணர் ! :-
“ ‘நினையுங் காலை ’ என்றதனான் , வல்லெழுத்துப் பேறும் சிறுபான்மை கொள்க ! ‘பனைக் குறை’ , ‘காக் குறை’ என வரும் !” .
இளம்பூரணரின் இவ் விதி விலக்குப் படி –
1 . பனை + குறை = பனைக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
பனைக் குறை – உம்மைத் தொகை .
2 . கா + குறை = காக் குறை √ (அல்வழிப் புணர்ச்சி) (இன் சாரியை பெற வில்லை)
காக் குறை – உம்மைத் தொகை .
அது சரி ! ‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ என முன்னே (தொகை . 25) கூறினாரே , அங்கேயே பனை , கா இரண்டும்கூட இன் சாரியை பெறும் எனச் சேர்த்துச் சொல்லியிருக்கலாமே ?
நல்ல கேள்வி !
விடை – மனப்பாடத்திற்காக அவ்வாறு செய்தார் !
‘குற்றிய லுகரக் கின்னே சாரியை’ – என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால்கூட மாணவன் ஒப்பிக்கவேண்டும் ! அதில் வேறொன்றைச் சேர்க்கக் கூடாது !
தொல்காப்பியக் கட்டமைப்பே (Structure of Tholkappiyam) இப்படித்தான் செல்கிறது !அஃதாவது பழந்தமிழ்க் கல்விமுறையை (Education System of Ancient Tamils) ஒட்டிச் செல்கிறது !
பனை- ‘தினை ’ என்பதற்கு எதிர்நிலையாக இச் சொல் வந்துள்ளது என்பர் !
1கா = 100 பலம் = 3500 கிராம் .
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (207)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அளவு , நிறைப் பெயர் சொற்கள் தொடர்பாக எல்லாவற்றையும் தொல்காப்பியர் கூறிவிட்டார் என நாம் நினைக்கும் நேரத்தில் ‘இருங்கள் !இருங்கள்! கடைசியாக ஒன்று சொல்லவேண்டியுள்ளது ! ’ என்று கூறுவதுபோல இந்த நூற்பாவைத் தருகிறார் ! :-
“அளவிற்கு நிரையிற்கு மொழிமுத லாகி
உளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே
அவைதாம்
கசதப வென்றா நமவ வென்றா
அகர உகரமோ டவையென மொழிப” (தொகை . 28)
அளவு , நிறைப் பெயர்ச் சொற்கள் இன்னின்ன முதல் எழுத்துகளைக் கொண்டுதான் எழுதப்படும் என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் !
அந்த முதல் எழுத்துகள் – க , ச , த , ப , ந , ம , வ , அ , உ (9)
க – முதலாகச் சொல்லியிருந்தாலும் இவற்றின் வரிசை எழுத்துகளையும் நாம் கொள்ளவேண்டும் !
எடுத்துக்காட்டாக - ‘க’ முதல் எழுத்தாக வரலாம் என்று சொல்லியுள்ளதால் , ‘கா’ , ‘கீ’ என்று தொடங்கும் எழுத்துகளும் வரலாம் என்பதே பொருளாம் !
எடுத்துக்காட்டுகள் –
1 . கலம் ; கழஞ்சு
2 . சாடி ; சீரகம்
3 . தூத ; தொடி
4 . பானை ; பலம்
5 . நாழி ; நிறை
6 . மண்டை ; மா
7 . வட்டில் ; வரை
8 . அகல் ; அந்தை
9 . உழக்கு
- இவற்றில் 1 . முகத்தல் அளவைப் பெயர்கள் : கலம் , சாடி , தூதை , பானை , நாழி , மண்டை , வட்டி , அகல் , உழக்கு .
2 . நிறுத்தல் அளவைப் பெயர்கள் : கழஞ்சு , சீரகம் , தொடி , பலம் ,
நிறை , மா , வரை , அந்தை .
மேலே சொல்லப்பட்ட எழுத்துகள் தவிர வேறு சில எழுத்துகளையும் கொண்டு அளவைப் பெயர்கள் வரும் என்கிறார் இளம்பூரணர் ! – இம்மி , ஓரடை , ஓராடை .
மேலே வந்துள்ள ‘அந்தை’ என்பதும் ‘ஐந்தை’ என்பதும் ஒன்றுதான் என்றும் இவை ‘சிறுவெண்கடு’கைக் குறிக்கும் என்றும் குறித்துளர் !
இளம்பூரணர் குறித்த ‘இம்மி’, வழக்கிலும் உள்ளதை நோக்கலாம் ! ‘என்ன ,
இம்மிக் கணக்குப் பார்க்கிறியே ?’ என்று கூறக் கேட்கலாம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
அளவு , நிறைப் பெயர் சொற்கள் தொடர்பாக எல்லாவற்றையும் தொல்காப்பியர் கூறிவிட்டார் என நாம் நினைக்கும் நேரத்தில் ‘இருங்கள் !இருங்கள்! கடைசியாக ஒன்று சொல்லவேண்டியுள்ளது ! ’ என்று கூறுவதுபோல இந்த நூற்பாவைத் தருகிறார் ! :-
“அளவிற்கு நிரையிற்கு மொழிமுத லாகி
உளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே
அவைதாம்
கசதப வென்றா நமவ வென்றா
அகர உகரமோ டவையென மொழிப” (தொகை . 28)
அளவு , நிறைப் பெயர்ச் சொற்கள் இன்னின்ன முதல் எழுத்துகளைக் கொண்டுதான் எழுதப்படும் என்று வரையறுக்கிறார் தொல்காப்பியர் !
அந்த முதல் எழுத்துகள் – க , ச , த , ப , ந , ம , வ , அ , உ (9)
க – முதலாகச் சொல்லியிருந்தாலும் இவற்றின் வரிசை எழுத்துகளையும் நாம் கொள்ளவேண்டும் !
எடுத்துக்காட்டாக - ‘க’ முதல் எழுத்தாக வரலாம் என்று சொல்லியுள்ளதால் , ‘கா’ , ‘கீ’ என்று தொடங்கும் எழுத்துகளும் வரலாம் என்பதே பொருளாம் !
எடுத்துக்காட்டுகள் –
1 . கலம் ; கழஞ்சு
2 . சாடி ; சீரகம்
3 . தூத ; தொடி
4 . பானை ; பலம்
5 . நாழி ; நிறை
6 . மண்டை ; மா
7 . வட்டில் ; வரை
8 . அகல் ; அந்தை
9 . உழக்கு
- இவற்றில் 1 . முகத்தல் அளவைப் பெயர்கள் : கலம் , சாடி , தூதை , பானை , நாழி , மண்டை , வட்டி , அகல் , உழக்கு .
2 . நிறுத்தல் அளவைப் பெயர்கள் : கழஞ்சு , சீரகம் , தொடி , பலம் ,
நிறை , மா , வரை , அந்தை .
மேலே சொல்லப்பட்ட எழுத்துகள் தவிர வேறு சில எழுத்துகளையும் கொண்டு அளவைப் பெயர்கள் வரும் என்கிறார் இளம்பூரணர் ! – இம்மி , ஓரடை , ஓராடை .
மேலே வந்துள்ள ‘அந்தை’ என்பதும் ‘ஐந்தை’ என்பதும் ஒன்றுதான் என்றும் இவை ‘சிறுவெண்கடு’கைக் குறிக்கும் என்றும் குறித்துளர் !
இளம்பூரணர் குறித்த ‘இம்மி’, வழக்கிலும் உள்ளதை நோக்கலாம் ! ‘என்ன ,
இம்மிக் கணக்குப் பார்க்கிறியே ?’ என்று கூறக் கேட்கலாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 26 of 84 • 1 ... 14 ... 25, 26, 27 ... 55 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 26 of 84
|
|