புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
3 Posts - 2%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
6 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
5 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 30 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 29 of 84 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 56 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 13, 2014 1:10 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (224)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
‘ம்’ ஈற்றுப் பெயர்ச் சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது எந்தச் சாரியை வரும் என்று விரிவாகப் பேசிவருகிறார் தொல்காப்பியர் ! பார்ப்போம் கீழ்வரும் நூற்பாவில் என்ன வித்தை காட்டுகிறார் அவர் என்று ! : -

”தாம்நா மென்னு மகர விறுதியும்
யமெ  னிறுதியு மதனோ ரன்ன
ஆஎ ஆகும் யாமெ னிறுதி
ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும்
ஏனை யிரண்டு நெடுமுதல் குறுகும் ” (உருபு . 16)

‘தாம் நாம் என்னும்  மகர விறுதியும்,
யாம் என் இறுதியும்’ – ‘தாம்’ , ‘நாம்’ , ‘யாம்’ என்ற மகர ஈற்றுச் சொற்கள் ,

‘அதனோர் அன்ன ’ -  ‘நும்’ ஈற்றுச் சொல் , ‘அத்து’, ‘இன்’ ஆகிய சாரியைகள் பெறாதது போலவே , இவையும் பெறா !

‘ஆ , எ  ஆகும் , ‘யாம்’ என் இறுதி ஆ வயின் யகர மெய் கெடுதல் வேண்டும்’  -  ‘யாம்’ என்ற சொல்லின் முதல் ‘ஆ’ , ‘எ’ ஆகும் ! ‘ய்’ , கெடும் !

 ‘ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும்’ –  ‘தாம்’ , ‘நாம்’ எனும் சொற்களின் முதல் சொற்களான ‘தா’ , ‘நா’ ஆகியன ‘த’ , ‘ந’ எனக் குறுகும் !

தாம் + ஐ = தாமத்தை ×

தாம் + ஐ = தாமினை ×

தாம் + ஐ = தம்மை √

தாம் + ஒடு = தாமத்தொடு ×

தாம் + ஒடு = தாமொடு ×

தாம் + ஒடு = தம்மொடு √


நாம் + ஐ = நாமத்தை ×

நாம் + ஐ = நாமினை ×

நாம் + ஐ = நம்மை √


நாம் + ஒடு = நாமத்தொடு ×

நாம் + ஒடு = நாமொடு ×

நாம் + ஒடு = நம்மொடு √

எம் + ஐ = எம்மத்தை ×

எம் + ஐ = எம்மினை ×

எம் + ஐ = எம்மை √

எம் + ஒடு = எம்மத்தொடு ×

எம் + ஒடு = எம்மினொடு ×

எம் + ஒடு = எம்மொடு √

தொல்காப்பியர் , ஒரு நூற்பாக் கருத்தானது மாறுபடும் இடங்களை வெகு துல்லியமாக அறிந்து , அவற்றுக்கேற்ப வேறு சரியான விதிகளை மறக்காமல் தருவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளார் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Mar 13, 2014 8:22 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (225)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘எல்லாம்’ எனும் பெயர்ச்சொல்லை எடுத்துக்கொள்கிறார் தொல்காப்பியர் ! :-

“எல்லா மென்னு மிறுதி முன்னர்
வற்றென் சாரியை முற்றத் தோன்றும்
உம்மை நிலையு மிறுதி யான” (உருபு . 17)

‘எல்லாம் எனும் இறுதி முன்னர்’ – ‘எல்லாம்’ எனும் பெயர்ச்சொல்லின் ஈற்றெழுத்தாகிய ‘ம்’ முன்பாக வேற்றுமை உருபு புணர வரும்போது,

‘வற்றென் சாரியை முற்றத் தோன்றும்’ – ‘வற்று’ச் சாரியை முழுவதுமாகத் தோன்றும் !

‘உம்மை நிலையும் இறுதி யான’ – வற்றுச் சாரியை புணர்ந்த பின்னர் ‘உம்’ சாரியை இறுதியிலே வரும் !

எல்லாம் + ஐ = எல்லாவத்தை ×

எல்லாம் + ஐ = எல்லாமினை ×

எல்லாம் + ஐ = எல்லா + வற்று + ஐ + உம் = எல்லாவற்றையும் √  (வற்று – சாரியை ; உம் - சாரியை)

இங்கே இடையிலே சாரியை வந்ததோடு , ஈற்றிலும் ஒரு சாரியை வந்ததைக் கவனியுங்கள் !

 ‘எல்லாம்’ என்று சொல்லிலேயே , ‘இத்தனை’ என்பது தெளிவாகிவிட்ட நிலையில் ஈற்றிலே வந்த உம்மை , முற்றும்மை எனப்படாது , சாரியை எனப்பட்டுள்ளது !இதனைப் போன்றே -


எல்லாம் +ஒடு = எல்லாவற்றொடும் √ (வற்று , உம் - சாரியைகள்)

எல்லாம் +கு  = எல்லாவற்றுக்கும் √ (வற்று , உம் - சாரியைகள்)

எல்லாம் +இன்  = எல்லாவற்றினும் √ (வற்று , உம் - சாரியைகள்)

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 14, 2014 12:41 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (226)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘எல்லாம்’ என்னும் பெயர்ச்சொல்லின் புணர்ச்சிபற்றிப் பார்த்தோம் !

அந்த ‘எல்லாம்’ என்ற பெயர்ச்சொல் உயர்திணையைக் குறித்தால் என்ன ஆகும் ?

தொல்காப்பியர் விடை ! :-

“உயர்திணை யாயி னம்மிடை வருமே” (உருபு . 18)

அஃதாவது – ‘எல்லாம்’ என்ற சொல் உயர்திணைச் சொல்லானால் , வேற்றுமை உருபுகளோடு புணரும்போது ‘நம்’ எனும் சாரியை இடையே வரும் என்கிறார் !

எல்லாம் + ஐ = எல்லாமையும் ×
எல்லாம் + ஐ = எல்லாவத்தை ×
எல்லாம் + ஐ = எல்லாமினை ×
எல்லாம் + ஐ = எல்லாம் + நம் + ஐ + உம் = எல்லா நம்மையும் √( நம் – சாரியை ; உம் - சாரியை)

எல்லாம் + ஒடு = எல்லாவொடும் ×
எல்லாம் + ஒடு = எல்லாவத்தொடு ×
எல்லாம் + ஒடு = எல்லாமினொடு ×
எல்லாம் + ஒடு = எல்லாம் + நம் + ஒடு + உம் = எல்லா நம்மொடும் √( நம் – சாரியை ; உம் - சாரியை)

சாரியைகளில்  நம் கவனம் இருக்கும்போது , ‘பகுதிச் சொல்லிலும் கவனம் தேவை’ என்று தொல்காப்பியர் அறைவதை நோக்குவீர் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 15, 2014 1:29 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (227)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

‘ம்’ஈற்றுப் பெயர்ச்சொற்கள் , சாரியை பெற்று வேற்றுமை உருபுகளுடன் புணரும் வகைகளைக் கூறிவருகிறார் தொல்காப்பியர் !

தொடர்ந்து ஏதோ ஒரு பெரிய நூற்பாவுடன் வருகிறார் , வாருங்கள் பார்க்கலாம் ! :-

“எல்லாரு மன்னும் படர்க்கை யிறுதியும்
எல்லீரு மென்னு முன்னிலை யிறுதியும்
ஒற்று முகரமுங் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி
உம்மை நிலையு மிறுதி யான
தம்மிடை வரூஉம் படர்க்கை மேன
நும்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே !” (உருபு . 19)

‘எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும்
எல்லீரும்  என்னும்  முன்னிலை இறுதியும் ’ -  ‘எல்லாரும்’ என்ற படர்க்கைப் பெயர்ச்சொல்லின் ஈறாகிய ‘ம்’ ;  ‘எல்லீரும்’ என்ற முன்னிலைப் பெயர்ச்சொல்லின் ஈறாகிய ‘ம்’;

‘ஒற்றும் உகரமும் கெடுமென மொழிப
நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி’ -   ஒற்றாகிய ‘ம்’ கெடும் ; ‘ரு’விலுள்ள ‘உ’ கெட்டு,‘ர்’ கெடாது நிற்கும் !

‘தம்மிடை வரூஉம் படர்க்கை மேன’ -  அப்போது ‘தம்’ சாரியை இடையே தோன்றும்  , படர்க்கைப் பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை !

‘‘நும்மிடை வரூஉம் முன்னிலை  மொழிக்கே’ -  அப்போது ‘நும்’ சாரியை இடையே தோன்றும்  , முன்னிலைப் பெயர்ச்சொல்லைப் பொறுத்தவரை !

‘உம்மை நிலையும் இறுதி யான’ -  புணர்ச்சி இறுதியில் ‘உம்’ சாரியை வரும் !

எல்லாரும் + ஐ = எல்லாருமை ×
எல்லாரும் + ஐ = எல்லாருமினை ×
எல்லாரும் + ஐ = எல்லார் + தம் + ஐ  + உம் = எல்லார் தம்மையும் √ (தம் – சாரியை ; ‘உம்’சாரியை)

எல்லாரும் + ஒடு = எல்லாருமொடு ×
எல்லாரும் + ஒடு = எல்லாருமினொடு ×
எல்லாரும் + ஒடு = எல்லார் + தம் + ஒடு  + உம் = எல்லார் தம்மொடும் √ (தம் – சாரியை ; ‘உம்’சாரியை)

எல்லீரும் + ஐ = எல்லீருமை ×
எல்லீரும் + ஐ = எல்லீருமினை ×
எல்லீரும் + ஐ = எல்லீர் + நும் + ஐ  + உம் = எல்லீர் நும்மையும் √ (நும் – சாரியை ; ‘உம்’சாரியை)

எல்லீரும் + ஒடு = எல்லீருமொடு ×
எல்லீரும் + ஒடு = எல்லீருமினொடு ×
எல்லீரும் + ஒடு = எல்லீர் + நும் + ஒடு  + உம் = எல்லீர் நும்மொடும் √ (நும் – சாரியை ; ‘உம்’சாரியை)

இவ்விடத்தில் , இளம்பூரணர் ‘சில ரகர ஈற்றுச் சொற்களுக்கும் இவ்விதி பொருந்தும்  ’என்கிறார் ! : -

கரியார் + தம் + ஐ + உம் = கரியார் தம்மையும் √ (தம் , உம் - சாரியைகள்  )
கரியார் – படர்க்கைப் பெயர்ச்சொல்.

சான்றீர் + நும் + ஐ + உம் = சான்றீர் நும்மையும் √ (நும் , உம் - சாரியைகள்  )
சான்றீர் – முன்னிலைப் பெயர்ச்சொல் .

  நூற்பாவில் ‘மேன’ என்று வந்ததல்லவா?

 மேல் → மேன் (திரிபு)
மேன் → மேன (அகரச் சாரியை புணர்ந்தது) !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 16, 2014 11:40 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (228)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

ஒரு வழியாக மகர  ஈற்றுச் சொற்கள் முடிந்தன!

இப்போது னகர ஈற்றுச் சொற்கள் ! :-

“தான்யா  னென்னு மாயீ ரிறுதியும்
மேன்முப்  பெயரொடும்  வேறுபா டிலவே” (உருபு . 19)

‘தான்  யான்  என்னும்  ஆயீர் இறுதியும்’ – ‘தான்’ , ‘யான்’ என்பனவற்றின் ‘ன்’ இறுதியானது,

‘மேல் முப் பெயரொடும்’ – உருபியல் நூற்பா 16இல் ( ‘தாம் நாம் …’) கூறப்பட்ட ‘தாம்’ ‘நாம்’  ‘யாம்’  என்ற மூன்று பெயர்ச் சொற்களைப் போலவே,

‘வேறுபாடு இல்லை !’  - வேறுபாடு இல்லாது புணரும் !

 அஃதாவது – ‘தாம்’ என்பது ‘தம்’ எனக் குறுகியது போலவே , ‘தான்’ என்பதும் ‘தன்’ ஆகும் ! ‘யாம்’ என்பது ‘எம்’ ஆனது போலவே , ‘யான்’ என்பது ‘என்’ ஆகும் !

தான் + ஐ = தானை ×
தான் + ஐ = தானினை ×
தான் + ஐ = தன்னை √

தான் + ஒடு = தானொடு ×
தான் + ஒடு = தானினொடு ×
தான் + ஒடு = தன்னொடு ×

யான் + ஐ = யானை ×
யான் + ஐ = யானினை ×
யான் + ஐ = என்னை √

யான் + ஒடு = யானொடு ×
யான் + ஒடு = யானினொடு ×
யான் + ஒடு = என்னொடு ×

மேல் நூற்பாவில் ‘ஈரிறுதியும்’ என வந்ததல்லவா?

‘ இரு ’ என்ற சொல் முன் , ‘இறுதி’ எனும் உயிர் எழுத்தை முதலாகக் கொண்ட சொல் வருவதால் , ‘இரு’ , ‘ஈர்’ ஆனது ! ( இங்கே  ஒரு , ஓர்  மாற்றத்தை ஒப்பிடுக ! )


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Mar 23, 2014 7:07 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (229)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் நின்று விளையாடுகிறோம் !

இப்போது –

“அழனே புழனே யாயிரு மொழிக்கும்
அத்து மின்னு முறழத் தோன்றும்
ஒத்த தென்ப வுணரு மோரே” (உருபு . 21)

 ‘அழனே புழனே யாயிரு மொழிக்கும்’ -  ‘அழன் , ‘புழன்’ ஆகிய இரு சொற்களுக்கும் ,

 ‘அத்தும் இன்னும் உறழத் தோன்றும்’ -  அத்துச் சாரியையும் , இன் சாரியையும் இரண்டுமே வரும் !

‘ஒத்த தென்ப உணரு மோரே’ – இரண்டு சாரியைகளும் அவ்வாறு வருதலையுடைய என்று இலக்கணம் கற்றோர் உணர்வர் !

 அழன் + ஐ = அழனை ×  

அழன் + ஐ = அழன் + அத்து + ஐ = அழத்தை  √

அழன் + ஒடு = அழனொடு ×  

அழன் + ஒடு = அழன் + அத்து + ஒடு = அழத்தொடு √  

அழன் + ஐ = அழனை ×  

அழன் + ஐ = அழன் + இன் + ஐ = அழனினை  √

அழன் + ஒடு = அழனொடு ×  

அழன் + ஒடு = அழன் + இன் + ஒடு = அழனினொடு √  
(அழன் - பிணம்)

புழன் + ஐ = புழனை ×  

புழன் + ஐ = புழன் + அத்து + ஐ = புழத்தை  √

புழன் + ஒடு = புழனொடு ×  

புழன் + ஒடு = புழன் + அத்து + ஒடு = புழத்தொடு √  

புழன் + ஐ = புழனை ×  

புழன் + ஐ = புழன் + இன் + ஐ = புழனினை  √

புழன் + ஒடு = புழனொடு ×  

புழன் + ஒடு = புழன் + இன் + ஒடு = புழனினொடு √  

ஈண்டு இளம்பூரணர் கூடுதலாகத் தரும் இலக்கணம்
– “தோன்றல் என்பதனான் , ‘எவன்’ என்றும்  ‘என்’ என்றும் நிறுத்தி ,
‘வற்று’க்  கொடுத்து வேண்டும் செய்கை செய்து , ‘எவற்றை’ , ‘எவற்றொடு எனவும் ‘எற்றை’ , ‘எற்றொடு’ எனவும் முடிக்க !” .

இளம்பூரணரின் இக் கருத்துப்படி –

எவன் + ஐ =  எவனை ×

எவன் + ஐ =  எவன் + வற்று + ஐ = எவற்றை √


எவன் + ஒடு =  எவனொடு ×

எவன் + ஒடு =  எவன் + வற்று + ஒடு = எவற்றொடு √

 இங்கே ‘எவன்’ என்ற பெயர்ச் சொல் ,  ‘எவை’ என்ற வினாப்பெயரில் நிற்கக் காணலாம் !


என் + ஐ =  எனை ×

என் + ஐ =  என் + வற்று + ஐ = எற்றை √


என் + ஒடு =  எனொடு ×

என் + ஒடு =  என் + வற்று + ஒடு = எற்றொடு √

இங்கே ‘என்’ என்ற பெயர்ச் சொல் ,  ‘எது’ என்ற வினாப்பெயரில் நிற்கக் காணலாம் ! ‘என் னுடையரேனு மிலர்’ என்பதை நோக்குக !

மேலும் ஒரு கூடுதல் இலக்கணத்தை இளம்பூரணர் தருகிறார் பாருங்கள் ! :-

“ஒத்தது என்பதனான் ‘எகின்’ என நிறுத்தி , ‘அத்து’ம்  ‘இன்’னும் கொடுத்துச் செய்கை செய்து ‘எகினத்தை’ ‘எகினத்தொடு ’ எனவும் ‘எகினினை’ ‘எகினினொடு’ எனவும் முடிக்க !” .

எகின் + ஐ = எகினை ×

எகின் + ஐ = எகின் + அத்து + ஐ = எகினத்தை √

எகின் + ஒடு = எகினொடு ×

எகின் + ஒடு = எகின் + அத்து + ஒடு = எகினத்தொடு √


எகின் + ஐ = எகினை ×

எகின் + ஐ = எகின் + இன் + ஐ = எகினினை √

எகின் + ஒடு = எகினொடு ×

எகின் + ஒடு = எகின் + இன் + ஒடு = எகினினொடு √

  இளம்பூரணர் , நூற்பா ஓசை பற்றிய நுணுக்கம் ஒன்றையும் தருகிறார் ! :-

 “  ‘அத்து’ முற்கூறிய வதனான் , ‘அத்து’ப் பெற்றவழி இனிது இசைக்கு மெனக் கொள்க !  ”

என்ன பொருள் ?

மேல் நூற்பாவில் அத்து , இன் ஆகிய இரு சாரியைகளைக் கூறினார் அல்லவா தொல்காப்பியர் ? அங்கே ஏன் ‘அத்து’ச் சாரியையை முன்னே கூறி ‘இன்’ சாரியையைப் பின்னே வைத்தார் ?

 இதற்கு விடைதான் மேலே இளம்பூரணர் கூறியது!

அஃதாவது , ஓசை இனிமைக்காக ‘அத்து’ச்  சாரியையை முதலில் எழுதி ‘இன்’ சாரியையைப் பின்னே எழுதினார் தொல்காப்பியர் என்று ஓசை ஆராய்ச்சியை நிறைவு செய்கிறார் இளம்பூரணர் !

இதனால் , நூற்பா யாப்பாக இருந்தாலும் அதற்கும் ஓசைத் திட்பம் இருக்கவேண்டும் என்ற கருத்து ஏற்படுகிறது !

தமிழ் யாப்பியல் (Prosody) நோக்கில் இது குறிப்பிடத் தக்கது !  


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 06, 2014 8:22 am

                   தொடத் தொடத் தொல்காப்பியம் (230)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33
 
                                நாம் பார்த்துவரும் உருபியலில் அடுத்த நூற்பா ! :-
 
 “அன்னென்  சாரியை யேழ  னிறுதி
முன்னர்த்  தோன்று  மியற்கைத் தென்ப”  (உருபு . 22)
 
 
 ‘அன் என்  சாரியை’ -  ‘அன்எனப்படும் சாரியை,
 
 ‘ஏழன்  இறுதி’ -   ‘ஏழ்’ எனும் சொல்லின் இறுதியில்,
 
  ‘முன்னர்த் தோன்றும்  இயற்கைத்து என்ப’ -  முன்பாகத் தோன்றும் இயல்பை உடையது என்பார்கள் !
 
 ஏழ் + ஐ = ஏழ் +இன் + ஐ = ஏழினை ×
ஏழ் + ஐ = ஏழ் +அன் + ஐ = ஏழனை √  (அன் - சாரியை)
 
ஏழ் + ஒடு = ஏழொடு ×
ஏழ் + ஒடு = ஏழ் +இன் + ஒடு = ஏழினொடு ×
ஏழ் + ஒடு = ஏழ் +அன் + ஒடு = ஏழனொடு √(அன் - சாரியை)
 
இளம்பூரணர் தரும் வேறு சில எடுத்துக்காட்டுகள் !:-
 
    பூழ் + ஐ = பூழ் + இன் + ஐ = பூழினை ×
   பூழ் + ஐ = பூழ் + அன் + ஐ = பூழனை √  (அன் - சாரியை)
 
 
    பூழ் + ஒடு = பூழொடு ×
   பூழ் + ஒடு = பூழ் + இன் + ஒடு = பூழினொடு × 
  பூழ் + ஒடு = பூழ் + அன் + ஒடு = பூழனொடு √  (அன் - சாரியை)
 
 
   யாழ் + ஐ = யாழ் + இன் + ஐ = யாழினை ×
  யாழ் + ஐ = யாழ் + அன் + ஐ = யாழனை √  (அன் - சாரியை)
 
  பூழ் + ஒடு = பூழ் + இன் + ஒடு = பூழினொடு × 
  பூழ் + ஒடு = பூழ் + அன் + ஒடு = பூழனொடு √  (அன் - சாரியை)
 
  சாரியைகளைச் சரியாகப் பயன்படுத்துவது அவசியமானது !
 
 இன் , அன் – சாரியைகள் குழப்புகின்றனவா?
 
   கீழ் வரும்  எடுத்துக்காட்டுகளைப்  பாருங்கள் ! :-
 
 காட்டனை அழித்தான்  (அன்  சாரியை வந்துள்ளது) ×
காட்டினை அழித்தான்  (இன்  சாரியை வந்துள்ளது)
 
வீட்டனைக்  கட்டினான்  (அன்  சாரியை வந்துள்ளது) ×
விட்டினைக்  கட்டினான்  (இன்  சாரியை வந்துள்ளது)
 
கண்டினன்  (இன் சாரியை வந்துள்ளது) ×
கண்டனன்  (அன் சாரியை வந்துள்ளது)
 
எட்டின்  உருபு (இன் சாரியை வந்துள்ளது) ×
எட்டன்  உருபு (அன் சாரியை வந்துள்ளது)
 
 
      சாரியை நுணுக்கங்கள், பழம் நூலைச் செம்பதிப்பாக (Critical edition) வெளியிடும்போது மிகவும் தேவைப்படுவதாகும் !
 
         சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், தமிழ்ச் செவ்வியல் (Classical) நூற்களைச் செம்பதிப்பாகக் கொணரும் ஆய்வு நடைபெற்றுவருவது அறியத் தக்கது !
 
                                                ***

 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Apr 07, 2014 1:14 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (231)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

  பெயர்ச் சொற்களோடு வேற்றுமை உருபுகள் சேரும் தருணத்தில் சாரியைகள் வருவதைப் பார்த்துவருகிறோம் !


குற்றியலுகரம் பெற்ற பெயர்ச் சொற்கள் நிலைமொழியாக நிற்கும்போது ? :-

 “குற்றிய லுகரத் திறுதி முன்னர்
 முற்றத் தோன்று  மின்னென் சாரியை”  (உருபு . 23)

‘குற்றிய லுகரத் திறுதி முன்னர்’ – குற்றியலுகரச் சொற்களின் ஈற்றெழுத்தின் முன்பாக ,

‘முற்றத் தோன்று  மின்னென் சாரியை’ -  இன் சாரியை முழுவதுமாகத் தோன்றும் !

வரகு + ஐ = வரகு + அன் + ஐ = வரகனை ×
வரகு + ஐ = வரகு + இன் + ஐ = வரகினை √

வரகு + ஒடு = வரகு + அன் + ஒடு = வரகனொடு ×
வரகு + ஒடு = வரகு + இன் + ஒடு = வரகினொடு √

(வரகு – உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே  பெற்ற பெயர்ச் சொல்)


நாகு + ஐ = நாகு + அன் + ஐ = நாகனை ×
நாகு + ஐ = நாகு + இன் + ஐ = நாகினை √

நாகு + ஒடு = நாகு + அன் + ஒடு = நாகனொடு ×
நாகு + ஒடு = நாகு + இன் + ஒடு = நாகினொடு √ (இன் - சாரியை)
(நாகு – நெடில்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே  பெற்ற பெயர்ச் சொல் )


மேல் எடுத்துக்காட்டுகள் தொல்காப்பியர் காலத்துப் புணர்ச்சிகளுக்கு இயைந்தவை !

அஃதாவது , தொல்காப்பியர் படித்ததும் அவர் காலத்தில் இருந்ததும் மேலே பார்த்த புணர்ச்சிதான் !

ஆனால் , இளம்பூரணர் காலத்தில் இலக்கண நெகிழ்ச்சி உண்டாயிற்று !

ஆகவே என்ன சொன்னார் இளம்பூரணர் ? :-

“முற்ற என்றதனால்  பிற சாரியை பெறுவனவும் கொள்க.  ‘வழக்கத்தாற் பாட்டாராய்ந்தான்’,  ‘கரியதனை’ ,‘ கரியதனொடு’ என வரும் ! ”

இதன் விளக்கம் –

வழக்கு + அத்து + ஆல் + பாட்டு + ஆராய்ந்தான் = வழக்கத்தாற்              
பாட்டாராய்ந்தான் √

(வழக்கு – வன்றொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற பெயர்ச் சொல்; அத்து - சாரியை)

கரியது + அன் + ஐ = கரியதனை √
(கரியது – உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்தை ஈற்றிலே பெற்ற பெயர்ச் சொல்; அன் - சாரியை)

கரியது + அன் + ஒடு = கரியதனொடு √ (அன் – சாரியை ; ஒடு – மூன்றாம்    
வேற்றுமை உருபு)


மேலே கண்ட ‘அன்’ சாரியைதான் இளம்பூரணர் சொன்ன ‘பிற சாரியை’ !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Apr 08, 2014 10:54 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (232)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

 முன் ஆய்வில் , நெடில்தொடர்க் குற்றியலுகரப் பெயர்ச் சொல்லோடு வேற்றுமை உருபு புண்ரும் விதியைப் பார்த்தோம் !  (நாகு + இன் + ஐ = நாகினை).

ஆனால் எல்லா இடத்தும் இவ்விதி பொருந்தாது என்று உடனே கூறவருகிறார் தொல்காப்பியர் ! :-

“ நெட்டெழுத்  திம்ப  ரொற்றுமிகத்  தோன்றும்
 அப்பான்  மொழிக ளல்வழி  யான ”                (உருபு . 24)

‘நெட்டெழுத்து   இம்பர்  ஒற்றுமிகத்  தோன்றும்’ – நெடில் தொடர்க் குற்றியலுகரச்    
                                                                                         சொற்கள் வேற்றுமை உருபோடு புணரும்போது ,
                                                                                         அந்த நெடிலை அடுத்துவரும் எழுத்தின் மெய் வடிவம்
                                                                                          இரட்டிக்கும் !

அப்பால்  மொழிகள் ’ – க, ச, த, ப ஆகிய எழுத்துகள்,

‘அல்வழி ஆன’ – இலாதபோது !

  இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்திக் கீழ்வருமாறு விளக்கலாம் ! :-

யாடு + ஐ = யாடை ×
யாடு + ஐ = யாட்டை √ (நெட்டெழுத்தாகிய ‘யா’வை அடுத்துள்ள ‘டு’வின்
                                                          மெய்யான ‘ட்’ ஆனது, இரட்டித்துள்ளதைக் காண்க!)

 
யாடு + ஒடு = யாடொடு ×
யாடு + ஒடு = யாட்டொடு √ (நெட்டெழுத்தாகிய ‘யா’வை அடுத்துள்ள
                                                              ‘டு’வின் மெய்யான ‘ட்’ ஆனது,
                                                               இரட்டித்துள்ளதைக் காண்க!)

காசு + ஐ = காச்சை × (நெட்டெழுத்தாகிய ‘கா’வை அடுத்துள்ள
                                                      ‘சு’வின் மெய்யான ‘ச்’ ஆனது,
                                                       இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

காது + ஐ = காத்தை × (நெட்டெழுத்தாகிய ‘கா’வை அடுத்துள்ள
                                              ‘து’வின் மெய்யான ‘த்’ ஆனது,
                                                இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

பாகு + ஐ = பாக்கை × (நெட்டெழுத்தாகிய ‘பா’வை அடுத்துள்ள
                                               ‘கு’வின் மெய்யான ‘க்’ ஆனது,
                                                  இரட்டிக்கக்  கூடாது என்பதைக்  காண்க!)

 ‘அப்படியானால் உயிர்த்தொடர்க் குற்றியலுகரச் சொற்களிலும் இரட்டித்தல் உண்டா’ ? – உங்கள் ஐயம் !

விடைகூறுகிறார் இளம்பூரணர் ! :-

“ தோன்றும் என்றதனான் , உயிர்த்தொடர் மொழியும் ‘இன்’ பெறாது , இனவொற்று மிகுதல் கொள்க ! ‘முயிற்றை , ‘முயிற்றொடு’ என வரும் !”

அஃதாவது –

முயிறு + ஐ = முயிறை ×
முயிறு + ஐ = முயிறு + இன் + ஐ =  முயிறினை ×
முயிறு + ஐ = முயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                காண்க!  )  

முயிறு + ஒடு = முயிறொடு ×
முயிறு + ஒடு = முயிறு + இன் + ஐ =  முயிறினொடு ×
முயிறு + ஒடு = முயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                        காண்க!  )

கயிறு + ஐ = கயிறை ×
கயிறு + ஐ = கயிறு + இன் + ஐ =  கயிறினை ×
கயிறு + ஐ = கயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                              காண்க!  )

கயிறு + ஒடு = கயிறொடு ×
கயிறு + ஒடு = கயிறு + இன் + ஒடு =  கயிறினொடு ×
கயிறு + ஒடு = கயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                    காண்க!  )

வயிறு + ஐ = வயிறை ×
வயிறு + ஐ = வயிறு + இன் + ஐ =  வயிறினை ×
வயிறு + ஐ = வயிற்றை √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                           காண்க!  )

வயிறு + ஒடு = வயிறொடு ×
வயிறு + ஒடு = வயிறு + இன் + ஒடு =  வயிறினொடு ×
வயிறு + ஒடு = வயிற்றொடு √  (பகுதிச் சொல்லிலுள்ள ‘று’வின் ‘ற்’ , இரட்டியதைக்
                                                                       காண்க!  )

இதனால்தான் ‘இளம்பூரணம்’ என்று நாம் அவரது உரையைப் பெருமையாகக் கூறுகிறோம் !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Apr 11, 2014 11:46 am

தொடத் தொடத் தொல்காப்பியம் (233)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி),பி.எச்டி.
சென்னை-33

உருபியலில் நாம் பார்த்த நூற்பாவுக்கு ( ‘நெட்டெழுத்…’) விளக்கமாக அடுத்து ஒரு நூற்பாப் போடுகிறார் தொல்காப்பியர் ! : -

“அவைதம்  
இயற்கைய வாகும் செயற்கைய வென்ப” (உருபு . 25)


அஃதாவது , நெட்டெழுத்திற்கு அடுத்துக் குற்றியலுகரம் வரக்கூடிய சொற்கள் , வேற்றுமை உருபுகளோடு புணரும் வேளையில்,  ‘இன்’சாரியை பெறா என்று இதற்கு முன்னே கூறினார் தொல்காப்பியர் !

இன் சாரியை
பெறாவிட்டால் பின் எப்படிப் புணரும் என்று ஒரு வினா எழுகிறது !

அதற்கு விடைதான் நாம் இப்போது பார்த்த நூற்பா!

  ‘இயற்கை  ஆகும்  செயற்கைய  என்ப’  -  சாரியை எதுவுமின்றி இயற்கையாகச் செயற்படும் !
செயற்கைய  - செயற்படும் தன்மையன .

 முன் ஆய்வில்  பார்த்த அதே எடுத்துக்காட்டுகளே இங்கும் வரும் ! -

யாடு + ஐ = யாட்டை √
யாடு + ஒடு = யாட்டொடு √

‘ஆனால் எல்லாச் சொற்களுக்குமே இதனை விதியாகக் கொள்ளமுடியாது ! சில இடங்களில் மாறியும் வரும்’  என்கிறார் இளம்பூரணர் ! –

 யாடு + ஐ = யாடு +இன் + ஐ = யாட்டினை √
யாடு + ஒடு = யாடு +இன் + ஒடு = யாட்டினொடு √

முயிறு + ஐ = முயிறு +இன் + ஐ = முயிற்றினை √
முயிறு + ஒடு = முயிறு +இன் + ஒடு = முயிற்றினொடு √

விதிகளைத் தொல்காப்பியத்தில் படிக்கிறோம் ; விதி விலக்குகளை இளம்பூரணர் உரையில் படிக்கிறோம் !


***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 29 of 84 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 56 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக