புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 35 of 84 •
Page 35 of 84 • 1 ... 19 ... 34, 35, 36 ... 59 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
எம்.எம்.செந்தில், பாலாஜி ஆகியோர்க்கு நன்றி !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (278)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘பனி’ , ‘வளி’ என்ற இயற்கைகளைப்பற்றிக் கவலைப்பட்டார் தொல்காப்பியர் !
இப்போது அவற்றின் தொடர்ச்சியாக மரங்களைப் பற்றிக் கவலைப்படுகிறார் ! :-
“உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே !” (உயிர்மயங். 41)
‘உதி மரக் கிளவி’ - உதிய மரத்தைக் குறிக்கும் ‘உதி’ எனும் சொல் , நிலைமொழிப் பெயராக நின்றால்,
‘மெல்லெழுத்து மிகுமே’ – அப்போது , வேற்றுமைப் புணர்ச்சியில் , சந்தியாக மெல்லெழுத்து இடையே மிகும் !
உதி + கோடு = உதிக் கோடு ×
உதி + கோடு = உதிங் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + செதிள் = உதிச் செதிள் ×
உதி + செதிள் = உதிஞ் செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + தோல் = உதித் தோல் ×
உதி + தோல் = உதிந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + பூ = உதிப் பூ ×
உதி + பூ = உதிம் பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
இங்கே , நச்சினார்க்கினியர் ஓர் உரைநுட்பம் காட்டுகிறார் ! -
“அம்முச் சாரியை விதிக்கின்ற புளி மரத்தினை இதன்பின் வைத்தமையான் , உதியங்கோடு என இதற்கும் அம்முப் பெறுதல் கொள்க !”
இதன்படி –
உதி + கோடு = உதிக் கோடு ×
உதி + கோடு = உதிங் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + கோடு = உதியங் கோடு √ (அம் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + செதிள் = உதிச் செதிள் ×
உதி + செதிள் = உதிஞ் செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + செதிள் = உதியஞ் செதிள் √ (அம் - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + தோல் = உதித் தோல் ×
உதி + தோல் = உதிந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + தோல் = உதியந் தோல் √(அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + பூ = உதிப் பூ ×
உதி + பூ = உதிம் பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
உதி + பூ = உதியம் பூ √(அம் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
அது சரி !
‘உதிக் கோடு’ என ஏன் வராது ?
‘உதிக்கோடு’ – என வந்தால் , ‘உதிக்கும் கோடு’ (rising branch) என்று தவறாகப் பொருள்பட்டுவிடும் !
உதி மரம் – என்பது வேறொன்றுமில்லை ! உதிய மரம்தான் !
தொல்காப்பியர் பேசிய உதி மரத்தைப் பார்க்கவேண்டுமா?
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]
படங்கள் – முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இதுதான் உதி மரம் !
இதன் வேறு பெயர்கள் – ஒதி மரம் ; ஒதிய மரம் .
மரம் காணப்பட்ட இடம் – சென்னை - 113
இதன் தாவரவியல் பெயர் - Lannea coromandelica
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (279)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உதிய மரத்தில் நின்றோம் !
அது தங்கும் சக்தி அற்றது !
தாங்கும்சக்தி கொண்ட புளிய மரத்திற்குத் தாவலாம் வாருங்கள் ! :-
“புளிமரக் கிளவிக் கம்மே சாரியை” (உயிர்மயங். 42)
இதன்படி –
புளி + கோடு = புளிக் கோடு ×
புளி + கோடு = புளிங் கோடு ×
புளி + கோடு = புளி + அம் + கோடு (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + கோடு (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியங் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + செதிள் = புளிச் செதிள் ×
புளி + செதிள் = புளிஞ் செதிள் ×
புளி + செதிள் = புளி + அம் + செதிள் (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + செதிள் (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியஞ் செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + தோல் = புளித் தோல் ×
புளி + தோல் = புளிந் தோல் ×
புளி + தோல் = புளி + அம் + தோல் (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + தோல் (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + பூ = புளிப் பூ ×
புளி + பூ = புளிம் பூ ×
புளி + பூ = புளி + அம் + பூ (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + பூ (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியம் பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அது இருக்கட்டும் !
ஏன் ‘புளிக் கோடு’ , ‘புளிங் கோடு’ என்றெல்லாம் வராது ?
‘புளிக் கோடு’ , ‘புளிங் கோடு’ எனில் , அந்தக் கோடே – கிளையே புளிக்கும் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்காகவே ‘அம்’ நுழைகிறது !
தமிழ்ப் புணர்ச்சி இருக்கிறதே , அப்பப்பா படு நுட்பம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உதிய மரத்தில் நின்றோம் !
அது தங்கும் சக்தி அற்றது !
தாங்கும்சக்தி கொண்ட புளிய மரத்திற்குத் தாவலாம் வாருங்கள் ! :-
“புளிமரக் கிளவிக் கம்மே சாரியை” (உயிர்மயங். 42)
இதன்படி –
புளி + கோடு = புளிக் கோடு ×
புளி + கோடு = புளிங் கோடு ×
புளி + கோடு = புளி + அம் + கோடு (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + கோடு (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியங் கோடு √ (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + செதிள் = புளிச் செதிள் ×
புளி + செதிள் = புளிஞ் செதிள் ×
புளி + செதிள் = புளி + அம் + செதிள் (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + செதிள் (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியஞ் செதிள் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + தோல் = புளித் தோல் ×
புளி + தோல் = புளிந் தோல் ×
புளி + தோல் = புளி + அம் + தோல் (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + தோல் (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
புளி + பூ = புளிப் பூ ×
புளி + பூ = புளிம் பூ ×
புளி + பூ = புளி + அம் + பூ (அம் – சாரியை சேர்ந்தது) = புளி +ய் + அம் + பூ (ய் – உடம்படு மெய் சேர்ந்தது) = புளியம் பூ √ (வேற்றுமைப் புணர்ச்சி)
அது இருக்கட்டும் !
ஏன் ‘புளிக் கோடு’ , ‘புளிங் கோடு’ என்றெல்லாம் வராது ?
‘புளிக் கோடு’ , ‘புளிங் கோடு’ எனில் , அந்தக் கோடே – கிளையே புளிக்கும் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்காகவே ‘அம்’ நுழைகிறது !
தமிழ்ப் புணர்ச்சி இருக்கிறதே , அப்பப்பா படு நுட்பம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (280)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
’புளி’ – என்பது மரத்தைக் குறித்தால் , ‘புளி + அம் + கோடு = புளியங் கோடு’ என ‘அம்’ சாரியை பெற்றுப் புணர்ச்சி நடக்கும் என்று பார்த்தோம் ! சரி!
‘புளி’ என்பது குழம்புக்குக் கரைக்கும் புளியைக் குறித்தால் ?
நியாயமான வினா!
இதற்குத் தொல்காப்பியரே விடை கூறுகிறார் !:-
“ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே” (உயிர்மயங். 43)
“வல்லெழுத்து மிகினு மான மில்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான” (உயிர்மயங். 44)
அஃதாவது-
1. புளி + கூழ் = புளியங் கூழ் ×
புளி + கூழ் = புளிங் கூழ் √ (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங். 43)
புளி + கூழ் = புளிக் கூழ் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
2. புளி + சோறு = புளியஞ் சோறு ×
புளி + சோறு = புளிஞ் சோறு √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 43)
புளி + சோறு = புளிச் சோறு √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
3. புளி + தயிர் = புளியந் தயிர் ×
புளி + தயிர் = புளிந் தயிர் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 43)
புளி + தயிர் = புளித் தயிர் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
4. புளி + பாளிதம் = புளியம் பாளிதம் ×
புளி + பாளிதம் = புளிம் பாளிதம் √ (வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 43)
புளி + பாளிதம் = புளிப் பாளிதம் √(வேற்றுமைப் புணர்ச்சி) (உயிர்மயங். 44)
(பாளிதம் – இங்கே பாற்சோறு; புளிப் பாளிதம் – புளிப்புச் சுவையை உடைய பாற்சோறு)
இங்கே இளம்பூரணர் சில அரிய இலக்கணக் குறிப்புகளை நமக்கு நல்குகிறார் !
அவற்றை விளக்கி வருமாறு தரலாம்:-
1 . கூதாளி + கோடு = கூதாளங் கோடு √ (அம்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(உயிர்மயங்.44இளம்.உரை)
(கூதாளங் கோடு – கூதாளி மரத்தின் கிளை)
2 . கணவிரி + கோடு = கணவிரங் கோடு √ (அம்- சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(உயிர்மயங்.44இளம்.உரை)
(கணவிரங் கோடு – கணவிரி மரத்தின் கிளை)
3 . துணி + கொண்டான் = துணியத்துக் கொண்டான் √ (அத்து - சாரியை)(வேற்றுமைப்
புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
(துணியத்துக் கொண்டான் – துணியில் ஒரு பொருளைப் பெற்றான்)
4 . பருத்தி + சென்றான் = பருத்திக்குச் சென்றான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப்
புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
(பருத்திக்குச் சென்றான் – பருத்தி பறிக்கச் சென்றான்)
5 . கப்பி + தந்தை = கப்பிந்தை √ (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
(கப்பிந்தை – கப்பி என்பவரின் தந்தை)
6 . கட்டி + அகல் = கட்டகல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
(கட்டகல் – மாவைக் குழியாகக் கட்டி , மாவிளக்கு ஏற்றக்கூடிய அகல்)
7 . குளி + குறுமை = குளிக் குறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(உயிர்மயங்.44இளம்.உரை)
(குளி – முத்து என்பது பொருளாயின் , குளிக் குறுமை – முத்தின் சிறிய அளவு)
8 . இனி + இனிக்கொண்டான் = இன்னினிக் கொண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(உயிர்மயங்.44இளம்.உரை)
(இனி – இப்போது; இன்னினிக் கொண்டான் – இப்போதே இப்போதே கொண்டான்)
9 . அணி + அணிக்கொண்டான் = அண்ணணிக் கொண்டான் √ (வேற்றுமைப் புணர்ச்சி)(உயிர்மயங்.44இளம்.உரை)
(அணி – அருகே; அண்ணணிக் கொண்டான் – அருகேயே கொண்டான்)
கப்பி – என்றெல்லாம் மக்கட் பெயர்கள் பழந்தமிழகத்தில் இருந்துள்ளமைக்கு நமது மேலை ஆய்வே சான்று !
‘நப்பின்னை’ – இது ‘நப்பி’ என்பவரின் பின் பிறந்தவரைக் குறிப்பதாகலாம் !
‘நப்பி +பின்னை = நப்பின்னை’ !
தொல்காப்பியமும் அதன் உரைகளும் வெறும் இலக்கண நூற்கள் மட்டுமல்ல ; பெரிய வரலாற்றுக் களஞ்சியமும் கூட !
இளம்பூரணர் பேசிய கணவிரி , கூதாளி ஆகியவற்றைக் காணலாம் வருகிறீர்களா?
(1)
[You must be registered and logged in to see this image.]Coutesy- tropicalfruit.com
இதுதான் கணவிரி ! செவ்வலரி என்பதும் இதுவே !
இந்நாளில் செவ்வரளி எனப்படும் !
இதன் தாவரவியல் பெயர் - Nerium oleander
(2)
[You must be registered and logged in to see this image.]Courtesy - keys.lucidcentral.org
[You must be registered and logged in to see this image.]Courtesy - biodiversitysitia.gr
இவைதாம் கூதாளி !
இந்நாளில் இது ‘பூமிச் சக்கரப் பூண்டு ’ எனப்படுகிறது !
இதன் தாவரவியல் பெயர் - Convolvulus arvensis
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (281)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்கப்பியத்து எழுத்ததிகாரத்தில் , உயிர்மயங்கியலில் , ‘இ’ ஈற்றுச் சொற்கள் எவாறு பிற சொற்களுடன் புணரும் என்று பார்த்துவருகிறோம் !
இப்போது நாளைக் குறிக்கும் ‘இ’ ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் ! :-
“நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்
கானிடை வருத லைய மின்றே ” (உயிர்மயங். 45)
‘நாள் முன் தோன்றும் ’ – நாளைக் குறிக்கும் சொல்லின் முன்பாக வரும் ,
‘தொழில் நிலைக் கிளவிக்கு’ – வினைச் சொல்லிற்கு , வேற்றுமைப் புணர்ச்சியில் ,
‘ஆன் இடை வருதல் ’ – ‘ஆன்’ சாரியை இடையே வருவது,
‘ஐயம் இன்றே’ - ஐயமற்றது !
எடுத்துக்காட்டிற்குப் ‘பரணி’ என்ற ‘இ’ ஈற்றுச் சொல்லை எடுத்துக்கொள்கிறார் இளம்பூரணர் ! –
1. பரணி + கொண்டான்= பரணி + ஆன் + கொண்டான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் கொண்டான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் கொண்டான் – பரணி நாளில் பெற்றான்)
2. பரணி + சென்றான்= பரணி + ஆன் + சென்றான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் சென்றான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் சென்றான் – பரணி நாளில் போனான்)
3. பரணி + தந்தான்= பரணி + ஆன் + தந்தான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் றந்தான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் றந்தான் – பரணி நாளில் தந்தான்)
4. பரணி + போயினான்= பரணி + ஆன் + போயினான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் போயினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் போயினான் – பரணி நாளில் போனான்)
‘இ’ ஈற்று நாள் பெயரில், ‘பரணி’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் இளம்பூரணர் எடுத்துக்காட்டுக் கூற , நச்சினார்க்கினியர் ’சோதி’ எனும் இன்னொரு சொல்லையும் சேர்க்கிறார் !
அதனைக் கீழ்வருமாறு விளக்கலாம் –
5. சோதி + கொண்டான்= சோதி + ஆன் + கொண்டான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் கொண்டான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் கொண்டான் – சோதி நாளில் பெற்றான்; சோதி - சுவாதி)
6. சோதி + சென்றான்= சோதி + ஆன் + சென்றான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் சென்றான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் சென்றான் – சோதி நாளில் போனான்)
7. சோதி + தந்தான்= சோதி + ஆன் + தந்தான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் றந்தான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் றந்தான் – சோதி நாளில் தந்தான்)
8. சோதி + போயினான்= சோதி + ஆன் + போயினான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் போயினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் போயினான் – சோதி நாளில் போனான்)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்கப்பியத்து எழுத்ததிகாரத்தில் , உயிர்மயங்கியலில் , ‘இ’ ஈற்றுச் சொற்கள் எவாறு பிற சொற்களுடன் புணரும் என்று பார்த்துவருகிறோம் !
இப்போது நாளைக் குறிக்கும் ‘இ’ ஈற்றுச் சொற்களை எடுத்துக்கொள்கிறார் ! :-
“நாண்முற் றோன்றுந் தொழினிலைக் கிளவிக்
கானிடை வருத லைய மின்றே ” (உயிர்மயங். 45)
‘நாள் முன் தோன்றும் ’ – நாளைக் குறிக்கும் சொல்லின் முன்பாக வரும் ,
‘தொழில் நிலைக் கிளவிக்கு’ – வினைச் சொல்லிற்கு , வேற்றுமைப் புணர்ச்சியில் ,
‘ஆன் இடை வருதல் ’ – ‘ஆன்’ சாரியை இடையே வருவது,
‘ஐயம் இன்றே’ - ஐயமற்றது !
எடுத்துக்காட்டிற்குப் ‘பரணி’ என்ற ‘இ’ ஈற்றுச் சொல்லை எடுத்துக்கொள்கிறார் இளம்பூரணர் ! –
1. பரணி + கொண்டான்= பரணி + ஆன் + கொண்டான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் கொண்டான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் கொண்டான் – பரணி நாளில் பெற்றான்)
2. பரணி + சென்றான்= பரணி + ஆன் + சென்றான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் சென்றான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் சென்றான் – பரணி நாளில் போனான்)
3. பரணி + தந்தான்= பரணி + ஆன் + தந்தான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் றந்தான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் றந்தான் – பரணி நாளில் தந்தான்)
4. பரணி + போயினான்= பரணி + ஆன் + போயினான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = பரணியாற் போயினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பரணியாற் போயினான் – பரணி நாளில் போனான்)
‘இ’ ஈற்று நாள் பெயரில், ‘பரணி’ என்ற ஒரு சொல்லுக்கு மட்டும் இளம்பூரணர் எடுத்துக்காட்டுக் கூற , நச்சினார்க்கினியர் ’சோதி’ எனும் இன்னொரு சொல்லையும் சேர்க்கிறார் !
அதனைக் கீழ்வருமாறு விளக்கலாம் –
5. சோதி + கொண்டான்= சோதி + ஆன் + கொண்டான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் கொண்டான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் கொண்டான் – சோதி நாளில் பெற்றான்; சோதி - சுவாதி)
6. சோதி + சென்றான்= சோதி + ஆன் + சென்றான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் சென்றான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் சென்றான் – சோதி நாளில் போனான்)
7. சோதி + தந்தான்= சோதி + ஆன் + தந்தான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் றந்தான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் றந்தான் – சோதி நாளில் தந்தான்)
8. சோதி + போயினான்= சோதி + ஆன் + போயினான் (ஆன் – சாரியை சேர்ந்தது ) = சோதியாற் போயினான் (ய் – உடம்படு மெய்) (வேற்றுமைப் புணர்ச்சி)
(சோதியாற் போயினான் – சோதி நாளில் போனான்)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (282)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘இ’ஈற்று நாள் பெயரின் புணர்ச்சிகளைக் காட்டிய தொல்காப்பியர் , அதே ‘இ’ ஈற்றுத் திங்கள் பெயர் எப்படிப் புணரும் என அடுத்துக்காட்டுகிறார் ! :-
“திங்கள் முன்வரி னிக்கே சாரியை” (உயிர்மயங். 46)
‘திங்கள் முன்வரின்’ - ‘இ’ஈற்று மாதப் பெயர் நிலைமொழியாக வந்தால் ,
‘இக்கே சாரியை’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இக்கு’ சாரியை ஆக வரும் !
இந் நூற்பாவில் , வருசொல் பெயரா ? வினையா?
விடைக்கு முன் நூற்பாவைப் பார்க்கவேண்டும் !
முன் நூற்பாவில், ‘தொழில் நிலைக் கிளவிக்கு ஆன் இடை வருதல் ஐயம் இன்று’ (உயிர்மயங்.45) என்று சொன்னதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் !
எனவே அதனை அடுத்து வந்த நூற்பாவில் கூறப்படும் வருமொழியும் வினைசொல்லாகாவே இருத்தல் வேண்டும் !
இதுதான் தொல்காப்பிய உரைமரபு என்பது !
எடுத்துகாட்டுகளை வருமாறு விளக்கித் தரலாம் ! :-
1.ஆடி + கொண்டான் = ஆடியாற் கொண்டான் ×
ஆடி + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குக் கொண்டான் – ஆடிமாதத்தில் பெற்றான்)
2.ஆடி + சென்றான் = ஆடியாற் சென்றான் ×
ஆடி + சென்றான் = ஆடிக்குச் சென்றான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குச் சென்றான் – ஆடிமாதத்தில் சென்றான்)
3.ஆடி + தந்தான் = ஆடியாற் றந்தான் ×
ஆடி + தந்தான் = ஆடிக்குத் தந்தான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குத் தந்தான் – ஆடிமாதத்தில் தந்தான்)
4.ஆடி + போயினான் = ஆடியாற் போயினான் ×
ஆடி + போயினான் = ஆடிக்குப் போயினான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குப் போயினான் – ஆடிமாதத்தில் போனான்)
மேலை எடுத்துக்காட்டுகளில், வருமொழிகள் யாவும் வினைகளாகவே இருப்பதைக் காண்க!
அதுமட்டுமல்ல ! அவை எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களாகவும் இருப்பதைக் கவனிக்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘இ’ஈற்று நாள் பெயரின் புணர்ச்சிகளைக் காட்டிய தொல்காப்பியர் , அதே ‘இ’ ஈற்றுத் திங்கள் பெயர் எப்படிப் புணரும் என அடுத்துக்காட்டுகிறார் ! :-
“திங்கள் முன்வரி னிக்கே சாரியை” (உயிர்மயங். 46)
‘திங்கள் முன்வரின்’ - ‘இ’ஈற்று மாதப் பெயர் நிலைமொழியாக வந்தால் ,
‘இக்கே சாரியை’ – வேற்றுமைப் புணர்ச்சியில் ‘இக்கு’ சாரியை ஆக வரும் !
இந் நூற்பாவில் , வருசொல் பெயரா ? வினையா?
விடைக்கு முன் நூற்பாவைப் பார்க்கவேண்டும் !
முன் நூற்பாவில், ‘தொழில் நிலைக் கிளவிக்கு ஆன் இடை வருதல் ஐயம் இன்று’ (உயிர்மயங்.45) என்று சொன்னதை நாம் நினைவில் கொள்ளவேண்டும் !
எனவே அதனை அடுத்து வந்த நூற்பாவில் கூறப்படும் வருமொழியும் வினைசொல்லாகாவே இருத்தல் வேண்டும் !
இதுதான் தொல்காப்பிய உரைமரபு என்பது !
எடுத்துகாட்டுகளை வருமாறு விளக்கித் தரலாம் ! :-
1.ஆடி + கொண்டான் = ஆடியாற் கொண்டான் ×
ஆடி + கொண்டான் = ஆடிக்குக் கொண்டான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குக் கொண்டான் – ஆடிமாதத்தில் பெற்றான்)
2.ஆடி + சென்றான் = ஆடியாற் சென்றான் ×
ஆடி + சென்றான் = ஆடிக்குச் சென்றான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குச் சென்றான் – ஆடிமாதத்தில் சென்றான்)
3.ஆடி + தந்தான் = ஆடியாற் றந்தான் ×
ஆடி + தந்தான் = ஆடிக்குத் தந்தான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குத் தந்தான் – ஆடிமாதத்தில் தந்தான்)
4.ஆடி + போயினான் = ஆடியாற் போயினான் ×
ஆடி + போயினான் = ஆடிக்குப் போயினான் √ (இக்கு - சாரியை)(வேற்றுமைப் புணர்ச்சி)
(ஆடிக்குப் போயினான் – ஆடிமாதத்தில் போனான்)
மேலை எடுத்துக்காட்டுகளில், வருமொழிகள் யாவும் வினைகளாகவே இருப்பதைக் காண்க!
அதுமட்டுமல்ல ! அவை எல்லாம் வல்லெழுத்தை முதலாகக் கொண்ட சொற்களாகவும் இருப்பதைக் கவனிக்க !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (283)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர் மயங்கியலில் ‘இ’ ஈற்றுச் சொற்களை முடித்துக்கொண்டு , ‘ஈ’ஈற்றுச் சொற்களுக்குச் செல்கிறார் தொல்காப்பியர் ! :-
“ ஈகார விறுதி யாகார வியற்றே” (உயிர்மயங். 47)
‘ஈகார இறுதி’ - ‘ஈ’ ஈற்றுச் சொற்களின் ஈறுகள்,
‘ஆகார இயற்றே’ - ‘ஆ’ஈற்றுச் சொற்களின் இறுதிகளைப்போலப் புணரும் !
‘ஆ’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணர்ந்தன ?
‘தாரா + கடிது = தாராக் கடிது’ (உயிர்மயங். 19), என்று பார்த்தோமே ? மறந்துவிட்டீர்களா?
இதே முறையில் –
1.தீ + கடிது = தீ கடிது ×
தீ + கடிது = தீக் கடிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
2.தீ + சிறிது = தீ சிறிது ×
தீ + சிறிது = தீச் சிறிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
3. தீ + தீது = தீ தீது ×
தீ + தீது = தீத் தீது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
4.தீ + பெரிது = தீ பெரிது ×
தீ + பெரிது = தீப் பெரிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
‘ஈ’ ஈற்றுச் சொல்லாக இளம்பூரணர் ‘தீ’ யைக் கையில் எடுக்க , நச்சினார்க்கினியர் , ‘ஈ’யைச் சுட்டுகிறார் ! :-
5. ஈ + கடிது = ஈ கடிது ×
ஈ + கடிது = ஈக் கடிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
6. ஈ + சிறிது = ஈ சிறிது ×
ஈ + சிறிது = ஈச் சிறிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
7. ஈ + தீது = ஈ தீது ×
ஈ + தீது = ஈத் தீது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
8. ஈ + பெரிது = ஈ பெரிது ×
ஈ + பெரிது = ஈப் பெரிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
மேலை இருவர் எடுத்துக்காட்டுகளிலுமே வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள்தாம் வருசொற்கள் என்பதைக் கவனிக்க !
மேலும் , ‘தீ’யில் , ஈறு (த் + ஈ)மட்டுமே ‘ஈ’ ! ஆனால் ஓரெழுத்து ஒருமொழியான ‘ஈ’யில் சொல்லும் அதுவே , ஈறும் அதுவே என்பதையும் கவனிக்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர் மயங்கியலில் ‘இ’ ஈற்றுச் சொற்களை முடித்துக்கொண்டு , ‘ஈ’ஈற்றுச் சொற்களுக்குச் செல்கிறார் தொல்காப்பியர் ! :-
“ ஈகார விறுதி யாகார வியற்றே” (உயிர்மயங். 47)
‘ஈகார இறுதி’ - ‘ஈ’ ஈற்றுச் சொற்களின் ஈறுகள்,
‘ஆகார இயற்றே’ - ‘ஆ’ஈற்றுச் சொற்களின் இறுதிகளைப்போலப் புணரும் !
‘ஆ’ ஈற்றுச் சொற்கள் எப்படிப் புணர்ந்தன ?
‘தாரா + கடிது = தாராக் கடிது’ (உயிர்மயங். 19), என்று பார்த்தோமே ? மறந்துவிட்டீர்களா?
இதே முறையில் –
1.தீ + கடிது = தீ கடிது ×
தீ + கடிது = தீக் கடிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
2.தீ + சிறிது = தீ சிறிது ×
தீ + சிறிது = தீச் சிறிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
3. தீ + தீது = தீ தீது ×
தீ + தீது = தீத் தீது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
4.தீ + பெரிது = தீ பெரிது ×
தீ + பெரிது = தீப் பெரிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
‘ஈ’ ஈற்றுச் சொல்லாக இளம்பூரணர் ‘தீ’ யைக் கையில் எடுக்க , நச்சினார்க்கினியர் , ‘ஈ’யைச் சுட்டுகிறார் ! :-
5. ஈ + கடிது = ஈ கடிது ×
ஈ + கடிது = ஈக் கடிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
6. ஈ + சிறிது = ஈ சிறிது ×
ஈ + சிறிது = ஈச் சிறிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
7. ஈ + தீது = ஈ தீது ×
ஈ + தீது = ஈத் தீது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
8. ஈ + பெரிது = ஈ பெரிது ×
ஈ + பெரிது = ஈப் பெரிது √ (வல்லெழுத்துச் சந்தி பெற்றது)(அல்வழிப் புணர்ச்சி)
மேலை இருவர் எடுத்துக்காட்டுகளிலுமே வல்லெழுத்தை முதலாக உடைய சொற்கள்தாம் வருசொற்கள் என்பதைக் கவனிக்க !
மேலும் , ‘தீ’யில் , ஈறு (த் + ஈ)மட்டுமே ‘ஈ’ ! ஆனால் ஓரெழுத்து ஒருமொழியான ‘ஈ’யில் சொல்லும் அதுவே , ஈறும் அதுவே என்பதையும் கவனிக்க !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (284)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீ குட்டையானவன்
நீக் குட்டையானவன்
-
- இவற்றில் எது சரியானது ?
இதற்குத் தொல்காப்பிய விதி யாது ?
இதுதான் தொல்காப்பிய விதி ! :-
“நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும்
மீயென மரீஇய விடம்வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 48)
‘நீ என் பெயரும்’ - ‘நீ’ என்ற ‘ஈ’ ஈற்றுப் பெயரும் ,
‘இடக்கர்ப் பெயரும்’ - இடக்கர் அடக்கலாக வரும் ‘பீ’ எனும் ‘ஈ’ஈற்றுச் சொல்லும் ,
‘மீ என மரீஇய இடம் வரை கிளவியும்’ - மரூஉச் சொல்லாய் நின்று, இடத்தை
உணர்த்தும் ‘மீ’ என்ற ‘ஈ’ ஈற்றுச் சொல்லும்,
‘ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் ’- புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி
பெறாது , இயற்கையாக முடியும் !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
1. நீ + குறியை = நீக் குறியை ×
நீ + குறியை = நீ குறியை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ குறியை – நீ குட்டையானவன்)
நீ + சிறியை = நீச் சிறியை ×
நீ + சிறியை = நீ சிறியை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ சிறியை – நீ சிறியவன்)
நீ + தீயை = நீத் தீயை ×
நீ + தீயை = நீ தீயை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ தீயை – நீ தீயவன்)
நீ + பெரியை = நீப் பெரியை ×
நீ + பெரியை = நீ பெரியை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ பெரியை – நீ பெரியவன்)
2 . பீ + குறிது = பீக் குறிது ×
பீ + குறிது = பீ குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
பீ + சிறிது = பீச் சிறிது ×
பீ + சிறிது = பீ சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
பீ + தீது = பீத் தீது ×
பீ + தீது = பீ தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
பீ + பெரிது = பீப் பெரிது ×
பீ + பெரிது = பீ பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . மீ + கண் = மீக் கண் ×
மீ + கண் = மீ கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி )
மீ + செவி = மீச் செவி ×
மீ + செவி = மீ செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி )
மீ + தலை = மீத் தலை ×
மீ + தலை = மீ தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி )
மீ + புறம் = மீப் புறம் ×
மீ + புறம் = மீ புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி )
நூற்பாவில் , ‘மீ என மரீஇய’ – என்று வந்ததல்லவா?
எந்தச் சொல் ‘மீ’ என்று மருவியதாம் ?
நச்சர் விடை கூறியுள்ளார் !
குற்றியலுகரப் புணரியல் நூற்பா 27இல் விடை கூறியுள்ளார் !
நச்சரின் கருத்துப்படி –
‘மேற்கு’ என்ற சொல்லே ‘மீ’ என மருவி வந்தது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
நீ குட்டையானவன்
நீக் குட்டையானவன்
-
- இவற்றில் எது சரியானது ?
இதற்குத் தொல்காப்பிய விதி யாது ?
இதுதான் தொல்காப்பிய விதி ! :-
“நீயென் பெயரு மிடக்கர்ப் பெயரும்
மீயென மரீஇய விடம்வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 48)
‘நீ என் பெயரும்’ - ‘நீ’ என்ற ‘ஈ’ ஈற்றுப் பெயரும் ,
‘இடக்கர்ப் பெயரும்’ - இடக்கர் அடக்கலாக வரும் ‘பீ’ எனும் ‘ஈ’ஈற்றுச் சொல்லும் ,
‘மீ என மரீஇய இடம் வரை கிளவியும்’ - மரூஉச் சொல்லாய் நின்று, இடத்தை
உணர்த்தும் ‘மீ’ என்ற ‘ஈ’ ஈற்றுச் சொல்லும்,
‘ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும் ’- புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி
பெறாது , இயற்கையாக முடியும் !
இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு விளக்கலாம் !:-
1. நீ + குறியை = நீக் குறியை ×
நீ + குறியை = நீ குறியை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ குறியை – நீ குட்டையானவன்)
நீ + சிறியை = நீச் சிறியை ×
நீ + சிறியை = நீ சிறியை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ சிறியை – நீ சிறியவன்)
நீ + தீயை = நீத் தீயை ×
நீ + தீயை = நீ தீயை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ தீயை – நீ தீயவன்)
நீ + பெரியை = நீப் பெரியை ×
நீ + பெரியை = நீ பெரியை √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீ பெரியை – நீ பெரியவன்)
2 . பீ + குறிது = பீக் குறிது ×
பீ + குறிது = பீ குறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
பீ + சிறிது = பீச் சிறிது ×
பீ + சிறிது = பீ சிறிது √ (அல்வழிப் புணர்ச்சி)
பீ + தீது = பீத் தீது ×
பீ + தீது = பீ தீது √ (அல்வழிப் புணர்ச்சி)
பீ + பெரிது = பீப் பெரிது ×
பீ + பெரிது = பீ பெரிது √ (அல்வழிப் புணர்ச்சி)
3 . மீ + கண் = மீக் கண் ×
மீ + கண் = மீ கண் √ (வேற்றுமைப் புணர்ச்சி )
மீ + செவி = மீச் செவி ×
மீ + செவி = மீ செவி √ (வேற்றுமைப் புணர்ச்சி )
மீ + தலை = மீத் தலை ×
மீ + தலை = மீ தலை √ (வேற்றுமைப் புணர்ச்சி )
மீ + புறம் = மீப் புறம் ×
மீ + புறம் = மீ புறம் √ (வேற்றுமைப் புணர்ச்சி )
நூற்பாவில் , ‘மீ என மரீஇய’ – என்று வந்ததல்லவா?
எந்தச் சொல் ‘மீ’ என்று மருவியதாம் ?
நச்சர் விடை கூறியுள்ளார் !
குற்றியலுகரப் புணரியல் நூற்பா 27இல் விடை கூறியுள்ளார் !
நச்சரின் கருத்துப்படி –
‘மேற்கு’ என்ற சொல்லே ‘மீ’ என மருவி வந்தது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (285)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சற்றுமுன் ‘மீ + கண் = மீகண்’ என்ற விதியைத் தொல்காப்பியர் கூறக் கேட்டோம் !
உடனே அதே கையோடு இதற்கு விதிவிலக்காச் சில சொற்களும் உள என்று இன்னொரு நூற்பாவைத் தருகிறார் தொல்காப்பியர் ! :-
“இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம்
உடனிலை மொழியு முளவென மொழிப” (உயிர்மயங். 49)
‘இடம்வரை கிளவிமுன்’ – இட்த்தைக் குறிக்கும் சொல்லான ‘மீ’ என்பதன் முன் ,
‘வல்லெழுத்து மிகூஉம்’ – சந்தியாக வல்லெழுத்து வரக்கூடிய ,
‘ உடனிலை மொழியும் உளவென மொழிப’ – இசந்து நிற்றலை உடைய சொற்களும் உள்ளன !
1 . மீ + கோள் = மீகோள் ×
மீ + கோள் = மீக்கோள்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீக்கோள் – உடலின் மீது கொள்ளப்படுவது)
2 . மீ + பல் = மீபல் ×
மீ + பல் = மீப் பல்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீப்பல் –பல்லின் மேற்பகுதி )
3 . மீ + பாய் = மீபாய் ×
மீ + பாய் = மீப் பாய்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீப்பாய் – பாயின் மேற்பகுதி )
‘மீக்கோள் ’ என்பது ஆசாரக்கோவையிலும் (பாடல் 31) , ‘மீப்பாய்’ என்பது புநானூற்றிலும் (பாடல் 30) வந்துள்ளதாக எழுதியுள்ளனர் .
உரையின் இறுதியில் இளம்பூரணர் ஏதோ சொல்ல வருகிறார் கேட்போமே ! –
“ உடனிலை என்றதனான் , ‘மீங்குழி’ , ‘மீந்தோல்’ என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவும் கொள்க !”
அஃதாவது-
4 . மீ + குழி = மீக் குழி ×
மீ + குழி = மீங் குழி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீங் குழி – குழியின் மேற்பகுதி )
5 . மீ + தோல் = மீத் தோல் ×
மீ + தோல் = மீந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீந் தோல் – தோலின் மேற்பகுதி )
‘மீக் குழி’ , ‘மீத் தோல்’ என்றெல்லாம் ஏன் வரவில்லை ?
‘மீக் குழி’ எனில் , ‘சிறு குழி’ , ‘பெருங்குழி’ என்பதுபோலக் குழியின் அளவைக் குறித்துவிடும் ! எனவேதான், இப் பொருள் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் , ‘மீங் குழி’ என வருகிறது ! அப்போதுதான் , ‘குழியின் மேற்பகுதி’ என்ற பொருள் தெளிவாக நிற்கும் !
இதைப்போலவே ‘மீத்தோல்’ எனில் ‘ஆட்டுத்தோல்’ , ‘மாட்டுத்தோல்’ என்பதுபோல் ஏதோ ஒரு விலங்கின் தோல் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்கே , ‘மீந்தோல்’ எனப் புணர்ச்சி ஏற்படுகிறது ! அப்போதுதான் , ‘தோலின் மேற்பகுதி’ என்ற தெளிவான பொருள் நமக்குக் கிட்டும் !
தமிழ்ப் புணர்ச்சியில் , பொருள் மதிப்பே (Semantic value ) இன்றியமையாதது !
மரபிலக்கணமும் , மொழியியலும் (Linguistics) மோதிக்கொள்ளும் இடம் இதுவே !
“இடத்திற்கேற்றவாறு ஒவ்வொன்றைச் சொல்லுகிறீர்களே ! இதுவும் இதுவும் சேர்ந்தால் இப்படித்தான் வரும் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லுங்கள் ! ” – என்று மொழியியலார் கேட்கின்றனர் !
மொழியியலார் கேட்பதுபோல நடக்காது என்பது நம் மேலை ஆய்விலேயே தெளிவாகிவிட்டது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
சற்றுமுன் ‘மீ + கண் = மீகண்’ என்ற விதியைத் தொல்காப்பியர் கூறக் கேட்டோம் !
உடனே அதே கையோடு இதற்கு விதிவிலக்காச் சில சொற்களும் உள என்று இன்னொரு நூற்பாவைத் தருகிறார் தொல்காப்பியர் ! :-
“இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம்
உடனிலை மொழியு முளவென மொழிப” (உயிர்மயங். 49)
‘இடம்வரை கிளவிமுன்’ – இட்த்தைக் குறிக்கும் சொல்லான ‘மீ’ என்பதன் முன் ,
‘வல்லெழுத்து மிகூஉம்’ – சந்தியாக வல்லெழுத்து வரக்கூடிய ,
‘ உடனிலை மொழியும் உளவென மொழிப’ – இசந்து நிற்றலை உடைய சொற்களும் உள்ளன !
1 . மீ + கோள் = மீகோள் ×
மீ + கோள் = மீக்கோள்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீக்கோள் – உடலின் மீது கொள்ளப்படுவது)
2 . மீ + பல் = மீபல் ×
மீ + பல் = மீப் பல்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீப்பல் –பல்லின் மேற்பகுதி )
3 . மீ + பாய் = மீபாய் ×
மீ + பாய் = மீப் பாய்√ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீப்பாய் – பாயின் மேற்பகுதி )
‘மீக்கோள் ’ என்பது ஆசாரக்கோவையிலும் (பாடல் 31) , ‘மீப்பாய்’ என்பது புநானூற்றிலும் (பாடல் 30) வந்துள்ளதாக எழுதியுள்ளனர் .
உரையின் இறுதியில் இளம்பூரணர் ஏதோ சொல்ல வருகிறார் கேட்போமே ! –
“ உடனிலை என்றதனான் , ‘மீங்குழி’ , ‘மீந்தோல்’ என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவும் கொள்க !”
அஃதாவது-
4 . மீ + குழி = மீக் குழி ×
மீ + குழி = மீங் குழி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீங் குழி – குழியின் மேற்பகுதி )
5 . மீ + தோல் = மீத் தோல் ×
மீ + தோல் = மீந் தோல் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(மீந் தோல் – தோலின் மேற்பகுதி )
‘மீக் குழி’ , ‘மீத் தோல்’ என்றெல்லாம் ஏன் வரவில்லை ?
‘மீக் குழி’ எனில் , ‘சிறு குழி’ , ‘பெருங்குழி’ என்பதுபோலக் குழியின் அளவைக் குறித்துவிடும் ! எனவேதான், இப் பொருள் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் , ‘மீங் குழி’ என வருகிறது ! அப்போதுதான் , ‘குழியின் மேற்பகுதி’ என்ற பொருள் தெளிவாக நிற்கும் !
இதைப்போலவே ‘மீத்தோல்’ எனில் ‘ஆட்டுத்தோல்’ , ‘மாட்டுத்தோல்’ என்பதுபோல் ஏதோ ஒரு விலங்கின் தோல் என்ற பொருள் வந்துவிடும் ! இதைத் தவிர்ப்பதற்கே , ‘மீந்தோல்’ எனப் புணர்ச்சி ஏற்படுகிறது ! அப்போதுதான் , ‘தோலின் மேற்பகுதி’ என்ற தெளிவான பொருள் நமக்குக் கிட்டும் !
தமிழ்ப் புணர்ச்சியில் , பொருள் மதிப்பே (Semantic value ) இன்றியமையாதது !
மரபிலக்கணமும் , மொழியியலும் (Linguistics) மோதிக்கொள்ளும் இடம் இதுவே !
“இடத்திற்கேற்றவாறு ஒவ்வொன்றைச் சொல்லுகிறீர்களே ! இதுவும் இதுவும் சேர்ந்தால் இப்படித்தான் வரும் என்று ஏதாவது ஒன்றை மட்டும் சொல்லுங்கள் ! ” – என்று மொழியியலார் கேட்கின்றனர் !
மொழியியலார் கேட்பதுபோல நடக்காது என்பது நம் மேலை ஆய்விலேயே தெளிவாகிவிட்டது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 35 of 84 • 1 ... 19 ... 34, 35, 36 ... 59 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 35 of 84
|
|