புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 4:43 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:35 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 3:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 2:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:08 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 6:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Apr 25, 2024 10:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 10:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 6:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 8:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:43 pm
by ayyasamy ram Today at 4:48 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 4:43 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 4:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:35 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 3:14 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 4:34 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 2:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 9:08 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:22 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:12 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 6:18 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Apr 25, 2024 10:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Apr 25, 2024 10:31 pm
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:48 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:41 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:38 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:36 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 4:34 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:04 am
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 11:02 am
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:43 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:37 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 5:35 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:41 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 4:40 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:56 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:43 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 3:28 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 10:03 am
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:57 am
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:56 am
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:54 am
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:53 am
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 9:51 am
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 6:13 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 8:51 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 6:01 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 5:43 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:09 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:07 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:02 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:00 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:46 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 12:43 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 38 of 84 •
Page 38 of 84 • 1 ... 20 ... 37, 38, 39 ... 61 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (302)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘தூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘உ’வைச் சந்தியிலே பெற்றுத் , ‘தூஉ + குறை = தூஉக் குறை’ என வரும் என்பதைச் சற்றுமுன் பார்த்தோம் !
அப்படியானால் , ‘பூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அதே முறையில்தான் புணருமா ?
விடை வருகிறது !:-
“பூவெ னொருபெய ராயியல் பின்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” (உயிர்மயங். 66)
‘பூவென் ஒருபெயர் ’ – ‘பூ’ எனும் பெயர்ச்சொல்லானது ,
‘ஆ இயல்பு அன்றே’ – அந்த இயல்பின்படிப் புணராது ! அஃதாவது , புணர்ச்சியின்போது , ‘உ’இடையே வராது !
‘ஆ வயின்’ – அப் புணர்ச்சியின்போது ,
‘வல்லெழுத்து மிகுதலும் உரித்தே’ – ‘தூஉக்குறை’ என்பதில் , சந்தியாக ‘க்’ என்ற வல்லொற்று வந்தது போல இங்கு வருதலும் உண்டு ; ஆனால் மெல்லெழுத்து வரலே மிகுதி !
1. பூ + கொடி = பூங் கொடி √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + கொடி = பூக் கொடி √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூங் கொடி , பூக்கொடி – பூவை உடைய கொடி)
2. பூ + செய்கை = பூஞ் செய்கை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + செய்கை = பூச் செய்கை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் செய்கை , பூச்செய்கை – பூவின் செயல்)
3. பூ + தாமம் = பூந் தாமம் √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + தாமம் = பூத் தாமம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூந் தாமம் , பூத்தாமம் – பூமாலை)
4. பூ + பந்து = பூம் பந்து √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + பந்து = பூப் பந்து √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூம் பந்து , பூப்பந்து – பூவால் ஆகிய பந்து)
5. பூ + சோலை = பூஞ் சோலை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + சோலை = பூச் சோலை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் சோலை , பூச்சோலை – பூக்கள் நிறைந்த சோலை)
பூ மென்மையானது என்பதற்கேற்பச் சந்தியிலும் மெல்லெழுத்து மிகுதி ஏற்பட்டதோ?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘தூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழி , வேற்றுமைப் புணர்ச்சியில் , ‘உ’வைச் சந்தியிலே பெற்றுத் , ‘தூஉ + குறை = தூஉக் குறை’ என வரும் என்பதைச் சற்றுமுன் பார்த்தோம் !
அப்படியானால் , ‘பூ’ என்ற ஓரெழுத்து ஒருமொழியும் அதே முறையில்தான் புணருமா ?
விடை வருகிறது !:-
“பூவெ னொருபெய ராயியல் பின்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலு முரித்தே ” (உயிர்மயங். 66)
‘பூவென் ஒருபெயர் ’ – ‘பூ’ எனும் பெயர்ச்சொல்லானது ,
‘ஆ இயல்பு அன்றே’ – அந்த இயல்பின்படிப் புணராது ! அஃதாவது , புணர்ச்சியின்போது , ‘உ’இடையே வராது !
‘ஆ வயின்’ – அப் புணர்ச்சியின்போது ,
‘வல்லெழுத்து மிகுதலும் உரித்தே’ – ‘தூஉக்குறை’ என்பதில் , சந்தியாக ‘க்’ என்ற வல்லொற்று வந்தது போல இங்கு வருதலும் உண்டு ; ஆனால் மெல்லெழுத்து வரலே மிகுதி !
1. பூ + கொடி = பூங் கொடி √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + கொடி = பூக் கொடி √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூங் கொடி , பூக்கொடி – பூவை உடைய கொடி)
2. பூ + செய்கை = பூஞ் செய்கை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + செய்கை = பூச் செய்கை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் செய்கை , பூச்செய்கை – பூவின் செயல்)
3. பூ + தாமம் = பூந் தாமம் √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + தாமம் = பூத் தாமம் √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூந் தாமம் , பூத்தாமம் – பூமாலை)
4. பூ + பந்து = பூம் பந்து √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + பந்து = பூப் பந்து √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூம் பந்து , பூப்பந்து – பூவால் ஆகிய பந்து)
5. பூ + சோலை = பூஞ் சோலை √(பெரும்பான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
பூ + சோலை = பூச் சோலை √(சிறுபான்மை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(பூஞ் சோலை , பூச்சோலை – பூக்கள் நிறைந்த சோலை)
பூ மென்மையானது என்பதற்கேற்பச் சந்தியிலும் மெல்லெழுத்து மிகுதி ஏற்பட்டதோ?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (303)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலில் , ‘தூ’, ‘பூ’ , ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகள் , வேற்றுமையில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய சொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்தோம் !
அடுத்த ஓரெழுத்து ஒருமொழி – ஊ !
ஆம் ! ஊ – என்றால் தசை என்பது பொருள் ! ‘கறி’ என்பதும் இதுவே !
இந்த ‘ஊ’ , வேற்றுமையில் , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்களோடு எப்படிப் புணரும் ?
விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-
“ஊவெ னொருபெய ராவொடு சிவணும் ” (உயிர்மயங். 67)
‘ஊ என் ஒரு பெயர் ’ – ‘ஊ’ எனப்படும் அந்தப் பெயர்ச்சொல்லானது ,
‘ஆ ஒடு சிவணும்’ - ‘ஆ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியைப்போலப் புணரும் !
அஃதாவது –
‘ஆ + கோடு = ஆன் கோடு’ என்ற புணர்ச்சியைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 29இல் விளக்கினாரல்லவா? அதைப்போலத்தான் ‘ஊ’வும் புணரும் !
1. ஊ + குறை = ஊக்குறை ×
ஊ + குறை = ஊன்குறை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்குறை – தசையில் உள்ள குறை)
2. ஊ + செய்கை = ஊச்செய்கை ×
ஊ + செய்கை = ஊன்செய்கை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்செய்கை – தசையின் செயல்)
3. ஊ + தலை = ஊத்தலை ×
ஊ + தலை = ஊன்தலை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்தலை – தசையின் தலைப்பக்கம்)
4. ஊ + புறம் = ஊப்புறம் ×
ஊ + புறம் = ஊன்புறம் √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்புறம் – தசையின் வெளிப்பக்கம்)
‘ஊ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி இன்று மறைந்து , ‘ஊன்’ என்ற ஈரெழுத்து மொழியே நிற்கிறது !
இதுதான் மொழி வளர்ச்சி என்பது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலில் , ‘தூ’, ‘பூ’ , ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகள் , வேற்றுமையில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய சொற்களோடு எப்படிப் புணரும் என்று பார்த்தோம் !
அடுத்த ஓரெழுத்து ஒருமொழி – ஊ !
ஆம் ! ஊ – என்றால் தசை என்பது பொருள் ! ‘கறி’ என்பதும் இதுவே !
இந்த ‘ஊ’ , வேற்றுமையில் , வல்லெழுத்தை முதலாக உடைய வருசொற்களோடு எப்படிப் புணரும் ?
விளக்குகிறார் தொல்காப்பியர் ! :-
“ஊவெ னொருபெய ராவொடு சிவணும் ” (உயிர்மயங். 67)
‘ஊ என் ஒரு பெயர் ’ – ‘ஊ’ எனப்படும் அந்தப் பெயர்ச்சொல்லானது ,
‘ஆ ஒடு சிவணும்’ - ‘ஆ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழியைப்போலப் புணரும் !
அஃதாவது –
‘ஆ + கோடு = ஆன் கோடு’ என்ற புணர்ச்சியைத் தொல்காப்பியர் உயிர்மயங்கியல் நூற்பா 29இல் விளக்கினாரல்லவா? அதைப்போலத்தான் ‘ஊ’வும் புணரும் !
1. ஊ + குறை = ஊக்குறை ×
ஊ + குறை = ஊன்குறை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்குறை – தசையில் உள்ள குறை)
2. ஊ + செய்கை = ஊச்செய்கை ×
ஊ + செய்கை = ஊன்செய்கை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்செய்கை – தசையின் செயல்)
3. ஊ + தலை = ஊத்தலை ×
ஊ + தலை = ஊன்தலை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்தலை – தசையின் தலைப்பக்கம்)
4. ஊ + புறம் = ஊப்புறம் ×
ஊ + புறம் = ஊன்புறம் √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊன்புறம் – தசையின் வெளிப்பக்கம்)
‘ஊ’ என்ற ஓரெழுத்து ஒரு மொழி இன்று மறைந்து , ‘ஊன்’ என்ற ஈரெழுத்து மொழியே நிற்கிறது !
இதுதான் மொழி வளர்ச்சி என்பது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (304)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலின் ‘ஊ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !
முன்னதாக ‘ஊ + குறை = ஊன் குறை’ என்று ,வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய வருசொற்களோடு , ‘ன்’ பெற்றுப் புணரும் எனக் கண்டோம் !
இப்போது, அதே புணர்ச்சி வேறுமாதிரியாகவும் நடக்கலாம் என்கிறார் தொல்காப்பியர் ! :-
“அக்கென் சாரியை பெறுதலு முரித்தே” (உயிர்மயங். 68)
1. ஊ + குறை = ஊன் குறை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + குறை = ஊனக் குறை √ (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊனக் குறை – தசையில் உள்ள குறை)
2. ஊ + செய்கை = ஊன் செய்கை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + செய்கை = ஊனச் செய்கை √ (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) வேற்றுமைப்
புணர்ச்சி)
(ஊனச் செய்கை – தசையின் செய்கை)
3. ஊ + தலை = ஊன் தலை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + தலை = ஊனத் தலை √ (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(ஊனத் தலை – தசையின் தலை)
4. ஊ + புறம் = ஊன் புறம் √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + புறம் = ஊனப் புறம் √ (ன் – எழுத்துப் பேறு ; அக்கு - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(ஊனப் புறம் – தசையின் வெளிப்பக்கம்)
முன்பு , ‘கொண்மூ + குறை = கொண்மூக் குறை’ என்ற புணர்ச்சியைப் (உயிர்மயங். 64) பார்த்தோம் ; ‘உடூ + குறை = உடூஉக்குறை’ (உயிர்மயங். 65) என வந்ததையும்
கண்டோம் ; ‘ஊ + குறை = ஊன் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 67), ‘ஊ + குறை
= ஊனக் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 68) பார்த்துள்ளோம்!
மேல் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், ‘இன்’ சாரியை பெற்றும் இந் நிலைமொழிகள் புணரலாம் என்பதைத் தெரிவிக்கிறார் ! –
5.கொண்மூ + குழாம் = கொண்மூவின் குழாம் (இன் - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(கொண்மூவின் குழாம் – மேகத்தின் கூட்டம்)
6.உடூ + தலை = உடூவின் தலை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூவின் தலை – நட்சத்திரத்தின் தலை)
7.ஊ + குறை = ஊவின் குறை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊவின் குறை – இறைச்சியின் குறை)
‘உடூவின் தலை’ என்பதில் நடுவில் ‘உ’ வரவில்லை என்பதைக் கவனிக்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலின் ‘ஊ’ ஈற்றுச் சொல்லில் நிற்கிறோம் !
முன்னதாக ‘ஊ + குறை = ஊன் குறை’ என்று ,வேற்றுமைப் புணர்ச்சியில் , வல்லெழுத்துகளை முதலாக உடைய வருசொற்களோடு , ‘ன்’ பெற்றுப் புணரும் எனக் கண்டோம் !
இப்போது, அதே புணர்ச்சி வேறுமாதிரியாகவும் நடக்கலாம் என்கிறார் தொல்காப்பியர் ! :-
“அக்கென் சாரியை பெறுதலு முரித்தே” (உயிர்மயங். 68)
1. ஊ + குறை = ஊன் குறை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + குறை = ஊனக் குறை √ (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊனக் குறை – தசையில் உள்ள குறை)
2. ஊ + செய்கை = ஊன் செய்கை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + செய்கை = ஊனச் செய்கை √ (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) வேற்றுமைப்
புணர்ச்சி)
(ஊனச் செய்கை – தசையின் செய்கை)
3. ஊ + தலை = ஊன் தலை √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + தலை = ஊனத் தலை √ (ன் – எழுத்துப் பேறு; அக்கு - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(ஊனத் தலை – தசையின் தலை)
4. ஊ + புறம் = ஊன் புறம் √ (ன் – எழுத்துப் பேறு) (வேற்றுமைப் புணர்ச்சி)
ஊ + புறம் = ஊனப் புறம் √ (ன் – எழுத்துப் பேறு ; அக்கு - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(ஊனப் புறம் – தசையின் வெளிப்பக்கம்)
முன்பு , ‘கொண்மூ + குறை = கொண்மூக் குறை’ என்ற புணர்ச்சியைப் (உயிர்மயங். 64) பார்த்தோம் ; ‘உடூ + குறை = உடூஉக்குறை’ (உயிர்மயங். 65) என வந்ததையும்
கண்டோம் ; ‘ஊ + குறை = ஊன் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 67), ‘ஊ + குறை
= ஊனக் குறை’ என வந்ததையும் (உயிர்மயங். 68) பார்த்துள்ளோம்!
மேல் நூற்பா உரையில் நச்சினார்க்கினியர், ‘இன்’ சாரியை பெற்றும் இந் நிலைமொழிகள் புணரலாம் என்பதைத் தெரிவிக்கிறார் ! –
5.கொண்மூ + குழாம் = கொண்மூவின் குழாம் (இன் - சாரியை) (வேற்றுமைப்
புணர்ச்சி)
(கொண்மூவின் குழாம் – மேகத்தின் கூட்டம்)
6.உடூ + தலை = உடூவின் தலை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(உடூவின் தலை – நட்சத்திரத்தின் தலை)
7.ஊ + குறை = ஊவின் குறை (இன் - சாரியை) (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஊவின் குறை – இறைச்சியின் குறை)
‘உடூவின் தலை’ என்பதில் நடுவில் ‘உ’ வரவில்லை என்பதைக் கவனிக்க !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (305)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ‘எ’ , ‘ஒ’ ஆகிய ஈறுகளைப் பேச வருகிறார் தொல்காப்பியர் ! :-
“எகர வொகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய வென்மனார் புலவர்
தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான” (உயிர்மயங். 70)
‘எகர ஒகரம் பெயர்க்கு ஈ றாகா’ - ‘எ’ , ‘ஒ’ ஆகிய இரண்டு எழுத்துகளும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியிலே வராதவை !
‘முன்னிலை மொழிய என்மனார் புலவர்’ – இந்த இரண்டு எழுத்துகளும் முன்னிலை வினைச் சொற்களுக்கு ஈறாக வரும் !
‘தேற்றமும் சிறப்பும் அல்வழி யான’ – தெளிவுப் பொருளிலும் , சிறப்புப் பொருளிலும் , அல்வழிப் புணர்ச்சியில், இடைச்சொற்களாக வருவதானால் வினையில் இவை ஈறாக வரும் !
(அ)முன்னிலை வினைக்கு ஈறு –
1 . ஏஎ (முன்னிலை வினைச்சொல்; இதில் ‘எ’ ஈறானமை காண்க !)
ஏ – இந்த வினைக்கு, ‘எனக்கு ஒரு வேலை இடு ! ’ என்பது பொருள் .
ஏஎ எனினும் , ஏ எனினும் பொருள் ஒன்றே !
2 . ஓஒ (முன்னிலை வினைச்சொல் ; இதில் ‘ஒ’ ஈறானமை காண்க !)
ஓ – இந்த வினைக்கு, ‘இவ்வாறு செய்வதைக் கைவிடு ! ’ என்பது பொருள் .
ஓஒ எனினும் , ஓ எனினும் பொருள் ஒன்றே !
(ஆ) தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-
3. ஏஎ – இது தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘எ’ என்பதைக் கவனிக்க!
தேற்றப் பொருள் – தெளிவுப் பொருள் .
ஏஎ கொண்டான் – அவன் பெற்றான் என்பதில் ஐயம் சிறிதுமில்லை என்பது பொருள் !
ஏஎ + கொண்டான் = ஏஎ கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-
4 . ஓஒ – இது சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘ஒ’ என்பதைக் கவனிக்க!
ஓஒ கொண்டான் – பெறுவதற்குத் தகுதி உடையவன் ஆதலின் அவன் பெற்றான் !
ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ‘எ’ , ‘ஒ’ ஆகிய ஈறுகளைப் பேச வருகிறார் தொல்காப்பியர் ! :-
“எகர வொகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய வென்மனார் புலவர்
தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான” (உயிர்மயங். 70)
‘எகர ஒகரம் பெயர்க்கு ஈ றாகா’ - ‘எ’ , ‘ஒ’ ஆகிய இரண்டு எழுத்துகளும் பெயர்ச்சொற்களுக்கு இறுதியிலே வராதவை !
‘முன்னிலை மொழிய என்மனார் புலவர்’ – இந்த இரண்டு எழுத்துகளும் முன்னிலை வினைச் சொற்களுக்கு ஈறாக வரும் !
‘தேற்றமும் சிறப்பும் அல்வழி யான’ – தெளிவுப் பொருளிலும் , சிறப்புப் பொருளிலும் , அல்வழிப் புணர்ச்சியில், இடைச்சொற்களாக வருவதானால் வினையில் இவை ஈறாக வரும் !
(அ)முன்னிலை வினைக்கு ஈறு –
1 . ஏஎ (முன்னிலை வினைச்சொல்; இதில் ‘எ’ ஈறானமை காண்க !)
ஏ – இந்த வினைக்கு, ‘எனக்கு ஒரு வேலை இடு ! ’ என்பது பொருள் .
ஏஎ எனினும் , ஏ எனினும் பொருள் ஒன்றே !
2 . ஓஒ (முன்னிலை வினைச்சொல் ; இதில் ‘ஒ’ ஈறானமை காண்க !)
ஓ – இந்த வினைக்கு, ‘இவ்வாறு செய்வதைக் கைவிடு ! ’ என்பது பொருள் .
ஓஒ எனினும் , ஓ எனினும் பொருள் ஒன்றே !
(ஆ) தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-
3. ஏஎ – இது தேற்றப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘எ’ என்பதைக் கவனிக்க!
தேற்றப் பொருள் – தெளிவுப் பொருள் .
ஏஎ கொண்டான் – அவன் பெற்றான் என்பதில் ஐயம் சிறிதுமில்லை என்பது பொருள் !
ஏஎ + கொண்டான் = ஏஎ கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல்லுக்கு ஈறு-
4 . ஓஒ – இது சிறப்புப் பொருளில் வரும் இடைச்சொல் ; இங்கே ஈறு ‘ஒ’ என்பதைக் கவனிக்க!
ஓஒ கொண்டான் – பெறுவதற்குத் தகுதி உடையவன் ஆதலின் அவன் பெற்றான் !
ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான் (அல்வழிப் புணர்ச்சி)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (306)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலில் ‘எ’ , ‘ஒ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் ! :-
“தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும்
மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா” (உயிர்மயங். 71)
‘தேற்ற எகரமும் ’ – தெளிவுப் பொருளில் வரும் ‘எ’ஈற்று இடைசொல்லும் ,
‘சிறப்பின் ஒவ்வும்’ – சிறப்புப் பொருளில் வரும் ‘ஒ’ ஈற்று இடைச்சொல்லும் ,
‘மேற்கூறு இயற்கை’ – மேலே , முன் சூத்திரத்தில் , கூறப்பட்டது போன்றே வல்லொற்று சந்தியாக வராது !
1. யானேஎ + கொண்டேன் = யானேஎக் கொண்டேன் ×
யானேஎ + கொண்டேன் = யானேஎ கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவன் பெற்றானா இல்லையா என்று ஐயம் வந்து அவனைக் கேட்கும்போது , தெளிவாக , ‘ஐயம் வேண்டாம் நானே (யானேஎ) பெற்றேன்’ எனச் சற்று நீட்டிக் கூறுகிறானல்லவா? இதுதான்
தேற்றப் பொருள் ! இதனைத் தருவதற்காகத்தான் அந்த ‘எ’ !)
2. நீயேஎ + கொண்டாய் = நீயேஎக் கொண்டாய் ×
நீயேஎ + கொண்டாய் = நீயேஎ கொண்டாய் √(அல்வழிப் புணர்ச்சி)
3. அன்னேஎ + கொண்டான் = அவனேஎக் கொண்டான் ×
அவனேஎ + கொண்டான் = அவனேஎ கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
4. ஓஒ + கொண்டேன் = ஓஒக் கொண்டேன் ×
ஓஒ + கொண்டேன் = ஓஒ கொண்டேன் √(அல்வழிப் புணர்ச்சி)
5. ஓஒ + கொண்டாய் = ஓஒக் கொண்டாய் ×
ஓஒ + கொண்டாய் = ஓஒ கொண்டாய் √(அல்வழிப் புணர்ச்சி)
6. ஓஒ + கொண்டான் = ஓஒக் கொண்டான் ×
ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
ஏ , ஓ – இடைச் சொற்கள் ; ‘யானே’ என்பதில் ‘யான்’ , பெயர்ச்சொல் !
இதன்பின் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணத்தை வருமாறு காட்டலாம் !:-
7. ஏஎ + கொற்றா = ஏஎ கொற்றா ×
ஏஎ + கொற்றா = ஏஎக் கொற்றா √ (அல்வழிப் புணர்ச்சி)
8. ஏஎ + சாத்தா= ஏஎ சாத்தா ×
ஏஎ + சாத்தா = ஏஎச் சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)
9. ஏஎ + தேவா = ஏஎ தேவா ×
ஏஎ + தேவா = ஏஎத் தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)
10. ஏஎ + பூதா = ஏஎ பூதா ×
ஏஎ + பூதா = ஏஎப் பூதா √ (அல்வழிப் புணர்ச்சி)
ஏ – வினைச் சொல் ; எ – அளபெடை .
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
உயிர்மயங்கியலில் ‘எ’ , ‘ஒ’ ஈற்றுச் சொற்களைப் பார்த்துவருகிறோம் ! :-
“தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும்
மேற்கூ றியற்கை வல்லெழுத் துமிகா” (உயிர்மயங். 71)
‘தேற்ற எகரமும் ’ – தெளிவுப் பொருளில் வரும் ‘எ’ஈற்று இடைசொல்லும் ,
‘சிறப்பின் ஒவ்வும்’ – சிறப்புப் பொருளில் வரும் ‘ஒ’ ஈற்று இடைச்சொல்லும் ,
‘மேற்கூறு இயற்கை’ – மேலே , முன் சூத்திரத்தில் , கூறப்பட்டது போன்றே வல்லொற்று சந்தியாக வராது !
1. யானேஎ + கொண்டேன் = யானேஎக் கொண்டேன் ×
யானேஎ + கொண்டேன் = யானேஎ கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவன் பெற்றானா இல்லையா என்று ஐயம் வந்து அவனைக் கேட்கும்போது , தெளிவாக , ‘ஐயம் வேண்டாம் நானே (யானேஎ) பெற்றேன்’ எனச் சற்று நீட்டிக் கூறுகிறானல்லவா? இதுதான்
தேற்றப் பொருள் ! இதனைத் தருவதற்காகத்தான் அந்த ‘எ’ !)
2. நீயேஎ + கொண்டாய் = நீயேஎக் கொண்டாய் ×
நீயேஎ + கொண்டாய் = நீயேஎ கொண்டாய் √(அல்வழிப் புணர்ச்சி)
3. அன்னேஎ + கொண்டான் = அவனேஎக் கொண்டான் ×
அவனேஎ + கொண்டான் = அவனேஎ கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
4. ஓஒ + கொண்டேன் = ஓஒக் கொண்டேன் ×
ஓஒ + கொண்டேன் = ஓஒ கொண்டேன் √(அல்வழிப் புணர்ச்சி)
5. ஓஒ + கொண்டாய் = ஓஒக் கொண்டாய் ×
ஓஒ + கொண்டாய் = ஓஒ கொண்டாய் √(அல்வழிப் புணர்ச்சி)
6. ஓஒ + கொண்டான் = ஓஒக் கொண்டான் ×
ஓஒ + கொண்டான் = ஓஒ கொண்டான் √(அல்வழிப் புணர்ச்சி)
ஏ , ஓ – இடைச் சொற்கள் ; ‘யானே’ என்பதில் ‘யான்’ , பெயர்ச்சொல் !
இதன்பின் , இளம்பூரணர் தரும் கூடுதல் இலக்கணத்தை வருமாறு காட்டலாம் !:-
7. ஏஎ + கொற்றா = ஏஎ கொற்றா ×
ஏஎ + கொற்றா = ஏஎக் கொற்றா √ (அல்வழிப் புணர்ச்சி)
8. ஏஎ + சாத்தா= ஏஎ சாத்தா ×
ஏஎ + சாத்தா = ஏஎச் சாத்தா √ (அல்வழிப் புணர்ச்சி)
9. ஏஎ + தேவா = ஏஎ தேவா ×
ஏஎ + தேவா = ஏஎத் தேவா √ (அல்வழிப் புணர்ச்சி)
10. ஏஎ + பூதா = ஏஎ பூதா ×
ஏஎ + பூதா = ஏஎப் பூதா √ (அல்வழிப் புணர்ச்சி)
ஏ – வினைச் சொல் ; எ – அளபெடை .
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (307)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘எ’ ஈறு முடிந்து , இப்போது ‘ஏ’ ஈறு !-
“ஏகார விறுதி யூகார வியற்றே” (உயிர்மயங். 72)
‘ஏகார இறுதி’ – ‘ஏ’ ஈற்றுச் சொல்,
‘ஊகார இயற்றே’ - ‘ஊ’ ஈற்றுச் சொல்போலப் புணரும் !
அஃதாவது –
முன்பு உயிர்மயங்கியல் சூத்திரம் 62இல் , ‘கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது’ என அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததைப் பர்த்தோமல்லவா ? அதுபோல , அல்வழிப்புணர்ச்சியில் , இங்கும் வல்லெழுத்துச் சந்தி வரும் !-
1. சே + கடிது = சே கடிது ×
சே + கடிது = சேக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
2. சே + சிறிது = சே சிறிது ×
சே + சிறிது = சேச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
3. சே + தீது = சே தீது ×
சே + தீது = சேத் தீது √ (அல்வழிப் புணச்சி)
4. சே + பெரிது = சே பெரிது ×
சே + பெரிது = சேப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
5 . ஏ + கடிது = ஏ கடிது ×
ஏ + கடிது = ஏக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏ – அம்பு ; ஏக் கடிது – அம்பானது கடுமையானது)
6 . ஏ + சிறிது = ஏ சிறிது ×
ஏ + சிறிது = ஏச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏச் சிறிது – அம்பானது சிறியது)
7 . ஏ + தீது = ஏ தீது ×
ஏ + தீது = ஏத் தீது √ (அல்வழிப் புணச்சி)
(ஏத் தீது – அம்பானது தீயது)
8 . ஏ + பெரிது = ஏ பெரிது ×
ஏ + பெரிது = ஏப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏப் பெரிது – அம்பானது பெரியது)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘எ’ ஈறு முடிந்து , இப்போது ‘ஏ’ ஈறு !-
“ஏகார விறுதி யூகார வியற்றே” (உயிர்மயங். 72)
‘ஏகார இறுதி’ – ‘ஏ’ ஈற்றுச் சொல்,
‘ஊகார இயற்றே’ - ‘ஊ’ ஈற்றுச் சொல்போலப் புணரும் !
அஃதாவது –
முன்பு உயிர்மயங்கியல் சூத்திரம் 62இல் , ‘கொண்மூ + கடிது = கொண்மூக் கடிது’ என அல்வழிப் புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தி பெற்றுப் புணர்ந்ததைப் பர்த்தோமல்லவா ? அதுபோல , அல்வழிப்புணர்ச்சியில் , இங்கும் வல்லெழுத்துச் சந்தி வரும் !-
1. சே + கடிது = சே கடிது ×
சே + கடிது = சேக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
2. சே + சிறிது = சே சிறிது ×
சே + சிறிது = சேச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
3. சே + தீது = சே தீது ×
சே + தீது = சேத் தீது √ (அல்வழிப் புணச்சி)
4. சே + பெரிது = சே பெரிது ×
சே + பெரிது = சேப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
சே என்ற அழிஞ்சில் பற்றி முன்பே பார்த்துள்ளோம் !
5 . ஏ + கடிது = ஏ கடிது ×
ஏ + கடிது = ஏக் கடிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏ – அம்பு ; ஏக் கடிது – அம்பானது கடுமையானது)
6 . ஏ + சிறிது = ஏ சிறிது ×
ஏ + சிறிது = ஏச் சிறிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏச் சிறிது – அம்பானது சிறியது)
7 . ஏ + தீது = ஏ தீது ×
ஏ + தீது = ஏத் தீது √ (அல்வழிப் புணச்சி)
(ஏத் தீது – அம்பானது தீயது)
8 . ஏ + பெரிது = ஏ பெரிது ×
ஏ + பெரிது = ஏப் பெரிது √ (அல்வழிப் புணச்சி)
(ஏப் பெரிது – அம்பானது பெரியது)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
சிறந்த பதிவு ஐயா
பொது தேர்விற்கு முக்கியமானது
நிதானமாக படித்து புரிந்து கொள்வேன்
சந்தேகம் எழுந்தால் நான் கேட்பதற்கு பதிலளியுங்கள் ஐயா
பொது தேர்விற்கு முக்கியமானது
நிதானமாக படித்து புரிந்து கொள்வேன்
சந்தேகம் எழுந்தால் நான் கேட்பதற்கு பதிலளியுங்கள் ஐயா
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
[You must be registered and logged in to see this image.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (308)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ – இந்த இடைச் சொல் புணரும் வகை தொடர்கிறது ! –
“மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 73)
“மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறைப் பொருளை விடையாகத் தரக்கூடிய, எச்ச இடைச் சொல்லும் ,
‘வினாவும்’ – வினாப்பொருளைத் தரும் இடைச் சொல்லும் ,
‘எண்ணும்’ – எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொல்லும் ,
‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறியதுபோன்ற வல்லெழுத்துச் சந்தி பெறாது புணரும் !
1. யானே + கொண்டேன் = யானேக் கொண்டேன் ×
யானே + கொண்டேன் = யானே கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
(யானே கொண்டேன் ? : ‘யானே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ எதிர்மறை ஏகாரம் ! ‘யான்
கொள்ளவில்லை’ என்ற எதிர்மறை எச்சப் பொருளைதருவது ! இதுவே ‘மாறுகொள் எச்சம்’)
2. யானே + சென்றேன் = யானேச் சென்றேன் ×
யானே + சென்றேன் = யானே சென்றேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
3. யானே + தந்தேன் = யானேத் தந்தேன் ×
யானே + தந்தேன் = யானே தந்தேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
4. யானே + போயினேன் = யானேப் போயினேன் ×
யானே + போயினேன் = யானே போயினேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
5. நீயே + கொண்டாய் = நீயேக் கொண்டாய் ×
நீயே + கொண்டாய் = நீயே கொண்டாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீயே கொண்டாய் ? : ‘நீயே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ வினா ஏகாரம் ! ‘நீதானா
கொண்டது ?’ என்ற வினாப் பொருளைதருவது !)
6. நீயே + சென்றாய் = நீயேச் சென்றாய் ×
நீயே + சென்றாய் = நீயே சென்றாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
7. நீயே + தந்தாய் = நீயேத் தந்தாய் ×
நீயே + தந்தாய் = நீயே தந்தாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
8. நீயே + போயினாய் = நீயேப் போயினாய் ×
நீயே + போயினாய் = நீயே போயினாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
9. கொற்றனே , சாத்தனே , தேவனே , பூதனே – இவ்வாறு அடுக்கிவரும்போது , ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் உள்ள ‘ஏ’ என்பது , எண்ணேகாரம் எனப்படும் !
10. அவனே + கொண்டான் = அவனேக் கொண்டான் ×
அவனே + கொண்டான் = அவனே கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவனே கொண்டான் : ‘அவனே’ என்பதிலுள்ள ‘ஏ’, பிரிநிலை ஏகாரம் ! ‘அவன்தான் ; வேறு எவரும் கொள்ளவில்லை’ என்ற பொருளைத் தருவது ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
11. கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலேப் பாடெழுந் திசைக்கும் ×
கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலே பாடெழுந் திசைக்கும் √ (அல்வழிப் புணர்ச்சி)
(கடலே : இதிலுள்ள ‘ஏ’, பொருளற்ற அசை ; ‘ஈற்றசை’எனப்படும் ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ – இந்த இடைச் சொல் புணரும் வகை தொடர்கிறது ! –
“மாறுகொ ளெச்சமும் வினாவு மெண்ணும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்” (உயிர்மயங். 73)
“மாறுகொள் எச்சமும்’ – எதிர்மறைப் பொருளை விடையாகத் தரக்கூடிய, எச்ச இடைச் சொல்லும் ,
‘வினாவும்’ – வினாப்பொருளைத் தரும் இடைச் சொல்லும் ,
‘எண்ணும்’ – எண்ணுப் பொருளில் வரும் இடைச் சொல்லும் ,
‘கூறிய வல்லெழுத்து இயற்கை ஆகும்’ – முன் நூற்பாவில் கூறியதுபோன்ற வல்லெழுத்துச் சந்தி பெறாது புணரும் !
1. யானே + கொண்டேன் = யானேக் கொண்டேன் ×
யானே + கொண்டேன் = யானே கொண்டேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
(யானே கொண்டேன் ? : ‘யானே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ எதிர்மறை ஏகாரம் ! ‘யான்
கொள்ளவில்லை’ என்ற எதிர்மறை எச்சப் பொருளைதருவது ! இதுவே ‘மாறுகொள் எச்சம்’)
2. யானே + சென்றேன் = யானேச் சென்றேன் ×
யானே + சென்றேன் = யானே சென்றேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
3. யானே + தந்தேன் = யானேத் தந்தேன் ×
யானே + தந்தேன் = யானே தந்தேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
4. யானே + போயினேன் = யானேப் போயினேன் ×
யானே + போயினேன் = யானே போயினேன் √ (அல்வழிப் புணர்ச்சி)
5. நீயே + கொண்டாய் = நீயேக் கொண்டாய் ×
நீயே + கொண்டாய் = நீயே கொண்டாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
(நீயே கொண்டாய் ? : ‘நீயே’ என்பதன் ஈற்றிலுள்ள ‘ஏ’ வினா ஏகாரம் ! ‘நீதானா
கொண்டது ?’ என்ற வினாப் பொருளைதருவது !)
6. நீயே + சென்றாய் = நீயேச் சென்றாய் ×
நீயே + சென்றாய் = நீயே சென்றாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
7. நீயே + தந்தாய் = நீயேத் தந்தாய் ×
நீயே + தந்தாய் = நீயே தந்தாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
8. நீயே + போயினாய் = நீயேப் போயினாய் ×
நீயே + போயினாய் = நீயே போயினாய் √ (அல்வழிப் புணர்ச்சி)
9. கொற்றனே , சாத்தனே , தேவனே , பூதனே – இவ்வாறு அடுக்கிவரும்போது , ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் உள்ள ‘ஏ’ என்பது , எண்ணேகாரம் எனப்படும் !
10. அவனே + கொண்டான் = அவனேக் கொண்டான் ×
அவனே + கொண்டான் = அவனே கொண்டான் √ (அல்வழிப் புணர்ச்சி)
(அவனே கொண்டான் : ‘அவனே’ என்பதிலுள்ள ‘ஏ’, பிரிநிலை ஏகாரம் ! ‘அவன்தான் ; வேறு எவரும் கொள்ளவில்லை’ என்ற பொருளைத் தருவது ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
11. கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலேப் பாடெழுந் திசைக்கும் ×
கடலே + பாடெழுந் திசைக்கும் = கடலே பாடெழுந் திசைக்கும் √ (அல்வழிப் புணர்ச்சி)
(கடலே : இதிலுள்ள ‘ஏ’, பொருளற்ற அசை ; ‘ஈற்றசை’எனப்படும் ! இவ்விளக்கத்தை இளம்பூரணர் உரையால் பெறுகிறோம் !)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (309)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈறு தொடர்கிறது ! –
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 74)
‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும்,
‘அதனோர் அற்றே’ – முன்பு ‘ஊ’ ஈற்றுச் சொல் ,அல்வழியில், வல்லெழுத்துச் சந்தி பெற்றதுபோல இங்கும் வல்லெழுத்துச் சந்தியே பெறும் !
‘கொண்மூ’ என்ற ‘ஊ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , அல்வழியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொல் வந்து புணரும்போது, ‘க்’ பெற்றுக், ‘கொண்மூக் கடிது’ (உயிர்மயங்.62)ஆனதல்லவா? அதே புணர்ச்சிமுறைதான் ‘ஏ’ ஈற்று வேற்றுமைப் புனர்ச்சிக்கும் !
1. வே + குடம் = வேங்குடம் ×
வே + குடம் = வேக்குடம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேக்குடம் – வேதலையுடைய குடம்; பச்சைமண் குடமல்ல , சுட்ட குடம் என்பது பொருள்.)
2. வே + சாடி = வேஞ்சாடி ×
வே + சாடி = வேச்சாடி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேச்சாடி – வேதலையுடைய சாடி)
3. வே + தூதை = வேந்தூதை ×
வே + தூதை = வேத்தூதை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதை – சிறு மண் பாண்டம்;வேத்தூதை – வேதலையுடைய சிறு மண்பாண்டம்)
4. வே + பானை = வேம்பானை ×
வே + பானை = வேப்பானை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேப்பானை – வேதலையுடைய பானை)
5. ஏ + கடுமை = ஏகடுமை ×
ஏ+ கடுமை = ஏக்கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏக்கடுமை – அம்பினது கடுமை)
6. ஏ + சிறுமை = ஏசிறுமை ×
ஏ+ சிறுமை = ஏச்சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏச்சிறுமை – அம்பினது சிறுமை)
7. ஏ + தீமை = ஏதீமை ×
ஏ+ தீமை = ஏத்தீமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏத்தீமை – அம்பினது தீமை)
8. ஏ + பெருமை = ஏபெருமை ×
ஏ+ பெருமை = ஏப்பெருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏப்பெருமை – அம்பினது பெருமை)
மேல் இளம்பூரணர் எடுத்துக்காட்டில் , ‘சாடி’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
ஆம் ! ‘சாடி’ தமிழ்ச் சொல்தான் ! வடசொல் அல்ல ! ‘ஜாடி’ என்று ஒலி மாற்றம்
பெற்றது ; அவ்வளவுதன் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈறு தொடர்கிறது ! –
“வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே” (உயிர்மயங். 74)
‘வேற்றுமைக் கண்ணும்’ – வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும்,
‘அதனோர் அற்றே’ – முன்பு ‘ஊ’ ஈற்றுச் சொல் ,அல்வழியில், வல்லெழுத்துச் சந்தி பெற்றதுபோல இங்கும் வல்லெழுத்துச் சந்தியே பெறும் !
‘கொண்மூ’ என்ற ‘ஊ’ ஈற்றுப் பெயர்ச்சொல் , அல்வழியில் , வல்லெழுத்தை முதலாகக் கொண்ட வருசொல் வந்து புணரும்போது, ‘க்’ பெற்றுக், ‘கொண்மூக் கடிது’ (உயிர்மயங்.62)ஆனதல்லவா? அதே புணர்ச்சிமுறைதான் ‘ஏ’ ஈற்று வேற்றுமைப் புனர்ச்சிக்கும் !
1. வே + குடம் = வேங்குடம் ×
வே + குடம் = வேக்குடம் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேக்குடம் – வேதலையுடைய குடம்; பச்சைமண் குடமல்ல , சுட்ட குடம் என்பது பொருள்.)
2. வே + சாடி = வேஞ்சாடி ×
வே + சாடி = வேச்சாடி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேச்சாடி – வேதலையுடைய சாடி)
3. வே + தூதை = வேந்தூதை ×
வே + தூதை = வேத்தூதை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(தூதை – சிறு மண் பாண்டம்;வேத்தூதை – வேதலையுடைய சிறு மண்பாண்டம்)
4. வே + பானை = வேம்பானை ×
வே + பானை = வேப்பானை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(வேப்பானை – வேதலையுடைய பானை)
5. ஏ + கடுமை = ஏகடுமை ×
ஏ+ கடுமை = ஏக்கடுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏக்கடுமை – அம்பினது கடுமை)
6. ஏ + சிறுமை = ஏசிறுமை ×
ஏ+ சிறுமை = ஏச்சிறுமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏச்சிறுமை – அம்பினது சிறுமை)
7. ஏ + தீமை = ஏதீமை ×
ஏ+ தீமை = ஏத்தீமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏத்தீமை – அம்பினது தீமை)
8. ஏ + பெருமை = ஏபெருமை ×
ஏ+ பெருமை = ஏப்பெருமை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏப்பெருமை – அம்பினது பெருமை)
மேல் இளம்பூரணர் எடுத்துக்காட்டில் , ‘சாடி’ என்ற சொல் வந்ததைக் கவனியுங்கள் !
ஆம் ! ‘சாடி’ தமிழ்ச் சொல்தான் ! வடசொல் அல்ல ! ‘ஜாடி’ என்று ஒலி மாற்றம்
பெற்றது ; அவ்வளவுதன் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (310)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈற்றுச் சொல் , வேற்றுமையில் , வல்லொற்றுப் பெற்றுப் முடிவதைச் சற்றுமுன் பார்த்தோம் !
அந்த விதிக்குச் சிறப்பு விதியை அடுத்து நுவல்கிறார்! –
“ஏயெ னிறுதிக் கெகரம் வருமே” (உயிர்மயங். 75)
‘ஏ என் இறுதிக்கு’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு
‘எகரம் வருமே’ – புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தியுடன் ‘எ’ என்ற எழுத்தும் தோன்றும் !
1. ஏ + கொட்டில் = ஏக்கொட்டில் ×
ஏ + கொட்டில் = ஏஎக்கொட்டில் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎக்கொட்டில் – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
2. ஏ + சாலை = ஏச்சாலை ×
ஏ + சாலை = ஏஎச்சாலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎச்சாலை – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
3. ஏ + துளை = ஏத்துளை ×
ஏ + துளை = ஏஎத்துளை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎத்துளை – அம்பினால் ஏற்பட்ட துளை)
4. ஏ + புழை = ஏப்புழை ×
ஏ + புழை = ஏஎப்புழை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎப்புழை – அம்பு ஏற்படுத்திய துளை)
நச்சினார்க்கினியர் உரைப்படிக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளையும் தரலாம் !-
5. ஏ + நெகிழ்ச்சி = ஏநெகிழ்ச்சி ×
ஏ + நெகிழ்ச்சி = ஏஎநெகிழ்ச்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎநெகிழ்ச்சி – அம்பின் நெகிழ்ச்சி)
6. ஏ + நேர்மை = ஏநேர்மை ×
ஏ + நேர்மை = ஏஎநேர்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏநேர்மை – அம்பின் நேரிய தன்மை)
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ஏ’ ஈற்றுச் சொல் , வேற்றுமையில் , வல்லொற்றுப் பெற்றுப் முடிவதைச் சற்றுமுன் பார்த்தோம் !
அந்த விதிக்குச் சிறப்பு விதியை அடுத்து நுவல்கிறார்! –
“ஏயெ னிறுதிக் கெகரம் வருமே” (உயிர்மயங். 75)
‘ஏ என் இறுதிக்கு’ – ‘ஏ’ ஈற்றுப் பெயர்ச்சொற்களுக்கு
‘எகரம் வருமே’ – புணர்ச்சியில் , வல்லெழுத்துச் சந்தியுடன் ‘எ’ என்ற எழுத்தும் தோன்றும் !
1. ஏ + கொட்டில் = ஏக்கொட்டில் ×
ஏ + கொட்டில் = ஏஎக்கொட்டில் √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎக்கொட்டில் – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
2. ஏ + சாலை = ஏச்சாலை ×
ஏ + சாலை = ஏஎச்சாலை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎச்சாலை – அம்புகளை வைத்திருக்கும் வில்வித்தை பயிற்றும் இடம்)
3. ஏ + துளை = ஏத்துளை ×
ஏ + துளை = ஏஎத்துளை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎத்துளை – அம்பினால் ஏற்பட்ட துளை)
4. ஏ + புழை = ஏப்புழை ×
ஏ + புழை = ஏஎப்புழை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎப்புழை – அம்பு ஏற்படுத்திய துளை)
நச்சினார்க்கினியர் உரைப்படிக் கீழ்வரும் எடுத்துக்காட்டுகளையும் தரலாம் !-
5. ஏ + நெகிழ்ச்சி = ஏநெகிழ்ச்சி ×
ஏ + நெகிழ்ச்சி = ஏஎநெகிழ்ச்சி √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏஎநெகிழ்ச்சி – அம்பின் நெகிழ்ச்சி)
6. ஏ + நேர்மை = ஏநேர்மை ×
ஏ + நேர்மை = ஏஎநேர்மை √ (வேற்றுமைப் புணர்ச்சி)
(ஏநேர்மை – அம்பின் நேரிய தன்மை)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 38 of 84 • 1 ... 20 ... 37, 38, 39 ... 61 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 38 of 84
|
|