புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm
» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm
» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm
» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm
» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 47 of 84 •
Page 47 of 84 • 1 ... 25 ... 46, 47, 48 ... 65 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (359)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபின் சென்ற நூற்பாவில் (8) , ‘ஆ’வுக்கு அளபெடை எழுத்து ‘அ’ என்றும் , ‘ஈ’ க்கு அளபெடை எழுத்து ‘இ’ என்றும் பார்த்தோம் !
அப்படியானால் , ‘ஐ’ , ‘ஔ’ ஆகியவற்றுக்கு ?
தொல்காப்பியரின் விடை ! –
“ஐஔ வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும் !” (மொழி. 9)
இதன்படி-
‘ஐ’க்கு அளபெடை எழுத்து – ‘இ’ !
‘ஔ’வுக்கு அளபெடை எழுத்து – ‘உ’ !
இந் நூற்பாவிற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! –
1 . ஐஇ
‘ஐ ’க்கு அளபெடை எழுத்தாக ‘இ’!
‘ஐ’ என்ற எழுத்தையும் ‘இ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஐ’க்கு இன எழுத்து ‘இ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !
2. ஔஉ
‘ஔ ’வுக்கு அளபெடை எழுத்தாக ‘உ’!
‘ஔ’ என்ற எழுத்தையும் ‘உ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஔ’க்கு இன எழுத்து ‘உ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !
‘காரிகை’ என்பதைக் கூத்துக் கலைஞர் ‘காரிகைஇ இ இ இ’ என்று காதைப் பொத்திக்கொண்டு நீட்டுவார் ! அப்போது ஆர்மோனியக்காரக் மேசை மீது ஏறிக்கொண்டு ஆர்மோனியப்பெட்டிக் கட்டைகளை அழுத்து அழுத்து என்று அழுத்துவார் !
அதே கலைஞர் , ‘கௌமாரி’ என்பதைக் ‘கௌஉ உ உ உ உ மாரி’ என்பார் !
இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் இன உயிர்கள் , ஓசையைக் கூட்டுவதற்காக , அளபெடை எழுத்துகளாக வந்துள்ளதைக் காண்க !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழிமரபின் சென்ற நூற்பாவில் (8) , ‘ஆ’வுக்கு அளபெடை எழுத்து ‘அ’ என்றும் , ‘ஈ’ க்கு அளபெடை எழுத்து ‘இ’ என்றும் பார்த்தோம் !
அப்படியானால் , ‘ஐ’ , ‘ஔ’ ஆகியவற்றுக்கு ?
தொல்காப்பியரின் விடை ! –
“ஐஔ வென்னு மாயீ ரெழுத்திற்
கிகர வுகர மிசைநிறை வாகும் !” (மொழி. 9)
இதன்படி-
‘ஐ’க்கு அளபெடை எழுத்து – ‘இ’ !
‘ஔ’வுக்கு அளபெடை எழுத்து – ‘உ’ !
இந் நூற்பாவிற்கு இளம்பூரணரின் எடுத்துக்காட்டுகளை வருமாறு தரலாம் ! –
1 . ஐஇ
‘ஐ ’க்கு அளபெடை எழுத்தாக ‘இ’!
‘ஐ’ என்ற எழுத்தையும் ‘இ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஐ’க்கு இன எழுத்து ‘இ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !
2. ஔஉ
‘ஔ ’வுக்கு அளபெடை எழுத்தாக ‘உ’!
‘ஔ’ என்ற எழுத்தையும் ‘உ’ என்ற எழுத்தையும் உச்சரித்துப் பாருங்கள் ! ‘ஔ’க்கு இன எழுத்து ‘உ’ என்பது சரிதான் என்பது விளங்கும் !
‘காரிகை’ என்பதைக் கூத்துக் கலைஞர் ‘காரிகைஇ இ இ இ’ என்று காதைப் பொத்திக்கொண்டு நீட்டுவார் ! அப்போது ஆர்மோனியக்காரக் மேசை மீது ஏறிக்கொண்டு ஆர்மோனியப்பெட்டிக் கட்டைகளை அழுத்து அழுத்து என்று அழுத்துவார் !
அதே கலைஞர் , ‘கௌமாரி’ என்பதைக் ‘கௌஉ உ உ உ உ மாரி’ என்பார் !
இந்த இரு எடுத்துக்காட்டுகளிலும் இன உயிர்கள் , ஓசையைக் கூட்டுவதற்காக , அளபெடை எழுத்துகளாக வந்துள்ளதைக் காண்க !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (360)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓரெழுத்து ஒருமொழி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இதைப் பற்றியதுதான் கீழ்வரும் நூற்பா ! –
“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி !” (மொழி. 10)
இதனை மேலோட்டமாகப் பார்க்கும்போது , ஏழு நெடில் எழுத்துகள் மட்டுமே ‘ஓரெழுத்து ஒருமொழி ’ என்று கூறத் தக்கவை என்று பொருள் ஆகிறது !
அப்படியானால் தமிழில் மொத்தமே 7 ஓரெழுத் தொருமொழிகள்தாமா உள்ளன?
நாம் ‘மேலோட்டமாகப்’ பார்த்ததில் ஏதோ பிழை உள்ளது என்று தோன்றுகிறது ; இல்லையா?
என் கையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் நூற்பாவை ஆய்வோம் !
‘நெட்டெழுத்து ஏழே’ – ஏழு நெடில் உயிர்கள் மட்டுமே ,
‘ஓரெழுத்து ஒருமொழி’ – ஓர் எழுத்தால் அமையும் சொல்லாகும் !
இப்போதும் தெளிவில்ல!
இளம்பூரணர், “ ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என வரும் ” என்று உரை எழுதுகிறார் !
நெடில் ஏழு யாவை என்பதுதான் நமக்குத் தெரியுமே ?
எனவே இபோதும் தெளிவில்லை !
இளம்பூரணர் உரையைப் பின் தொடர்வோம் !
“இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது ” என்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , ‘நெட்டேழுத்து ஏழு’ என்பதை , மெய்மீது ஏறிய 7 நெடில்கள் என்றும் பொருள் கொள்ளவேண்டும் ! ‘உயிர் மெய்க்கும் பொது’ என இளம்பூரணர் சொன்னதன் பொருள் இதுதான் !
இப்போது தெளிவு பிறக்கிறது !
அஃதாவது-
1 .ஆ – இஃது ஓரெழுத்து ஒருமொழிதான் ! தனி நெடிலாக நின்று ஒரு மொழி (சொல்) ஆகிறது ! ஆ = பசு .
இனி இந்த உயிர் ஏறிய சொல்லைப் பார்ப்போம் !
க் + ஆ = கா
கா – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! கா= சோலை
இப்போது இளம்பூரணர் உரை நமக்குத் தெளிவாகி விட்டதல்லவா?
2 . ஈ – ஓரெழுத்து ஒருமொழி ! ஈ = பறக்கும் ஈ.
த் + ஈ = தீ
தீ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! தீ = நெருப்பு
3. ஊ - ஓரெழுத்து ஒருமொழி ! ஊ = தசை
ப் + ஊ = பூ
பூ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! பூ = ஏமாந்தவர் காதில் சுற்றுவது!
4. ஏ – ஓரெழுத்து ஒருமொழி ! ஏ = அம்பு
ந் + ஏ = நே
நே – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! நே = அன்பு
5 . ஓ – ஓரெழுத்து ஒருமொழி ! ஓ = மதகு நீர் தாங்கும் பலகை
ச் + ஓ = சோ
சோ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! சோ = அரண்
6 . ஔ – ஓரெழுத்து ஒருமொழி அல்ல !
இளம்பூரணர் எழுதுகிறார் – “ஔகாரத்தில் உயிர் மெய்யையே கொள்க !”
ஔ எனும் நெடில் உயிரைப் பொறுத்தவரையில் , தனி ‘ஔ’ ஆக நின்று ஒரு தனிச்சொல்லாக அமைவது இல்லை ! மெய்யோடு சேர்ந்துதான் தனிச்சொல்லாக- ஓரெழுத்து ஒருமொழியாக - வரும் !
க் + ஔ = கௌ
கௌ – ஓரெழுத்து ஒருமொழி ! கௌ = கொள்ளு (Horsegram)
மேலே காட்டிய இந்த ஓரெழுத்து ஒருமொழிகள்தாம் தமிழின் மொத்த ஓரெழுத்து ஒருமொழிகள் என எடுத்துக்கொள்ளவேண்டாம் ! வேறு பலவும் உள !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஓரெழுத்து ஒருமொழி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இதைப் பற்றியதுதான் கீழ்வரும் நூற்பா ! –
“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி !” (மொழி. 10)
இதனை மேலோட்டமாகப் பார்க்கும்போது , ஏழு நெடில் எழுத்துகள் மட்டுமே ‘ஓரெழுத்து ஒருமொழி ’ என்று கூறத் தக்கவை என்று பொருள் ஆகிறது !
அப்படியானால் தமிழில் மொத்தமே 7 ஓரெழுத் தொருமொழிகள்தாமா உள்ளன?
நாம் ‘மேலோட்டமாகப்’ பார்த்ததில் ஏதோ பிழை உள்ளது என்று தோன்றுகிறது ; இல்லையா?
என் கையைப் பிடித்துக்கொண்டு வாருங்கள் நூற்பாவை ஆய்வோம் !
‘நெட்டெழுத்து ஏழே’ – ஏழு நெடில் உயிர்கள் மட்டுமே ,
‘ஓரெழுத்து ஒருமொழி’ – ஓர் எழுத்தால் அமையும் சொல்லாகும் !
இப்போதும் தெளிவில்ல!
இளம்பூரணர், “ ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என வரும் ” என்று உரை எழுதுகிறார் !
நெடில் ஏழு யாவை என்பதுதான் நமக்குத் தெரியுமே ?
எனவே இபோதும் தெளிவில்லை !
இளம்பூரணர் உரையைப் பின் தொடர்வோம் !
“இதுவும் உயிர்க்கும் உயிர்மெய்க்கும் பொது ” என்கிறார் இளம்பூரணர் !
அஃதாவது , ‘நெட்டேழுத்து ஏழு’ என்பதை , மெய்மீது ஏறிய 7 நெடில்கள் என்றும் பொருள் கொள்ளவேண்டும் ! ‘உயிர் மெய்க்கும் பொது’ என இளம்பூரணர் சொன்னதன் பொருள் இதுதான் !
இப்போது தெளிவு பிறக்கிறது !
அஃதாவது-
1 .ஆ – இஃது ஓரெழுத்து ஒருமொழிதான் ! தனி நெடிலாக நின்று ஒரு மொழி (சொல்) ஆகிறது ! ஆ = பசு .
இனி இந்த உயிர் ஏறிய சொல்லைப் பார்ப்போம் !
க் + ஆ = கா
கா – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! கா= சோலை
இப்போது இளம்பூரணர் உரை நமக்குத் தெளிவாகி விட்டதல்லவா?
2 . ஈ – ஓரெழுத்து ஒருமொழி ! ஈ = பறக்கும் ஈ.
த் + ஈ = தீ
தீ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! தீ = நெருப்பு
3. ஊ - ஓரெழுத்து ஒருமொழி ! ஊ = தசை
ப் + ஊ = பூ
பூ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! பூ = ஏமாந்தவர் காதில் சுற்றுவது!
4. ஏ – ஓரெழுத்து ஒருமொழி ! ஏ = அம்பு
ந் + ஏ = நே
நே – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! நே = அன்பு
5 . ஓ – ஓரெழுத்து ஒருமொழி ! ஓ = மதகு நீர் தாங்கும் பலகை
ச் + ஓ = சோ
சோ – இதுவும் ஓரெழுத்து ஒருமொழிதான் ! சோ = அரண்
6 . ஔ – ஓரெழுத்து ஒருமொழி அல்ல !
இளம்பூரணர் எழுதுகிறார் – “ஔகாரத்தில் உயிர் மெய்யையே கொள்க !”
ஔ எனும் நெடில் உயிரைப் பொறுத்தவரையில் , தனி ‘ஔ’ ஆக நின்று ஒரு தனிச்சொல்லாக அமைவது இல்லை ! மெய்யோடு சேர்ந்துதான் தனிச்சொல்லாக- ஓரெழுத்து ஒருமொழியாக - வரும் !
க் + ஔ = கௌ
கௌ – ஓரெழுத்து ஒருமொழி ! கௌ = கொள்ளு (Horsegram)
மேலே காட்டிய இந்த ஓரெழுத்து ஒருமொழிகள்தாம் தமிழின் மொத்த ஓரெழுத்து ஒருமொழிகள் என எடுத்துக்கொள்ளவேண்டாம் ! வேறு பலவும் உள !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
நன்றி அய்யாசாமி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (361)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முன் ஆய்வில் ஏழு நெடில்களுகும் ஓரெழுத்து ஒருமொழிக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தோம் !
அப்படியானால் ஐந்து குறில் உயிர்கள்?
அது பற்றியதுதான் இந்த நூற்பா! –
“குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே” (மொழி. 11)
‘குற்றெழுத்து ஐந்தும் ’ – அ , இ , உ , எ , ஒ ஆகிய ஐந்தும் ,
‘மொழிநிறைபு இலவே’ – தனித்து நின்று ஓரெழுத்து ஒருமொழி ஆவதில்லை !
இங்கு இளம்பூரணர் ஒரு தெளிவைத் தருகிறார் !
அ , இ , உ , எ – ஆகிய நான்கும் சுட்டெழுத்தாகவும் வினா எழுத்தாகவும் தனித்து நின்று பொருள் தருமே என்றால் , இந்த நான்கும் ‘இடைச்சொல்’ என்ற பிரிவிலேதான் வருமே அல்லாது , ‘சொல்’ என்ற வகையில் அடங்காது என விளக்குகிறார் இளம்பூரணர்!
ஒ – சுட்டெழுத்தாகவோ வினா எழுத்தாக வோ தனித்து வருதல் இல்லை !
ஆனால் ‘உ’ , ‘ஒ’ ஆகிய குறில் உயிர்கள் , மெய்மீது ஏறி , ஓரெழுத்து ஒருமொழி ஆவது உண்டு என்கிறார் இளம்பூரணர் !
இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . து
த் + உ = து ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
து = உணவு
து – பெயர்ச் சொல்
2 . நொ
ந் + ஒ = நொ ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
நொ = துன்பம்
நொ – பெயர்ச் சொல்
தொல்காப்பிய நூற்பாவை மீண்டும் பாருங்கள் !
ஐந்து குறில்கள் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமாட்டா என்ற செய்திதானே உள்ளது ?
பின்னர் எப்படி இளம்பூரணர் ‘து’ , ‘நொ’ ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகளைக் காட்டினார் ?
இங்கேதான் நாம் தொல்காப்பியத்தைப் படிக்கும் நுட்பத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் ! அது தான் ‘தொல்காப்பிய நடை’!
தொல்காப்பிய நூற்பாவின் நடையை வைத்துத்தான் இளம்பூரணரால் , சில குறில்களும் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமுடியும் என்று உரை எழுத முடிந்தது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
முன் ஆய்வில் ஏழு நெடில்களுகும் ஓரெழுத்து ஒருமொழிக்கும் உள்ள தொடர்பைப் பார்த்தோம் !
அப்படியானால் ஐந்து குறில் உயிர்கள்?
அது பற்றியதுதான் இந்த நூற்பா! –
“குற்றெழுத் தைந்து மொழிநிறை பிலவே” (மொழி. 11)
‘குற்றெழுத்து ஐந்தும் ’ – அ , இ , உ , எ , ஒ ஆகிய ஐந்தும் ,
‘மொழிநிறைபு இலவே’ – தனித்து நின்று ஓரெழுத்து ஒருமொழி ஆவதில்லை !
இங்கு இளம்பூரணர் ஒரு தெளிவைத் தருகிறார் !
அ , இ , உ , எ – ஆகிய நான்கும் சுட்டெழுத்தாகவும் வினா எழுத்தாகவும் தனித்து நின்று பொருள் தருமே என்றால் , இந்த நான்கும் ‘இடைச்சொல்’ என்ற பிரிவிலேதான் வருமே அல்லாது , ‘சொல்’ என்ற வகையில் அடங்காது என விளக்குகிறார் இளம்பூரணர்!
ஒ – சுட்டெழுத்தாகவோ வினா எழுத்தாக வோ தனித்து வருதல் இல்லை !
ஆனால் ‘உ’ , ‘ஒ’ ஆகிய குறில் உயிர்கள் , மெய்மீது ஏறி , ஓரெழுத்து ஒருமொழி ஆவது உண்டு என்கிறார் இளம்பூரணர் !
இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் –
1 . து
த் + உ = து ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
து = உணவு
து – பெயர்ச் சொல்
2 . நொ
ந் + ஒ = நொ ; இஃது ஓரெழுத்து ஒருமொழி !
நொ = துன்பம்
நொ – பெயர்ச் சொல்
தொல்காப்பிய நூற்பாவை மீண்டும் பாருங்கள் !
ஐந்து குறில்கள் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமாட்டா என்ற செய்திதானே உள்ளது ?
பின்னர் எப்படி இளம்பூரணர் ‘து’ , ‘நொ’ ஆகிய ஓரெழுத்து ஒருமொழிகளைக் காட்டினார் ?
இங்கேதான் நாம் தொல்காப்பியத்தைப் படிக்கும் நுட்பத்தைப் புரிந்துகொள்ளவேண்டும் ! அது தான் ‘தொல்காப்பிய நடை’!
தொல்காப்பிய நூற்பாவின் நடையை வைத்துத்தான் இளம்பூரணரால் , சில குறில்களும் ஓரெழுத்து ஒருமொழிகளைத் தரமுடியும் என்று உரை எழுத முடிந்தது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (362)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களை ‘மொழி’ நோக்கில் 3 வகைகளாகப் பகுக்கிறார் ! –
1 . ஓரெழுத்து ஒருமொழி
2 . ஈரெழுத்து ஒருமொழி
3 . இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி
இவற்றுக்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் வருமாறு –
1 . ஓரெழுத்து ஒருமொழி : ‘ஆ’ போல்வன ; ஆ = பசு
2. ஈரெழுத்து ஒருமொழி : ‘மணி’ போல்வன; மணி = ‘டாண்’ணு பொருள் சொல்லிவிடுவீர்கள்!
3. தொடர்மொழி :
i. ‘வரகு ’ போல்வன ; வரகு = தானியங்களில் ஒன்று (Common millet)
ii. ‘கொற்றன்’ போல்வன ; கொற்றன் – இயற்பெயர்
‘கொற்றன்’ என்ற சொல்லில் ஒற்றெழுத்துகளை நீக்கிவிட்டால் நிற்பவை இரு எழுத்துகளே ! சொற்களில் எழுத்தை எண்ணும்போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்க்கக் கூடாது எனில் , ’ஈரெழுத்து ஒருமொழிக்கு அல்லவா எடுத்துக்காட்டாக அமையும் ? ஆனால் இளம்பூரணர் ‘இரண்டு எழுத்துகளைவிடக் கூடுதலான எழுத்துக்களல் அமைந்த தொடர்மொழி’க்கு அல்லவா ‘கொற்றனை’ நிறுத்தியுள்ளார் !
எனவே இளம்பூரணர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் !
ஆனால் நச்சர் இதில் மாறுபடுகிறார் !
நச்சர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் குற்றியலுகரத்தையும் கணக்கில் கொள்ளக்கூடாது !
நச்சினார்க்கினியரின் உரைப்படி-
1 . ஆ , கா , நா – ஓரெழுத்து ஒருமொழிகள்.
2 .மணி , வரகு , கொற்றன் – ஈரெழுத்து ஒருமொழிகள்.
(வரகு என்பதன் ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாக இருப்பதால் நச்சர் ‘கு’வைக் கணக்கில் கொள்ளவில்லை ! )
3. குரவு , அரவு – மூவெழுத்து ஒருமொழிகள் !
( ‘வு’ , குற்றியலுகரமல்ல என்பதால் நச்சர் அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார் !)
4. கணவிரி – நாலெழுத்து ஒருமொழி .
(கணவிரி =- செவ்வலரி)
5 . அகத்தியனார் – ஐந்தெழுத்து ஒரு மொழி.
(இரு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . திருச்சிற்றம்பலம் – ஆறெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . பெரும்பற்றப் புலியூர் – ஏழெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
நச்சர் கூறிய ‘ஒற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம்’ என்பது யாப்பில் பொருந்துவது !
எனவே,
நாம் மேலே பார்த்த இளம்பூரணர் உரையே சிறந்ததாகக் காணப்படுகிறது !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களை ‘மொழி’ நோக்கில் 3 வகைகளாகப் பகுக்கிறார் ! –
1 . ஓரெழுத்து ஒருமொழி
2 . ஈரெழுத்து ஒருமொழி
3 . இரண்டுக்கும் மேற்பட்ட எழுத்துகளால் ஆன தொடர்மொழி
இவற்றுக்கு இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் வருமாறு –
1 . ஓரெழுத்து ஒருமொழி : ‘ஆ’ போல்வன ; ஆ = பசு
2. ஈரெழுத்து ஒருமொழி : ‘மணி’ போல்வன; மணி = ‘டாண்’ணு பொருள் சொல்லிவிடுவீர்கள்!
3. தொடர்மொழி :
i. ‘வரகு ’ போல்வன ; வரகு = தானியங்களில் ஒன்று (Common millet)
ii. ‘கொற்றன்’ போல்வன ; கொற்றன் – இயற்பெயர்
‘கொற்றன்’ என்ற சொல்லில் ஒற்றெழுத்துகளை நீக்கிவிட்டால் நிற்பவை இரு எழுத்துகளே ! சொற்களில் எழுத்தை எண்ணும்போது மெய்யெழுத்துகளைக் கணக்கில் சேர்க்கக் கூடாது எனில் , ’ஈரெழுத்து ஒருமொழிக்கு அல்லவா எடுத்துக்காட்டாக அமையும் ? ஆனால் இளம்பூரணர் ‘இரண்டு எழுத்துகளைவிடக் கூடுதலான எழுத்துக்களல் அமைந்த தொடர்மொழி’க்கு அல்லவா ‘கொற்றனை’ நிறுத்தியுள்ளார் !
எனவே இளம்பூரணர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் !
ஆனால் நச்சர் இதில் மாறுபடுகிறார் !
நச்சர் கருத்துப்படிச் சொற்களில் எழுத்தை எண்ணும் போது ஒற்றெழுத்தையும் குற்றியலுகரத்தையும் கணக்கில் கொள்ளக்கூடாது !
நச்சினார்க்கினியரின் உரைப்படி-
1 . ஆ , கா , நா – ஓரெழுத்து ஒருமொழிகள்.
2 .மணி , வரகு , கொற்றன் – ஈரெழுத்து ஒருமொழிகள்.
(வரகு என்பதன் ஈற்றெழுத்துக் குற்றியலுகரமாக இருப்பதால் நச்சர் ‘கு’வைக் கணக்கில் கொள்ளவில்லை ! )
3. குரவு , அரவு – மூவெழுத்து ஒருமொழிகள் !
( ‘வு’ , குற்றியலுகரமல்ல என்பதால் நச்சர் அதனைக் கணக்கில் சேர்த்துக்கொண்டார் !)
4. கணவிரி – நாலெழுத்து ஒருமொழி .
(கணவிரி =- செவ்வலரி)
5 . அகத்தியனார் – ஐந்தெழுத்து ஒரு மொழி.
(இரு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . திருச்சிற்றம்பலம் – ஆறெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
6 . பெரும்பற்றப் புலியூர் – ஏழெழுத்து ஒரு மொழி.
(நான்கு மெய்யெழுத்துகளையும் கணக்கில் எடுக்காமல் ஒதுக்கிவிட்டார் நச்சர் என்பதைக் கவனிக்க !)
நச்சர் கூறிய ‘ஒற்றைக் கணக்கில் எடுக்கவேண்டாம்’ என்பது யாப்பில் பொருந்துவது !
எனவே,
நாம் மேலே பார்த்த இளம்பூரணர் உரையே சிறந்ததாகக் காணப்படுகிறது !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (363)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்தது-
“மெய்யி னியக்க மகரமொடு சிவணும்” (மொழி. 13)
மெய்யெழுத்தானது இயங்வேண்டும் என்றால் ‘அ’ தேவை! – இப்படித்தானே பொருள் வருகிறது ?
அப்படியானால் ‘இ’யுடன் சேர்ந்து ‘கி’ ஆகிறதே அது? அதுவும் இயக்கம் தானே ?
எனவே நாம் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது !
இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –
“ ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் என வரும் ” .
இதுதான் இளம்பூரணர் சொன்னது !
‘ட ற ல ள’ போன்ற மெய்களைச் சுட்டிக்காட்டத்தான் நமக்கு ‘அ’ தேவைப் படுகிறது ! இளம்பூரணர் உரை இதைத்தன் கூறுகிறது !
அஃதாவது ‘ட் எனும் புள்ளி எழுத்து ’ என்று கூறுவது அந்நாளில் மரபில்லை !
‘ட எனும் புள்ளி’ என்றுதான் கூறுவர் !
இன்றுகூட , ‘டகர மெய்’ என்று நாம் எழுதுவதைக் கவனிக்க ! ‘ட’ என வந்துவிட்டாலே , ‘ட்’டுடன் ‘அ’ சேர்கிறது என்பதைத்தானே குறிக்கிறது?
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்தது-
“மெய்யி னியக்க மகரமொடு சிவணும்” (மொழி. 13)
மெய்யெழுத்தானது இயங்வேண்டும் என்றால் ‘அ’ தேவை! – இப்படித்தானே பொருள் வருகிறது ?
அப்படியானால் ‘இ’யுடன் சேர்ந்து ‘கி’ ஆகிறதே அது? அதுவும் இயக்கம் தானே ?
எனவே நாம் பொருள் கொண்டதில் ஏதோ தவறு இருக்கிறது !
இளம்பூரணர் எடுத்துக்காட்டைப் பார்ப்போம் ! –
“ ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் என வரும் ” .
இதுதான் இளம்பூரணர் சொன்னது !
‘ட ற ல ள’ போன்ற மெய்களைச் சுட்டிக்காட்டத்தான் நமக்கு ‘அ’ தேவைப் படுகிறது ! இளம்பூரணர் உரை இதைத்தன் கூறுகிறது !
அஃதாவது ‘ட் எனும் புள்ளி எழுத்து ’ என்று கூறுவது அந்நாளில் மரபில்லை !
‘ட எனும் புள்ளி’ என்றுதான் கூறுவர் !
இன்றுகூட , ‘டகர மெய்’ என்று நாம் எழுதுவதைக் கவனிக்க ! ‘ட’ என வந்துவிட்டாலே , ‘ட்’டுடன் ‘அ’ சேர்கிறது என்பதைத்தானே குறிக்கிறது?
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- monikaa sriபண்பாளர்
- பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015
தொடத் தொடத் தொல்காப்பியம் அருமை!
தொடத் தொடத் தொல்காப்பியம் (364)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்த நூற்பா !: -
“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை” (மொழி. 14)
’ எல்லா எழுத்தும்’ – எல்லா மெய்யெழுத்துகளையும்,
‘தம்மியல் கிளப்பின்’ – குறிப்பிட வேண்டுமாயின்,
‘மெய்ந்நிலை மயக்கம் ’ – மெய்யாகவோ உயிர் மெய்யாகவோ குறிப்பிடலாம் ;
‘மானம் இல்லை’ – அதில் ஒன்றும் தவறில்லை !
‘இடையெழுத் தென்ப யரல வழள’ – இஃது இலக்கணம் .
இவை, ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய மெய்களைத்தான் குறிக்கின்றன ; ஆனாலும் ’ யரல வழள’ என்ற உயிர் மெய்களால் அந்த மெய்கள் சுட்டப்படுகின்றன !
இவ்வாறு சொல்லலாம் என்பதுதான் தொல்காப்பியரின் மேலை விதி !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
மொழி மரபில் அடுத்த நூற்பா !: -
“தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும்
மெய்ந்நிலை மயக்கம் மானம் இல்லை” (மொழி. 14)
’ எல்லா எழுத்தும்’ – எல்லா மெய்யெழுத்துகளையும்,
‘தம்மியல் கிளப்பின்’ – குறிப்பிட வேண்டுமாயின்,
‘மெய்ந்நிலை மயக்கம் ’ – மெய்யாகவோ உயிர் மெய்யாகவோ குறிப்பிடலாம் ;
‘மானம் இல்லை’ – அதில் ஒன்றும் தவறில்லை !
‘இடையெழுத் தென்ப யரல வழள’ – இஃது இலக்கணம் .
இவை, ய் ர் ல் வ் ழ் ள் ஆகிய மெய்களைத்தான் குறிக்கின்றன ; ஆனாலும் ’ யரல வழள’ என்ற உயிர் மெய்களால் அந்த மெய்கள் சுட்டப்படுகின்றன !
இவ்வாறு சொல்லலாம் என்பதுதான் தொல்காப்பியரின் மேலை விதி !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (365)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் பார்த்தோம் !
அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –
“யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்” (மொழி. 15)
‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்’- ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ – க் ச் த் ப், இவைகளில் ஒன்று அல்லது ங் ஞ் ந் ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
’ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வேய்ச்சிறை
’ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 .வேய்த்தலை
’ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 . வேய்ப்புறம்
’ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . வேய்ங்குறை
’ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
6 . வேய்ஞ்சிறை
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது!
7 . வேய்ந்தலை
’ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
8 . வேய்ம்புறம்
’ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
9 . வேர்க்குறை
’ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
10 . வேர்ச்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது!
11 . வேர்த்தலை
’ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
12 . வேர்ப்புறம்
’ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . வேர்ங்குறை
’ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
14 . வேர்ஞ்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது!
15 . வேர்ந்தலை
’ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . வேர்ம்புறம்
’ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
17 . வீழ்க்குறை
’ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
18 . வீழ்ச்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது!
19 . வீழ்த்தலை
’ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
20 .வீழ்ப்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
21 . வீழ்ங்குறை
’ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
22 . வீழ்ஞ்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது!
23 . வீழ்ந்தலை
’ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
24 . வீழ்ம்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
இனி இதே நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வாய்ச்சி
‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 . பாய்த்தல்
‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 .வாய்ப்பு
‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . பீர்க்கு
‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
6 . தேர்ச்சி
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !
7 . வார்த்தல்
‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
8 . ஆர்ப்பு
‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
9 . வாழ்க்கை
‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
10 .தாழ்ச்சி
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !
11 . தாழ்த்தல்
‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
12 . தாழ்ப்பு
‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . காய்ங்கனி
‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
14 .தேய்ஞ்சது
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !
15 .காய்ந்தனம்
‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . காய்ம்புறம்
‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
17 .நேர்ங்கல்
‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
18 . நேர்ஞ்சிலை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !
19 .நேர்ந்திலை
‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
20 . நேர்ம்புறம்
‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
21 . வாழ்ந்தனம்
‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !
22 . தாழ்ங்குலை
‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
23 . தாழ்ஞ்சினை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !
24 . தாழ்ந்திரள்
‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
25 . வீழ்ம்படை
‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல் ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !
மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து இரு மெய்கள் மயங்கிய சொற்கள் !
அப்படியானால் சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?
இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
2 . அன்னாய்க்கு
இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
ஒரே சொல்லில் இரு மெய்கள் அடுத்தடுத்து வரும் மெய்ம்மயக்கத்தை நூன்மரபில் பார்த்தோம் !
அதன் நீட்சியாக மொழிமரபில் தொல்காப்பியர் உரைப்பது –
“யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்” (மொழி. 15)
‘யரழ என்னும் மூன்றும் முன் ஒற்றக்’- ய் , ர் , ழ் ஆகிய மூன்று மெய்கள் சொற்களில் முதற்கண் நிற்க ,
‘கசதப ஙஞநம ஈரொற்று ஆகும்’ – க் ச் த் ப், இவைகளில் ஒன்று அல்லது ங் ஞ் ந் ம் எனும் இவைகளில் ஒன்று அதன் அருகே நிற்கலாம் !
இளம்பூரணர் எடுத்துக்காட்டை முதலில் பார்போம் ! –
1 . வேய்க்குறை
’ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வேய்ச்சிறை
’ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 .வேய்த்தலை
’ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 . வேய்ப்புறம்
’ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . வேய்ங்குறை
’ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
6 . வேய்ஞ்சிறை
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது!
7 . வேய்ந்தலை
’ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
8 . வேய்ம்புறம்
’ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
9 . வேர்க்குறை
’ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
10 . வேர்ச்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது!
11 . வேர்த்தலை
’ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
12 . வேர்ப்புறம்
’ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . வேர்ங்குறை
’ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
14 . வேர்ஞ்சிறை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது!
15 . வேர்ந்தலை
’ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . வேர்ம்புறம்
’ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
17 . வீழ்க்குறை
’ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
18 . வீழ்ச்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது!
19 . வீழ்த்தலை
’ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
20 .வீழ்ப்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
21 . வீழ்ங்குறை
’ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
22 . வீழ்ஞ்சிறை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது!
23 . வீழ்ந்தலை
’ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
24 . வீழ்ம்புறம்
’ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
இனி இதே நூற்பாவிற்கு நச்சர் தரும் எடுத்துக்காட்டுகளைக் காண்போம் ! –
1 . வேய்க்க
‘ய்’யை அடுத்து ‘க்’ வந்தது !
2 . வாய்ச்சி
‘ய்’யை அடுத்து ‘ச்’ வந்தது !
3 . பாய்த்தல்
‘ய்’யை அடுத்து ‘த்’ வந்தது !
4 .வாய்ப்பு
‘ய்’யை அடுத்து ‘ப்’ வந்தது !
5 . பீர்க்கு
‘ர்’ரை அடுத்து ‘க்’ வந்தது !
6 . தேர்ச்சி
‘ர்’ரை அடுத்து ‘ச்’ வந்தது !
7 . வார்த்தல்
‘ர்’ரை அடுத்து ‘த்’ வந்தது !
8 . ஆர்ப்பு
‘ர்’ரை அடுத்து ‘ப்’ வந்தது !
9 . வாழ்க்கை
‘ழ்’ழை அடுத்து ‘க்’ வந்தது !
10 .தாழ்ச்சி
‘ழ்’ழை அடுத்து ‘ச்’ வந்தது !
11 . தாழ்த்தல்
‘ழ்’ழை அடுத்து ‘த்’ வந்தது !
12 . தாழ்ப்பு
‘ழ்’ழை அடுத்து ‘ப்’ வந்தது !
13 . காய்ங்கனி
‘ய்’யை அடுத்து ‘ங்’ வந்தது !
14 .தேய்ஞ்சது
‘ய்’யை அடுத்து ‘ஞ்’ வந்தது !
15 .காய்ந்தனம்
‘ய்’யை அடுத்து ‘ந்’ வந்தது !
16 . காய்ம்புறம்
‘ய்’யை அடுத்து ‘ம்’ வந்தது !
17 .நேர்ங்கல்
‘ர்’ரை அடுத்து ‘ங்’ வந்தது !
18 . நேர்ஞ்சிலை
‘ர்’ரை அடுத்து ‘ஞ்’ வந்தது !
19 .நேர்ந்திலை
‘ர்’ரை அடுத்து ‘ந்’ வந்தது !
20 . நேர்ம்புறம்
‘ர்’ரை அடுத்து ‘ம்’ வந்தது !
21 . வாழ்ந்தனம்
‘ழை’ அடுத்து ‘ந்’ வந்தது !
22 . தாழ்ங்குலை
‘ழ்’ழை அடுத்து ‘ங்’ வந்தது !
23 . தாழ்ஞ்சினை
‘ழ்’ழை அடுத்து ‘ஞ்’ வந்தது !
24 . தாழ்ந்திரள்
‘ழ்’ழை அடுத்து ‘ந்’ வந்தது !
25 . வீழ்ம்படை
‘ழ்’ழை அடுத்து ‘ம்’ வந்தது !
மேல் எடுத்துக்காட்டுகளில் பெயர்ச்சொல் , வினையாலணையும் பெயர் , வினை முற்று , தொகைச் சொல் ஆகியன வந்துள்ளதைக் கவனிக்க !
மேலை எடுத்துக்காட்டுகள் யாவுமே நெட்டெழுத்தை முதலாகக் கொண்டு அதன்பின் அடுத்தடுத்து இரு மெய்கள் மயங்கிய சொற்கள் !
அப்படியானால் சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகாதா?
இந்த ஐயத்திற்கு விடை கூறுகிறார் நச்சர் ! –
1 . வேந்தர்க்கு
இதில் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ர்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
2 . அன்னாய்க்கு
இதிலும் , முதல் மூன்று எழுத்துகளை அடுத்துத்தான் ‘ய்க்’ என இரு மெய்கள் மயங்கி நிற்கின்றன !
ஆகவே , சில எழுத்துகள் தொடர்ந்தபின் இரு மெய்கள் அடுத்தடுத்து வரல் ஆகும்!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 47 of 84 • 1 ... 25 ... 46, 47, 48 ... 65 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 47 of 84
|
|