புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
1 Post - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
1 Post - 1%
bala_t
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
1 Post - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
280 Posts - 42%
heezulia
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
5 Posts - 1%
prajai
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
4 Posts - 1%
manikavi
தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_m10தொடத் தொடத் தொல்காப்பியம்  (569) - Page 52 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடத் தொடத் தொல்காப்பியம் (569)


   
   

Page 52 of 84 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 68 ... 84  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Dec 31, 2012 8:44 pm

First topic message reminder :

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

   - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                
  எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
  சென்னை-33

 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
                                                                                 
 “ எழுத்தெனப் படுப
  அகரமுதல்  னகர இறுவாய்
  முப்பஃது என்ப “        எனக் காண்கிறோம்.

                             
 இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.
                          
 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது,  அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற  12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.

இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.

உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.

அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.

2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?

குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 01, 2015 10:03 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (384)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

‘ஒ’ ஈறு சொல்லின் ஈற்றில் தனியாக வருவதை முன்பே (மொழி . 36) பார்த்தோம்!

இந்த ‘ஒ’ , வேறு எந்த மெய்யோடு சேர்ந்து சொல்லுக்கு ஈறாக வரும் ?

இதோ நூற்பா! –
“ஒவ்வும்  அற்றே நவ்வலங் கடையே” (மொழி . 39)

‘ந அலங்கடையே’ – ‘ந்’ தைத் தவிர்த்து’
‘ஒவ்வும் அற்றே’ – வேறு எந்த மெய்யோடும் சேர்ந்து ‘ஒ’ , சொல்லுக்கு ஈற்றிலே வராது !

‘ந்’துடன் சேர்ந்து , ‘ஒ’வானது சொல்லின் ஈற்றிலே வருமென்றால் அது எந்தச் சொல் ?

இளம்பூரணர் விடை –
1 . நொ
இங்கே  ‘ந்’ துடன் ‘ஒ’ சேர்ந்து ஒரு தனிச் சொல்லாக வந்துள்ளது !
நொ (பெயர்ச் சொல்) = துன்பம்

அடுத்த  நூற்பா –
 “ஏஓ எனுமுயிர் ஞகாரத் தில்லை” (மொழி . 40)

முன்னே பார்த்தபடி  (மொழி . 36) ‘ஏ’ ,’ஓ’ தனியாக நின்று சொல்லின் ஈறாகும் !

இப்போது கூடுதல் செய்தியாக , ‘ஞே’ , ‘ஞோ’என்ற இரு எழுத்துகளைத்  தவிர , மற்ற மெய்கள் மீது ஏறிய ’ஏ’ , ‘ஓ’ ஆகியன சொல்லின் ஈறாக வரும் என்கிறார் தொல்காப்பியர் !

இந் நூற்பாவிற்கு நச்சர்தான் எடுத்துக்காட்டுகளைக் கூறியுள்ளார் ! அவை !:
1 . உரிஞ
2. உரிஞா
3 .உரிஞி
4. உரிஞீ
5. உரிஞு
6. உரிஞூ

நச்சர் இவ்விடத்தில் , “இவை எச்சமும் வினைப் பெயரும் பற்றி வரும்” என்றார் !

வினைப் பெயர் – தொழிற்பெயர்.

சரசுவதிமகால் வெளியீட்டில் (2007), ‘ உரிஞு தவிர ஏனைய முறையே , ‘செய’ , ‘செய்யா’ ,  ‘செய்து’ ,  ’செய்யூ’ என்னும் வாய்பாட்டின’ எனக் கூறப்பட்டுள்ளது பொருத்தமே !

அஃதாவது –
1 . உரிஞ – ‘செய’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்க்க)
2 . உரிஞா – ‘செய்யா’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்க்கா)
3 . உரிஞி – ‘செய்து’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்த்து)
4 . உரிஞூ – ‘செய்யூ’ எனும் வாய்பாட்டு வினையெச்சம். (= தேய்த்தூ)
4 . உரிஞு – தொழிற்பெயர் (= தேய்த்தல்)
-----------------------------------------------------------------------------



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 04, 2015 1:00 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (385)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்து, ‘நு’ , ‘நூ’ , ‘வு’ , ‘வூ’ ஆகியன சொல்லின் ஈற்றிலே வருமா? – என்ற   வினாவுக்கு விடை கூறுகிறார் தொல்காப்பியர் ! –

“உஊ  கார  நவவொடு  நவிலா” (மொழி. 41)

அஃதாவது –
நு , நூ  , வு , வூ – இந்த நான்கும் சொல்லுக்கு ஈற்றிலே வாரா !

இங்கே இளம்பூரணர் , “நவிலா  என்றதனால் சிறுபான்மை நொவ்வும் கவ்வும் என வகாரத்தோடு ஈறாதல் கொள்க  என எழுதுகிறார் !”

இதன்படி ,
1 . நொவ்வு – இதில் , ‘வு’ ஈறாகி வருகிறது !
(நொவ்வு  = மெலிவு ) ; நொவ்வு – பெயர்ச்சொல்.

2 . கவ்வு – இதிலும் , ‘வு’ ஈறாகி வருகிறது !
(கவ்வு  = கவட்டை ) ; கவ்வு – பெயர்ச்சொல்.

இவ்வாறு , உரையாசிரியர்கள் , மூலத்திற்கு விதி விலக்காக எழுதுவது எதைக்காட்டுகிறது ?

இடைச் செருகலையா?

அல்ல !

இரண்டு உண்மைகளைக் காட்டுகிறது !-

1 . தொல்காப்பியரின் விதிகள், அவர் காலத்துத் தமிழ்ச் சொற்கள் எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சேர்த்துப் பார்த்து எழுதப்பட்டவை அல்ல !

கணிப்பொறி வசதிகள் இருக்கும் இந்நாளிலேயே தமிழ்ச் சொற்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்து ஆராய்வது துன்பமாக இருக்கும்போது, 2000 ஆண்டுகளுக்கு முந்தைய நிலை எவ்வாறிருக்கும் எனப் பார்த்துக்கொள்ளுங்கள் !

எனவேதான் உரையாசிரிகள் பார்வைக்கு வரும் ‘சிறுபான்மை விதிவிலக்குகளை’ அவர்கள் கூறுகிறார்கள் !

2 . உரையாசிரியர்கள் காலத்தில் புதிதாகச் சேர்ந்த சொற்களை  ஒதுக்காமல், அவற்றையும் தொல்காப்பிய விதிக்குள் அடக்கும் முயற்சியையும் உரையாசிரியர்கள் மேற்கொண்டுள்ளனர் !
‘இதை நானாகச் செய்யவில்லை , தொல்காப்பிய நூற்பாவின் இந்தச் சொல்லுக்கு உள்ளே புகுந்துகொண்டு என்னால் இதைக்கூறமுடிகிறது’ எனும் தொனியில், ‘நவிலா என்றதனால்’ என்ற பாங்கில் , தொல்காப்பிய நூற்பாச் சொல் ஒன்றைப் பிடித்துக்கொண்டு , அதில் சிறிது இடம் உண்டாக்கிக் கொண்டு, உரையாசிரியர்கள் காலச் சொற்களுக்கு இலக்கண அமைதி தேடியுள்ளனர் !

உரையாசிரியர்தம் உரைக்கோட்பாடு இது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 19, 2015 4:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (386)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் , அடுத்த நூற்பா :-

“உச்ச கார மிருமொழிக் குறித்தே” (மொழி. 42)

‘உச்சகாரம் ’- சு
‘இருமொழிக் குறித்தே’ – இரு எழுத்துச் சொற்களுக்கு மட்டும் ஈறாக வரும் !

1 . உசு  (உளு எனப்படும் மரப் புழு - Woodworm)

2 . முசு  (குரங்கில் ஒரு வகை)

இவ்விடத்தில் இளம்பூரணர் – “பசு வென்பது  ஆரியச் சிதைவு” என்கிறார் !
‘ஆரியச் சிதைவு’ என்றவுடன் ஆரியர்கள் கொண்டுவந்த சொல் – என எடுத்துக்கொள்ளக் கூடாது !
‘ஆரியம்’ என்பது, தமிழ் மண் தொடர்பானதுதான் !

இதுபற்றி எனது புராண ஆய்வுகளில் நான் ஆய்ந்துள்ளேன் ! அவற்றை மீண்டும் இங்கே விவரிக்க வேண்டியதில்லை !

‘பசு’ என்பது தூய தமிழ்ச்சொல்தான் எனவும் என் முன் நூற்களில் நிறுவியுள்ளேன் !

தொல்காப்பியர் , ஈரெழுத்துச் சொற்களில் மட்டுந்தான் ஈறாகச் ‘சு’ வரும் என்கிறாரே ,  ‘சு’வை ஈற்றிலே கொண்ட தமிழ்ச் சொற்கள் ‘கச்சு’ , ‘குச்சு’ என்றெல்லாம் உள்ளனவே ! – ஐயம் வரலாம் !

நச்சினார்க்கினியர் இதற்கு விடை கூறுகிறார் ! –

“கச்சு , குச்சு என்றாற் போல்வன குற்றுகரம்”

அஃதாவது – ‘கச்சு’ என்ற சொல்லில் உள்ள ஈற்று உகரம்  குற்றியலுகரம் ; எனவே இந்த ஈற்றுகரம் ‘உச்சகாரம்’ என்ற கணக்கில் வராது ! ஈற்றிலே நிற்கும் முற்றியலுகரம் பற்றித்தான் தொல்காப்பியர் பேசுகிறார் !

இங்கே நச்சர் தம் உரையில் கூடுதல் விளக்கம் ஒன்று தருகிறார்! -

அஃதாவது-  ‘ச்’ மீது ஏறிய ‘உ’ (சு) ஈறாக நிற்பதற்குத்தான் ‘இரண்டெழுத்துச் சொல்லாக இருக்கவேண்டும்’ என்ற விதியைத் தொல்காப்பியர் விதித்தார் ! வேறு உயிர்கள் ஏறிய ‘ச்’ ஈறாக வருவதற்கு அவர் விதி கூறவில்லை என்று குறிப்பிட்டுச் சில எடுத்துக்காட்டுகளை நச்சர் தருகிறார் –
1 . கச்சை – இங்கு ‘ஐ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
கச்சை – பெயர்ச் சொல்

2 . துஞ்ச – இங்கு ‘அ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
துஞ்ச – எச்சச் சொல்

3 .எஞ்சா – இங்கு ‘ஆ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
எஞ்சா – எச்சச் சொல்

4 .எஞ்சி – இங்கு ‘இ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
எஞ்சி – எச்சச் சொல்

5 .அச்சோ – இங்கு ‘ஓ’ ஏறிய ‘ச்’ ,  மூன்றெழுத்துச் சொல்லுக்கு ஈறாக வந்துள்ளது !
அச்சோ –  வியப்புச் சொல்

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 19, 2015 5:22 pm

" பசு " தூய தமிழ்ச் சொல் என்பது வியப்பைத் தருகிறது .

" ஆ " என்ற சொல்லே திருக்குறளிலும் , சிலப்பதிகாரத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது .

பசு + பால் = பசுப்பால் என்பது சரியா அல்லது
பசு + பால் = பசும்பால் என்பது சரியா ?

ஆ + பால் = ஆப்பால் என்பது சரியா அல்லது
ஆ + பால் = ஆவின்பால் என்பது சரியா ?

விளக்கம் தரவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 26, 2015 9:13 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (387)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சொற்களின் ஈறுகளில் எந்தெந்த எழுத்துகள் வரலாம் என்று மொழிமரபில் கூறிக்கொண்டு வருகிறார் தொல்காப்பியர் !

இப்போது – ‘பு’ :
“உப்ப கார மொன்றென மொழிப
இருவயி னிலையும் பொருட்டா  கும்மே” (மொழி. 43)

‘உப்பகாரம்’ – பு எனும் எழுத்து ,
‘ஒன்று என மொழிப’ – சொல்லின் ஈற்றிலே வருவது ஒரே ஒரு சொல்லில் மட்டும் என்பார்கள் ;
‘இருவயின்  நிலையும் பொருட்டா  கும்மே’- அச் சொல்லானது , தன்வினையிலும் வரும் பிறவினையிலும் வரும் !

இளம்பூரணர் காட்டிய எடுத்துக் காட்டு – ‘தபு’

‘தபு’ – இது தன்வினையில் வரும்போது ‘நீ சா’ என்று பொருளாகும் !

‘தபு’ – இது பிறவினையில் வரும்போது ‘நீ ஒன்றனைச் சாவி’ என்று பொருளாகும் !

இங்கே ‘சாவி’ என்பது ‘பூட்டைத் திறக்கும் சாவி ’அல்ல  !

சாவி = சாகச் செய் ; கொல்லு

சொல் ஒன்று ! பொருள் வேறு !

இளம்பூரணர் உரைப்படி – ‘படுத்துச் சொன்னால்  நீ சா’ என்பது பொருளாகும் !

‘படுத்துச் சொல்வது’ என்றால், பாயை விரித்து அதில் படுத்துக்கொண்டு சொல்வது அல்ல !

மெதுவாக, அடிநிலை ஒலிப்பில் உச்சரித்தால் – அது படுத்துச் சொல்வது !

‘தபு’ – இதனை மெதுவாக, அடிநிலை ஒலிப்பில் உச்சரித்தால் , அப்போது அதன் பொருள் ‘நீ சா’ என்பது பொருள் !

சற்று உரக்க , மேல்நிலை ஒலிப்பில் உச்சரித்தால் – அது எடுத்துச் சொல்வது !

இளம்பூரணர் உரைப்படி , ‘தபு’ என்ற சொல்லை, எடுத்துச் சொன்னால் , ‘சாவி’ என்பது பொருள் !

‘தபு’ என்பதற்கு ‘நீ சா’ என்பது பொருளாகும் போது – அது ‘தன்வினை’ (Active voice).
‘தபு’ என்பதற்குs ‘ சாவி’ என்பது பொருளாகும் போது – அது ‘பிறவினை’ (Passive voice).

எனவே இந்த நமது ஆய்வால் , தொல்காப்பியர், தன்வினை , பிறவினைகளைக் கூறவில்லை என்ற வாதம் அடிபட்டுப் போகிறது !

தொல்காப்பியருக்கு முன்னரே தமிழில் தன்வினை , பிறவினைகள் இருந்துள்ளன என மதிப்பிடவேண்டும் !

சிலர் , ‘தமிழுக்குத் தன்வினை பிறவினைகளைத் தந்ததே ஆங்கிலம்தான்’ என்றுகூட எழுதியுள்ளார்கள் ! முழுத் தவறு அது !

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 26, 2015 9:25 pm

எம். ஜெகதீசன் அவர்களே !
தங்களின் ஆய்வு மனம் வரவேற்கத் தக்கது !
நன்றி !
1 .தமிழ்த் தொன்னூல்களில் ஒரு சொல் இடம்பெறவில்லையானால் அதனை ‘வடசொல்’என்று ஒதுக்கிவிடும் போக்கு தீயது ! தவறானது !

2 . ‘பசுப்பால்’ என்பதே , புணர்ச்சி இலக்கணப்படி சரியானது !

3 . ‘பசும்பால்’ என்பது மெலித்தல் விகாரமாக , மக்கள் நாவில் வந்தது ! அதனை நாம் ஏற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை !

4 . ‘ஆப் பால்’ - என்பது புணர்ச்சி இலக்கணப்படி சரியானதுதான் !

5 . ‘ஆவின் பால்’ - என்பதன் நடுவே ‘இன்’ சாரியை சேர்ந்துள்ளது ! இதுவும் இலக்கணப்படி சரியானதுதான் ! மக்கள் நாவில் புழங்க இந்தச் சாரியை தேவைப்பட்டது !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jul 26, 2015 10:11 pm

தங்கள் விளக்கத்திற்கு மிக்கநன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 09, 2015 7:35 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (388)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மொழிமரபில் அடுத்தது –
“எஞ்சுதல் எல்லாம் எஞ்சுதல் இலவே” (மொழி. 77)

‘எஞ்சுதல் எல்லாம்’ – சொல்லுக்கு ஈற்றிலே வராது என்று குறிப்பிடப்பட்ட உயிர்மெய்கள் எல்லாம் ,
‘எஞ்சுதல் இலவே’ – அந்த எழுத்துகளைச் சுட்டிச் சொல்லும்போது ஈறாக வருவதற்குத் தடை இல்லை !

சொல்லுக்கு ஈற்றிலே வராது என்று குறிப்பிடப்பட்ட உயிர்மெய்கள் : -
1 . ஙௌ

2 . கெ

3 . கொ

4 . ஞே

5 . ஞோ

6 . நு

7 . நூ

8 . வு

9 . வூ

இளம்பூரணர் உரைப்படி, மேல் எழுத்துகள் தம்மைக் குறிக்கும்போது கீழ்வருமாறு சொல்லுக்கு ஈறாகும் ! –

1 . ஙௌக் களைந்தார்  (= ஙௌ எனும் எழுத்தை நீக்கினார்)

2 . கெக் களைந்தார்  

3 . கொக் களைந்தார்  

4 . ஞேக் களைந்தார்  

5 . ஞோக் களைந்தார்  

6 . நுக் களைந்தார்  

7 . நூக் களைந்தார்  

8 . வுக் களைந்தார்  

9 . வூக் களைந்தார்  

***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Sep 06, 2015 5:09 pm

தொடத் தொடத் தொல்காப்பியம் (389)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

அடுத்த நூற்பா , மொழிமரபில் –
“ஞணநம  னயரல வழள  வென்னும்
அப்பதி  னொன்றே புள்ளி யிறுதி ” (மொழி. 45)

‘ஞணநம  னயரல வழள  என்னும்’ – ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
‘அப்பதி  னொன்றே ’ - ஆகிய பதினோரு மெய்களும்,
‘புள்ளி யிறுதி’ – புள்ளி எழுத்துகளாய்ச் சொற்களின் ஈற்றிலே வரும் !

இளம்பூரணர் தந்த எடுத்துக்காட்டுகள் –
1 . உரிஞ்

2 . மண்

3 . பொருந்

4 . திரும்

5 . பொன்

6 . வேய்

7 . வேர்

8 . வேல்

9 . தெவ்

10 .வீழ்

11. வேள்

‘பொருந்’ என்ற சொல்லைப் பார்த்தோமல்லவா?

இந்தச் சொல்லோடு ‘வெரிந்’ என்ற சொல்லைச் சேர்த்து ஆக மொத்தம் தமிழில் இந்த இரண்டு சொற்களில் மட்டுமே ‘ந்’ ஈறாக வரும் என்கிறது அடுத்த நூற்பா!-

“உச்ச காரமொடு நகாரஞ் சிவணும்” (மொழி . 46)

மொழி மரபு நூற்பா 42இல், ‘உசு’ , ‘முசு’ ஆகிய இரண்டு தமிழ்ச் சொற்கள் மட்டுமே ‘சு’வை ஈறாகக் கொண்டு தமிழில் வரும் எனப் பார்த்தோம் !அதைத்தான் தொல்காப்பியர் ‘உச்ச காரமொடு’ என்று பேசுகிறார் !

அஃதாவது , ‘சு’ ஈறு எப்படி இருசொற்களில் மட்டும் வருமோ,  அதைப் போலவே ‘ந்’ ஈறும் இரு சொற்களில் மட்டுந்தான் வரும் என்பது கருத்து !

இலட்சக் கணக்கான தமிழ்ச் சொற்கள் இருக்கும்போது இரண்டில்தான் இப்படி வரும் என்று அந்தக் காலத்திலேயே தொல்காப்பியரால் கூறமுடிந்துள்ளது நமக்கு வியப்பைத் தருகிறது !

பழந்தமிழ்க் கல்விமுறையின் சிறப்பை இஃது ஓதுகிறது !
***



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 06, 2015 5:18 pm

உசு ,முசு இவற்றுடன் " பசு " என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்ளலாமா ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 52 of 84 Previous  1 ... 27 ... 51, 52, 53 ... 68 ... 84  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக