புதிய பதிவுகள்
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
by shakigullo Today at 9:56 am
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:38 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
» ஐபிஎல் 2024 : ஜேக் ஃப்ரேசர், ரிஷப் பந்த் அதிரடி.. டெல்லி அபார வெற்றி..!
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Ratha Vetrivel | ||||
manikavi | ||||
Kavithas | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொடத் தொடத் தொல்காப்பியம் (569)
Page 56 of 84 •
Page 56 of 84 • 1 ... 29 ... 55, 56, 57 ... 70 ... 84
First topic message reminder :
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,
“ எழுத்தெனப் படுப
அகரமுதல் னகர இறுவாய்
முப்பஃது என்ப “ எனக் காண்கிறோம்.
இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன.
1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ என்ற 12 உயிர்களைக் கூறி, க,ங,ச,ஞ,ட,ண,த,ந ,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன எனும் 18 உயிர்மெய்களைச் சேர்த்து ,மொத்தம் 30 என்று பலர் கூறுவர்.
இங்கு ஒரு திருத்தம். பதினெட்டு உயிர்மெய்களைச் சேர்க்கக் கூடாது; பதினெட்டு மெய்களையே கணக்கில் சேர்க்கவேண்டும். அஃதாவது, 12 உயிர்களையும் ,க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் என்ற 18 மெய்களையும் கூட்டி
30 என்று கூறவேண்டும்.
உயிர்மெய்,உயிரும் மெய்யும் சேர்ந்து வருவது; அடிப்படை எழுத்து அல்ல.
அடிப்படை எழுத்துக்கள் உயிர்களும் மெய்களுமே.
2) ‘படுப’ என்ற சொல் நோக்கத்தக்கது. எழுத்து அஃறிணையாதலால், ‘படுவ’ என்றுதானே வரவேண்டும்? ‘ப’ பலர்பால் ஈறாயிற்றே? ‘வ’ அல்லவா பலவின்பால் ஈறு? அப்படியானால் தொல்காப்பிய மூலத்தைத் திருத்தவேண்டுமா?
குழப்பத்தை நீக்குகிறார்! “செய்யுளின்பம் நோக்கி வகரம் நீக்கிப் பகரம் இடப்பட்டது” என்பது அவர் விளக்கம். ‘நூற்பா’ ஆனாலும் ‘செய்யுளின்பம்’ தேவை ;அதற்காகவே தொல்காப்பியர் ‘படுப’ என்று எழுதினார் என்பதே இளம்பூரணர் தரும் தெளிவாகும்!
குழப்பம் நீங்கியது!
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தங்களின் பதிவு அருமை நன்றி ஐயா.
தொடத் தொடத் தொல்காப்பியம் (399)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !
சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)
இவற்றைத் தொகுத்து அடுத்த நூற்பாவை எழுதுகிறார் ! –
“அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின” (பிறப் . 10)
‘அவ் ஆறு எழுத்து’ – அந்த ஆறு எழுத்துகளாகிய க் , ங் , ச் , ஞ் , ட் , ண் ஆகியன ,
‘மூவகைப் பிறப்பின’ – மூன்று வகைப் பிறப்பால் வருவன!
மூன்று வகைப் பிறப்பை மேலே பார்த்தோம் !
இப்போது பார்த்த இந்த ஆறு வல்லெழுத்துகளும் பிறக்கும் இடத்தைத்தான் மூன்று வகை என்றார் தொல்காப்பியர் !
இவற்றுக்குக் காரணமான காற்று (வளி) எங்கிருந்து வருகின்றது ?
இதற்கான விடை நாம் பிறப்பியலில் பார்த்த முதல் நூற்பாவில் உள்ளது !
இதன் அடிப்படையில் நெஞ்சில் நிலைபெறும் வளி, வல்லெழுத்திற்குக் காரணம் என்பது பெறப்படும் !
இனி , த் , ந் ஆகியவற்றின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் கூறுவதை நோக்குவோம் !-
“அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம்” (பிறப். 11)
‘அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின்’ - அண்ணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் பல்லின் மேற்புறத்தை,
‘நா நுனி பரந்து மெய்யுற ஒற்றத்’ – நுனி நாக்கானதுவிரிந்து ஒற்றிநிற்க ,
‘தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்’ - ‘த்’ , ‘ந்’ ஆகியன பிறக்கும் !
மொழியியலாரின் நுணுக்க ஆய்வின்படி , இந்த இரு எழுத்துகளுமே ‘பின் பல் ஒலி’ (Back dental) எனப்படும் ! Alveolar என்பதும் இதுவே !
‘பின் பல் ஒலி’ என்பதும் ‘அண்பல் ஒலி’ என்பதும் ஒன்றே !
‘த்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிராது (Voiceless)!
‘த்’தை உச்சரிக்கும்போது ஒலியில் ஒரு நிறுத்தம் (Stop) ஏற்படும் !
‘த’வை உச்சரிக்குபோது ஒலியில் ஒரு விடுதல் – வெடிப்பு (Plosive) ஏற்படும் !
‘த்’தைக் குறில் எனவும் , ‘த்த்’தை நெடில் எனவும் குறிப்பர் !
‘பதம்’ எனும்போது ‘த்’வருவதைக் காண்க!
‘புத்தகம்’ எனும்போது ‘த்த்’ வருவது காண்க!
இவற்றின் அடிப்படையில் , ‘த்’தை , ‘அண்பல் ஒலிப்பிலா குறில் நிறுத்தொலி’(Back dental voiceless stop short) எனவும் ,
‘த்த்’தைப், ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் நிறுத்தொலி’(Back dental voiceless stop long) எனவும் ,
‘த’வைப் ‘அண்பல் ஒலிப்பிலா குறில் வெடிப்பொலி ’ (Back dental voiceless short plosive) எனவும் ,
‘தா’வைப் ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் வெடிப்பொலி ’ (Back dental voiceless long plosive) எனவும் , குறிக்கலாம் !
‘ந்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிரும் (Voiced)!
‘ந்’தை உச்சரிக்கும்போது மூக்கு ஒலி (Nasal) ஏற்படுகிறது !
‘ந’வை உச்சரிக்கும்போதும் மூக்கொலியே ஏற்படும் !
‘ந்’தைக் குறில் எனவும் , ‘ந்ந்’தை நெடில் எனவும் குறிப்பர் !
‘நம்’ எனும்போது ‘ந்’வருவதைக் காண்க! (முதலி ‘ந்’ வந்து , பிறகு ‘அ’ சேர்ந்து ‘ந்’ வருகிறது !)
‘இந்நாள்’ எனும்போது ‘ந்ந்’ வருவது காண்க!
இவற்றின் அடிப்படையில் , ‘ந்’தைப் , ‘அண்பல் ஒலிப்புடைக் குறில் மூக்கொலி’(Back dental voiced nasal short) எனவும் ,
‘ந்ந்’தைப், ‘அண்பல் ஒலிப்புடை நெடில் மூக்கொலி’(Back dental voiced nasal long) எனவும் , கூறலாம்!
த் , த , தா , தி , தீ, து , தூ , தெ , தே , தை , தொ , தோ , தௌ – ஆகிய 13 தகர எழுத்துகளுமே ‘அண்பல் ’ (Back dental) ஒலியாகவே பிறக்கின்றன !
ந் , ந , நா , நி , நீ , நு , நூ , நெ , நே , நை , நொ , நோ ,நௌ - ஆகிய 13 நகர ஒலிகளுமே அண்பல் ஒலிகளே !
இவற்றை உச்சரித்துப் பார்த்துச் சரிபார்த்துக் கொள்ளலாம் !
ஒலிப்பைப் பொறுத்தவரை எந்தப் புத்தகத்தையும் விட உங்கள் நாக்கைப் பின்பற்றுங்கள் !
நாம் முன்னே கண்டதுபோல ,தொல்காப்பியரின் கருத்துப்படி, வல்லெழுத்தாகிய த் , த , தா, தி , தீ , து, தூ ,தெ , தே , தை , தொ , தோ , தௌ ஆகிய 13 வல்லெழுத்துகளுக்குமே காற்றானது , நெஞ்சில் நிலைகொண்ட காற்றே !
தொல்காப்பியரின் கருத்துப்படி, மெல்லெழுத்தாகிய ந் , ந , நா, நி , நீ , நு, நூ ,நெ , நே , நை , நொ , நோ , நௌ ஆகிய 13 மெல்லெழுத்துகளுக்குமே காற்றானது , மூக்கில் உலாவும் காற்றே !
தொல்காப்பியர் கூறிய அடிப்படை இன்றும் பொருந்திவருவதை நாம் நோக்கவேண்டும் !
இதுவே தொல்காப்பியத்தின் நிலைபேற்று இரகசியம் (Secret of perpetuality of Tholkappiyam)!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !
சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)
இவற்றைத் தொகுத்து அடுத்த நூற்பாவை எழுதுகிறார் ! –
“அவ்வா றெழுத்து மூவகைப் பிறப்பின” (பிறப் . 10)
‘அவ் ஆறு எழுத்து’ – அந்த ஆறு எழுத்துகளாகிய க் , ங் , ச் , ஞ் , ட் , ண் ஆகியன ,
‘மூவகைப் பிறப்பின’ – மூன்று வகைப் பிறப்பால் வருவன!
மூன்று வகைப் பிறப்பை மேலே பார்த்தோம் !
இப்போது பார்த்த இந்த ஆறு வல்லெழுத்துகளும் பிறக்கும் இடத்தைத்தான் மூன்று வகை என்றார் தொல்காப்பியர் !
இவற்றுக்குக் காரணமான காற்று (வளி) எங்கிருந்து வருகின்றது ?
இதற்கான விடை நாம் பிறப்பியலில் பார்த்த முதல் நூற்பாவில் உள்ளது !
இதன் அடிப்படையில் நெஞ்சில் நிலைபெறும் வளி, வல்லெழுத்திற்குக் காரணம் என்பது பெறப்படும் !
இனி , த் , ந் ஆகியவற்றின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் கூறுவதை நோக்குவோம் !-
“அண்ண நண்ணிய பன்முதன் மருங்கின்
நாநுனி பரந்து மெய்யுற வொற்றத்
தாமினிது பிறக்குந் தகார நகாரம்” (பிறப். 11)
‘அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கின்’ - அண்ணத்தைத் தொட்டுக்கொண்டிருக்கும் பல்லின் மேற்புறத்தை,
‘நா நுனி பரந்து மெய்யுற ஒற்றத்’ – நுனி நாக்கானதுவிரிந்து ஒற்றிநிற்க ,
‘தாம் இனிது பிறக்கும் தகார நகாரம்’ - ‘த்’ , ‘ந்’ ஆகியன பிறக்கும் !
மொழியியலாரின் நுணுக்க ஆய்வின்படி , இந்த இரு எழுத்துகளுமே ‘பின் பல் ஒலி’ (Back dental) எனப்படும் ! Alveolar என்பதும் இதுவே !
‘பின் பல் ஒலி’ என்பதும் ‘அண்பல் ஒலி’ என்பதும் ஒன்றே !
‘த்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிராது (Voiceless)!
‘த்’தை உச்சரிக்கும்போது ஒலியில் ஒரு நிறுத்தம் (Stop) ஏற்படும் !
‘த’வை உச்சரிக்குபோது ஒலியில் ஒரு விடுதல் – வெடிப்பு (Plosive) ஏற்படும் !
‘த்’தைக் குறில் எனவும் , ‘த்த்’தை நெடில் எனவும் குறிப்பர் !
‘பதம்’ எனும்போது ‘த்’வருவதைக் காண்க!
‘புத்தகம்’ எனும்போது ‘த்த்’ வருவது காண்க!
இவற்றின் அடிப்படையில் , ‘த்’தை , ‘அண்பல் ஒலிப்பிலா குறில் நிறுத்தொலி’(Back dental voiceless stop short) எனவும் ,
‘த்த்’தைப், ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் நிறுத்தொலி’(Back dental voiceless stop long) எனவும் ,
‘த’வைப் ‘அண்பல் ஒலிப்பிலா குறில் வெடிப்பொலி ’ (Back dental voiceless short plosive) எனவும் ,
‘தா’வைப் ‘அண்பல் ஒலிப்பிலா நெடில் வெடிப்பொலி ’ (Back dental voiceless long plosive) எனவும் , குறிக்கலாம் !
‘ந்’தை உச்சரிக்கும்போது குரல் நாண் அதிரும் (Voiced)!
‘ந்’தை உச்சரிக்கும்போது மூக்கு ஒலி (Nasal) ஏற்படுகிறது !
‘ந’வை உச்சரிக்கும்போதும் மூக்கொலியே ஏற்படும் !
‘ந்’தைக் குறில் எனவும் , ‘ந்ந்’தை நெடில் எனவும் குறிப்பர் !
‘நம்’ எனும்போது ‘ந்’வருவதைக் காண்க! (முதலி ‘ந்’ வந்து , பிறகு ‘அ’ சேர்ந்து ‘ந்’ வருகிறது !)
‘இந்நாள்’ எனும்போது ‘ந்ந்’ வருவது காண்க!
இவற்றின் அடிப்படையில் , ‘ந்’தைப் , ‘அண்பல் ஒலிப்புடைக் குறில் மூக்கொலி’(Back dental voiced nasal short) எனவும் ,
‘ந்ந்’தைப், ‘அண்பல் ஒலிப்புடை நெடில் மூக்கொலி’(Back dental voiced nasal long) எனவும் , கூறலாம்!
த் , த , தா , தி , தீ, து , தூ , தெ , தே , தை , தொ , தோ , தௌ – ஆகிய 13 தகர எழுத்துகளுமே ‘அண்பல் ’ (Back dental) ஒலியாகவே பிறக்கின்றன !
ந் , ந , நா , நி , நீ , நு , நூ , நெ , நே , நை , நொ , நோ ,நௌ - ஆகிய 13 நகர ஒலிகளுமே அண்பல் ஒலிகளே !
இவற்றை உச்சரித்துப் பார்த்துச் சரிபார்த்துக் கொள்ளலாம் !
ஒலிப்பைப் பொறுத்தவரை எந்தப் புத்தகத்தையும் விட உங்கள் நாக்கைப் பின்பற்றுங்கள் !
நாம் முன்னே கண்டதுபோல ,தொல்காப்பியரின் கருத்துப்படி, வல்லெழுத்தாகிய த் , த , தா, தி , தீ , து, தூ ,தெ , தே , தை , தொ , தோ , தௌ ஆகிய 13 வல்லெழுத்துகளுக்குமே காற்றானது , நெஞ்சில் நிலைகொண்ட காற்றே !
தொல்காப்பியரின் கருத்துப்படி, மெல்லெழுத்தாகிய ந் , ந , நா, நி , நீ , நு, நூ ,நெ , நே , நை , நொ , நோ , நௌ ஆகிய 13 மெல்லெழுத்துகளுக்குமே காற்றானது , மூக்கில் உலாவும் காற்றே !
தொல்காப்பியர் கூறிய அடிப்படை இன்றும் பொருந்திவருவதை நாம் நோக்கவேண்டும் !
இதுவே தொல்காப்பியத்தின் நிலைபேற்று இரகசியம் (Secret of perpetuality of Tholkappiyam)!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
த்,ந், ஒலி , இதன் உயிர் மெய் எழுத்தின் ஒலிகள் பற்றி பதிவுக்கு நன்றி ஐயா.
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:
தொல்காப்பியத்தின் பிறப்பியலில் நிற்கிறோம் !
சற்று முன்பு , மூன்று வகையான பிறப்பு முறைகளை அவர் சொன்னார் ! –
1 . பின் நாக்குப், பின் அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (க் , ங்)
2 . நடு நாக்கு, நடு அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ச் , ஞ்)
3 . நுனி நாக்கு, நுனி அண்ணத்தைத் தொடும்போது பிறப்பன (ட் , ண்)
நன்றி பழ. முத்துராமலிங்கம் அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ‘ற்’ , ‘ன்’ ! –
“அணரி நுனிநா வண்ண மொற்ற
றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 12)
‘அணரி நுனிநா வண்ணம் ஒற்ற’ – மேல் நோக்கிச் சென்று , நாக்கின் நுனியானது கீழ் நுனி அண்ணத்தை ஒட்ட ,
‘றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்’- ‘ற்’ , ‘ன்’ என்ற இரண்டும் பிறக்கும் !
கீழ் நுனி அண்ணம் – Alveo palate
கீழ் நுனி அண்ணத்தை நுனி நாக்கு சென்று ஒற்றப் பிறப்பது – Alveo palatal
‘ற்’றை (itr) உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்வதில்லை !
எனவே , ‘ற்’ - Voiceless
‘ற்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு ஒலி நிறுத்தம் ஏற்படுகிறது !
எனவே , ‘ற்’ – Stop
‘ற்’ றைக் குறில் எனவும் , ‘ற்றை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ற்’ – Short
‘ற்ற்’ – Long
இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ற்’றின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் நிறுத்தொலி (Alveo palatal voiceless short stop)
‘ற்’றின் பிறப்பில் ஒரு நுணுக்கம் உள்ளது !
‘இற்’ (itr) – Stop (நிறுத்தொலி) ; அதிர்விலா ஒலி (Voiceless)
‘இற்ற்’ (iRR) – Trill (நடுங்கொலி) ; அதிர்வுடை ஒலி (Voiced)
‘ற்’றிலிருந்து ‘ற’வுக்குப் போகும்போது , அது வெடிப்பொலியாகிறது !
எனவே ‘ற’ - கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலி (Alveo palatal voiceless short plosive)
ற , றா , றி , றீ , று , றூ , றெ , றே , றை , றொ , றோ , றௌ – 12 உயிர் மெய்களும் கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலிகளே (Alveo palatal voiceless plosive)!
இப்போது ‘ன்’ !
‘ன்’னை உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்கிறது !
எனவே , ‘ன்’ - Voiced
‘ன்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு மூக்கொலி ஏற்படுகிறது !
எனவே , ‘ன்’ – Nasal
‘ன்’னைக் குறில் எனவும் , ‘ன்னை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ன்’ – Short
‘ன்ன்’ – Long
இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ன்’னின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக் குறில் மூக்கொலி (Alveo palatal voiced short nasal)
ன , னா , னி , னீ , னு , னூ ,னெ , னே , னை , னொ , னோ , னௌ – 12 னகரங்களுமே கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக் மூக்கொலிகளே (Alveo palatal voiced nasal).
‘ற்’ முதல் ‘றௌ’ வரையான வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ‘ற்’ , ‘ன்’ ! –
“அணரி நுனிநா வண்ண மொற்ற
றஃகா னஃகா னாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 12)
‘அணரி நுனிநா வண்ணம் ஒற்ற’ – மேல் நோக்கிச் சென்று , நாக்கின் நுனியானது கீழ் நுனி அண்ணத்தை ஒட்ட ,
‘றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்’- ‘ற்’ , ‘ன்’ என்ற இரண்டும் பிறக்கும் !
கீழ் நுனி அண்ணம் – Alveo palate
கீழ் நுனி அண்ணத்தை நுனி நாக்கு சென்று ஒற்றப் பிறப்பது – Alveo palatal
‘ற்’றை (itr) உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்வதில்லை !
எனவே , ‘ற்’ - Voiceless
‘ற்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு ஒலி நிறுத்தம் ஏற்படுகிறது !
எனவே , ‘ற்’ – Stop
‘ற்’ றைக் குறில் எனவும் , ‘ற்றை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ற்’ – Short
‘ற்ற்’ – Long
இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ற்’றின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் நிறுத்தொலி (Alveo palatal voiceless short stop)
‘ற்’றின் பிறப்பில் ஒரு நுணுக்கம் உள்ளது !
‘இற்’ (itr) – Stop (நிறுத்தொலி) ; அதிர்விலா ஒலி (Voiceless)
‘இற்ற்’ (iRR) – Trill (நடுங்கொலி) ; அதிர்வுடை ஒலி (Voiced)
‘ற்’றிலிருந்து ‘ற’வுக்குப் போகும்போது , அது வெடிப்பொலியாகிறது !
எனவே ‘ற’ - கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலி (Alveo palatal voiceless short plosive)
ற , றா , றி , றீ , று , றூ , றெ , றே , றை , றொ , றோ , றௌ – 12 உயிர் மெய்களும் கீழ்நுனி அண்ண ஒலிப்பிலாக் குறில் வெடிப்பொலிகளே (Alveo palatal voiceless plosive)!
இப்போது ‘ன்’ !
‘ன்’னை உச்சரிக்கும் போது , குரல் நாண் அதிர்கிறது !
எனவே , ‘ன்’ - Voiced
‘ன்’ என்று உச்சரிக்கும் போது அங்கே ஒரு மூக்கொலி ஏற்படுகிறது !
எனவே , ‘ன்’ – Nasal
‘ன்’னைக் குறில் எனவும் , ‘ன்னை’ நெடில் எனவும் கூறுவர் !
எனவே , ‘ன்’ – Short
‘ன்ன்’ – Long
இவற்றை ஒன்றாகச் சேர்த்தால் ‘ன்’னின் பிறப்பு – கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக் குறில் மூக்கொலி (Alveo palatal voiced short nasal)
ன , னா , னி , னீ , னு , னூ ,னெ , னே , னை , னொ , னோ , னௌ – 12 னகரங்களுமே கீழ்நுனி அண்ண ஒலிப்புடைக் மூக்கொலிகளே (Alveo palatal voiced nasal).
‘ற்’ முதல் ‘றௌ’ வரையான வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தங்களின் உழைப்பு இந்த படைப்பில் தெரிகிறது,நன்றி ஐயா.
[You must be registered and logged in to see this link.]Dr.S.Soundarapandian wrote:தொடத் தொடத் தொல்காப்பியம் (400)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
‘ற்’ முதல் ‘றௌ’ வரையான வல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று நெஞ்சில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
‘ன்’ முதல் ‘னௌ’ வரையான மெல் ஒலிகளைப் பொறுத்தவரை அவற்றை உச்சரித்து வெளிவிடுவதற்கான காற்று மூக்கில் நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்து (பிறப் . 1)!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
அருமையான பதிவு. நன்கு ஆழ்ந்து படிக்க புரிந்து கொள்ள நல்ல வாய்ப்பாக தங்கள் பதிவு அமைந்து உள்ளது. நன்றி ஐயா.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
நன்றி சசி அவர்களே !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (401)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் , இப்போது தொல்காப்பியர் , ‘ர்’ , ‘ழ்’ஆகிய எழுத்தொலிகள் பிறக்கும் வகையைச் சொல்லுகிறார் !:-
“நுனிநா வணரி யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 13)
‘நுனி நா அணரி’ – நுனி நாக்கானது மேல் நோக்கிச் சென்று ,
‘அண்ணம் வருட’ – அண்ணத்தை வருடிக் கொடுக்க,
‘ரகாரம் ழகாரம்’ – ‘ர்’ , ‘ழ்’,
‘ஆ இரண்டும் பிறக்கும்’ – என்ற அந்த இரு எழுத்துகளும் பிறக்கும் !
நாக்கானது அண்ணத்தை வருடும்போது பிறக்கும் ஒலியை , மொழியியலில் , வருடொலி (Flap) என்பர் !
தொல்காப்பியர் இங்கே குறிக்கும் அண்ணத்தை மொழியியலில் , அண்ணம் (Palate ) என்றே சுட்டுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது !
தொல்காப்பியர் கூறுவதுபோலவே இன்றைய மொழியியலாரும் , ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றை வருடொலி (Flap) என்றுதான் எழுதுகின்றனர் !
இந்த இரு எழுத்துகளையும் உச்சரித்துப் பார்த்தால் ‘வருடொலி’ என்ன என்பது உங்களுக்குப் புரியும் ; வேறொன்றுமில்லை !
‘ர்’ரின் பிறப்பைக் குறில் (Short) என்பர் !
‘ர்ர்’ரின் பிறப்பை நெடில் (Long) என்பர்!
‘கார்’ என்ற சொல்லில் ‘ர்’வருவதைக் காண்க!
‘சுர்ரென்று’ – என்பதில் ‘ர்ர்’ வருவதைக் காண்க!
‘ர்’ பிறக்கும்போது , குரல் நாண் அதிர்வதைக் கவனியுங்கள் !
இதனால் , ‘ர்’ரின் ஒலியை , ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !
இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !
‘ழ்’ழைக் குறில் எனவும் , ‘ழ்ழ்’ழை நெடில் எனவும் கூறுவர் !
‘வாழ்க்கை’ – இங்கு ‘ழ்’ வருவதைக் காண்க !
எனவே , ‘ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி ‘ (Palatal voiced retroflex flap short) எனலாம் !
‘ழ்ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி ‘ (Palatal voiced retroflex flap long) எனலாம் !
ர் , ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ , ரௌ - ஆகிய 13 ரகர எழுத்துகளுமே ,
‘அண்ணஅதிர்வுடை வருடொலி’ (Palatal voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !
ழ் , ழ , ழா , ழி , ழீ , ழு , ழூ , ழெ , ழே , ழை , ழொ , ழோ , ழௌ - ஆகிய 13 ழகர எழுத்துகளுமே , ‘அண்ணஅதிர்வுடை நாமடி வருடொலி’ (Palatal retroflex voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !
13 ரகரங்களுக்கும் உரிய காற்றானது மிடற்றில் (கண்டத்தில்) (Pharynx)நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்தாகும் (பிறப் . 1) !
இதைப்போன்றே 13 ழகரங்களுக்கு உரிய காற்றானது அதே மிடற்றில் நின்றாடும் காற்றே என்பதும் அவர் கருத்தாகும் (பிறப் . 1) !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
பிறப்பியலில் , இப்போது தொல்காப்பியர் , ‘ர்’ , ‘ழ்’ஆகிய எழுத்தொலிகள் பிறக்கும் வகையைச் சொல்லுகிறார் !:-
“நுனிநா வணரி யண்ணம் வருட
ரகார ழகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 13)
‘நுனி நா அணரி’ – நுனி நாக்கானது மேல் நோக்கிச் சென்று ,
‘அண்ணம் வருட’ – அண்ணத்தை வருடிக் கொடுக்க,
‘ரகாரம் ழகாரம்’ – ‘ர்’ , ‘ழ்’,
‘ஆ இரண்டும் பிறக்கும்’ – என்ற அந்த இரு எழுத்துகளும் பிறக்கும் !
நாக்கானது அண்ணத்தை வருடும்போது பிறக்கும் ஒலியை , மொழியியலில் , வருடொலி (Flap) என்பர் !
தொல்காப்பியர் இங்கே குறிக்கும் அண்ணத்தை மொழியியலில் , அண்ணம் (Palate ) என்றே சுட்டுகின்றனர் என்பது கவனிக்கத் தக்கது !
தொல்காப்பியர் கூறுவதுபோலவே இன்றைய மொழியியலாரும் , ‘ர்’ , ‘ழ்’ ஆகியவற்றை வருடொலி (Flap) என்றுதான் எழுதுகின்றனர் !
இந்த இரு எழுத்துகளையும் உச்சரித்துப் பார்த்தால் ‘வருடொலி’ என்ன என்பது உங்களுக்குப் புரியும் ; வேறொன்றுமில்லை !
‘ர்’ரின் பிறப்பைக் குறில் (Short) என்பர் !
‘ர்ர்’ரின் பிறப்பை நெடில் (Long) என்பர்!
‘கார்’ என்ற சொல்லில் ‘ர்’வருவதைக் காண்க!
‘சுர்ரென்று’ – என்பதில் ‘ர்ர்’ வருவதைக் காண்க!
‘ர்’ பிறக்கும்போது , குரல் நாண் அதிர்வதைக் கவனியுங்கள் !
இதனால் , ‘ர்’ரின் ஒலியை , ‘அண்ணஅதிர்வுடை க் குறில் வருடொலி’ (Palatal voiced flap short) எனலாம் !
இதைப் போலவே , ‘ழ்’ பிறக்கும்போதும் குரல் நாண் அதிர்கிறது (Vibrates)!
‘ழ்’ழை உச்சரிக்க வேண்டுமானால் , நாக்கை மேற்புறமாக மடிக்கவேண்டும் !இவ்வாறு மடிப்பதைத்தான் ’நாமடி’ (Retroflex ) என்கின்றனர் !
‘ழ்’ழைக் குறில் எனவும் , ‘ழ்ழ்’ழை நெடில் எனவும் கூறுவர் !
‘வாழ்க்கை’ – இங்கு ‘ழ்’ வருவதைக் காண்க !
எனவே , ‘ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி ‘ (Palatal voiced retroflex flap short) எனலாம் !
‘ழ்ழ்’ழை , ’அண்ண அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி ‘ (Palatal voiced retroflex flap long) எனலாம் !
ர் , ர , ரா , ரி , ரீ , ரு , ரூ , ரெ , ரே , ரை , ரொ , ரோ , ரௌ - ஆகிய 13 ரகர எழுத்துகளுமே ,
‘அண்ணஅதிர்வுடை வருடொலி’ (Palatal voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !
ழ் , ழ , ழா , ழி , ழீ , ழு , ழூ , ழெ , ழே , ழை , ழொ , ழோ , ழௌ - ஆகிய 13 ழகர எழுத்துகளுமே , ‘அண்ணஅதிர்வுடை நாமடி வருடொலி’ (Palatal retroflex voiced flap ) யாகப் பிறக்கின்றன எனலாம் !
13 ரகரங்களுக்கும் உரிய காற்றானது மிடற்றில் (கண்டத்தில்) (Pharynx)நின்றாடும் காற்று என்பது தொல்காப்பியர் கருத்தாகும் (பிறப் . 1) !
இதைப்போன்றே 13 ழகரங்களுக்கு உரிய காற்றானது அதே மிடற்றில் நின்றாடும் காற்றே என்பதும் அவர் கருத்தாகும் (பிறப் . 1) !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
தொடத் தொடத் தொல்காப்பியம் (402)
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ‘ல்’ , ‘ள்’ ஆகியவற்றின் பிறப்பு !-
“நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி னண்ண மொற்றவும் வருடவும்
லகார ளகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 14)
‘நாவிளிம்பு வீங்கி அண்பல் முதல்உற’ - நுனி நாக்கின் இரு பக்கங்களும் உப்பி , கீழ் நுனி அண்ணத்தைச் சேர்ந்து ,
‘ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்’ – தொடவும் , வருடிக் கொடுக்கவும்,
‘லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்’ – ‘ல்’ , ‘ள்’ஆகியன பிறக்கும் !
தொல்காப்பியர் ‘அண்பல்’ என்றதை, நாம் ‘Alveo palatal’ என்கிறோம் !
தொல்காப்பியர் ‘ஒற்றவும்’ என்பதை, நாம் ‘Lateral continuant’ என்கிறோம் !
‘ல்’லை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ல்’லை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !
‘ல்’ லைக் குறில் என்றும் , ‘ல்ல்’லை நெடில் என்றும் கூறுவர் !
வலை – இதில் உள்ளது குறில் ‘ல்’ !
பல்லி – இதில் உள்ளது நெடில் ‘ல்ல்’ !
இவற்றைத் தொகுத்து , ‘ல்’லின் பிறப்பை , அண்பல் அதிர்வுடைக் குறில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced short lateral continuant) எனலாம் !
‘ல்ல்’லின் பிறப்பை - அண்பல் அதிர்வுடைக் நெடில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced long lateral continuant) எனலாம் !
ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக் தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced lateral continuant) பிறக்கின்றன எனலாம் !
தொல்காப்பியர் ‘வருடவும்’ என்பதை, நாம் ‘Flap’ என்கிறோம் !
‘ள்’ளை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ள்’ளை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !
‘ள்’ளை உச்சரிக்கும்போது , நாவானது மேல் நோக்கி மடிகிறது !
எனவே , ‘ள்’ளை ‘நாமடி ஒலி’ (Retroflex sound) என்பர் !
‘ள்’ளைக் குறில் என்றும் , ‘ள்ளை’ளை நெடில் என்றும் கூறுவர் !
வளை – இதில் உள்ளது குறில் ‘ள்’ !
பள்ளி – இதில் உள்ளது நெடில் ‘ள்ள்’ !
இவற்றைத் தொகுத்து , ‘ள்’ளின் பிறப்பை , அண்பல் அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி (Alveo palatal retroflex voiced short flap) எனலாம் !
‘ள்ள்’ளின் பிறப்பை - அண்பல் அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி (Alveo palatal retroflex voiced long flap) எனலாம் !
ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை வருடொலியாகவே (Alveo palatal retroflex voiced flap) பிறக்கின்றன எனலாம் !
***
-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
இப்போது , ‘ல்’ , ‘ள்’ ஆகியவற்றின் பிறப்பு !-
“நாவிளிம்பு வீங்கி யண்பன் முதலுற
ஆவயி னண்ண மொற்றவும் வருடவும்
லகார ளகார மாயிரண்டும் பிறக்கும்” (பிறப் . 14)
‘நாவிளிம்பு வீங்கி அண்பல் முதல்உற’ - நுனி நாக்கின் இரு பக்கங்களும் உப்பி , கீழ் நுனி அண்ணத்தைச் சேர்ந்து ,
‘ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்’ – தொடவும் , வருடிக் கொடுக்கவும்,
‘லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்’ – ‘ல்’ , ‘ள்’ஆகியன பிறக்கும் !
தொல்காப்பியர் ‘அண்பல்’ என்றதை, நாம் ‘Alveo palatal’ என்கிறோம் !
தொல்காப்பியர் ‘ஒற்றவும்’ என்பதை, நாம் ‘Lateral continuant’ என்கிறோம் !
‘ல்’லை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ல்’லை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !
‘ல்’ லைக் குறில் என்றும் , ‘ல்ல்’லை நெடில் என்றும் கூறுவர் !
வலை – இதில் உள்ளது குறில் ‘ல்’ !
பல்லி – இதில் உள்ளது நெடில் ‘ல்ல்’ !
இவற்றைத் தொகுத்து , ‘ல்’லின் பிறப்பை , அண்பல் அதிர்வுடைக் குறில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced short lateral continuant) எனலாம் !
‘ல்ல்’லின் பிறப்பை - அண்பல் அதிர்வுடைக் நெடில் தொடர் மருங்கொலி (Alveo palatal voiced long lateral continuant) எனலாம் !
ல் , ல , லா ,லி ,லீ , லு , லூ , லெ , லே , லை , லொ , லோ , லௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடைக் தொடர் மருங்கொலியாகவே (Alveo palatal voiced lateral continuant) பிறக்கின்றன எனலாம் !
தொல்காப்பியர் ‘வருடவும்’ என்பதை, நாம் ‘Flap’ என்கிறோம் !
‘ள்’ளை உச்சரிக்கும்போது , தொண்டையில் உள்ள குரல் நாண்(Vocal cord) அதிர்கிறது ! எனவே , ‘ள்’ளை ‘அதிர்வுடை ஒலி’ (Voiced) என்கிறோம் !
‘ள்’ளை உச்சரிக்கும்போது , நாவானது மேல் நோக்கி மடிகிறது !
எனவே , ‘ள்’ளை ‘நாமடி ஒலி’ (Retroflex sound) என்பர் !
‘ள்’ளைக் குறில் என்றும் , ‘ள்ளை’ளை நெடில் என்றும் கூறுவர் !
வளை – இதில் உள்ளது குறில் ‘ள்’ !
பள்ளி – இதில் உள்ளது நெடில் ‘ள்ள்’ !
இவற்றைத் தொகுத்து , ‘ள்’ளின் பிறப்பை , அண்பல் அதிர்வுடை நாமடிக் குறில் வருடொலி (Alveo palatal retroflex voiced short flap) எனலாம் !
‘ள்ள்’ளின் பிறப்பை - அண்பல் அதிர்வுடை நாமடி நெடில் வருடொலி (Alveo palatal retroflex voiced long flap) எனலாம் !
ள் , ள , ளா ,ளி ,ளீ , ளு ,ளூ , ளெ , ளே , ளை , ளொ , ளோ , ளௌ – ஆகிய 13 எழுத்துகளுமே அண்பல் அதிர்வுடை வருடொலியாகவே (Alveo palatal retroflex voiced flap) பிறக்கின்றன எனலாம் !
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 56 of 84 • 1 ... 29 ... 55, 56, 57 ... 70 ... 84
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 56 of 84
|
|