புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_m10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_m10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_m10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_m10சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Feb 27, 2013 10:53 pm

இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று அழித்தது. பெண்கள், குழந்தைகள், அப்பாவி பொதுமக்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலை செய்தனர்.

விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயது பாலச்சந்திரனையும் ராணுவ முகாமுக்குள் பிடித்து வைத்து குரூரமாக சுட்டுக் கொன்றனர். இலங்கை அரசின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச கூண்டில் ஏற்றி தண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தப்படுகின்றன. இறுதிகட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு சேனல் 4 வெளியிட்ட ‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களும், புகைப்படங்களும் ஆதாரமாக உள்ளன. பாலச்சந்திரன் கொல்லப்பட்டதையும் இந்த டி.வி.தான் வெளியிட்டது.

‘நோ பயர் ஸோன்’ வீடியோக்களின் தயாரிப்பாளர் கேலம் மெக்ரே ஈழத்தமிழர் படுகொலை குறித்து பரபரப்பான பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:

கே: பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படங்கள் யாரால் எடுக்கப்பட்டது?

ப: பாலச்சந்திரன் இருக்கும் புகைப்படங்கள் வீடியோ பதிவில் இருந்து எடுக்கப்பட்டவை. 2009 மே மாதம் 19-ம் தேதி காலை அந்த வீடியோ எடுக்கப்பட்டது. இலங்கை ராணுவத்தில் இருக்கும் படைப் பிரிவுகளிலேயே 53ம் படைப் பிரிவுதான் மிகவும் கொடூரமானது. அவர்கள்தான் பிரபாகரன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களை எதிர் கொண்டவர்கள். கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவர்கள்.

உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் எந்த தகவல்ம்களும் நான் நேரடியாகப் பார்த்தவை கிடையாது. அந்த வீடியோக்களை எடுத்த இரண்டு சிங்களப்படை வீரர்கள் என்னிடம் சொன்னவை. வீடியோவாகவும் பதியப்பட்டவை. அவர்கள் இருவரும் 53ம் படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இறுதிக் கட்டம் வரை இலங்கையில் போர் நடக்கும் இடங்களில் பணியாற்றியவர்கள். போர் முடிந்தவுடன் அங்கிருந்து தப்பி வந்துவிட்டனர்.

எல்லா வீடியோக்களும் அவர்களின் மொபைல் போன்களில் எடுக்கப்பட்டவை. போர் நடக்கும் இடங்களில் வீடியோவோ, புகைப்படங்களோ எடுக்க அனுமதி கிடையாது. மொபைலில் எடுத்ததும் ரகசியமாக எடுத்தவைதான்.

இறுதிக்கட்டப்போர் நடந்த முள்ளிவாய்க்கால் பகுதி ஒரு கிலோ மீட்டர் சதுரப் பரப்பளவில் இருக்கும் சிறிய பகுதி. அந்தப் பகுதியில்தான் மக்களை கொன்று குவித்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

2009 மே மாதம் 18-ந் தேதி இரவு போர் தீவிரமடைந்து, அங்கிருக்கும் மரங்களையும் வாகனங்களையும் ராணுவம் கொளுத்தியது. அப்போது பாலச்சந்திரன் தன் மெய்காப்பாளர்கள் நால்வருடன் இரவு முழுவதும் பதுங்கு குழியில் இருந்திருக்கிறார். காலையில் வேறு வழியே இல்லாமல் மெய்க்காப்பாளர்களின் முடிவுப்படி 53ம் படையில் சரணடைந்தனர்.

மே 19ம் தேதி காலை 7.30 மணிக்கு அவர்கள் சரணடைந்ததும், பாலச்சந்திரனையும் அவரது மெய்க்காப்பாளர்களையும் தனித்தனியே பிரித்து விட்டனர். சரணடைந்தவர்களைப் பற்றி அங்கே பணியில் இருந்த மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, கோத்தபாய ராஜபக்சவுக்கு தகவல் சொல்லி இருக்கிறார்.

கோத்தபாய இந்தத் தகவலை கருணாவிடம் சொல்லி இருக்கிறார். ‘அவனை உயிரோடு விட்டால், அது நமக்குத்தான் பிரச்சினை. அந்த பையன் ஒரு மைனர். சட்டத்தின்படி எந்தத் தண்டனையும் வழங்க முடியாது. சட்டத்தின் பிடியில் இருந்து அவன் தப்பிவிட்டால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராகக்கூட அவன் வந்து விடலாம். எல்லோரையும்போல அவனையும் கொன்று விடலாம்’ என்று கோத்த பாயவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறார்.

அதற்கான உத்தரவு 53-ம் படைக்குப் பிறப்பிக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு பாலச்சந்திரன் உடல் அருகில் துப்பாக்கியை வைத்து ஐந்து முறை சுட்டிருக்கிறார்கள். யாரைக் கொன்றாலும் தடயம் இல்லாமல் எரித்து விடுவதும்தான் அந்த படைப்பிரிவின் வழக்கம். பாலச்சந்திரனையும் அப்படித்தான் தூக்கிச் சென்று விட்டனர்.

பாலச்சந்திரன் சரணடைந்தபோது காலை 7.30 மணிக்கு எடுக்கப்பட்ட வீடியோவும், 9.30 மணிக்கு அவர் கொல்லப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோவும்தான் இப்போது வெளியானது.

கே: பாலச்சந்திரனிடம் விசாரணை எதுவும் நடத்தப்பட்டதாகத் தெரிகிறதா?

ப: பாலச்சந்திரனிடம் அவரின் அம்மா பற்றியும், அக்காவைப் பற்றியும் கேட்டார்களாம். ‘நானும் என் அம்மாவும் நேற்று ஒன்றாகத்தான் இருந்தோம். தப்பிக்க வேண்டும் என சொன்னவுடன் அவர்கள் ஒரு குழுவாகவும், நாங்கள் ஒரு குழுவாகவும் கிளம்பும் போது இடையில் அம்மாவைக் காணோம். அவர்கள் இப்போது எங்கே என்று எனக்கு தெரியாது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். வேறு எதுவும் அவரிடம் கேட்கவில்லை. சுடுவதற்காக துப்பாக்கியை பாலச்சந்திரனுக்கு அருகில் நீட்டியபோதுகூட, தன்னைச் சுடப்போசிறார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை.

கே: வீடியோ பொய் என்று இலங்கை அரசு சொல்கிறதே?

ப: அந்த மொபைலில் இருந்த வீடியோவை நானே பலமுறை பார்த்து அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்த பிறகுதான் ஆவணப்படம் எடுத்தோம். வீடியோவை இங்கிலாந்தில் ஆய்வுக்கும் உட்படுத்தினோம். வீடியோவில் இருப்பது அத்தனையும் உண்மை... உண்மை... உண்மை. இப்போதுகூட அங்கிருக்கும் தமிழர்கள் உணவு, உடை, தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு எந்த உதவிகளையும் இலங்கை அரசு செய்வது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

‘நோ பயர் ஸோன்’ தொகுப்பில் இடம்பெற்ற வீடியோக்கள் பலவற்றைக் கொடுத்து உதவியவர் இலங்கையைச் சேர்ந்த கண்ணன். கடைசிக் கட்டப்போரில் பிரபாகரனுடன் தொடர்பில் இருந்தவர்களில் கண்ணனும் ஒருவர். அவர் சொல்கிறார்.

இந்த நூற்றாண்டின் மிகக்கொடிய இன அழிப்பின் சோகம் இது. மிகச்சிறிய பரப்பளவு கொண்ட பகுதி முள்ளிவாய்க்கால். அந்தப் பகுதிக்குள் லட்சக்கணக்கான தமிழர்கள் அடைபட்டிருந்தார்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவுதான். பாதிப்பேர் உணவு இல்லாமல் கடல் நீரைக் குடித்தே செத்துப்போனார்கள்.

தமிழ் மக்கள் கூட்டம் ராணுவத்திடம் சரணடைய வந்தனர். ‘நாங்கள் உங்களைச் சுட மாட்டோம். நீங்கள் அனைவரும் துணிகள் இல்லாமல், நிர்வாண நிலையில்தான் எங்களிடம் வரவேண்டும்’ என்று கட்டளை இட்டது ராணுவம். வேறு வழி இல்லாமல் அப்பா முன் மகளும், மகனின் முன் தாயும், அண்ணனின் முன் தங்கையும் நிர்வாணமாக வந்து சரணடைந்தனர்.

வவுனியாவில் இருக்கும் மெனிக் பார்ம் முகாமிலும், வெலிகந்தையில் இருக்கும் மறைமுக முகாமிலும் தினமும் இரவு நேரங்களில் பெண்களின் கதறல் சப்தம் கேட்டபடியே இருக்கும். இதுவரை இலங்கையில் கொல்லப்பட்ட மக்கள் ஒரு லட்சத்து 47 ஆயிரம் பேர் இருப்பார்கள்.

போரில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் பலவற்றையும் இலங்கை ராணுவம் பயன்படுத்தியது. கொத்தணி குண்டு 500 சிறிய குண்டுகளாகப் பிரிந்து சென்று தாக்கும். உலக நாடுகள் எதுவும் அந்த குண்டுகளைப் பயன்படுத்தாது. ஒயிட் பாஸ்பரஸ் அதைவிடக் கொடூரமானது. ஒரே ஷாட்டில் 100க்கு மேற்பட்ட குண்டுகளை உமிழும். அந்த குண்டுகள் சுற்றியிருக்கும் எல்லா ஆக்ஸிஜனையும் உறிஞ்சிக் கொண்ட பிறகுதான் வெடிக்கும். அதனால் குண்டு பாதிப்பையும் தாண்டி பலர் மூச்சுத் திணறியே இறந்தனர். சானல் 4 வெளியிட்டு இருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் உதாரணங்கள் மட்டும்தான்.ஒட்டு மொத்தமும் வெளிவந்தால், இலங்கை தாங்காது.

நன்றி மாலைமலர்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Feb 28, 2013 3:20 am

அநீதியான வழியில் யார் எதை அடைய நினைத்தாலும் அதன் விளைவு முரணானதாகவே இருக்கும்.
இலங்கையை தனி சிங்கள நாடாக ஆக்கிவிட வேண்டும் என்ற வெறியில் நினைத்துப்பார்க்க முடியாத கொடூரங்களை சிங்களம் செய்திருக்கிறது, செய்துகொண்டிருக்கிறது.
இதன் பின்விளைவு அவர்கள் நினைப்பதுபோல் நிச்சயம் இருக்காது.முரணானதாகவே இருக்கும்.
அதாவது நாடு இரண்டாக பிரிக்கப்படப்போவதை சிங்களவர்களால் தடுக்க முடியாது.

ஒருபக்கம் சீன சார்பானதாகவும், மறுபக்கம் இந்திய சார்பானதாகவும் இருக்கும்.

இதன் ஆரம்பம்தான் அமெரிக்காவின் இன்றைய சீண்டல்.




நேர்மையே பலம்
சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நிமிடங்களுக்கு முன்பு பாலசந்திரனிடம் அம்மா, அக்கா எங்கே என்று விசாரித்தனர்: சேனல் 4 தயாரிப்பாளர் பேட்டி 5no

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக