புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
4 Posts - 5%
Rutu
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
2 Posts - 2%
prajai
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
2 Posts - 2%
Jenila
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
1 Post - 1%
manikavi
மதமாற்ற வியாபாரம்! Poll_c10மதமாற்ற வியாபாரம்! Poll_m10மதமாற்ற வியாபாரம்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதமாற்ற வியாபாரம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Mar 28, 2014 4:44 pm

நான் அப்போது ப்ளஸ் ஒன் சேர்ந்திருந்த சமயம்.. எந்த ஜென்மத்தில் செய்த பாவமோ பத்தாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மார்க்குக்கு முதல் குரூப் தான் கொடுப்போம் என்று சொல்லி என்னை அந்த கிணற்றுக்குள் தள்ளி விட்டார்கள்.. அது வரை ஒரே புக்காக இருந்து உயிரை வாங்கிய சயின்ஸ், ப்ளஸ் ஒன்னில் இருந்து டபுள் ஆக்ட் கொடுத்து பீதியை கிளப்பியது... நானாவது பரவாயில்லை, பயாலஜி எடுத்த பயலுகளுக்கு அது ட்ரிபிள் ஆக்ட் ட்ரீட் கொடுத்தது.. அடுத்த எமகண்டம் மேத்ஸ்.. அதுவரை ஜியாமெட்ரியும், கிராப்பும் மட்டுமே படித்து மேத்ஸ்சில் பாஸ் ஆகிய எனக்கு ப்ளஸ் ஒன்னில் ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்கள், இனி ஜியாமெட்ரியும் கிராப்பும் கிடையாது என்று.. பாடங்கள் எல்லாம் ரொம்ப கஷ்டமாக இருந்தன.. பள்ளிக்கு போகவே வெறுப்பாக இருக்கும்..

அப்போது தான் ஒரு மாலை வேளையில் என் பக்கத்து வீட்டுக்காரர் என்னிடம் பேச்சு கொடுத்தார். அவர் ஒரு ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர். ”ப்ளஸ் ஒன்னா படிக்கிற?”

“ஆமா அண்ணாச்சி”

“ஃபர்ஸ்ட் க்ரூப்பா?”

“ஹ்ம் ஆமா”.. இந்த ஃபர்ஸ்ட் குரூப் என்று வெளியில் பீற்றிக்கொள்ள பெருமையாகத்தான் இருக்கும்.. ஆனால் படிப்பதற்குள் தான் டவுசர் கழண்டு விடும்..

“ரொம்ப கஷ்டமா இருக்கும்ல ஃபர்ஸ்ட் குருப்புன்னா?” எனக்காக வருந்துவது போல் முகத்தை வைத்துக்கொண்டு கேட்டார்..

ஆஹா நம்ம கஷ்டத்தை புரிந்த ஒரே ஜீவன் என்று நினைத்து “ஆமாண்ணாச்சி” என்றேன்..

“நீ ஈசியா படிச்சி பாசாயி நல்ல மார்க எடுக்க என்ட்ட ஒரு ஐடியா இருக்கு”

“என்னண்ணாச்சி அது?”

“நீ டெய்லி ஏசப்பா கிட்ட pray பண்ணு.. நீ தான் க்ளாஸ் ஃபர்ஸ்ட்”

“நெஜமாவா?”

“ஆமா..”

“ஏசு சாமிய கும்பிட்டா நான்...” குறுக்கிட்டு, “கும்பிடுறதுன்னுலாம் சொல்லக்கூடாது.. Prayer இல்லனா ஜெபம் பண்ணுறதுன்னு சொல்லணும்.. எங்க சொல்லு பாப்போம்”

“சரி. ஏசு சாமிய pray பண்ணுனா நான் ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துருவேனா?”

“ஃபர்ஸ்ட் மார்க் என்ன? அதுக்கு பெறவு எல்லாத்துலயும் நீ தான் ஃபர்ஸ்ட்..” என்று சொல்லி என்னை அவர் வீட்டுக்குள் அழைத்துச்சென்று எப்படி முட்டி போட்டு ப்ரேயர் பண்ண வேண்டும் என சொல்லிக்கொடுத்தார்.. பைபிளை திறந்து எனக்காக என்னமோ வாசித்தார்.. நான் நல்லா மார்க் எடுக்கணும்னு வேண்டினார்.. எனக்கு அவரையும், ஏசு சாமியையும் மிகவும் பிடித்துவிட்டது.. ‘ச்சே நமக்காக எவ்வளவு தூரம் சாமிட்ட வேண்டுறாரு? இல்ல இல்ல ஜெபம் பண்ணுறாரு?’ என்று அவர் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.. அவர் வீட்டில் இருந்து கிளம்பும் போது ஒன்றை சொன்னார், “ஒங்க வீட்ல இருக்கிற ஃபோட்டோவ எல்லாம் இனிமே கும்பிடாத.. அதெல்லாம் சாத்தான்.. அதனால தான் நீ இப்ப கஷ்டப்படுற, புரியுதா?”..

நான் தயக்கத்துடன், “அப்புடியா?”

“ஆமா.. சாமினா ஒன்ன இப்டி கஷ்டப்பட விடுமா? அது எல்லாமே சாத்தான்.. ஏசப்பா தான் ஒரே சாமி.. உண்மையான சாமி.. இனிமேல் அவர மட்டும் ப்ரே பண்ணு, சரியா?”

“சரிண்ணாச்சி”. மறுநாளில் இருந்து நான் ஏசப்பாவை தான் ஜெபம் செய்தேன்.. சாத்தான்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. தார் ரோட்டுக்கு நடுவில் வெள்ளைக்கோடு போட்டது போல் என் நெற்றியில் இருந்த திருநீறு அதற்கு அடுத்த நாளில் இருந்து இருக்கவில்லை. முதல் மாதத்தேர்வு முடிந்து பரிட்சை பேப்பரை கொடுத்தார்கள். தமிழ், இங்கிலீஷை தவிர அனைத்திலும் ஃபெயில். அதிலும் மேத்ஸ்சில் முட்டை.. என் வாழ்க்கையில் அது தான் நான் முதன்முதலில் ஃபெயில் ஆகிய தருணம். முட்டை மார்க் எல்லாம் என் கனவிலும் வாங்குவேன் என்று நினைக்கவில்லை. நான் மட்டும் முட்டை அல்ல, வகுப்பில் முக்கால்வாசி பேர் முட்டை தான்.. ஒரு க்றிஸ்டியன் பிள்ளை கூட ஃபெயில் ஆகி அழுதுகொண்டிருந்தது பாவம்.. எனக்கு கடுப்பாகிவிட்டது, ‘என்னடா இது ஏசப்பாவ கும்பிட்டும் இப்படி ஆயிருச்சே? அவருக்கு இவ்வளவு தான் பவரோ?’னு..

மாலை அந்த பக்கத்து வீட்டு அண்ணாச்சியிடம் விசயத்தை சொன்னேன்.. அவர் சொன்னார், “நீ அந்த சாத்தான இப்ப கும்பிடாம ஏசப்பாவ ஜெபம் பண்ணுறீல, அதான் சாத்தான் ஒன்ன இப்படி தண்டிக்குது”..

“ஆனா க்ளாஸ்ல எல்லாருமே ஃபெயில் தான்ண்ணாச்சி.. ஒரு க்றிஸ்டின் பிள்ள கூட ஃபெயில் தான் தெரியுமா?”

“அதான்டா சொல்றேன்.. நீ ஏசப்பாவ கும்பிடுறது தெரிஞ்சதும் அந்த சாத்தான் எல்லாரையும் இப்படி பழிவாங்குது. அதான் எல்லாரையும் ஃபெயில் ஆக்குது”

எனக்கு கோபம் வந்துவிட்டது.. தன்னை நம்பி கும்பிட்ட, ஸாரி, ஜெபம் பண்ணிய ஒருத்தனை காப்பாற்றாவிட்டாலும் பரவாயில்லை, அவனால் பிறர் பாதிக்கப்படுவதையும் பார்த்துக்கொண்டு இருக்கும் ஆளா எல்லாம் வல்ல கடவுள்? அவரை நம்பியா இனியும் நாம் போவது? சாத்தான் என்றாலும் இத்தனை நாட்களில் என்னை ஃபெயில் கூட ஆக்கியதில்லை பிள்ளையாரும், சரஸ்வதியும். படிக்காமல் போனதால் வாத்தியாரிடம் அடி வாங்கிக்கொடுத்தாலும், பரிட்சை அன்று கும்பிட்டு போனால் கண்டிப்பாக பாஸ் தான்.. ஆனால் இந்த புதுக்கடவுள் என்னை ஃபெயில் ஆக்கும் வரை, அதுவும் முட்டை வாங்கும் வரை பார்த்துக்கொண்டிருக்கிறார்.. அந்த ஆள் வேஸ்ட் என முடிவு செய்து கொண்டு, அந்த அண்ணாச்சியிடம் இருந்து மெல்ல நகர்ந்தேன்.. “டேய் எங்க போற? வா சாத்தான்ட்ட இருந்து ஒன்ன காப்பாத்த ஒரு ப்ரேயர் பண்ணிருவோம்”

’ஒன்னும் வேண்டாம்.. ஒங்க ஏசுவ விட எங்க சாத்தானுக்கு தான் பவர் ஜாஸ்தின்னு தெரியுது, நான அவரையே கும்பிட்டுக்கிறேன்’னு சொல்ல நெனச்சேன்.. ஆனா தைரியம் இல்லாதனால, “எங்கம்மா தேடுவாங்க அண்ணாச்சி, நான் பெறவு வாரேன்”னு சொல்லிட்டு ஓடி வந்துட்டேன்.. அதற்கு பின் நான் அவர் முகத்தில் கூட முழிக்கவில்லை.. ஜெபமும் செய்வதில்லை, சாமி தான் கும்பிடுகிறேன் தினமும் தார் போன்ற என் நெற்றியில் வெள்ளைக்கோடு போன்ற திருநீறு இட்டு.. கதை இதோடு முற்றும்.. இப்ப மேட்டருக்கு வருவோம்.

நம் தமிழ் நாட்டில், அதுவும் குறிப்பாக தென்பகுதிகளில் பக்கத்து வீடு, தூரத்து சொந்தம், ஸ்கூல் டீச்சர், வகுப்புத்தோழன் போன்ற யாராவது ஒருவரிடம் இருந்து இது போன்ற மறைமுக, நேரடி மதமாற்ற முயற்சியை பெரும்பாலும் எல்லோரும் அனுபவித்திருப்போம்.. நாம் சோர்ந்திருக்கும் நேரத்திற்காக காத்திருக்கும் அவர்கள், சரியான நேரம் வரும் போது, வார்த்தைகளில் கனிவைக்கூட்டி நம்மை மதம் மாற்ற முயற்சிப்பார்கள். ஒரு சின்ன statistics பாருங்கள்..

ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 25லட்சம் பேர்கள் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்படுகிறார்கள்/மாறுகிறார்கள். இத்தனைக்கும் கிறிஸ்தவம் தான் உலகின் மிகப்பெரிய மதம். அதன் இரண்டாம் மூன்றாம் இடங்களில் இருக்கும் இஸ்லாம், இந்து மதங்களின் ஒட்டு மொத்த கூட்டுத்தொகையை விட மொத்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தான் உலகில் அதிகம். ஏழை, எளியவன் தனக்கு இருப்பதே போதும் என நிம்மதியாக இருப்பான்.. ஆனால் அதிக காசு இருப்பவன் ’இன்னும் இன்னும் இன்னும்’ என்று அலைந்து கொண்டு இருப்பானே, அது போல் தான் இவர்களும்.. உலகம் முழுவதும் தாங்கள் பரந்து வளர்ந்திருந்தாலும், இன்னும் இன்னும் இன்னும் என்று அலைகிறார்கள் பிறரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு. அவர்கள் மதம் மாற்றுவதற்கு ஒன்றும் பிறர் மீதான அக்கறையோ, உண்மையான கடவுள் பக்தியோ காரணம் இல்லை. பின் என்ன காரணம்? அந்த காரணமும் அதற்கு பின் இருக்கும் மார்க்கெட்டிங் வித்தைகளும் பலருக்கும் தெரிந்த ரகசியம் தானே? நான் வேறு என்னத்தை புதுசாக சொல்வது?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். நம் அண்டை வீட்டில் இருக்கிறார்கள். நம்முடன் நன்றாக பழகுகிறார்கள்.. தீபாவளிக்கு நம் வீட்டில் செய்யும் பலகாரங்களை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அட பொங்கல் அன்று கரும்பு கொடுத்தால் கூட திங்க மாட்டார்கள்.. கேட்டால், சாத்தான் இருக்குமாம் அதில் எல்லாம்.. அண்டை வீட்டுக்காரன் என்ன உங்களுக்கு விஷமா கொடுத்துவிடப்போகிறான்? கிராமங்களில் அறுவடையின் போது, சாமியை கும்பிட்டுவிட்டுத்தான் ஒவ்வொரு முறையும் நெல் அறுவடை நடக்கிறது. எப்படி அதை மட்டும் உண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. நெல்லில் மட்டும் சாத்தான் புகுந்துவிடாதா? விருந்தோம்பல் என்கிற ஒரு அடிப்படை பண்பை கூட மதிக்காத, சக மனிதனுக்கான மரியாதையை கூட கொடுக்காத இவர்கள் தான் நாம் கஷ்டப்படும் போது ஓடோடி வந்து நம் மீது அக்கறை காட்டுவார்கள் மதம் மாற்ற.. அவன் கொடுக்கும் சாதாரண பலகாரத்தை நம்பி திங்க மாட்டீர்கள், ஆனால் அவன் உங்களை நம்பி உங்கள் மதத்திற்கு மாற வேண்டும் என எதிர்பார்ப்பீர்கள். நல்ல லாஜிக். ரோமன் கத்தோலிக்கர்களை தவிர மற்ற அனைத்து பிரிவு கிறிஸ்தவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள்..

இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே அனைத்து மதங்களையும் அனுசரித்து வாழும் மக்கள் இந்துக்கள் மட்டும் தான்.. சிறு வயதில் இருந்தே அவர்கள் பக்கத்து வீட்டினருடன் சர்ச்சுக்கு செல்லலாம், மசூதிக்கு சென்று தண்ணீர் தெளித்துவிட்டு வரலாம், வீட்டில் ஏசுநாதர் படத்தை மாட்டி அதற்கும் வெள்ளிக்கிழமைகளில் மாலை மாட்டி பூஜை செய்யலாம், கழுத்திலோ கையிலோ மேரி மாதாவின் படத்தை டாலராகவோ மோதிரமாகவோ மாட்டிக்கொள்ளலாம்.. வீட்டில் யாரும் தடுக்க மாட்டார்கள். சொல்லப்போனால் தங்கள் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் இன்னும் எக்ஸ்ட்ராவாக ஏசு, அன்னை மேரி, அல்லா மூவரையும் சேர்த்துக்கொள்வார்கள், அவ்வளவு தான்.. அவர்களைப்பொறுத்தவரை கடவுள் பல ரூபங்களில் இருக்கிறார் என்பார்கள், அது ஏசுவாகவும் இருக்கலாம் என்பார்கள். இந்து மதத்தின் பலமும் அது தான், பலவீனமும் அது தான். ஆனால் இதையே ஒரு கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ கண்டிப்பாக சொல்ல மாட்டார்.. சாத்தான், ஹரம் என்றெல்லாம் பிற மத நம்பிக்கைகளை இழிவு படுத்துவார்கள்.

இவர்களின் மதம் மாற்றும் டெக்னிக் மிக மிக கொடுமையானது. ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. திடீரென்று ஒரு பிரச்சனை வருகிறது அவர்கள் குடும்பத்தில். உடல் ஆரோக்கியம் கெட்டு, மிகுந்த மன உளைச்சலும் பண விரயமும் ஆகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது தான் இவர்கள் உள்ளே நுழைவார்கள். அவருக்காக, அந்த குடும்பத்திற்காக கண்களை மூடி கண்ணீர் விட்டு ஜெபம் செய்வார்கள். நம் மக்களும், ’சொந்தக்காரன் கூட கண்டுக்காத சூழ்நிலையில கூட, யாருன்னே தெரியாத ஒரு ஆள் நமக்காக சாமி கும்பிடுறாரே?’னு ஃபீல் ஆகிருவாங்க.. நம் மக்கள் எல்லாம் sentimental idiots என்பதை தெரிந்து வைத்திருப்பதால் தான் இப்படி sentiment attack நடத்துவார்கள். பின் அந்த வீட்டு பெண்களை சர்ச்சுக்கும், தங்கள் வீட்டில் நடக்கும் ஜெப நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பார்கள். அந்த பெண்ணும் சாதாரணமாகத்தான் ஆரம்பத்தில் செல்வாள். போகப்போக அவளின் பொட்டை அழிப்பார்கள், குழந்தைகளையும் மாற்றுவார்கள், வீட்டில் இருக்கும் இந்து அடையாளங்களை மறைப்பார்கள். எல்லாம் மாறிய பின் அந்த வீட்டின் ஆண் மட்டும் என்ன செய்ய முடியும்? அவனும் மாறிவிடுவான். ஆனால் அந்த கஷ்டம் மட்டும் அப்படியேத்தான் இருக்கும்.

தாழ்த்தப்பட்டவர்களை மதம் மாற்றும் போது, ‘நாங்கள் ஜாதியே பார்ப்பதில்லை. எங்கள் மதத்திற்கு வந்தால் நீ உயர்ந்துவிடலாம்’ என்பார்கள்.. ஆனால் மதம் மாறிய பின் தான் அவனுக்கு தெரியும், ஒரு கிறிஸ்தவ பள்ளரால் ஒரு கிறிஸ்தவ நாடாரையோ கிறிஸ்தவ வேளாளரையோ மணக்க முடியாது என்று. அங்கு போயும் அவன் தாழ்த்தப்பட்டவனாகத்தான் இருக்க வேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் ஜாதிய ஏற்றத்தாழ்வு மறைந்துவிடும் என்பது பெரும் அபத்தம்.. இன்றும் தென் தமிழக்த்தில் கிறிஸ்தவர்களின் கல்யாண பத்திரிக்கைகளில், “நெல்சன் நாடார்”, “சேவியர் பிள்ளை” என்று தான் இருக்கும்.. இதை விட ஒரு பெரிய கொடுமை, ஊர் ஊராக “பிராமண சகோதரியின் சாட்சியை காண வாருங்கள்” என்று போஸ்டர் ஒட்டி அழைக்கிறார்கள் மதம் மாறிய ஒரு பிராமண பெண்ணின் பேச்சை கேட்க.. ஜாதியே இல்லை என்று பீற்றும் ஒரு மதம் தான் பிராமண ஜாதியை உயர்வான ஜாதி போல் குறிப்பிட்டு “பிராமண சகோதரியின் சாட்சி” என்கிறது. ஒரு நடிகர் கூட “கிறிஸ்டியன் ப்ராமின் அசோசியேசன்” என்று ஆரம்பித்திருப்பதாக கேள்வி..

அடுத்த விசயம், ”எங்கள் மதத்திற்கு மாறிவிட்டால், ஊமைகள் பேசுவார்கள், குருடர்கள் பார்ப்பார்கள், முடவர்கள் நடப்பார்கள்” என்று அள்ளி விடுவார்கள். ஆனால் இன்னமும் கிறிஸ்தவர்களில் குருடர்களும், செவிடர்களும், முடவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? மத ஊழியம் செய்யும் ஒரு கிறிஸ்தவ நண்பரிடம், “உங்கள் மதத்திலேயே பலர் இது போல் இருக்கும் போது அவர்களை குணப்படுத்தாமல் ஏன் பிறரை டார்கெட் செய்கிறீர்கள்?” என்றேன்.. அதற்கு அவர் சொன்ன பதில் என்னை தூக்கிவாரிப்போட்டது.. “அவர்கள் எல்லாம் ஏசுவை உண்மையாக நம்பவில்லை. அதனால் தான் செவிடாக, முடமாக, குருடாக இருக்கிறார்கள். உண்மையாக நம்பினால் மட்டுமே குணமாகும்” என்றார். தன்னை நம்பாத மக்களை குருடனாக, முடவனாக வைத்திருக்கும் ஆள் எப்படி கடவுளாக முடியும்? இது போல் குருடர்களை பார்க்க வைக்கிறேன், முடவர்களை பேச வைக்கிறேன், அதிசயங்களை காணப்பண்ணுகிறேன் என்று ஊர் ஊராக மேடை போட்டு மேஜிக் ஷோ போல் நடத்தும் ஆட்கள் எல்லாம், தங்கள் உடம்புக்கு ஒன்று என்றால் அப்பல்லோவிலோ, ராமச்சந்திராவிலோ அல்லது அமெரிக்காவிலோ மருத்துவத்திற்கு சென்று விடுகிறார்கள். ஏன், அவர்களும் ஜெபம் செய்தே தங்களை குணப்படுத்திக்கொள்ளலாமே? ஒரு வேளை அவர்களும் ஏசுநாதரை உண்மையாக நம்புவதில்லையோ?

”எங்க கம்பெனி காம்ப்ளான குடிச்சா பனை மரத்துல பாதியா ஒசரமா வளந்துரலாம்..”


”எங்க கம்பெனி ஹார்லிக்ஸ குடிச்சா கால்குலேட்டர் இல்லாமலே கணக்கு போடுற அறிவாளியா ஆயிரலாம்...”



”எங்க கம்பெனி ஃபேர் & லவ்லி போட்டா செக்கச்செவேர்னு ஆயிரலாம்..”


இந்த விளம்பரங்களின் வரிசையில், உலகம் முழுவதும் பெரிதும் வரவேற்பை பெற்ற successful ஆன இன்னொரு விளம்பரம்..


“எங்க மதத்துக்கு மாறினா கஷ்டம் எல்லாம் மறஞ்சி, கோடி கோடியா பணம் கொட்டி, வாழ்க்கையே சுபிட்சமாயிரும்.. அற்புதங்கள் நிகழும்”...

இப்படி சொல்லி மதம் மாற்றுபவன் வீட்டிலும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள் இருக்கும். அவன் மனைவிக்கும், அம்மாவுக்கும் வீட்டில் சண்டை இருக்கத்தான் செய்யும்., மாசக்கடைசியில் கணக்கு போட்டுத்தான் அவனும் வாழ்வான், பிள்ளைகளில் வருங்காலத்தை நினைத்து அவனுக்கும் கவலைகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும். கஷ்டம், கவலையே இல்லாமல் மனிதன் இருக்க வேண்டும் என நினைத்தால் அது அவன் மரணத்திற்கு பின்பு தான். ஒரு மத்தத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் கஷ்டமும் கவலைகளும் எப்படி போகும்? உடம்பில் உயிர் இருக்கும் வரை கஷ்டமும், போராட்டமும் இருக்கத்தான் செய்யும்.


ஏற்கனவே கேள்விப்பட்ட கதை ஒன்று. ஒரு பெண் புத்த மகானிடம் “சாமி நாம் எப்பவுமே சந்தோசமா இருக்கணும். அதுக்கு வழி சொல்லுங்கள்” என்கிறாள்.. ”சாவே நிகழாத வீட்டில் ஒரு வேளை சோறு வாங்கி சாப்பிடு உன் வாழ்வில் என்றும் சந்தோசம்” என்கிறார். அவள் எங்கு தேடியும் அப்படி ஒரு வீடு இல்லவே இல்லை. அனைத்து வீடுகளிலும் இன்றோ, நேற்றோ, சில வருடங்களுக்கு முன்போ சாவு நிகழ்ந்திருக்கிறது. அவள் சோகத்துடன் புத்த மகானிடம் வருகிறாள். புன்முறுவலுடன் புத்தர் சொல்கிறார், “எப்படி சாவிடம் இருந்து யாரும் தப்ப முடியாதோ, அது போல் இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளில் இருந்தும், கஷ்டங்களில் இருந்தும் தப்ப முடியாது. அதனால் பிரச்சனைகளை எதிர்கொள்ள போராட கற்றுக்கொள்” என்கிறார். அது போல் தான், மதம் மாறினால் பிரச்சனைகள் தீராது.. நான் ஒருவனிடம் கடன் வாங்கியிருக்கிறேன், திருப்பி கட்ட முடியவில்லை. அவன் என்னை மிரட்டுகிறான்.. நான் மதம் மாறிவிட்டால், என்னிடம் கடனை திரும்ப கேட்க மாட்டானா அவன்? என் சுகரும், ஹார்ட் ப்ராப்ளமும் மதம் மாறினால் சரியாகிவிடுமா? கொஞ்சம் அறிவை பயன்படுத்தி யோசித்தால் மதம் மாறுவது வேஸ்ட் என்று தெரிந்துவிடும். அதனால் தான் நாம் அறிவை பயன்படுத்த முடியாத, குழப்பமான சூழலில் இருக்கும் போது மதம் மாற்றுகிறார்கள்.

மதம் மாற்றுவதில் இப்போது புது யுக்தி நடிகர், நடிகைகளை மதம் மாற்றி அவர்கள் மூலம் பிரச்சாரம் செய்வது. பழம்பெரும் நடிகர் ஏவிஎம் ராஜனில் இருந்து, நக்மா, ஜூனியர் பாலய்யா, குமரிமுத்து, சாருஹாசன் என்று பலரையும் மதம் மாற்றி ஊர் ஊராக மதப்பிரச்சாரம் செய்ய வைக்கிறார்கள்.. நடிகர்கள், குளிர் பானங்கள், காப்பித்தூள், துணிக்கடைகளுக்கு எல்லாம் விளம்பரம் செய்த காலம் போய், இப்போது மதத்திற்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். நகைச்சுவை நடிகர் செந்தில், டி.ஆர்., ராமராஜன் போன்றவர்களும் மதம் மாறிவிட்டதாக சொல்கிறார்கள். உண்மையா என்பது சில நாட்களில் அவர்கள் மேடை ஏறும் போது தெரிந்துவிடும். கொஞ்ச நாட்களுக்கு முன் ரஜினி வீட்டிற்கு ஒரு கிறிஸ்தவ போதகர் வந்து ரஜினிக்காக் ஜெபித்திருக்கிறார். அந்த வெவரம் இல்லாத மனுசனும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். உடனே கிளப்பிவிட்டுவிட்டார்கள் ரஜினி மதம் மாறிவிட்டார், உண்மையான இறைவனை கண்டு பிடித்துவிட்டார் என.. கடவுளை விட அதை பின்பற்றும் நடிகனுக்கு தான் இங்கே முக்கியத்துவம் இருக்கிறது. கடவுள் தான் அனைத்திலும் பெரியவர், உயர்ந்தவர்.. ஆனால் இவர்கள் கடவுளையும், மதத்தையும் ஒரு சந்தைப்பொருள் போல் நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்துகிறார்கள். சூர்யாவே சன்ரைஸ் காப்பி தான் குடிக்கிறாராம், நீயும் குடி என்பது போல், சாருஹாசனே ஏசுவை தான் கும்பிடுகிறாராம் என்கிறார்கள். சாமியை விட அதை கும்பிடும் நடிகனுக்கு தான் இங்கு முன்னுரிமை. கடவுளை பரப்ப வேண்டும் என்பதை விட மதத்தை விற்க வேண்டும் என்கிற எண்ணம் தான் அவர்களிடம் அதிகம் இருப்பது போல் தெரிகிறது..

ஆனால் நான் சொன்ன எதையுமே ப்ரொட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். “நாங்களா மதம் மாற்றுகிறோம்? இல்லை.. அவர்களாக கர்த்தரை நம்பி வருகிறார்கள்” என்பார்கள். கர்த்தரை அவர்களாக நம்பி வருகிறார்கள் என்றால் ஏன் ஒவ்வொரு ஊரிலும் மூன்று நாள், நான்கு நாள் விடுதலைப்பெருவிழா, சுகமளிக்கும் கூட்டங்கள் எல்லாம் நடத்த வேண்டும்? அந்த மேடையில் ஏன் டிராமா போட வேண்டும்? நிஜமாகவே முடவனை நடக்க வைக்கிறார்கள் என்றால் நாட்டில் இருக்கும் முட வைத்தியசாலைகளை எல்லாம் மூடிவிட்டு அதற்கு பதிலாக சுகமளிக்கும் கூட்டங்களை தெருத்தெருவாக நடத்தலாமே? இப்படி ஊர் ஊராக மேடை நிகழ்ச்சி நடத்தி கோடி கோடியாக சம்பாதித்த மனிதர் கூட தன் கடைசி காலத்தில் இறைவனை நம்பாமல் ஆஸ்பத்திரியில் டாக்டரைத்தான் நம்பினார். ஏன் அவர் தன்னையும் குணப்படுத்த ஒரு கூட்டம் போட்டு மேடையில் ஆண்டவரிடம் ஜெபித்திருக்கலாமே?

மதம் மாறுவதால் ஒருவனின் பிரச்சனை தீர்ந்து விடும் என்றால், இந்தியா பாகிஸ்தான் பிரச்சனையை கூட எளிதாக தீர்த்துவிடலாமே? இந்திய, பாகிஸ்தான் ராணுவத்தளபதிகளை மதம் மாற்றிவிட்டால் அடித்துக்கொள்ள மாட்டார்களே? ஏன் சார், நீங்க பிரச்சனையே வராதுனு சொல்ற கிறிஸ்தவ மதத்த பின்பற்றுற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்ல தான தனி மனித வன்முறைகள், விவாகரத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கு? அதுக்கு என்ன காரணம்? மதம் மாறினால் செல்வம் கொழிக்கும் என்றால் இன்று உலகில் எந்த சர்ச்சுக்கும் வெளியில் பிச்சைக்காரர்கள் நின்று கொண்டிருக்க மாட்டார்கள். எல்லா கிறிஸ்தவர்களும் கோடீஸ்வரராக, நோயற்றவராக மாறியிருப்பார்கள். ஆனால் இல்லையே? கிறிஸ்தவர்களும் கவலையில் தோய்ந்து கொண்டு தானே இருக்கிறார்கள்? பின் அந்த மதத்திற்கு மாறி மட்டும் என்ன பயன்? இன்னொரு சின்ன டவுட். இந்துக்கள் இருக்கும் ஏரியாவிற்குள் மட்டும் வந்து மதம் மாற்ற நினைக்கும் ஆட்கள், ஏன் இஸ்லாமிய மக்கள் இருக்கும் ஏரியாவுக்குள் இதை முயற்சிப்பதில்லை? மத விற்பனை வேலையில் இருக்கும் யாராவது இதற்கு பதில் சொன்னால் தேவலை.

மதம், கடவுள் இதெல்லாம் கஷ்ட காலத்தில் நமக்கு ஒரு வழித்துணையாக இருக்கவும், தைரியத்திற்காகவும் நாமே படைத்துக்கொண்டே விசயங்கள், ஒரு நம்பிக்கை, அவ்வளவு தான்.. அந்த நம்பிக்கையால் வெற்றி பெறும் போதும் அகம்பாவம் தலைக்கு ஏறிவிடக்கூடாது என்பதற்காகத்தான், வெற்றி பெற்றதற்கும் இறைவன் தான் காரணம் என்று கூறி நன்றி செலுத்துகிறோம்.. மற்றபடி உங்கள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் வந்து “உன்னை நான் அதிசயங்களை காணப்பண்ணுவேன்”னு உங்கள் பெர்சனலுக்குள் நுழைவது தான் கடவுளின் வேலையா? இல்லை, இல்லவே இல்லை. கடவுள் - ஒரு வேளை இருந்தால் - இந்த அண்ட சராசரத்திற்கென்று என்று, அதன் செயல்பாடுகளுக்கென்று ஒரு நெட்வொர்க்கை பல கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமைத்திருப்பார். இப்போது அவர் ஒரு பெரிய நெட்வொர்க் கம்பெனியின் முதலாளி. நீங்களும் நானும் அந்த நெட்வொர்க்கின் சிறு புள்ளியில் இருக்கும் இந்த சூரிய குடும்பத்தில் ஒரு அங்கம். அவ்வளவு தான். அந்த நெட்வொர்க்கை நாம் சிதைக்காத வரை கடவுளுக்கு உங்களையோ என்னையோ பெர்சனலாக தெரிய வாய்ப்பேயில்லை.. ஆனால் இந்த நெட்வொர்க் மனிதனாகிய நம் எல்லையைத்தாண்டி, நம் சக்தியை மீறி இருப்பது. அதனால் நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள், உங்கள் வீட்டில் யாருக்கு என்ன பிரச்சனை என்றெல்லாம் அவருக்கு தெரியாது.. நீங்கள் அதையெல்லாம் சமாளித்து, சரிக்கட்ட வேண்டும். உங்கள் பிரச்சனைகளைக்கும் தீர்வு சொல்ல, உங்களுக்காக உழைக்க கடவுள் உங்கள் வீட்டு வேலைக்காரர் இல்லை.

So, நீங்கள் எந்த மதமாக இருந்தாலும், எந்த சாமியை கும்பிட்டாலும் உங்களது அடுத்த வேளை சோறுக்கு நீங்கள் தான் உழைக்க வேண்டும். எந்த சாமியும் நீங்கள் மதம் மாறி prayer பண்ணும் அழகைப்பார்த்து, அப்படியே உருகி, உங்கள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தி உங்களுக்கு பொன்னுச்சாமி ஓட்டல் ஃபுல் மீல்ஸையோ, அஞ்சப்பரின் அயிரை மீன் குழம்பையோ கொடுக்காது.. உங்களை மதம் மாற்ற நினைப்பவருக்கும் அது தான்.. “ஆஹா நம்ம மதத்துக்கு எத்தனை பேரை புதுசா கூட்டி வந்திருக்கிறான்? இவனால தான இன்னைக்கு நம்மள ஒரு 539 பேர் புதுசா கும்பிடுறாங்க?” என்றெல்லாம் புலங்காகிதம் அடைந்து கடவுள் அவன் வீட்டிலும் காலிங் பெல் எல்லாம் அடித்து சோறு கொடுக்க மாட்டார். அவன் பார்க்கும் மத விற்பனை வேலையை பார்த்தால் தான் அவனுக்கும் சோறு.. அந்த வேலைக்கு முறையான ஊதியம் இல்லையென்றால் அவனும் வேறு வேலைக்கு போய் விடுவான்..

மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல...  (நன்றி - சிவகாசிக்காரன் இணையம்)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 28, 2014 5:17 pm

மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல... wrote:

 சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Mar 29, 2014 12:25 pm

 மகிழ்ச்சி 
பாலாஜி wrote:
மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல... wrote:

 சூப்பருங்க 


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Mar 30, 2014 1:16 pm

பாலாஜி wrote:
மதம் மாறுவது என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. ‘கடவுள்’ என்னும் சொல்லின் நிஜமான அர்த்தம் புரிந்தவன் மதம் மாறவும் மாட்டான், மதம் மாற்றவும் மாட்டான். அந்த சொல்லின் அர்த்தம் புரியாத, அல்லது, புரிந்திருந்தாலும் அதை பெரிதாக சட்டை செய்யாத ஆட்கள், தங்களின் சுயலாபத்துக்காகத்தான் மதம் மாற்றுகிறார்கள். கடவுள் என்பவர் மதத்திற்கு அப்பாற்பட்டவர்... அவர் முருகனோ, சிவனோ, ராமனோ, ஏசுவோ, அல்லாவோ, புத்தரோ... யாராக இருந்தாலும் அவர் மதங்களை கடந்தவர். இதை புரிந்து கொண்டாலே பாதி பேர் தெளிவாகிவிடுவார்கள். மீண்டும் சொல்கிறேன், ஃபேர்&லவ்லி போட்டாலும் எப்படி உங்கள் ஒரிஜினல் கலர் மாறாதோ அது போல் நீங்கள் மதம் மாறினாலும், ஜாதி மாறினாலும், உங்கள் ஒரிஜினல் கஷ்டம் மாறாது. கஷ்டம் போக வேண்டும் என்றால் உழைக்க வேண்டும், சிந்திக்க வேண்டும். கணபதி படத்தை கடாசிவிட்டு கர்த்தர் படத்தை வைத்தால் உங்களுக்கு ஃபோட்டோ ஃப்ரேம் செலவு தான் 500ரூபாய் எக்ஸ்ட்ரா ஆகியிருக்குமே தவிர உருப்படியாய் மாற்றம் ஒன்றும் வந்திருக்காது. உங்கள் சோற்றுக்கும், நல் வாழ்வுக்கும் நீங்கள் தான் உழைக்க வேண்டும். கடவுள் உங்களுக்கான substitute அல்ல.. இந்த ஆத்திக பகுத்தறிவு இருந்தால் உங்கள் நம்பிக்கை கடவுள் மீது மட்டும் தான் இருக்கும், மதத்தின் மீது அல்ல... wrote:

 சூப்பருங்க 
 மதமாற்ற வியாபாரம்! 3838410834 மதமாற்ற வியாபாரம்! 3838410834 உண்மை உண்மை

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Mar 31, 2014 10:55 am

சாட்டையடிப் பதிவு பதிந்தமைக்கு நன்று.

ராணுவத்தில் உள்ள கீழ்நிலை சிப்பாய்களுக்கு அனைத்து விவரங்களும் சொல்லப்படுவதில்லை. விவரங்கள் தெரியாத வரை தான் அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பர். அவர்களுக்கு சொல்லி கொடுப்பதில் முக்கிய விஷயமாக இருப்பது அடிபணிவது மட்டுமே.

துரதிஷ்டமாக சில மதங்களும் இந்த நடைமுறையை பயன்படுத்துகிறது. இதன் விளைவு நான் சொல்லுவது சரி, அடுத்தவன் சொல்லும் அனைத்தும் தவறு என்று கொஞ்சமும் சுய சிந்தனை இல்லாமல் அனைத்தையும் போலி என்று எண்ணும் அவல நிலையில் அவர்கள் உள்ளனர். காட்டில் தெரியும் பல விலங்குகளில் மந்தையாகத் திரியும் விலங்குகள் அனைத்துமே தலைமைக்கு கட்டுப்பட்டவை. சுயமாக செயல்படத் தெரியாதவை. அது போல் மனிதரில் சிலர் மந்தைகளை உருவாக்கி அதில் சுகம் காண நினைக்கின்றனர். இது கூட்டத்தை நம்பி வாழ்பவை, தன் பலத்தை நம்பி வாழ்பவை அல்ல.

எளிமை, பலதரப்பு, ஆத்தீகம், அறிவியல் பூர்வமான சடங்குகள், சுய சிந்தனை, அனைத்து கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறன், இறை தத்துவம், பிறப்பின் பயன் என்று பல விஷயங்கள் இங்கு கொட்டிக் கிடக்கிறது. இவற்றை முறையாக முழுமையாக தெளிவாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் கடமை.

ஆதலால் குழந்தைகள் நன்கு கேள்வி கேட்டு அனைத்தையும் தெளிவுடன் கற்கும் குணத்தை நாம் வளர்க்க வேண்டும். நம்மால் இயன்ற வரை சரியான, தெளிவான விளக்கங்களை கொடுத்து அவர்களை அடிப்படையில் ஆழமாக பதிக்க வேண்டும். இதை சரியாகச் செய்தால் நம் பிள்ளைகள் மந்தையில் சேர வாய்ப்பில்லை.

சதாசிவம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சதாசிவம்



சதாசிவம்
மதமாற்ற வியாபாரம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Mon Mar 31, 2014 3:54 pm

சதாசிவம் wrote:சாட்டையடிப் பதிவு பதிந்தமைக்கு நன்று.

ராணுவத்தில் உள்ள கீழ்நிலை சிப்பாய்களுக்கு அனைத்து விவரங்களும் சொல்லப்படுவதில்லை. விவரங்கள் தெரியாத வரை தான் அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பர். அவர்களுக்கு சொல்லி கொடுப்பதில் முக்கிய விஷயமாக இருப்பது அடிபணிவது மட்டுமே.


..சரி

எவ்வளவு காலம் நீங்கள் ராணுவத்தில் இருந்தீர்கள் .

.உங்களின் ரேங்க் என்ன

.எத்தனை Assault Operation-?

சொல்கிறேன் கேளுங்கள் ..!!

எல்லா வீரர்களுமே அவர்களின் மேலதிகாரிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ..ஏன் நம்முடைய Arm Chair General கூட பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டவர் தான்

.

ஆனால் யாருமே barracks இல் என்ன நடக்கும் என்று கண்டு கொள்வது இல்லை ..இங்கு எந்த அதிகார வேறுபாடும் இல்லை ..ஒரு கடை நிலை வீரன் Naik அவரின் உயர்ந்த அதிகாரி ஏன் அவரின் commander உடன் தங்களது நேரத்தை கழிப்பார்கள் ..இதில் வயது வித்தியாசம் கூட இல்லை

ஒரு வீரன் இறந்தால் அதிகம் கவலை கொள்வது அவரின் leader தான் ..இன்னும் சொல்லப் போனால் அவரின் பெட்டியை சுமப்பது கூட ஒரு பெரிய அதிகாரியாகத் தான் இருக்கும் ..!!

இதற்கு மேலும் ராணுவத்தை ஒரு கட்ட பஞ்சாயத்து நடக்கும் இடம் என்று எண்ணாதிருங்கள் ..!!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னை பற்றி ..!!

என்னுடைய தாயும் தந்தையும் இந்து தான் ..ஒரு கிறிஸ்தவ மருத்துவமனையில் பிறந்ததால் என் தாய் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள் ..என் தந்தையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ..எனது 10 வயது வரை நான் இந்து கோயில்களுக்கும் சென்றுள்ளேன் கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் சென்றுள்ளேன் ..பிறகு படிப்படியாக இந்து ஆலயங்களுக்கு செல்வதை நிறுத்தி விட்டேன் ..சிறிது காலம் கழித்து கிறிஸ்தவத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதன் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தேன் ..யூத மதம் தென்பட்டது ..பிறகு கிறிஸ்தவ வழிபாடு முறைகளையும் அதன் ஒரு சில முறைகளும் ஒத்து வராததால் ..யூத மதத்திலே முழுமையாக என்னை இணைத்துக் கொண்டேன்



இந்த நேரங்களில் நான் இந்து இஸ்லாம் அரேபியம் மற்றும் புத்த மதங்களையும் படித்துப் பார்த்தேன் .ஆனால் யூத மதத்தை விட்டு மாறும் எண்ணம் வரவில்லை ..இப்போது சுமார் 3 ஆண்டு காலமாக யூத முறைப்படி தான் என்னை மாற்றி வருகிறேன்

ஆக என்னுடைய மத மாற்றத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ..இன்னும் என்னுடைய சாதி சான்றிதழில் இந்து என்று தான் உள்ளது\\


காட்டில் தெரியும் பல விலங்குகளில் மந்தையாகத் திரியும் விலங்குகள் அனைத்துமே தலைமைக்கு கட்டுப்பட்டவை.

தனியாகத் திரியும் அனைத்துமே சீக்கிரத்தில் வேடன் கையில் மாட்டி விடும் .தலைமைக்கு கட்டுப் பட்டு ஒழுக்கத்துடன் நடந்தால் அது நீண்ட நாள் சந்தோசமாக வாழும்

இவற்றை முறையாக முழுமையாக தெளிவாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் கடமை.

தாய் எட்டடி பாய்ந்தால் மகன் இப்போது 800 அடி பாய்கிறான்

நம்மால் இயன்ற வரை சரியான, தெளிவான விளக்கங்களை கொடுத்து அவர்களை அடிப்படையில் ஆழமாக பதிக்க வேண்டும்.

நம்மை விட நம் அடுத்த தலை முறையே மிக அறிவோடு வளரும் ...





......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81993
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 01, 2014 7:59 am

மதமாற்ற வியாபாரம்! 103459460 

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Apr 01, 2014 11:19 am

SajeevJino wrote:
சதாசிவம் wrote:சாட்டையடிப் பதிவு பதிந்தமைக்கு நன்று.

ராணுவத்தில் உள்ள கீழ்நிலை சிப்பாய்களுக்கு அனைத்து விவரங்களும் சொல்லப்படுவதில்லை. விவரங்கள் தெரியாத வரை தான் அவர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பர். அவர்களுக்கு சொல்லி கொடுப்பதில் முக்கிய விஷயமாக இருப்பது அடிபணிவது மட்டுமே.

..சரி

எவ்வளவு காலம் நீங்கள் ராணுவத்தில்  இருந்தீர்கள் .

.உங்களின் ரேங்க் என்ன

.எத்தனை Assault Operation-?

சொல்கிறேன்  கேளுங்கள் ..!!

எல்லா  வீரர்களுமே அவர்களின் மேலதிகாரிகளுக்கு கட்டுப்பட்டவர்கள் ..ஏன் நம்முடைய Arm Chair General கூட பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கட்டுப்பட்டவர்   தான்

.

ஆனால்  யாருமே barracks இல்  என்ன நடக்கும் என்று கண்டு  கொள்வது இல்லை ..இங்கு எந்த அதிகார வேறுபாடும் இல்லை ..ஒரு கடை நிலை வீரன் Naik அவரின் உயர்ந்த அதிகாரி ஏன் அவரின் commander உடன் தங்களது நேரத்தை கழிப்பார்கள் ..இதில் வயது வித்தியாசம் கூட இல்லை

ஒரு வீரன் இறந்தால் அதிகம் கவலை கொள்வது அவரின் leader தான் ..இன்னும் சொல்லப் போனால் அவரின் பெட்டியை சுமப்பது கூட ஒரு பெரிய அதிகாரியாகத் தான் இருக்கும் ..!!

இதற்கு மேலும் ராணுவத்தை ஒரு கட்ட பஞ்சாயத்து நடக்கும் இடம் என்று எண்ணாதிருங்கள் ..!!

ராணுவத்தை பற்றி கேட்டதை படித்ததை வைத்து இந்நிலை இருக்கும் என்று எண்ணியே இதை எழுதினேன், தவறிருப்பின் மன்னிக்கவும்...


----------------------------------------------------------------------------------------------------------------------------------------

என்னை பற்றி ..!!

என்னுடைய தாயும் தந்தையும் இந்து தான் ..ஒரு கிறிஸ்தவ மருத்துவமனையில் பிறந்ததால் என் தாய் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள் ..என் தந்தையும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ..எனது 10 வயது வரை நான் இந்து கோயில்களுக்கும் சென்றுள்ளேன் கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் சென்றுள்ளேன் ..பிறகு படிப்படியாக இந்து ஆலயங்களுக்கு செல்வதை நிறுத்தி விட்டேன் ..சிறிது காலம் கழித்து கிறிஸ்தவத்தின் உண்மைத்தன்மை மற்றும் அதன் வரலாற்றை ஆராய்ந்து பார்த்தேன் ..யூத மதம் தென்பட்டது ..பிறகு கிறிஸ்தவ வழிபாடு முறைகளையும் அதன் ஒரு சில முறைகளும் ஒத்து வராததால் ..யூத மதத்திலே முழுமையாக என்னை இணைத்துக் கொண்டேன்



இந்த நேரங்களில் நான் இந்து இஸ்லாம் அரேபியம் மற்றும் புத்த மதங்களையும் படித்துப் பார்த்தேன் .ஆனால் யூத மதத்தை விட்டு மாறும் எண்ணம் வரவில்லை ..இப்போது சுமார் 3 ஆண்டு காலமாக யூத முறைப்படி தான் என்னை மாற்றி வருகிறேன்

ஆக என்னுடைய மத மாற்றத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ..இன்னும் என்னுடைய சாதி சான்றிதழில் இந்து என்று தான் உள்ளது\\

இங்கு தான் நண்பரே பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. ஒருவர் அவராக மதம் மாறினாரே இல்லை அவரின் சூழல்களை பயன்படுத்தி  மதம் மாற்றினார்களா... இந்தியாவின் சரித்தம் உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். இங்கு இந்துக்களாக மாறியவர்கள் அதிகமா அல்லது இந்துக்களில் இருந்து மாற்றப்பட்டவர்கள் அதிகமா என்ற கேள்வியே இப்பதிவின் நோக்கம். ஒருவர் அவராக மதம் மாறுவதும் வெகு சொற்பமே, ஆனால் அவரை மூளைச் சலவை செய்து அவரை மதம் மாற்றச் செய்ய ஒரு கூட்டம் இங்கு செயல்படுகிறது. அவர்கள் வியாபாரிகளே.

மேலும் தங்களின் தனிப்பட்ட ஈர்ப்பு குறித்து கருத்து கூற எதுவுமில்லை. ஆயினும்
பொதுவாக ஒரு மாணவனுக்கு கணக்கு வாத்தியார் கடுமையுடன் சரியாக அமையாவிடில் அவனுக்கு கணக்கு பிடிக்காமல் போய் விடுகிறது. பின்னாளில் அவன் அதை ஆர்வமுடன் படிக்க முயன்றாலும் அதில் மனம் லயிப்பதில்லை. அவனுக்கு வரலாறு வாத்தியார் ஆரம்பம் முதலே இனிமையுடன் இருந்தால் அவனுக்கு வரலாறு இனிக்கும். இதில் கணக்கோ வரலாறோ தவறு செய்வதில்லை. அது எப்படி நமக்கு அறிமுகம் ஆகிறது என்பது தான் மிக முக்கியம். மதமும் இப்படித் தான் சிறு வயதில் தெளிவான, விவரமான விளக்கங்கள் இல்லாவிடில் பரிவாக சுலபமாகத் தெரியும் வேறு ஒன்றில் மேல் ஈர்ப்பு ஏற்படும். ஒருவர் எத்தனை புத்தகம் படித்தார், எவ்வளவு விளக்கம் கேட்டார் என்பதை பொறுத்தே ஒன்றில் சரி தவறு நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் திறந்த நிலையில் இல்லாமல் ஒருதலைப் பட்டசமாக நாம் ஏற்றுக்கொண்ட விசயத்தின் மீதே நம் மனம் லயிக்கும். இதனால் தான் உலகில் பெரும்பாலான மதப்பழக்கங்கள் சிறு வயதில் திணிக்கப்படுகிறது, பழக்கப்படுத்துவதாக நாம் கூறினாலும் அது திணிப்பதே. இப்படி வளர்ந்த பிறகு பிற வழக்கங்களுக்கு மாறுவது கடினம். சேலையிலும், சுடிதாரிலும் இருக்கும் பெண்ணை மினி ஸ்கிர்ட் போடச் சொல்வது போல்.. இதை சுலபத்தில் மாறுவதில்லை. ஆனால் அனைத்து உடைகளையும் போட்டு வளர்ந்த குழந்தை, கட்டுபாடுகளற்ற  குழந்தை  எதையும் ஏற்கும். இந்து மதத்தின் பலமும் பலவீனமும் இது தான். இங்கு எல்லாமே சரி....

காட்டில் தெரியும் பல விலங்குகளில் மந்தையாகத் திரியும் விலங்குகள் அனைத்துமே தலைமைக்கு கட்டுப்பட்டவை.

தனியாகத் திரியும் அனைத்துமே சீக்கிரத்தில் வேடன் கையில் மாட்டி விடும் .தலைமைக்கு கட்டுப் பட்டு ஒழுக்கத்துடன் நடந்தால் அது நீண்ட நாள் சந்தோசமாக வாழும்

இவற்றை முறையாக முழுமையாக தெளிவாக அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது நம் கடமை.

தாய் எட்டடி பாய்ந்தால் மகன் இப்போது 800 அடி பாய்கிறான்

நம்மால் இயன்ற வரை சரியான, தெளிவான விளக்கங்களை கொடுத்து அவர்களை அடிப்படையில் ஆழமாக பதிக்க வேண்டும்.

நம்மை விட நம் அடுத்த தலை முறையே மிக அறிவோடு வளரும் ...




வேடனிடம் சிக்குவதை விட, ஆதாயம் தருபவரிடம் அடிமையாக இருப்பது லாபம் என்று நினைப்பது அவரவரின் விருப்பம்.. இப்படி ஆதாயம் இருப்பதாகச் சொல்லி சொல்லிச் தான் ஆளை இழுக்கின்றனர்.

மேலும் வேடனிடம் சிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கும் விலங்கு பலத்துடன், எச்சரிக்கையுடன், தெளிவுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கால் உடைந்தாலும் அது என்றும் தன் பலத்தை நம்பி வாழும். இறைவன் காப்பாற்றுவான் அல்லது தலைமை காப்பற்றும் என்று தன் சுயபலத்தை மறப்பதில்லை. சுயபலம் இருப்பவை கூட்டம் சேர்வதில்லை/சேர்ப்பதில்லை. இது தாங்கள் அறிந்ததே. .

அடுத்த தலைமுறை அறிவோடு வளரும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பண்புடன், ஒழுக்கத்துடன், பொது நலத்துடன் வளருமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைய கல்விக்கூடங்கள் அறிவாளியை உருவாக்குகிறது, ஆனால் நல்ல மக்களை உருவாக்கத் தவறுகிறது. ராணுவத்தில் ஊழல், மருத்துவத்தில் ஊழல், கல்வியில் ஊழல் என்று எங்குமே ஊழல் தான்.

போதுமென்ற மனம், பொதுநலன், இறையச்சம், தவறு செய்தால் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும்  என்ற பாடங்கள் பொய் என்று நினைத்தாலும் சிறந்த சமுதாயத்துக்கு இது அவசியம்.. இது தான் மதத்தின் அடிப்படை. மதத்தின் வேலை இறைவனின் புகழ் பாடுவதல்ல, மனிதனை இறைவன் பெயரைச் சொல்லி மேம்படுத்துவதே. இந்த அடிப்படையைத் தான் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும். அழிவை வளர்க்கும் அறிவை அல்ல.    




சதாசிவம்
மதமாற்ற வியாபாரம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 01, 2014 11:57 am

இங்கு தான் நண்பரே பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. ஒருவர் அவராக மதம் மாறினாரே இல்லை அவரின் சூழல்களை பயன்படுத்தி மதம் மாற்றினார்களா... இந்தியாவின் சரித்தம் உங்களுக்குத் தெரியும் என்று எண்ணுகிறேன். இங்கு இந்துக்களாக மாறியவர்கள் அதிகமா அல்லது இந்துக்களில் இருந்து மாற்றப்பட்டவர்கள் அதிகமா என்ற கேள்வியே இப்பதிவின் நோக்கம். ஒருவர் அவராக மதம் மாறுவதும் வெகு சொற்பமே, ஆனால் அவரை மூளைச் சலவை செய்து அவரை மதம் மாற்றச் செய்ய ஒரு கூட்டம் இங்கு செயல்படுகிறது. அவர்கள் வியாபாரிகளே.
 நன்றி நன்றி 

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Tue Apr 01, 2014 7:49 pm

வேடனிடம் சிக்குவதை விட, ஆதாயம் தருபவரிடம் அடிமையாக இருப்பது லாபம் என்று நினைப்பது அவரவரின் விருப்பம்.. இப்படி ஆதாயம் இருப்பதாகச் சொல்லி சொல்லிச் தான் ஆளை இழுக்கின்றனர்.

மேலும் வேடனிடம் சிக்கும் என்ற எண்ணத்தில் இருக்கும் விலங்கு பலத்துடன், எச்சரிக்கையுடன், தெளிவுடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. கால் உடைந்தாலும் அது என்றும் தன் பலத்தை நம்பி வாழும். இறைவன் காப்பாற்றுவான் அல்லது தலைமை காப்பற்றும் என்று தன் சுயபலத்தை மறப்பதில்லை. சுயபலம் இருப்பவை கூட்டம் சேர்வதில்லை/சேர்ப்பதில்லை. இது தாங்கள் அறிந்ததே.

நீங்கள் என்ன சொன்னாலும் சரி ...

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
ஊரோடு ஒத்து வாழ் ...

என்பது தான் எனது கருத்து..

அடுத்த தலைமுறை அறிவோடு வளரும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பண்புடன், ஒழுக்கத்துடன், பொது நலத்துடன் வளருமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைய கல்விக்கூடங்கள் அறிவாளியை உருவாக்குகிறது, ஆனால் நல்ல மக்களை உருவாக்கத் தவறுகிறது.

படித்தவனிடம் அறிவுரை கூறும் போது அவன் கண்டிப்பாக அதை மதிப்பது இல்லை ..அதை காதில் வாங்கிக் கொள்ளவும் மாட்டான்

முன் காலத்தை போல அல்லது இப்போது ஆணும் பெண்ணும் ஒரு சேர பல விஷயங்களை செய்கிறார்கள் .. வரும் காலங்களில் இந்த பாலின வேறுபாடு முற்றிலும் மறைந்து விடும் ..

போதுமென்ற மனம், பொதுநலன், இறையச்சம், தவறு செய்தால் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பாடங்கள் பொய் என்று நினைத்தாலும் சிறந்த சமுதாயத்துக்கு இது அவசியம்.. இது தான் மதத்தின் அடிப்படை.

சரி தான் ..சட்டத்தை மீறி இன்று உலகில் பெரும் புகழுடன் இருப்பவர் நிறைய பேர்கள்

மதத்தின் வேலை இறைவனின் புகழ் பாடுவதல்ல, மனிதனை இறைவன் பெயரைச் சொல்லி மேம்படுத்துவதே. இந்த அடிப்படையைத் தான் அடுத்த தலைமுறைக்கு சொல்ல வேண்டும். அழிவை வளர்க்கும் அறிவை அல்ல.

நான் படித்த மதத்தின் கட்டுப் பாடுகள் ஒரு சிறந்த மனிதனை உருவாகும் என்பதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை ..

மேலும் தயவு செய்து அந்த சிவப்பு நிறத்தை மீண்டும் பயன்படுத்தாதீர்கள் ..படிப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக