புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளையனை எதிர்த்த காங்கிரஸ் சில்லறைத் தலைவர்களுக்கு பயப்படக்கூடாது!
Page 1 of 1 •
https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-prn1/934729_498444133562022_1794408239_n.jpg
திருச்சியில் மறைந்த அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் கொளுத்திப் போட்ட பேச்சு. இந்தக் கத்திரிவெயிலில் தமிழ்நாடு காங்கிரஸை வறுத்தெடுக்கிறது. கார்த்தி கொத்தளித்தது ஏன்? அவருடன் பேசினோம்:
உட்கட்சிப் பிரச்னைகளை பொது மேடையில் பேசக்கூடாது என்று தலைவர் ஞானதேசிகன் அறிக்கை விட்டிருக்கிறாரே?
மறைந்த அடைக்கலராஜ் திருச்சி வட்டாரத்தில் முக்கிய தலைவர். அவரது பிறந்த நாளையொட்டி நடந்த படத்திறப்பு விழாவில் என மன ஆதங்கத்தை வெளியிட்டேன். திராவிடக் கட்சிகளில் பிரமுகர்கள் யாரேனும் மறைந்தால், அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் படத்திறப்பு நடத்துவார்கள். ஆனால் தமிழக காங்கிரஸில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதில்லையே என்ற மன வருத்தத்தைச் சொன்னேன். தவிர ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் தமிழக காங்கிரஸ் சார்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெறும். இந்த முறை அதுவும் நடத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் காங்கிரஸ் கூட்டத்தில் பேசாமல் வேறு எங்கு போய் பேசமுடியும்? தமிழக காங்கிரஸ் தலைமை ஏதேனும் ஆலோசனைக் கூட்டம் போட்டால் அங்கு போய் பேசலாம். ஆனால் அது போல கூட்டம் நடத்தவில்லையே! தவிர, இவையெல்லாம் சாதாரண ஏ.ஐ.சி.சி. உறுப்பினரான நான் சொல்லிச் செய்ய வேண்டிய காரியமல்ல; 45 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையில் நமது செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்தால்தான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று மாநிலத்தில் சக்தியை நிரூபிக்க முடியும். இல்லையேல் செயல்படாத தமிழக காங்கிரஸ் என்ற விமர்சனம்தான் வரும். அன்று நான் பேசிய கருத்துக்கு கூட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் ஒரு தொண்டனின் நியாயமான கருத்தை வெளிப்படுத்தியதாகத்தான் அன்று கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் நண்பர்கள் சொன்னார்கள். என் கருத்துகளை ஒரு தொண்டனின் குமுறலாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பட்ஜெட் கூட்டம் நடத்தவில்லையே என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் அன்றைய சூழலில் காங்கிரஸ் மீது கோபமாக இருந்த மாணவர்கள் ஈழ விவகாரத்தில் போராடி வந்த நிலையில், கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கியிருக்குமே?
வெள்ளையனை எதிர்த்துப் போராடிய கட்சி காங்கிரஸ். சில சிறு இயக்கங்களும் அதன் சில்லறைத் தலைவர்களும் காங்கிரஸை எதிர்க்கிறார்கள் என்பதற்காக காங்கிரஸ் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமா? தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்புகள் எது வந்தாலும் தயங்காமல், பயப்படாமல் பொதுக்கூட்டம் போடுகிறார்களே. அடுத்த சில நாட்களில் நாங்கள் அம்பேத்கார் பிறந்த தின விழா கூட்டம் போட்டோமே? அதில் பட்ஜெட் பற்றியும் பேசினார் நிதியமைச்சர். எந்தப் பிரச்னையும் வரவில்லையே. தமிழ்நாடு காங்கிரஸ் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது கட்சி ஏதோ சில்லறைத் தலைவர்களுக்கு பயந்து போனது போன்ற தோற்றம் தானே உருவானது.
திருச்சியில் நீங்கள் ராகுலை விமர்சித்துப் பேசியதாக காங்கிரஸில் ஒரு சாரார் சொல்கிறார்களே?
சுத்தப் பொய். மாணவர் காங்கிரஸ் தேர்தலை மிக நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ராகுல் எடுத்த முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பது போலச் செயல்பட்ட சில இடைத்தரகர்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் பேசினேனே தவிர, ராகுலை விமர்சனம் செய்து பேசவில்லை.
உங்கள் பேச்சு குறித்த சி.டி. ராகுலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதே?
நல்லது. கார்த்தி சிதம்பரம் 45 நிமிடம் தமிழில் தொடர்ச்சியாகப் பேசினார் என்று தில்லி மேலிடத்துக்குத் தெரிய நல்ல வாய்ப்பு. மற்றபடி மேலிடம் என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதே?
யாரும் எங்களைத் தனிமைப்படுத்த முடியாது. ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்று சொல்வார்கள். இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசுடன் சுமுகமான உறவுகொள்ள கட்சிகள் வரும். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளோடு காங்கிரஸ் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்திருக்கிறது. தேர்தல் அரசியலில் பல திருப்பங்கள் வரும்.
த.மாகா. மீண்டும் உதயமாகும் என்று செய்தி அடிபடுகிறதே?
காங்கிரஸை விட்டு பிரிந்து தனியாக த.மா.கா. கண்ட நிலையில் சில காலத்துக்குப் பின்பு காங்கிரஸைத்தான் தஞ்சமடைய வேண்டியிருந்தது என்பது தெளிவாக இருக்கும் நிலையில் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்பது சிலரது சுயலநத்தின் அடிப்படையில் எழுந்த விபரீத ஆசையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸை ஊழல் நாறடிக்கிறதே?
ஊழல் குற்றச்சாட்டுகள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். இறுதியில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டுமே? அதுவரை பொறுமை காட்டாமல் நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தவிர்த்து, அதை முடக்கும் மட்டமான செயல்களில் பா.ஜ.க. ஈடுபடுவது ஏன்? கர்நாடகத்தில் ஊழல் மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸை விமர்சிக்க அருகதை இல்லை.
ஈழ விவகாரத்தில் மக்கள் காங்கிரஸின் மீது கடும் கோபமாக இருக்கிறார்களே?
உண்மை நிலையை மறைத்து உணர்வுகளை கிளப்பும் சில பிரமுகர்கள்தான் இதற்குக் காரணம். காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களுக்கு, சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் சம உரிமை, சம அந்தஸ்து, கௌரவம் தரப்பட வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். அதேபோல வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் தனித்தனியாக உருவாக்கப்பட்டோ அல்லது இணைந்த ஒரு மாநிலமாகவோ உருவாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த வேண்டும். இறுதிக்கட்ட போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அழிக்கப்பட்ட கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டும். அங்கே மத்திய அரசில் தமிழர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பு வேண்டும். இதையெல்லாம் எப்படி செய்ய முடியும்? இங்கே உள்ள லெட்டர்பேட் இயக்கங்கள் ஆவேசக் கூச்சல் போடுவதாலும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போடுவதாலும் இதெல்லாம் சாத்தியப்படாது. இலங்கையுடன் முறையான தூதரக உறவைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் ராஜீய அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் தான் செய்ய முடியும்.
ஈழத்தில் ராஜபட்சே அரசு நடத்திய மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
நிச்சயமாக! அதில் எந்தக் கருத்து வேற்றுமையும் இல்லை. சர்வதேச அமைப்புகள் மூலம் எந்த வகையில் சாத்தியப்படுகிறதோ அந்த வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசுடன், இந்திய அரசு தொடர்ந்து உறவு வைத்துக் கொள்வதன் மூலமே தமிழர்களுக்குத் தேவையான அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர முடியும். ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமாகவும் ஆசிய தடகளப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமும் என்ன சாதித்தோம்? ஆக்கப் பூர்வமாக நடவடிக்கை என்பது வேறு; அரசியலை மனத்தில் வைத்துப் போடும் ஆவேசக் கூச்சல் வேறு. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் படுகொலை குரூரமானது; கண்டிக்கத்தக்கது. அதே சமயம் சிறுமி கோகிலவாணி உயிரை விட்டதைக் குறித்து யாரும் கவலைப்பட வில்லையே? அந்த அப்பாவிச் சிறுமி செய்த குற்றம் என்ன? கோகிலவாணி யார் என்று இன்றைய மாணவர்களுக்கு தெரியாது. மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்திபடுகொலை செய்யப்பட்டபோது, அவருக்கு மாலை போட்டு அருகில்நின்று, உயிரைவிட்டவள்தான் கோகிலவாணி. இதை நாங்கள் கேட்டால், ஈழத் தமிழர்களுக்கு எதிரி காங்கிரஸ் என்று கொடி பிடிக்கிறார்கள்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியடப் போகிறீர்களாமே?
நான் சொல்வதை அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள். எந்தப் பதவியைம் நான் எதிர்பார்க்கவில்லை. அதற்காகவும் நான் உழைக்கவில்லை. என் தந்தைக்கு கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் வழங்கப் பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை எந்தக் தலைவரும் தில்லியில் இத்தனை உச்சிக்குச் சென்றதில்லை. அந்த வகையில் எங்கள் குடும்பத்துக்கு கௌரவத்தைக் கொடுத்த கட்சிக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறேனே தவிர, எந்தப் பதவியையும் எதிர்பார்த்தல்ல.
- ப்ரியன் @ கல்கி
திருச்சியில் மறைந்த அடைக்கலராஜ் படத்திறப்பு விழாவில் கார்த்தி சிதம்பரம் கொளுத்திப் போட்ட பேச்சு. இந்தக் கத்திரிவெயிலில் தமிழ்நாடு காங்கிரஸை வறுத்தெடுக்கிறது. கார்த்தி கொத்தளித்தது ஏன்? அவருடன் பேசினோம்:
உட்கட்சிப் பிரச்னைகளை பொது மேடையில் பேசக்கூடாது என்று தலைவர் ஞானதேசிகன் அறிக்கை விட்டிருக்கிறாரே?
மறைந்த அடைக்கலராஜ் திருச்சி வட்டாரத்தில் முக்கிய தலைவர். அவரது பிறந்த நாளையொட்டி நடந்த படத்திறப்பு விழாவில் என மன ஆதங்கத்தை வெளியிட்டேன். திராவிடக் கட்சிகளில் பிரமுகர்கள் யாரேனும் மறைந்தால், அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் படத்திறப்பு நடத்துவார்கள். ஆனால் தமிழக காங்கிரஸில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுவதில்லையே என்ற மன வருத்தத்தைச் சொன்னேன். தவிர ஒவ்வொரு பட்ஜெட்டுக்குப் பிறகும் தமிழக காங்கிரஸ் சார்பில் பட்ஜெட் விளக்கக் கூட்டம் நடைபெறும். இந்த முறை அதுவும் நடத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் காங்கிரஸ் கூட்டத்தில் பேசாமல் வேறு எங்கு போய் பேசமுடியும்? தமிழக காங்கிரஸ் தலைமை ஏதேனும் ஆலோசனைக் கூட்டம் போட்டால் அங்கு போய் பேசலாம். ஆனால் அது போல கூட்டம் நடத்தவில்லையே! தவிர, இவையெல்லாம் சாதாரண ஏ.ஐ.சி.சி. உறுப்பினரான நான் சொல்லிச் செய்ய வேண்டிய காரியமல்ல; 45 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாத நிலையில் நமது செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் செய்தால்தான் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று மாநிலத்தில் சக்தியை நிரூபிக்க முடியும். இல்லையேல் செயல்படாத தமிழக காங்கிரஸ் என்ற விமர்சனம்தான் வரும். அன்று நான் பேசிய கருத்துக்கு கூட்டத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் ஒரு தொண்டனின் நியாயமான கருத்தை வெளிப்படுத்தியதாகத்தான் அன்று கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் நண்பர்கள் சொன்னார்கள். என் கருத்துகளை ஒரு தொண்டனின் குமுறலாக எடுத்துக் கொள்ளுங்கள்.
பட்ஜெட் கூட்டம் நடத்தவில்லையே என்பது உங்கள் ஆதங்கம். ஆனால் அன்றைய சூழலில் காங்கிரஸ் மீது கோபமாக இருந்த மாணவர்கள் ஈழ விவகாரத்தில் போராடி வந்த நிலையில், கூட்டம் சட்டம்-ஒழுங்கு பிரச்னையை உருவாக்கியிருக்குமே?
வெள்ளையனை எதிர்த்துப் போராடிய கட்சி காங்கிரஸ். சில சிறு இயக்கங்களும் அதன் சில்லறைத் தலைவர்களும் காங்கிரஸை எதிர்க்கிறார்கள் என்பதற்காக காங்கிரஸ் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டுமா? தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்புகள் எது வந்தாலும் தயங்காமல், பயப்படாமல் பொதுக்கூட்டம் போடுகிறார்களே. அடுத்த சில நாட்களில் நாங்கள் அம்பேத்கார் பிறந்த தின விழா கூட்டம் போட்டோமே? அதில் பட்ஜெட் பற்றியும் பேசினார் நிதியமைச்சர். எந்தப் பிரச்னையும் வரவில்லையே. தமிழ்நாடு காங்கிரஸ் நடந்துகொண்ட முறையைப் பார்க்கும் போது கட்சி ஏதோ சில்லறைத் தலைவர்களுக்கு பயந்து போனது போன்ற தோற்றம் தானே உருவானது.
திருச்சியில் நீங்கள் ராகுலை விமர்சித்துப் பேசியதாக காங்கிரஸில் ஒரு சாரார் சொல்கிறார்களே?
சுத்தப் பொய். மாணவர் காங்கிரஸ் தேர்தலை மிக நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த ராகுல் எடுத்த முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பது போலச் செயல்பட்ட சில இடைத்தரகர்களை அடையாளம் காட்டும் விதமாகத்தான் பேசினேனே தவிர, ராகுலை விமர்சனம் செய்து பேசவில்லை.
உங்கள் பேச்சு குறித்த சி.டி. ராகுலுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதே?
நல்லது. கார்த்தி சிதம்பரம் 45 நிமிடம் தமிழில் தொடர்ச்சியாகப் பேசினார் என்று தில்லி மேலிடத்துக்குத் தெரிய நல்ல வாய்ப்பு. மற்றபடி மேலிடம் என்னிடம் விளக்கம் கேட்டால் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதே?
யாரும் எங்களைத் தனிமைப்படுத்த முடியாது. ஒரு கதவு மூடினால் மறுகதவு திறக்கும் என்று சொல்வார்கள். இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தேர்தல் நெருக்கத்தில் காங்கிரசுடன் சுமுகமான உறவுகொள்ள கட்சிகள் வரும். தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகளோடு காங்கிரஸ் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்திருக்கிறது. தேர்தல் அரசியலில் பல திருப்பங்கள் வரும்.
த.மாகா. மீண்டும் உதயமாகும் என்று செய்தி அடிபடுகிறதே?
காங்கிரஸை விட்டு பிரிந்து தனியாக த.மா.கா. கண்ட நிலையில் சில காலத்துக்குப் பின்பு காங்கிரஸைத்தான் தஞ்சமடைய வேண்டியிருந்தது என்பது தெளிவாக இருக்கும் நிலையில் மீண்டும் பிரிந்து செல்ல வேண்டும் என்பது சிலரது சுயலநத்தின் அடிப்படையில் எழுந்த விபரீத ஆசையாக இருக்க வேண்டும்.
காங்கிரஸை ஊழல் நாறடிக்கிறதே?
ஊழல் குற்றச்சாட்டுகள் எவ்வளவு வேண்டுமானாலும் சொல்லலாம். இறுதியில் நீதிமன்றம் தீர்ப்பு சொல்ல வேண்டுமே? அதுவரை பொறுமை காட்டாமல் நாடாளுமன்றத்தில் விவாதத்தைத் தவிர்த்து, அதை முடக்கும் மட்டமான செயல்களில் பா.ஜ.க. ஈடுபடுவது ஏன்? கர்நாடகத்தில் ஊழல் மூட்டையைச் சுமந்து கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு காங்கிரஸை விமர்சிக்க அருகதை இல்லை.
ஈழ விவகாரத்தில் மக்கள் காங்கிரஸின் மீது கடும் கோபமாக இருக்கிறார்களே?
உண்மை நிலையை மறைத்து உணர்வுகளை கிளப்பும் சில பிரமுகர்கள்தான் இதற்குக் காரணம். காங்கிரஸைப் பொறுத்தவரையில் ஈழத் தமிழர்களுக்கு, சிங்களவர்களோடு ஒப்பிடுகையில் சம உரிமை, சம அந்தஸ்து, கௌரவம் தரப்பட வேண்டுமென்பதில் தெளிவாக இருக்கிறோம். அதேபோல வடக்கு மாநிலம், கிழக்கு மாநிலம் தனித்தனியாக உருவாக்கப்பட்டோ அல்லது இணைந்த ஒரு மாநிலமாகவோ உருவாக்கப்பட்டு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அவர்கள் காலம் காலமாக வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த வேண்டும். இறுதிக்கட்ட போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும். அழிக்கப்பட்ட கட்டமைப்புகளை மீண்டும் உருவாக்க வேண்டும். அங்கே மத்திய அரசில் தமிழர்களுக்கு அதிகாரத்தில் உரிய பங்களிப்பு வேண்டும். இதையெல்லாம் எப்படி செய்ய முடியும்? இங்கே உள்ள லெட்டர்பேட் இயக்கங்கள் ஆவேசக் கூச்சல் போடுவதாலும் சட்டமன்றத்தில் தீர்மானங்கள் போடுவதாலும் இதெல்லாம் சாத்தியப்படாது. இலங்கையுடன் முறையான தூதரக உறவைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் ராஜீய அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவும் தான் செய்ய முடியும்.
ஈழத்தில் ராஜபட்சே அரசு நடத்திய மனித உரிமை மீறல்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டாமா?
நிச்சயமாக! அதில் எந்தக் கருத்து வேற்றுமையும் இல்லை. சர்வதேச அமைப்புகள் மூலம் எந்த வகையில் சாத்தியப்படுகிறதோ அந்த வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை அரசுடன், இந்திய அரசு தொடர்ந்து உறவு வைத்துக் கொள்வதன் மூலமே தமிழர்களுக்குத் தேவையான அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தர முடியும். ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமாகவும் ஆசிய தடகளப் போட்டியில் இலங்கை வீரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று சொன்னதன் மூலமும் என்ன சாதித்தோம்? ஆக்கப் பூர்வமாக நடவடிக்கை என்பது வேறு; அரசியலை மனத்தில் வைத்துப் போடும் ஆவேசக் கூச்சல் வேறு. பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் படுகொலை குரூரமானது; கண்டிக்கத்தக்கது. அதே சமயம் சிறுமி கோகிலவாணி உயிரை விட்டதைக் குறித்து யாரும் கவலைப்பட வில்லையே? அந்த அப்பாவிச் சிறுமி செய்த குற்றம் என்ன? கோகிலவாணி யார் என்று இன்றைய மாணவர்களுக்கு தெரியாது. மனித வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்திபடுகொலை செய்யப்பட்டபோது, அவருக்கு மாலை போட்டு அருகில்நின்று, உயிரைவிட்டவள்தான் கோகிலவாணி. இதை நாங்கள் கேட்டால், ஈழத் தமிழர்களுக்கு எதிரி காங்கிரஸ் என்று கொடி பிடிக்கிறார்கள்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியடப் போகிறீர்களாமே?
நான் சொல்வதை அழுத்தமாகப் பதிவு செய்யுங்கள். எந்தப் பதவியைம் நான் எதிர்பார்க்கவில்லை. அதற்காகவும் நான் உழைக்கவில்லை. என் தந்தைக்கு கட்சி மட்டத்திலும் ஆட்சி மட்டத்திலும் மிக உயர்ந்த வாய்ப்புகள் வழங்கப் பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டிலிருந்து இதுவரை எந்தக் தலைவரும் தில்லியில் இத்தனை உச்சிக்குச் சென்றதில்லை. அந்த வகையில் எங்கள் குடும்பத்துக்கு கௌரவத்தைக் கொடுத்த கட்சிக்கு உழைப்பதையே கடமையாகக் கொண்டிருக்கிறேனே தவிர, எந்தப் பதவியையும் எதிர்பார்த்தல்ல.
- ப்ரியன் @ கல்கி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரொம்ப நல்லவரு இவரு - எந்த பதவிக்கும் ஆசைப் படல.
சிவகங்கை சீமை முழுக்க இருந்த அனாமத்து இடத்தை எல்லாம் வளச்சு போட்டத பார்க்கவே இவருக்கு நேரம் பத்தாது - அப்புறம் எப்படி பதவியில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியும்?
சிவகங்கை சீமை முழுக்க இருந்த அனாமத்து இடத்தை எல்லாம் வளச்சு போட்டத பார்க்கவே இவருக்கு நேரம் பத்தாது - அப்புறம் எப்படி பதவியில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய முடியும்?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
காங்கிரஸ் பழம் பெரும் குப்பை கூளம் பாலா
அதுல இதுபோல ஈ கொசு மொய்க்கத்தானே செய்யும்
அதுல இதுபோல ஈ கொசு மொய்க்கத்தானே செய்யும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|