புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
17 Posts - 4%
prajai
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
8 Posts - 2%
jairam
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
4 Posts - 1%
Jenila
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_m10யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாமாமாநீ யாமாமா யாழீகாமா...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 01, 2013 4:22 pm

இது தமிழ்ப்பாடல்தான். யார் பாடியது என்று சொல்லுங்கள் உறவுகளே!
விளக்கம் பிறகு சொல்கிறேன்.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா
காழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.


(தொடரும்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 01, 2013 4:28 pm

ரஹ்மான், விஜய் ஆண்டனி கண்ணுல பட்டா அடுத்த
சூப்பர் ஹிட் பாடல் இதுவாதான் இருக்கும் சாமி

கூகுளில் பார்த்தேன் - ஞான் அறிந்தேன் சம்பந்தம் புன்னகை

இதை நான் முதல் முறையாக பார்க்கிறேன் சாமி - நல்ல பகிர்வு






balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 01, 2013 4:31 pm

இருங்க இத மொதல சத்தமா எல்லோரும் கேக்குராமாதிரி பாடறேன் அப்புறம் வந்து யார் எழுதியதுன்னு சொல்லுறேன்



ஈகரை தமிழ் களஞ்சியம் யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed May 01, 2013 7:39 pm

இதற்கு 'மாலை மாற்று' என்று பெயரல்லவா சாமி அவர்களே மகிழ்ச்சி
எழுதியவர் யாரென்று தெரியும், ஆயினும் நம்ம இளைய உறவுகள் முதலில் சொல்லட்டுமே என்று நான் அமைதிகாக்கிறேன் :வணக்கம்:

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu May 02, 2013 10:21 pm

சைவ சமய முதல்வர்கள் நால்வரில் ஒருவராகிய திருஞானசம்பந்தர் பலவகையான பாடல்களைப் பாடியிருக்கிறார். அவர் பதினாறு ஆண்டுகளே உலகில் வாழ்ந்தவர். அந்த காலத்துக்குள் அவர் பதினாறாயிரம் பாடல்கள் பாடினாராம். அவற்றில் நமக்கு இப்போது கிடைத்துள்ளவை முந்நூற்று எண்பத்து மூன்று பதிகங்கள்தான்.

மீதிப்பாடல்கள் எங்கே போயின? அந்தத் தில்லைவாழ் நடேசனையும் அவனிடம் தமிழை இன்றுவரை அண்டவிடாமல் அணுகவிடாமல் வைத்திருக்கிறார்களே, அவர்களையும் தான் கேட்கவேண்டும்.

திருஞானசம்பந்தர் தம்முடைய வாழ்நாளில் சென்ற திருத்தலங்கள் இருநூற்று இருபது. அவர் பாடியுள்ள இருநூறு எண்பத்து மூன்று பதிகங்கள் அவற்றிற்குரியன. அவருடைய பதிகங்களில் மிக அதிகமான எண்ணிக்கையைப் பெற்றது அவர் பிறந்த ஊராகிய சீர்காழிதான். அடுத்த படியாக திருவீழிமிழலை. சீர்காழியை அவர் பாடியவை அறுபத்தெட்டு. அந்த அறுபத்தெட்டில் தான் அவர் சித்து விளையாட்டுக்களைப் புரிந்திருக்கிறார்.

பலவகையான நூதனமான செய்யுள்வகைகளில் அவர் சீர்காழிப் பதிகங்களை அமைத்திருக்கிறார். திருமாலைமாற்று, திருத்தாளச்சதி, பல்பெயர்ப்பத்து, திருவிருக்குகுறள், மொழிமாற்று, ஏகபாதம், திருவெழுகூற்றிருக்கை, ஈரடி, திருவியமகம், திருச்சக்கரமாற்று, திருக்கோமூத்திரி, வழிமொழித்திருவிராகம், ஈரடி, திருவிராகம் ஆகியவை. மிழலைக்குரிய பதிகங்களையும் இவ்வாறே அமைத்துள்ளார்.

இவற்றில் 'திருமாலைமாற்று' எனப்படும் திருப்பதிகம் 'மாலைமாற்று' என்னும் செய்யுள் வகையைச் சேர்ந்தது. பாடுவதற்கு மிகவும் கடினமானதாகக் கருதப்படுவது.திருஞான சம்பந்தர் இயற்றியவற்றில் மாலைமாற்று அமைப்பில் மாலைமாற்றுத் திருப்பதிகம் எனப்படும் ஒரே ஒரு பதிகம்தான் கிடைத்திருக்கிறது.

தமிழில் நான்கு வகைக் கவிகள் உள்ளன. அவை ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி

அவற்றுள் சித்திரக் கவி வகையில் வருவதே மாலை மாற்று எனப்படும். சரி, மாலை மாற்று என்றால் என்ன?
"ஒரு செய்யுள் முதல், ஈறு உரைக்கினும், அஃதாய் வருவதை மாலை மாற்றென மொழி"

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.

ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்.

'அருளியிருக்கிறார்' என்றுதான் சொல்லவேண்டும். அத்தகைய பதிகம், அருளப்படும் ஒன்றுதான்.

இப்போது திருஞானசம்பந்தரின் திருமாலைமாற்றுத் திருப்பதிகத்தைப் விளக்கத்தோடு பார்ப்போம்.
(தொடரும்)


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34976
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 03, 2013 8:02 am

"ஒரு வாக்கியம் அவ்வாறு அமைவது அதிசயமாகப் பார்க்கப்படும். ஒரு பாடலை அவ்வாறு அமைப்பது இன்னும் சிரமமான விஷயம். திருஞானசம்பந்தரோ ஒரு பாடல் மட்டுமல்லாமல் பதினோரு பாடல்கள் கொண்டதொரு திருப்பதிகத்தையே அருளியிருக்கிறார்."

உண்மையிலும் உண்மை. அரிதான விஷயங்களையும் அனாயாசமாக செய்வதில் நம்மவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. அவைகளை வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டியவர்களும் மௌனமாய் இருப்பது வருந்த தக்கது.
தொடருங்கள் சாமி தொடருங்கள்.

ரமணியன்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Fri May 03, 2013 10:25 am

தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அற்புத தகவல், தொடருங்கள் ... சூப்பருங்க



சதாசிவம்
யாமாமாநீ யாமாமா யாழீகாமா...  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 03, 2013 11:04 am

பாடலின் பொருள் எனக்கு புரியவில்லை ...

திருவீழிமிழலை நிறைய முறை சென்று உள்ளேன் . அடுத்த முறை செல்லும் போது மனதில் ஒரு பரவசம் ஏற்படும் என்பதை உணர்வேன் .

ஒரு செய்யுளின் கடைசி எழுத்தை முதலாக வைத்துக் கொண்டு பின்னாலிருந்து திருப்பி எழுத்துக் கூட்டிவாசித்துக் கொண்டு முதல் எழுத்துக்கு வரவேண்டும். இதுவே மாலைமாற்று எனப்படும்.

ஒரே சொல் மாலைமாற்றாக அமைவதே வேடிக்கையாக இருக்கும். எடுத்துக்காட்டு: “விகடகவி”, “மாடு ஓடுமா”, தேரு வருதே” போன்றவை.

செம்மொழியாம் தமிழ் மொழியின் சிறப்பை எண்ணி வியக்கின்றேன் .

சிறப்பான பதிவு சாமி .... நன்றி நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri May 03, 2013 11:11 am

மாலைமாற்று என்பதே இப்பொழுதுதான் தெரிந்துகொள்கிறேன் சாமி - நன்றி




சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 07, 2013 10:30 pm

முதற்பாடல்:
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


படிக்க வசதியாக:
யாம் ஆமா நீ ஆமா யாழீ காமா காண் நாகா
காணா காமா காழீயா மாமாயா நீ மா மாயா


அருஞ்சொற்பொருள்:
யாம் = ஆன்மாக்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவன் மட்டுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை அருவமாகச் செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = திருமகளின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே!
மா = கரிய (கொடிய)
மாயா = மாயை என்ற மலம்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

விளக்கவுரை :
ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் உன்னைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலுக்கு காக்கும் தொழிலைத் தந்தவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக