ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

Top posting users this week
ayyasamy ram
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 
Geethmuru
போதையில் இருந்து விடுபட.... Poll_c10போதையில் இருந்து விடுபட.... Poll_m10போதையில் இருந்து விடுபட.... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையில் இருந்து விடுபட....

3 posters

Go down

போதையில் இருந்து விடுபட.... Empty போதையில் இருந்து விடுபட....

Post by ரிபாஸ் Mon Dec 14, 2009 12:40 pm



போதையில் இருந்து விடுபட....


குடிப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவன் ஒரு நாள் ஒரு ஞானியைச் சென்று
சந்தித்தான். "ஐயா! குடிப்பழக்கம் என்னை ஆட்கொண்டு விட்டது. அதில் இருந்து
என்னால் மீள முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
ஞானி பதில் எதுவும் கூறாமல், அருகில் இருந்த ஒரு மரத்தின் அருகில் சென்று
அந்த மரத்தை இறுக்கப் பிடித்துக் கொண்டார். பின் உரத்த குரலில்
"காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்!! இந்த மரம் என்னைப் பிடித்துக்
கொண்டுவிட்டது. என்னை அதில் இருந்து விடுவிக்க வாருங்கள்" என்று
கத்தினார். குடிகாரன் மனதிற்குள் இவர் நம்மை விடப் பெரிய குடிகாரர்
போலிருக்கிறதே! என்று நினைத்தவாறே "இது என்ன அசட்டுத்தனம் சுவாமி! நீங்கள்
மரத்தை வலியச்சென்று கட்டிப் பிடித்து விட்டு, அது உங்களைப் பிடித்துக்
கொண்டு விடவில்லை என்று கத்துகிறீர்களே! நீங்கள் விடுபட வேண்டும் என
உண்மையில் விரும்பினால் நீங்கள் அல்லவா உங்கள் கைகளை விலக்க வேண்டும்?"
என்றான்.
போதையில் இருந்து விடுபட.... Alcoholismஞானி
புன்னகைத்தார். "புரிந்ததா மகனே! குடிப்பழக்கம் உன்னைப் பிடிக்கவில்லை.
நீதான் வலியச் சென்று குடிக்கப் பழகிக்கொண்டாய். இதில் இருந்து
விடுபடவேண்டும் என்று நீ உண்மையிலேயே நினைத்தால் நீதான் அதற்கான
முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பிறர் என்ன செய்ய முடியும்?" என்று
அமைதியாகக் கேட்டார்.
குடிகாரன் புரிந்துகொண்டான். குடிப்பழக்கத்தை
விட வேண்டும் என்று உறுதி பூண்டு மனத்தைக் கட்டுப்படுத்தினான். விரைவில்
அப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுப் புது மனிதனாகி மீண்டும் ஞானியிடம்
சென்று வணங்கி தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான்.

ஆம்.
குடிப்பழக்கத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டுமானால், நீங்கள் முதலில்
உங்கள் மனத்தில் அந்த உறுதியை வரவழைத்துக்கொள்ள வேண்டும். பிறர் சொல்வதால்
ஏனோதானோ என்று முயற்சி செய்தால், அதற்குப் பலன் எதுவும் இருக்காது.
உண்மையாகவே அதில் இருந்து வெளியில் வரவேண்டுமானால், கீழ்க்கண்ட சில
ஆலோசனைகளைப் பின்பற்றலாம்.

மதுப்பழக்கத்தை ஏன் விடவேண்டும் என்று
நீங்களே உங்களுக்குள் கேட்டுக்கொள்ளுங்கள். மதுப்பழக்கத்தினால் உங்களுக்கு
ஏற்பட்டுள்ள விளைவுகள் அனைத்தையும் யோசித்துப் பட்டியலிடுங்கள்.
அதிகரிக்கும் செலவுகள், உருவாகும் உடல் கோளாறுகள், அலுவலகத்தில்
அதிகாரியுடன் ஏற்பட்ட விவாதம், தள்ளிப் போன பதவி உயர்வு, குடும்பத்தில்
உண்டான விரிசல், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள
அவப்பெயர் இவை அனைத்தையும் பாரபட்சமின்றி ஒரு குறிப்பேட்டில்
எழுதிக்கொள்ளவும். அதைப் பலமுறை திரும்பத்திரும்பப் படித்து, இத்தகைய தீய
விளைவுகளை உண்டாக்கும் மதுவை இனி அருந்துவதில்லை என்று நீங்கள்
திரும்பத்திரும்ப சொல்லிக்கொள்ளுங்கள் (Auto suggestion).

குடிப்பழக்கமற்றவராக உங்களைக் கற்பனை செய்து பாருங்கள். உங்கள் ஆழ்மனதில்
உங்களை எந்தக் கெட்ட பழக்கமும் அற்றவராகப் பதிவு செய்யுங்கள். ஆழ்மனத்தின்
சக்தி அற்புதமானது. அது இப்பழக்கத்தில் இருந்து விடுபட உதவி செய்யும்.

அடுத்ததாக, உங்கள் குடும்பத்தினர், உங்கள் நலம் நாடும் நண்பர்கள்
இவர்களிடம் நீங்கள் குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கேடுகளை
உணர்ந்துவிட்டதாகவும், உங்கள் நன்மைக்காகவும் குடும்பத்தினரின்
நலனுக்காகவும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட விரும்புவதையும், இதற்கு
அவர்கள் ஒத்துழைப்பு உங்களுக்குத் தேவைப்படும் என்பதையும் புரிய
வையுங்கள். ஏற்கனவே சில முறைகள் விடுபட விரும்பி அதில்
தோல்வியுற்றிருப்பின், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை இழந்து இருப்பர்.
இந்த முறை அப்படி ஆகாது என்று உறுதிமொழி கொடுங்கள்.

நீங்கள்
மதுப்பழக்கத்தை நிறுத்த ஒரு நாளைத் தேர்ந்தெடுங்கள். எடுத்துக்காட்டாக
இந்தப் புத்தாண்டில் இருந்து நீங்கள் அப்பழக்கத்தை நிறுத்துவதாக உறுதி
எடுப்பதாகக் கொள்வோம். "நான் 01.01.2010 முதல் மதுவைத் தொடமாட்டேன்" என்று
எழுதி அதை நீங்கள் அடிக்கடி பார்க்கக்கூடிய இடங்களில் ஒட்டி வையுங்கள்.
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வைப்பது இன்னும் நல்லது.

போதையில் இருந்து விடுபட.... No-drinkஉங்கள்
வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்கள் ஓய்வறையில் மதுப்புட்டிகள்
இருக்குமானால் அதைத் தூக்கி எறிந்து (அல்லது உடைத்து) விடுங்கள். இது
உங்கள் மனத்திண்மையை மேம்படுத்தும். உங்களுடன் தங்கியிருப்பவர் யாராவது
குடிக்கும் பழக்கமுடையவராக இருந்தால், அவர்களையும் உங்களுடன் சேர்ந்து
இப்பழக்கத்தில் இருந்து விடுபட முயற்சி செய்யச் சொல்லலாம். குறைந்தபட்சமாக
நீங்கள் இல்லாத நேரத்தில் மட்டும் குடிக்கும்படி வேண்டுகோள் விடுக்கலாம்.
இரண்டும் இயலாது எனில் தற்காலிகமாக, குறைந்தபட்சம் பத்துப் பதினைந்து
நாட்கள் நீங்கள் வேறு நல்ல துணையுடன் அதாவது குடிப்பழக்கமற்றவர்களுடன்
தங்குவது நல்லது. தனியாகத் தங்கவேண்டாம். தனிமை உங்கள் மனக்கட்டுப்பாடுகளை
உடைத்துவிடக் கூடும்.

உங்களைக் குடிப்பதற்குத்தூண்டும்
நண்பர்களிடம் இருந்தும், காரணிகளிடம் இருந்தும் விலகி இருங்கள். நீங்கள்
வழக்கமாகச் செல்லும் மது அருந்தும் வசதியுள்ள உணவகங்கள்(Bar attached
resturents) மற்றும் விடுதிகள் (Clubs) இவற்றுக்குச் செல்வதை நிறுத்தவும்.
குடிப்பது தவறில்லை என்ற ரீதியில் வாதாடுகின்றவர்களிடம் இருந்து தள்ளியே
இருங்கள்.

குடிப்பதைப்பற்றி நினைக்கக் கூட நேரமில்லாத அளவு
உங்களை பலவிதமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். அது புதிதாக
நீங்கள் சேரும் நீச்சல் பயிற்சியாக இருக்கலாம். குழந்தைகளுடன் பூங்கா
சென்று விளையாடுவதாகவோ, குடும்பத்துடன் செல்லும் சுற்றுலாவாகவோ
இருக்கலாம். அலுவலகத்தின் புதிய திட்டம் குறித்து மேற்கொள்ளும் ஆய்வாக
இருக்கலாம். நீங்கள் மிகவும் மும்மரமாக இருப்பது முக்கியம்.

வீடு
மட்டும் அலுவலகத்தில் உள்ள பிரச்னை காரணமாக குடிப்பதை சிலர் வழக்கமாக்கிக்
கொண்டு விடுவர். இத்தகையவர்கள் தமது குடும்ப அங்கத்தினர் அல்லது
நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் தமது மனப்பாரத்தை இறக்கி வைப்பதும்,
பிரச்னையைத் தீர்க்க ஆலோசனை பெறுவதும் பயனளிக்கும்.

நீங்கள்
குடிக்காமல் இருக்கும் ஒவ்வொரு நாளும், அதன் மூலம் மிச்சமாகும் பணத்தைக்
கணக்கிட்டு, உங்களுக்கு நீங்களே பரிசளித்துக் கொள்ளுங்கள். அது
உங்களுக்குப் பிடித்த இடத்துக்குச் செல்வதாகவோ, நீங்கள் வெகு நாட்களாக
வாங்க நினைக்கும் ஒரு பொருளை வாங்குவதாகவோ இருக்கலாம். ஒரு நாள்
குடிக்காமல் இருந்தால் ஒரு மதிப்பெண், ஒரு வாரம் குடிக்காமல் இருப்பதற்கு
சிறப்பு ஊதியமாக 10 மதிப்பெண்கள், ஒரு மாதம் தொடர்ந்து குடிக்கவில்லை
எனில் 100 மதிப்பெண்கள் என்று கொடுத்துக் கொண்டும் உங்களுக்கு நீங்கள்
பரிசளித்துக் கொள்ளலாம்.

உங்களால் உங்களைக் கட்டுப் படுத்திக்
கொள்ள இயலாது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால், மதுப்பழக்கத்தில்
இருந்து விடுபட நினைப்பவர்களுக்கான மையங்களில் சேர்வது அல்லது மருத்துவ
மனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறுவது, மன நல ஆலோசகர்களின் உதவியை நாடுவது
ஆகியவை நல்ல பலனளிக்கக் கூடியவை.

எல்லாவற்றையும் விட
முக்கியமானது, நீங்கள் மனம் தளராமல் உறுதியுடன் முயல்வதுதான்.
மதுப்பழக்கத்தைத் தடுப்போம், மன நிம்மதியையும் உடல் நலத்தையும்
வரவேற்போம். வாழ்த்துக்கள்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

போதையில் இருந்து விடுபட.... Empty Re: போதையில் இருந்து விடுபட....

Post by தாமு Mon Dec 14, 2009 12:46 pm

எல்லாவற்றையும் விட
முக்கியமானது, நீங்கள் மனம் தளராமல் உறுதியுடன் முயல்வதுதான்.
மதுப்பழக்கத்தைத் தடுப்போம், மன நிம்மதியையும் உடல் நலத்தையும்
வரவேற்போம். வாழ்த்துக்கள்



super rifas போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

போதையில் இருந்து விடுபட.... Empty Re: போதையில் இருந்து விடுபட....

Post by சாந்தன் Mon Dec 14, 2009 12:50 pm

போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 போதையில் இருந்து விடுபட.... 677196 சூப்பர் சூப்பர் சூப்பர்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

போதையில் இருந்து விடுபட.... Empty Re: போதையில் இருந்து விடுபட....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum