Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
3 posters
Page 1 of 1
கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
மிகவும் புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாளின் உயிர் நேற்று பிரிந்தது. அவருக்கு வயது 90. இறுதிச் சடங்குகள் நேற்றைய தினமே நடந்து முடிந்தன.
இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே இசை உலகில் கொடி கட்டிப்பறந்தவர் டி.கே.பட்டம்மாள். மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற பல தேசிய தலைவர்களை நேரில் சந்தித்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்றவர். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், பாரதியாரின் எழுச்சிப் பாடல்களைப் பாடி மக்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டிய பெருமையும் டி.கே. பட்டம்மாளுக்கு உண்டு.
இசை உலகில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தனித்துவத்தை நிரூபித்துள்ள டி.கே. பட்டம்மாள், திரையிசைப் பாடல்கள் மட்டும் சுமார் நூறு பாடல்கள் பாடி உள்ளார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்தகுமாரி, டி.கே.பட்டம்மாள் ஆகியோரை கர்நாடக இசை உலகின் மூன்று இசைமேதைகள் என்று சிறப்பித்துக் கூறுவார்கள்.
சென்னை கோட்டூர்புரத்தில் வசித்து வந்த டி.கே. பட்டம்மாள், கடந்த சில நாட்களாக உடல்நலம் சுகமில்லாமல் இருந்தார். இந்த நிலையில் நேற்று பகல் 12.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இந்த தகவல் கிடைத்ததும், கர்நாடக இசை உலகப் பிரமுகர்களும், சினிமாத் துறையினரும் அவரது இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
டி.கே.பட்டம்மாளின் உடல் மாலையில், சென்னை மைலாப்பூரில் உள்ள மின்சார சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
டி.கே.பட்டம்மாளின் கணவர் பெயர் ஈஸ்வரன். அவருக்கு 95 வயது ஆகிறது. இவர்களுக்கு சிவகுமார், லட்சுமணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சிவகுமாரின் மகள்தான் கர்நாடக இசைப்பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்.
டி.கே. பட்டம்மாளின் வரலாறு
கர்நாடக இசை மேதையாக விளங்கிய டி.கே.பட்டம்மாள் காஞ்சீபுரத்தில் கடந்த 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ந்தேதி தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதர்-காந்திமதி தம்பதிக்கு மகளாக பிறந்தார். டி.கே.பட்டம்மாளுக்கு பெற்றோர் அலமேலு என்று பெயர் சூட்டி, பட்டம்மாள் என்று செல்லமாக அழைத்தனர். எனவே அவருக்கு பட்டம்மாள் என்ற பெயரே பெயர் வாங்கிக் கொடுத்தது.
சிறு வயதிலேயே கர்நாடக இசையில் மிகுந்த ஆர்வம் கொண்ட பட்டம்மாள் தனது 10ஆம் வயதிலேயே அகில இந்திய வானொலியில் கர்நாடக இசைப் பாடலைப் பாடி ரசிகர்களைக் கவர்ந்தார். 1932-ம் ஆண்டு முதன் முறையாக சென்னை ரசிக ரஞ்சனி சபாவில் மேடை ஏறிய பட்டம்மாள் கைதட்டல்களை வாரிக் குவித்தார். பாபநாசம் சிவன் போன்ற இசை மேதைகளிடம் இசை பயின்ற பட்டம்மாள், ஆயிரக்கணக்கான மேடைகளில் கச்சேரி செய்து உள்ளார். பைரவி ராகத்தில் வல்லமை பெற்றவர்.
பாபநாசம் சிவன் மூலம் டி.கே.பட்டம்மாள் திரையிசைப் பாடல்களுக்கு அறிமுகமானார். தியாக பூமி என்ற திரைப்படத்தில் அவர் பாடகியானார். அவரது பாடல்கள் பெரும்பாலும் தேசபக்தி பாடல்களாகவும், பாரதியாரின் பாடல்களாகவுமே இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர் ஆட்சியின் தடையை மீறி பல மேடைகளில் பாரதியாரின் எழுச்சிப் பாடல்களைப் பாடி, இந்திய மக்களின் சுதந்திரத்தை தூண்டியப் பெருமையையயும் தனது கர்நாடக இசையின் மூலமாகப் பெற்றார் பட்டம்மாள். இதற்காக அவர், காந்தியடிகள் மற்றும் நேருவின் பாராட்டுகளையும் பெற்றார்.
இந்தியா 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திரம் அடைந்தது. நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், அதாவது ஆகஸ்டு 14-ந் தேதி இரவு டி.கே.பட்டம்மாள் அகில இந்திய வானொலியில் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்ற பாரதியாரின் தேச பக்தி பாடலை பாடினார். இது நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து 2 மணி நேரம் அவர் வானொலியில் தேச பக்தி பாடல்களை பாடினார்.
இவர் பாடிய கர்நாடக இசைப்பாடல்களும், தேச பக்தி பாடல்களும் இசைத்தட்டு விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
ஒரு முறை திருநெல்வேலியில் டி.கே.பட்டம்மாள் இசைக்கச்சேரி நடத்தியபோது பாரதியார் பாடல்களை உணர்ச்சி பூர்வமாக பாடிக்கொண்டு இருந்தார். அதை முதல் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த பாரதியாரின் மனைவி செல்லம்மாள், கச்சேரி முடிந்ததும் டி.கே.பட்டம்மாளை கட்டிப்பிடித்து பாராட்டு தெரிவித்தார். அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.
இசை உலகுக்கு ஆற்றிய சேவைக்காக டி.கே.பட்டம்மாள் 60-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளும் இவரை கெளரவித்துள்ளது. சங்கீத சாகர ரத்னா, சங்கீத கலாநிதி, கலைமாமணி, கான சரஸ்வதி போன்ற பெருமைமிக்க பல விருதுகளையும் பெற்று இருக்கிறார்.
இலங்கை, கனடா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இசைக்கச்சேரி நடத்தி உள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாகவும் பதவி வகித்தவர் பட்டம்மாள் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை மேதையின் மரணம், இசை உலகிற்கு ஒரு பேரிழப்பு என்பது மறுக்க முடியாத உண்மை.
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Re: கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
மிகவும் வருத்தமான செய்தி
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Guest- Guest
Re: கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
அவரது மறைவக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Re: கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள் காலாமானார்
தலைவரே "சிவா" நான் உங்களுக்கு முதல் இந்த செய்தியை பதித்துவிட்டேன், அனால் முருகன் வருத்தம் தெரிவிக்க மறந்து பாராட்டு தெரிவித்துவிட்டர்.
eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
eegarai.darkbb.com/ii-oio-f5/oao-yoi-eiu-oaooi-t3436.htm
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Similar topics
» நடிகர் விவேக்கின் தாயார் காலாமானார்
» எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் !
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
» குஜராத்தில் பாடகி மீது பண மழை
» எழுத்தாளர் கெளதம நீலாம்பரன் காலாமானார் !
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
» குஜராத்தில் பாடகி மீது பண மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|