ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயல்பு மாறலாமா? - தென்கச்சி

3 posters

Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by சிவா Mon Sep 17, 2012 1:12 am



ஒரு ஆள் இருந்தார். விலங்குகள் பேர்லே அவருக்கு ரொம்பப் பிரியம். அதனாலே தன் வீட்டுலே ஒரு நாயை வளர்த்தார். அதே மாதிரி கழுதையையும் வளர்த்தார்.

அந்தக் கழுதை அவர் வீட்டுக் கொல்லைப் பக்கத்துலே நின்னுக்கிட்டிருக்கும். ஏதாவது பொதிசுமக்கற வேலை இருந்தா அதை கவனிச்சுக்கும்.

அந்த நாய் வீட்டுக்குள்ளே இருக்கும். நாய்க்கு அந்த வீட்டுலே ராஜ உபச்சாரம்தான். அதுக்கு அந்த வீட்டுலே ஏகப்பட்ட மரியாதை, குளிக்கறதுக்கு சோப்பு! ரெண்டு வேளையும் பால்- பிஸ்கட்... மத்தியானம் சாப்பாடு... அதுக்கு ஏதாவது உடம்பு சரியில்லேன்னா உடனடியா ஆஸ்பத்திரி வைத்தியம்.

ரொம்ப கொடுத்துவச்ச நாய்.

அந்த வீட்டுத்தலைவர் வெளியிலே 'வாக்கிங்' போனா... கூடவே இதுவும் போகும்.

அவர் மட்டும் தனியா எங்காவது வெளியே போயிட்டு வந்தா... வீட்டுக்கு வந்த உடனே அந்த நாய் அவர்கிட்டே ஓடிவரும்... அப்படியே எழும்பி முன்னங்கால் ரெண்டையும் அவர் தோள்மேலே போட்டுக்கும்... அவரு சிரிச்சிக்கிட்டே அது தலையிலே செல்லமா தட்டுவார்.

அவரு ஈஸி சேர்லே சாஞ்சுகிட்டு டி.வி. பார்ப்பார்... பேப்பர் படிப்பார்... அப்போவெல்லாம் அந்த நாய் அவருடைய காலடியிலே படுத்துக்கும். அப்பகூட அவரு அது தலையை செல்லமா தடவிக் கொடுப்பார்... அந்த நாய் படுக்கறதுக்கின்னே ஒரு மெத்தை... சில சமயம் அது அங்கே இருக்கிற மேஜை நாற்காலி மேலே கூட ஏறி விளையாடும்... சோபாவுலே ஏறி உட்கார்ந்துக்கும்... இவ்வளவு செல்வாக்கா வளர்ந்தது அந்த நாய்...!

இதையெல்லாம் அந்தக் கழுதை பார்த்தது. யோசிக்க ஆரம்பிச்சுது!

"என்ன இது... இந்த வீட்டுலே நாம கழுதையா உழைக்கிறோம். பொதி சுமக்கிறோம்... நமக்கு ஒரு நல்ல சாப்பாடு கிடையாது! படுக்கை கிடையாது. ஒரு நாளாவது நம்ம தலையையோ முதுகையோ தடவிக்குடுத்தது கிடையாது.

ஆனால், அந்த நாய் இந்த வீட்டுக்காக ஒரு துரும்பைக்கூட அசைச்சது இல்லை... அதைப் போய் இந்த வீட்டுலே உள்ளவங்க இப்படி தலையிலே வச்சு தாங்கறாங்களே...!" அப்படின்னு யோசிச்சுது. ரொம்ப நேரம் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தது..

"சரி... இனிமே நாமளும் அந்த நாய் மாதிரியே நடந்துக்குவோம். அது மாதிரியே Behave பண்ணுவோம்... அப்பவாவது நமக்கும் அந்த மரியாதை கிடைக்குதா பார்க்கலாம்!" அப்படின்னு ஒரு திட்டம் போட்டுது மனசுக்குள்ளே!

உடனே அந்தத் திட்டத்தை செயல்படுத்தவும் ஆரம்பிச்சுது. அதாவது அந்த வீட்டுலே அந்த நாய் என்னென்னா செய்யுதோ... அதையெல்லாம் இதுவும் செய்ய ஆரம்பிச்சுட்டுது.

அந்த வீட்டு எஜமான் எங்கேயோ வெளியிலே சுத்திபுட்டு ரொம்ப அசந்து போய் வீட்டுக்குத் திரும்பி வந்துக்கிட்டிருந்தான். உடனே இந்தக் கழுதை அவன்கிட்டே ஓடிச்சி... அந்த நாய் என்ன பண்ணுமோ அது மாதிரியே பண்ணிச்சு... அதாவது அந்த ஆள் தோள் மேலே தன் முன்னங்கால் ரெண்டையும் தூக்கிப் போட்டது.

அந்த ஆள் பயந்து போயிட்டான். அவனுக்கு ஒண்ணும் புரியலே. இது ஏன் இப்படி பண்ணுதுன்னு! கொஞ்சம் ஒதுங்கி நின்னான். இது அவனை சுத்தி சுத்தி வந்துது நாய்மாதரி வாலை ஆட்டிக்கிட்டே!

அவன் 'கிடு கிடு' ன்னு விட்டுக்குள்ளே போனான்.

இதுவும் பின்னாடியே ஓடிச்சு...

அங்கே போய் நாய் மாதிரியே மேஜை நாற்காலி மேலே ஏறி குதிச்சு விளையாடிச்சு... சோபாவுலே உட்கார்ந்தது. மேசையிலேயிருந்த சாமான்லாம் கீழே விழுந்து உடைஞ்சுது. கழுதை, மேசை மேலே ஏறி குதிச்சா என்னத்துக்கு ஆவும்?

அந்த ஆள் பார்த்தான்.

சரி.. இந்தக் கழுதைக்கு என்னமோ ஆயிட்டுது -ன்னு முடிவு பண்ணினான். ஒரு நல்ல கயிறா பார்த்து கொண்டாந்தான். அது கால்லேயும் கழுத்துலேயும் கட்டினான். தரதரன்னு இழுத்துக்கிட்டு போனான். அடிச்சு.. கொல்லைப்பக்கத்துலே கட்டிப்போட்டுட்டான். அன்ன ஆகாரம் எதுவுமே கொடுக்கலே.. பட்டினி போட்டுட்டான். இப்ப அந்தக்கழுதை யோசிக்குது.

"என்ன இது? நம்ம எஜமானுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? அந்த நாய் பழகறது மாதிரிதானே நாமளும் பழகினோம். ஆனால், இந்த மனுஷன் நாயை அடிக்கலே... ஆனால், நம்மளை அடிக்கிறான்.. இப்படி கொண்டாந்து கட்டிப்போட்டுட்டானே.. என்ன காரணமாயிருக்கும்?"

அப்படின்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டுதான் அந்தக் கழுதை.

எதுக்கு, இந்த கதை -ன்னா...

இது மாதிரியே நாம கூட சிலசமயம் யோசிக்கறது உண்டு.. நம்ம இயல்புமாறி நடக்க ஆரம்பிச்சுட்டா பல சமயங்கள்லே இப்படி யோசிக்கிறாப் போலத்தான் ஆயிடும்!

அதனாலே ஒரு மனுஷன் எப்படி நடந்துக்கணுமோ அப்படி நடந்துக்கிட்டாத்தான் நமக்கு மரியாதை!

வெறிநாய் கடிச்சுட்டா மனுஷனும் அதுமாதிரியே ஆயிடறான் பார்த்தீங்களா? அவனோட இயல்பு மாறிடுது!

ஒருத்தனைப் பார்த்து இன்னொருத்தன் கேட்டானாம்.

"வெறிநாய் ஒண்ணு உன்னைக் கடிச்சுட்டா நீ என்ன செய்வே?"ன்னு!

"நான் உடனே பேப்பரும் பேனாவும் கேப்பேன்!"னானாம் அவன்.

"ஏன்... உயில் எழுதறத்துக்கா?"ன்னு கேட்டிருக்கான்.

"இல்லே... நான் யாரை யாரையெல்லாம் கடிக்கணும் -ன்னு லிஸ்ட், தயார் பண்றதுக்கு!" அப்படின்னானாம்!



இயல்பு மாறலாமா? - தென்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by அசுரன் Mon Sep 17, 2012 1:24 am

மிக மிக அருமையான சிந்திக்க வைக்கும் தகவல்... நாய் காலை தூக்கி தோளில் போடலாம் கழுதை போட்டால் என்னாகும்... நல்ல படிப்பனை தரும் செய்தி சூப்பருங்க
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by யினியவன் Mon Sep 17, 2012 1:26 am

லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களா சிவா. புன்னகை

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம்
சவுக்கியமே பாடலை ஒத்த கதை நன்று.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by அசுரன் Mon Sep 17, 2012 1:28 am

யினியவன் wrote:லிஸ்ட் தயார் பண்ணிட்டீங்களா சிவா. புன்னகை

இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம்
சவுக்கியமே பாடலை ஒத்த கதை நன்று.
ஏன் கேக்குறீங்க..உங்க லிஸ்டோட ஒத்துபோகுதான்னா? சிப்பு வருது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by யினியவன் Mon Sep 17, 2012 1:39 am

எங்க ரெண்டு பேரு லிஸ்டிலும் மொத ஆளு நீங்கதான் அசுரன். புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இயல்பு மாறலாமா? - தென்கச்சி Empty Re: இயல்பு மாறலாமா? - தென்கச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum