புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
3 Posts - 2%
jairam
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
2 Posts - 1%
சிவா
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
1 Post - 1%
Manimegala
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
1 Post - 1%
Poomagi
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
16 Posts - 4%
prajai
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
7 Posts - 2%
jairam
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
4 Posts - 1%
Jenila
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
3 Posts - 1%
Rutu
முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_m10முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னேறு... முன்னேறு... முன்னேறு...


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:58 am

முன்னேறு... முன்னேறு... முன்னேறு... E_137110

இந்திய விடுதலைப் போரில் மக்களிடையே பெரும் தேசிய எழுச்சியை விளைவித்த நிகழ்ச்சிகளில் சில, வைசிராய் கர்சன் பிரபுவால் வ்நத வங்காளப் பிரிவினை (1905), ஜாலியன்வாலாப் படுகொலை (1919), ஒத்துழையாமை இயக்கம் (1920), தண்டி யாத்திரையும் உப்பு சத்தியாகிரகமும் (1930) வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) முதலியனவாகும். இந்நிகழ்ச்சிகளின் பின்விளைவுகள் மகத்தானவை.

வங்கப் பிரிவினையால் நாடு ஒன்றுபட்டது. சுதேசியம், அந்நியப் பொருள்கள் பகிஷ்காரம், தேசியக் கல்வி என்ற முப்பெரும் செல் திட்டங்கள் வலுப்பெற்றன.

பஞ்சாப் படுகொலையை அடுத்து 1920ஆம் ண்டில் ஒத்துழையாமை இயக்கம் தோன்றியது. ஏதோ ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்ததால், 1922ல் மகாத்மா ஒத்துழையாமை இயக்கத்தையே நிறுத்திவிட்டார்.

உப்பு சத்தியாகிரகம் மீண்டும் ஒத்துழையாமை இயக்கத்திற்குப் புத்துயிர் அளித்து, விடுதலைப் போர் முன்னிலும் தீவிரமாக நடக்க உதவியதால், அதுவே “வெள்ளையனே வெளியேறு’ இயக்கமாக வெடித்தது.

ஆனால் இந்த இயக்கங்களால் ஆங்கில அரசாட்சியின் அடக்கு முறைகள் மேலும் கடுமையாயின. தேசபக்தர்கள் வெஞ்சிறையில் வாடினர். நாடெங்கும் அராஜகம் நிலவியது. பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் பறிபோயின. சிறைகள் நிரம்பின. 1946ல்தான் தேசபக்தர்கள் விடுதலை பெற்றனர்.

இந்த சூழ்நிலையில் 1930ஆம் ஆண்டில் குஜராத்தின் சௌராஷ்டிராப் பகுதியில் தண்டுகா என்ற சிற்றூரிலுள்ள நீதிமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கில் மக்கள் கூட்டம். குற்றவாளிக் கூண்டில் கத்தியவாரின் பரம்பரை உடையும், பெரிய முண்டாசும் தரித்த ஒரு முப்பது வயது மனிதர் நின்று கொண்டிருந்தார். அப்போதுதான் நீதிபதி அவருக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை என்று தன் தீர்ப்பைப் படித்து முடித்திருந்தார். அது ராஜநிபந்தனையாகப் பேசிய பேச்சுக்கான தண்டனை.

ஆனால் மேகானீ அப்பேச்சைத் தான் நிகழ்த்தவேயில்லை என்றும், அந்த நாளில் அந்த நேரத்தில் ரான்பூரில் தன் வீட்டில்தான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர் ஏற்கெனவே மறுத்திருந்தார்.

ஆனால் அதைப் பற்றி வெள்ளை அரசாங்கம் கவலைப் படவே இல்லை; ஒரு தேசபக்தரைச் சிறைக்கு அனுப்ப வேண்டுமென்றால் உடனே வழக்கமான சாட்சிகளை கொண்டு வழக்கு ஜோடித்து விடும் போலீஸ். அக்காலத்தில் இது மிக சகஜமாக நடந்து வந்தது.

உண்மையில் பிறகு தெரிய வந்தது. அப்படிப் பேசியவர் ஜோடானி என்று வேறொருவர். குற்றப் பத்திரிகை எழுதியவர் எழுத்தறிவில்லாத ஒரு குமாஸ்தா. அவர் எழுதிய கையெழுத்தை மேகானி என்று படித்து வழக்குத் தொடர்ந்தது. ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அவர் விடுதலையடைந்தார்.

மேகானீ அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. குற்றத்தை மறுத்துத் தன் பதிலைத் தான் இயற்றிய ஒரு கவிதை வடிவிலே நீதி மன்றத்திலேயே அவர் பாடினார்.



முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:58 am


“நத்தி ஜான்யுன் அமாரே பந்தா ஸி ஆஃபடா கடிச்சே! கபராசே டெலிகே மாதா- நி ஹக்கலா படீச்சே!’ என்று தொடங்கும் ஒரு பாடலை மிகுந்த உணர்ச்சியோடு அவர் பாடினார்.

“எத்தனை இடர்கள், எத்தனை துன்பவங்கள்
எங்கள் பாதையில் என்றறிவோம்
அனைத்தையுமிழந்து அடிமையாய் வாழும்
பார்க்கெலாம் திலகம் பாரத அன்னை
அழைப்பதை மட்டுமே நாங்கள் அறிவோம்’
- என்ற இந்த வரிகளைக் கவிஞர் பாடியபோது நீதிமன்றம் முழுவதிலும் சத்தம் அடங்கி ஒரே நிசப்தம்.

பாமர மக்கள் பேச்சு வழக்கில் அமைந்த இப்படால் கேட்போரது இதயங்களில் எதிரொலித்தது. அவர்களின் கண்களிலிருந்து உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் வடிந்தது... நீதிபதியின் கண்களும் குளமாயின.

அன்று மேகானி பாடிய பாடல் அன்றிலிருந்த சூழலையும் சுதந்திரம் இழந்து அனைத்தும் இழந்த மக்களது அவல நிலையையும், நாட்டு விடுதலைக்காகத் தங்களது இன்னுயிர் துறக்கவும் மக்கள் சித்தமாக இருந்த நிலையையும் காட்டியது. மேகானீயின் பாடல் இதோ:

ஆயிரம் ஆண்டுத் தொடர்கதை எங்கள் துன்பம், அந்த பயங்கரக் கதைகள் இதயத்தைப் பிளக்கும், சென்று மறைந்தவர் ரத்தம், இன்று வாழ்வோரின் கண்ணீர் இவற்றை உனக்களிக்கின்றோம், இறைவா! இதுவே எங்கள் இறுதிக் காணிக்கை. ஏற்றுக்கொள், இழந்து விட்ட சுதந்திரத்தை மீண்டும் தா, இன்னும் ஏதேனும் வேண்டுமா? கேள், தருகிறோம். ஆனால், இறைவா, நீ எங்களோடு இரு, இதுவே எங்களது இறுதிப்போர். எங்களது ரத்தமும் கண்ணீரும் கழுவிய எங்கள் பிரார்த்தனை உனக்குக் கேட்கிறதா? நாங்கள் விடுதலை வீரர்கள் உன்னருள் வேண்டுகிறோம். எங்களது திறந்த இதயங்களைப் பார் காயங்களினின்று வரும் ரத்த ஓடைகளைப் பார். அநீதித் தீக்கங்குகள் கனன்று நிற்பதைப் பார். இவற்றை உனக்கு அர்ப்பணிக்கிறோம். அருகிலிருந்த இறைவா நீ ஒளி காட்டினால் இரவின் காரிருள் மேலும் கூடட்டும், பயமில்லை. கடைசி வாய்த் தண்ணீர் நீ தருவாயானால் போர்க்களம் எங்கள் மரணப் படுக்கையாகட்டும். போரில் ஆயுதங்கள் உரசும் பேரோசை ஒலிக்கட்டும். இறப்போர்க்காகக் குழலின் மெல்லொலி கேட்கட்டும். விண்ணளாவிய எம் ஆசைக் கோட்டைகள் சரிகின்றன. அச்சுறுத்தும் ஆயிரம் புதிய தீ நாக்குகள் எழுகின்றன. ஆயினும் இழந்த சுதந்திரம் மீண்டும் பெரும் வரை எங்கள் அர்ப்பணங்கள் தொடரும்.

பாரதியாரின் வார்ப்பில் வந்த மேகானீ 1897ஆம் ஆண்டு சுரேந்திர நகர் மாவட்டத்தில் சோட்டிலா என்ற ஊரில் காளிதாஸ் தோலிபாய் இருவருக்கும் ஒரு வைசியக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை அடிக்கடி மாற்றலாகும் ஒரு பணியில் இருந்தார். எனவே மேகானீ இளம் பருவத்திலேயே சௌராஷ்டிரத்தில் பல இயற்கை அழகுகளையும், மக்களது எளிய வாழ்க்கை இயல்புகளையும், கிராமீயச் சூழ்நிலைகளையும் நன்கு கண்டறிந்து நினைவுகளாகத் தன் கவியுள்ளத்திலே தேக்கி வைத்தவர்.

மேகானீ ராஜ்கோட்டில் தொடங்கிப் பல ஊர்களில் படித்து, 1916ல் பாவ்நகர் சாமல்தாஸ் கல்லூரியில் ஆங்கிலம், சமஸ்கிருதம் இரண்டும் கற்று, பி.ஏ. பட்டம் பெற்றார். பாரதியாரைப் போல் ஒரு சில மாதங்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பிறகு இந்தியாவின் அன்றையத் தலைநகராக இருந்த கல்கத்தா சென்று, ஜீவன்லால் அலுமினியம் கம்பெனியில் பணியாற்றினார். மூன்றே ஆண்டுகளில் ஹெளராப் பகுதியில் அமைந்த ஜீவன்லால் அலுமினியம் தொழிற் சாலையின் மேலாளர் பதவிக்கு உயர்ந்தார். கம்பெனி உரிமையாளருடன் லண்டன் சென்று வந்தார். வங்கத்தில் இருந்த நாட்களில் வங்காளி இலக்கியம், பிரம்ம சமாஜ் பற்றியும் நன்கு அறிந்தார். ஆனால் அவருக்கு எப்போதும் தன் தாய் மண்ணான சௌராஷ்டிரா நினைவுதான். கல்கத்தாவில் அலுவலகத்திலும் கத்தியவார் முண்டாசோடுதான் போவாராம். அதனால் கீழ் நிலைச் சிப்பந்திகள் அவரைப் பகடி (முண்டாசு) பாபு என்றே அழைத்தனர். அப்போதே கவிதைகள் எழுதத் தொடங்கினார்.

1921-22ல் ஜீவன்லால் கம்பெனி வேலையைத் துறந்துவிட்டு, குஜராத்திற்குத் திரும்பினார். அம்ருதலால் சேத் என்பவர் ரான்பூரில் தொடங்கியிருந்த “சௌராஷ்ட்ரா’ என்ற பத்திரிகையில் சேர்ந்தார். உடனேயே சிறு கதைகள், நாடோடி இலக்கியக் கதைகள், பாடல்கள் முதலியவற்றை எழுதத் தொடங்கினார்.

1922ல் தாகூரின் கதா-ஓ-காஹினி என்ற கதைகளை குர்பானி-நி-கதா என்ற தலைப்போடு வெளியிட்டார். பத்திரிகைப் பணியும் ஒருநாள் அலுத்துவிட்டது.




முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 21, 2013 7:58 am


பாரத அன்னையின் அழைப்பு அவருக்கு ஒலித்துக் கொண்டே இருந்தது. அதன் விளைவாக, ஏராளான தேசபக்தி பொங்கித் ததும்பும் பாடல்களை எழுதினார். ராஜ நிந்தனை வழக்கில் நீதிமன்றத்திலேயே தண்டனை வழங்கிய நீதிபதி உட்பட அனைவரும் கண்ணீர்விட்ட பாடலை முன்னமேயே பார்த்தோம். மற்றொரு பாடலில் விடுதலை என்ற லட்சியத்தை நோக்கி அயராது முன்னேற நாட்டு மக்களை அழைக்கிறார்:

“முன்னேறு, முன்னேறு, முன்னேறு.
உண்ண உணவின்றித் தவித்தாலும்,
தொண்டை வறண்டு உலர்ந்தாலும்,
உடல்வலி குன்றித் தேய்ந்தாலும்,
கடலலையோ காயும் பாலைவனமோ,
மலை உச்சியோ மையிருட்டுக் கானகமோ,
இடியோ புயலோ பெருமழையோ,
பகையோ, நட்போ, பயங்கரத் தீமையோ,
எதுவானாலும் எதிர்த்துச் செல்வோம்.
வழியில் நிற்பதால் வரும் பயனில்லை,
திரும்பிச் செல்ல வழியேதுமில்லை
முன்னேறு, முன்னேறு, முன்னேறு,
இலக்கை இன்னும் எட்டினோமில்லை.
இவை நம் பாவத்தின் இறுதி மூச்சாகும்,
தீமையின் முடிவு தூரத்திலில்லை.
உளத்தின் தவிப்பு உறுதியாய் நீங்கிடும்.
பாரத மாதா படுந்துயர் தீர்க்க
விரும்பியே ஏற்றோம் விடுதலைப் போரை
எரிமலை யுச்சியில் வாழ இசைந்தோம்.
ஆவி உட்பட அனைத்தையும் துறப்போம்.
முன்னேறு, முன்னேறு, முன்னேறு.’

மேகானியின் தேச விடுதலைப் பாடல்கள் ஸிந்து தோ என்ற பெயரில் வெளிவந்துள்ளன. இன்னும் ஆங்கில மொழி பெயர்ப்பு வந்ததாகத் தெரியவில்லை.

அவரது நாடோடி இலக்கியத் தேடல், மொழி பெயர்ப்பு முயற்சிகளைப் பாராட்டும் வகையில் 1928ல் ரஞ்சித்ராம் தங்கப் பரிசு வழங்கப்பட்டது. 1933ல் மனைவி இறந்தார்.

மேகானீ பம்பாய் சென்று சில ஆண்டுகள் வாழ்ந்தார். அப்போது “ஜன்ம பூமி’ என்ற பத்திரிகையில் எழுதினார். அப்போது நூல் மதிப்புரைகள் நிறைய எழுதினார். அவருடைய இலக்கிய நேர்மை, சீரிய உள்ளம் இவற்றால் குஜராத்தின் தலை சிறந்த அறிஞர், கவிகள், எழுத்தாளர் அனைவரையும் அச்சமின்றி விமர்சித்தார். பம்பாயிலிருந்து மீண்டும் ரான்பூருக்குத் திரும்பி, ஃபூல் சாப் என்ற இதழின் ஆசிரியரானார்.

1932லிருந்து அவர் புதினங்கள் எழுதத் தொடங்கினார். பத்திரிகை உலகோடு நெருங்கிய தொடர்பு இருந்ததால், இதழ்களில் தொடர் கதைகளாக இப்புதினங்களை வெளியிட்டார். அவர் மறைந்த 1947ஆம் ஆண்டு வரை 14 புதினங்களை எழுதினார். அவை சமூகம், வரலாறு என்ற இரு வகையிலும் அமைந்தவை.

1937லிருந்து சுமார் நூறு சிறு கதைகளை அவர் எழுதினார். அவரது புதினங்களிலும் சிறு கதைகளிலும் சமூகக் குறைபாடுகளும் சிறுமைகளும் நீங்கி, ஆரோக்கியமான ஒரு சமூகமாக நாடு வாழ வேண்டும் என்று காட்டினார்.

வரலாற்றுப் புதினங்கள் பாரதம், குஜராத் இவற்றின் பழம் பெருமைகள் பின்னிப் பிணைந்து சுவையானவை. அவரது மிகப் பெரிய வியக்கத் தக்க பணி ஐந்து தொகுப்புகளாக வெளிவந்துள்ள குஜராத்தி நாடோடி இலக்கியமே. அதை மேலும் தொடரும் பொருட்டு ராஜ்கோட் சௌராஷ்டிரா பல்கலைக் கழகத்தில் சென்ற 2012ஆம் ஆண்டில் ஜாவேர் சந்த் மேகானி இருக்கையும் மையமும் துவங்கப்பட்டுள்ளன.

காந்திஜி 1931ல் வட்ட மேஜை மகாநாட்டுக்குச் சென்றபோது மேகானீ இயற்றிய “செல்லோ கடோரா’ (கடைசிக் கோப்பை விஷம்) என்ற பாடலைப் படித்த மகாத்மா, தன் உள்ளத்தின் நிலையை அது அப்படியே பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார். காந்திஜி மேகானீயை “தேசியக் கவி’ என்று பாராட்டினார்.

“தன் உணர்ச்சி மிக்க சொல்வன்மை, கம்பீரமாகப் பாடும் குரல்வளம், தேசபக்தி இவற்றால் படித்தவர்களையும், பாமரர்களையும் தட்டியெழுபபி உள்ளங்கவர்ந்தவர் மேகானீ. தற்கால குஜராத்திய இலக்கியத்தில் அவருக்கு இணையான ஜனரஞ்சக மக்கள் கவிஞர் வேறு எவருமில்ø’ என்று எழுதுகிறார் குஜராத்தி இலக்கிய வரலாறு எழுதிய மன்சுக்லால் ஜாவரி.

- மு. ஸ்ரீனிவாஸன்





முன்னேறு... முன்னேறு... முன்னேறு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக