புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
59 Posts - 50%
heezulia
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
1 Post - 1%
Guna.D
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
12 Posts - 2%
prajai
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
9 Posts - 2%
jairam
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_m10தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துவது எப்படி ?


   
   
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 12:12 am

தகவல் அறியும் சட்டத்தை பயனுள்ள வகையில் பயன்படுதும் முறைகள்:
அரசிடமிருந்து தகவல் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கிய நிலையில் கொண்டு வரப்பட்டதுதான் இந்தியத் தகவல் உரிமைச் சட்டம்-2005.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி மத்திய, மாநில அரசுகள் மற்று அரசு சார்பு நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். அரசுத் துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால் அதையும் இச்சட்டத்தின் கீழ் பெற முடியும். இந்தியக் குடியுரிமை பெற்ற எவரும் இந்தச் சட்டத்தின் வழியாக தகவல்களைக் கோர முடியும். இதன் வழியே
1. அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்
2. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
3. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை செய்தல். இதன் மூலம் லஞ்சம், ஊழல் போன்றவற்றை ஒழித்தல்.
4. அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.
போன்றவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.
தகவல் என்றால் என்ன?
தகவல் என்பது எதைக் குறிப்பிடுகிறது? என்கிற எண்ணம் நமக்கு வரலாம். தகவல் என்பது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ-மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே “தகவல்” என்ற பிரிவின் கீழ் வைக்கப்படுகின்றன. இதன்படி கீழ்காணும் அனைத்தும் தகவல்கள்தான்.
1. அரசிடமுள்ள ஆவணங்களில் இருந்து குறிப்புகள் எடுத்தல்
2. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை நகல் எடுத்தல்
3. அரசின் பணிகளைப் பார்வையிடுதல்
4. அரசின் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிடுதல்
5. சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல்
6. தேவையான தகவலைத் தேவைப்படும் வடிவத்தில் பெறுதல்
தகவல்களைப் பெறுவதன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கப் போகிறது? என்கிற கேள்வி நமக்குத் தோன்றலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிகிறது. இதன் மூலம் அரசு நிர்வாகத்தின் பொறுப்பும், வெளிப்படையான செயல்களும் அதிகரிக்கிறது. இதன் மூலம் ஓரளவு லஞ்சம் மற்றும் ஊழல் போன்றவை குறைய வாய்ப்பிருக்கிறது. அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் நாம் இந்தத் தகவல் உரிமைச் சட்டத்தின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். மேலும் குறைகள் இருப்பின் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் இந்திய அரசியல் அமைப்பில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள ஒரு வழி ஏற்படுகிறது.
தகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005, பிரிவு 15-ன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தகவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இச்சட்டத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில தகவல் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ஆணையம், ஒரு மாநில தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் இரண்டு மாநில தகவல் ஆணையர்களின் கீழ் கடந்த 07.10.2005 ஆம் தேதி முதல் இயங்கி வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 5, உட்பிரிவு 1-ன்படி, தகவலுக்காக விண்ணப்பிப்பவர்களுக்கு, தகவல் அளிப்பதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும், பொதுத்தகவல் அலுவலர் என்கிற பொறுப்பில் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் உட்பிரிவு 2-ன்படி, தகவல் கோரும் விண்ணப்பங்களை அல்லது மேல்முறையீடுகளைப் பெற்று, அவற்றைப் பிரிவு 19, உட்பிரிவு 1-ன்படி, பொது தகவல் அலுவலருக்கோ அல்லது மாநில தகவல் ஆணையத்திற்கோ அனுப்பி வைப்பதற்காக அலுவலர் ஒருவர் ஒவ்வொரு உட்கோட்ட அல்லது உள்மாவட்ட நிலையில் உதவி பொதுத்தகவல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலகம், துறைத்தலைவர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங்கள் போன்றவற்றில் தகவல் பெறுவதற்காக பொதுத்தகவல் அலுவலர், மேல்முறையீட்டு அலுவலர் போன்றவர்களின் அஞ்சல் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவைகள் தரப்பட்டுள்ளன. இவை குறித்த சில விபரங்கள் அரசின் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6-ன்படி, தகவல் பெற விரும்புபவர், ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான கட்டணமாக ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) வரைவோலை (Demand Draft) அல்லது அரசு கருவூல சீட்டு (Treasury Challan) மூலம் செலுத்தி அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும். தற்போது தமிழ்நாட்டில் ரூ.10/-க்கான நீதிமனற வில்லை (Court Fee Stamp) அந்தப் படிவத்தில் ஒட்டிவிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் ரூ.10/- செலுத்திய விபரம் தெரிவிக்கப்பட வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் விண்ணப்பத்தில் தேவைப்படும் தகவலின் விபரங்களை எந்த வடிவத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த தகவலுடன் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், அதனை எழுத்து வடிவில் செய்திட அனைத்து உதவிகளையும் பொதுத் தகவல் அலுவலர் அல்லது உதவிப் பொதுத் தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.
தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடம் அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் மற்றும் அவரைத் தொடர்பு கொள்வதற்குத் தேவையான விபரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் கோருதல் கூடாது.
ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிற நிலையில், அந்தத் தகவல் பிற அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக அல்லது அதன் உரிய பொருள் பிற அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற்பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்கும் போது, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து அனுப்பி விட வேண்டும். மாற்றல் செய்து அனுப்பப்பட்ட விபரத்தை விண்ணப்பதாரருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு தகவல் கேட்கும் விண்ணப்பதாரகளுக்கு 30 நாட்களுக்குள் தகவல் அளிக்கப்பட்டாக வேண்டும். தகவல் 30 நாட்களில் கிடைக்காவிட்டால் அதே அலுவலகத்தில் உள்ள மேல் முறையீட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அவரும் 30 நாட்களுக்குள் சரியான தகவல்கள் அளிக்காவிட்டால் தமிழக தகவல் ஆணையத்திற்கு மேல் முறையீடு செய்து தகவல் பெறலாம். தகவல் அளிக்கத் தவறும் அதிகாரிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் ரூ 25,000 வரை அபராதம் விதிக்கத் தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு.
மேல்முறையீட்டிற்கான அலுவலக முகவரிகள்:
தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முகவரி:
தலைமை ஆணையர்,
தமிழ்நாடு தகவல் ஆணையம்,
எண் 375, முதல் தளம்,
காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடி கட்டிடம் ,
தேனாம்பேட்டை, 
அண்ணாசாலை , 
சென்னை- 18.
தொலைபேசி எண்: 044 -24357580.
மத்திய தகவல் ஆணையத்தின் முகவரி:
மத்திய தகவல் ஆணையர்.
மத்திய தகவல் ஆணையம்,
ஆகஸ்ட் கிராந்திபவன் 2 வது தளம்,
பி-பிரிவு. நியு பிகாஜி காமா பேலஸ்
டெல்லி-110056

 நன்றி - அரசியல்டுடே.காம் 

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Jul 14, 2013 12:13 am

கவி தான் இதில் சந்தேகம் கேட்டார் ராஜு அண்ணா பயனுள்ள பதிவு சூப்பருங்க சூப்பருங்க 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jul 14, 2013 12:16 am

அருமையான பயனுள்ள தகவல் தம்பி

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Sun Jul 14, 2013 12:20 am

இலவச சான்றிதழ் படிப்பு !

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து ஆன்லைனில் இலவச சான்றிதழ் படிப்பு


மத்திய அரசு ஊழியர் மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு, மக்கள் குறை தீர்ப்பு மற்றும் பென்ஷன் அமைச்சகம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், இலவச ஆன்லைன் சான்றிதழ் படிப்பை RTI என்ற வெப்சைட்டில் நடத்துகிறது. இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் இந்த படிப்பில் சேரலாம். இந்தச் சான்றிதழ் படிப்பு 15 நாட்கள் நடத்தப்படுகிறது. எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது படிக்கும் வகையில் எளிமையாக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரத்திற்கு: http://rtiocc.cgg.gov.in/faqs.do


manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Sun Jul 14, 2013 10:32 am

சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக