புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படு சகோதரா Poll_c10கவலைப்படு சகோதரா Poll_m10கவலைப்படு சகோதரா Poll_c10 
10 Posts - 56%
heezulia
கவலைப்படு சகோதரா Poll_c10கவலைப்படு சகோதரா Poll_m10கவலைப்படு சகோதரா Poll_c10 
8 Posts - 44%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படு சகோதரா Poll_c10கவலைப்படு சகோதரா Poll_m10கவலைப்படு சகோதரா Poll_c10 
52 Posts - 61%
heezulia
கவலைப்படு சகோதரா Poll_c10கவலைப்படு சகோதரா Poll_m10கவலைப்படு சகோதரா Poll_c10 
29 Posts - 34%
T.N.Balasubramanian
கவலைப்படு சகோதரா Poll_c10கவலைப்படு சகோதரா Poll_m10கவலைப்படு சகோதரா Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கவலைப்படு சகோதரா Poll_c10கவலைப்படு சகோதரா Poll_m10கவலைப்படு சகோதரா Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்படு சகோதரா


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Aug 23, 2013 9:31 am

தனது அபிமான நடிகரின் திரைப்படம் குறிப்பிட்ட நாளில் வெளியாகாத சோகத்தில்ரசிகர் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக அண்மையில் தினசரிகளில் ஒரு வருத்தமான செய்தி வெளியானது.
-
மதுரை மேலூர் ரசிகர்களோ இன்னும் ஒருபடி மேலே போய் அத்திரைப்படம் வெளியாகவிருந்த திரையரங்கம் முன் மறியல், ஆர்ப்பாட்டம் என ரகளையில் ஈடுபட்டனராம். மிகுந்த வெட்கக்கேடான விஷயம் இது. பொழுதுபோக்கு அம்சமாக கருத வேண்டியதை ஏதோ ஜீவாதாராமான விஷயம் போல் கருதி, இவர்கள் செய்யும் அழிச்சாட்டியத்துக்கு அளவில்லாமல் போய்விட்டது.
நிழலை நிஜமென நம்பி சீரழியும் இத்தகைய இளைஞர்களை குறைகூறி பிரயோஜனமில்லை. இவர்களுக்குநேரத்துக்கு உணவும், உடுத்தஜீன்ஸூம், பறக்க பைக்கும் வாங்கித்தரும் பெற்றோரைத்தான் நாம் நொந்து கொள்ள வேண்டியுள்ளது.
-
நாட்டில் ஆங்காங்கே குடிதண்ணீருக்காவும், மண்ணெண்ணெய்க்காகவும் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் செயல்பட்ட தமிழக இளைஞர்களின் செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கவை.
-
எல்லையில் இந்திய வீரர்களை பாகிஸ்தான் சுட்டுத் தள்ளி வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துன்புறுத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான ஈழச் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையோ கேள்விக்குறியாக இருக்கிறது. நாடு முழுவதும்மாநிலப் பிரிப்பு பிரச்னையில் சிக்கி போர்களமாக உள்ளது. இப்படி போராடுவதற்கும், போர்க்கோலம் பூணுவதற்கும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும்போது, நமது இளைஞர்களின் சினிமா பற்று நம்மை கவலை கொள்ள வைக்கிறது.
-
இன்றைய இளைஞர்களுக்கு சரியான முறையில் வழிகாட்ட நாம் தவறி விட்டோமோ என்கிற சந்தேகம் எழுகிறது. தலை நிறைய முடி, காதுகளில் தோடு,கை, கால்களில் வளையங்கள், ஆங்காங்கே கிழிந்து தொங்கும் ஆடைகள் என சட்டென பார்ப்பதற்கு ஆணா, பெண்ணா என இனங்கண்டறிய இயலாமலும், ஒருவேளை மனநிலை பாதித்ததவரோ எனச் சந்தேகிக்கும் விதமாகவும் இருக்கிறது இவர்களின் ஆடை அலங்காரங்கள்.
-
திரையில் கதாநாயகன் செய்யும் அனைத்தையும் இவர்களும் செய்து பார்க்கும் அளவுக்கு சினிமா என்னும் மாயை இவர்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறது என்பதுமறுக்க முடியாத உண்மை.
-
காதல், வன்முறை, ஆபாசம், கலாசார சீரழிவுகள் என சமுதாயச் சீர்கேடுகளின் ஒட்டுமொத்த குப்பைக் கூளமாக இன்றைய சினிமா இருந்து வருகிறது. திரையரங்கில் ஒரு ஆக்ஷன் திரைப்படம் பார்த்துவிட்டுஎழுந்திருக்கும்போது நம் சட்டையில் ரத்தம் தெளித்திருக்கிறதா என நாம் பார்த்துக் கொள்ளும் அளவுக்கு வன்முறை வரைமுறையின்றி விரவிக் கிடக்கிறது.
-
ஒருதலையான காதல், காதலை மறுக்கும் பெண்ணை கொலை செய்தல், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், காதல் தோல்வியால் போதைக்கு அடிமையாதல், தற்கொலை செய்துகொள்ளுதல் என நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்களுக்கு இத்திரைப்படங்கள்தான் பிள்ளையார் சுழி போடுகின்றன.
-
மாணவர்களுக்கு வழிகாட்டியாக, இளைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலான திரைப்படங்கள் அத்திப் பூத்தாற் போல வரத்தான் செய்கின்றன. ஆனால்அது போன்ற படங்கள் பார்க்க ஆளில்லாமல் நஷ்டத்தில் முடங்குவதால், தொடர்ந்து ஒரே மாதிரியான திரைப்படங்களே வெளிவருகின்றன.
அந்த காலங்களில் வெளிவந்த திரைப்படங்கள் கருத்தாழம் மிக்க பாடல்களையும், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் கொண்டிருந்தன. நாட்டுப் பற்றையும் கலாசாரத்தையும் கட்டிக் காப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தன. ஆனால், தற்போதைய படங்களோ அப்படியே தலைகீழ். நல்லதைச்சொல்லாவிட்டாலும், கெட்டதையாவது சொல்லாமலிருக்கலாம். ஆனால் அதைத்தான் சொல்கிறார்கள்.
-
அதேபோல், பழைய திரைப்பட கதாநாயகர்கள் நற்குண நாயகராகவும், வில்லன் என்பவர் அனைத்து தீய குணங்கள் உடையவராகவும் சித்திரிக்கப்படுவார். ஆனால், இன்றோ கதாநாயகனே அனைத்து கெட்ட பழக்கங்களும் உடையவராகக் காண்பிக்கப்படுவதால், மாணவர்களும், இளைஞர்களும் அவர்களையே ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு பின்பற்றத் துவங்கி விடுகின்றனர்.
-
இளைஞர்களுக்கு எப்படி திரைப்படங்களோ, அதேபோல் இல்லத்தரசிகளுக்கு தொலைக்காட்சி நெடுந்தொடர்கள், குழந்தைகளுக்கு கார்ட்டூன்சேனல் என இந்த மாய உலகம் குடும்பத்திலுள்ள அனைவரையும் கட்டியிழுத்து, அவர்களின் பொன்னான நேரத்தை கபளீகரம் செய்து விடுகிறது.
இப்படி வீணாக்கும் நேரத்தை புத்தகம் படிப்பது, விளையாடுவது, ஏதேனும் கலைகள் கற்பது, பொருளீட்டுவது என பயனுள்ள வகையில் செலவழித்தால் நாம் வாழ்க்கையில் மேலும் முன்னேறலாமல்லவா?
-
சினிமா என்பது பொழுதுபோக்கு என்பதை மறந்து, பெரும் பொழுதை அதிலேயே போக்குவது என்பது அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் என்பதைப் போலத் தான். இந்த விஷயத்தில் சினிமாத் துறையினரும் சற்று சமூக சிந்தனையோடு, படம் பார்க்க வருபவர்களுக்கு ஏதேனும் சில நல்ல கருத்துகளை மனதில்பதியும் வண்ணம் நல்ல திரைப்படங்களை எடுத்து தங்களுடைய சமூகப் பொறுப்புணர்வை நிரூபிக்க வேண்டும். செய்வார்களா...?
-
தினமணி



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக