புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
62 Posts - 57%
heezulia
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
104 Posts - 59%
heezulia
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_m10இஸ்லாமிய கேள்வி பதில்கள் Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்லாமிய கேள்வி பதில்கள்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:24 am

1 கேள்வி : மக்காவுக்கு ஹஜ் உம்ரா செய்யச் செல்லும் போது, மதீனா
ஜியாரத் செய்வது அவசியமா? (இக்பால் - ரஹீமா, சவூதி அரேபியா)

ஹஜ் உம்ராவுக்குறிய செயல்கள் அத்தனையும் மக்கா
மற்றும் மக்காவைச் சுற்றியுள்ள இடங்களுக்குள்ளேயே முடிந்து விடும். ஹஜ்
உம்ராவுக்காக மதீனா செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஹஜ் உம்ராவுக்காக மக்கா செல்லக் கூடியவர்கள்
பொதுவாக மதீனாவுக்கும் செல்வதினால் தான் அங்கே செல்வதும் ஹஜ் உம்ராவைச் சேர்ந்த
செயலோ என்று எண்ணி விட்டீர்கள். ஹஜ் உம்ராவுக்கும் மதீனாவுக்கும் எந்த விதத்திலும்
சம்பந்தமே இல்லை.

ஆனால் மக்காவுக்கு செல்லக்கூடியவர்கள்
மதீனாவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலாவதாக,

நபி (ஸல்) அவர்கள்
சொன்னார்கள் : மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுன்னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று
பள்ளிகளைத் தவிர (எந்தப் பள்ளிக்கும்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி - எண் 1189)


இந்த ஹதீஸின்
படி மற்ற இரு பள்ளிகளைப் போன்று மஸ்ஜிதுன்னபவி (மதீனா பள்ளி) க்கு ஜியாரத் செய்யலாம்
என்று தெரிகிறது.

இரண்டாவதாக,

நபி (ஸல்) அவர்கள்
சொன்னார்கள் : ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜித் ஹராம் மற்றும் எனது பள்ளி (மதீனா
பள்ளி) யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புஹாரி - எண் 1190)


அதிகமான நன்மைகளைப் பெற அங்கே சென்று தொழலாம்
என்று தெரிகிறது.

மூன்றாவதாக,

பல ஆயிரங்களை செலவு செய்து மக்கா வரை சென்ற
பிறகு மதீனா சென்று தொழுது விட்டு வருவோமே என்று மக்கள் நினைப்பதும் ஒரு காரணம்.

இந்த இடத்தில் ஒரு எச்சரிக்கையையும் விடுவது
எம் மீது கடமை.

மதீனாவிற்கு செல்லக் கூடியவர்கள் மதீனாவில்
அடங்கியுள்ள நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பலர்
செல்கிறார்கள். இது தவறாகும். மேலே சுட்டிக் காட்டிய ஹதீஸ்களே இக்கருத்துக்கு
போதுமான சான்றாகும். மதீனாவில் தொழுவதையே நோக்கமாக கொண்டு அங்கே சென்ற பிறகு நபி (ஸல்)
அவர்களின் கப்ரை ஜியாரத் செய்தால் தவறாகாது. அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப கூலி
கொடுக்கப்படுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

நம் ஊர் மையவாடிக்கு நபி (ஸல்) அவர்கள்
கற்றுத்தந்த முறைப்படி ஜியாரத் செய்தால் என்ன நன்மை கிடைக்குமோ அதே நன்மை தான் நபி
(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யும் போதும் கிடைக்கப் போகிறது. நமது உயிரினும்
இனிய நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்பதற்காக அதிகமான நன்மை ஏதும் கிடைக்கப் போவதில்லை.
கிடைக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அங்கே செல்லக்கூடியவர்களில் ஒரு சிலர் அல்லது
ஒரு பிரிவினர் தவறான புரிதலின் காரணமாக நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத,
இஸ்லாத்திற்கு முரணான காரியங்களைச் செய்கிறார்கள், அப்போது அவர்களெல்லாம்
செய்கிறார்களே! நாமும் செய்தால் என்ன என்று எண்ணி, செய்யத்துணிந்து விடுகிறோம்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான்
என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை தான். இருந்தாலும் அல்லாஹ்வுக்கு சமமாக அல்லது
அல்லாஹ்வின் பிரத்தியேக பண்புகளுக்கு சமமாக எந்தச் சந்தர்ப்பத்திலும் நபி (ஸல்)
அவர்களை ஆக்கிவிடக் கூடாது. இதை நபி (ஸல்) அவர்கள் கூட வெறுத்தார்கள்.

'யூத கிருத்தவர்களை
அல்லாஹ் சபிப்பானாக, அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக
மாற்றிவிட்டார்கள்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : அபூதாவூத் - எண் 3221)


'எனது கப்ரை விழாக்கள்
நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள்! உங்களது வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள்!
நீங்கள் எங்கிருந்த போதிலும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும்
ஸலவாத்து எனக்கு எத்தி வைக்கப்படுகிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : அபூதாவூத் - எண் 2037, அஹ்மத்)


வேறொரு ஹதீஸில் நாம் நபி (ஸல்) அவர்களுக்கு
சொல்லும் ஸலாம் கூட அவர்களுக்கு எத்தி வைக்கப்படுகிறது. நம் ஸலாத்தை அவர்களிடம்
கொண்டு சேர்ப்பதற்காக வானவர்கள் கூட நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

ஸலவாத்தும் ஸலாமும் எங்கிருந்து கொண்டும் நபி
(ஸல்) அவர்களுக்கு சொல்ல முடியும் என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேற்கண்ட ஹதீஸிலிருந்து நபி (ஸல்) அவர்களின்
கப்ரை பிரத்தியேகமாக ஜியாரத் செய்வதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. மாறாக நபி (ஸல்)
அவர்களின் எச்சரிக்கை தான் நமக்காக காத்திருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் கப்ரை நோக்கி
கையேந்துவது, கப்ரை நோக்கித் தொழுவது, கப்ருக்கு அருகில் இருந்து கொண்டு யாசீன்
ஓதுவது, பாத்திஹா ஓதுவது, முண்டியடித்துக் கொண்டு கப்ரை பார்க்க செல்வது போன்ற
செயல்களிலிருந்து தவ்ஹீதை புரிந்து கொண்டவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Wed Oct 28, 2009 2:26 am

2 கேள்வி : நிய்யத்தை வாயால் மொழியக் கூடாது என்று சொல்கிறார்கள்,
ஹஜ் உம்ராவில் இஹ்ராமின் போது மட்டும் நிய்யத்தை வாயால் மொழிய வேண்டும் என்று
சொல்கிறார்களே! நிய்யத்தை வாயால் மொழியக் கூடாது என்பதற்கு இது முரணாக உள்ளதே?
விளக்கவும். (ஜாஹிர் உசேன் - தம்மாம், சவூதி அரேபியா)

'செயல்கள் யாவும்
எண்ணத்தைப் பொருத்ததே! அவரவருக்கு எண்ணியது தான் கிடைக்கும்' இது நபிமொழி.
அறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்கள் : புஹாரி - 1, முஸ்லிம் - 4692, திர்மித் -1698)


எந்தச் செயலுக்கும் நிய்யத்தை மொழிவது
அவசியமில்லை தான். எவரும் தான் நினைப்பதை தனக்குத் தானே சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.

உதாரணமாக ஒருவர் மதுரையிலிருந்து
திருச்சிக்கு நாளை செல்ல நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதற்காக அவர் நான்
நாளை மதுரையிலிருந்து திருச்சிக்கு செல்ல நினைக்கிறேன் என்று தனக்குத் தானே வாயால்
சொல்லிக் கொண்டிருப்பதில்லை.

அது போலவே தொழுகை நோன்பு ஜக்காத் இது போன்று
இன்னபிற வணக்கங்களுக்கும் நிய்யத்தை வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம்
இல்லை. நபி (ஸல்) அவர்களும் நிய்யத்தை வாயால் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் என்று
சொல்லித்தரவும் இல்லை.

ஆனால் ஹஜ் உம்ராவுக்கு மட்டும் நிய்யத்தை
வாயால் மொழிய வேண்டும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நிய்யத் என்றால் மனதால்
நினைப்பது தானே! ஏன் இங்கே வாயால் மொழிய வேண்டும்? இதற்கு விடை சொல்லியாக வேண்டும்.

உண்மையென்னவென்றால் ஹஜ் உம்ராவின் போது கூட
நாம் நிய்யத்தை மனதால் தான் நினைக்க வேண்டும். வாயால் சொல்லக் கூடாது தான்.
இதற்குறிய ஆதாரம் என்ன என்பதையும் நாம் காட்ட வேண்டும் இல்லையா?

தொழுகையில் நிய்யத்தை சொல்கிறேன் என்ற
பெயரில் 'நவைத்து அன்உ ஸல்லிய லில்லாஹி..' என்று ஆரம்பிப்பதை ஓதுவார்கள். அதாவது 'இந்தத்
தொழுகையை அல்லாஹ்வுக்காக தொழுவதற்கு நிய்யத்து வைக்கிறேன்..' என்பது அதன் பொருள்.

இது போலவே நோன்பு, 'நவைத்து சவ்ம அதின்.. '
நோன்பு வைக்க நிய்யத்துச் செய்கிறேன்.. என்று ஆரம்பிக்கிறது.

ஆனால் ஹஜ் உம்ராவில் வாயால் சொல்லப்படும்
நிய்யத்து இப்படி ஆரம்பிக்க வில்லை.

ஜாபிர் பின்
அப்தில்லாஹ் (ரலி) கூறியதாவது:
'நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காக சென்றோம். அப்போது 'லப்பைக்க
அல்லாஹும்ம லப்பைக்க பில்ஹஜ்' எனக் கூறினோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்கா
நகருக்கு வந்த போது) அதை உம்ராவாக ஆக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
நாங்கள் அவ்வாறே ஆக்கினோம்'. (நூல் : புஹாரி - 1570)


அனஸ் (ரலி)
அறிவிக்கிறார்கள்:
..பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக நபி (ஸல்)
தல்பியா கூறினார்கள்... (நூல் : புஹாரி - 1714)


'லப்பைக்க அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன்
வஉம்ரத்தன்' என்ற வாசகம் நிய்யத்தை வாயால் மொழிவதற்குறிய வாசகம் என்று நம்மில் பலர்
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இது தவறாகும்.

இது தல்பியாவின் ஒரு பகுதி என்பதை அனஸ் (ரலி)
அவர்களின் ஹதீஸ்; தெளிவாகவே கூறுகிறது.

அதோடு நபி (ஸல்) அவர்கள் 'லப்பைக்க
அல்லாஹும்ம லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரத்தன்' என்று சொல்வதை நிய்யத் என்று நாம் அறிந்த
வரை எந்த இடத்திலும் சொல்ல வில்லை.

ஆக மனதால் நினைப்பது தான் நிய்யத், வாயால்
சொல்லக் கூடாது என்பது தௌ;ளத் தெளிவு.

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 26, 2010 12:17 pm

நல்லதொரு கேள்விபதிலை தொகுத்து தந்த ரூபனுக்கு எனது நன்றிகள்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக