புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
32 Posts - 51%
heezulia
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
74 Posts - 57%
heezulia
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
 நந்தி தேவர்! Poll_c10 நந்தி தேவர்! Poll_m10 நந்தி தேவர்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தி தேவர்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 21, 2013 1:25 am

 நந்தி தேவர்! Blf8dm2eTMGCWD5w1zyj+nandhi

முனிவர் ஒருவர் பலகாலம் தவம் புரிந்தார். அதன் பயனாக உலகங்கள் பலவற்றைக் காணும் பேறு பெற்றார். யமனுலகு சென்றபோது, முனிவர் அங்கிருந்த கல்மலை ஒன்றைப் பார்த்தார். “இது என்ன?” என்று யமனிடம் கேட்டார்.

“முனிவரே! நீர் சிறுவயதில் சிவனடியார் ஒருவர் உண்ணும்போது அவருடைய அன்னத்தில் சிறிய கல்லைப் போட்டீர்கள். அது நாள் தோறும் வளர்ந்து வருகிறது. பூவுலகில் உம் காலம் முடிந்து இங்கே வரும் போது இந்த மலையை உண்ணச் சொல்வோம்” என்று யமன் கூற முனிவர் நடுங்கினார்.

“நான் செய்த தவறுக்கு வேறு பரிகாரமே இல்லையா?” என்றார் முனிவர். “உள்ளது. பூவுலகில் இதே அளவு மலையை நாள்தோறும் பொடித்து உண்டு வந்தால், இங்குள்ள மலை மறைந்து விடும்.” என்று யமன் கூற, அவ்வாறே செய்வதாக முனிவர் வாக்களித்தார். முனிவர் பூவுலகுக்கு வந்தார். மலை ஒன்றைத் தேடிக் கண்டறிந்து அதன் கல்லைப் பொடியாக்கி உண்டுவந்தார். ஆகையால் அவரை அனைவரும் சிலாதர் என்று அழைத்தார்கள்.

சிலாதர் பிரம்மசாரியாக வாழ்ந்து வந்தார். அதனால் அவருடைய முன்னோர் நரகத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்த சிலாதர், ஒரு நங்கை நல்லாளை மணம் புரிந்து கொண்டார். வெகுகாலமாக அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. சிவபெருமானை வேண்டி பலகாலம் சிலாதர் தவம் புரிந்தார். அவர் மனைவியும் நாள்தோறும் சிவபூஜை செய்து பிள்ளை வரம் வேண்டினாள். உடலெல்லாம் திருநீறு, கழுத்திலே உருத்திராக்ஷ மாலைகள் அணிந்து, சிவபெருமானையே உடலால், மனத்தால், வாக்கால் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

சிவபெருமான் அருளிய வண்ணம் ஸ்ரீசைலத்துக்குச் சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்யத் தொடங்கினார். முனிவர்களுக்கு அழைப்பு விடுத்தார். யாகத்திற்கான பொருள்களையெல்லாம் சேகரித்தார். தானங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். சிலாதரும் அவருடன் இணைந்து பல ரிஷிகளும் யாகத்தை மிகவும் நியமத்துடன் செய்யலானார்கள். யாக பூமியை சிலாதர் கலப்பையால் உழுதபோது, கலப்பை நுனியில் ஒரு பெட்டி இடித்தது. உடனே சிலாதர் அப்பெட்டியை பூமியிலிருந்து வெளியில் எடுத்துத் திறந்து பார்த்தார். பொன்னாக ஒளிர்ந்த அப்பெட்டியினுள்ளே பால சூரியனைப் போல் ஒளி வீசிய சிறு குழந்தை ஒன்று இருந்ததைக் கண்டார். குழந்தையின் மேனியிலே திவ்ய ஆபரணங்கள் ஒளிர்ந்தன.

சிலாதர், ‘சிவபெருமான் அருளிய தவப்புதல்வர் இவரே’ என ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார். குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டுவிட்டு, மனைவியிடம் அளித்தார். அவள், புதல்வனை இறுக அணைத்து உச்சி முகர்ந்தாள். பாலூட்டி, சீராட்டினாள். அப்போது பிரம்மா, முனிவரை நோக்கி “அனைவருக்கும் ஆனந்தத்தை அளிக்கக்கூடிய இக்குழந்தைக்கு “நந்தீசன்” என்ற திருநாமம் சூட்டுவோம்” என்றருளினார்.

சிலாதரின் புதல்வன் ஆனதால் “சைலாதி” என்றும் அழைக்கப்பெற்றார். நந்தீசன் வளர்ந்து உரிய காலத்தில் உபநயனம் நிகழ்ந்தது. குருகுலவாசம் செய்து, அனைத்து சாஸ்திரங்களிலும் தேர்ந்தார். கற்று முடித்ததும் நந்தீசருக்கு மணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்கள். ஆனால் நந்தீசர் அதற்கு இணங்கவில்லை.

“சிவத்தைத் துதிப்பேன், பவத்தை விடுவேன்” என்று பெற்றோரிடம் விடைபெற்று தவம் செய்யச் சென்றார். சிலாதரும் அவர் மனைவியும் தடுத்தபோது, அவர்களிடம் தவத்தின் மேன்மையை எடுத்துரைத்து விடை பெற்றார்.

காட்டில் பஞ்சாக்னி-சுற்றிலும் நான்கு திக்குகளிலும் எரியும் நெருப்பு-வானத்தில் எரிக்கும் சூரியன்-ஆகியவற்றின் மத்தியில் நூறாண்டுகள் தவமியற்றினார். அவருடைய கடுமையான தவத்தின் சக்தியால் தேவருலகும் தவ ஒளியால் ஒளிர்ந்தது.

“எதைக்குறித்து நந்தீசன் தவம் செய்கிறாரோ?” என்று தேவர்கள் கவலை கொண்டனர். பல்லாண்டு காலத் தவத்தின் பயனாக பனிமலைப் பரமேஸ்வரன், நந்தீசன் முன்பு தோன்றினார். விடை மீது வந்து தரிசனம் தந்த ஈசனை நந்தீசர் வணங்கினார்; தொழுதார்; பாதம் பணிந்தார். ஆனந்தப் பரவசமெய்தியவராக “பரமனே! ஈசனே! எந்தையே! எனக்கருள் புரிய வந்த தேவனே!” என்று தோத்திரம் புரிந்தார்.

“குழந்தாய்! என்ன வரம் வேண்டும்?” என்று இறைவர் குழைந்து கனிவு ததும்பக் கேட்டார்.

“வேறென்ன வேண்டுவேன்? உம் பாதத்தில் மாறாத பற்றுடன் சிவபக்தியில் சிறந்தவனாக விளங்க வேண்டும் என்பதுதான் யான் வேண்டுவது” என்றார்.

“அப்படியே விளங்குவாயாக! எம் கணங்களுக்கு அதிபனாக இருப்பாய். என்னுடைய ஆணை எங்கெங்கு செல்லுமோ அங்கெல்லாம் உன் அதிகாரமும் செல்வதாக! அதிகார நந்தியாக விளங்குவாய்” என்றருளினார்.

“நந்தீசர் எமக்கு மகன், கணாதிபன், அனைவராலும் பூஜிக்கத் தக்கவன். ‘சிவஞானத்தை’ போதிக்கும் குருவும் இவனே” என்று தேவர்கள் அனைவருக்கும் சிவபெருமான் அறிவித்தார்.

அது முதல் திருநந்தித் தேவராக நந்தீசர், கயிலைமலையின் வாயிலில் நின்று காத்து வருகிறார்.

அங்கணன் கயிலை காக்கும் அகம்படித் தொழின்மைபூண்டு
நங்குரு மரபிற்கெல்லா முதற்குரு நாதனாகி
பங்கயத் துளவ நாளும் வேத்திரப்படை பொறுத்த
செங்கையெம் பெருமான் நந்தி சீரடிக் கமலம்போற்றி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82383
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 9:34 am

 நந்தி தேவர்! 103459460 

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக