புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
bala_t
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
1 Post - 1%
prajai
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
290 Posts - 42%
heezulia
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
6 Posts - 1%
prajai
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_m10மார்கழி மாத ஓசோன் ரகசியம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்கழி மாத ஓசோன் ரகசியம்


   
   
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Thu Nov 21, 2013 4:07 pm

இன்றைக்கு அறிவியலாளர்கள் சிரமப்பட்டு, கண்டு பிடிக்கும் பல உண்மைகளை நமது சனாதன மதப் பெரியவர்கள் தங்களுடைய தொலைநோக்குக் கூர்ந்த அறிவுத் திறத்தால் அறிந்து கொண்டிருந்தார்கள். அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தும் பொருட்டு பல எளிய நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் இன்றும் நன்மைகளைத் துய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலைநாட்டு அறிவியலாளர்கள் இந்து மதப் பழக்க வழக்கங்களை ஆராயும் போது, அறிவியல் வளராத அந்தக் காலத்திலேயே இப்படியொரு நுணுக்கமான நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்த நமது முன்னோர்களின் மேதைமையை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்ப்போம். மார்கழி மாதம் அதிகாலையில் 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் என்ற வழக்கம் அறிவியல் அடிப்படையில் நன்மை பயக்கும் பழக்கமாகும். மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரையில் காற்று மண்டலத்தில் ஓசோன் மிக அதிகமாகக் கிடைக்கிறது. ஓசோன் என்பது உயிர்வளியின் (ஆக்ஸிஜன்) மூன்று அணுக்கள் சோர்ந்து அமைந்த காற்றாகும். சாதாரணமாக காற்று மண்டலத்தில் உயிர்வளியின் இரண்டு அணுக்களால் ஆன உயிர்வளி தான் இருக்கும். இந்த மார்கழி மாதத்தில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரைக்கும் மட்டும் தான் உயிர்வளியின் மூன்று அணுக்கள் கொண்ட ஓசோன் கணிசமான அளவில் இருக்கும். இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள இரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்வதன் மூலம் நினைவாற்றல் பெருகுகிறது.

இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலையில் வெறுமனே ஒரு மனிதனை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் எத்தனை பேர் கேட்பார்கள்? அதற்குப் பதிலாக மார்கழி மாதம் அதிகாலை 6 மணிக்கு முன்னால் கோயிலுக்குப் போகும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டால், மக்கள் அனைவரும் ஓசோனைச் சுவாசித்து உடல் நலம் சிறந்து, நினைவாற்றல் பெருகி நன்மை அடைவாரகள். ஆகவேதான் மார்கழி மாதம் அதிகாலையில் கோயிலுக்குப் போக வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

இன்றைய அறிவியலாளர்கள் இது போன்று நம் இந்து மதப் பழக்க வழக்கங்களில் பொதிந்துள்ள அறிவியல் அம்சங்களை அறிந்து திகைத்துப் போகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்து மதத்தை அறிவியல் மதம் என்று பாராட்டுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேற்கண்ட விளக்கங்களைப் பெறுவதற்கு நீங்கள் பெரிய மதாச்சாரியரையோ மதப் பிரச்சாரகரையோ நாட வேண்டியதில்லை. இந்து மதத்திலுள்ள 80 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் இவ்விளக்கங்களைச் சரளமாகத் தருகின்றனர். இந்துக்கள் மட்டுமல்ல; இப்பொழுது கிருத்துவர்களும் இவ்விளக்கங்களைத் தர ஆரம்பித்து விட்டனர். மார்கழி மாதம் அதிகாலையில் சென்ற கிருத்துவ பஜனைக் குழுவினரிடம் விசாரித்த போது ஓசோனின் அருமை பெருமைகளைப் பற்றி விரிவாக விளக்கினார்கள். ஓசோனினால் கிடைக்கும் நன்மைகளைப் பங்கு போட கிருத்துவர்களும் போட்டிக்கு வந்து விட்டார்கள்.

ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா? ஓசோன் என்பது ஒரு நச்சு வாயு. அது மனிதனின் சுவாச அமைப்பைப் பாழ்படுத்தும். மனிதனை மட்டுமல்ல, அது விலங்குகளுக்கும் தீங்கானது. விலங்குகளுக்கு மட்டுமல்ல, தாவரங்களுக்கும் தீங்னானது. தாவரங்களுக்கு மட்டுமல்ல, ஜடப் பொருட்களான ரப்பர், துணிவகைகள் ஆகியவற்றிற்கும் தீங்கானது. அது எப்படி எந்த அளவிற்குத் தீங்கானது என்பது ஆர்.டி.ராஸ் (R.D.Ross) என்பவர் தொகுத்து Van Nostrand Reinhold Company (New york / Cincinati / Toranto / London / Melbourne) வெளியிட்டிருக்கும் Air Pollution and Industries (தொழிற்சாலைகளும் காற்று மாசு படுதலும்) என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நூலில் உள்ள சில விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

மனிதனுக்குக் கேடு

1.காற்றில் ஐந்து கோடியில் ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சு திணறத் தொடங்கும்.

2. காற்றில் ஒரு கோடியில் மூன்று பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் மூச்சுக் குழாயில் வலி எடுக்கும்; களைப்பு ஏற்படும்; தலைவலி உண்டாகும்.

3. காற்றில் பத்து லட்சத்தில ஒரு பங்கு என்ற அளவில் ஓசோன் இருந்தால் சிலர் மரணமே கூட அடைந்து விடுவார்கள்.

4. பொதுவாக ஓசோனைச் சுவாசித்தால் முதுமைத் தன்மை விரைவாக ஏற்படும். (பக்கம் 242)

விலங்குகளுக்குக் கேடு

மனிதனுக்கு ஏற்படும் கேடுகள் அனைத்தும் விலங்குகளுக்கும் பொருந்தும். (பக்கம் 44)

தாவரங்களுக்குக் கேடு

காற்றில் பத்து கோடியில் மூன்று பங்கு ஓசோன் இருந்தால் இலைகள் பழுப்படையும். இலை நரம்புகள் வலுவிழக்கும். (பக்கம் 44,46,49)

ஜடப் பொருட்களுக்கும் கேடு

காற்றில் பத்து கோடியில் ஒரு பங்கு ஓசோன் இருந்தால் ரப்பரின் மேற்பகுதியில் வெடிப்பு ஏற்படும். நூல் மற்றும் துணிகள் நைந்து விடும். (பக்கம் 25)

இவ்வளவு கேடுகளை விளைவிக்கும் ஓசோன் காற்றில் நிறைய இருப்பதாகவும் அது உடல் நலனுக்கு நல்லது என்றும் எப்படி கதை கட்டினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அறிவியலும் மதங்களும் என்றைக்குமே எதிரிகள் தான். அறிவியல் உணமையை மேலும் மேலும் ஆராயும். அது கசப்பாக இருந்தாலும் தொடர்ந்து பயணிக்கும். மதங்களோ மூட நம்பிக்கைகளை வளர்க்கத்தான் பாடுபடும். அறிவியல் மூட நம்பிக்கைகளை அடித்து நொறுக்கி முன்னேறிவிட்டால், அதுவரைக்கும் ஏற்பட்டு இருக்கும் வளர்ச்சிகளுக்கு மதச் சாயம் பூசி உள்வாங்கிக் கொள்ளும். வரலாறு முழுவதும் இப்படித் தான் நடந்திருக்கிறது.

ஓசோன் கதை என்னவென்றால், அது மூன்று அணுக்கள கொண்ட உயிர்வளி; வீரியம் மிக்கது என்று படித்தவுடன், ஏமாற்றுக் கலையைத் தவிர வேறு எதையுமே ஆராய விரும்பாத, வேறு எதிலுமே நிபுணத்துவம் பெற விரும்பாத மதவாதிகள் அது உடல் நலுனுக்கு நல்லது என்று தாங்களாகவே முடிவு கட்டி விட்டாரகள். அதை எந்த இடத்தில் மத உரிமை கோருவது என்று தீவிரமாக யோசித்தார்கள். அவர்களுடைய கண்களில் மார்கழி மாத அதிகாலை பளிச்சென்று தென்பட்டது.உடனே மார்கழி மாத அதிகாலையில் ஓசோன் இருக்கிறது; அதைச் சுவாசித்தால் உடலுக்கு நல்லது என்று கதை கட்டி விட்டார்கள். மத நிறுவனர்களின் (முட்டாள்களின்) மேதாவிலாசத்தை மதப் பிரச்சாரகர்கள் (அயோக்கியர்கள்) மதத்தை ஏற்றுக் கொள்பவர்களிடம் (காட்டுமிராண்டிகளிடம்) சொல்லிச் சொல்லிப் பூரித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இன்று மிகப் பலர் மார்கழி மாத அதிகாலையில் கோயிலுக்குப் போவது காற்றில் கிடைக்கும் ஓசோனைச் சுவாசிக்கத் தான் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள். ஆனால் உண்மை இதற்கு நேர் எதிரிடையானது. மார்கழி மாதம் மட்டுமல்ல; எந்த மாதத்திலும் காற்றில் ஓசோன் இருப்பதில்லை. இது மதவாதிகளின் கட்டுக் கதையே.

இது போல் மதம் அறிவியலைச் சார்ந்து இருக்கிறது என்றும் மதம் அறிவியலை விட மேம்பட்டது என்றும் கூறும் அனைத்து விவரங்களும் அயோக்கியத்தனமான பொய்களே. ஓசோன் விஷயத்தில் மிக எளிதாக விளக்க முடிகிறது. மற்ற விஷயங்களிலும் ஆழமாக ஆராய்ந்தால் மதவாதிகள் செய்யும் புரட்டு தெளிவாகத் தெரியும்.

அது சரி! மதவாதிகள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? மக்கள் மதிமயக்கத்தில் இருக்கும் வரையில் தான் சுரண்டல் கொள்ளையை நடத்த முடியும். மக்கள் தெளிவு பெற்றால் சுரண்டும் வர்க்கத்திற்கு ஆபத்து. மதங்கள் எப்பொழுதுமே சுரண்டும் வர்க்கத்திற்குத்தான் துணையாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டும் வர்க்கத்தினர் உழைக்கும் வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு இராணுவத்தையும் காவல் துறையையும் விட மதவாதிகளையே அதிகம் சார்ந்துள்ளனர் என்பது உங்களுக்குத் தெரியுமா? அதனால் தான் மதவாதிகள் மக்களை மயக்க விதவிதமான புரட்டுகள் செய்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் உறுதியாக இருந்தால் மதவாதிகள் உங்களுடன் கணக்கு தீர்த்துக் கொள்வார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

- இராமியா



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81958
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 21, 2013 4:14 pm

அதிகாலையில் காற்றில் தூய்மையான
பிராணவாயு காற்றில் அதிகம் உள்ளது
என்பது உண்மை..
-
இதனை மதவாதிகள் யாரும் சொல்லவில்லை...
கற்றறிந்த அறிஞர்களின் கூற்றுதான்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக