புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
56 Posts - 50%
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
12 Posts - 2%
prajai
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
9 Posts - 2%
Jenila
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%
jairam
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பண்டாரப் பாட்டு! Poll_c10பண்டாரப் பாட்டு! Poll_m10பண்டாரப் பாட்டு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பண்டாரப் பாட்டு!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Mar 02, 2014 5:07 pm

ஆன்ம வீரம், படை வீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ்நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது மறப்படையையும் வெல்லும் ஆற்றல், அறப்படையை எடுத்து ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது பண்டைத் திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும்.

சைவ சமயத்தை தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய நால்வருள் ஒருவராய திருநாவுக்கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி, அவர் வாழ்க்கையையும் வாய்மொழியையும் பாரதியார் நன்கு உணர்ந்துள்ளார். மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்லலாகுமென்று ஆயிரத் திருநூறு ஆண்டுகட்கு முன்னரே உலக மக்களுக்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். அவரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று.

இவ்வுலகில் புயவலியும் படைவலியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுகின்றனர். புயவலியினும், படைவலியினும் பெரிய ஆன்மத் திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்கினார். சமண சமயத்தைக் கைவிட்டு அப்பெரியார், சைவ நெறியைச் சார்ந்தபொழுது, சமண மன்னன் சீற்றமுற்றான். இதனால் நாவுக்கரசரைக் கொணருமாறு வேம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ்வீரர், அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆரவாரித்தனர் எனினும், அவரது உருண்டு திரண்ட மேனியைக் கண்டு அப்பர் சிறிதும் அஞ்சினாரல்லர்; அவர் கையிலமைந்த படைக்கலங்களைக் கண்டு இறையளவும் கலங்கினாரல்லர்; ""நாமார்க்கும் குடியல்லோம், நமனை யஞ்சோம்'' என்று வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தமியராய், அஞ்சா நெஞ்சினராய் நின்று, அவன் மறப்படையைத் தம் ஆன்மவலியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.

யார்க்குங் குடியல்லேன் யான்என்ப
தோர்ந்தனன் மாயையே - உன்தன்
போர்க்கஞ் சுவேனோ பொடியாக்கு
வேன்உன்னை மாயையே


என்று தம்மை அச்சுறுத்திய மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப்பாட்டில் திருநாவுக்கரசரது வீரவுள்ளம் விளங்கக் காணலாம். பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாய நிற்கும் தகுதி வாய்ந்தது, "அச்சமில்லை' என்று தொடங்கும் "பண்டாரப் பாட்டே' யாகும். அப்பாட்டிலே,

பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்றெழுந்த அடிகள், நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்தமுடையதாகும். மேலும், திருநாவுக்கரசரைத் துன்புறுத்தக் கருதிய அரசன், அவரை நீற்றறையிலிட்டான். அந்நீற்றறையின் வெம்மையை,""மாசில் வீணையும் மாலை மதியமும்'' எனப்பாடி நாவுக்கரசர் தம் மனச் செம்மையால் வென்றார்.

ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நிலையிலும் அவர் பெருமையை அரசன் அறிந்தானில்லை. பிறகு நஞ்சு கலந்த உணவை ஊட்டச் செய்தான். அந்த நஞ்சு கலந்த மாந்தரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினாரல்லர்; அவரிட்ட சோற்றை உண்டு மகிழ்ந்தார். இங்ஙனம் பகைவரிட்ட நஞ்சையும் நண்பரிட்ட நல்லமுதெனக் கருதியுண்ட நாவுக்கரசர், "பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர்'' என்னும் திருக்குறளுக்கு நனி சிறந்த சான்றாயினார். இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ்செயலை வள்ளுவர் அருளிய கருத்தோடு கலந்து,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர்ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று பாரதியார் நல்ல தமிழ் விருந்தளித்தார். ""ஊனம் ஒன்றில்லாத இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்'' வேறொன்றையும் பொருளாகக் கருதார். மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும், ஞாயிறும் திங்களும் திசை மாறினாலும் அன்னார் மனந் துளங்குவதில்லை. இவ்வுண்ணையை,

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிவென்....
ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே

என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான்மத் திறலின் அருமையறிந்த பாரதியார்,

உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே


என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப் போந்தார். உரன் என்னும் கருவியால் ஐம்பொறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான் மங்கையர் தோற்றொழிந்தனர். காதல் புரியும் மாதரார்,

கண்கள் வீசு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லை


என்ற பாரதியார் பாட்டு இவ்வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆகவே, முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப்பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக் கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது. - (ரா.பி.சேதுப்பிள்ளை, நூல்: "தமிழின்பம்'.)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக