புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:44 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 3:25 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
68 Posts - 59%
heezulia
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
110 Posts - 60%
heezulia
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_m10பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக. Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக.


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Mar 12, 2014 2:43 pm

‘அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்’ - இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு.
நீங்கள் அறிவாளியா? மேதையா?


பிரச்னை... பிரச்னை... பிரச்னை... எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை... பிறகு அதன் பின் ஓட்டம்... இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை... பிரச்னை... பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்... தீர்வுகளைத் தேடாமலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போகும்!பிரச்னை என்று வருகிற பலரும், ‘எங்களால இனியும் ஒண்ணா இருக்க முடியாது. பிரியறதுதான் தீர்வு’ என்கிற முடிவுக்குத் தயாராக இருக்கிறார்கள். ‘பஞ்சாயத்து பண்ணுகிறேன்’ என்கிற பெயரில், அவர்களுக்குச் சமரசம் பேச வருகிறவர்களும், இருவரிடமும் அவரவர் தரப்பில் என்ன பிரச்னை எனக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்குப் பதில், பெரிதாக்கவே செய்கிறார்கள். அதைத் தவிர்த்து, பிரச்னைகளை ஒரு பக்கம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை நெருக்கமாக்குவதில் கவனம் செலுத்திப் பாருங்கள்.





கணவன் - மனைவி என்றில்லை... எந்த இரண்டு பேருக்குமான உறவு அல்லது நட்புக்கும் இந்த விதி பொருந்தும். பொதுவாக அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி ஆளுமை கொண்டவர்கள். தனித்தனி மதிப்பீடுகள் கொண்டவர்கள். கலாசார ரீதியில் பார்த்தால், இந்த பேதங்கள் இன்னும் அதிகமாவதை உணரலாம். உதாரணத்துக்கு அமெரிக்காவில் முன்பின் அறிமுகமில்லாத நபர்கள்கூட ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்து அன்பு செலுத்துவது சகஜம். அதுவே நம்மூரில் அது சகித்துக்கொள்ள முடியாத குற்றம். இப்படி அவரவர் வளர்ந்த, வாழ்ந்த கலாசாரங்களையும் அவர் களுக்குள் பதிந்து போன மதிப்பீடுகளையும் மாற்ற முனைந்தால், கடுகளவு பிரச்னைகூட மலையளவு பெரிதாகவே செய்யும். திருமண உறவுகளில் இந்த அணுகுமுறைதான் பெரும்பாலான தம்பதிகளுக்குள் பிரச்னைகள் வெடிக்கவும், விஸ்வரூபம் எடுத்து, பிரிவை நோக்கி அழைத்துச் செல்லவும் அடிப்படையாக அமைகிறது.நீங்கள் நீங்களா கவும், உங்கள் துணையை அவராகவும் இருக்க அனுமதித்துப் பாருங்கள்.



இருவருக்குள்ளும் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமிருக்காது! பிரச்னை என்று நாம் சொல்கிற பல விஷயங்களும் உண்மையில் பிரச்னையே இல்லை. வாழ்க்கையில் நடக்கக்கூடிய யதார்த்தமான விஷயங்களாகவே இருக்கும். அதை நாம் எப்படி அணுகுகிறோம் என்பதுதான் முக்கியமே. ஆங்கிலத்தில் ‘செரினிட்டி ப்ரேயர்’ என ஒன்று பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

‘கடவுளே...என் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க எனக்கு தைரியம் கொடு.தீர்க்கவே முடியாத பிரச்னைகளை ஏற்றுக்கொள்ள எனக்குப் பக்குவத்தைக் கொடு...’ - இந்த பிரார்த்தனை வரிகள், நம் வாழ்க்கைக்கும் ரொம்பவே பொருத்தம். பிரச்னை என்று பார்த்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விஷயமும் பிரச்னைதான். குழந்தை வளர்ப்பாகட்டும், வேலைக்குச் செல்வதாகட்டும், வீட்டிலிருப்பதாகட்டும்... எல்லாமே பிரச்னைகள்தான். அதுதான் வாழ்க்கை எனப் பார்க்கப் பழகினால், அங்கே காணாமல் போவது பிரச்னைகள் மட்டுமின்றி, அவற்றால் ஏற்படுகிற அதிருப்தியும்தான்!வாழ்க்கையில் எவற்றையெல்லாம் நம்மால் மாற்ற முடியாது எனத் தெரிந்து கொண்டு, அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், ஒரு மனிதராக நாம் பக்குவப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அறிகுறி. இப்படியொரு அணுகுமுறையை வளர்த்துக் கொண்டுவிட்டால், நம்மையும் அறியாமல் ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு தெளிவையும் வாழ்க்கையை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான சாத்தியங்களையும் பெற்றுக் கொண்டிருப்போம்.

ஏற்கனவே முந்தைய அத்தியாங்களில் சொன்ன அதே விஷயத்தை மீண்டுமொரு முறை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். என்ன நடந்தாலும், அதில் யார் பக்கம் சரி, யார் பக்கம் தவறு என்கிற அலசலோ, ஆராய்ச்சியோ தேவையில்லை. அந்தஇடத்தில் சூழலை சகஜமாக்க நான் என்ன செய்ய வேண்டும் என யோசிக்கத் தொடங்கினாலே, பிரச்னையின் தீவிரம் குறைந்து விடும்.உங்களில் எத்தனை பேருக்கு தங்க மீன் பற்றித் தெரியும்? பல வீடுகளில் அழகுக்காகவும், அந்தஸ்துக்காகவும் தங்க மீன்கள் வளர்ப்பார்கள். மற்ற மீன்களுக்கும், இதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. பொதுவாக மீனுக்கு தேவைக்கதிகமாக இரை கொடுத்தால், அது சாப்பிட்டு, செத்துவிடும். அதுவே தங்க மீன்கள் மட்டும் எத்தனை கொடுத்தாலும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கும். சாப்பிட்டுச் சாப்பிட்டு வேகமாக வளரும். தம்பதியருக்கிடையிலான பிரச்னைகள் தங்க மீன்களைப் போன்றவை. அதை நீங்கள் கவனிக்க கவனிக்க வளரும். கூடவே புதிய பிரச்னைகளையும் சேர்த்துக் கொண்டு வளரும். பிரச்னைகள் கிளை பரப்பி, பரந்து விரிந்து, இருவரையும் சேர்ந்து வாழவே முடியாத ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி விடும்.

சரி... பிரச்னைகள் வரும் போது என்ன செய்ய வேண்டும்?

தம்பதிக்குள் பிரச்னை வரும் போது, ஒன்றுமில்லாததை ஊதிப் பெரிதாக்கி, ஒருவருக்கொருவர் வார்த்தைகளை உமிழ்ந்து, முகத்தைத் திருப்பிக் கொள்கிற அளவுக்குப் போவதுதான் சகஜமாக பலரும் செய்வது. ஒரு மாறுதலுக்கு இப்படிச் செய்து பாருங்களேன்... பிரச்னை வரும்போது, உங்கள் துணையின் மீது அதிக அன்பைக் காட்டிப் பாருங்கள். நெருக்கமாக இருந்து பாருங்கள். ஆதரவாக இருந்து பாருங்கள். அந்த மாற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.



பிரச்னையைப் பற்றிப் பேசுவதைத் தள்ளி வைத்து விட்டு, உங்கள் துணைக்காக அவருக்கு மிகவும் பிடித்த அல்லது உங்கள் இருவரின் காதலையும் நினைவுப்படுத்தும் ஒரு ஸ்பெஷல் உணவைத் தயார் செய்து பரிமாறுங்கள். வழக்கத்தைவிட வித்தியாசமான முறையில் ‘ஐ லவ் யூ’ சொல்லிப் பாருங்கள்.

உங்கள் இருவருடைய பிரச்னை பற்றி, வேறு யாரிடமும் பேசாதீர்கள். அதை நீங்கள் மற்றவர்களிடம் பகிரப் பகிர, உங்கள் கோபமும் வெறுப்பும் இன்னும் அதிகமாகும். அதை வெளிப்படுத்தும் நோக்கத்தில், உங்கள் துணை வீட்டுக்கு வரும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள்.

மனது ரொம்பவும் நொந்து போயிருக்கிற தருணங்களில், மெல்ல மெல்ல அதை சந்தோஷத்தை நோக்கி நகர்த்த முயற்சி செய்யுங்கள். அந்த முயற்சிக்கு அசாத்திய மன உறுதி வேண்டும். பழகப் பழக அதுவும் கை வரும்.

‘நான் எவ்வளவோ விட்டுக் கொடுத்துட்டேன். ஆனாலும் என் கணவர்/மனைவி/நண்பன் என்னைத் துன்புறுத்திவிட்டார். மறுபடி மறுபடி நானே ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்?’ என்கிற கோபம் பலருக்கும் இருக்கும். அப்படி விட்டுக் கொடுப்பது சிரமம்தான் என்றாலும், அந்த நினைப்பிலிருந்து வெளியே வருகிற கலை உங்களுக்கு பிரச்னைகளை வெல்ல வேறொரு அணுகுமுறையைக் கொடுக்கும்.

இன்று ஏதோ ஒரு விஷயத்துக்காக இருவரும் சண்டை போடுகிறீர்கள். 6 மாதமோ, ஒரு வருடமோ கழித்து அந்தச் சண்டையை யோசித்துப் பார்த்தால், அது எத்தனை அர்த்தமற்றது என்பது தெரியும். எனவே, சண்டையின் போதே அந்த யதார்த்தம் உணர்ந்து, உடனடியாக அதைப் பெரிதுபடுத்தாமல் வெளியே வந்து விடுங்கள்.





கடைசியாக ஒரே ஒரு அட்வைஸ்... நம்மில் பலரும் இன்னும் குழந்தைகளைப் போலத்தான் நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை தனக்கு வேண்டியதைக் கேட்டு அடம் பிடிக்கும். அது கிடைத்தால் சந்தோஷப்படும். கிடைக்காவிட்டால் அழுது, புரண்டு அமர்க்களம் பண்ணும். கோபப்படும். பெரியவர்களாகிய நாமும் அப்படித்தானே இருக்கிறோம்? நமக்கு சாதகமான விஷயங்கள் நடந்தால் மகிழ்கிறோம். அப்படி நடக்காத போது கோபப்படுகிறோம். இந்தக் குழந்தை மனநிலையிலிருந்து வெளியே வரும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டாலே பிரச்னைகளை மட்டுமின்றி, வாழ்க்கையையும் வெல்லலாம் எளிதாக.
-
நன்றி:முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக