புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
30 Posts - 55%
heezulia
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
72 Posts - 59%
heezulia
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
45 Posts - 37%
mohamed nizamudeen
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_m10பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 02, 2009 3:02 pm

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன்
(29.07.1967 -02.11.2007)

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Tamilselvanநேற்றுவரை
புன்னகை பூத்தபடி ஊடகவியலாளர்களையும், சர்வதேச இராசதந்திரிகளையும் ஏன்
தனது எதிர்தரப்பில் உள்ள சிறிலங்கா அரசியல் தலைவர்களையும் எதிர்கொண்ட,
அரசியற்பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் கடந்த 2ம் திகதி
வெள்ளியன்று காலை சிறிலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.

உண்மையில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியற் பொறுப்பாளர்.
ஆனால் எங்களின் பிரதிநிதியாக உலக அரங்கில் செயற்பட்டவர் என்பதனால் அவர்
எங்களில் ஒருவராய், ஒட்டுமொத்த தமிழினத்தின் பிரதிநிதியாக எங்கள்
உணர்வுகளில் நிறைந்திருக்கிறார். இதன் தாற்பரியத்தை மற்றவர்கள் புரிந்து
கொண்டார்களோ இல்லையோ, சிங்கள தேசம் நன்றாகப்புரிந்து கொண்டிதிருந்தது.
அதானால்தான், அவர் மரணத்தையிட்டு மகிழ்ந்து ஆரவாரித்தது. இந்த
மனிதாபிமானமற்ற செய்கைகள் மூலம் சிங்களம் தன்னை இனங்காட்டிக் கொண்டதுடன்,
உலகத்தமிழனத்தின் உணர்வுகளை உலுப்பிவிட்டுள்ளது. தமிழ்ச்செல்வன் என்ற
தமிழர்களின் புதல்வன் தன் மரணத்தின் மூலமும் தன்னினத்தின் மனக்கதவுகளைத்
தட்டிச்சென்றிருக்கிறான்.

1993ல் என நினைக்கிறேன் தமிழ்ச்செல்வன் அவர்கள் அரசியற்துறைப்
பொறுப்பாளராக நியமிக்கப்பட்டபோது, அவரை முதன் முதலில் பி.பி.சியின்
தமிழ்ச்சேவை பேட்டி எடுத்திருந்தது. “இதுவரை ஒரு இராணுவத்தளபதியாக இருந்த
நீங்கள் இப்போது அரசியற்துறை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
இரண்டுக்குமிடையில் வேறுபாட்டைக் காணவில்லையா” என வினவியபோது,
அப்படியெதுவும் வித்தியாசமில்லை இரண்டுமே விடுதலைப்போராட்டத்திற்கானது
என்பதாக அவர் பதிலளித்திருந்தார். தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை இவை வெறும்
வார்த்தைகளல்ல, அவர் விடுதலைப்போராட்டத்தில் எக்காலத்திலும்,
எந்தப்பணியையும் செய்யத்தயாராய் இருந்தார் என்பதனை தனது 23 வருடகால
விடுதலைப்பணியில், அவரது இறுதி நிமிடம் வரையும் செய்துகாட்டினார்.

அந்த இளவயதில், அவருக்கு தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்ட இயக்கத்தின்
பெரிய பொறுப்பு ஒன்று வழங்கப்பட்டபோது அது பலருக்கு வியப்பாகவும் அதே
சமயம் ஏற்புடையதாகவும் இருக்கவில்லை. அவர் அரசியல் விஞ்ஞானத்தையோ சர்வதேச
உறவுகள் பற்றியோ எந்தப் பல்கலைக்கழகத்திலும் கற்கவில்லை என்பது கூட
சிலருக்கு அவர்மீது அசிரத்தையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் கால
ஓட்டத்தில் ஈழத்து இராசதந்திரியாக, அவர்பேச்சுவார்த்தை மேசையிலும்,
சர்வதேச அரங்கிலும் சாதித்தவை, இன்று அவருக்கு மாற்றீடு இருக்கிறதா என்று
கவலைகொள்ள வைத்துள்ளது.

1967ம் ஆண்டு யூலை 29ம் திகதி மட்டுவிலில் அரசியல் பிரதிக்ஜை கொண்ட
தொழிலாளியான திரு. பரமு, திருமதி விசாலாட்சி பரமு தம்பதியினரின் ஐந்தாவது
பிள்ளையாக பிறந்த தமிழ்ச்செல்வன் மட்டுவில சாந்தநாயகி வித்தியாலயத்தில்
ஆரம்பக்கல்வியையும் பின்னர் மட்டுவில் மகாவித்தியாலயத்தில்
உயர்கல்வியையும் கற்றார்.

1983ம் ஆணடு இனக்கலவரத்தினை தொடர்ந்து பல தமிழ் இளைஞர்கள்
விடுதலைப்போராட் இயக்கங்களில் இணைந்து கொண்டதுபோல், 1984ம் ஆண்டில்
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தமிழ்ச்செல்வன் இணைந்து கொண்டார்.
தமிழ்நாட்டில்; இயக்கத்தின் நான்காவது பயிற்சி அணியில் பயிற்சி பெற்ற
அவர்ஆரம்பத்தில் தேசியத்தலைவர் திரு. பிரபாகரனின் தொடர்பாளராகச்
செயற்பட்டார். பின்னர் மருத்துவப் போராளியாகவும் செயற்பட்டுள்ளார்.

1987ல் இந்திய இராணுவம் நிலைகொண்ட காலத்தில், தென்மராட்சிப் பிரதேசப்
பொறுப்பாளாராக நியமிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் அவருக்கு முன்னர்
அப்பிரதேசப் பொறுப்பாளராகவிருந்து கைதடியில் விபத்தொன்றில் வீரச்சாவடைந்த
மேஜர் கேடில்ஸ் போன்று தென்மராட்சி மக்களின் மனங்களில் இடம்பிடித்துக்
கொண்டார்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஆனையிறவு படைத்தளம் மீது நடாத்திய முதல்
மரபுவழிப்போரிலும், பூநகரி சிறிலங்கா இராணுவ முகாம் மீதான ஈருடகத்
தாக்குதலிலும் பங்கெடுத்துக் கொண்ட தமிழ்ச்செல்வன்; இச்சமர்களில்
விழுப்புண் அடைந்தார். காலில் ஏற்பட்டகாயத்தினால் அதன்பின்னர் அவர்
கைத்தடியினுடனேயே இயங்கவேண்டியதாயிற்று. இருப்பினும் கடைசிவரை
கைத்தடியின் உதவியுடனே வன்னியின் மூலை முடுக்களிலிருந்து உலகத்தலை
நகரங்கள் வரை வலம் வந்;தார்.

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற சிறிலங்கா அரசுடனான பேச்சுவாரத்தையில்
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் சுகயீனம்காரணமாக கலந்து கொள்ள
முடியவில்லை. பேச்சுவார்ததை மேசைகளில் ஒரு புலியாக இருந்த பாலசிங்கம்
கலந்து கொள்ளாதமை சிறிலங்கா தரப்பிற்கு ஆறுதலைக் கொடுத்தபோல் தமிழ்
மக்களுக்கும் கவலையைத் தோற்றுவித்திருந்தது. ஆனால் பேச்சுவார்த்தைக்
குழுவிற்கு தலைமையதாங்கிய தமிழ்ச்செல்வன் அதனை மிகவும் கனகச்சிதமாக
கையாண்டு தனது ஆளுமையை வெளிப்படுத்தினார்.

இறுக்கமானதும், பேச்சுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்காததுமான
விடுதiலைப்புலிகள் இயக்கத்திற்கும் வெளியுலகிற்குமான தொடர்பாளராய்
எப்போதுமே முகமலர்ச்சியுடன் செயற்பட்ட திரு.தமிழச்செல்வன்; இப்போது
எங்களுடன் இல்லை. இழப்புக்கள் இந்த இனத்திற்கு புதியன அல்ல,
இழப்புக்களிலிருந்து உறுதிபெறும் ஒரு இனத்திலிருந்து இன்னும் பல
தமிழ்ச்செல்வன்கள் உருவாகுவார்கள். எனினும் தமிழ்ச்செல்வனின் நினைவுகள்
எப்போதும் எங்களுடன் வாழும். அந்த உணர்வு என்றும் எங்களை செயற்படவைக்கும்.

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 02, 2009 3:11 pm

வணக்கம்
எம் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற இம்மாவீரரின் சிறப்பு: எதிர்க் கருத்தையும் இன் முகத்துடன் ஏற்று மாற்று மொழி உரைத்து மனம் மாற்றும் திறமை. எந்த நிலையிலும் புன்னகை மாறா முகம்
அன்புடன்
நந்திதா

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Mon Nov 02, 2009 3:30 pm

உண்மைதான், இவர் புன்சிரிபுடன் ராஜதந்திர ரீதியில் நிலமையை கச்சிதமாக கையாண்டார், இவரின் இளப்பும் தற்போதய பின்நடைவுக்கு ஒரு கார‌ணமும் கூட



பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Skirupairajahblackjh18
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Mon Nov 02, 2009 5:13 pm

ஏற்றுங்கள் தீபம் இதயத்தில் இவர்நாமம்
போற்றுங்கள் செந்தமிழில் பாவியற்றிச் – சாற்றுங்கள்
தன்னுயிரை எண்ணாது தாயகத்துக் கீந்தாரை
எந்நாளும் நெஞ்சத்தி லேற்றி

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Mon Nov 02, 2009 5:17 pm

kirupairajah wrote:உண்மைதான், இவர் புன்சிரிபுடன் ராஜதந்திர ரீதியில் நிலமையை கச்சிதமாக கையாண்டார், இவரின் இளப்பும் தற்போதய பின்நடைவுக்கு ஒரு கார‌ணமும் கூட
இழப்புக்கள் எமக்கு புதியவைகள் அல்ல.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 04, 2009 6:00 am

kirupairajah wrote:உண்மைதான், இவர் புன்சிரிபுடன் ராஜதந்திர ரீதியில் நிலமையை கச்சிதமாக கையாண்டார், இவரின் இளப்பும் தற்போதய பின்நடைவுக்கு ஒரு கார‌ணமும் கூட


எவ்வளவு துண்பம் வ்ந்தாலும் சிரிந்து வாழ்வில் முன்னேர வேண்டும்... பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 677196 பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 677196 பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 677196

நல்ல தக்வல் நன்றி ரூபன் தல... பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் Icon_lol பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் 942


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக