புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
34 Posts - 52%
heezulia
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
17 Posts - 2%
prajai
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_m10சூரியனை சிறை பிடியுங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியனை சிறை பிடியுங்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 12, 2014 1:37 am


மண்டியா தேசத்தை ஒரு ராஜா ஆண்டு வந்தார். அவரிடம் ஒரு மந்திரி வேலை பார்த்தார். ராஜா என்றால் சும்மாவா? ரத கஜ துரபதிகளுடன் எல்லா ராஜாக்களையும் போல அரண்மனை அரச சபையில் இருந்துகொண்டே,

“மந்திரியாரே... நாட்டில் மாதம் மும்மாரி பெய்கிறதா?” என்று கேட்பார். உடனே மந்திரியும், “அப்படியே மன்னா...” என்று கூவுவார்.

ஆனால் இருவருமே அரண்மனையை விட்டு வெளியே போனதில்லை. வெளியே வெயிலடிக்கிறதா, மழை பெய்கிறதா என்றுகூடத் தெரியாது. ஏனெனில் ராஜா ஏற்கெனவே ஒரு உத்தரவு போட்டிருந்தார். மந்திரி எப்போதும் அவரைத் தனியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. ராஜா தூங்கப் போகும்போது மட்டும்தான் அவர் போகலாம். மறுநாள் காலையில் ராஜா எழுந்திரிக்கும் போதே, அவர் கண் முன்னால் மந்திரி இருக்க வேண்டும்.

அதனால் அவர்கள் இருவருக்குமே அரண்மனைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாது. சூரியன், சந்திரன், தெரியாது. நட்சத்திரங்கள் தெரியாது. புல், பூண்டு தெரியாது. செடி, கொடி தெரியாது. பறவைகள், விலங்குகள் தெரியாது. அரண்மனையில் எழுந்து குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு, பின்னர் குளித்து, உடை உடுத்தி, சாப்பிட்டு, பின்னரும் குளித்து, உடை உடுத்தி சாப்பிட்டு இப்படியே இரவு வரை பொழுது போகும். இதில் சலிப்பு ஏற்படும்போது ஆட்டம் பாட்டம் பார்ப்பார்கள். சில சமயம் பல்லாங்குழி, தாயம் விளையாடுவார்கள்.

திடீரென்று ஒரு நாள் ராஜாவின் தோலின் நிறம் பாலைப் போல வெளுத்துப் போயிருந்தது. கண்ணாடியில் அவரைப் பார்த்து அவரே பயந்து போனார். உடனே அரண்மனை வைத்தியர்களும் ஜோசியர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பார்த்த உடனேயே தெரிந்து விட்டது. வைட்டமின் டி சத்துக் குறைபாட்டினால் வந்துள்ள தோல் நோய். அதற்கு ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது. சூரிய ஒளியில் குளித்தால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் இதை ராஜாவிடம் சொன்னால் தலை போய்விடும். எனவே எல்லோரும் சேர்ந்து ஒரே குரலில்,

“மன்னா, இந்த நோய் கோடியில் ஒருவருக்கு வரக்கூடிய நோய். எங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் கொடுங்கள்” என்றார்கள். அதைக்கேட்ட உடனே ராஜாவுக்குப் பெருமை தாங்க முடியவில்லை. கோடியில் ஒருவரல்லவா அவர்.

“ம்ம் சரி..” என்று உறுமினார்.

ஒரு வாரம் கழித்து வந்த வைத்தியர்கள் தேங்காய் எண்ணெய்க்கு நிறமேற்றி கொண்டு வந்து ராஜா முன்னால் வைத்தனர்.

“அரசரே, தினமும் காலையிலும் மாலையிலும் இந்த எண்ணெயை உடலில் தேய்த்துக் கொண்டு மூன்று சுற்றுகள் அரண்மனையைச் சுற்றிவர வேண்டும். இது அரண்மனை தோஷம். எனவே அரண்மனையைச் சுற்றினால்தான் மருந்து வேலை செய்யும்”என்றனர்.

“சரி அப்படியே ஆகட்டும்” என்றார் ராஜா.

மறுநாள் காலை ராஜாவும் மந்திரியும் எழுந்து உடல் முழுவதும் எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு அரண்மனையை விட்டு வெளியே வந்தனர். அப்போதுதான் சூரியனும் அடிவானிலிருந்து வெளியே வந்தான். சூரிய ஒளி அன்றைக்குத் தான் ராஜாவின் உடலிலும் மந்திரியின் உடலிலும் பட்டது. சூரியனின் வெளிச்சத்தையும் அதன் சூட்டையும் ராஜாவால் பொறுக்க முடியவில்லை. உடனே அவர்,

“மந்திரியாரே, விளக்கை அங்கே மாட்டியது யார்? உடனே அதை அணைக்கச் சொல்லும்” என்று உத்தரவிட்டார். மந்திரியும் காவலாட்களை அழைத்து, “யாரங்கே. உடனே அந்த விளக்கை அணையுங்கள். ராஜாவுக்குச் சூடு தாங்க முடியவில்லை” என்று கத்தினார். உடனே காவலாட்கள் சூரியனை அணைத்துவிடுவதற்காக துணி, போர்வை, பஞ்சு, தண்ணீர் என்று சகல பொருட்களுடன் போனார்கள். பகல் முழுவதும் நடந்தனர். சூரியனும் தூரமாய் போய்க் கொண்டிருந்தான். மாலையானதும் மறையத் தொடங்கினான். தங்களைப் பார்த்து பயந்துதான் சூரிய விளக்கை அணைத்து விட்டார்கள் என்று மகிழ்ச்சியுடன் கத்திக் கொண்டு வந்து ராஜாவிடம் சொன்னார்கள். ராஜாவுக்கும் மகிழ்ச்சி. எல்லோருக்கும் பரிசு கொடுக்கச் சொன்னார். ஆனால் மறுநாள் காலையில் மறுபடியும் சூரியன் வந்து விட்டான். மறுபடியும் விளக்கை அணைக்க எல்லோரும் ஓடினர். மறுபடியும் மாலையானதும் சூரியன் மறைந்துவிட வெறுங்கையுடன் திரும்பி வந்தனர்.

ராஜாவும், மந்திரியும் நாடெங்கும் முரசு முழங்கி செய்தி சொல்லச் சொன்னார்கள்.

“இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் காலையில் தோன்றி மாலையில் தலைமறைவாகிவிடும் சூரியனைத் தேடப்படும் குற்றவாளியாக மண்டியா தேசம் அறிவிக்கிறது. சூரியனைப் பிடித்துக்கொண்டு வருபவர்களுக்குத் தக்க சன்மானம் வழங்கப்படும்”

மக்கள் அனைவரும் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு சூரியனைப் பிடிக்க காலையில் புறப்பட்டுப் போவதும் மாலையில் திரும்புவதுமாக இருந்தார்கள். இப்போது ராஜாவுக்கோ, மந்திரிக்கோ, மண்டியா தேச மக்களுக்கோ எந்தத் தோல் நோயும் இல்லை. எல்லாம் குணமாகிவிட்டது. ஆனால் ராஜாவும், மந்திரியும் சர்வதேச நாடுகளுக்கும் சூரியனைப் பிடித்துத் தரச் சொல்லி ஓலை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் நாட்டுக்கும் ஓலை வந்திருக்கிறதா? கேட்டுப்பாருங்கள்!

உதயசங்கர் @ தி இந்து

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jun 12, 2014 11:27 am

ஒரு மிகப் பெரும் முட்டாள் ஒரு நாட்டை ஆண்டாள் இப்படித்தான் நடக்கும்.
அதான், சூரியனை சிறை பிடித்து விட்டனரே தமிழகத்து மக்கள். இப்போது சூரியன் வீட்டில் அல்லவா முடங்கிக் கிடக்கிறது (கருணாநிதி & கோ)



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக