புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10 
42 Posts - 63%
heezulia
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_m10பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு ! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !


   
   

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:40 pm

பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! ரொம்பநாளாக இது பற்றி எழுதணும் என்று இருந்தேன்; இப்போ 1 மாதம் முன்பு ஓர் டாக்டரின் வேண்டுகோளுக்கு இணங்க அவங்க மட்டுப்பெண்ணுக்காக இதை தொகுக்க ஆரம்பித்தேன். போன 10 - 15 நாளாக இதே வேலையாக இருந்தேன். இன்று தான் முடித்தேன்.

எனவே,  எனக்கு தோன்றியது இங்கும் அவற்றை பகிரலாம் என்று. இன்னும் நிறைய பேருக்கு உதவுமே என்று தான் இங்கே போடுகிறேன். இது எங்கள் வீட்டு வழக்கம்; உங்கள் வீட்டு வழக்கம் வேறாக இருக்கலாம், முடிந்தால் இங்கு பகிரவும். எங்களுக்கும் உதவும் புன்னகை

இதோ அந்த குறிப்புகள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:44 pm

பெருங்காய  ஜலம்

9ம் மாதம்  ஆரம்பித்தது முதல் தினமும் காலை இல் இந்த பெருங்காய ஜலம் கொடுத்துடுவா புன்னகை வாயு கொண்டுக்காமல்  பிரசவம்   நன்றாக ஆகும் என்பதற்காக புன்னகை

1/2 ஸ்பூன்  பெருங்காயம்
1/2 ஸ்பூன் நெய்

செய்முறை :
ஒரு வாணலி இல் நெய் மற்றும் பெருங்காயப்பொடி போடவும்.
அது வறுபட்டதும் 2 கப் தண்ணீர் விடவும்.
அது நன்கு கொதித்து 1 கப் ஆனதும் இறக்கிவிடவும்.
கொஞ்சமா ஆறினதும், ( உங்களால் குடிக்கக்கூடிய சூடு வந்ததும்) குடிக்கவும்.


குறிப்பு: இடுப்பு வலிப்பது போல இருந்தாலும் இதை குடிக்கலாம், பிரசவ வலி என்றால் தொடர்ந்து வலி எடுக்கும்.உடனே டாக்கடர் ஆத்துக்கு  போய் விடல்லாம், இல்லை  'False  pain ' என்று சொல்லக் கூடியதாக  இருந்தால் நின்றுவிடும். சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:45 pm

ஏற்றுக் கொள்ளக்கூடிய உணவுகள் :

புளிக்காத தயிர், பசுநெய், பழவகைகளை அதிகம் சாப்பிடணும். பனங்கல்கண்டு, வெல்லம் சேர்த்துக்கலாம்.
பிள்ளை பெத்தா லேகியம் அல்லது சௌபாக்கிய சுண்டீ லேகியம் சாப்பிடணும் 2 வேளை. லேகியம் சாப்பிட்டுவிட்டு சூடாக வெந்நீர் குடிக்கணும்.
எது சாப்பிட்டலும் கூடவே 4லாவது வெற்றிலை போடுக்கணும். இது MUST ! எவ்வளவுக்கு எவ்வளவு வெத்திலை பாக்கு போட்டுக்கரோமோ அவ்வளவுக்கு அவ்வளவு உடம்புக்கு நல்லது. இந்த வெற்றிலை போடுவதால் நிறைய பலன் இருக்கு.
1. அவ்வளவு பச்சை இலை சாப்பிடுகிறோம்........எனவே constipation வரவே வராது புன்னகை
2. மருந்து மாத்திரைகளினால் சேரும் கால்சியத்தைவிட சுண்ணாம்பால் சேரும் கால்சியம் நல்லது. ( உங்களுக்கு நான் சொல்லவேண்டாம் புன்னகை )
3. நாம் நிறைய சாதம் சாப்பிடாமல் அரைவயிறு சாப்பிடுவது தானே பத்தியம்? புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:49 pm

முதலிலேயே கிழே உள்ள பொடிகள் மற்றும் சமையல் குறிப்புகளை பார்த்து, தேவையானவற்றை 'தமிழ் மருந்து கடை/நாட்டுமருந்து கடை ' இல் வாங்கி வைத்துக்கொள்ளவும். மெட்ராஸ் என்றால், மைலாப்பூரில் இருக்கும் 'டப்பா செட்டிக்கடை' இல் வாங்கலாம் புன்னகை நான் போனது இல்லை, ஆனால் எங்காத்தில் அங்க போய் தான் வாங்குவா புன்னகை

பொடிகளை மாட்டுப்பெண்  பிள்ளை பெற்றபிறகு தான் செய்யணும். முதலிலேயே செய்து வைக்க கூடாது. இது ஒரு 'சாங்கியம்' தான் (Sentiment) . சரியா? புன்னகை

லேகியமும் அப்படித்தான். லேகியப் பொடியும் கிடைக்கும் அதே கடை இல் அல்லது நீங்க நான் கொடுத்துள்ள குறிப்பு  படி கிளறலாம். அல்லது 'கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலை' அல்லது IMCOPS  இல் வாங்கலாம். எங்க அம்மா அங்கு தான் வாங்குவா புன்னகை இப்போ பார்த்திங்க என்றால் நம் தமிழக முதலமைச்சர் கூட இந்த ' சௌபாக்கிய சுண்டீ' லேகியம் தான் ப்ரீ கிபிட் ஆக தரா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:50 pm

தினமும் காலை தவிர்க்க முடியாது என்று நினைத்தால் ஒரு வாய் காப்பி இல்லாவிட்டால் பசும்பால் நல்லது. யாரவது மாடுக்காரா இருந்தால் அவர்களிடம் சொல்லி வாங்கிக்கோங்கோ. இல்லாவிட்டால் 'கவர் பால்' தான். கவர் பால் என்றால் பார்த்து தண்ணீர் விட்டு கொடுங்கோ.

காலை பாலோ , டிபனோ அல்லது சாதமோ ஒரு நேரம் fix பண்ணிக்கோங்கோ , அந்த நேரத்தில் மட்டுமே தரும்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு 5 நிமிஷம் 10 நிமிஷம் முன்னே பின்னே பரவால்லை. சுக்கு காபி, பாதாம் பால் சேர்த்துக்கலாம். பொதுவாக. புதியதாக சமைத்த உணவுகள் மட்டுமே சாப்பிடணும்.

எனக்கு கார்த்தால 2 மேரி பிஸ்கட் உடன் 1 டம்ளர் பால் தருவா அம்மா . Morning breakfast கிடையாது 10.30க்கு சாதம் போட்டுவிடுவா........அப்போதான் கொஞ்ச நேரமாவது தலை காய்ந்து தூங்க முடியும். 7.30க்கு பாலும் பிஸ்கட் ம். பிறகு 9 - 9.15க்கு குளித்துவிடுவா.............அப்புறம் வயத்தை கட்டி, தலைக்கு சாம்பரணி போட்டு பிறகு 10.30 க்கு சாப்பிட சரியாக இருக்கும்.

நடு நடுவே குழந்தைக்கு பால் தரவேண்டி இருக்கும். அதுக்கு குளித்து விடணும், சாம்ப்ராணி போடணும், இதுவும் நேரத்துக்கு இருக்கணும் புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:52 pm

So , கார்த்தால, பாலும் பிஸ்கட் ம் அல்லது பிரட் ஓரங்களை எடுத்துவிட்டு தாங்கோ. இல்ல கண்டிப்பாக breakfast  வேண்டும் என்றால் இட்லி தாங்கோ, தொட்டுக்கொள்ள காரம் ரொம்ப குறைவாக போட்ட கொத்துமல்லி அல்லது புதினா சட்னி தாங்கோ .

நோ தேங்காய் சட்னி.

சர்க்கரை அல்லது தயிர் என்றாலும் ஓகே. இல்ல இட்லி மேல நெய் அல்லது நல்லெண்ணெய் என்றால் ரொம்ப உத்தமம்.

அதேபோல கடுத்த மாவு தோசை வேண்டாம், நன்கு  பொங்கிய, கொஞ்சம் புளித்த மாவில்  தோசை......................எண்ணையை தோசைக் கல்லில்  தடவி மேலே மூடி போட்டு வார்த்து கொடுங்கோ. சரியா?  
இல்லாவிட்டால் 2 தளிர் வடாம் கூட காய்ச்சி தரலாம்.

oats  கூட குடிக்கலாம் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:53 pm

எதானாலும் 2 போறும். உடனே வெற்றிலை போட்டுக்கணும். வெந்நீர் வெது வெதுப்பக குடிக்கணும். முதல் பத்து நாட்கள் அளவாய் தண்ணீர் குடியுங்கோ, அப்புறம் பதினோராம் நாளிலிருந்து நிறைய தண்ணீர் குடியுங்கோ. தாய்பால் சுரக்க அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குழந்தைக்கும் ஒவ்வொரு முறை பால் குடித்ததும் ஒரு 1/2 ஸ்பூன் தண்ணீர் - வெது வெதுப்பான வெந்நீர் தரவும். அது வாயில் பால் தங்காமல் இருக்க உதவும். வாயும் நாறாது. குழந்தைக்கு காலை குளிக்கும்போது மட்டுமே நாம் நாக்கை வழித்து விடுவோம், பிறகு நாள் பூரா அது பாலை குடிக்கும்போது நாக்கு கசந்துவிடும்......எங்க பாட்டி இப்படி த்தான் சொல்வா, எனவே, குழந்தைக்கும் தண்ணீர் must .

அதேபோல மதியம் சரியாக 12 மணிக்கு 'ஓர் சங்கு' என்று சொல்லுவா, அதாவது ஒரு பாலாடை தண்ணீர் புகட்டுவா. இது தினமும் தரணும். 11ம் நாளில் இருந்து ஒரு சாத்துக்குடியை ஜூஸ் பிழிந்து ஒரு பாலாடை குழந்தைக்கும் மீதியை அம்மாக்கும் தரணும். இதை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 3ம் மாதம் முழுபழ ஜூசும் குழந்தையே குடிச்சுடணும். அது தான் கணக்கு புன்னகை

சளி பிடிக்கும் என்கிற பயம் இருந்தால், வெந்நீரில் ஜூஸ் கலக்கவும். நிறைய சர்க்கரை போடணும். குழந்தைகளுக்கு சர்க்கரை மட்டும் தான் தெம்பு என்று பாட்டி சொல்வா புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:56 pm

இப்போ லஞ்ச், தினமும் ப்ரெஷ் ஆக கறிகாய் வாங்கி சமைப்பது அதி உத்தமம்.

பிஞ்சு கறிகாய்கள் ரொம்ப நல்லது. பிஞ்சு அவரை, வெண்டைக்காய், வாழைக்காய் கச்சல் ( வாழைக்காய் தான் வாய்வு, பிஞ்சு வாழைக்காய்............குட்டி குட்டி ஆக இருக்குமே அது ரொம்ப நல்லது புன்னகை  ) புடலங்காய், பெங்களூர் கத்தரிக்காய் அதாவது'சௌ சௌ ', (கொத்தவரை வேண்டாம் வாய்வு ), பீன்ஸ், காரட், பிடிகருணை என்று சொல்லப்படும் கர்ண கிழங்கு, பூசணிகாய்  , பரங்கிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், முட்டைகோஸ், பழக்கம் இருந்தால் சுரைக்காய் ( இது , பூசணிகாய்  எல்லா நீர்க்காய் களும்  குளுமை அதனால் சளி பிடிக்க வாய்ப்பு உண்டு. பார்த்து உபயோகிக்கவும்.)

வாசனைக்கு: பூண்டு, இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, பிரண்டை, புதினா, தக்காளி,
ஓமம் போன்றவை  உபயோகிக்கலாம்.

காரத்துக்கு மிளகு மட்டும் தான். நோ பச்சைமிளகாய் அல்லது மிளகாய் வற்றல்.

நாம் கூட்டு   பொடி அல்லது வேறு எதாவது பொடி அரைக்கும்போது போடும் மிளகாய் வற்றலே போதுமானது. முடியும் வரை அதில்  கூட மிளகாய் வற்றல் ஐ குறைத்து போட்டுவிட்டு மிளகை சேர்க்கலாம்.

1. மேலே சொன்ன காய்களில் ஏதாவது ஒன்றை பயத்தம் பருப்புடன் சேர்த்து வேகவைத்து, வெளியே எடுத்து வெறும் சீரகம் தாளித்து, பருப்பு காய் கலவையை போட்டு , ஒரு 1/4 ஸ்பூன் மிளகு சீரகம் பொடி போட்டு, பெருங்காயப்பொடி,  உப்பும் போட்டு ஒரு கொதி விட்டு இறக்கணும் அவ்வளவுதான். கூட்டு ரெடி.

2. கூட்டு  பொடி செய்து வைத்துக்கொண்டு ஒருநாள் கூட்டில் அதை போடலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 8:56 pm

வற்றல் குழம்பு, மிளகு குழம்பு, வெந்தயகுழம்பு சாப்பிடலாம். மிளகு கூட்டு சாப்பிடலாம்.

1. ரசம் அல்லது குழம்பு செய்ய பழைய புளி நல்லது ( புளி பேஸ்ட் செய்து வைத்துக்கொள்வது நல்லதுபுன்னகை ) கொஞ்சம் கரைத்து, 1 தக்காளியையும் கரைத்து, துளி ரசப்பொடி போட்டு , பெருங்காயப்பொடி போட்டு கொதிக்க விடணும். நன்கு கொதித்ததும், விளாவி, கொத்துமல்லி தூவி இறக்கணும். தேவையானால் மஞ்சள் பொடி போடலாம். கொஞ்சம் மிளகு சீரகப்பொடியும் போடலாம்.

2. சீரகம் , பூண்டு, தக்காளி வதக்கி (நெய்யில்) துளி புளி தண்ணி விட்டு ரசப்பொடி , பெருங்காயப்பொடி,  மஞ்சள் பொடி போட்டு, கொதிக்கவிட்டு ரசம் செய்யலாம்.

3. மிளகு ரசத்திலேயே சிலர் பூண்டும் தட்டி போடுவார்கள் அப்படியும் செயலாம் அல்லது தனியாகவே பூண்டு உரித்து போட்டும் செயலாம்.


(பேதியாகலை என்றால் ரசம் தரலாம். இல்லாவிட்டால் பொடி சாதம், துவையல் அல்லது கூட்டு தான் புன்னகை )




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 04, 2014 9:01 pm

வெற்றிலை போடுவதற்காக வைத்திருக்கும் சுண்ணாம்பில் 'கத்தைகாம்பு' என்று ஒன்று கிடைக்கும் அதை வாங்கி கலப்பா.  அது வயற்று  புண்ணை ஆற்றும் என்று சொல்வா. அது கலந்ததும் சுண்ணாம்பு கோவில் சுவத்தில் அடிக்கும் காவி போல ஆகிவிடும். நாளா வட்டத்தில்   நம் பல்லும் அப்படித்தான் ஆகும். ஆனாலும் தினமும் பல் நன்றாக தேய்த்துவிட்டால் நாளா வட்டத்தில் பழைய வெண்மை நிறம் வந்துவிடும் புன்னகை இதுக்கு நானே சாக்ஷி ! புன்னகை


லஞ்ச் ஆச்சு. இப்போ மதியம் ஒரு கப் (12 மணிக்கு ) ஆரஞ்சு அதாவது சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் மீண்டும்  ஒரு 3 மணிக்கு பசிக்கும். அப்போ டிபன் லைட்டாக தரலாம். காலை இல் சொன்ன item  கள்   தான் . இரண்டே இரண்டு தரணும். மீண்டும் வெற்றிலை பாக்கு.

அப்புறம் இரவு சாப்பாட்டை 6 - 6.30 க்கெல்லாம் முடித்துவிடணும். இரவு சாதம் வேண்டாம் என்றால், சாயங்காலம் 2 தளிர் வடாம் சாப்பிட்டு விட்டு தோசை, இட்லி அல்லது oats  அல்லது ஓரம் நீக்கப்பட்ட பிரட் ஏதாவது சாப்பிடலாம். இல்லாவிட்டால் தயிர் சாதம் சாப்பிடலாம்.

இரவில் தயிர் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பயம் இருந்தால், மோரை சுடவைத்து அதில் சாதம் போட்டு சாப்பிடலாம். புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக