புதிய பதிவுகள்
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
131 Posts - 55%
heezulia
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
2 Posts - 1%
prajai
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_m10பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 12, 2014 2:26 am

மிகுந்த தயக்கத்திற்கும், காலதாமதத்திற்கும் பிறகு, இந்திய ரிசர்வ் வங்கி துணிச்சலான ஒரு முடிவை எடுத்திருக்கிறது. அடங்காப் பிடாரிக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அடக்குவதுபோல, இந்தியப் பொருளாதாரத்தையே பலவீனப்படுத்திக் கொழிக்கும் பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ரிசர்வ் வங்கி.

இனிமேல் வங்கிகளில் கடனை வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்ற நினைக்கும் பெரிய தொழில் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அந்தத் தொழில் நிறுவனத்தை நடத்தும் குழுமத்தின் ஏனைய தொழில் நிறுவனங்களும் கடன் ஏய்ப்பாளர்களாகக் கருதப்படும் என்பதும், அதன் நிர்வாகத்தில் தொடர்புடைய இயக்குநர்களும் கடன் ஏய்ப்பவர்களாகக் கருதப்படுவர் என்பதும் துணிச்சலான முடிவு. அதற்காக, நாம் ரிசர்வ் வங்கியைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

பல நிறுவனங்களை நடத்தும் குழுமங்கள், அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள், வெற்றிகரமாக நடைபெறும் தங்கள் நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்கின் அடிப்படையில் புதிதாகத் தொடங்கும் நிறுவனத்திற்கு வங்கிகளின் நிதி உதவி பெறுவது வழக்கம். அதுமட்டுமல்லாமல், அந்தப் புதிய நிறுவனத்தை முன்மொழிபவர்களின் தனிப்பட்ட உத்தரவாதத்தின் பேரிலும் அந்த நிறுவனத்திற்கு வங்கிகள் கடன் வசதியைத் தருகின்றன. அப்படிக் கடன் பெற்ற நிறுவனம், வேண்டுமென்றே இழப்புக் கணக்குக் காட்டி, அந்த நிறுவனம் பெற்ற பல கோடி ரூபாய் வங்கிக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏய்ப்பு செய்துவிடுவது வழக்கமாகி விட்டிருக்கிறது.

உதாரணமாக, விஜய் மல்லையாவின் கிங் பிஷர் விமான சேவை நிறுவனம் ஏறத்தாழ ரூ.7,000 கோடி வரை வங்கிகளிலிருந்து கடனைப் பெற்றுத் திருப்பித் தராமல் ஏய்க்க முற்பட்டிருக்கிறது. இந்தியாவிலுள்ள 17 வங்கிகள் கிங் பிஷர் விமான சேவை நிறுவனத்திற்கு ரூ.7,600 கோடி கடனாகத் தந்திருக்கின்றன. கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடன் தவணைகளை அந்த நிறுவனம் திருப்பித் தருவதில்லை, வட்டித் தொகையை அடைப்பதில்லை, விமான எரிபொருளுக்கான கட்டணத்தைக்கூட சரியாகச் செலுத்துவதில்லை என்பது தெரிந்தும், வங்கிகள் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கு எப்படி மேலும் மேலும் கடன் தர முன்வந்தன என்பது விசாரணை ஆணையம் அமைத்தோ, புலன் விசாரணை செய்தோ வெளிக்கொணர வேண்டிய மர்மம்.

நீதிமன்றங்களில் தடையுத்தரவு பெற்றுத் தப்பிக்கவும், தலைமறைவாக மறைவதுமாக விஜய் மல்லையா ரூ.7,600 கோடி மக்கள் வரிப் பணத்தை சாமர்த்தியமாகக் கபளீகரம் செய்து விட்டிருக்கிறார். இப்போது வரை, விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் கடன் ஏய்ப்பாளர் தாக்கீதை வழங்கவோ, அவரைக் கைது செய்து, அவரது ஏனைய மதுத் தயாரிப்பு நிறுவனங்களின் சொத்துகளிலிருந்து கடனை வசூலிக்கவோ முடியவில்லை.

நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள்தான் இதுபோன்ற வரி ஏய்ப்பாளர்களால் அதிக அளவு பாதிக்கப்பட்டிருப்பவை. ஏறத்தாழ ரூ.2 லட்சம் கோடி வாராக்கடன்களாக தமது நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கழுத்தில் சுமையாக அழுத்துகிறது. இந்த வாராக்கடன்களில் பெருமளவு, 30 மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்புடையது எனும்போது, மக்கள் வரிப்பணம் எப்படி மடை மாற்றப்பட்டு ஒரு சிலரது கஜானாவை நிரப்புகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அரசுடைமை வங்கிகளின் இந்த நிலைமைக்கு, மத்திய அரசில் ஆட்சியாளர்களாக இருந்த அரசியல்வாதிகள் ஒரு முக்கியமான காரணம். அரசுடைமை வங்கிகளின் தலைவர், மேலாண் இயக்குநர்களாக தங்களுக்கு வேண்டிய வங்கி மேலதிகாரிகளையும், இயக்குநர்களாக ஆளும்கட்சிகளுடன் சார்புடையவர்களையும்தான் நிதியமைச்சகம் நியமித்து வந்திருக்கிறது. இயக்குநர்களில் பலரும் வங்கிச் சேவை பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வுகூட இல்லாதவர்கள். ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பரிந்துரையின் பேரிலும், அரசியல் சார்புடைய இயக்குநர்களின் வற்புறுத்தலாலும் வழங்கப்பட்டு வாராக்கடன்களான பல கோடி ரூபாய்கள்தான் பல பெருநிறுவனங்களின் கடன் ஏய்ப்புக்கு மூலகாரணம்.

அரசுடைமை வங்கிகளின் நிர்வாகம், அரசியல் தலையீட்டிலிருந்து மீட்கப்பட்டு, தொழில் ரீதியிலான வல்லுநர்களின் மேற்பார்வையில் நடந்தால் மட்டுமே இந்தச் சூழலிலிருந்து அரசுடைமை வங்கிகளை மீட்க முடியும். பி.ஜே. நாயக் தலைமையில் ரிசர்வ் வங்கி அமைத்த குழுவின் பரிந்துரைகள் ஏற்கப்படாமல் தூங்குகின்றன. வாராக்கடனுக்கு எதிராகவும், கடன் ஏய்ப்பாளர்களுக்கு எதிராகவும் சவுக்கைச் சுழற்ற முற்பட்டிருக்கும் ரிசர்வ் வங்கி, அரசுடைமை வங்கிகளின் நிர்வாகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த முன்வர வேண்டும்

தினமணி



பெருநிறுவன கடன் ஏய்ப்பாளர்களின் மோசடிக்கு முற்றுப்புள்ளி - ரிசர்வ் வங்கி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82440
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 12, 2014 6:01 am

ரிசர்வ் வங்கியின் துணிச்சலான முடிவை
வரவேற்போம்...
-


avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 6:30 am

:நல்வரவு:

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 12:16 pm

நல்லது... நடப்பின் சந்தோசம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக