புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
306 Posts - 42%
heezulia
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
6 Posts - 1%
prajai
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_m10எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்!


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Sep 18, 2014 2:03 pm

நம்மில் பலர், வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவதாக இருந்தாலும் சரி, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதாக இருந்தாலும் சரி, ரியஸ் எஸ்டேட்டில் முதலீடு செய்வதாக இருந்தாலும் சரி, அனைத்திலும் உணர்ச்சிவசப்பட்டு (Emotional) முடிவெடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால் பல பிரச்னைகள் உருவாகி, அதைத் தீர்ப்பதிலேயே பாதி வாழ்நாளை கழிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறோம்.

உணர்ச்சிவசப்படுவது நமது அடிப்படையான உணர்ச்சிதான். இருப்பினும் உணர்ச்சிவசப்பட்டு நாம் செய்யும் முதலீட்டு முடிவுகள் நமக்கு இக்கட்டான சூழ்நிலையையே உருவாக்கும். எந்தெந்த விஷயங்களில் நாம் உணர்ச்சிவசப்பட்டு ஏமாறுகிறோம், இதில் சிக்காமல் இருப்பது எப்படி என நிதி ஆலோசகர் ஆர்.ராதா கிருஷ்ணனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

“நம்மைச் சுற்றி இருப்பவர்கள் வீடு வாங்கிவிட்டார்கள், நாம் ஏன் வாங்கக்கூடாது என்பதில் ஆரம்பித்து, நமது அலுவலக நண்பர்கள் சொல்கிறார்கள், அந்த பொருளுக்கான ஆஃபர் இன்றோடு முடிகிறது என பல விஷயங்களில் நாம் எமோஷனலாக முடிவெடுக்கிறோம். இதுமாதிரி எடுக்கப்படும் முடிவுகள் நிச்சயம் நம் காலை வாரிவிடும்'' என்றவர், முதலீட்டு விஷயத்தில் நாம் எமோஷனாக முடிவுகளை எடுக்கிறோம் என்பதையும் சொன்னார்.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Nav28a

அவசரப்பட்டு வாங்கிய வீட்டுக் கடன்!

படிக்காத பாமர மக்கள்கூட இந்தக் காலத்தில் குடும்பத்தின் நிதி நிலைமையைச் சரியாகக் கணித்துத் திட்டமிடுகிறார்கள். ஆனால், பல்வேறு பட்டப்படிப்புகளைப் படித்தவர்களால் தனது குடும்பத்துக்கான நிதித் திட்டத்தைச் சரியாக மேற்கொள்ளாமல் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவுகளால் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். ரமேஷ் இப்படி எமோஷனலாக எடுத்த முடிவு அவருக்கு வேதனையையே பரிசாக வழங்கியது. ரமேஷ் சென்னையில் உள்ள பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார். மாதம் 50,000 ரூபாய் சம்பளம். கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள கிராமத்தில் தனது தங்கையுடன் பெற்றோர்கள் வசிக்க, வேலைக்காக சென்னையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். தன் தங்கைக்கு திருமணத்தை முடித்தாக வேண்டும் என்கிற நிலையில், கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டை பழுதுபார்த்து, அதை இரண்டு அடுக்கு மாடியாகக் கட்டினால், தங்கைக்கு நல்ல வரன் கிடைக்கும் என்று உறவினர்கள் ரமேஷிடம் சொல்ல, ரமேஷும் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கி ஓராண்டுக்குள் வீட்டை கட்டி முடித்தார்.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Nav28b

நினைத்தது ஒன்று... நடந்தது வேறு!

அதற்குள் இவர்களைத் தேடி வந்த நல்ல நல்ல வரன்களும் கைமீறிப் போய்விட்டன. திடீரென்று ரமேஷின் தந்தை உடல்நலக் குறைவால் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படவே அவரின் வருமானம் குடும்பத்துக்கு இல்லாமல் ஆகிவிட்டது. இந்த நிலையில் வாங்கிய வீட்டுக் கடனுக்கான இஎம்ஐ-யும் குடும்பச் செலவுகளும், தங்கைக்குத் திருமணம் செய்துவைக்கத் தேவைப்படும் பணத் தேவையும் அவரை வாட்டி வதைத்திருக் கிறது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தந்தையின் பெயரில் இருந்த இன்னொரு நிலத்தை விற்று தங்கைக்குத் திருமணத்தைச் செய்துவைத்தார்.

ரமேஷைப் போலவே நம்மில் பலர் உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவால் மாட்டிக்கொண்டு முழிக்கும் நிலைக்கு ஆளாகிறோம். குடியிருக்க வீடு என்பது அனைவருக்கும் அவசியம்தான். அது எல்லோருக்கும் எமோஷனலான விஷயமும்கூட. அதை முறையாகச் செய்யாமல், உணர்ச்சிவசப்பட்டுச் செய்வதால்தான் பிரச்னைகள் உருவாகின்றன.

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! Nav28c

மார்க்கெட்டிங் மாயாஜாலம்!

வீட்டுக்குத் தேவையான பொருட்களை விற்கும் மார்க்கெட்டிங் நிறுவன ஊழியர்கள் வாடிக்கையாளர் களின் வீடு தேடி வந்து பொருட்களை விற்பது வழக்கம். இவர்களில் சிலர் எமோஷனலாகப் பேசி பொருட்களை விற்றுவிடுவார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது, உருகாதவர்களின் நெஞ்சம்கூட உருகிவிடும். ‘இந்தப் பொருளை நீங்க வாங்கிக்கலைனா என்னோட ஒரு மாத சம்பளமே போயிடும். அதனால என் குடும்பம் பட்டினிகிடக்க வேண்டி யிருக்கும்’ என்று அவர்களின் டார்கெட் பிரஷரை நம் மீது ஏற்றுவார்கள். பல பொருட்கள் கிடைக்கிறது. அதேநேரத்தில் ஒருவருக்கு உதவின மாதிரியும் இருக்கும் என்று நினைத்து, நீங்கள் அந்தப் பொருளை வாங்கினால், ஏமாற்றமே மிஞ்சும். காரணம், அந்தப் பொருள் சில காலத்துக்கு மட்டுமே நன்மை தருவதாக இருக்கும்.

ஆஃபரால் வந்த சங்கடம்!

பெரும்பாலான கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் எமோஷனலான முடிவெடுக்க ‘இன்று கடைசி நாள் விற்பனை’, ‘ஒன்று வாங்கினா இரண்டு இலவசம்’ என்கிற மாதிரியான யுக்திகளைக் கையாள்வார்கள். இதைப் பார்த்து நம்மில் பெரும்பாலானவர்கள், தேவையில்லை என்றாலும் எப்போதாவது பயன்படும் என்று வாங்கிவிடுவார்கள். இப்படித்தான் தீபா செய்த காரியம் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்திவிட்டது. தன் வேலையை எளிமையாக்குவதற்காகத் துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கித் தரச் சொல்லி, கணவரிடம் கேட்டிருக்கிறார். இன்னும் சில மாதங்களில் குழந்தைக்கான கல்விச் செலவு இருக்கிறது என்பது தெரிந்தும் தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியிலும், கடைசி நாள் ஆஃபரில் கிடைத்த துணி துவைக்கும் இயந்திரத்தை இஎம்ஐ வசதியைப் பயன்படுத்தி வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அடுத்த சில மாதங்களில் மகேஷின் பெற்றோருக்கு மருத்துவச் செலவும், குழந்தையின் கல்விச் செலவும் சேர்ந்துவர, குடும்ப பட்ஜெட்டில் துண்டு விழுந்துவிட்டது. இஎம்ஐ கட்டகூடக் காசு இல்லாத நிலை. வெளியில் கடன் வாங்கி இஎம்ஐயையும் கட்டிவிட்டு, இதர தேவைகளுக்கு நண்பர்களிடம் கடன் வாங்கியிருக் கிறார் மகேஷ். தனது மனைவி துணி துவைக்கும் இயந்திரத்தைக் கேட்ட போதே சட்டென அதை வாங்கித்தராமல், அவசியமான செலவுகளுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிற்பாடு அதிகப்படியாக கையில் இருக்கும் பணத்தைக் கொண்டு துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கி இருந்தால், சிக்கலிலிருந்து எளிதாக தப்பி இருப்பார். யோசிக்காமல் கொள்ளாமல் துணி துவைக்கும் இயந்திரத்தை வாங்கியதால், மகேஷுக்கும் சங்கடம்; தீபாவுக்கும் சங்கடம்.

நட்பு தந்த நஷ்டம்!

நமது அன்றாட வாழ்வில் ஏதாவது ஓர் இடத்துக்கு தினசரி செல்ல வேண்டி இருக்கும். அது பெட்ரோல் பங்க்-ஆக இருக்கலாம், வங்கியாக இருக்கலாம். இதுபோன்ற இடங்களில் புது நட்பு உருவாவது சகஜமான விஷயம்தான். அப்படித்தான் தினேஷ் தினசரி செல்லும் பெட்ரோல் பங்கில் லோகேஷ் என்கிற நபருடன் பழக்கமானார். லோகேஷ் பகுதி நேரமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்துவர, தினேஷை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்படி கேட்டிருக்கிறார். ஆரம்பத்தில் தினேஷ் மறுத்தாலும், தொடர்ச்சியாக வற்புறுத்தியதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்து வீட்டு மனையை வாங்கினார் தினேஷ். வாங்கும்போது அந்த இடத்தின் விலை உச்சத்தில் இருக்க, சில வருடங்கள் கழித்து அந்த இடத்தை வாங்கிய விலைக்குக்கூட தினேஷினால் விற்க முடியவில்லை. நட்புக்காக உணர்ச்சி வசப்பட்டு எடுத்த முடிவினால் நஷ்டமடைய வேண்டிய நிலை உருவானது கண்டு மிகவும் வருந்தினார் தினேஷ்.

யோசித்து முடிவெடுங்கள்!

நிலம் வாங்க ஓர் இடத்துக்குச் செல்லும்போது, நமது உறவினர்கள் அல்லது நண்பர்களில் நிலம் வாங்குவதில் கைதேர்ந்தவர்கள் யாரோ அவர்களை உடன் அழைத்துச் செல்வது நல்லது. ஏனெனில், நிலம் வாங்க வேண்டும் என்கிற ஆசையினால் உணர்ச்சி வசப்பட்டு நாம் முடிவுகளை எடுக்க முயற்சிக்கும்போது, அதற்கு சரியானதொரு தடையாக அவர்கள் இருப்பார்கள். நிலம் அமைந்திருக்கும் பகுதியின் எதிர்கால நிலை எப்படி இருக்கும், இன்றைய நிலவரப்படி அந்த இடத்தின் விலை சரிதானா என்கிற விஷயங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். எனவே, விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதை நன்கு யோசித்து முடிவெடுக்கும் வேலையை நாம்தான் சரியாக செய்ய வேண்டும்.”
இனியாவது முதலீடு தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் எமோஷனலாக முடிவெடுக்காமல், ஆரஅமர யோசித்து முடிவெடுத்தால், பிற்பாடு வருந்த வேண்டிய நிலையே வராது!
-முக நூல்
ந.விகடன்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Sep 18, 2014 2:06 pm

நல்ல பகிர்வு பாலாஜி

(இந்தக் காதல் முதலீடுல தான் ரொம்பவே ஏமாற்றம் தரும் உணர்ச்சி முடிவுகள் அதிகமோ? சொல்லுங்க நாட்டாமை சொல்லுங்க)




M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 18, 2014 4:05 pm

நல்ல பகிர்வு நண்பரே



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 18, 2014 6:18 pm

எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! 103459460 எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Sep 18, 2014 8:47 pm

பதறாத காரியம் சிதறாது. மிக அருமையான பகிர்வு தல. எல்லா முதலீடுகளிலும்... ஏமாற்றம் தரும் எமோஷனல் முடிவுகள்! 3838410834



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக