புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_m10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10 
21 Posts - 66%
heezulia
மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_m10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_m10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10 
63 Posts - 64%
heezulia
மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_m10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_m10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_m10மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள்


   
   
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 12:54 am

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் 201411231537212519_Daughtersinlaw-is-looking-for-support-for_SECVPF

இருவரும் இளம் பெண்கள். நேர்த்தியான உடை அலங்காரத்தோடு ‘ஸ்மார்ட்’டாக காணப்பட்டார்கள். ‘எங்கள் மாமியார் விஷயமாக பேச வந்திருக்கிறோம்’ என்றார்கள்.

‘மாமியார்களுக்கும், இளம் மருமகள்களுக்கும் சரியாக ஒத்துப்போவதில்லை என்பது வழக்கமான குற்றச்சாட்டு. அதனால் தொந்தரவு செய்யும் மாமியாரை எப்படி சமாளிப்பது?’ என்று ஆலோசனை கேட்கவே பெரும்பாலான பெண்கள் வருவார்கள். ஆனால் இவர்கள் எடுத்த எடுப்பிலே மாமியாரை புகழத் தொடங்கினார்கள்.

‘‘எங்கள் மாமியாருக்கு இரண்டு மகன்கள். நாங்கள் இருவரும் அவரது மருமகள்கள். எங்கள் கணவர்களுக்கு வெளிநாட்டில் வேலை. அவர்களுடன் நாங்கள் வசிக்கிறோம். எங்களுக்கு திருமணமாகும்போது, ‘எப்படி எல்லாம் இந்த மாமியாரோடு மல்லுக்கட்ட வேண்டியதிருக்கிறதோ’ என்ற பயத்துடன்தான் இருந்தோம். ஆனால் அவர் அவ்வளவு பக்குவமானவராக இருக்கிறார்.

நாங்கள் குடும்பத்தோடு இந்தியாவிற்கு வந்துவிட்டால், எங்களை மகாராணி போல் கவனித்துக்கொள்வார். எங்கள் அம்மாகூட அந்த அளவுக்கு எங்களை தூக்கி வைத்து கொண்டாடமாட்டார்கள். அதனால் இங்கு வந்துவிட்டால், திரும்பி வெளிநாட்டிற்கு போகக்கூட மனம் இருக்காது. அந்த அளவுக்கு எங்கள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவார்..’’ என்று மாமியார் மீது பாராட்டு மழை பொழிந்துகொண்டிருந்த அவர்களிடம், ‘மாமனார் பற்றி நீங்கள் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையே!’ என்றேன்.

அப்போதுதான் அவர்கள் அந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சொன்னார்கள்.

‘‘எங்கள் மாமியாருக்கு 19 வயதில் திருமணமாகியிருக்கிறது. 21 வயதில் முதலில் தாய்மையடைந்திருக்கிறார். அடுத்த வருடமே மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறார். அந்த குழந்தையை பிரசவிப்பதற்குள் கணவர் இறந்துள்ளார். அதன் பிறகு எந்த சலனத்திற்கும் ஆளாகாமல், மறுமணத்தை பற்றியும் யோசிக்காமல் குழந்தைகளை வளர்ப்பதை மட்டுமே தனது கடமையாக செய்து வந்திருக்கிறார்.

பொதுவாக இளம் வயதிலே கணவரை இழந்த பெண்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் திருப்தி அடைந்திருக்க மாட்டார்கள் என்றும்– அதனால் மருமகள்கள் ஜோடியுடன் சிரித்து மகிழ்ந்து குடும்பம் நடத்துவது அவர்களுக்கு பிடிக்காது என்றும் எங்கள் தோழிகள் சொன்னார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. நாங்கள் முழு மகிழ்ச்சியோடு வாழ எல்லா வகையிலும் மாமியார் துணைபுரிகிறார்..’’ என்றார்கள்.

‘சரி.. அந்த நல்ல மாமியாருக்கு இப்போது என்ன பிரச்சினை?’ என்று கேட்டேன்.

‘‘நாங்கள் திகட்ட திகட்ட தாம்பத்ய வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் இதே பருவத்தில் அவர் கணவரை இழந்திருக்கிறார். அதோடு அவரது தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. நாங்கள் வெளிநாட்டில் இருந்து வருடத்திற்கு இருமுறைதான் இங்கு வந்துசெல்கிறோம். மற்ற காலங்களில் அவர் தனிமையில்தான் வாடிக்கொண்டிருக்கிறார். பணம் இருக்கிறது. வாய்ப்பு, வசதி எல்லாம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கைத்துணை மட்டும் இல்லை. அவரது வயதுக்கும், கடமைகளுக்கும் ஏற்ற ஆண் துணை ஒன்றை அமைத்துக்கொடுக்கலாம் என்று நினைக்கிறோம். வெளிநாடுகளில் அதற்கென்றே தனி அமைப்புகள் இருக்கின்றன. மனம் ஒத்தவர்கள் வாழ்க்கையோடு எந்த வயதிலும் இணைந்துகொள்ளலாம். இங்கு அந்த பேச்சை எடுத்தாலே  நம்மை ஒருமாதிரியாக பார்க்கிறார்கள். கணவரை இழந்தால், வயதாகிவிட்டால், வாழ்க்கை அவ்வளவுதானா?’’ என்று குரலை உயர்த்தி கேட்டார்கள்.

‘உங்கள் மாமியாருக்கு எத்தனை வயது?’

‘‘52..’’

‘உங்கள் நோக்கம் பற்றி உங்கள் கணவர்களிடம் பேசினீர்களா? அவர்கள் என்ன சொன்னார்கள்?’

‘‘அம்மா இங்கு தனிமையில் வாடுகிறார். அம்மா மகிழ்ச்சியாக வாழ என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் இதுபற்றி நீங்களே அம்மாவிடம் பேசுங்கள், என்று கூறி அந்த பொறுப்பை எங்களிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நாங்கள் அவர்களிடம் இந்த பேச்சை எப்படி ஆரம்பிக்கவேண்டும் என்று கூறுங்கள்..’’ என்றார்.

‘மாமியாரின் தனிமையை போக்க நீங்கள் இந்த அளவுக்கு முயற்சிப்பது பாராட்ட தகுந்த விஷயம். முதுமையில் இணைந்து வாழ்வதென்பது நீங்கள் குறிப்பிடும் வெளிநாடுகளில் சகஜமானது. இங்கு இப்போதுதான் அதுபற்றிய சிந்தனையே வந்திருக்கிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சி என்பது எதில் இருந்து கிடைக்கும் என்பது பெண்ணுக்கு பெண் மாறுபடும். அவர்களது தனிமையை எது விரட்டும் என்பதும் பெண்ணுக்கு பெண் மாறுபடும். அதனால் உங்கள் மாமியாரின் மனதறிந்து அதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்யுங்கள்.

முதலில் நீங்கள் இருவரும் சேர்ந்து அவர் பார்க்க விரும்பும் ஏதாவது ஒரு சுற்றுலா பகுதிக்கு அவரை அழைத்துசெல்லுங்கள். அங்கு ஜாலியான மனநிலையில் அவர் இருக்கும்போது தனிமை பற்றியும், பிற்காலத்திற்கு தேவையான துணை பற்றியும் வெளிநாடுகளில் இருப்பதை சொல்லுங்கள். இங்கும் அத்தகைய மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்த்துங்கள். அவர் ஆர்வம் காட்டினால் தொடர்ந்து பேசுங்கள். இல்லாவிட்டால் அவர் என்ன விரும்புகிறார் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அவர் விருப்பத்திற்கு ஏற்றபடி செயல்படுங்கள்..’ என்றேன்.

நான் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்த மருமகள்களில் ஒருவர், ‘ஆண் துணை தேவை என்பதை எங்கள் மாமியாருக்கு நன்றாக புரியவைப்போம். அதற்கு அவர் விரும்பாவிட்டால், நான் இந்தியாவிற்கு வந்துவிடுகிறேன். அவர்களது இறுதிக் காலம் வரை என்னோடு வைத்து பார்த்துக்கொள்கிறேன்’ என்றபோது இன்னொரு மருமகள் கண்களில் இருந்து  கண்ணீர் வந்துவிட்டது.

இப்படிப்பட்ட மருமகள்கள் சமூகத்தில் பெருக வேண்டும்.

–விஜயலட்சுமி பந்தையன்.
நன்றி: தினத்தந்தி.



மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82372
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 24, 2014 8:10 am

மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் 103459460
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 1:35 pm

இதை மகளிர் கட்டுரைகள் பகுதிக்கு மாற்றுகிறேன் விமந்தனி புன்னகை........................ரொம்ப அருமையான பகிர்வு இது.......அங்கு இருந்தால் நிறைய பேர் பார்க்கலாம்.....சரியா? புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Nov 24, 2014 2:31 pm

சரி கிருஷ்ணாம்மா.



மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மாமியாருக்கு துணை தேடும் மருமகள்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 24, 2014 2:35 pm

விமந்தனி wrote:சரி கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1105841

நன்றி அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக