புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
3 Posts - 4%
Baarushree
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 3%
viyasan
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 3%
prajai
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 3%
Rutu
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
1 Post - 1%
manikavi
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
2 Posts - 6%
viyasan
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
1 Post - 3%
Rutu
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
1 Post - 3%
manikavi
பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_m10பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள்


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 12:36 am

பன்றிக் காய்ச்சல்: மக்களைக் கைவிடுகிறதா அரசு?

இது ‘H1N1 இன்ஃபுளுயென்சா வைரஸு’க்கும் மனிதர்களுக்குமான வாழ்வா, சாவா போராட்டம். கடந்த 2009-ல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், தற்காப்புக்காக ஆண்டுதோறும் தன்னைத் தகவமைத்துக்கொண்டுவருகிறது. இப்படியாக 5 ஆண்டுகளில் அதன் வீரியம் பல மடங்கு பெருகிவிட்டது. அதன் மரபணு மாற்றத்தின் வேகமும் அதிகரித்துவிட்டது. பரிணாம வளர்ச்சியின் நியதி இது. ஆனால், அதை எதிர்கொள்ளும் வகையில் நமது அரசு இயந்திரம் பரிணாமம் அடைந்திருக்கிறதா என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

புள்ளிவிவரங்கள் ஏமாற்றுகின்றனவா?

ஏழை மக்களின் மீது அலட்சிய மனோபாவம் கொண்ட அரசு மருத்துவ அமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், வேகமாகப் பரவிவரும் பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், எலிக் காய்ச்சல் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளத் திராணியில்லாமல் ஏழைகள் தவிக்கிறார்கள். தினம் தினம் பன்றிக் காய்ச்சலால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் உயர்ந்துகொண்டே போகிறது. “தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், எலிக் காய்ச்சல் ஆகியவற்றால் ஒருவர் இறந்தால், இறப்புக்குக் காரணமாக அதைக் குறிப்பிடக் கூடாது என்று உள்ளூர் நிர்வாகங்கள் வாய்மொழி உத்தரவிட்டிருக்கின்றன” என்கிறார் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஒருவர். இப்படியான சூழலில் அரசு தரும் புள்ளிவிவரங்களை நம்புவது அபத்தமாகவே அமையும். ஆகவே, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 16,235 பேர்; இறந்தவர்கள் 926 பேர் என்று அரசு தெரிவிக்கும் புள்ளிவிவரங்களை நாம் நம்பிவிட முடியாது. உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே தெரிகிறது.

கடும் தட்டுப்பாட்டில் தடுப்பூசிகள்!

இவ்வளவு ஆபத்தான நிலையிலும்கூட பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அமெரிக்காவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் பரிந்துரையின் பேரில், அந்த நாடு 2009, செப்டம்பர் மாதத்திலிருந்தே சீரான இடைவெளிகளில் இதற்கான தடுப்பூசிகளை நான்கு மாதம் முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகள், 50 வயதுக்கு மேற்பட்டோர், இதய நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் ஆகியோருக்கு விநியோகித்துவருகிறது. ஐரோப்பிய நாடுகளும் இதைக் கடைப்பிடிக்கின்றன. ஆனால், 2009-ம் ஆண்டு முதலே இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் கணிசமான உயிரிழப்பு ஏற்பட்டாலும், இன்றைய தேதியில் உடனடியாக உயிர் காக்க ஒரு தடுப்பூசியை வாங்கிவிட முடியாது என்பதே முகத்தில் அறையும் உண்மை.

இங்குள்ள சொற்ப நிறுவனங்களின் தயாரிப்புகள் மொத்த நோயாளிகளுக்கும் போதுமானதாக இல்லை. சொல்லப் போனால், தமிழகத்தில் மேற்கண்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கே தடுப்பூசி கிடைப்பதில்லை என்கின்றன மருத்துவ வட்டாரங்கள். பணம் செலுத்தி முன்பதிவு செய்தால் ஒரு வாரத்தில் கிடைக்கலாம். புணேவைச் சேர்ந்த ஒரு தனியார் தடுப்பூசி நிறுவனம், இப்போதுதான் 65 ஆயிரம் ‘வீரியம் குறைக் கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி’களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சுமார் ரூ. 800 விலை கொண்ட இதுவும் மார்ச் மாதம் இறுதியில்தான் விற்பனைக்கு வரும். அதுவரை நோயாளிகளின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.

ஏழைகளின் ‘ரத்தம் உறிஞ்சும்’ பரிசோதனை!

சில நாட்களுக்கு முன்பு வரை நாடு முழுவதும் தனியார் பரிசோதனைக் கூடங்கள், மேற்கண்ட நோய்களின் பரிசோதனைகளுக்கு ஏகபோகமாகக் கட்டணம் (ரூ.10 ஆயிரம் வரை) வசூலித்தன. சில நாட்களுக்கு முன்புதான் அரசு, டெல்லியில் ரூ. 4,500, தமிழகத்தில் ரூ. 3,750 என்று கட்டணத்தை நிர்ணயித்திருக்கிறது. சரி, தனியார் நிறுவனங்கள் எந்தக் காலத்தில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டும் வசூலித்திருக்கின்றன? எங்கே செல்வார்கள் ஏழைகள்?

அரசு மையங்களில் ரத்தப் பரிசோதனை இலவசம்தானே என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், எத்தனை அரசு மையங்கள் இருக்கின்றன என்பதுதான் கேள்வி. 32 மாவட்டங்களும் 12 மாநகராட்சிகளும் கொண்ட தமிழகத்தில், ஆறு பரிசோதனை மையங்கள் மட்டுமே அரசு மையங்கள். மீதமுள்ள 13 தனியார் வசம். (பார்க்க: பெட்டிச் செய்தி). அவையும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கின்றன. எங்கோ ஒரு மூலையிலும் மலைக் கிராமங்களிலும் வசிப்போர் எங்கே செல்வது?

என்னதான் தீர்வு?

இதுகுறித்து மருத்துவர் ரெக்ஸ் கூறும்போது, “எனக்குப் போட்டுக்கொள்ள தடுப்பூசிக்காகப் பதிவுசெய்து இரண்டு நாட்களாகிவிட்டன. எப்போது வரும் என்று தெரியவில்லை. மருத்துவரான எனக்கே இந்தக் கதி என்றால், பொதுமக்களின் கதி? அரசை நம்பிப் பலன் இல்லை. இதன் வீரியம் குறையும் வரை மக்கள் பயணங்களைத் தவிர்க்கலாம். அதிகமாகக் கூட்டம் கூடும் பொதுஇடங்களைத் தவிர்க்கலாம். விழாக்களைக் குறைத்துக்கொள்ளலாம். அப்படியே செல்வதாக இருந்தாலும் பிரத்தியேக முகமூடிகள் (சுமார் ரூ.50) அணிந்துகொண்டு செல்லுங்கள்.மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றால், ‘என் 95’ ரக முகமூடி (ரூ. 200 - 225) அணிந்து கொள்ள வேண்டும். வீட்டுக்குள் நுழையும் முன்பு கை, கால்களைச் சுத்தமாகக் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

சுவாசக் கருவிகள் பற்றாக்குறை- மருத்துவர் ரவீந்திரநாத்

பன்றிக் காய்ச்சலால் 2009-ம் ஆண்டு தொடங்கி, இந்தியாவில் ஆண்டுக்குச் சராசரியாக 600 பேர் வரை உயிரிழக்கிறார்கள். ஆனால், அரசு முடிந்த வரை உண்மையான புள்ளிவிவரங்களை மறைப்பதிலேயே முனைப்பாக இருக்கிறது. தமிழக அரசு 2014-ம் ஆண்டு தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலால் ஓர் இறப்புகூட இல்லை என்ற தகவலை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இப்போதும் ‘9 பேர் மட்டுமே இறந்துள்ளனர்; நிலைமை கட்டுக்குள் இருக்கிறது’ என்றே அரசு கூறிவருகிறது. இங்கு அரசு மருத்துவமனைகளில் சுவாசக் கருவிகள் கூட பற்றாக்குறையாக உள்ளன.

எங்கெல்லாம் பரிசோதனை செய்யலாம்?

அரசு: கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட், சென்னை மருத்துவக் கல்லூரி, கோவை மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, நெல்லை மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி.

தனியார்: சென்னை - பாரத் பரிசோதனை மையம், ஹைடெக் டயக்னாஸ்டிக் மையம், ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, லிஸ்டர் மெட்ரோபாலிக் லேப் அண்ட் ரிசர்ச் சென்டர், டயக்னாஸ்டிக் சர்வீசஸ், ஸ்டார் பயோடெக் சொலுஷன், பிரிமியர் ஹெல்த் சென்டர்.

கோவை - மைக்ரோ பயாலஜி லேப்.

நாகர்கோவில் - விவேக் லேப்.

வேலூர் - கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி.

திருச்சி - டாக்டர்ஸ் டயக்னாஸ்டிக் சென்டர்.

மறைக்க நினைக்கும் மத்திய அரசு- மருத்துவர் புகழேந்தி

பன்றிக் காய்ச்சலுக்கான வைரஸ் கிருமியின் டி.என்.ஏ-வில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சரகம் அப்படி ஏற்படவில்லை என்கிறது. ஆனால், கிருமியின் வீரியம் கூடிவிட்டதை மட்டும் மத்திய அமைச்சரகம் ஏற்றுக்கொள்கிறது. டி.என்.ஏ-வில் மாற்றம் ஏற்படாமல் கிருமியின் வீரியம் அதிகரிக்காது என்பது அடிப்படை உண்மை. ஆனால், இதுதொடர்பாக இந்திய அரசு விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை. சென்னையில் மட்டுமே 18 இடங்களில் பன்றிக் காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால், அரசு 4 என்று மட்டுமே சொல்கிறது. சமூக அக்கறை கொண்ட தனியார் அமைப்புகளுடன் அரசு நிர்வாகம் இணைந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். முடிவுகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கான தீர்வு காண முடியும்.

தாமதமாகிவிட்டது!- மருத்துவர் கு.கணேசன்

நோயாளியின் மூக்கு, தொண்டையிலிருந்து சளியை எடுத்துச் செய்யப்படும் ‘ரியல் டைம் பி.சி.ஆர்.’ பரிசோதனையும் ‘வைரஸ் கல்ச்சர்’ பரிசோதனையும் பன்றிக் காய்ச்சலை உறுதிசெய்கின்றன. ஆனால், இவை நவீன மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். அதேபோல் டாமிஃபுளூ மாத்திரைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன. தனியார் மருத்துவமனைகள் இவற்றை அரசு மருத்துவமனைகளிடம் கேட்டு வாங்கிப் பயன்படுத்த வேண்டும். ஆனால், தனியார் மருத்துவமனைகள் இதில் ரிஸ்க் எடுப்பதில்லை. நோயின் மூன்று நிலைகளில் முதல் நிலையில் மட்டுமே சித்தா, ஆயுர்வேதம் தீர்வளிக்கும். அடுத்தடுத்த நிலைகளில் இருப்பவர்களுக்கு அலோபதி மட்டுமே தீர்வு. தடுப்பூசியைப் பொறுத்தவரை மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே போட்டால்தான் பயன் தரும். பன்றிக் காய்ச்சல் பரவிய பிறகு போடுவது முழுமையான பலன் தராது. செலுத்தப்பட்ட மூன்று வாரங்கள் கழித்தே இதன் தடுப்பாற்றல் வெளிப்படும்.

- டி.எல். சஞ்சீவிகுமார்



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 12:37 am

பன்றிக் காய்ச்சலுக்கு 1075 பேர் பலி: 20 ஆயிரம் பேர் பாதிப்பு

பன்றிக் காய்ச்சலுக்கு நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் தேதியில் இருந்து இந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 19,972 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, நாட்டிலேயே மிக உயர்ந்த அளவில் குஜராத்தில் 275 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் 261 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 153 பேரும் பலியாகியுள்ளனர். மராட்டியத்தில் 143 பேரும், தெலுங்கானாவில் 57 பேரும், கர்நாடகாவில் 46 பேரும், பஞ்சாப்பில் 42 பேரும், அரியானாவில் 21 பேரும், ஆந்திர பிரதேசத்தில் 12 பேரும், டெல்லியில் 10 பேரும், தமிழகத்தில் 9 பேரும், இமாச்சல் பிரதேசத்தில் 8 பேரும், ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளாவில் தலா 7 பேரும் பலியாகியுள்ளனர்.

இது தொடர்பாக, பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா, பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பீதி அடைய தேவை இல்லை. நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளுக்கும் இந்நோய்க்கான பரிசோதனை மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளும் போதிய அளவு கையிருப்பில் உள்ளன என தெரிவித்துள்ளார்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 4:36 pm

பன்றிக்காய்ச்சல்: உ.பி.,யில் பரவுகிறது

லக்னோ: பன்றிக்காய்ச்சல் உத்தரபிரதேசத்தில் வேகமாக பரவி வருகிறது. அங்கும் இங்குமாக இருந்த பாதிப்பு தற்போது பல மாவட்டங்களுக்கு பரவி வருவதாக கூறப்படுகிறது. தலைநகர் லக்னோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அங்க 505 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும் சுகாதரத்துறை தெரிவித்துள்ளது.48 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்வதால், பன்றிக்காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 4:39 pm

கோவையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் பலி

கோவையில் பன்றிக் காய்ச்சல் நோய்க்கு 38 வயது பெண் ஒருவர் பலியானார்.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த சில நாட்களாக தொண்டையில் புண்ணும், காய்ச்சலும் ஏற்பட்டிருந்தது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

காய்ச்சல் தொடர்ந்ததால் அவர் நேற்று காலை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பன்றிக் காய்ச்சல் நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனையில், அவருக்கு பன்றிக் காய்ச்சல் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் இறந்தார்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Mar 02, 2015 4:44 pm

பயங்கரமா இருக்கு , இதுக்கு என்ன தான் தீர்வு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 02, 2015 4:50 pm

ராஜா wrote:பயங்கரமா இருக்கு , இதுக்கு என்ன தான் தீர்வு


தீர்வு கிடைக்காததால் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது!



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 12:49 am

பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்வு

இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 1115 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

இந்நோயின் தாக்கம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு கடந்த 1-ந் தேதி வரை 1,115 பேர் பலியாகி இருக்கிறார்கள். 20,795 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதிக வெப்பம் பதிவாகும் பகுதிகளில் இந்த நோயை பரப்பும் கிருமிகள் குறைந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் அதிகபட்சமாக 275 பேர் பலியாகி உள்ளன. ராஜஸ்தானில் 267 பேரும், மத்திய பிரதேசத்தில் 160, மகாராஷ்டிராவில் 152, தெங்லுங்கானாவில் 57, பஞ்சாபில் 44, கர்நாடகாவில் 46, டெல்லியில் 10, அரியானாவில் 22, ஆந்திராவில் 14, இமாச்சல பிரதேசத்தில் 8, ஜம்மு-காஷ்மீர் மற்றும் கேரளாவில் 7 பேர்களும் பலியாகி இருக்கிறார்கள். நோயை கட்டுப்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 2:01 am


பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை : பட்னவிஸ்

மகாராஷ்டிர மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அம்மாநில முதல்வர் பட்னவிஸ் தெரிவித்துள்ளார்.

பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு பொது சுகாதாரத் துறைக்கு தான் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

எந்த நோயாளிக்கும் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனை மறுக்கக் கூடாது என்றும், அவர்களது முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அவர் கூறினார்.




பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 03, 2015 5:56 pm

சென்னையில் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்!

சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 வட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த நோய் வேகமாகப் பரவி வருகிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் பலியாகி இருக்கும் நிலையில், 300-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பன்றிக்காய்ச்சல் நோயின் பாதிப்பு, அதிகமாகக் காணப்படுகிறது.

இதனால் எல்லையோர பகுதிகளில் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும், பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவும், நோய் வராமல் தடுக்கவும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சென்னையில் உள்ள பள்ளிகளில் காலை நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. லேசான காய்ச்சல் ஏற்பட்டாலே பள்ளிக்கு வரக்கூடாது என்றும், விடுமுறை எடுத்துவிட்டு வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் மாணவ, மாணவிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

swine fluதேர்வு நடைபெறும் நேரங்களில் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டாலும் கட்டாயப்படுத்தி அவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் காய்ச்சலால் தேர்வு எழுத முடியாமல் போகும் மாணவர்களுக்கு வேறு நாளில் தனியாக தேர்வுகள் நடத்தப்படும் என்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்போது 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் நோய் அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கு குறைவான மாணவர்களே வந்திருந்தனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும், அப்பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட பொது மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 04, 2015 1:03 am

மங்களூருவில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

கர்நாடக மாநிலத்தில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு மாநிலத்தில் இதுவரை 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். தற்போது உடுப்பியை சேர்ந்த பெண் ஒருவரும் பன்றி காய்ச்சலுக்கு பலியாகி உள்ள சம்பவம் நடந்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா சிரூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவரது மனைவி பிக்பா அசினா (வயது 35). இவர் கடந்த மாதம் 27-ந்தேதி, கார்வார் மாவட்டம் குமடா பகுதிக்கு நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவர் பட்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அசினாவுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள், அவரை மங்களூரு வென்லாக் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர், மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. என்றாலும் சிகிச்சை பலனின்றி அசினா இறந்தார். உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியான முதல் பெண் இவர் தான்.



பன்றிக் காய்ச்சல் | செய்திகள் | கட்டுரைகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக