புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ருத்ரா (இ.பரமசிவன்) கவிதைகள் - மின்னஞ்சலில் வரும் இவரின் கவிதைகள் என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளதால் தொடர் பதிவாக பதிய விரும்புகிறேன்... உங்களுக்கும் பிடிக்கும். புதுக்கவிதையில் இது புதுமாதிரி....
காதலர் தினம்
=========================================ருத்ரா
சுட்டெரிக்கும் சூரியன் கூட
கடலில் முகம் கழுவி
காற்றில் பல் தேய்த்து
பளிச்சென்று காத்திருக்கும்...
எங்கோ ஒதுங்கி இருக்கும்
அந்த மேக மங்கை
தன் முகம் தழுவி
கொடுக்கும் முத்தத்திற்கு
காத்திருக்கும்.
பிப்ரவரி பதினாலு
எனும் காலண்டர் தாள்
நரம்புக்குள்
ஆயிரம் மகரயாழை
நிமிண்டி விடும்.
இது வெள்ளைக்காரனின்
கருப்பு நிழல் என்று
வெறுப்பு கொள்வோரே
உங்கள் செல்லரித்த
சுவடிகளைத்தடவிப்பாருங்கள்
அங்கே ஒரு "காந்தர்வ"முறையில்
இளம் உள்ளங்கள்
காதலின் கிலுகிலுப்பைகளை
ஒலித்துக்கொண்டிருப்பது கேட்கும்.
இன்னும்
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
வால் எயிறு ஊறி
சொல் குழறிய மாணிக்கப்பரல்களில்
ஒலித்து ஒலித்து விளையாடும்
ஒளிப்பூக்கள் சிதறும்.
எலும்பு இற்று குருதி வற்றி
இதயத்தின்
ஓட்டைக்கசிவுகளில்
முனகும் துடிப்புகளில்
காலம் உன்னை
துவைத்துக் கசக்கிப்பிழியும்
நாட்களில்
நீ கொளுத்திப்பார்க்கும்
மத்தாப்புக்குச்சிகள் இது தானே!
மனிதா!
மழலை போல
இன்னொரு இனிய
தெய்வீக மொழியை உன்னால்
கேட்க முடியுமா?
சமுதாய வளர்ச்சியின்
ஒரு மழலை உருவகம்
இது.
இதைத்தகர்க்கவா
வெறும் சம்ப்ரதாயங்களின்
வெடிமருந்தை
மூட்டை கட்டி
முதுகில் சுமந்து கொண்டிருக்கிறாய்
எதிர்ப்பு என்ற பெயரில்?
வேண்டாம்..ஜாக்கிரதை!
வீணாய் நீ
வெடித்துச்சிதறாதே!
கண்ணாடிச்சிறகுகளில்
சர சரக்கும் தட்டாம்பூச்சிகளே!
உங்கள்
கனவுகளைச்செதுக்கி
கல்வெட்டு ஆக்கிக்கொள்ளுங்கள்.
________________
காதலர் தினம்
=========================================ருத்ரா
சுட்டெரிக்கும் சூரியன் கூட
கடலில் முகம் கழுவி
காற்றில் பல் தேய்த்து
பளிச்சென்று காத்திருக்கும்...
எங்கோ ஒதுங்கி இருக்கும்
அந்த மேக மங்கை
தன் முகம் தழுவி
கொடுக்கும் முத்தத்திற்கு
காத்திருக்கும்.
பிப்ரவரி பதினாலு
எனும் காலண்டர் தாள்
நரம்புக்குள்
ஆயிரம் மகரயாழை
நிமிண்டி விடும்.
இது வெள்ளைக்காரனின்
கருப்பு நிழல் என்று
வெறுப்பு கொள்வோரே
உங்கள் செல்லரித்த
சுவடிகளைத்தடவிப்பாருங்கள்
அங்கே ஒரு "காந்தர்வ"முறையில்
இளம் உள்ளங்கள்
காதலின் கிலுகிலுப்பைகளை
ஒலித்துக்கொண்டிருப்பது கேட்கும்.
இன்னும்
நம் எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும்
வால் எயிறு ஊறி
சொல் குழறிய மாணிக்கப்பரல்களில்
ஒலித்து ஒலித்து விளையாடும்
ஒளிப்பூக்கள் சிதறும்.
எலும்பு இற்று குருதி வற்றி
இதயத்தின்
ஓட்டைக்கசிவுகளில்
முனகும் துடிப்புகளில்
காலம் உன்னை
துவைத்துக் கசக்கிப்பிழியும்
நாட்களில்
நீ கொளுத்திப்பார்க்கும்
மத்தாப்புக்குச்சிகள் இது தானே!
மனிதா!
மழலை போல
இன்னொரு இனிய
தெய்வீக மொழியை உன்னால்
கேட்க முடியுமா?
சமுதாய வளர்ச்சியின்
ஒரு மழலை உருவகம்
இது.
இதைத்தகர்க்கவா
வெறும் சம்ப்ரதாயங்களின்
வெடிமருந்தை
மூட்டை கட்டி
முதுகில் சுமந்து கொண்டிருக்கிறாய்
எதிர்ப்பு என்ற பெயரில்?
வேண்டாம்..ஜாக்கிரதை!
வீணாய் நீ
வெடித்துச்சிதறாதே!
கண்ணாடிச்சிறகுகளில்
சர சரக்கும் தட்டாம்பூச்சிகளே!
உங்கள்
கனவுகளைச்செதுக்கி
கல்வெட்டு ஆக்கிக்கொள்ளுங்கள்.
________________
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மூவர்ணக் குறும்பு பாக்கள்
==========================================ருத்ரா
தலைநகரில் அணிவகுப்பு.
முப்பது லட்சம் பேர் திரண்டிருக்கலாம்.
ஆனால்
இருபத்தொன்பது லட்சத்து தொண்ணூத்தொம்பதாயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூத்தெட்டு பேர்கள்
செக்யூரிடிக்கு.
யார் அந்த இரண்டு பேர்?
ஒபாமாவும் மோடியும் தான்.
________________________________________________
வெயிலில் நின்றாலும் கூட
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு
நிழலே விழுவதில்லையாம்.
அவர் நிழல் கூட
இப்போது பா.ஜ.கா வில்.
_______________________________________________
நம் நாட்டு
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கூட
கடன் தருகிறதாமே சுவிஸ்பேங்க்.
நமக்கு அன்னியோன்யமாகி விட்ட
ஒரே உலக பாங்கு இதுவே.
_______________________________________________
வெள்ளை மாளிகையும்
அசோக சக்கரமும்
பூச்செண்டுகள் பரிமாறிக்கொண்டன.
ஆனால்
டாலரின் நண்டுப்பிடியில்
முழி பிதுங்குவது
நம் ரூபாயே தான்.
"ஸாரே ஜஹாம் ஸே அச்சா..."
___________________________________________________
ராம் ராம் என்று
கோவில் கட்ட கிளம்பிவிட்டார்கள்.
"ராம நாம சங்கீர்த்தனம்..."
எல்லா இடங்களிலிருந்தும்
இப்போது வரும் செங்கல்கள்
நாது "ராம்"கோட்சேக்கு.
______________________________________________________
இவர்கள்
நிச்சயமாக சமஸ்கிருதத்தை
தேசிய மொழியாக்கி விடுவார்கள்.
பாவம்!
அதன் உள்ளே இருப்பது
தமிழ் என்று தெரிந்துகொள்ளாத வரை.
___________________________________________________
தனுஷும் அமிதாப்பும்
அர்த்தநாரிஸ்வர் ஆகிவிட்டார்களே.
குத்தாட்ட சேனை வீரர்கலே!
இந்தி எதிர்ப்பு எல்லாம்
இனி வேண்டாம்..
போய் கட் அவுட் கட்டுகிற
வேலையைப்பாருங்கள்.
_____________________________________________________
அங்கே ஒரு கொலை விழப்போகிறது
என்று
அருகம்புல்லுக்கும் தெரிந்திருக்கிறது.
ஜனநாயக ரோஜாக்களே
மொட்டாக வரும்போதே
கருகிப்போய் விடுங்கள்.
இப்போதைய
புனித
ஜனநாயகக்கடமை அது மட்டுமே!
திருவரங்கம்.
_______________________________________________________
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது.
எது நடந்துகொண்டிருக்கிறதோ
அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
எது நடக்குமோ அது நன்றாக நடக்கும்.
பகவத் கீதையா அது?
அல்ல அல்ல.
"பெங்களூரு"க் கீதை!
_______________________________________________________
சமணர்கள் கழுவேற்றப்படுவது
இன்றும் நடைபெறுகிறதோ?
இந்திய தொன்மை இங்கே
கழுத்தறு பட்டு கிடக்கிறது.
மதுரையில்
கிரானைட் குவாரி.
________________________________________________________
மோடியின் தலைப்பாகை
மிக அருமை.
டெல்லியின்
விரல் தட்டும் பொறிகள்
அதைத்தான் கட்டிக்கொள்ள
தயார் ஆகின்றன.
__________________________________________________________
தேசியமயமாக்க
இதோ மிச்சமிருக்கிறது
சாதிமதங்களின் ஒரு தொழில்.
"எழுத்துக்களோடு ஒரு கட்டப்பஞ்சாயத்து"
_______________________________________
==========================================ருத்ரா
தலைநகரில் அணிவகுப்பு.
முப்பது லட்சம் பேர் திரண்டிருக்கலாம்.
ஆனால்
இருபத்தொன்பது லட்சத்து தொண்ணூத்தொம்பதாயிரத்து
தொள்ளாயிரத்து தொண்ணூத்தெட்டு பேர்கள்
செக்யூரிடிக்கு.
யார் அந்த இரண்டு பேர்?
ஒபாமாவும் மோடியும் தான்.
________________________________________________
வெயிலில் நின்றாலும் கூட
அரவிந்த கெஜ்ரிவாலுக்கு
நிழலே விழுவதில்லையாம்.
அவர் நிழல் கூட
இப்போது பா.ஜ.கா வில்.
_______________________________________________
நம் நாட்டு
ஆடுகளுக்கும் மாடுகளுக்கும் கூட
கடன் தருகிறதாமே சுவிஸ்பேங்க்.
நமக்கு அன்னியோன்யமாகி விட்ட
ஒரே உலக பாங்கு இதுவே.
_______________________________________________
வெள்ளை மாளிகையும்
அசோக சக்கரமும்
பூச்செண்டுகள் பரிமாறிக்கொண்டன.
ஆனால்
டாலரின் நண்டுப்பிடியில்
முழி பிதுங்குவது
நம் ரூபாயே தான்.
"ஸாரே ஜஹாம் ஸே அச்சா..."
___________________________________________________
ராம் ராம் என்று
கோவில் கட்ட கிளம்பிவிட்டார்கள்.
"ராம நாம சங்கீர்த்தனம்..."
எல்லா இடங்களிலிருந்தும்
இப்போது வரும் செங்கல்கள்
நாது "ராம்"கோட்சேக்கு.
______________________________________________________
இவர்கள்
நிச்சயமாக சமஸ்கிருதத்தை
தேசிய மொழியாக்கி விடுவார்கள்.
பாவம்!
அதன் உள்ளே இருப்பது
தமிழ் என்று தெரிந்துகொள்ளாத வரை.
___________________________________________________
தனுஷும் அமிதாப்பும்
அர்த்தநாரிஸ்வர் ஆகிவிட்டார்களே.
குத்தாட்ட சேனை வீரர்கலே!
இந்தி எதிர்ப்பு எல்லாம்
இனி வேண்டாம்..
போய் கட் அவுட் கட்டுகிற
வேலையைப்பாருங்கள்.
_____________________________________________________
அங்கே ஒரு கொலை விழப்போகிறது
என்று
அருகம்புல்லுக்கும் தெரிந்திருக்கிறது.
ஜனநாயக ரோஜாக்களே
மொட்டாக வரும்போதே
கருகிப்போய் விடுங்கள்.
இப்போதைய
புனித
ஜனநாயகக்கடமை அது மட்டுமே!
திருவரங்கம்.
_______________________________________________________
எது நடந்ததோ அது நன்றாக நடந்தது.
எது நடந்துகொண்டிருக்கிறதோ
அது நன்றாக நடந்து கொண்டிருக்கிறது.
எது நடக்குமோ அது நன்றாக நடக்கும்.
பகவத் கீதையா அது?
அல்ல அல்ல.
"பெங்களூரு"க் கீதை!
_______________________________________________________
சமணர்கள் கழுவேற்றப்படுவது
இன்றும் நடைபெறுகிறதோ?
இந்திய தொன்மை இங்கே
கழுத்தறு பட்டு கிடக்கிறது.
மதுரையில்
கிரானைட் குவாரி.
________________________________________________________
மோடியின் தலைப்பாகை
மிக அருமை.
டெல்லியின்
விரல் தட்டும் பொறிகள்
அதைத்தான் கட்டிக்கொள்ள
தயார் ஆகின்றன.
__________________________________________________________
தேசியமயமாக்க
இதோ மிச்சமிருக்கிறது
சாதிமதங்களின் ஒரு தொழில்.
"எழுத்துக்களோடு ஒரு கட்டப்பஞ்சாயத்து"
_______________________________________
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
புத்தாண்டு குறும்பாக்கள்
====================================ருத்ரா
நடுநிசியில்
வானத்தைக்கிழித்து
ஒரு "சிசேரியன்".
_____________________________________________
புதிய காலண்டர் சிறகில்.
பழைய காலண்டர்
சிதையில்.
________________________________________________
இந்து மதக்கடவுளுக்கும்
அர்ச்சனைகள்.
ஆரவாரங்கள்.
________________________________________________
நம்பிக்கைகள்
வருடம் தோறும்
சட்டை மாற்றிக்கொள்கின்றன
_______________________________________________
டிவியில் கலர் கலராய் வாந்தி
365 நாட்களின்
பழைய சோற்றை.
__________________________________________________
365 தாள்களிலும் கண்ணீரை
மட்டுமே அச்சடித்திருக்கும் காலண்டர்
ஈழத்தில்.
____________________________________________________
பாரத புத்திரர்கள் எல்லோரும்
"கௌரவ"ப்படுத்தப்பட
பகவத் கீதை "புத்தாண்டு" பதிப்பு தயார்.
_________________________________________________________
நீலவானம் கிழிசல் ஆனதில்
கல்லறைகளின் மழை பெய்தது கடலுக்குள்.
இந்தோனேஷிய விமானவிபத்து.
_______________________________________________________
ஜனவரி ஒண்ணுக்கு
ஏதாவது ஒரு ரிஷியின் "ஜன்ம திவஸ்"
அகப்படவில்லையா?
________________________________________________________
கோட்ஸேக்கும் சிலை வைக்கலாம்.
"ஹே ராம்" என்ற எழுத்துக்களுடன்.
"நாது ராம்"என்பதை நாசூக்காய் ஒலிக்க.
_____________________________________
====================================ருத்ரா
நடுநிசியில்
வானத்தைக்கிழித்து
ஒரு "சிசேரியன்".
_____________________________________________
புதிய காலண்டர் சிறகில்.
பழைய காலண்டர்
சிதையில்.
________________________________________________
இந்து மதக்கடவுளுக்கும்
அர்ச்சனைகள்.
ஆரவாரங்கள்.
________________________________________________
நம்பிக்கைகள்
வருடம் தோறும்
சட்டை மாற்றிக்கொள்கின்றன
_______________________________________________
டிவியில் கலர் கலராய் வாந்தி
365 நாட்களின்
பழைய சோற்றை.
__________________________________________________
365 தாள்களிலும் கண்ணீரை
மட்டுமே அச்சடித்திருக்கும் காலண்டர்
ஈழத்தில்.
____________________________________________________
பாரத புத்திரர்கள் எல்லோரும்
"கௌரவ"ப்படுத்தப்பட
பகவத் கீதை "புத்தாண்டு" பதிப்பு தயார்.
_________________________________________________________
நீலவானம் கிழிசல் ஆனதில்
கல்லறைகளின் மழை பெய்தது கடலுக்குள்.
இந்தோனேஷிய விமானவிபத்து.
_______________________________________________________
ஜனவரி ஒண்ணுக்கு
ஏதாவது ஒரு ரிஷியின் "ஜன்ம திவஸ்"
அகப்படவில்லையா?
________________________________________________________
கோட்ஸேக்கும் சிலை வைக்கலாம்.
"ஹே ராம்" என்ற எழுத்துக்களுடன்.
"நாது ராம்"என்பதை நாசூக்காய் ஒலிக்க.
_____________________________________
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள்
====================================================ருத்ரா
கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே இங்கு கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளந்து தருகின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
சங்கீதம்?
காலடியில் பிறந்தவருக்கு கூட
காலடி மக்கள் எனும்
சூத்திர வர்ணம் எப்படி உடன் பாடு ஆனது?
எம்மதமும் சம்மதம் என்பதே இந்து மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
தடயங்களை அழிப்பதே
இந்துத்துவம் என்பது
என்ன தத்துவம்?
கொலம்பஸ் கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?
அன்றாட வாக்குப்பெட்டி ஒன்று
மனிதனின் மதத்துக்கு வைக்க வேண்டியுள்ளது.
சந்தர்ப்பத்தை வைத்து
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
இருக்கிறது என்றோ இல்லை என்றோ
வாக்குச்சீட்டு போடுபவனே
இன்றைய மனிதன்.
கணினிகளுக்கும் பஞ்சமில்லை.
பஞ்சாங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
எதிர்ப்படும் இருட்டில் நுழைய
வெளிச்சமும் வேண்டும் அறிவும் வேண்டும்.
இரண்டும் இல்லாமல்
இவர்கள் வைத்திருக்கும்
லேப் டாப் கள் கிளிகூட
வெறும் கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் தான்.
==============================================
====================================================ருத்ரா
கடவுளை நினைப்பவனே மனிதன்.
கடவுள் இஸ் ஈக்குவல் டு மனிதன்
என்று
அத்வதம் சொன்ன பிறகு
மனிதனை நினைப்பவனே இங்கு கடவுள்.
முன்னவன் ஆத்திகன் என்றும்
பின்னவன் நாத்திகன் என்றும்
பாஷ்யங்கள்
"மயிர் பிளக்கும்" வாதங்களில்
நம் மனம் பிளந்து தருகின்றன.
பாதாதி கேசம் பிரம்மன் தான் என்று
சொல்லிய பிறகு
காலில் சூத்திரன் என்றும்
தலையில் பிரம்மன் என்றும்
அது என்ன "புதிய வர்ண மெட்டில்"
சங்கீதம்?
காலடியில் பிறந்தவருக்கு கூட
காலடி மக்கள் எனும்
சூத்திர வர்ணம் எப்படி உடன் பாடு ஆனது?
எம்மதமும் சம்மதம் என்பதே இந்து மதம்
என்று சொல்லிய பிறகு
இந்திய மண்ணில் மற்ற மதங்களின்
தடயங்களை அழிப்பதே
இந்துத்துவம் என்பது
என்ன தத்துவம்?
கொலம்பஸ் கடல் அலைகளோடு போராடி
மரணத்தையும்
மடி மீது ஏந்தி கப்பல் ஓட்டி
இந்தியாவை தேடியது
மதங்களை தாண்டிய அந்த
அந்த "பொதுமை ஒளிக்கு"த் தானே!
அந்த வெளிச்சத்தையே "போலியானது" என்று
அணைக்க
அரசியல் சாசனத்தின் ஷரத்துக்குள்
"புற்று நோய்"க்கிருமிகளை
புகுத்துவது என்ன ஜனநாயக தத்துவம்?
அன்றாட வாக்குப்பெட்டி ஒன்று
மனிதனின் மதத்துக்கு வைக்க வேண்டியுள்ளது.
சந்தர்ப்பத்தை வைத்து
வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ
இருக்கிறது என்றோ இல்லை என்றோ
வாக்குச்சீட்டு போடுபவனே
இன்றைய மனிதன்.
கணினிகளுக்கும் பஞ்சமில்லை.
பஞ்சாங்கங்களுக்கும் பஞ்சமில்லை.
எதிர்ப்படும் இருட்டில் நுழைய
வெளிச்சமும் வேண்டும் அறிவும் வேண்டும்.
இரண்டும் இல்லாமல்
இவர்கள் வைத்திருக்கும்
லேப் டாப் கள் கிளிகூட
வெறும் கிளி ஜோஸ்யக்காரன் பெட்டிகள் தான்.
==============================================
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
மெய்யா?பொய்யா?
================================================ருத்ரா
நிலவைச் சொன்னார்கள்
உன் நிறம் காட்ட.
ஆம் உன் கூந்தல் அடர்ந்த கருப்பு
என தெரிந்து கொண்டேன்.
அன்று அமாவாசை அல்லவா!
கடலைக் காட்டி
உன் மன ஆழம்
பார்த்துக்கொள் என்றார்கள்.
கரையில் கிடந்த கிளிஞ்சல்கள் கூட
வாய் திறந்து எதுவும்
காட்டவில்லையே.
பூவைக்காட்டி
காத்திரு என்றார்கள்
பட்டாம்பூச்சி சிறகுகளில்
இமை பட படக்க
பார்வை வீசுவாய் என்றார்கள்.
பூச்சி தான் வந்தது
வண்ணம் இல்லை
அவள் எண்ணம் இல்லை.
பூ முழுதும் சஹாரா ஆனது.
வானம் காட்டி
எழுத்துகள் கூட்டிச்சொன்னார்கள்.
நட்சத்திரம் ஒவ்வொன்றும்
நீ எழுதிய
காதல் கடிதமாம்.
இரவு முழுதும்
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்தேன்.
ஹப்பிள் டெலஸ்கோப்
உரித்துக் காட்டிய
"ஆண்ட்ரோமிடா" நெபுலா போல
அகலமாய்
அவள் வியப்பைக்காட்டினாள்
என்னைப் புரிந்து கொள்ள
இப்படி ஒரு
விண்ணைத்தாண்டியா வரவேண்டும்?
அன்று நான்
ஒரு மெல்லிய முறுவல் கோடு
வீசியதில் இன்னுமா
நீ மெய்சிலிர்க்கவில்லை?
என்ன செய்வது?
காதல் என்பது
மெய்யா? பொய்யா?
=========================================
================================================ருத்ரா
நிலவைச் சொன்னார்கள்
உன் நிறம் காட்ட.
ஆம் உன் கூந்தல் அடர்ந்த கருப்பு
என தெரிந்து கொண்டேன்.
அன்று அமாவாசை அல்லவா!
கடலைக் காட்டி
உன் மன ஆழம்
பார்த்துக்கொள் என்றார்கள்.
கரையில் கிடந்த கிளிஞ்சல்கள் கூட
வாய் திறந்து எதுவும்
காட்டவில்லையே.
பூவைக்காட்டி
காத்திரு என்றார்கள்
பட்டாம்பூச்சி சிறகுகளில்
இமை பட படக்க
பார்வை வீசுவாய் என்றார்கள்.
பூச்சி தான் வந்தது
வண்ணம் இல்லை
அவள் எண்ணம் இல்லை.
பூ முழுதும் சஹாரா ஆனது.
வானம் காட்டி
எழுத்துகள் கூட்டிச்சொன்னார்கள்.
நட்சத்திரம் ஒவ்வொன்றும்
நீ எழுதிய
காதல் கடிதமாம்.
இரவு முழுதும்
மொட்டை மாடியில்
மல்லாந்து கிடந்தேன்.
ஹப்பிள் டெலஸ்கோப்
உரித்துக் காட்டிய
"ஆண்ட்ரோமிடா" நெபுலா போல
அகலமாய்
அவள் வியப்பைக்காட்டினாள்
என்னைப் புரிந்து கொள்ள
இப்படி ஒரு
விண்ணைத்தாண்டியா வரவேண்டும்?
அன்று நான்
ஒரு மெல்லிய முறுவல் கோடு
வீசியதில் இன்னுமா
நீ மெய்சிலிர்க்கவில்லை?
என்ன செய்வது?
காதல் என்பது
மெய்யா? பொய்யா?
=========================================
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கோடுலு
================================ருத்ரா
கோடுலு
"கோபுலு"வின் அச்சுப்பிழை அல்ல.
அச்சுத்தொழில் பிழைத்ததே
அவர் கோடுகளில் தான்.
கோபுலு எனும்
பென்சில் பிரம்மா
படைக்காத காகித கர்ப்பமா?
கோடுகள் போட்டு
வாழவேண்டும் என்று சொன்ன
வாழ்க்கையின் வேதங்களையே
புள்ளிகள் ஆக்கி கோடுகள் ஆக்கி
சுழித்து சுழித்து சுநாமி ஆக்கியவர்.
அம்பதுகளில்
குடும்பத்தின் இதயங்களை
நாவல்கள் ஆக்கிய
இலக்கிய மேதை
லெட்சுமியின் எழுத்துக்கள்
இருமினாலும் தும்மினாலும்
அவை துடிக்கும்
கோடுகளின் காடுகளின்
ஆரண்ய காண்டத்து அற்புத சிற்பி இவர்.
பத்திரிகைகளின்
கதை நிகழ்ச்சிகளின்
எழுத்துப்பிழியல்களில்
இவர் தூரிகையே
இரத்தமும் சதையும்
அப்பித்தந்தது.
கொத்த மங்கலம் சுப்பு
எழுத்தில் தந்ததை
இவர்
எழுந்து நிற்க செய்தார்.
அதில் அவர் காட்டிய
இசை நரம்பையே
புடைக்கச்செய்தது
"சண்முக சுந்தரத்தின்" நாயனம் மூலம்
நடிகர் திலகம்.
இது போல்
எத்தனை எத்தனை
பகீரதத் தவங்கள்
உருவங்கள் காட்டின.
நாவலின் இமயம்
தி.ஜானகிராமன்
கும்ப கோணத்தையும்
தியாக ஐயரையும்
உயிர்த்து உயிர்த்துக்காட்டியதெல்லாம்
இவர் தூரிகை விட்ட
மூச்சுகள் அல்லவா!
அரசியல் கார்ட்டூன்களில்
அவரது கூரிய எழில் மிக்க நோக்கு
அற்புதமானது.
மனிதரில் மாணிக்கமான
பண்டிட் நேருவின்
கூர்மையான மூக்கும்
கோட்டில் "புன்னகைக்கும்"
ரோஜாப்பூவும்
உலக சரித்திரத்தின்
சுடரேந்தி நிற்பதில்
இவர் கோடுகளே
அந்த "அரசியல் நடுநிலைமையின்"
பூமத்திய ரேகையை
பூமிக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
கடவுள் நினைத்தார்.
இது வரை நாம் படைத்ததை
பிள்ளையார் பிடிக்க
குரங்காய் முடிந்த கதை என்று
சொல்லுகிறார்களே.
மனிதனை மனிதனாகவே
உரு பிடித்துக்காட்டும்
அந்த புதிய பிரம்மாவை
நம் பக்கத்தில் வைத்துக்கொள்ளுவோம்
என்று பேராசை கொண்டார்.
அதனால்
நாம் இழந்தோம்
இந்த
"மனித ஜியாமெட்ரி"யின் யூக்ளிட்டை"
=========================================
================================ருத்ரா
கோடுலு
"கோபுலு"வின் அச்சுப்பிழை அல்ல.
அச்சுத்தொழில் பிழைத்ததே
அவர் கோடுகளில் தான்.
கோபுலு எனும்
பென்சில் பிரம்மா
படைக்காத காகித கர்ப்பமா?
கோடுகள் போட்டு
வாழவேண்டும் என்று சொன்ன
வாழ்க்கையின் வேதங்களையே
புள்ளிகள் ஆக்கி கோடுகள் ஆக்கி
சுழித்து சுழித்து சுநாமி ஆக்கியவர்.
அம்பதுகளில்
குடும்பத்தின் இதயங்களை
நாவல்கள் ஆக்கிய
இலக்கிய மேதை
லெட்சுமியின் எழுத்துக்கள்
இருமினாலும் தும்மினாலும்
அவை துடிக்கும்
கோடுகளின் காடுகளின்
ஆரண்ய காண்டத்து அற்புத சிற்பி இவர்.
பத்திரிகைகளின்
கதை நிகழ்ச்சிகளின்
எழுத்துப்பிழியல்களில்
இவர் தூரிகையே
இரத்தமும் சதையும்
அப்பித்தந்தது.
கொத்த மங்கலம் சுப்பு
எழுத்தில் தந்ததை
இவர்
எழுந்து நிற்க செய்தார்.
அதில் அவர் காட்டிய
இசை நரம்பையே
புடைக்கச்செய்தது
"சண்முக சுந்தரத்தின்" நாயனம் மூலம்
நடிகர் திலகம்.
இது போல்
எத்தனை எத்தனை
பகீரதத் தவங்கள்
உருவங்கள் காட்டின.
நாவலின் இமயம்
தி.ஜானகிராமன்
கும்ப கோணத்தையும்
தியாக ஐயரையும்
உயிர்த்து உயிர்த்துக்காட்டியதெல்லாம்
இவர் தூரிகை விட்ட
மூச்சுகள் அல்லவா!
அரசியல் கார்ட்டூன்களில்
அவரது கூரிய எழில் மிக்க நோக்கு
அற்புதமானது.
மனிதரில் மாணிக்கமான
பண்டிட் நேருவின்
கூர்மையான மூக்கும்
கோட்டில் "புன்னகைக்கும்"
ரோஜாப்பூவும்
உலக சரித்திரத்தின்
சுடரேந்தி நிற்பதில்
இவர் கோடுகளே
அந்த "அரசியல் நடுநிலைமையின்"
பூமத்திய ரேகையை
பூமிக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.
கடவுள் நினைத்தார்.
இது வரை நாம் படைத்ததை
பிள்ளையார் பிடிக்க
குரங்காய் முடிந்த கதை என்று
சொல்லுகிறார்களே.
மனிதனை மனிதனாகவே
உரு பிடித்துக்காட்டும்
அந்த புதிய பிரம்மாவை
நம் பக்கத்தில் வைத்துக்கொள்ளுவோம்
என்று பேராசை கொண்டார்.
அதனால்
நாம் இழந்தோம்
இந்த
"மனித ஜியாமெட்ரி"யின் யூக்ளிட்டை"
=========================================
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
கர்ப்பம் தரித்தால் மண்ணைத் தின்னு.
பூமியே உயிர்களைத்தின்றா
உன் "பூகர்ப்பம்"?
நேபாளம்
பூமியே உயிர்களைத்தின்றா
உன் "பூகர்ப்பம்"?
நேபாளம்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
பூச்சிகொல்லி தான்
கண்டு பிடித்தோம்.
விவசாயி செத்தது எப்படி?
டில்லி
கண்டு பிடித்தோம்.
விவசாயி செத்தது எப்படி?
டில்லி
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
அம்பைக் கொன்று
கூறு போட்டார்கள்.
வில்லை பாதுகாக்க.
செம்மரம்
கூறு போட்டார்கள்.
வில்லை பாதுகாக்க.
செம்மரம்
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|