புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_m10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10 
20 Posts - 65%
heezulia
ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_m10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_m10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10 
62 Posts - 63%
heezulia
ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_m10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_m10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_m10ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரமணியின் சிறுகதைகள்: ஏட்டுச் சுரைக்காய்


   
   
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Fri Jul 17, 2015 9:28 am

'இலக்கிய வேல்' ஜூலை 2015 இதழில் வெளிவந்துள்ள என் சிறுகதை கீழே...
அன்பர்கள் படித்துக் கருத்துச் சொல்லவும்.

ஏட்டுச் சுரைக்காய்!
சிறுகதை
ரமணி (20/06/2015)

அறைக் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

’ஞாயித்துக் கிழமை கூட நிம்மதியா இருக்க விடமாட்டாங்க, சே!’ என்று அலுத்துக்கொண்டேன். "யாரு?"

பதிலாக மீண்டும் கதவைத் தட்டும் ஒலிதான் கேட்டது.

திறந்து பார்த்தால் வாசலில் தாணாக்காரர் ஒருவர்.

"நீங்கதானே எழுத்தாளர் ஏகலைவன்?"

"ஆமாம், ஏன்?"

"இன்ஸ்பெக்டர் ஐயா உங்களைக் கையோட கூட்டியாரச் சொன்னார்."

"என்ன விஷயம்?"

"தெரியாது."

"ஏங்க, ஞாயிற்றுக் கிழமை காலைல பதினொரு மணிக்கு வந்து உடனே வான்னா எப்படி வரமுடியும்? இப்பதான் எழுந்து பல்விளக்கினேன். இன்னும் காப்பி கூட சாப்பிடலை!"

"அதெல்லாம் எனக்குத் தெரியாது சார்! இன்ஸ்பெக்டர் சொன்னா செய்ய வேண்டியது தானே என் கடமை?"

"சரி, உங்க பேரென்ன? உங்க அடையாளம் காட்டுங்க?"

"என்ன சார் உங்க கதைல வர்றாப்பல கேக்கறீங்க? என் பேர் ஏழுமலை. அடையாளம் என் சட்டைல இருக்கு பார்க்கலை?"

என் கதைகளைப் பற்றி இவர் பேசியதில் அவரிடம் கொஞ்சம் தோழமை தென்பட்டது.

"என் கதைலாம் நீங்க படிப்பீங்களா? எப்படி யிருக்கு?"

"அதான் நாலஞ்சு பத்திரிகைல வாராவாரம் மாசாமாசம் சிறுகதைன்னும் தொடர்கதைன்னும் வருதே? இதைத் தவிர மாத நாவல். வீட்ல படிப்பாங்க. நானும் உங்க துப்பறியும் கதைகள்லாம் படிப்பேன். எங்க இன்ஸ்பெக்டர் அநேகமா எல்லாக் கதைகளும் படிச்சிருக்கார். அடிக்கடி உங்களைத் தாறுமாறாத் திட்டுவார்!"

"ஏன்? உங்க இன்ஸ்பெக்டர் பேர் என்ன?"

"அதான் அவரைப் பாக்கப் போறீங்கில்ல? நேர்லயே கேட்டுக்கங்க. உங்க கதை பத்தி அவரே சொல்வார்."

"என்னய்யா புதிர் போடறீங்க? வந்த விஷயம் சொல்லுங்க?"

"அதெல்லாம் தெரியாது சார்! எதுவும் சொல்லாம உங்களக் கூட்டியாறச் சொன்னார் இன்ஸ்பெக்டர். நீங்க வாங்க சட்டுனு..."

முண்டா பனியனை உள்ளே தள்ளிப் பேண்ட் அணிந்துகொண்டு மேலே ஒரு அரைக்கைச் சட்டையை மாட்டிக்கொண்டு என் பேனா, பர்ஸ், செல்ஃபோன், வாட்ச், ஜோல்னாப்பை சகிதம் அறையில் இருந்து மாடிப்படி இறங்கி அவருடன் கிளம்பினேன்.

"பக்கம் தான், நடந்தே போயிடலாம்." சைக்கிளைத் தள்ளிக்கொண்டே தாணாக்காரர் நடக்கக் கூடவே நடந்தேன்.

"உங்க காவல் நிலையத்துக்கா போறோம்?"

"இல்லை, இன்ஸ்பெக்டர் ஐயா ரூமுக்கு. போற வழியில ஹோட்டல் ஆர்யபவன்ல எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு."

"நல்லதாப் போச்சு! நானும் அங்க என் காலைக் காப்பிய சாப்டுக்கறேன். அப்புறம் மதியானம் ஒரு மணிக்கு அங்க மீல்ஸ்க்கு வருவேன்."

ஆர்யபவனில் அவருக்கும் ஒரு காப்பி வாங்கிக் கொடுத்து, என்னைக் கூப்பிட்டு அனுப்பியது அவர்கள் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இல்லை என்றும், நேற்று சென்னையில் இருந்து ஒரு கேஸ் விஷயமாக வந்துள்ள ஒரு காவல்துறை ஆய்வாளர் என்றும் தெரிந்துகொண்டேன். எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் அந்த டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் பெயரோ மற்ற விவரங்களோ சொல்ல மறுத்துவிட்டார்.

என் கதைகளைப் படிக்கும் சென்னைக் காவல்துறை ஆய்வாளர் யார்? ஏன் அவர் என்னைத் திட்டவேண்டும்? நேரில் காணவும் வரச்சொல்வது ஏன்? ஏதேனும் வில்லங்கத்தில் மாட்டிக் கொண்டேனோ என்னும் அச்சமும் எதுவானாலும் பார்த்துக்கொள்ளலாம் என்னும் சமாதானமும் ஒரே சமயத்தில் என்னுள் எழுந்தது. தாணாக்காரர் ஆர்யபவனில் வாங்கிய பார்சலில் எழுந்த பிரியாணி வாசனை வேறு பசியைக் கிளப்பியது.

*** *** ***

கோமதி லாட்ஜ்-இல் மாடிப் படியேறி இரண்டாம் மாடியில் நுழைந்தோம். தாழ்வாரத்தில் இரண்டு அறைகளைக் கடந்ததும் தாணாக்காரர் மூன்றாம் அறைக் கதவை ஒரு சமிக்ஞை ஒழுங்கில் தட்டக் கதவைத் திறந்துகொண்டு லுங்கி-முண்டா பனியனில் நின்றது உயரமான, உடல்-வலிவுள்ள, என் வயதொத்த ஓர் உருவம்.

"இவர்தான் எழுத்தாளர் ஏகலைவனா?" என்னை மேலும்-கீழும் பார்த்தார் அந்த டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர். "உள்ளே வாரும். உட்காரும்."

தாணாக்காரர் தந்த பார்சலை வாங்கிக்கொண்டு அவருக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டு என்னை நோக்கித் திரும்பினார் இன்ஸ்பெக்டர். "உங்க கதைகள்ல எங்க போலீஸ் டிபார்மென்ட் பற்றித் தாறுமாறா எழுதறத்துக்கும் ஒரு வரம்பு இருக்கணுமில்ல?"

"அப்படி என்ன எழுதிட்டேன் நான்?"

"என்னவோ உங்க பிரைவேட் டிடெக்டிவ் அருண்தான் ரொம்ப புத்திசாலி மாதிரியும் அவருக்கு உதவி செய்யற எங்க போலீஸ் இன்ஸ்பெக்டர்லாம் மாங்கா மடையன்கள் மாதிரியும் எழுதறீங்களே? உங்க கதைகள்ல நீர் போடற குற்றம் அல்லது கொலை முடிச்சை எங்க ஆளுங்களுக்கு அவிழ்க்கத் தெரியாதுங்கறது உங்க எண்ணமா? எங்க போலீஸ்துறை குற்ற ஆய்வாளர் ஒருவரோட நீர் கூடவே இருந்து நடைமுறை அனுபவமா ஏதாவது துப்பு துலக்கியிருக்கிறீரா? நான் உங்க எல்லாக் குற்றவியல் கதைகளையும் நாவல்களையும் படிச்சிருக்கேன். நீர் போடற முடிச்சும் அதை அந்த அருண் அவிழ்க்கிற விதமும் நல்லாத்தான் இருக்கு, இல்லேங்கல. வணிகம் சார்ந்த பத்திரிகை, பதிப்பகங்களுக்கு எழுதற போது, என்னதான் எங்க போலீஸ் இமேஜ் மக்கள் மத்தியில மங்கியிருந்தாலும் எங்க துறைகள்ல இருக்கற நல்ல விஷயங்களையும் திறமைகளையும் ஹைலைட் பண்றது உங்க மாதிரி புகழ்பெற்ற ஒரு எழுத்தாளருக்குப் பொறுப்பு இல்லயா? எங்க டிபார்ட்மென்ட் இமேஜை கெடுதுன்னா அதுக்கு மூல காரணமான அரசியல்வாதிகளைப் பத்தி எழுத தைரியம் இருக்கா உமக்கு?"

எண்ணையில் விழுந்த வடகமாகப் பொரிந்து தள்ளிய இன்ஸ்பெக்டரின் முகபாவங்களைக் கண்கொட்டாமல் பார்த்தேன். சட்டென்று என்னுள் பொறி தட்டியது.

"டேய், ராஜேந்திரா!" என்றேன். "எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப் பார்த்து! எப்படீடா இவ்வளவு உயரமானே? எப்ப இன்ஸ்பெக்டர் ஆனே? வத்தலக்குண்டு ஸ்கூல் படிப்பு முடிஞ்சதும் நான் திருச்சில காலேஜ் படிக்கப் போனேன். நீ மிலிட்டரில சேர்ந்துட்டதா இல்ல கேள்விப் பட்டேன்?"

"என்னய்யா வாடா-போடான்னு ஆரம்பிச்சுட்டே? என்ன உளர்றே?"

"ராஜேந்திரா, வாணாம்! எனக்கு முதுகைக் காட்டி நீ உங்க தாணாக்காரட்ட பேசினபோதே உன் பின் கழுத்தில் இருந்த தழும்பை வெச்சுக் கண்டுபிடிச்சுட்டேன். அடுத்து நீ படபடன்னு பேசினபோது உன் குரல் காட்டிக் கொடுத்திருச்சு! சொல்லு, ராஜேந்திரா, எப்ப போலீஸ் வேலைல சேர்ந்தே? என்ன விஷயமா சிவகங்கை வந்திருக்கே?"

"அடப்பாவி, கண்டுபிடிச்சிட்டியே! துப்புத் துலக்கறதில எனக்கு டிபார்ட்மென்ட்ல நல்ல பேர்னா, நீ என்னை விடப் பெரிய ஆளா இருப்பே போலிருக்கே? வா, முதல்ல சாப்டுட்டு அப்புறம் பேசலாம். உனக்கும் எனக்கும் பிடிச்ச சேவையும் விஜிடபிள் பிரியாணியும் கான்ஸ்டபிள் மூலமா வாங்கி வெச்சிருக்கேன். நம்ம ரெண்டுபேரும் ஸ்கூல் ஃபைனல் படிச்ச போது வத்தலக்குண்டு வெங்கடேஷ் கபேல அடிக்கடி சாப்பிடுவோம், ஞாபகம் இருக்கா?"

"அதெல்லாம் ஒரு காலம் ராஜேந்திரா!" என்றேன், பிரியாணிப் பொட்டலத்தைப் பிரித்து ஒரு கவளம் வாயில் இட்டபடி.

"அதுசரி, சீனிவாசன்--நண்பர்கள் மத்தியில சீனு--உன் பேர் இல்லையா? அப்புறம் எப்படி ஏகலைவன்னு புனைப்பெயர் செலெக்ட் பண்ணினே?"

"நாட்டியம், நடிப்பு, ஓவியம் மாதிரி நுண்கலைக்கு ஒரு தனிப்பட்டவரோ நிறுவனமோ குருவாக இருப்பது வழக்கம் இல்லையா? ஒரு எழுத்தாளருக்கு அப்படி ஒரு குரு கிடையாது. யாரும் இப்படித்தான் எழுதனும்ணு சொல்லித்தர முடியாது. ஒரு எழுத்தாளன் தன் துறை மற்ற துறைகளில் உள்ள கலைஞர்களை நோக்கி ஆராய்ந்து ஏகலைவன் மாதிரி தானே உருவாகிறான். அதனால்தான் இந்தப் பெயர்."

அரட்டை அடித்துக்கொண்டே ஒருமணி நேரம் சாப்பிட்டோம். ராஜேந்திரனுக்கு மிலிட்டரியில் வேலை கிடைக்காததால், அவன் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றதும் மனுப்போட்டதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டு, சீக்கிரமே இன்ஸ்பெக்டர் பிரமோஷன் பெற்று, அவனுக்கு வாய்த்த கேஸ்களில் திறமையாகத் துப்புத் துலக்கியதால்  ஒரு டிடெக்டிவ் இன்ஸ்பெக்டராகப் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் டிவிஷனுக்கு மாற்றலாகி வந்ததாகச் சொன்னான். பரஸ்பர குடும்பநலன் விசாரிப்புகளுக்குப் பிறகு நான் விடைபெற்றுக் கிளம்ப முயன்றபோது என்னைத் தடுத்து நிறுத்தினான்.

"ஐயா எங்க கிளம்பிட்டீரு? உங்க ஏட்டுச் சுரைக்காயை வெச்சுக் கறிபண்ண முடியுமான்னு பார்க்கவேண்டாம்? சமீபத்தில திருப்பூர் மில் ஓனர் ஒருத்தர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி வந்தது தெரியுமா?"

"தெரியும்", என்றேன். "அதன் பின்னணியில ஒரு பழம் தின்னு கொட்டை போட்ட அரசியல்வாதி இருப்பதா கிசுகிசு கூடப் பார்த்தேன்."

"அதேதான். அந்தக் கொலையைச் செஞ்சவன் இந்த ஊர்ல தங்கி இருக்கறதா எங்களுக்கு இன்டல். இன்னொரு ஹிட்டுக்காக வந்திருக்கான்னு எங்களுக்கு சந்தேகம். அவனும் அவன் கூட்டாளி ஒருத்தனும் நாட்டுத் துப்பாக்கியோட அலையறதா செய்தி. இன்னிக்கு நைட்டு என்னோட சேர்ந்து துப்பு துலக்குகிறீர். உம்ம மூளை எனக்கு உதவும். முதல்ல அவன் நடமாட்டம் இருக்குன்னு உறுதிப்படுத்திப்போம். அதுக்கப்பறம் ஒரு போலீஸ் படையை வரச்சொல்லி ரெண்டு பேரையும் பிடிப்போம். என்ன உன் முகத்தில ஈயாடலை?" என்றான்.

எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!

*** *** ***

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jul 18, 2015 3:51 am

கதை நன்றாக உள்ளது அய்யா . நீங்கள் கதை நடக்கும் சுற்றுபுரத்தை நன்றாக வர்ணித்ததும் எனக்கு பிடித்துள்ளது .வாழ்த்துக்கள் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக