புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
30 Posts - 50%
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
72 Posts - 57%
heezulia
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_m10மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:48 am

மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Tasmac%20protest%201
கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார்.

கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா என்று முழக்கங்கள் எழுப்பியவாறு டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினர்.காவல்துறை அனுமதி மறுத்து அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாணவர்களும் விடாமல் போராடினர்.ஒரு கட்டத்தில் டாஸ்மாக் கடைமீது கல்லெறிந்து அடித்து நொறுக்கினர்.அப்போது நிகழ்ந்த தள்ளுமுள்ளுவில் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்ட மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

விருத்தாசலம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு முன்பாகத் திரண்ட இளைஞர்கள் நெடுநாட்களாக பல்வேறு பிரச்சனைகள் எழ காரணமாக இருந்த,தமிழக அரசு நடத்திவரும் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கியுள்ளனர்.இன்னும் பல இடங்களில் பொதுமக்கள்,வயது வித்தியாசம் இன்றி தாமாகவே முன்வந்து டாஸ்மாக் கடைகளை முற்றுகையிட்டு மூடவலியுறுத்தி `மதுவிலக்கு` என்ற சமுதாய ஆரோக்கிய தீபத்தை ஏற்ற கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

தமிழகத்தில் மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி போராட்டங்கள் நடப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது.மதுவிலக்கை வலியுறுத்தி பெரியார் தனது தோட்டத்தில் இருந்த நூற்றுக் கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். அவர் காலம் தொடங்கி காங்கிரஸ்,திமுக,அதிமுக என்று கட்சிகள் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செலுத்திய போதும் மதுவிலக்குக் கொள்கை மட்டும் ஆளும் ஆண்ட கட்சிகளுக்கு வேப்பங்காயாக கசக்கவே செய்தது;கசந்தும் வருகிறது. இதில் ஆட்சி அதிகாரம் வகிப்போரே மதுபானம் தயாரிக்கும் ஆலைகளை நடத்தி வருவதும் மதுபான விடுதிகள் பார்கள் நடத்திவருவதும் யதார்த்தம்.

கடந்த 31ஆம் தேதி மதுவிலக்கு கொண்டுவர வலியுறுத்தி மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக இறந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக பல நூறு அடிக்கும் அதிகமான உயரம் கொண்ட செல்போன் டவரில் நின்றபடி போராடிய அவர்,போலீசாரின் தவறான அணுகுமுறையால்,அரசின் மெத்தனத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ரத்த வாந்தி எடுத்த நிலையில் பிணமானார். ஒட்டுமொத்த தமிழகமும் காட்டுத் தீயென பரவிய காந்தியவாதி சசிபெருமாள் மரணச் செய்தி அரசியல் இயக்கங்களை ஒன்று படுத்தி,கடந்த 4 நாட்களாக போராட்டங்களைத் தீவிரப்படுத்தி இருக்கிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவரின் தாயாரோடும் மதுவிலக்கு போராட்டத்தை சொந்த ஊரான கலிங்கப்பட்டியிலிருந்து முன்னெடுத்து இருக்கிறார்.நேற்று(ஞாயிறு)அங்கு நடந்த போரட்டத்தில் போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி போராட்டக்காரர்களைக் கலைத்துள்ளனர்.இது மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாறி இருப்பதை இன்று(திங்கள்) நடந்து வரும் போராட்ட சம்பவங்கள் காட்டுகின்றன.

காந்தியவாதி சசிபெருமாளின் சொந்த ஊரில் அவரின் வாரிசுகளும்,அரசியல் இயக்கங்களும் அவர் வலியுறுத்திய மதுவிலக்கு போராட்ட தீபத்தை கையிலெடுத்துள்ளனர்.போலீசாரின் மிரட்டல்களுக்கும் கைது கொடுமைகளுக்கும் அஞ்சாமல் தியாகி சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளிச் செல்லும் சிறுமியும் சிறைக்குள் தள்ளப்பட்டு இருக்கிறார். வேலூர்,சேலம்,காஞ்சிபுரம் என்று பல்வேறு பகுதிகளில் இருக்கும் செல்போன் கோபுரங்களில் ஏறி இளைஞர்கள் போராடி வருகிறார்கள்.அவர்களிடம் மிரட்டல் விடுக்கும் காவல்துறை சமாதானம் பேசுவது போல பேசி கீழிறங்க வைத்து கைது செய்து வருகிறார்கள் தமிழகம் முழுவதும் உள்ள பல ஆயிரம் செல்போன் டவர்கள் தற்போது போலீசாரின் காவலில் இருக்கின்றன.

தற்போது மதுவிலக்கு போராட்டம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பரவியுள்ளது.சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அதனைத் தொடங்கி வைத்துள்ளனர்.மதுரையில் மதிமுக பொதுச் செயலாளர் தமிழக கல்லூரி மாணவர்கள் கையில்தான் மதுவிலக்கு உள்ளது.அதனால் 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டங்களில் மாணவர்கள் பங்காற்றியது போல இப்போது மதுவிலக்கிலும் பங்கெடுக்கவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். நாளை(செவ்வாய்) தமிழகம் முழுவதும் மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக,தேமுதிக, காங்கிரஸ், வணிகர் சங்கங்கள் மற்றும் பால் நுகர்வோர் சங்கம் ஆகியவை இணைந்து மதுவிலக்கு கோரும் பந்த் நடத்த உள்ளனர். இதற்கு,பாஜகவும் திமுகவும் ஆதரவை வழங்கியுள்ளன.

35 ஆண்டுகளாக மது ஒழிப்புக்காகப் போராடி வரும் டாக்டர் ராமதாஸ்,பாமக இதில் பங்கேற்காது என்று கூறிவிட்டார். தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்காது என்றும் ஆனால் மதுவிலக்குக் கொள்கையை மதிக்கிறோம் என்றும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். பந்த் மூலம் பெருமளவில் மதுவிலக்கு ஆதரவை திரட்ட இந்தக் கட்சிகள் முடிவு செய்து பெருமளவில் திட்டமிட்டுள்ளன.

வரும் 6 ஆம் தேதி தேமுதிக சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறவுள்ளது.அடுத்து வரும் 10 ஆம் தேதி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த கோரி திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.தமிழகம் முழுக்க மதுவிலக்கு கோரிக்கை வலிமையடைந்துள்ளது.ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:49 am

உண்மையில் மதுவிலக்கு சாத்தியம்தானா?

மதுவின் கொடுமை குறித்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் தனது நூலில் `கள்ளுண்ணாமை` என்று தனி அதிகாரம் எழுதியுள்ளார்.

அதில், " துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்" என்று கூறியிருக்கிறார். கள் குடிப்பது அதாவது மது அருந்துவது நஞ்சு உண்பது என்று கூறியிருக்கிறார்.இது தற்போதைய டாஸ்மாக் மதுவகைகளுக்கு சாலப்பொருந்தும்.கல்லீரல்,சிறுநீரக பாதிப்பு என்று பல்வேறு நோய்களைக் கொண்டுவருவது மதுவகைகளால்தான் என்று மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார்கள். மேலும் குடிப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்பு அளவிட முடியாததாகும். இதனாலயே சமூக பெரியவர்களும் அரசியல் கட்சியினரும் மதுவிலக்கை வலியுறுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் ஆளும் அரசு கொள்கை முடிவு எடுத்தால் பூரண மதுவிலக்கு சாத்தியமே என்றாலும் அதனை நடைமுறைப்படுத்த அரசு தரப்பு தீவிர தயக்கம் காட்டிவருகிறது.அதற்கு முக்கிய காரணமாக இருப்பது திமுக அதிமுக ஆகிய இருகட்சிகள். இரண்டிலும் சாராய ஆலை அதிபர்கள் முக்கிய அதிகார மையமாக இருந்து வருகிறார்கள்.

எலைட்,எஸ்.என்.ஜே.,கால்ஸ்,இம்பெரியல்,மிடாஸ்,ஈகிள் என்று ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடிகளை வாரிக் குவிக்கும் மதுபான ஆலைகள் திமுக அதிமுக கட்சியினரின் முக்கிய பிரமுகர்களுக்கு சொந்தமானவையே.இதுவே கொள்கை முடிவெடுத்து மதுவிலக்கைக் கொண்டுவர வர பெரும் தடையாக இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

தமிழகம் அண்மைக்காலமாக பெரிய அளவிலான போராட்டங்களை சந்திக்கவில்லை.கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போரில் தமிழர்கள் பெருமளவில் கொல்லப்பட்ட நிகழ்வைக் கண்டித்து தமிழக அளவில் மாணவர்கள் தரப்பில் எழுந்த தன் எழுச்சியான போராட்டத்தைப் போல தற்போது மீண்டும் தமிழகத்தில் மாணவர் இயக்கங்கள் மதுவிலக்குப் போராட்டத்தில் தாமாகவே முன்வந்து இறங்கியுள்ளன. இது மதுவிலக்குப் போரட்டத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த மாதம் திருச்சியில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கினர்.அதே போல அதற்கு முன்பாக புதுச்சேரியில் ஜனநாயக மாதர் சங்கத்தினர் மதுக்கடை ஒன்றை அடித்து நொறுக்கினர். தற்போது கல்லூரி மாணவர்கள் போராட்டம் தொடங்கியுள்ளது.

டாஸ்மாக் போராட்டம் இன்னும் தீவிரமாக வண்ணமும் மதுவிலக்கை அமல்படுத்தும் வகையிலும் தமிழக அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதுதான் இப்போதைய தேவையும் தீர்வும்.

முடிவு அரசின் கையில்... .

விகடன்



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:50 am

சசிபெருமாளால் மூடப்பட்ட மதுக்கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு: விஜயதாரணி எம்எல்ஏ கைது!

கன்னியாகுமரி: சசிபெருமாள் போராடியதன் மூலம் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவித்த விஜயதாரணி எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள உண்ணாமலைக் கடையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று இயங்கி வந்தது. இந்த கடையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் பல வருடங்களாக போராடி வந்தது.

இந்நிலையில், கடந்த 31ஆம் தேதி இந்த மதுபானக் கடையை மூடக்கோரி காந்தியவாதி சசிபெருமாள் அங்குள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அவர் திடீரென மரணம் அடைந்தார்.

இதையடுத்து, அந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடப்பட்டது. மேலும், கன்னியாகுமரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுப் பெற்று வருகிறது.

இந்நிலையில், உண்ணாமலைக்கடையில் இயங்கி வந்த மதுபானக் கடை பள்ளியாடிக்கு மாற்றப்பட்டது. பள்ளியாடியில் இந்த டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி தலைமையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, காவல்துறையினர் விஜயதாரணி உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:51 am

கோவையில் சூறையாடப்பட்ட மதுபான கடை!

கோவை: கோவையில் டாஸ்மாக் மதுபானக் கடையை சூறையாடியதாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை, மேட்டுப்பாளையம் ரோடு புதிய பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை (கடை எண் 1565) செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் விறனையாளராக காசிநாதன் என்பவர் பணியாற்றி வருகிறார். இன்று மாலை 5.30 மணியளவில் இந்த கடைக்கு வந்த 9 பேர் கொண்ட கும்பல், மது விற்பனைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், துண்டு பிரசுரங்களையும் அவர்கள் விநியோகம் செய்தனர். அதில், 'குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும். கெடு விதிப்போம் ஆகஸ்ட் 31' என்றும், 'குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே, தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே, மூடு கடையை. எவன் வருவான் பார்ப்போம். நம் ஊரில் இனி டாஸ்மாக் கிடையாது' என தலைப்பிட்டு மது விற்பனைக்கு எதிராக 4 பக்கம் அச்சிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து விற்பனையாளர் காசிநாதனை எச்சரித்து கடையை விட்டு வெளியேற்றிய அவர்கள், கடையை சூறையாடினர். கடையில் இருந்த சுமார் 1000 மதுபாட்டில்களை கடைக்கு வெளியே எரிந்த அவர்கள், மதுபாட்டில்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 9 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான சுமார் ஆயிரம் மதுபாட்டில்கள் சேதமடைந்தன.

கைதானவர்கள் புரட்சி கர இளைஞர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மக்கள் அதிகாரம் எனும் அமைப்பின் பெயரில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

மது விற்பனைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துவரும் நிலையில், கோவையில் நடந்த மதுபான கடை மீதான தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 12:54 am

//ஆனால் ஆளும் அரசுத் தரப்பில் கோரிக்கை நிறைவேற்றப்படுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போராட்டத்தை எப்படி நீர்த்துப் போகச் செய்யலாம் என்ற கோணத்தில் ஆலோசிக்கப்படுவதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.//


அடப்பாவிகளா, இதில் சம்பாதித்தது போதலை யா ? ........சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 12:54 am

மதுக்கடைகள் சூறை தொடர்கிறது ; முதல்வர் ஜெ., அவசர ஆலோசனை

சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி போராட்டம் வலுத்து வருகிறது. இன்று சென்னை அமைந்தகரையில் ஒரு டாஸ்மாக் கடையை கல்வீசி தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த மது பாட்டல்களை அடித்து நொறுக்கினர்.தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூடச்சொல்லி பல்வேறு அரசியல் கட்சியினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் குமரி மாவட்டத்தில் போன் டவர் மீது ஏறிய காந்தியவாதி சசிபெருமான் இறந்தார். நேற்று கலிங்கப்பட்டியில் வைகோ நடத்திய போராட்டத்தில் மதுக்கடை சூறையாடப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு மதுக்கடை முன்பு பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து கல்வீசி கடைகள் மீது தாக்குதல் நடத்தினர். மதுபாட்டல்களை அடித்து நொறுக்கினர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் இங்கு பதட்டம் நிலவி வருகிறது.

முதல்வர் அவசர ஆலோசனை: இந்நிலையில் தமிழக சட்டம் ஓழுங்கு நிலைமை குறித்து முதல்வர் ஜெ., தலைமை செயலகத்தில் அவசர ஆலோசானை நடத்தினார். அமைச்சர்கள் , டி.ஜி.பி., தலைமைசெயலர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

செல்போன் டவரில் ஏறி போராட்டம்: தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம் பகுதியில் சிலர் டவர் மீது ஏறி டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விருத்தாச்சலம் அருகே மதுக்கடை சூறை: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள காட்டுகூடலூரில் டாஸ்மாக் கடை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் டாஸ்மாக் கடையை தாக்கி உள்ளனர்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 04, 2015 12:59 am

திடீர் என்று எல்லோருக்கும் பொறுப்பு வந்து விட்டார்போல இருக்கே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:06 am

அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ள வைக்கிறது:மு.க.ஸ்டாலின்!

சென்னை: அதிமுக அரசு மதுவிலக்குப் பிரச்னையில் அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ளவைக்கிறது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த நீண்ட காலமாகப் போராடிய காந்தியவாதி சசி பெருமாளை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினரை அநியாயமாக கைது செய்து காவல்துறை தனது முரட்டுத் தனமான போக்கைக் காட்டியிருக்கிறது.

கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை மூடக் கோரி போராட்டம் நடத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ மீதும், அவர் தலைமையில் போராடிய மக்கள் மீதும் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடே நடத்தியிருக்கிறது காவல்துறை.

இன்றைய தினம் சென்னையில் கல்லூரி அருகில் உள்ள டாஸ்மாக் கடையை எதிர்த்துப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். சில மாணவிகளை பூட்ஸ் காலால் மிதித்து கைது செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அடக்குமுறைகளையும், நியாயமான கோரிக்கைக்காகப் போராடுவோரின் குரல்வளையை நெறிப்பதையும் ஜனநாயக நாட்டில் நிச்சயம் அனுமதிக்க முடியாது. காவல்துறையின் இந்த மிருகத்தனமான நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுவுக்கு எதிராக தமிழகத்தில் கிளர்ந்து எழுந்திருக்கும் மக்களின் உணர்வுகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் மதிப்பளித்துத்தான் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்தது. மாநிலத்தின் அமைதியையும், வளர்ச்சியையும் சீரழித்து விட்ட டாஸ்மாக் கடைகளின் மீது மக்கள் அந்த அளவிற்கு உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறார்கள் என்பதே வீதி வீதியாக மதுக்கடைகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் தெளிவாக்குகின்றன. ஆனால் மதுவிலக்கு விஷயத்தில் மக்கள் விரோத அ.தி.மு.க. அரசின் அராஜகம் நிறைந்த அமைதியைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

செயலிழந்த அ.தி.மு.க. அரசு, காந்தியவாதி சசிபெருமாளின் துரதிருஷ்டவசமான மரணத்திற்குப் பிறகும் கூட டாஸ்மாக் கடைகளையும், எலைட் டாஸ்மாக் கடைகளையும் திறக்க மும்முரம் காட்டுவது தமிழக மக்கள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது. மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் அ.தி.மு.க. அரசு நித்திரை மயக்கத்தில் இருக்கிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறது. பெண் முதல்வராக இருக்கும் மாநிலத்திலேயே பெண்களின் துயரங்கள் பற்றி கவலைப்படாத ஆட்சி நடக்கிறது என்பது வேதனைக்குறியது.

ஜனநாயக ரீதியாலான போராட்டங்களை அடக்க விரும்பும் இந்த அரசின் நிர்வாகம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்ட நிலையைக் காட்டுகிறது. அரசியல் சட்டப்படி மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்து விட்டு, தன்னெழுச்சியாகப் போராடும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், மக்கள் எழுப்பும் மிக முக்கியமான மதுவிலக்குப் பிரச்சினையில் அதிமுக அரசு அமைதி காப்பது கவலை கொள்ள வைக்கிறது. மதுவிலக்குக் கொள்கையில் அ.தி.மு.க. அரசு விழித்துக் கொள்ளும் முன்பு இன்னும் எத்தனை பேர் இறக்க வேண்டும்? எத்தனை குடும்பங்கள் சீரழிய வேண்டும் என்று அ.தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறது என்று புரியவில்லை.

போராட்டக்காரர்கள் மீதும் சசிபெருமாள் குடும்பத்தினர் மீதும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவ மாணவிகள் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன் மதுவிலக்குக் கொள்கை உடனே அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:08 am

போராட்டக்காரர்களுக்கு தமிழக போலீஸ் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நாளை(செவ்வாய்க்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு ம.தி.மு.க., உள்ளிட்ட சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில், நாளை மதுக்கடைகளை கட்டாயமாக மூட வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். பஸ் சேவையை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நாளை தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 04, 2015 1:11 am

அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்: விஜயகாந்த் எச்சரிக்கை

அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கின்றேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்மு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தேமுதிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால் அதிமுக அரசு அதற்கு செவிசாய்க்க மறுத்ததன் விளைவு, காந்தியவாதி சசிபெருமாள் உயிரிழப்பாகும்.

தாய்மார்களின் கண்ணீரை துடைக்கவும், இளைஞர்களைக் காக்கவும், மதுவின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்கவும், பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் நாளை நடைபெறும் முழுஅடைப்பு போராட்டத்திற்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றகோரிய பொதுமக்களின் போராட்டத்தில், காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டு, தடியடி நடத்தியதோடு மட்டுமல்லாமல், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, கலவர பூமியாக மாற்றியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீது காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளது வன்மையாக கண்டிக்கக்கூடிய செயலாகும். அரசியல் கட்சிகள் அகிம்சை முறையில் நடத்தும் போராட்டத்தைக் கூட வன்முறைக்களமாக மாற்றும் அதிமுக அரசின் போக்கு, தமிழகத்தில் பல்வேறு பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை எச்சரிக்கின்றேன்.

உடனடியாக தமிழக முதலமைச்சர் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.



மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக