புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
20 Posts - 65%
heezulia
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
62 Posts - 63%
heezulia
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_m10மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 09, 2015 1:34 am

மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! 12004709_932473550159076_3124140719316165900_n

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்திய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், சிறையில் கொடூரமான பல சித்ரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்துகள் இருப்பதால் அவர்கள் வெளியே வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

சிறையில் இருக்கும் மாணவர்களுக்காக வழக்கை நடத்திவரும் வழக்கறிஞர் மில்டனிடம் பேசினோம்.

‘‘இந்த சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 15 பேரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பைச் சாராத 2 மாணவர்களை விடுதலை செய்தனர். கைதான மாணவர்களின் சார்பில் யாராவது, ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தால், அதை வலுவிழக்கச் செய்வதற்காக இந்த முறையைப் பின்பற்றி உள்ளனர். அதன்பிறகு, இந்த மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல், நேரடியாக புழல் சிறைக்கு அனுப்ப மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதைக் கடுமையாக ஆட்சேபித்த நாங்கள், ‘போராட்டக் களத்தில் தாக்கப்பட்ட மாணவர்களை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் வைத்து போலீஸ் தாக்கியுள்ளது. அந்தத் தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பாமல் சிறைக்கு அனுப்பினால் அவர்களுடைய உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று சொன்ன பிறகுதான், மருத்துவப் பரிசோதனைக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். புழல் சிறையில் இந்த மாணவர்களை சிறைக் காவலர்கள் ஆடையைக் களைந்துவிட்டு நிற்கச் சொல்லியுள்ளனர். அதற்கு, ‘நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் அல்ல’ என்று சொன்னவுடன் விட்டுவிட்டனர். மறுநாள் ‘ரோல்கால்’ நடந்தபோது, இந்த மாணவர்களிடம் ஆடைகளைக் களையச் சொல்லியுள்ளனர். அப்போதும் மாணவர்கள் மறுப்புத் தெரிவிக்க... ஏன்? எதற்கு? என்று எந்தக் கேள்வியும் இல்லாமல் அடித்துத் துவைக்க ஆரம்பித்துவிட்டனர். அதில், இரண்டு மாணவர்களுக்கு கை எலும்புகள் உடைந்துவிட்டன.

இந்தத் தகவல் எங்களுக்குத் தெரியவந்ததும், புழல் சிறை முன்பு போராட்டம் நடத்தினோம். பிறகு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்தோம். ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதற்கிடையில், பெண்கள் சிறைக்கு விசாரணைக்குச் சென்ற உமாசங்கர் என்ற உளவுத் துறை அதிகாரி, அங்கிருந்த மாணவிகளிடம் தனியாக விசாரணை நடத்தி உள்ளார். “நீ ஜாதி இல்லை என்கிறாய்... மதம் இல்லை என்கிறாய்... ஆனால், உன் சான்றிதழில் ‘இந்து’ என்று போட்டு இருக்கிறாய்? அப்படியானால் மதம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறாயா? நீ எப்படி இந்த அமைப்புக்கு வந்தாய்? இந்த அமைப்பில் யாரையாவது காதலிக்கிறாயா? அந்த மயக்கத்தில் அமைப்புக்கு வந்துவிட்டாயா?” என்றெல்லாம் கேட்டு உளவியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார்.

இப்படியாக, சிறைக்குள் அந்த மாணவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார்கள். இனி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். அப்போது இந்த விவகாரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தெரிவிப்போம்” என்றார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மத்தியில் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன. நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், ரவிச்சந்திரபாபு ஆகியோர், ‘மதுவிலக்குக்காக டாஸ்மாக் கடை முன்பு போராட்டம் நடத்திய மாணவர்களைக் குற்றப்பின்னணி கொண்டவர்களாகக் கருதக் கூடாது; போராட்டம் நடத்துவது அரசியல் சட்டம் தரும் அடிப்படை உரிமை; அரசியல் சட்டப் பிரிவு 47-ன்படி, மது விற்பனையைத் தடைசெய்வது மாநில அரசின் கடமை; அரசியல் சட்டம் தரும் உரிமையைப் பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் கடமையைத்தான் செய்துள்ளனர்’ என்றனர். ஆனால், மதுக்கடைகளுக்கு எதிரான மற்றொரு வழக்கில் கருத்துத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், “பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் போராட்ட முறை தவறு” என்றார்.

நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கோடிகளைக் குவித்தவர்கள்; மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளுக்கு ஊழல் செய்தவர்கள் எல்லாம் வழக்கு வருவதற்கு முன்பே ஜாமீன் வாங்கிவிடுகின்றனர். ஆனால் பொதுநலத்தை நோக்கமாகக்கொண்டு போராடிய மாணவர்களை, சிறையில் அடைத்து சித்ரவதை செய்யும் நோக்கம் என்ன? இப்படிப்பட்ட போராட்டங்கள் இனிமேல் நடக்கக் கூடாது என்பதற்கான அச்சுறுத்தல் அஸ்திரமா இது?


விகடன்



மதுவை எதிர்த்தால் சிறை... சிறைக்குள் சிக்கினால் சித்ரவதை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Sep 10, 2015 1:06 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக