புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 56%
heezulia
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
23 Posts - 43%
mohamed nizamudeen
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
72 Posts - 60%
heezulia
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
44 Posts - 36%
mohamed nizamudeen
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ பூக்கள் ! தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Oct 22, 2015 5:10 pm

ஹைக்கூ பூக்கள் !

தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


நம்மொழி பதிப்பகம், 68/21, திருவள்ளுவர் தெரு, அன்பழகன் நகர், செம்பியம், சென்னை – 600 011. பேச : 98409 12010 ; மின் அஞ்சல் : kaviooviya@gmail.com
பக்கம் : 128, விலை : ரூ. 120/-

*****

நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர். பல வருடங்களாக வாழ்விடம் சென்னை என்ற போதிலும், பிறந்த ஊரான மயிலாடுதுறையை பெயரோடு இணைத்துக் கொண்டவர், இனிய நண்பர் மயிலாடுதுதுறை இளையபாரதி. இளையபாரதி என்பது பொருத்தமான, புனைப்பெயர். இலக்கிய உல்கில் தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி, உழைப்பாளி. தமிழகம், புதுவை உள்பட பரந்து விரிந்துள்ள ஹைக்கூ கவிஞர்களிடமிருந்து ஹைக்கூ கவிதைகளைப் பெற்று தொகுத்து அழகிய நூலாக வடித்து உள்ளார்.

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு, பொருத்தமான படங்கள், தரமான தாள்கள் என யாவும் மிக நேர்த்தி. நம்மொழி பதிப்பகத்திற்கு பாராட்டுக்கள். நூலாசிரியரின் சொந்தப் பதிப்பு. இந்த நூலை ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களுக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம். கவிஞர் வைரமுத்து அவர்களின் ஆசிரியரான பேராசிரியர், ஹைக்கூ ஆய்வாளர் இராம. குருநாதன், பொன்மனச் செம்மல் கார்முகிலோன் அவர்கள் சென்னையிலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களுக்கு புரவலராக இருந்து பரிசுகள் நல்கி வரும் பொன்மனம் படைத்தவர் இருவரின் அணிந்துரை மிக நன்று.


படைப்பாளி உணர்ந்த உணர்வை படிப்பாளிக்கு (வாசகருக்கு) உணர்த்தும் உன்னதம் தான் ஹைக்கூ. படைப்பாளி உணர்ந்து படைத்ததைத் தாண்டி கூடுதலாக படிப்பாளி உணர்ந்து கொள்ளும் உணர்வு ஹைக்கூ. படைத்தவருக்கு மேல் சென்று சிந்திக்க வைக்கும். ஒரு பொருள் மட்டுமல்ல, சிந்தித்தால் பல பொருள் புரிய வைக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு உண்டு. ஹைக்கூ கவிதை எழுதுவது கம்ப சூத்திரம் அன்று. இந்த நூல் படித்து முடித்தவுடன், படித்த வாசகரும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதியிட்டுக் கூற முடியும். ஹைக்கூ பற்றிய புரிதலை உண்டாக்கும் நூல். மூன்று வரி முத்தாய்ப்பான ஹைக்கூ ரசித்துப் படித்தால் ஹைக்கூ படிப்பாளியாகலாம் என்பது உண்மை.


இந்த நூலில் நான் உள்பட, மொத்தம் 58 கவிஞர்களின் ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றுள்ளன. எல்லாமே மிகச் சிறப்பாக இருந்த போதும் பதச்சோறாக ஒரு கவிஞருக்கு ஒரு ஹைக்கூ வீதம் மேற்கோள் காட்டி உள்ளேன்.


கவிஞர்புதுவைத் தமிழ்நெஞ்சன்

வளர்க்கிறோம்
தொட்டிச் செடி
வாடகை வீடு!

கவிச்சுடர் கார்முகிலோன்

அரிதாரம் இல்லை
அனுதினமும் நடிப்பு
அரசியல்வாதி!

கவிஞர் கு.அ. தமிழ்மொழி

அழைப்பிதழில்
அன்பளிப்பு தவிர்க்கவும்
சுமை உந்தில் சீர்வரிசை.

கவிஞர் சாந்தா வரதராசன்

தமிழ்ப்பானையில்
சுவைப் பத்நீர்
திருக்குறள்.

கவிஞர் ஆரிசன்

கரும்பலகை
நெற்றிக்கண் திறக்கிறது
அறிவு!

கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி

படித்து முடித்த பின்
பயமுறுத்துகிறது
கல்விக்கடன்!

கவிஞர் எஸ். சத்யவீணா

கிள்ளுவதற்காக
அழுவதில்லை
பூக்கள்!

கவிஞர் ரேவதி இளையபாரதி

மனவலிகள்
மாயமாய் போனது
மழலைச் சிரிப்பு

கவிஞர் அய்யாலு ச. புகழேந்தி

அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!

கவிஞர் ஆர். சியாமளா ரகுநாதன்

சிதைந்து போகின்றது
வாழ்க்கை
புரிதலில்லா மனங்கள்!

கவிஞர் புதுவை சுமதி

மனதில் ஓசை
இதழில் மௌனம்
நினைவுகள்!

கவிகர் ப. கண்ணன் சேகர்

விதைக்காமல்
விருட்சமானது
வதந்தி!

கவிஞர் கி. சந்திரசேகரன்

ஏழுசீர் கவிதை
ஆளுது உலகை
திருக்குறள்!

கவிஞர் முனைவர் மரியதெரசா

நீயா... நானா.. அழகு
பூக்களில் அமர்ந்து கேட்கும்
வண்ணத்துப் பூச்சிகள்!

கவிஞர் தி. கவிமனோ

திட்டினால் அபராதம்
அடித்தால் ஆயுள் தண்டனை
பயத்தோடு ஆசிரியர்

கவிஞர் கொள்ளிடம் காமராஜ்

என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!

கவிஞர் வீ. உதயக்குமாரன்

சுதந்திரமாய்
நடத்த முடிவதில்லை
சுதந்திர தின விழா!

கவிஞர் தமிழ்மதி

அலட்சியப் போக்கு
கேட்கிறது உயிர்பலி
ஆழ்துளைக் கிணறு!

கவிஞர் மியூரியல் உஷா

வாடிய பயிரைக் கண்டும்
வாடாத மனங்கள்
நதிநீர் பங்கீடு!

கவிஞர் மன்னை பாசந்தி

புறம் கூறாதே
புண்படுத்தாதே
புற்றுநோயே மேல்!

கவிஞர் திருச்சிற்றம்பலம் சுரேஷ்

தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!

கவிஞர் ஸ்ரீமதி மணவாளன்

முயற்சி செய்
வசப்படும்
வானமும் கூட!

கவிஞர் சொ. சாந்தி

பண்டிகை நாட்களில்
நவீன கொள்ளைக்காரர்கள்
அலைபேசி நிறுவனங்கள்!

கவியருவி கோவை கோகுலன்

அறியாமையின் முதிர்ச்சி
விதவிதமாய்ப் படையல்கள்
சாப்பிடாத சாமிகளுக்கு!

கவிஞர் அருணாச்சல சிவா

மௌன சாளரம்
உள்ளே வந்து உரையாடுகிறது
வண்ணத்துப் பூச்சி!

கவிஞர் மு. ஜெயலெட்சுமி

குளிரூட்டிய அறை
சுடுகிறது
மின் கட்டணம்!

கவிஞர் இரா. இரவி

பெயர் மாற்றி
இடம் மாற்றிப் பயனில்லை
சிந்தை மாற்று சிறப்பாய்!

கவிஞர் க. மாரிமுத்து

அணைக்க முயன்றும்
அடர்ந்து பரவுகிறது
சாதித் தீ!

கவிஞர் ஆர். ராஜேஸ்வரி ஸ்ரீதர்

உழைத்த உடலில்
பூக்கிறது
வியர்வைப் பூக்கள்!

கவிஞர் சிவாஜிநஞ்சன்

மதிக்கப்பழகு
உழவனை
உலகம் உயரும்!

கவிஞர் த. கருணைச்சாமி பி.இ.

நம்பிக்கை வை
உன் மேல்
ஒழியும் மூட நம்பிக்கை!

கவிஞர் புதுயுகா!

பிள்ளை முதுகில்
புத்தகப் பை
மனம் கனத்தது தாய்க்கு

கவிஞர் சு. பாரதி பாக்கியம்

ஒற்றைப்புள்ளியில்
ஐந்தாண்டு வறுமை
தேர்தல்!

கவிஞர் சி. அருள் ஜோசப்ராஜ்

சேர்த்தன தேனீக்கள்
சுவைத்தான் மனிதன்
உழைப்பு சுரண்டல்?

கவிஞர் சு. கேசவன்

வரும்புயல்
குலை நடுக்கம்
வாழை விவசாயி!

கவிஞர் தகடூர் செவ்வியன்

பேருந்து பயணம்
யாரோ ஒருத்தி கதறுகிறாள்
படிக்கட்டில் மகன்!

கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன்

இரவு நேர பூஜை
சிக்கினார்
சபல சாமியார்!

கவிஞர் பே. ராஜேந்திரன்

அன்பு மனங்கள்
அழகாய் சங்கமம்
காதல்!

கவிஞர் உமையவன்

கனத்த மழை
நிரம்பும் காலிப் பாத்திரம்
சிதறும் இன்னிசை!

கவிஞர் வி. சிவாஜி

பிச்சைப் பாத்திரம்
நிரம்பி வழிகிறது
பெருமூச்சு!

கவிஞர் கா.நா. கல்யாணசுந்தரம்

மதம் பிடித்த யானைகளாய்
சமுதாய சீர்கேடுகள்
தேவை – அங்குசக் கவிஞர்கள்

கவிஞர் பொருநை பாலு

எடுக்கும் முயற்சியை
தடுக்கும் ஆயுதம்
சகுனம்!

கவிஞர் சு. நவநீதன்

மனம் பார்த்து அன்று
பணம் பார்த்து இன்று
காதல்.

கவிஞர் இராம கம்பர்

தள்ளாட வைத்தது
தமிழ்நாட்டை
தண்ணி!

கவிஞர் டி.என். இமாஜன்

செத்தும் கொடுக்கின்றனர்
வள்ளல்கள் சிலர்
உறுப்பு தானம்!

கவிஞர் தேவனூர் ஆ.ச. செல்வராஜூ

விண்ணை முட்டுகிறது
ஏழையைத் தவிக்க வைத்து
விலைவாசி!

கவிஞர் இளந்தென்றல்

நல்லது கெட்டது
நாளும் ஒரு காரணம்
மது அருந்த!

கவிஞர் ச. கிறிஸ்து ஞானவள்ளுவன்

அதிகார வர்க்கம்
எடுக்கும் நாகரிகப் பிச்சை
லஞ்சம்!

கவிஞர் நீலமலை ஜே.பி.

தோல்விக்கும்
முத்து

தொடர்முயற்சி!

கவிஞர் வெ. சென்னப்பன்

இரையூட்டும் காகம்
ஏக்கமுடன் பார்க்கிறது
காப்பகக் குழந்தை!

கவிஞர் சுப. சந்திரசேகரன்

முள்வேலிக்குள்
குருதி சிந்துகின்றன
ஈழ ரோஜாக்கள்!

கவிஞர் மு. குமரன்

கொடுக்கப் பெருகும்
மனித இரத்தம்
அட்சயப் பாத்திரம்

கவிஞர் ஈழபாரதி

மைல்கல் சாமியானது
மகிழ்ச்சியில்
பூசாரி!

கவிஞர் தாயானி தாயுமானவன்
நினைவுகளை
உடைத்தபடி அம்மா
கல் குவாரி!

கவிஞர் வ. விஜயலெட்சுமி

விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி!

கவிஞர் கு. இராம்குமார்

ஆயிரம் காலத்துப் பயிர்
அவசரமாய நடப்பட்டது
குழந்தை திருமணம்

கவிஞர் ம. பாலன்

திறக்கப்பட்டது அன்று
மூடப்படுகிறது இன்று
அரசுப் பள்ளிகள்!

கவிஞர் பூ. இராஜேஸ்குமார்

விலையில்லாப் பொருட்கள்
விலை போயினர்
மக்கள்!


பல்வேறு கோணங்களில் சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டி படிக்கும் வாசகர்கள் மனதில் மின்னலை உருவாக்கிய கவிஞர்கள் அனைவருக்கும் , நூலின் தொகுப்பாசிரியர் கவிஓவியா என்ற மாத இதழின் ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதிக்கும் பாராட்டுக்கள்.

.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Oct 22, 2015 6:05 pm

மனம் கவர்ந்த சில ஹைகூக்கள் !



அழகர்
ஆற்றில் இறங்கினார்
மணல் கொள்ளைப் பார்க்க!

என்ன தவறு செய்தது
தலைகீழாகத் தொங்கும்
வௌவால்!

விடுமுறை இல்லை
பணி ஓய்வு இல்லை
இல்லத்தரசி

தினம் தினம்
இரத்த தானம்
சர்க்கரை பரிசோதனை!





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Thu Oct 22, 2015 8:21 pm

நல்ல நூல். வாங்கிட வேண்டியதுதான். பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Oct 22, 2015 10:10 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82381
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Oct 23, 2015 8:59 am


பலவித உணர்வுகளை ஊட்டும்
ஹைகூ பூக்களின் தொகுப்பு.... ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834 ஹைக்கூ பூக்கள் !  தொகுப்பாசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி !   நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Oct 23, 2015 7:56 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக