புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 1:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 1:30 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 1:29 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 1:29 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 12:16 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 4:40 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 3:43 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 3:38 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 4:19 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 4:16 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 4:14 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 4:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:08 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 1:28 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:36 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:49 am

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 6:23 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 6:16 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:56 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 5:53 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 5:52 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 5:15 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:52 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:48 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 3:44 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 2:01 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:28 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:27 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:04 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:49 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 3:36 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 8:10 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:27 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:25 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:23 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 6:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
69 Posts - 58%
heezulia
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
111 Posts - 60%
heezulia
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மரு(று)மகள்! Poll_c10மரு(று)மகள்! Poll_m10மரு(று)மகள்! Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரு(று)மகள்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 6:03 am

''வா கோமதி... நீ வருவேன்னு தான் நானும், சாப்பிடாம உட்காந்து இருக்கேன்; தட்டு போடட்டுமா...'' வாஞ்சையுடன் கேட்ட அண்ணி வசந்தாவை, அன்பு மேவ பார்த்தாள் கோமதி.

வசந்தா சமையல் அறைக்குள் சென்று, தட்டை எடுத்து வந்து பரிமாறுவதற்குள், கோமதியின் கண்கள், வீட்டை அலசின.
கொஞ்சம் உள்ளடங்கி இருந்தாலும், விசாலமான, காற்றோட்டமான அழகான வீடு. இரண்டு படுக்கையறை, ஹால் வசதியுடன் அக்காலத்திலேயே சவுகரியமாக வீட்டை கட்டியிருந்தார் வசந்தாவின் கணவன். அதை, மகன்கள் இருவரும் எடுத்துக் கட்டி, மேல்தளத்தில் பெரியவனும், கீழ் தளத்தில் சின்னவனும் குடியிருந்தனர்.


கணவன் இறந்த பின், இரு மகன்கள் வீட்டிலும், மாறி மாறி வசிக்கிறாள் வசந்தா.


'விளங்காத தேளுக்கு கொடுக்கு கூட மொன்னையாகத் தான் இருக்கும்' என்பது போல், கோமதி வாழ்க்கைப்பட்டதோ ஏழ்மையான வீடு! அவள் புருஷன், மில் தொழிலாளி; ஒருநாள், மில்லில் ஏற்பட்ட விபத்தில் இறந்து போனான். ஆதரவாய் இருந்தது அவளுடைய ஒரே மகன் சத்தியமூர்த்தி மட்டும் தான்!


அவன் தலையெடுத்த பின், கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். ஆனால், அதுவும் கொஞ்ச காலம் தான். உடன் வேலை செய்த கிறிஸ்தவ மத பெண்ணை, திருமணம் செய்து கொண்டதால், மகனையும், மருமகளையும் ஒதுக்கி வைத்து விட்டாள். பின், இருக்கும் ஒரே ஆதரவையும் இழந்து விட்டால், கடைசி காலத்தில் எங்கு போய் நிற்பது என்ற நிதர்சனம் உரைக்க, சத்தமில்லாமல் அவர்களை சேர்த்துக் கொண்டாள்.


காலம் ஓடியது. பேரன் பிறந்து விட்டான். ஆனாலும், இந்த, 11 வருஷத்தில், மருமகள் பிரியாமேரியிடம் அத்யாவசியத்திற்கு கூட பேசியதில்லை கோமதி. எது வேண்டுமானாலும், மகன் மற்றும் பேரன் மூலமாகவே பேசிக் கொள்வாள்.


அப்பாவை போலவே, 35 வயசுலேயே சத்தியமூர்த்தியும், ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனான். மகன் இறந்ததும், கோமதிக்கு உலகமே கிடுகிடுத்துப் போனது. காலை இழந்த மனுஷன், கையையும் இழந்த கதையாய், அவளுடைய உலகமே, இந்த ஆறுமாதமாய் நிர்மூலமானது.


''அப்புறம் சொல்லு கோமதி... என்ன சொல்றா உன் மருமக,'' என்று வசந்தா கேட்ட போது தான், உலகத்திற்கே திரும்பி வந்தாள்.
'இதையே இந்த அண்ணி எத்தனை தடவை கேட்பா. மறுபடியும் இங்க ஏன் தான் சாப்பிட வந்தோமோ..' என எண்ணி, பெருமூச்சு விட்டவள், ''அண்ணி... நீங்க தினமும் எனக்கு சோறு போடறத விட, கொஞ்சம் விஷத்த கொடுங்க; நிம்மதியா போய் சேர்ந்துடுறேன். நான் என்ன ஜென்மம் அண்ணி... பெத்தவங்களையும், கூட பிறந்தவனையும், கட்டினவனையும், கடைசியா பெத்த மகனையும் வாரி குடுத்துட்டு, இன்னும் கூட அசராம நிக்கறேனே...'' என்றவள், முந்திச் சேலையில் முகம் மூடி அழுதாள்.


''ஏன் கோமதி... இனி, நீ என்ன தான் செய்யப் போற...'' என்றாள் வசந்தா. அக்கறையாய் விசாரிக்கிறாளா இல்லை தூண்டில் போடுகிறாளா என்று தெரியவில்லை.


''அது தான் அண்ணி எனக்கும் புரியல; இங்க யார் வீட்லயோ வேலை இருக்கிறதா சொன்னீங்களே, விசாரிச்சீங்களா...'' என்றவளுக்கு, சட்டென்று அந்த யோசனை தோன்றியது. ஆனால், அதை வசந்தாவிடம் கேட்டால் என்ன நினைப்பாளோ என்ற தயக்கம் உண்டானது. ஆனாலும், கேட்டுத் தானே ஆக வேண்டும்.


''அண்ணி... நான் வேலைக்கு போயி, அந்த காசை உங்ககிட்ட தந்துட்டு, உங்க கூடவே இருந்திடவா...'' என்று தயக்கமாய் கேட்டாள்.
அவள் சட்டென்று இப்படி கேட்பாள் என்று வசந்தா எதிர்பார்க்கவில்லை.


''என்ன கோமதி... திடீர்ன்னு இப்படி கேட்டுட்ட... நீ இப்படி பேசுனத உங்க அண்ணன் பாத்திருந்தா, அப்படியே கரைஞ்சு போயிருப்பாரு... ஆனா, என்னால என்ன செய்ய முடியும் சொல்லு... பெரியவன் கிட்ட, 10 நாளு, சின்னவன் கிட்ட, 10 நாளுன்னு நானே அல்லாடிக்கிட்டு இருக்கேன். ஏதோ நீ இருக்கிற நிலைமையை பாத்து, நான் குடிக்கிற கஞ்சியில, உனக்கும் ஊத்தறேன். இதுல நீ இப்படி கேட்டா நான் என்ன பதில் சொல்றது. உனக்கு எது வசதியோ அதப் பாத்துக்க... நான் முடியாதுன்னு சொல்றேன்னு மனசு வருத்தப்பட்டுக்காத,'' என்று பட்டும் படாமலும் கூறினாள் வசந்தா.


சிறிது நேரத்தில், அங்கிருந்து கிளம்பிய கோமதி, பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தாள். நடையில் தள்ளாட்டம் மிகுந்திருந்தது. வீட்டிற்கு செல்லவே, மனம் ஒப்பவில்லை. உரிமை இல்லாத இடத்தில், ஒரு வாய் உண்பது, அவமானமாய் தோன்றியது.
வாசலில் செருப்பை உதறி, அறைக்குள் சென்று முடங்கினாள் கோமதி.


''பாட்டி... நீ ஏன் வந்ததும் படுத்துக்கிட்ட... காபி கொண்டு வந்து தரட்டுமா,'' நெற்றியில் கை வைத்து, அன்பாய் கேட்ட பேரனை, கருணை மேவ பார்த்தாள்.


''வேணாம் ராசா... நீ போய் படி. எனக்கு ராத்திரி சாப்பாடு வேணாம்ன்னு உங்க அம்மாகிட்ட சொல்லிடு,'' இந்த வார்த்தையை சொல்லும் போதே, அடி வயிற்றில், பசி கிளறியது. ஆனாலும், வைராக்கியம் அதையும் மீறி தகித்தது.



தொடரும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 6:04 am

ஐந்து நிமிஷம் கழித்து, திரும்ப வந்த பேரன், ''பாட்டி... நீ ஏன் தினமும் சாப்பாடு வேணாம்ன்னு சொல்றேன்னு அம்மா கேட்குறாங்க,'' என்று கேட்டான்.

''நான், மூணு மணிக்குத் தான் எங்க அண்ணி வீட்டுல சாப்பிட்டேன். அதான் பசிக்கல,'' என்றவள் சுருண்டு படுத்துக் கொண்டாள்.
இனியும், ஒருவேளை சாப்பாட்டில் காலம் தள்ள முடியாது என்ற உண்மை உரைக்க, காலையில் முதல் வேலையாய் அண்ணி சொன்ன இடத்திற்கு வேலைக்கு போவது என்று முடிவு செய்தாள்.


முதல் நாள் வேலை, கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. மருமகள் பிரியாமேரி வந்ததில் இருந்து, கோமதியை எந்த வேலையையும் செய்ய விட்டதில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாய் சொகுசாய் இருந்த உடம்பு, சட்டென்று வேலை செய்ய வணங்கவில்லை.


பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தாள். வாசலில் செருப்பை உதறி, வழக்கம் போல் அறைக்குள் புகுந்து கொள்ள எத்தனித்தவளை, ''கொஞ்சம் நில்லுங்க... உங்க கிட்ட பேசணும்,'' என்ற பிரியாவின் குரல் தடுத்து நிறுத்தியது.
பத்து ஆண்டுகளாய் ஒரு வார்த்தை பேச எத்தனிக்காதவள், இன்று முதல் முறையாய் வாயை திறந்திருக்கிறாள்.


''உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும். அது, உங்களோட தனிப்பட்ட விஷயம். ஆனா, நான், உங்க மகனோட மனைவி; உங்க பேரனோட தாய். இது தான் உண்மை,'' என்றவளை, 'இப்போ என்ன சொல்ல வர்றே...' என்பது போல் விட்டேத்தியாய் பார்த்தாள் கோமதி.


''உங்க மகன் இறந்த பின், தனி மனுஷியாய், நிறைய இழந்து நிற்கிறேன். எங்க வீட்டில எனக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சி செய்தாங்க; ஆனா, நான் சம்மதிக்கல. அவர் விட்டுப் போன கடமைய, மனப்பூர்வமாய் நிறைவேத்தணும்ன்னு நினைக்கிறேன்.
''என் அம்மா வீட்ல, எல்லா வசதிகள் இருந்தும், நான் அங்க போக விரும்பாம, இத்தனை கஷ்டப்பட்டு வேலைக்கு போறது, உங்களுக்காகவும், என் மகனுக்காகவும் தான். ஆனா, என் வலிகள் உங்களுக்கு புரியல. நீங்க மட்டுமில்ல, உங்கள மாதிரி இருக்கிற மாமியார்கள் எல்லாருமே சொந்தத்துக்கு தர்ற மரியாதைய, பந்தத்துக்கு தர்றது இல்ல.


''வழியில வசந்தா ஆன்ட்டிய பாத்தேன். அவங்க மூலமாகத் தான், நீங்க வீட்டு வேலைக்கு போற விஷயம் தெரிஞ்சது. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. இளம் விதவையாய் என் கணவனை வளர்த்து ஆளாக்குன உங்களுக்கு, என் வேதனையும், தனிமையும், புரியாம போனது துரதிர்ஷ்டம். இனிமே, நீங்க எந்த வேலைக்கும் போக வேணாம்; இது என் ஆசை. என் மகனை வளர்க்க உதவணும்; அது விண்ணப்பம். இது ரெண்டையும் ஏத்துக்கறதும், நிராகரிக்கறதும் உங்க இஷ்டம்,'' என்று கூறி, அறைக்குள் சென்று விட்டாள்.
கோமதியின் அகங்காரம் பொடிப் பொடியாய் உதிர, ஸ்தம்பித்து நின்றாள்.


இத்தனை ஆண்டுகளாய் பேசாதவள், இன்று பேசியது மொத்தமும் உணர்வு குவியலாய் இருந்தது. மனிதனை மனிதன் விரும்பத் தானே, எல்லா மதமும் போதிக்கிறது. மனிதனை விரும்பாத மதத்தை படைத்தவன், நிச்சயம் இறைவனாக முடியாது.
எதற்காக அவளை வெறுத்தோம் என்ற வினாவுக்கு, இப்போது விடையில்லை. இரவு முழுக்க அழுதாள்; விடியும் போது தெளிந்தாள்.
காலையில் பரபரவென குளித்து வேலைக்கு கிளம்பியவளை, வேதனையோடு பார்த்தாள் பிரியாமேரி. 


தன் பேரனை நோக்கி, ''பாட்டி வேலைக்கு போறேன்பா. உன் அம்மாவுடைய ஆசைய நிராசையாக்க இல்ல. உன்னை வளர்த்து ஆளாக்கணும்ங்கற அவளுடைய விண்ணப்பத்தை நிறைவேத்த! இது நம் குடும்பம்; இதுக்கு நானும் உழைக்கணும். கணவன் விட்டுப் போன கடமைய நிறைவேத்தணும்ன்னு உன் அம்மா யோசிக்கும் போது, என் மகன் விட்டுப் போன பாதுகாப்பை, இந்த குடும்பத்திற்கு நானும் தரணும்ங்கிறது புரிஞ்சது. உங்கள விட்டு இனி எங்கயும் போக மாட்டேன்,'' என்று கூறி, பேரனின் கன்னம் வழித்து முத்தமிட்டாள் கோமதி.


''அத்தை...'' கண்ணீர் வழிய பேச முயன்றவளை, தன் விரல்களால் அவள் வாய்மூடி தடுத்தாள்.


''அம்மாடி... முதன் முதலா என்கிட்ட பேசறே... நான் இது வரைக்கும் உனக்கு எதுவாகவும் இருந்தது இல்ல. இனிமேலாவது, உனக்கு அம்மாவா இருந்துட்டு போறனே... என்னை அம்மான்னே கூப்பிடு,'' என்றாள் விழிகள் நிறைய!

எஸ்.பர்வின் பானு 




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 08, 2015 7:50 am

அருமையான கதை அம்மா. உண்மையில் பந்த பாசங்களுக்கு தர மரியாதை மருமகளுக்கு தரவில்லை.உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமே நான் என் மாமியாரை அம்மா என்று தான் அழைப்பேன். பாசத்திற்கு ஒன்றும் குறைவில்லை அம்மா பகவான் புண்ணியத்தால்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 08, 2015 9:15 am

சசி wrote:அருமையான கதை அம்மா. உண்மையில் பந்த பாசங்களுக்கு தர மரியாதை மருமகளுக்கு தரவில்லை.உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமே நான் என் மாமியாரை அம்மா என்று தான் அழைப்பேன். பாசத்திற்கு ஒன்றும் குறைவில்லை அம்மா பகவான் புண்ணியத்தால்.
மேற்கோள் செய்த பதிவு: 1179250
சசி wrote:அருமையான கதை அம்மா. உண்மையில் பந்த பாசங்களுக்கு தர மரியாதை மருமகளுக்கு தரவில்லை.உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமே நான் என் மாமியாரை அம்மா என்று தான் அழைப்பேன். பாசத்திற்கு ஒன்றும் குறைவில்லை அம்மா பகவான் புண்ணியத்தால்.
மேற்கோள் செய்த பதிவு: 1179250


நல்லது சசி......எங்கள் வீடுகளிலும் மாமியாரை அம்மா என்று அழைக்கும் பழக்கம் தான் இருக்கு புன்னகை..............ஆர்த்தியும் எங்களை அம்மா அப்பா என்று தான் கூப்பிடுவா ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 08, 2015 10:02 am

மரு(று)மகள்! 3838410834 மரு(று)மகள்! 3838410834 மரு(று)மகள்! 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக