புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
6 Posts - 60%
ayyasamy ram
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
3 Posts - 30%
சிவா
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
309 Posts - 42%
heezulia
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
303 Posts - 41%
Dr.S.Soundarapandian
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
6 Posts - 1%
prajai
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_m10சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலுகையா? சாத்தானா? - ஃபேஸ்புக்கும் இலவச இணையமும்!


   
   
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jan 19, 2016 8:22 pm

ஊர் உலகத்தில் ஓணான், பல்லியெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்வது ஃபேஸ்புக்கில்தான். அந்த ஃபேஸ்புக்கையே வண்டி வண்டியாய் விளம்பரம் செய்ய வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டது ‘ஃப்ரீ பேசிக்ஸ்’...

இலவச இணைய இணைப்புத் திட்டம். இந்தியாவின் முன்னணி நாளிதழ்கள் பலவற்றை ஃபேஸ்புக்கின் இரண்டு பக்க விளம்பரங்கள் கடந்த வாரம் முழுக்க நிறைத்தன. ‘‘அம்மா, தாயே... கணேசனுக்கு உதவுங்கள்! அவர் இலவச இன்டர்நெட் இல்லாமல் ரொம்பக் கஷ்டப்படுகிறார்...’’ என்ற ரீதியில் மிடில் கிளாஸ் குடும்பத்தைக் காட்டி சென்டிமென்ட் சிக்ஸர் அடித்தன அந்த விளம்பரங்கள்.

அது என்ன ஃப்ரீ பேசிக்ஸ்? அதை ஏன் ஃபேஸ்புக் உயர்த்திப் பிடிக்கிறது? யார் அதை எதிர்க்கிறார்கள்? - வரிசை கட்டும் இந்தக் கேள்விகள் உங்களிடமும் இருந்தால் வாங்க உள்ளே...அதிகம் பேர் பயன்படுத்தும் இணையதள வரிசையில் ஃபேஸ்புக்குக்கு இரண்டாம் இடம். முதல் இடத்தில் நீண்ட நெடுங்காலமாக ஆணியடித்து அமர்ந்திருப்பது கூகுள். பலருக்கு கூகுள் இல்லையென்றால் இந்த உலகம் ஸ்தம்பித்து விடும்.

அப்படிப்பட்ட கூகுளை கீழே இறக்கிவிட்டு நம்பர் 1 ஆக வேண்டும் என இந்த நம்பர் 2வுக்கு ஆசை. அதனால் பிறந்ததுதான் Internet.org எனும் ப்ராஜெக்ட். அதுவே தற்போது ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ எனப் பெயர் மாறி வந்திருக்கிறது. இப்போது செல்போனில் இணைய வசதி இருந்தாலோ, ப்ரீபெய்டு போன்களில் நெட் பேக் வாங்கினாலோதான் இணையத்தைப் பயன்படுத்த இயலும். ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ இந்த ரூட்டை பைபாஸ் செய்கிறது. இது ஒரு ஸ்மார்ட் போன் ஆப். இணைய இணைப்பே இல்லாத போனிலும் கூட இந்த ஆப் வழியே இணையத்தைப் பயன்படுத்த முடியும், அதுவும் இலவசமாக!

இது உலகம் முழுமைக்குமான ப்ராஜெக்ட். ஒவ்வொரு நாட்டிலும் லோக்கல் மொபைல் சேவை நிறுவனங்களோடு இணைந்து இந்தச் சேவையை வழங்குகிறது ஃபேஸ்புக். இந்தியாவில் ரிலையன்ஸ் + ஃபேஸ்புக் இணைந்து 2015ன் துவக்கத்தில் இருந்தே இந்த இலவச இணையத்தை வழங்கி வந்தார்கள். ஆனால், கடந்த டிசம்பர் 1ம் தேதி... இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய், திடீரென இந்தச் சேவையை நிறுத்தி வைக்குமாறு ஆணையிட்டிருக்கிறது. காரணம், நாடெங்கும் இதற்குப் பெருகி வந்த எதிர்ப்பு!

‘இலவச இன்டர்நெட் நல்ல விஷயம்தானே... இதை ஏன் எதிர்க்கிறார்கள்?’தூரத்தில் இருந்து பார்த்தால் இப்படித்தான் நமக்குக் கேட்கத் தோன்றும் ஆனால், இந்தியாவில் நெட் நியூட்ரலிட்டிக்காகப் போராடி வரும் அமைப்புகள் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தைப் பற்றிப் பேசினாலே டென்ஷன் ஆகின்றன. ‘‘ஃபேஸ்புக்குக்கு சொந்தமான ஆப் மூலம் நாம் இணையத்தைப் பயன்படுத்துவதால் அவர்கள் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்.

நாம் விரும்பும் வலைத்தளங்கள் எல்லாவற்றையும் அதில் பார்க்க முடியாது. அவர்கள் வடிகட்டி சில வலைத்தளங்களை மட்டுமே பார்க்க அனுமதிப்பார்கள். இது ஒரு வகையான அடிமைத்தனம். இதை மட்டும் இப்போது அனுமதித்தோம் என்றால், ‘இந்திய மக்கள் எதைப் பார்க்க வேண்டும்... எதைப் பார்க்கக் கூடாது...’ என தீர்மானிக்கிற அதிகாரம் ஃபேஸ்புக் கைக்குப் போய்விடும். அதன்பின் இந்திய அரசியலையே தீர்மானிக்கும் சக்தியாகக் கூட அது மாறலாம்!’’ என்கிறார் நெட் நியூட்ரலிட்டி இயக்கத்தைச் சேர்ந்த நிகில் பாவ்வா.

இணையம் என்பது மின்சாரம் மாதிரி. அது கட்டுப்பாடு அற்றிருக்க வேண்டும். ‘நான் கொடுக்கும் மின்சாரத்தில் லைட் எரியாது... ஃபேன் மட்டும் ஓடும். அதுவும் நான் சொல்கிற குறிப்பிட்ட கம்பெனி ஃபேன் மட்டும்தான் ஓடும்’ எனக் கட்டுப்படுத்துவது மாதிரிதான் இந்த இலவச இன்டர்நெட் என்கிறார்கள் இந்தத் தரப்பினர்.
இன்னொரு பக்கம் ஃபேஸ்புக் தன்னை ஏழைப் பங்காளனாகக் காட்டிக்கொள்கிறது.

‘ஒரு நாட்டின் இணைய இணைப்பு வேகம் 10 சதவீதம் அதிகமாகும்போதெல்லாம் அதன் பொருளாதாரம் 1.3 சதவீதம் உயர்வதாகச் சொல்கிறது உலக வங்கி. ஆனால், உலகில் இன்னும் 389 கோடி மக்கள் இணையமே இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு அறியாமையும் வறுமையுமே காரணம். இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்புகளோ, நவீன விவசாய முறைகளோ... ஏன், வெள்ள அபாயம் போன்ற அவசரச் செய்திகளோகூட அவர்களைச் சென்று அடைவதில்லை. அவர்களுக்கெல்லாம் அடிப்படை இணையத்தைக் கொடுக்க நாங்கள் நினைக்கிறோம். ஆனால், அதை சில விஷமிகள் தடுக்கிறார்கள்’ என வெளிப்படையாகவே மக்களிடம் பிரசாரம் செய்கிறது ஃபேஸ்புக்.

‘நீங்கள் ஃப்ரீ பேசிக்ஸ் திட்டத்தை ஆதரியுங்கள்...’ என்று விளம்பரங்களில் ஒரு போன் நம்பரைக் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள். ஃபேஸ்புக் தளத்தில் இந்த ஆதரவை ஒரே ஒரு க்ளிக் மூலம் தெரிவிக்க வசதி செய்திருக்கிறார்கள். இவை எல்லாம் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் மக்கள் கோரிக்கையாகப் போய்ச் சேர்ந்துவிடும்!

பொதுமக்களில் பலரும் இதற்கு ஆதரவு தெரிவிப்பதும் உண்மைதான். ‘எதுவுமே இல்லாமல் இருக்கும் மக்களுக்கு எதையாவது கொடுப்பதில் என்ன தவறு?’ என்பது அவர்களின் பாயின்ட். ஆனால், இதன் பின்னே இருக்கும் அரசியல் மிக நுட்பமானது. ‘‘இந்தியாவில் ‘ஃப்ரீ பேசிக்ஸ்’ விளம்பரங்களுக்காக மட்டும் ஃபேஸ்புக் முதலீடு செய்திருப்பது 132.48 கோடி ரூபாய். லாப நோக்கம் இல்லாமல் இவ்வளவு பணத்தை செலவழிப்பார்களா? இது நூறு சதவீதம் பிசினஸ்.

இந்தியாவில் இப்போது மொத்தமே 27 சதவீதம் பேர்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். மிச்சமிருக்கும் 73 சதவீத இந்தியர்களை அப்படியே லபக்கி தன் கஸ்டமர் ஆக்கிக்கொள்ளும் தந்திரம் இது. ஆனால், இதை ஏதோ ‘பொதுநலம் கருதி...’ என்பது போல வேஷமிட்டுப் புகுத்துகிறார்கள். இந்த இணைய சேவையில் கூகுள் போன்ற போட்டி தளங்களை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

லோக்கல் வியாபாரிகள் கூட இந்த சேவை வழியே தங்கள் இணையதளம் மக்களிடம் செல்ல வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கிடம் கோரிக்கை வைக்க வேண்டியிருக்கும். பிற்காலத்தில் அதற்காக பணம் கைமாறலாம். தன் வியாபாரத்தை விரிவுபடுத்த ஃபேஸ்புக் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யட்டும். அதை வெளிப்படையாகச் செய்யட்டும். இப்படி பொதுநலன் எனும் போர்வையில் இந்திய தொலைத்தொடர்பு சேவையைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. செயற்கைக்கோள் நம்முடையது, அலைக்கற்றை நம்முடையது, செல்போன் டவர்கள் நம்முடையவை. ஆனால், அதில் மக்கள் எதைப் பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பது மட்டும் ஃபேஸ்புக். அக்கிரமம் அல்லவா இது?’’ என்கிறார் நிகில் பாவ்வா.

இந்தக் கேள்விக்கு பதிலாக இன்னொரு கோணத்தையும் முன்வைக்கிறார்கள் டெக் வல்லுநர்கள். ‘‘பாரதிய ஜனதா அரசு, நேரடியாக இது போன்ற இலவச இணையத்தை வழங்கினால், ‘மதவாதம், இஸ்லாமிய வெறுப்பு போன்றவற்றைத் திணிக்கிறார்கள்; பகுத்தறிவுத் தளங்களை தடை செய்கிறார்கள்’ என விமர்சனம் எழும். அதனால் பெயருக்காக ஃபேஸ்புக்கை வைத்து மத்திய அரசே இப்படி கேம் ஆடுகிறது’’ என்பதே அது. கவர்ன்மென்ட்டோ, கலிபோர்னியா கம்பெனியோ... இன்டர்நெட்டுக்கு கேட் போட்டு வாட்ச்மேன் வேலையை யார் பார்த்தாலும் கெட் அவுட்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள் நெட் நியூட்ரலிட்டி இளைஞர்கள்!

இலவச இணையம் கொடுக்கட்டும்... அதைக் கட்டுப்பாடு களோடும் கொடுக்கட்டும்... ஆனால், 200 எம்.பி... 300 எம்.பி... என அளவு சார்ந்த கட்டுப்பாடுகளோடு எல்லோருக்கும் கொடுக்கட்டும். ‘கூடை வச்சவங்களுக்கெல்லாம் லைட்டு தர்றதில்லை’ என்கிற மாதிரி சில தளங்களை நிறுத்தி, சிலவற்றைத் தருவதெல்லாம் கூடவே கூடாது! இதுவே இந்திய மனங்களின் கோரஸ்!

செயற்கைக்கோள் நம்முடையது, அலைக்கற்றை நம்முடையது, செல்போன் டவர்கள் நம்முடையவை. ஆனால், அதில் மக்கள் எதைப் பார்க்கலாம் என்பதை தீர்மானிப்பது மட்டும் ஃபேஸ்புக். அக்கிரமம் அல்லவா இது?


நன்றி - Tamilrockers

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 19, 2016 9:33 pm

இலவசத்திட்டங்கள் என்றால் இந்தியர்கள் வாயை பிளப்பார்கள் என்பது அவர்களுக்கும் தெரிந்துவிட்டதோ ..??

இதெல்லாம் என்றாவது ஒருநாள் நம் தலையில் தான் விடியும் என்பதை  மக்கள் உணரவேண்டும், குறிப்பாக நம் தமிழக மக்கள் உணர வேண்டும் ..



மெய்பொருள் காண்பது அறிவு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 19, 2016 11:10 pm

ளித்தவாயர்களை இகுவாக வச(ம்) ப்படுத்துவதே இலவசம்.




K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Jan 20, 2016 1:57 am

யினியவன் wrote:ளித்தவாயர்களை இகுவாக வச(ம்) ப்படுத்துவதே இலவசம்.
மேற்கோள் செய்த பதிவு: 1188563

இ(யி)னியவரும் இகுவாக வச(ம்)ப்படுவாரோ இலவசத்திற்கு ...??

ஹா ,,,,,,,ஹா ,,,,,,,  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

அண்ணே ..............கேட்டது நானில்லஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 20, 2016 8:13 am

இவ்வளவு விஷயங்கள் இருக்கே .
அரசியல், வியாபாரம் , அடிமைத்தனம் .
வேண்டாம் மச்சான் வேண்டாம் என்று பாட வேண்டுமோ !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 20, 2016 10:49 am

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:ளித்தவாயர்களை இகுவாக வச(ம்) ப்படுத்துவதே இலவசம்.
மேற்கோள் செய்த பதிவு: 1188563

இ(யி)னியவரும் இகுவாக வச(ம்)ப்படுவாரோ இலவசத்திற்கு ...??

ஹா ,,,,,,,ஹா ,,,,,,,  ஜாலி  ஜாலி  ஜாலி  ஜாலி

அண்ணே ..............கேட்டது நானில்லஅய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

செவனேன்னு இருந்த சிவன் குடும்பத்தில் கும்மி அடிக்க காரணமே
இலவச மாம்பழத்தால் செந்தில் குமரன் வசப்பட்டதால் தானே புன்னகை




கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Jan 20, 2016 9:17 pm

இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது.
இந்தியாவில் பேஸ்புக் பயனார்கள் மூலம் அந்த நிறுவனத்துக்கு வருவாய் 2014-15 நிதியாண்டில் 123.5 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய பேஸ்புக் வருவாய் 27 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த வருவாய் 97.6 கோடியாக இருந்தது. 2012-13ல் இந்த வருவாய் 75.6 கோடியாக இருந்துள்ளது.இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரில் ஒருவருக்கு சராசரியாக ரூபாய் 9 என்ற மதிப்பில் பேஸ்புக் வருவாய் ஈட்டியுள்ளது. அமெரிக்காவில் ஒரு பயன்பாட்டாளர் மூலமாக இந்நிறுவனத்துக்கு வருவாய் இந்திய மதிப்பில் ரூபாய் 630 ஆக உள்ளது.

நன்றி செய்தி. காம்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக