புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18
by Ammu Swarnalatha Today at 16:32
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
prajai | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
Page 1 of 1 •
ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
#1190077ஹைக்கூ முதற்றே உலகு !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
21/15. புதி திருச்சிக் கிளை வடக்குத் தெரு,
லைன்மேடு, சேலம் – 636 006. அலைபேசி : 90033 44742
மின்னஞ்சல் : ponkumarkavithai@gmail.com.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி. நகர்,
சென்னை-600 017. விலை : ரூ. 100.
*****
கவிதைகளில் மிகச் சிறிய வடிவம் ஹைக்கூவாகும். ஒரு வரி ஆத்திச் சூடியும் உண்டு. இரு வரி குறளும் உண்டு. மூவடி கவிதையும் உண்டு. எல்லாவற்றையும் மீறி ஹைக்கூவிற்கு என்று ஒரு சிறப்பு உண்டு. ஹைக்கூ எனப்து சிறிய வடிவமாயினும், சிந்திக்கச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றதாகும். ஹைக்கூ என்னும் வடிவம் மூலம் மக்களுக்கு எளிதில் எதனையும் கொண்டு செல்ல முடியும். கவிஞனின் கருத்தை பிரதிபலிக்க முடியும்.
ஹைக்கூ என்னும் வடிவம் பாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டு, கவிஞர் சி. மணி, எழுத்தாளர் சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரால் வளர்க்கப்பட்டதாகும். கவிஞர் அமுதபாரதி, கவிஞர் அறிவுமதி ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டதாகும். கவிஞர் மு. முருகேஷின் வருகைக்குப் பிறகு ஓர் இளைய தலைமுறையின் பட்டாளமே ஹைக்கூவை முன்னெடுத்துச் சென்றது. அப் பட்டாளத்தில் தனித்த அடையாளத்துடன் ஹைக்கூ உலகில் செயல்பட்டு வருபவர் கவிஞர் இரா. இரவி.
‘இம்’ என்றால் சிறைவாசன், ‘ஏன்’ என்றால் வனவாசம் என்பது போல், கவிஞரிடம் எப்போதும் ஒரு ஹைக்கூ வாசம் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு ஏற்ப அவரின் ஹைக்கூக்கள் அமைந்துள்ளன. ஹைக்கூக்களில் அதிகம் எழுதி அபார சாதனை படைத்தவர். அவரின் தொகுப்பு வரிசையில் அண்மையில் வெளியாகியுள்ள தொகுப்பு, “ஹைக்கூ முதற்றே உலகு”.
ஹைக்கூ என்னும் வடிவத்திற்கு பல குணங்கள் உண்டு. அதில் ஒன்று ஹைக்கூவிற்கு தலைப்பு கிடையாது. ஹைக்கூ சுதந்திரமானது. கவிஞனின் சிந்தனைப் போல், ஹைக்கூவும் சுதந்திரமானது. கட்டற்றது. தலைப்பற்றது. ஆனால் கவிஞர் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஒரு சில ஹைக்கூக்களை எழுதியுள்ளார். ஒவ்வொன்றையும் ஓர் அத்தியாயம் ஆக்கியுள்ளார். முதல் அத்தியாயம் ‘கலாம் 40’. அப்துல் கலாம் குறித்த 40 ஹைக்கூக்கள்.
மாணவர்களை விரும்பியவர்
மாணவர்கள் விரும்பியவர்
கலாம் !
அப்துல் கலாம் குறித்த 40 பரிமாணங்களை ஹைக்கூக்கள் மூலம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப் படுத்தியுள்ளார். அப்துல் கலாம் மேல் அளவிற்கதிகமாக பிரியமும் கொண்டவர்.
‘தன்னம்பிக்கை முனை’ யிலும் ஏராளமான ஹைக்கூக்கள் கவிஞரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.
படிப்பதை விட
படைப்பதே சிறப்பு
வரலாறு !
மிக சுருக்கமாக நறுக்கென்று எழுதப்பட்டுள்ளது. ஹைக்கூ படைப்பதன் மூலம் கவிஞர் இரா. இரவியும் வரலாறு படைக்க முயன்று வருகிறார்.
இலக்கியம் ஒரு கலை. இலக்கியத்தில் ஹைக்கூ படைப்பதும் ஒரு கலையே. ‘கலைகள்’ தலைப்பில் பத்து ஹைக்கூக்கள். பத்தில் ஐந்து இசை குறித்தானது. இரண்டு ஓவியம் குறித்தானது. கலை பற்றியது இரண்டு. மீதம் ஒன்று திருஷ்டி தொடர்பானது.
தனித்து இருந்தாலும்
சேர்ந்து இருந்தாலும் அழகு
கலைப் பொருட்கள் !
பொதுவானது எனினும் கலை என்பது பொதுவானது என்கிறார். கலையின் மேன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹைக்கூவின் தோற்றம் ஜப்பான். தொடக்கக் காலங்களில் ஹைக்கூக்களின் பாடு பொருள் இயற்கையை மையப்படுத்தியே இருந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட போது இயற்கையே பாடப்பட்டது. பின்னர் பாடுபொருள்கள் பல தளங்களில் இயங்கியது. தற்போது ஜப்பானிலும் ஹைக்கூவின் போக்கு மாறி விட்டது. கவிஞர் ‘இயற்கை’ தலைப்பிலும் ஹைக்கூ புனைந்துள்ளார்.
பிடிக்க ஆசை
பிடிபடுவதில்லை
வண்ணத்துப் பூச்சி !
வண்ணத்துப் பூச்சியை மையப்படுத்தி இருந்தாலும், குறியீடாக உள்ளது. வண்ணத்துப் பூச்சி என்னும் இடத்தில் எதனையும் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பாக, ‘ஹைக்கூ’. ஹைக்கூவும் பெரும்பாலான கவிஞர்களுக்கு பிடிபடுவதில்லை.
ரசித்துப் பார்த்தால்
அழகு தான்
எருக்கம் பூவும் !
மலர்கள் தலைப்பில் இயற்றப்பட்ட ஹைக்கூக்களில் ஒன்று இந்த ஹைக்கூ. மனிதர்க்கு ரசனை அவசியம் என்கிறார். ரசனை இருந்தால் எல்லாமே அழகாக தெரியும் என்கிறார். கவிஞரின் ஹைக்கூ மலர்களும் ரசிக்கும்படி உள்ளன.
மனிதர்களை உயர்திணைகளாகவும், விலங்குகளை அஃறிணை-களாகவும் அறிஞர்கள் பிரித்து வைத்தனர். காரணம் மனிதர்கள், விலங்குகளை விட, பறவைகளை விட மற்ற உயிரின்ங்களை விட உயர்ந்த பண்பு கொண்டவர்கள் என்பதால் பிரித்து வைத்தனர். ஆனால் இன்று மனிதர்களின் நடவடிக்கை மிக மோசமாகி விட்டது. ஐந்தறிவுகளை விட தாழ்ந்தவர்களாகி விட்டனர்.கவிஞர் ‘உயர்திணை’யில் ஐந்தறிவுகள் எவ்வாறெல்லாம் உயர்ந்துள்ளன என்று விளக்கியுள்ளார்.
‘தமிழ்’ மொழியின் சிறப்பையும், ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். இதில் கவிஞர்கள் பற்றியும் பேசியுள்ளார். ‘நண்பன்’ எப்படிப்பட்டவன் என்றும் ஓர் அத்தியாயம் மூலம் விவரித்துள்ளார். நண்பனைப் பெருமைப்படுத்தி உள்ளார்.
நகைச்சுவை மூலம் அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர்கள் மருத்துவர்கள் தான். ஆனால் கவிஞர் இரா. இரவி மருத்துவர்களைப் போற்றியுள்ளார். மருத்துவர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். நகைச்சுவை-யாளர்களுக்கு நல்ல ஊசி போட்டுள்ளார்.
ஏன்? எதற்கு? எப்படி?
எதனால்? கேள்விகள்
அறிவின் தொடக்கம். !
‘கேள்விகள்’ தலைப்பிலான ஹைக்கூ. கேள்வியே அறிவை விரிவடையச் செய்யும். மனிதரை வளர்ச்சியடையச் செய்யும். அறிவின் தொடக்கத்திற்கு கவிஞர் வித்திட்டுள்ளார்.
‘அரசியல்’ குறித்து அதிகமாகவே ஹைக்கூவில் எழுத முடியும். எழுதிக் கொண்டும் உள்ளனர். கவிஞரும் எழுதியுள்ளார்.
தரமாட்டான் அவ்வைக்கு
நெல்லிக் கனி
இன்றைய அதியமான் !
ஒரு வரலாற்று தொன்மத்தைக் கையாண்டு இன்றைய அரசியல் வாதிகளைச் சாடியுள்ளார். கவிஞர்கள் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று விரும்பிய மன்னர் வாழ்ந்த நாடு என்று எண்ணும் போது மனம் மிகவும் மகிழ்கிறது.
ஹைக்கூ ஒரு வாழ்வு என்பர். வாழ்க்கைப் பற்றி பல ஹைக்கூக்கள். மனிதர்களின் வாழ்க்கை எத்தகையது என்று ஹைக்கூக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
முற்போக்குவாதி
இரத்தத்திலும் கலந்துள்ளது
ஆணாதிக்கம் !
பெண்ணை அடிமைப்படுத்தும் புத்தி முற்போக்குவாதி என்பவரிடத்தும் இருக்கும் என்கிறார். ஆணாதிக்கவாதிகள் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வறட்சி, கலங்கரை விளக்கம், கண்ணீர், நீதி, விழிகள், புரட்சி, பூங்கொத்து, மழை, பகுத்தறிவு, திரைப்படம், பண்புடைமை, உணவு, நூலகம், புத்தகம் என பல அத்தியாயங்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூவிற்கு துளிப்பா என்பது புதுவையாளர்களின் பெயர். துளிப்பா என்னும் தலைப்பில் மரபு பாக்களை எழுதியுள்ளார். தமிழில் புதிய முயற்சியான லிமர்புன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழியில் லிமரைக்கூ மற்றும் பழமொன்ரியு ஆகிய வடிவங்களிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
கவிஞர் ஹைக்கூ படைப்பதில் மீண்டும் ஒரு கி.மீ. கல்லைக் கடந்துள்ளார். ஹைக்கூக்கள் மூலம் தன் சிந்தனைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மக்களுக்குக் கூறியுள்ளார். ஹைக்கூவில் அவரின் தொடர் முயற்சி பிரமிக்கச் செய்கிறது. ஆயினும் சற்று நிதானமும் தேவைப்படுகிறது. பெரும்பாலான ஹைக்கூக்கள் பழமொழியாகவும், விடுகதையாகவும், விளக்கமளிப்பதாகவும் உள்ளதைக் கவிஞர் கவனிக்க வேண்டும். கருத்தாகவும் உள்ளதை மறுக்க முடியாது. கவிஞர் இரா. இரவியால் இவைகளைத் தவிர்த்து சிறந்த ஹைக்கூக்களை உருவாக்க முடியும். அத்தகைய ஆற்றலும், வல்லமையையும் பெற்றவர்.
வள்ளுவர், பகவன் முதற்றே உலகு என்றார். கவிஞர்
இரா. இரவியோ, ஹைக்கூவை முதற்றே உலகு என்கிறார். ஹைக்கூவை முதன்மைப்படுத்தி உள்ளார். பகவனுக்கு மேல் என்கிறார்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
நூல் மதிப்புரை ;கவிஞர் பொன். குமார் !
21/15. புதி திருச்சிக் கிளை வடக்குத் தெரு,
லைன்மேடு, சேலம் – 636 006. அலைபேசி : 90033 44742
மின்னஞ்சல் : ponkumarkavithai@gmail.com.
வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி. நகர்,
சென்னை-600 017. விலை : ரூ. 100.
*****
கவிதைகளில் மிகச் சிறிய வடிவம் ஹைக்கூவாகும். ஒரு வரி ஆத்திச் சூடியும் உண்டு. இரு வரி குறளும் உண்டு. மூவடி கவிதையும் உண்டு. எல்லாவற்றையும் மீறி ஹைக்கூவிற்கு என்று ஒரு சிறப்பு உண்டு. ஹைக்கூ எனப்து சிறிய வடிவமாயினும், சிந்திக்கச் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றதாகும். ஹைக்கூ என்னும் வடிவம் மூலம் மக்களுக்கு எளிதில் எதனையும் கொண்டு செல்ல முடியும். கவிஞனின் கருத்தை பிரதிபலிக்க முடியும்.
ஹைக்கூ என்னும் வடிவம் பாரதியால் அறிமுகப்படுத்தப்பட்டு, கவிஞர் சி. மணி, எழுத்தாளர் சுஜாதா, கவிக்கோ அப்துல் ரகுமான், கவிஞர் ஈரோடு தமிழன்பன் ஆகியோரால் வளர்க்கப்பட்டதாகும். கவிஞர் அமுதபாரதி, கவிஞர் அறிவுமதி ஆகியோரால் அங்கீகரிக்கப்பட்டதாகும். கவிஞர் மு. முருகேஷின் வருகைக்குப் பிறகு ஓர் இளைய தலைமுறையின் பட்டாளமே ஹைக்கூவை முன்னெடுத்துச் சென்றது. அப் பட்டாளத்தில் தனித்த அடையாளத்துடன் ஹைக்கூ உலகில் செயல்பட்டு வருபவர் கவிஞர் இரா. இரவி.
‘இம்’ என்றால் சிறைவாசன், ‘ஏன்’ என்றால் வனவாசம் என்பது போல், கவிஞரிடம் எப்போதும் ஒரு ஹைக்கூ வாசம் இருந்து கொண்டே இருக்கும் என்பதற்கு ஏற்ப அவரின் ஹைக்கூக்கள் அமைந்துள்ளன. ஹைக்கூக்களில் அதிகம் எழுதி அபார சாதனை படைத்தவர். அவரின் தொகுப்பு வரிசையில் அண்மையில் வெளியாகியுள்ள தொகுப்பு, “ஹைக்கூ முதற்றே உலகு”.
ஹைக்கூ என்னும் வடிவத்திற்கு பல குணங்கள் உண்டு. அதில் ஒன்று ஹைக்கூவிற்கு தலைப்பு கிடையாது. ஹைக்கூ சுதந்திரமானது. கவிஞனின் சிந்தனைப் போல், ஹைக்கூவும் சுதந்திரமானது. கட்டற்றது. தலைப்பற்றது. ஆனால் கவிஞர் ஒவ்வொரு தலைப்பின் கீழ் ஒரு சில ஹைக்கூக்களை எழுதியுள்ளார். ஒவ்வொன்றையும் ஓர் அத்தியாயம் ஆக்கியுள்ளார். முதல் அத்தியாயம் ‘கலாம் 40’. அப்துல் கலாம் குறித்த 40 ஹைக்கூக்கள்.
மாணவர்களை விரும்பியவர்
மாணவர்கள் விரும்பியவர்
கலாம் !
அப்துல் கலாம் குறித்த 40 பரிமாணங்களை ஹைக்கூக்கள் மூலம் தெரிவித்துள்ளார். அப்துல் கலாம் மீதான தன் மதிப்பீட்டையும் வெளிப் படுத்தியுள்ளார். அப்துல் கலாம் மேல் அளவிற்கதிகமாக பிரியமும் கொண்டவர்.
‘தன்னம்பிக்கை முனை’ யிலும் ஏராளமான ஹைக்கூக்கள் கவிஞரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.
படிப்பதை விட
படைப்பதே சிறப்பு
வரலாறு !
மிக சுருக்கமாக நறுக்கென்று எழுதப்பட்டுள்ளது. ஹைக்கூ படைப்பதன் மூலம் கவிஞர் இரா. இரவியும் வரலாறு படைக்க முயன்று வருகிறார்.
இலக்கியம் ஒரு கலை. இலக்கியத்தில் ஹைக்கூ படைப்பதும் ஒரு கலையே. ‘கலைகள்’ தலைப்பில் பத்து ஹைக்கூக்கள். பத்தில் ஐந்து இசை குறித்தானது. இரண்டு ஓவியம் குறித்தானது. கலை பற்றியது இரண்டு. மீதம் ஒன்று திருஷ்டி தொடர்பானது.
தனித்து இருந்தாலும்
சேர்ந்து இருந்தாலும் அழகு
கலைப் பொருட்கள் !
பொதுவானது எனினும் கலை என்பது பொதுவானது என்கிறார். கலையின் மேன்மையைக் குறிப்பிட்டுள்ளார்.
ஹைக்கூவின் தோற்றம் ஜப்பான். தொடக்கக் காலங்களில் ஹைக்கூக்களின் பாடு பொருள் இயற்கையை மையப்படுத்தியே இருந்தது. இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட போது இயற்கையே பாடப்பட்டது. பின்னர் பாடுபொருள்கள் பல தளங்களில் இயங்கியது. தற்போது ஜப்பானிலும் ஹைக்கூவின் போக்கு மாறி விட்டது. கவிஞர் ‘இயற்கை’ தலைப்பிலும் ஹைக்கூ புனைந்துள்ளார்.
பிடிக்க ஆசை
பிடிபடுவதில்லை
வண்ணத்துப் பூச்சி !
வண்ணத்துப் பூச்சியை மையப்படுத்தி இருந்தாலும், குறியீடாக உள்ளது. வண்ணத்துப் பூச்சி என்னும் இடத்தில் எதனையும் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பாக, ‘ஹைக்கூ’. ஹைக்கூவும் பெரும்பாலான கவிஞர்களுக்கு பிடிபடுவதில்லை.
ரசித்துப் பார்த்தால்
அழகு தான்
எருக்கம் பூவும் !
மலர்கள் தலைப்பில் இயற்றப்பட்ட ஹைக்கூக்களில் ஒன்று இந்த ஹைக்கூ. மனிதர்க்கு ரசனை அவசியம் என்கிறார். ரசனை இருந்தால் எல்லாமே அழகாக தெரியும் என்கிறார். கவிஞரின் ஹைக்கூ மலர்களும் ரசிக்கும்படி உள்ளன.
மனிதர்களை உயர்திணைகளாகவும், விலங்குகளை அஃறிணை-களாகவும் அறிஞர்கள் பிரித்து வைத்தனர். காரணம் மனிதர்கள், விலங்குகளை விட, பறவைகளை விட மற்ற உயிரின்ங்களை விட உயர்ந்த பண்பு கொண்டவர்கள் என்பதால் பிரித்து வைத்தனர். ஆனால் இன்று மனிதர்களின் நடவடிக்கை மிக மோசமாகி விட்டது. ஐந்தறிவுகளை விட தாழ்ந்தவர்களாகி விட்டனர்.கவிஞர் ‘உயர்திணை’யில் ஐந்தறிவுகள் எவ்வாறெல்லாம் உயர்ந்துள்ளன என்று விளக்கியுள்ளார்.
‘தமிழ்’ மொழியின் சிறப்பையும், ஓர் அத்தியாயத்தில் விளக்கியுள்ளார். இதில் கவிஞர்கள் பற்றியும் பேசியுள்ளார். ‘நண்பன்’ எப்படிப்பட்டவன் என்றும் ஓர் அத்தியாயம் மூலம் விவரித்துள்ளார். நண்பனைப் பெருமைப்படுத்தி உள்ளார்.
நகைச்சுவை மூலம் அதிகம் விமர்சனத்துக்குள்ளானவர்கள் மருத்துவர்கள் தான். ஆனால் கவிஞர் இரா. இரவி மருத்துவர்களைப் போற்றியுள்ளார். மருத்துவர்களுக்கும் உயிர் கொடுத்துள்ளார். நகைச்சுவை-யாளர்களுக்கு நல்ல ஊசி போட்டுள்ளார்.
ஏன்? எதற்கு? எப்படி?
எதனால்? கேள்விகள்
அறிவின் தொடக்கம். !
‘கேள்விகள்’ தலைப்பிலான ஹைக்கூ. கேள்வியே அறிவை விரிவடையச் செய்யும். மனிதரை வளர்ச்சியடையச் செய்யும். அறிவின் தொடக்கத்திற்கு கவிஞர் வித்திட்டுள்ளார்.
‘அரசியல்’ குறித்து அதிகமாகவே ஹைக்கூவில் எழுத முடியும். எழுதிக் கொண்டும் உள்ளனர். கவிஞரும் எழுதியுள்ளார்.
தரமாட்டான் அவ்வைக்கு
நெல்லிக் கனி
இன்றைய அதியமான் !
ஒரு வரலாற்று தொன்மத்தைக் கையாண்டு இன்றைய அரசியல் வாதிகளைச் சாடியுள்ளார். கவிஞர்கள் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்று விரும்பிய மன்னர் வாழ்ந்த நாடு என்று எண்ணும் போது மனம் மிகவும் மகிழ்கிறது.
ஹைக்கூ ஒரு வாழ்வு என்பர். வாழ்க்கைப் பற்றி பல ஹைக்கூக்கள். மனிதர்களின் வாழ்க்கை எத்தகையது என்று ஹைக்கூக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
முற்போக்குவாதி
இரத்தத்திலும் கலந்துள்ளது
ஆணாதிக்கம் !
பெண்ணை அடிமைப்படுத்தும் புத்தி முற்போக்குவாதி என்பவரிடத்தும் இருக்கும் என்கிறார். ஆணாதிக்கவாதிகள் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
வறட்சி, கலங்கரை விளக்கம், கண்ணீர், நீதி, விழிகள், புரட்சி, பூங்கொத்து, மழை, பகுத்தறிவு, திரைப்படம், பண்புடைமை, உணவு, நூலகம், புத்தகம் என பல அத்தியாயங்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஹைக்கூவிற்கு துளிப்பா என்பது புதுவையாளர்களின் பெயர். துளிப்பா என்னும் தலைப்பில் மரபு பாக்களை எழுதியுள்ளார். தமிழில் புதிய முயற்சியான லிமர்புன், கவிஞர் ஈரோடு தமிழன்பன் வழியில் லிமரைக்கூ மற்றும் பழமொன்ரியு ஆகிய வடிவங்களிலும் தன் ஆற்றலை வெளிப்படுத்தி உள்ளார்.
கவிஞர் ஹைக்கூ படைப்பதில் மீண்டும் ஒரு கி.மீ. கல்லைக் கடந்துள்ளார். ஹைக்கூக்கள் மூலம் தன் சிந்தனைகளை, எண்ணங்களை, கருத்துக்களை மக்களுக்குக் கூறியுள்ளார். ஹைக்கூவில் அவரின் தொடர் முயற்சி பிரமிக்கச் செய்கிறது. ஆயினும் சற்று நிதானமும் தேவைப்படுகிறது. பெரும்பாலான ஹைக்கூக்கள் பழமொழியாகவும், விடுகதையாகவும், விளக்கமளிப்பதாகவும் உள்ளதைக் கவிஞர் கவனிக்க வேண்டும். கருத்தாகவும் உள்ளதை மறுக்க முடியாது. கவிஞர் இரா. இரவியால் இவைகளைத் தவிர்த்து சிறந்த ஹைக்கூக்களை உருவாக்க முடியும். அத்தகைய ஆற்றலும், வல்லமையையும் பெற்றவர்.
வள்ளுவர், பகவன் முதற்றே உலகு என்றார். கவிஞர்
இரா. இரவியோ, ஹைக்கூவை முதற்றே உலகு என்கிறார். ஹைக்கூவை முதன்மைப்படுத்தி உள்ளார். பகவனுக்கு மேல் என்கிறார்.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் இ .கி .இராமசாமி
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை ; முனைவர் கவிஞர் ஞா.சந்திரன் !
» நூலின் பெயர்: ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் ; கவிஞர் இரா.இரவி ! மதிப்புரை: பேராசிரியர் முனைவர் ச.சந்திரா !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் கவிதாயினி கஸ்தூரி ராமராஜ் !
» ஹைக்கூ முதற்றே உலகு ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் நயம் : நெருப்பலைப் பாவலர் இராம. இளங்கோவன், பெங்களூர்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|